• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kanmani unai naan karuthinil niraithen Episode 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அம்மாடி சாரா!!! எங்கமா ஆரா?;););)
உள்ளேன் அம்மா... கொஞ்சம் லேட் ஆச்சு... மன்னிச்சுக்கங்க அம்மா?
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
இடையில் ரோஜா, நழுவ பார்க்க.

“எங்கடி போற..?”

“இல்ல கிருஷ்…. அண்ணனுக்கு டீ கொடுக்க மறந்துட்டேன் அதான் கொடுக்கலாம்னு……” ரோஜா கூற….

“டீ வேணாம்… ஒரு சொம்புல பாலும், இந்த தட்டுல இருக்குற பால்கோவாவையும் கொண்டு போயி வை… அப்படியே மறக்காமல் விளக்கை எடுத்திட்டு போயி புடி… அதான் நீதான் விளக்கு பிடிக்கணும்னு, விளக்கமா சொல்லிட்டு போனாளே உன் நாத்தனார்…”

“சும்மா…… வேற வேலையே இல்லை கிருஷ் உங்களுக்கு, குழந்தை கிட்ட எப்ப பாரு வம்பு வளர்த்து கிட்டு….”


“கோழி குஞ்சு சைஸ் ல இருந்துகிட்டு எப்படி கொரில்லா தாக்குதல் நடத்தினா பாருடி….அவளா குழந்தை……. “

“ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் …..
உலகம் புரிஞ்சு கிட்டேன் ……


கண்மணி என் கண்மணி……….

நாலும் தெரிஞ்சிடுச்சி…….
ஞானம் பிறந்திடுச்சி ……
கண்மணி என் கண்மணி…..” கிருஷ் தொடர்ந்தான்..


“விடு ரோ…… இவன் எப்போதும் இப்படித்தான்….. நிறைய ஸ்நாக்ஸ் சாப்பிட்டா….ஜீரணம் ஆகாமல் எல்லார்கிட்டயும் வாயாடிச்சு செரிக்க வச்சிப்பான்...
வா நாம டின்னர் செஞ்சு எடுத்து கிட்டு மொட்டை மாடிக்கு போவோம்……இந்த தடியன்…,பசங்கள தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கோ அப்பப்ப…பாவம் மனசு விட்டு பேசட்டும் அதுங்க…..”


“விடுங்க மீ….. நான் பார்த்துக்கிறேன்… “
வேதா கிச்சனுக்குள் சென்றதும், கிருஷிடம் ஓடி வந்தாள்….


டிரஸ் மாற்ற மாடிபடி ஏறியவனை, கையை பிடித்து நிறுத்தி.., கிருஷ்…

அவன் என்னவென்று திரும்பி பார்க்க…..

அவனை கட்டிபிடித்து ,கன்னத்தில் ஒரு இச்…….

“அறிவு இருக்காடி உனக்கு…, “

“கன்னத்துல கொடுக்குற முத்தம்……….,
கல்யாணத்துக்கு அப்புறம் உதட்டுல
கொடுக்கலைன்னா ஆயிடும் தெய்வ குத்தம்………”


டி ஆர் ஆகிவிட்டான்…
“எதுக்குடி இந்த ஐஸ்… என்ன உன் புருஷனுக்கும் இரக்கம் காட்டுற….?”


“இன்னைக்கு ரோஜா ஹேப்பி அண்ணாச்சி…..”

“நல்ல மூடில , மண்ணை போடுற மாதிரி அண்ணாச்சி… எதுக்கு ஹேப்பி டி… ? உன் அண்ணனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதுக்கா…?”

“அது மட்டுமில்ல…., கூடிய சீக்கிரம் , செத்து போன மாமா வை திரும்ப பெத்துதரேன்னு , மீ க்கு வாக்கு கொடுத்திருக்கேன் கிருஷ்…”

“பாருடா…பாருடா.... செத்து போன கோதண்டம், ரிட்டர்ன்ஸ் ஆ….. துணைக்கு உங்களை சமாளிக்க எனக்கு ஒரு ஆள் வரப்போகுது…. அஞ்சாறு தூக்க மாத்திரை கலக்காத டி, அப்படியே டப்பாவோட கலந்துடு சரியா….?”

“அய்ய…. ஆளை பாருங்க…. மாத்திரையை விட்டு தொலையுங்க ….இன்னும் புது மாப்பிள்ளை இவரு…..வெயிட் பண்ணுங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு, தூங்கினதும் வரேன்…. என் அண்ணனை இடையில போய் இங்கிதம் இல்லாமல் தொல்லை பண்ணாதீங்க கிருஷ்….”

“எங்களுக்கும் எல்லா சங்கீதமும் தெரியும்…… போடி….”

“ம்… க்கும்…”.குமட்டில் குத்தி விட்டு , சிரித்தவாறே
படி இறங்கினாள்…


உள்ளே போன இளா விற்கு, இன்ப பட படப்பு… மூச்சு முட்டியது…

“என்னாச்சு இளா…? “
அருகில் வந்து நெற்றியில் கைவைத்து பார்த்தாள் ஆரா…. இளாவின் மனது எங்கோ பறந்தது.. அவளது ஸ்பரிசம் அவனுக்கு புதிதாக இருந்தது…
அருகில் இருந்தவளின் பளபப்பான உதடுகள் இளாவின் ஆர்வத்தை தூண்ட… கட்டு படுத்த முடியாதவனாய் குனிந்தான்…


பவர் கட் ஆகி விட்டது…. யூ பீ எஸ் சில் மாறி வரும் சில நொடிகளில் சுதாரித்து கொண்டான்…. தலையை உலுக்கி கொண்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்து விட்டான்... இவன் விட்டாலும் அவ எங்க விடுவா…. போயி அதே சேரில் பாதி கை பிடி பாதி இளா மடியிலும் என ஆரா அமர…இளாவின் கண்ட்ரோல் யூவர் செல்ஃப்…? மந்திரம் செல்ஃபில் போய் அமர்ந்து கொண்டது…

இளா காதல் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தான்…( ஒரு ரொமான்ஸ் சீன், காமெடி சீன் ஆக மாறிட கூடாது என போராடி கொண்டிருக்கும் சாரா வை பொல் ..,ஆரா வின் அட்டகாசத்தில் தத்தளித்து கொண்டிருந்தான்…????)

“ஆரா…. “ இளா கூப்பிட…

“ம்….ம்……” மட்டும் கூறினாள்…
மடியில் லேப் டாப் பை நோண்டி கொண்டிருந்த ஆரா…


மீண்டும் நம் காதல் பொக்ரான் விடாமல்.., “லட்டு …!”

“ம்…..ம்..ம்…...”

இந்த முறை அழுத்துடன் ம் போட்டவள்…, இன்னும் பின்னே அவன் மடியில் நெருங்கி அமர்ந்து முதுகினால் மொத்தினாள்.
(தொல்லை பண்ண கூடாதாம்… சிம்பாளிக்கா சொல்றா… வரைஞ்ச டிசைனை காட்டுறாளாம்….. அடியே ஆத்தா…….. நீ உட்கார்ந்ததுல , இளாவிற்கு டிசைன், டிசைனாக காதல் ஊற்றெடுக்குது பாருடி….உண்மையில் மன்மதன் அம்பை எடுத்து இளாவின் விலாவினை சிறப்பித்து கொண்டிருந்தான்..????)



சாரா....?
?????Super nalla sirapikattum
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top