• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanmani unai naan karuthinil niraithen - Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
சர சர சாரா காத்து வீசலையே
சைட்ட பாத்து பேசலையே
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
சர சர சாரா காத்து வீசலையே
சைட்ட பாத்து பேசலையே
இதுக்கு reply adutha EPI Yoda reply la கொடுத்திருக்கேன்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன். – சாரா

அத்தியாயம் 4

“போடா உன்கிட்ட ஐடியா கேட்டால் என்னையே குழப்பற.. சரி நான் கிளம்புறேன் பை.. நாளைக்கு
பார்ப்போம்..”
அவசர அவசரமாக இளா கிளம்பினான்.
அவன் முகம் ஏதோ யோசனையில் இருந்தது.


கிருஷ்ஷிர்க்கு புரிந்து விட்டது..
பையன் மாட்டிகிட்டான்.
சீக்கிரம் நம்ம வழிக்கு வந்திடுவான். என்று நினைத்தபடி
நமட்டு சிரிப்புடன் விடைப் பெற்றான்.


மனம் புது புது குழப்பங்களை உருவாக்க வீட்டிற்க்கு
சென்றான் இளா.


லிவ்விங் ரூம் கவுச்சில் ஷார்ட்சும் , பார்பி டீ ஷர்டும் அணிந்து தூங்கி கொண்டிருந்தாள் ஆராதனா.
பாவி பய இந்த குட்டி பொண்ணை போய் கல்யாணம் பண்ணிக்க சொல்றான். அவனுக்கு தான் மூளை வளர்ச்சியே இல்லாமல் பொய்டுச்சி… மனதிற்குள் கிருஷிர்க்கு அர்ச்சனை செய்தான் .. .
(அடங் கொக்காமக்கா……..?????)



இளாவின் வீட்டில் சமையல்கார அம்மா வடிவு, டிரைவர் சின்னசாமி, அவரது மனைவி என மூவர் மட்டுமே வேலை செய்கிறார்கள்.

சின்னசாமி யின் மனைவி தனம் வீட்டில் மேல் வேலைகள் அனைத்தும் செய்வார்.சின்னசாமி ஆராவிற்கு மட்டும் டிரைவர். வீட்டுக்கு தேவையான சாமான் வாங்குதல், மற்ற வெலைகள் என்று சொந்த
வீட்டைபோல பொறுப்பாக கவனித்து கொள்வார்.
இவர்கள் இளமாறன் உடைய பெற்றோர் காலத்திலிருந்து வேலை செய்கிறார்கள்.


வேலை நேரம் தவிர ,மூன்று பேரும் அவுட்
ஹவுஸில் தங்கியிருப்பார்கள்.


வடிவு டிஃபன் …, பால்…, எல்லாம் செய்து டையனிங் டேபிளில் வைத்துவிட்டு சென்றிருந்தார்.

இளா ஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்து பாலை மட்டும் குடித்தவன்..,

ஆரா வை தூக்கி கொண்டு போய் அவள் பெட் ரூமில் படுக்க
வைத்தான்…
தூங்கும் அவள் முகத்தைப் பார்த்து கொண்டே அங்கேயே நின்று விட்டான்.
என் ஆரா ஒரு அழகான தேவதை. உன்னை என் காலம்
முழுக்க பத்திரமா பார்த்துப்பேண்டா லட்டு… மனதினுள் பேசினான்.


“நீயும் கட்டிக்க மாட்டெங்கிற யாரையும் கட்டவும் உட மாட்டுற………... உன் லட்டை புட்டு சாபிட்ருவாங்களா ,….. வேற நல்ல மாப்பிள்ளை பார்ப்போம்…………“
மனதிற்குள் கிருஷின் குரல் எதிரொலித்தது.


"யாரை விடவும் என்னால்தான் இவளை நல்லா பார்த்துக்க முடியும் நானே ஆராவை கல்யாணம் பண்ணிக்கிறேன் போடா…"
வாய் விட்டு சத்தமாகவே பதிலளித்தவன், தூக்கத்தில் ஆராதனா காலை திருப்பி போட்டு படுக்கவும்…, சுதாரித்தான்..


டேய் இளா திடீர்னு ஏனடா இப்படி பேசின..? எல்லாம் அந்த கிருஷ் தடியன் குழப்பி விட்டது தான். கடங்காரன்.....- இளா மனதிற்குள் தன்னை தானே சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

மீண்டும் ஆராவை பார்த்தான். திரும்பி படுத்ததில்
அவள் தொடையில் இருந்த அந்த தழும்பு தெளிவாக தெரிந்தது.
பழுக்க காய்ச்சிய இரும்பு .. நேராக அதன் உக்கிரத்தை கோடாக , சதை கொப்பளிப்பொடு மாற்றி இருந்தது.
இதுதான் … இந்த ரணம்தான் இளமாறன் உடைய மனதிலும் விழுந்திருந்தது.


அப்படியே ஆராவின் கட்டிலின் ஓரம் தலை சாய்த்தபடி அமர்ந்துவிட்டான்..உன்னையே நம்பி இருந்த ஆராவுக்கு இப்படி ஒரு
ரணத்தை பரிசா கொடுத்திட்டியே இளா….?
மனசாட்சியின் கேள்விக்கு இளமாறனின் கண்கள் சில
துளிகளை பதிலாய் தந்தது.


இளா அப்படியே தூங்கியும் விட்டான். திடீரென தலையில் ' நங் ' என ஒரு அடி…. ஆஹ்ஹ்ஹ்……அம்மா….…தலையை தேய்த்து விட்டு கொண்டான். வீட்டுக்குள்ள தானே இருக்கோம் பின்ன எப்படி இடி விழுந்தது……….? தலை கிறு கிறுத்தது.
நிமிர்ந்து பார்த்தவனுக்கு புரிந்து விட்டது. எல்லாம் நம்ம ஆரா தான் . காலை தூக்கி தொப்பென்று அவன் தலையில் போட்டிருந்தாள் .. தூக்கத்தில் தான்.


மணி ஆறரை. எழுந்திரித்து அவள் முதுகில் சுள்ளென்று ஒரு அடி வைத்தான்.
"அம்மா …ஆ……. எதுக்கு என்னை இப்படி காலைலயே அடிச்ச …..? போடா.. பன்னி.." வாரி சுருட்டி கொண்டு எழுந்தவள், கடுப்படித்தாள்.


"எதுக்குடி காலை தூக்கி தலையில போட்ட காட்டெருமை …? தலை கிர்றுங்குது "– இளா.

"நீ எதுக்குடா என்னோட ரூமில் வந்து படுத்த..?" – ஆரா.

"போனா போகுதுன்னு கவுச்சில் இருந்து கீழே விழுந்துவிடுவன்னு அரிசி மூட்டைய தூக்கிட்டு வந்து பெட்டில் போட்டா …. இதுவும் கேட்ப ..இதுக்கு மேலயும் கேட்ப…?"- இளா

"அரிசி மூட்டை ய பெட்டில் போட்டுட்டு போக வேண்டியது தான …? எதுக்கு என் ரூமில் படுத்துகிட்டு தூங்கின..?"
( ஆஹா நம்ம ஆராவொட ஆறாவது அறிவு ஆன் ஆயிடுச்சி…. இப்ப பேசுடா பார்ப்போம் ???)


பதில் தெரிந்தால் தானே .., நேராக சுவரை பார்த்தவனுக்கு காலண்டர் கண்ணில் பட , முகம் மலர்ந்தது. “கூடிய சீக்கிரம் நீயும் என்னை தேடி என் ரூமுக்கு வருவ …. அன்னைக்கு உன்னை கவனிச்சுகிறேண்டி” – சவால் விட்டான் இள மாறன்.
( என்னடா நடக்குது இங்க……….????)


"சரி சரி தொல்லைப் பண்ணாமல் சீக்கிரம் கிளம்பு.. கிருஷ் வீட்டுக்கு போறோம். வேதாஜீ யோட டிரஸ் ஃபிட் பண்ணனுமாம். நான் உன்னை அங்க விட்டுவிட்டு அப்படியே ஆஃபீஸ் போறேன்." – இளா.

"ஐ ..! அப்ப ப்ரேக் பாஸ்ட் மாதஜீ கையாலயா..? எனக்கு இன்னும் நாலு நாள் இருக்கு காலேஜ் திறக்க., நான் அங்கேயே தங்கிக்கிறேன். யாருக்கும் என் தொல்லை வேண்டாம்.. "
வாயை ஏழு முழம் நீட்டி முழக்கியவள், தலையணையை எடுத்து மண்டையிலெய்யே இரண்டு அடி போட்டு விட்டு , இது என் முதுகை காலையிலேயே பஞ்சர் ஆக்குணதுக்கு என்று சொல்லி ஓடிப் போய்விட்டாள்.
( பார்த்து பார்த்து அவனுக்கு வலிக்க போகுது. …. தலையணையில் அடிக்கிறாளாம்??? )


மணி ஏழு, கிருஷ் அப்போதுதான் எழுந்தான். கீழிருந்து
ஒரே தாளிப்பு மணம். ஆஹா …….தாய் கிழவி அடுப்ப பத்த
வச்சிடுச்சி போல இருக்கே… ஒஹ்… அந்த எழரைங்க
காலையிலேயே கொட்டிக்க வர்ரதினாலயா…?


டூத் ப்ரஷ் , பேஸ்டை எடுத்துக்கொண்டு காரிடார் பக்கம்
இருந்த வாஷ் பேசின் க்கு பல் துலக்க போனான்.
எல்லாம் மாமியார் , மருமகளை வேவு பார்க்க தான். காரிடாரை ஒட்டித்தான் கிச்சன் இருந்தது.


கிச்சன் உள்ளேயிருந்து ஒரே பாட்டு சத்தம். காதை ஒட்டி வைத்தான் கிருஷ்…
சரிகமா பதனிசா ….. கம்ம்மான் கம்ம்மன் ஹே ஜல்சா……. ஜலசா….. குரல் கேட்டதும் இது நம்ம குருவி கூவுது…


மீ… சா வரிசைல நீங்க பாடனும்… ரோஜா எடுத்து கொடுத்தாள்.

சொப்பன சுந்தரி நான் தானே, சொப்பன லோகத்தின்
தேன் தானே..- இது நம்ம வேதா ஜி.


கிழவிக்கு லொள்ள பார்த்தியா…….கிருஷ் தலைலயே
அடித்து கொண்டான். கோதண்டம் உன் பொண்டாட்டி எல்ல மீறி போகுது…
சே….. நம்ம ரூமிலேயே பல்லு விலக்கி இருக்கலாம்.


அதற்குள் வெளியே வந்த ரோஜா , "எழுந்து ட்டியா
கிருஷ்.. ? எப்ப கீழே வந்த..? "


"உன் மாமியார் சூப்பர் சிங்கர்
டைட்டில் வின் பண்ணும்போதே வந்துட்டேன்".. – கிருஷ் பற்களை கடிக்க…


"ரோ…. அங்க என்னடா சத்தம்..? "– வேதா ஜி.

"பார்த்தியா இதுக்கு கொழுப்பை… நான் ஒருத்தன்
வந்திருக்கெனே மதிக்குதா…? உங்களை ரெண்டு பேரையும் ஒரு நாள் கும்மு கும்முன்னு கும்மல.. என் பேர் கிருஷ்ணா இல்லடி".-


"போடா எப்போதும் காமெடி பண்ணிகிட்டு… இரு உனக்கு டீ ய கொடுத்துட்டு அப்புறம் சிரிக்கிறேன்."- ரோஜா.

"அடீங்க என்னைய பார்த்தா காமெடி பண்ற மாதிரி இருக்கா…?" அதற்குள் ரோஜா கிச்செனுக்கு ஓடி விட்டாள்.

"என்ன ரோ .., உன் புருஷன் வம்பு வளத்தானா.. வழக்கம் போல…?" – வேதா

"ஆமாம் மீ … உங்க பாட்டுல ரொம்ப காண்டு ஆகிட்டாரு".
- ரோஜா


"இவனுக்கு என்னவாம் ..? என் புருஷநே என்னை கண்டுக்க மாட்டாரு… இவன் என்ன பிஸ்கோத்து…
நாம சந்தோஷமா இருந்தா மூக்குல வேர்த்துரும் அந்த தடியனுக்கு……


சரி இந்த டீ ய கொண்டு போய் அவன்கிட்ட கொடு.. இல்லைன்னா காலைலயே கோபம் வந்த கொரில்லா கணக்கா மூஞ்ச வச்சிப்பான் அப்புறம் பார்க்க சகிக்காது"...- வேதா

அதற்குள் கிச்சன் வாசலில் கிருஷ் வந்து முறைத்தபடி நிற்க..
உடனே வேதா..
"எப்ப எழுந்தாங்க என் சக்கரை கட்டி..?
ஏ …….ரோஜா …..என் குழந்தை எழுந்து இவ்வளவு நேரம்
ஆகியும் டீ கொடுக்காமல் என்னடி பண்ணுற..? உனக்கு ரொம்ப திமிரா…?"


"அம்மா , பெட் லயிருந்து அப்படியே எழுந்து வந்துட்டேன். வெளியில போக டைம் கிடைக்கல.. சாரி மா".- கிருஷ்.

"எதுக்கு பா சாரி..?-" வேதா.

"காலை லேயே கஷ்டபட்டு இவ்வளவு நடிக்கிறீங்க. என்னால ஒரு மெடல் வாங்கி கொடுத்து பாராட்ட முடியலையே அதுக்கு தான் சாரி".- கிருஷ்.

வேதா…?????????

"எப்படி எப்படி ..? நேர்ல பார்த்தா குழந்தை ., பார்க்கலை நா கொரில்லா வா…? வர வர உங்க டார்ச்சர் தாங்க முடியல ..என்னை யாருக்காவது தத்து கொடுத்துருங்க… சாமி".- கிருஷ்.

"இனிமே உன்னை யாருப்பா தத்தெடுப்பா..? எனக்கும் ஆசை தான்."- வேதா.

"தாய் கிழவி … , இரு உன்னை முதல்ல முதியோர் இல்லத்தில் சேர்க்கிறேன். ,"– கிருஷ்.

யாருடா என் டார்லிங் க போய் கிழவின்னு சொல்றது..?- இளமாறன் வர பின்னாடியே ஆராதனா .. ஹாய் அண்ணி… என்றபடியே நுழைந்தாள்.



சாரா
அய்யோ மிடியிலே மிடியிலே ஹாஹாஹா?? ரோஸா வேத்தஜி செம்ம combination ??
மாறாக்கு ஆரா மேலே காதல் கத்தடிக்க அரம்பிச்சுத்து பேஸ் பேஸ் இந்த ரொமன்ஸ் நன்னா இருக்கே ????????Nice ep sara
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Muruga sirichu sirichu vayir valikudgu ???? vedhaji u r rocking ji adu Ena patu sopana sundari Nan than va???? Ena parthu tan elrum pada poranga " Yar Petra magalo nee Yar Petra magalo nu " taniya sirikarathuku... Pei iruka ilaya madiri ila nee laddu va katuviya matiya.. solunga Sara solunga ??
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Muruga sirichu sirichu vayir valikudgu ???? vedhaji u r rocking ji adu Ena patu sopana sundari Nan than va???? Ena parthu tan elrum pada poranga " Yar Petra magalo nee Yar Petra magalo nu " taniya sirikarathuku... Pei iruka ilaya madiri ila nee laddu va katuviya matiya.. solunga Sara solunga ??
காட்டுவான் டா... அதுக்கான பேச்சு வார்த்தைகள் போயிட்டு இருக்கு..?
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Thanks darling ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top