கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்.
– சாரா
அத்தியாயம் – 5
“ஆஹா ……. வந்துட்டாங்கையா …. வந்துட்டாங்க……”
கிருஷ் கதறினான்…
“லட்டு உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு…? என்னடா இளைச்சு போயிட்ட..?” - வேதா ஜி.
“ஆமாம்.. ஆமாம்…. காண்டா மிருகம் ஒன்னு கப்பல்ல போச்சாம்… காட்டெருமையா இளைச்சி கால்நடையா வந்துச்சாம்…..….”
கிருஷ்ஷின் கேலிக்கு ஆரா முறைக்க,
அவளின் முறைப்பை கண்டுகொள்ளாமல்…
“போம்மா…….போயி வந்த வேலைய பாரு … அந்த தாய்
கிழவி காலையிலேயே தவிடு , புண்ணாக்கு பருத்தி கொட்டைன்னு வித விதமா உனக்கு பிடிச்சது எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கு…. போய் கொட்டிக்க…”
“நீ வாடா லட்டு… அவன் கிடக்கிறான் …..பொறாமை புடிச்சவன்….அவன் காக்கா முட்டை கண்ணை வச்சிட்டு புள்ள மேல கண்ணு வச்சிட்டான்.அவன்
காலடி மண்ணெடுத்து முதல்ல சுத்தி போடணும் நீயும் வந்து
உள்ள உட்காரு இளா. “
“என்னை டம்மி பன்றதையே வேலையா வச்சிருக்க ….
நீ எல்லாம் எனக்கு மம்மின்னு வெளியில சொல்லிடாத….”
“அதையே தான் நானும் சொல்லனும்னு நினைச்சேன். மகராசன் நீயே சொல்லிட்ட. நீயும் என்னை அம்மான்னு வெளியில போய் சொல்லிடாதடா…… தமன்னா போல இருக்கிற எனக்கு தகர டப்பா மூஞ்ச வச்சிருக்க நீதான் பிள்ளையாங்குற
அதிர்ச்சியில் என் ஃபேஸ் புக் ஃபேன்ஸ் எல்லாம் செத்துற போறாங்க.”.
(ஆத்தீ…………??????. )
கர் ………..கர்………..கர். (?????அப்படி இருந்துச்சி
நம்ம கிருஷ் பய மூஞ்சு….)
“சரி…… சரி …. விடு……… வேதா டார்லிங். பாவம் என் நண்பன். அவனை எனக்கு முன்னாடி யாரும் கேவலமா பேசுறத பார்த்து கிட்டு என்னால சும்மா இருக்க முடியாது…”- இளா.
“ஆமாம் மீ…….என் புருஷனை நீங்க எப்படி தகர டப்பா மூஞ்சின்னு சொல்லலாம், வேணும்ன்னா என் செல்லத்த தங்க டப்பான்னு சொல்லுங்க..?”
ரோஜா சப்போர்ட் க்கு வர…..
“வாடா நல்லவனே….? அந்த கிழவி…, சாணிய தெளிச்சி என் மூஞ்சிலயே முறை வாசல் பண்ணி கோலமும் போட்டு முடிச்சிடுச்சி .., இப்பதான் உனக்கு நான்
கேவலப்படுறது தெரிஞ்சுதா…?”
“அவனை கூட மன்னிச்சுடுவெண்டி…. ஆனால் கூடவே இருந்துகிட்டு …, இந்த ராஜமாதா சிவகாமி தேவி உத்தரவு போட்டுச்சின்னு … என் முதுகிலேயே கத்தி கத்தி குத்துற பாரு …..நீ ஒரு சொட்டையில்லா கட்டம்மா டி…”
“மம்மி ய மீ ன்னு கூப்பிடறவங்கள பார்த்துருக்கேன்…. மாமிய மீ ன்னு கூப்பிடிறவளை எங்கேயாவது பார்க்க முடியுமா..? எல்லா கூத்தும். என் வீட்டில தான் நடக்கும்.”
“அய்யய்யோ ..அதுலயும் எங்கம்மா அபிநய சரஸ்வதி இருக்குதே.., ரோஜா ன்னு ரெண்டே எழுத்து இருக்குற பேரு…… அதையும் சுருக்கி ரோ ன்னு கூப்பிடுது. கட்டின புருஷன் நான் கூட உன்னை அப்படி கூப்பிட்டதில்லை…அடேய் இது குடும்பமா இல்ல நாடக கொட்டையாடா… “
“கோதண்டம்…. இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் அவசர அவசரமா தட்கல்ல டிக்கெட் எடுத்து அல்பாயுசிலயே போயிட்டியா……… நீ…..? கூடிய சீக்கிரம் என்னையும் அனுப்பிடுவாளுக… தகப்பா…. நானும் ஆன் தி வே … நல்ல ஜன்னலோர ஸீட்டா புடிச்சு வை….”
கிருஷ் ப்பாட்டிற்கு புலம்பி கொண்டிருக்க… உள்ளே போன ஆராதனா….
“என்ன அண்ணி…? நான் டயட்டில் இருக்கேன்னு சொல்லியும் எனக்கு அவிச்ச முட்டை செய்யாமல் வச்சிருக்கீங்க..” ரோஜா விடம் வந்து சிணுங்கினாள்...
“இங்க நான் ஒருத்தன் தற்கொலை பண்ணிக்கிறதுக்கு வாக்கு மூலம் கொடுத்துட்டு இருக்கேன். உனக்கு அவிச்ச முட்டை இல்லைன்ரது தான் பிரச்சனையா……?
விஷம்…..விஷம்……விஷம்…விஷம் …… அம்புட்டும் விஷம்”
என்றபடி ஆராவின் மண்டையிலேயே கொட்டினான்.
“பாருங்க மாதாஜி….” வேதாவிடம் சலுகைக்கு போனாள்.
“ஏண்டா வளர்ற புள்ளய தலையிலே கொட்டுற… …”
“ஆமாம் ஆமாம்… வளர்ர புள்ளை… எல்லா புள்ளையும் மேல் நோக்கி வளரும் .. இந்த தொல்லை மட்டும் சைடுல வளருது …”
“குழந்தைய ஏண்டா வந்ததிலே இருந்து இப்படி கரிச்சி கொட்டுர…..?”
“அம்மா… நீயுமாம்மா.. ….? இன்னும் குழந்தை , குழந்தைன்னுட்டு….
அவளுக்கே குழந்தை பெத்துக்கிற வயசு ஆச்சு. இருபத்தி இரண்டு வயசு 'அவளுக்கு'……..”
அவளுக்கு என்று முடித்த வார்த்தையில் கிருஷ் கூடுதல் அழுத்தம் தர…, ரோஜாவும், வேதாவும் கிருஷை என்ன என்பது போல் பார்த்தனர். கண்களால் இள மாறனை சைகை காட்டினான். பின் அவர்களிருவருக்கும் ஏதோ புரிந்தும் புரியாமலும் இருந்தது.
அதற்குள் இளா, “செம்ம பசி டாலி. உன் கையால சாப்பிடறது க்காக , நேத்து ராத்திரி லேயிருந்தே வயித்தை காலியா வச்சிருக்கேன்.” (அடப்பாவி..)
வேதா அனைவரையும் அமர செய்து பரிமாறிக் கொண்டு இருந்தார். ரோஜா உதவி செய்தாள்.