“அது என்ன வேதா , யாரோ எவரோ ஆரா, அவளுக்கு தனி ரூம்…., என் பொண்ணுக்கு உன் ரூமா…..?”
இவ பொண்ணு எல்லாரையும் காலையில சீக்கிரமா வந்து கவனின்னு போன்ல சொன்னா………, இவ வாளா அதையே பிடிச்சுக்கிட்டு இவளோ சீக்கிரம் சூரியன் எழறத்துக்கு முன்னாடியே ஏழரையா வந்து நிக்கிறா கடங்காரி…கொஞ்சம் என்னை தூங்க விட்டுட்டு கவனிங்க பன்னி…..சாரி அண்ணி.. தூக்கம் வேற சொக்குது …… கற்பகம் உன் கடமை உணர்ச்சிய நினைச்சாதான் விக்குது….. “விக்குதா” வேதா உன் அறிவு இங்க தான்டி நிக்குது…. மைண்ட் வாய்ஸ் விக்கியில் ,திக்கி நிக்க, பல்ப் எரிந்தது வேதாவின் முகத்தில்...
“அண்ணி, எவனோ ஒரு தெருவுல போறவன் போல, எதையோ வித்துட்டு போயிருக்கிறான் அந்த விக்குறவன்…. அவனை அழைச்சிட்டு நடுராத்திரில வந்து நிக்குறா உங்க பொண்ணு….. சோத்தை போட்டு அந்த டிரவுசர் அவுந்த பயலை துரத்தி விடுடி , என் அண்ணி மானஸ்தி, அவருக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு ரொம்ப போராடி பார்த்தேன் அண்ணி….. கேட்டாள அவ…. நானும் அவன் கூட பன்னிரெண்டு மணிக்கு போறேன்னு நிக்குறா…. அதான் நம்ம அண்ணன் வீட்டு மானம் எதுக்கு பார்ட்டியில போகனும்னு ,அந்த பயல ஒரு ரூம்ல போட்டு அடைச்சிட்டு ,சீமா குட்டிய புத்தி சொல்லி என் ரூம்ல பாதுகாப்பா தங்க வச்சேன்…. இது தப்பா அண்ணி……”
இப்போது கற்பகத்தின் முகம், காக்கா கக்கா போனதை தொட்டது போல இருந்தது….(வ்வே)
“நீங்களும் போயி அவளுக்கு புத்தி சொல்லுங்க….. அருமையான அம்மாவுக்கு பிறந்துட்டு , இவ்வளோ அடங்கா பிடாரித்தனம் ஆவாதே அண்ணி……. நான் ஒரு மணி நேரம் கண்ணை மூடறேன்….. உங்களுக்கு ஏதாவது வேணுமின்னா வேலைக்காரப் பொண்ணு ராணி வருவா கேளுங்க……”
சிரித்தபடியே விடைபெற்ற வேதாவை, இவ நம்மள கலாய்ச்சாளா இல்ல, நிஜம்மாவே கடமை உணர்வோட பேசினாளா… ? இவ நல்லவளா இல்ல கெட்டவளா…..? தனக்குள்ளேயே குழம்பியபடி உள்ளே போனார் கற்பகம்…
வயதில் சிறியவரான வேதாவை , கோதண்டம் மறைவிற்கு பின் மரியாதை இல்லாத தொனியில் கற்பகம் நடத்த ஆரம்பிக்க, அதன்பின் தனித்து வந்து தனது ராஜ்ஜியத்தை நிறுவி விட்டாலும் வேதா குறித்த இழி எண்ணம் நீங்கவில்லை தொடர்ந்தது… ஆனால் வேதா சிறந்த தடுப்பாட்டக்காராராய் மாறிவிட்டார்…. பால் வந்தாலே பவுண்டரி க்கு தான்….….
வேதா , தூங்கப்போகும் முன், ரோஜாவுக்கு வாட்ஸ்அப் பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்….
காலைல அஞ்சு மணிக்கே கற்பகம் கமிங், ராத்திரி ரெண்டு மணி வரை சீமா நோ ஸ்லீப்பிங்…… எனக்கு கண்ணை கட்டிங்…… சீமா மம்மி யூ நோ சீயிங்….. ஐ ஆம் 7.30 வேகிங்…. ஓவர்….. ஓவர்….
அவ்வளவு தான் அடுத்த நிமிடம், கோதண்டத்துடன் டூயட்டில் வேதா……. மலர்ந்த முகத்துடன் உறக்கத்தை தழுவினார்…..
சீமாவை தேடி சென்ற கற்பகம் அவள் தூங்குவதை பார்த்து நொந்து கொண்டார்…
'அவன் அந்த ஆராவ அலேக்கா தூக்கிட்டு வரான் கட்டின பொண்டாட்டி மாதிரி, அந்த வேதா என்கிட்டயே போட்டு வாங்குறா, இதுல நான் ஏதோ சாதிச்சிட்டு வரேன்னு பெருமை பேசி அந்த வீணா போன விக்ரமையும் கூட்டிட்டு வந்துட்டு , ஒன்னுமே கிழிக்காம மல்லாக்க படுத்துகிட்டு மங்குனி போல தூங்குறா இந்த எருமை…..'
அவரும் புலம்பியபடி கண்ணை மூட, அந்த வீடு ,சற்று ஓய்வெடுத்தது…
மீண்டும் வீடு உயிர்த்தெழுந்த போது ,எட்டு மணி…. இளா, குட் மார்னிங் டாலியுடன் வெளியே வர, வேதா சிரிச்சவாரே காஃபி தந்தார்…..
கிரிஷ்ஷும் ரோஜாவும் கீழே வர,
“ரோ , மணி எட்டு, லட்டு பசி தாங்காதே இன்னும் தூங்குது, போயி அவளை எழுப்பி விடு ரெடி ஆகட்டும்…..”
'சரி மீ'யுடன் நகர்ந்த ரோஜாவை,
“அவ தூங்கட்டும் ரோஸ், அவளுக்கு வயிறு வலி…. இன்னும் ரெண்டு நாளைக்கு சரியா சாப்பிட மாட்டா…எழுப்பினாலும் அவளுக்கு தான் கஷ்டம்…தூங்கற வரை தூங்கட்டும்….அவளே வருவா….” இளா தான்….
கேட்டதும் வேதாவும் ரோஜாவும்….
ஒருவரைப் பார்த்து ஒருவர் அர்த்தமாக புன்னகைத்து கொண்டனர்
“நேத்து அந்த சோத்து மூட்டை என்னைய பார்க்க வச்சிட்டு பால்கோவாவை முழுங்கும்போதே தெரியும், இன்னைக்கு அவளுக்கு வயிறுவலிதான்னு……ஹ… ஹ.. ஹா….” பல்லை காட்டிய கிருஷ் ஷை, மூன்று பேரும் சேர்ந்து முறைத்தனர்…..
திரு திரு முழியை கொடுத்துவிட்டு அமைதியாக கவுச்சில் உட்கார்ந்து பேப்பர் படிக்கிறது போல ஆக்ட் குடுத்தான்…. இப்ப என்ன சொல்லிட்டோம்னு இந்த த்ரீ இடியட்ஸ் என்னை முறைச்சதுங்க….. ஃபன்னி பீப்பிள்…… மனசுக்குள் சிரித்துகொண்டான்….
இளா, “ திருந்தாத திருட்டு பையன் முழியப் பாருங்க, அவனை விடுங்க , டாலி ப்ரேக் ஃபாஸ்ட் என்ன…?”
வேதா , “சிக்கன் குழம்பு, வடை கறி, இட்லி அதோட சேமியா கேசரி….. லேட் ஆனதுனால , சிம்பிளா முடிச்சிடுவோம்…. லஞ்சுக்கு வெரைட்டி பண்ணிக்கலாம்…..”
“ஓஹோ சன்டே செலிபிரெஷன் ….சூப்பர்….நானும் , லட்டும் லஞ்ச் முடிஞ்சதும் கிளம்பனும்…..கொஞ்சம் வேலை இருக்கு…அவளும் ஏதோ பிராஜெக்ட் பாக்கி இருக்கு, நாளைக்கு சப்மிட் பண்ணனும்னு சொன்னா…..”
“சரிடா கிளம்பலாம்.நான் சிக்கன் வாங்கனும், நானே போயி வாங்கினாத்தான் நல்லது….. நீ வண்டிய எடு இளா போவோம்…..”
கிளம்பும் முன், ரோஜாவை கூப்பிட்டு,
“வேதா மருமக எங்கேயும் தலை குனிய கூடாது, முக்கியமா கற்பகம் அண்ணி கிட்ட….. பார்த்து நடந்துக்க ரோ…”.காதை கடித்து விட்டு இளாவுடன் வெளியே சென்றார்….
“ரோசா….. லட்டு எருமைக்கு தான் கேசரி பிடிக்காதே…. உடம்பு வேற சரியில்ல…அவளுக்கு பிடிச்சத செய்யாம, தாய் கிழவி பாட்டுக்கு தானா மெனு போடுது…..”
“அதெல்லாம் பார்த்துக்கலாம் கிருஷ்….நான் அவளுக்கு தனியா எதுவும் செஞ்சிடறேன்…..” என்றவள் அருகே சென்று அமைதியான குரலில் , “கற்பகம் அம்மா வந்துட்டாங்களாம்…..உள்ள சீமா கூட இருக்கிறாங்க….அத்தை ஜாக்கிரதை யா இருக்க சொல்லிட்டு போனாங்க…..”
கடுப்பானான் கிருஷ்…. “சீமாக்குதான் அறிவில்லன்னா ,அத்தை அதுக்கும் மேல….. இதுக்கு நான் கடைக்கே போயிருப்பேன்……” அவனும் கிசுகிசுப்பிலேயே கடுப்படித்தான்….
ஆராவும் எழுந்து வர, “இப்ப எப்படி இருக்கு லட்டு…?” ரோஜா…
“கொஞ்சமா திங்கணும்.. நேரம் காலம் பார்க்காமல் தின்னா, தெய்வம் நின்னு கொல்லும் அதுவும் அண்ணனை பார்க்க விட்டு தின்னா உடனே கொல்லும் பார்த்தியா…?…. சேத்து பன்னி கணக்கா உருளாம கிளம்பு , ஹாஸ்பிடல் போகலாம்…. போயி உன் வாய தச்சி கூட்டிட்டு வந்தா தான் அடங்குவ…..
பதில் சொல்லாமல், ரோஜாவை கட்டி பிடித்து சாய்ந்து கொண்டாள்….
“ரோஜா தான், சும்மா இரு கிருஷ் இதெல்லாம் உனக்கு புரியாது என்றாள்….”
“அது என்ன வயிறு வலி, எனக்கு தெரியாத வலி,..” முறைத்து விட்டு அமைதியானான்
வேதாவின் ரூமில் ,அப்போதுதான் விழித்த சீமா, விக்ரமிற்கு ஃபோன் செய்து பேசினாள்,
“கெட் ரெடி சூன் விக்கி….. என்னால இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது…. மம்மி இங்க தான் இருக்காங்க…. பட் நோ யூஸ் இனிமே என்ன பண்ணினாலும்……..”
வைத்து விட்டாள் ஃபோனை…
“என்னடி நடந்தது…..?” பேசி முடித்தவளிடம் கற்பகம் கேட்க…,
“எல்லாம் முடிஞ்சு போச்சு….உன் பொண்ணு ஆரா கிட்ட தோற்த்துபோயிட்டா…… எல்லாரும் ஆல்ரெடி டிசைட் பண்ணி வச்சிட்டாங்க மம்மி, ஆராவுக்கும் இளாவுக்கும் கல்யாணம் பண்ண, இளா கடைசி வரை என் லவ்வ ஃபீல் பண்ணவே இல்ல மம்மி அத நினைச்சாத்தான் தாங்க முடியல, எனக்கு வாழவே பிடிக்கல மம்மி….….” கற்பகத்தின் மடியில் படுத்துக்கொண்டு அழுத சீமாவின் கண்ணீரை பார்த்து , கற்பகத்திற்கு வெறி கிளம்பியது.
என் பொண்ணை அல்லாட விட்டுட்டு ,அந்த ஆராவ மகாராணி ஆக்கி அழகு பார்ப்பாங்க….அதை நான் பாரத்துட்டு சும்மா இருப்பேனா….. ஆத்திரத்துடன் ஹாலுக்கு போனவர், ரோஜாவிடம் சலுகை கொண்டாடுவதும், கிருஷ் திட்டுவது போல ஆராவைத் தாங்கவும் இன்னும் கொதித்தார்…
“ ஏய் , அம்மான்ஜி ஆரா, எழுந்திரிடி முதல்ல, அப்பன் ஆத்தா ,மாமன், அத்தைன்னு எல்லாரையும் முழுங்கிட்ட , அடுத்து என் பொண்ண முழுங்க பார்க்குறியா…? போடி வெளில….…..” வீடே அதிரும்படி அலறினார்…..
சாரா…..??