கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் - சாரா
அத்தியாயம் 7
வைத்தியநாதனின் ஃபோனை கட் செய்தபின் இளாவுக்கு இருப்பு கொள்ளவில்லை…..
குறுக்கும் நெடுக்கும்மாய் நடந்தவன்….,
ச்சை என்ன பொண்ணு இவ..? எவ்வளவு விரட்டினாலும் காலை சுத்தின பாம்பா விட மாட்டேங்கிராளே……… அந்த அங்கிளுக்காக அமைதியா இருக்கணும்னு நினைச்ச என்னையே என்னவெல்லாம் பேச வச்சிட்டா…?
அப்போது தான் அவன் சீமாவிடம் பேசியது ஞாபகத்திற்கு வந்தது..
அய்யய்யோ என்னவெல்லாம் பேசிட்டோம்….. கல்யாணம் …….., ஆரா…….., அழகா ஆறு பிள்ளைகள் ………….. அனைத்து வார்த்தைகளும் வட்டம் போட்டது மனதிற்குள்…..
அடப்பாவி ஏன்டா இளா இப்படியல்லாம் சவால் விட்ட….? அதுவும் லட்ட போய் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டியே டா… அவளை எப்படிடா இப்படி பார்க்க முடிஞ்சது உன்னால…..?
தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்தவன்…. ஏன் இப்படி பேசினோம்… நேத்து வரைக்கும் நல்லா தான் இருந்தோம்.. நேத்து கிருஷ் கிட்ட பேசறவரைக்கும்…
எல்லாத்துக்கும் காரணம் அந்த கிழிஞ்ச வாயன் கிருஷ் தான்…. அவனை சும்மா விடாத போய் கிழி கிழி கிழின்னு கிழிச்சிரு …. இளாவை அவன் மனசாட்சி உசுப்பி விட்டது.(?)
“செல்லில் கிரிஷிர்க்கு அழைத்தான். டேய் மச்சான் ஃப்ரீ யாடா…? ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும் டா..”
…??…….?……
“டேய் ரொம்ப பந்தா பண்ணாத… , நீ வந்தால் லஞ்சுக்கு, பான் ஏசியா போயி, பெக்கிங் டக் சாப்பிட்டுக்கிட்டே விஷயத்தை பேசிடலாமுன்னு பார்த்தேன்… சரி விடு .., முக்கியமான வேலை இருக்குன்னு வேற சொல்ற… ஒகே ட…….. “
அவன் பேசி முடிக்கும் முன்….,அந்த பக்கம்,
…………???……………..
“இல்லை பரவாயில்ல டா…. நான் ஈவ்னிங் பேசிக்கிறென். எனக்காக அவ்ளோ தூரம் வர வேண்டாம் மச்சான்..”
……………???….
“அப்போ சரியா ஒன் ஓ கிளாக், பான் ஏசியாவில் மீட் பண்ணலாம். லஞ்சிக்கு அப்புறம் எனக்கு வேளச்சேரி பிரான்ச்சில ஒர்க்கேர்ஸ் மீட்டிங் வேற இருக்கு சீக்கிரம் வந்துடு. “(வராத கிருஷ்……. வாத்து கறி திங்கவர்ற உன்னை கொத்து கறி பண்ண பார்க்கிறான்……?)
(வாத்துக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்..?,
வாத்துதான் இருக்கும்…
ஆனா இந்த பெக்கிங் வாத்தை உள்ள வச்சி வலைய போட்டா நம்ம கிருஷ் இருப்பான்.ஏன்னா அந்த சைனிஸ் டிஷ் மேல நம்ப கிருஷ்சுக்கு ஒரு கிரஷ்,…)
ஒரு வழியாக வந்த வேலை,வராத வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு , ஆமை வடைக்கு வேலை மேல வேலையா கொடுத்து அவளை உளுத்த வடையாக ஆக்கிவிட்டு,வாத்து கறி சாப்பிட, கிண்டியில் இருக்கும் பான் ஏசியா விர்க்கு கிளம்பினான் இளா.
மணி பனிரெண்டு ஐம்பது ,பான் ஏசியா வில் நுழையும் பொழுது.
ரெஸ்டாரண்ட் உள்ளே நுழையும் போதே ,
“என்னடா என்ன வர சொல்லிட்டு இவ்வளவு லேட் டா வர…? உனக்கு கொஞ்சம் கூட பங்சுவாளிட்டியே இல்லடா மாப்ள..” நம்ம கிருஷ்தான்.
“ஒரு மணிக்கு வர சொன்ன நானே பத்து நிமிஷம் முன்னாடி வந்திருக்கேன். சரி நீ எப்போ வந்த…? “
“ஜஸ்ட் உனக்கு இருபது நிமிஷம் முன்னாடி...”
“அட வெக்கங்கெட்டவனே….. ஒரு கர்ட்டேசிக்கு சாப்பிட வாடான்னா… இப்படியாடா அரைமணி நேரம் முன்னாடியே இருப்ப…”
“போடா… அங்க அந்த தாய் கிழவி என்னை தாளிச்சு விட்டதில கொஞ்சமா நாலு கரண்டி பொங்கல், அஞ்சு இட்லி, மூணு தோசை, பங்கமான பஜ்ஜில மூணு, பிச்சு பொட்ட சிக்கன் நாலே நாலு பீஸ் மட்டும்ன்னு சாப்பிட்டுட்டு அவசரமா கிளம்பிட்டேன் டா… அதான் பாப்பாவுக்கு சீக்கிரம் பசி வந்துட்டு…”
“ஏன்டா பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்லை…? அங்க காலை சாப்பாடு தீர்ந்துடுச்சின்னு சொல்லியும் கிளம்பாமல் …, ரோஸ் , வட்டி, சட்டிய முதல்கொண்டு கழுவி கவுத்ததுக்கு அப்புறம் ஏதாவது இருக்குதான்னு அண்டாகுள்ள எல்லாம் தலையை விட்டு பார்த்திட்டுதானடா வீட்ட விட்டுட்டு கிளம்பின..?”
“ஓ இப்படியெல்லாம் கண்ணு வைக்கிறியா…நீ…? சரி அதெல்லாம் விடு… என்னை எதுக்கு இப்ப நீ உடனே பார்க்கணும்னு அடம் பிடிச்ச…? நான் அழகுதான் அதுக்காக உன் முன்னாடியே இருக்க முடியுமா..? எனக்கும் வேலை இருக்குமில்ல..? உடனே பார்க்கணும்னு ஆசையா இருந்தால் செல்ஃபி எடுத்து அனுப்பி இருப்பேனே டா....”
“அடிங்க…. எல்லாம் உன்னால தான்…டா .. என் நிம்மதியே போய்டுச்சு. என் வாயும் ,மூளையும் நான்சிங்க்கா செயல்படுது. எனக்கு நீதான் ஏதோ சூனியம் வச்சிட்ட.. உன்னை நேர்ல பார்த்து குமுறினாதான் என் மனசுக்கு சந்தோஷம் கிடைக்குமுன்னு தான் உன்ன வர சொன்னேன்…”
“அடப்பாவி .., இப்ப தெரியுதா நான் ஏன் இன்னும் அம்பானி ஆகலைன்னு….? முன்னேறதுக்குகான முன்னூறு வழிகளில், முக்கியமான வழியில போய்ட்டு இருக்கும்போது பெக்கிங்க் டக், பேக் பண்ணாத குக்குன்னு ஆசைய மூட்டி என்ன வரவச்சு , பூசைய பொடலாமுன்னு பார்த்திருக்க….?வொய் யூ கூப்பிட்டு கும்மிங் டா…? மார்னிங் மை ஹோம் யூ கம்மிங் நா..?”
“டேய்..,குங்ஃபூ பாண்டா…. உன் இங்கிலீஷை நிப்பாட்டு இல்ல, வாழ ஆரம்பிக்காமலே நான் தற்கொலை பண்ணிகிட்டு வாழ்க்கைய முடிச்சுப்பேன்...”
“சரி பொழைச்சு போ. இங்கிலீஷ் தெரியலன்னு சொல்ல வேண்டியது தான…இரு டிரேன்ஸ்லேஷன் பண்றேன். காலையில கூட நல்லா சோறு போட்டு சந்தோஷமா தானே டா அனுப்பி வச்சேன். கூப்பிட்டு சோறு போட்டவனை கும்மற பழக்கம் நம்ம தமிழ்நாட்டிலேயே யாருக்கும் கிடையாதே… வொய் யூ டா…?”
இளா பல்லை கடித்தான் …., உதட்டை மடக்கி கோபத்தை கட்டுபடுத்த,
கிருஷ்.., “சரி…… , நண்பனை கும்மனும்னு நினச்சோமேன்கிரா துக்கம் உனக்கு தொண்டைய அடைக்கறதின்னு என்னால புரிஞ்சிக்க முடியுது .. இரு நானே கண்டு பிடிக்கிறேன்…..
ஒரு வேளை நான் ரோஜா கிட்ட காட்டுற முரட்டுத்தனத்தையும் போர்குணத்தையும் பார்த்து இம்ப்ரஸ் ஆகி எதாவது பொண்ணு கிட்ட சண்டை ய போட்டுட்டு, அந்த பொண்ணு உன்னை ஆடம் டீசிங் பண்ணிட்டாளா..?”
…………??? இளா காண்டாக
“யாருடா அவ சொல்லு…? மச்சான் நான் இருக்கேன்.. ஒரு அழகான பையன் ரோட்டில் போக முடியல…… “
இளா முறைத்தபடி, ஃபோனை கையில் எடுத்தான். ஆனால் கிருஷ் இன்னும் நிப்பாட்ட வில்லை…
“சொல்லுடா மச்சான்.. கூட்டமா போய் அவளை கையை பிடிச்சு இழுத்திடலாம்…..”அவன் சொல்லி கொண்டே போக…
“கூட்டமாகவா…..? யாரடா கூட்டிட்டு போறது…?” கேட்டது நம்ம இளா தான்.
“என் பொண்டாட்டி ய தான்… அவ ஒருத்தி வந்தாளே கூட்டமாதான் இருக்கும்.. வேணுமின்னா தாய் கிழவியவும் சேர்த்துக்கலாம் தான்………கையில கல்லு இல்லாமலே வீடுகட்டி ,வாசல் வச்சி ,கிரகப்ரவசமே பண்ணிடும். காலையிலே எப்படி சாம்பிள் கொடுத்துச்சு , பார்த்தீல..?..… ஒரு வேளை உன்னை கையை பிடிச்சு இழுத்தவ சூசைட் பண்ணிகிட்டா அப்புறம் போலீஸ் கேஸ் ஆயிடும்னு பார்த்தேன்.”
அத்தியாயம் 7
வைத்தியநாதனின் ஃபோனை கட் செய்தபின் இளாவுக்கு இருப்பு கொள்ளவில்லை…..
குறுக்கும் நெடுக்கும்மாய் நடந்தவன்….,
ச்சை என்ன பொண்ணு இவ..? எவ்வளவு விரட்டினாலும் காலை சுத்தின பாம்பா விட மாட்டேங்கிராளே……… அந்த அங்கிளுக்காக அமைதியா இருக்கணும்னு நினைச்ச என்னையே என்னவெல்லாம் பேச வச்சிட்டா…?
அப்போது தான் அவன் சீமாவிடம் பேசியது ஞாபகத்திற்கு வந்தது..
அய்யய்யோ என்னவெல்லாம் பேசிட்டோம்….. கல்யாணம் …….., ஆரா…….., அழகா ஆறு பிள்ளைகள் ………….. அனைத்து வார்த்தைகளும் வட்டம் போட்டது மனதிற்குள்…..
அடப்பாவி ஏன்டா இளா இப்படியல்லாம் சவால் விட்ட….? அதுவும் லட்ட போய் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டியே டா… அவளை எப்படிடா இப்படி பார்க்க முடிஞ்சது உன்னால…..?
தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்தவன்…. ஏன் இப்படி பேசினோம்… நேத்து வரைக்கும் நல்லா தான் இருந்தோம்.. நேத்து கிருஷ் கிட்ட பேசறவரைக்கும்…
எல்லாத்துக்கும் காரணம் அந்த கிழிஞ்ச வாயன் கிருஷ் தான்…. அவனை சும்மா விடாத போய் கிழி கிழி கிழின்னு கிழிச்சிரு …. இளாவை அவன் மனசாட்சி உசுப்பி விட்டது.(?)
“செல்லில் கிரிஷிர்க்கு அழைத்தான். டேய் மச்சான் ஃப்ரீ யாடா…? ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும் டா..”
…??…….?……
“டேய் ரொம்ப பந்தா பண்ணாத… , நீ வந்தால் லஞ்சுக்கு, பான் ஏசியா போயி, பெக்கிங் டக் சாப்பிட்டுக்கிட்டே விஷயத்தை பேசிடலாமுன்னு பார்த்தேன்… சரி விடு .., முக்கியமான வேலை இருக்குன்னு வேற சொல்ற… ஒகே ட…….. “
அவன் பேசி முடிக்கும் முன்….,அந்த பக்கம்,
…………???……………..
“இல்லை பரவாயில்ல டா…. நான் ஈவ்னிங் பேசிக்கிறென். எனக்காக அவ்ளோ தூரம் வர வேண்டாம் மச்சான்..”
……………???….
“அப்போ சரியா ஒன் ஓ கிளாக், பான் ஏசியாவில் மீட் பண்ணலாம். லஞ்சிக்கு அப்புறம் எனக்கு வேளச்சேரி பிரான்ச்சில ஒர்க்கேர்ஸ் மீட்டிங் வேற இருக்கு சீக்கிரம் வந்துடு. “(வராத கிருஷ்……. வாத்து கறி திங்கவர்ற உன்னை கொத்து கறி பண்ண பார்க்கிறான்……?)
(வாத்துக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்..?,
வாத்துதான் இருக்கும்…
ஆனா இந்த பெக்கிங் வாத்தை உள்ள வச்சி வலைய போட்டா நம்ம கிருஷ் இருப்பான்.ஏன்னா அந்த சைனிஸ் டிஷ் மேல நம்ப கிருஷ்சுக்கு ஒரு கிரஷ்,…)
ஒரு வழியாக வந்த வேலை,வராத வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு , ஆமை வடைக்கு வேலை மேல வேலையா கொடுத்து அவளை உளுத்த வடையாக ஆக்கிவிட்டு,வாத்து கறி சாப்பிட, கிண்டியில் இருக்கும் பான் ஏசியா விர்க்கு கிளம்பினான் இளா.
மணி பனிரெண்டு ஐம்பது ,பான் ஏசியா வில் நுழையும் பொழுது.
ரெஸ்டாரண்ட் உள்ளே நுழையும் போதே ,
“என்னடா என்ன வர சொல்லிட்டு இவ்வளவு லேட் டா வர…? உனக்கு கொஞ்சம் கூட பங்சுவாளிட்டியே இல்லடா மாப்ள..” நம்ம கிருஷ்தான்.
“ஒரு மணிக்கு வர சொன்ன நானே பத்து நிமிஷம் முன்னாடி வந்திருக்கேன். சரி நீ எப்போ வந்த…? “
“ஜஸ்ட் உனக்கு இருபது நிமிஷம் முன்னாடி...”
“அட வெக்கங்கெட்டவனே….. ஒரு கர்ட்டேசிக்கு சாப்பிட வாடான்னா… இப்படியாடா அரைமணி நேரம் முன்னாடியே இருப்ப…”
“போடா… அங்க அந்த தாய் கிழவி என்னை தாளிச்சு விட்டதில கொஞ்சமா நாலு கரண்டி பொங்கல், அஞ்சு இட்லி, மூணு தோசை, பங்கமான பஜ்ஜில மூணு, பிச்சு பொட்ட சிக்கன் நாலே நாலு பீஸ் மட்டும்ன்னு சாப்பிட்டுட்டு அவசரமா கிளம்பிட்டேன் டா… அதான் பாப்பாவுக்கு சீக்கிரம் பசி வந்துட்டு…”
“ஏன்டா பொய் சொல்றதுக்கு ஒரு அளவில்லை…? அங்க காலை சாப்பாடு தீர்ந்துடுச்சின்னு சொல்லியும் கிளம்பாமல் …, ரோஸ் , வட்டி, சட்டிய முதல்கொண்டு கழுவி கவுத்ததுக்கு அப்புறம் ஏதாவது இருக்குதான்னு அண்டாகுள்ள எல்லாம் தலையை விட்டு பார்த்திட்டுதானடா வீட்ட விட்டுட்டு கிளம்பின..?”
“ஓ இப்படியெல்லாம் கண்ணு வைக்கிறியா…நீ…? சரி அதெல்லாம் விடு… என்னை எதுக்கு இப்ப நீ உடனே பார்க்கணும்னு அடம் பிடிச்ச…? நான் அழகுதான் அதுக்காக உன் முன்னாடியே இருக்க முடியுமா..? எனக்கும் வேலை இருக்குமில்ல..? உடனே பார்க்கணும்னு ஆசையா இருந்தால் செல்ஃபி எடுத்து அனுப்பி இருப்பேனே டா....”
“அடிங்க…. எல்லாம் உன்னால தான்…டா .. என் நிம்மதியே போய்டுச்சு. என் வாயும் ,மூளையும் நான்சிங்க்கா செயல்படுது. எனக்கு நீதான் ஏதோ சூனியம் வச்சிட்ட.. உன்னை நேர்ல பார்த்து குமுறினாதான் என் மனசுக்கு சந்தோஷம் கிடைக்குமுன்னு தான் உன்ன வர சொன்னேன்…”
“அடப்பாவி .., இப்ப தெரியுதா நான் ஏன் இன்னும் அம்பானி ஆகலைன்னு….? முன்னேறதுக்குகான முன்னூறு வழிகளில், முக்கியமான வழியில போய்ட்டு இருக்கும்போது பெக்கிங்க் டக், பேக் பண்ணாத குக்குன்னு ஆசைய மூட்டி என்ன வரவச்சு , பூசைய பொடலாமுன்னு பார்த்திருக்க….?வொய் யூ கூப்பிட்டு கும்மிங் டா…? மார்னிங் மை ஹோம் யூ கம்மிங் நா..?”
“டேய்..,குங்ஃபூ பாண்டா…. உன் இங்கிலீஷை நிப்பாட்டு இல்ல, வாழ ஆரம்பிக்காமலே நான் தற்கொலை பண்ணிகிட்டு வாழ்க்கைய முடிச்சுப்பேன்...”
“சரி பொழைச்சு போ. இங்கிலீஷ் தெரியலன்னு சொல்ல வேண்டியது தான…இரு டிரேன்ஸ்லேஷன் பண்றேன். காலையில கூட நல்லா சோறு போட்டு சந்தோஷமா தானே டா அனுப்பி வச்சேன். கூப்பிட்டு சோறு போட்டவனை கும்மற பழக்கம் நம்ம தமிழ்நாட்டிலேயே யாருக்கும் கிடையாதே… வொய் யூ டா…?”
இளா பல்லை கடித்தான் …., உதட்டை மடக்கி கோபத்தை கட்டுபடுத்த,
கிருஷ்.., “சரி…… , நண்பனை கும்மனும்னு நினச்சோமேன்கிரா துக்கம் உனக்கு தொண்டைய அடைக்கறதின்னு என்னால புரிஞ்சிக்க முடியுது .. இரு நானே கண்டு பிடிக்கிறேன்…..
ஒரு வேளை நான் ரோஜா கிட்ட காட்டுற முரட்டுத்தனத்தையும் போர்குணத்தையும் பார்த்து இம்ப்ரஸ் ஆகி எதாவது பொண்ணு கிட்ட சண்டை ய போட்டுட்டு, அந்த பொண்ணு உன்னை ஆடம் டீசிங் பண்ணிட்டாளா..?”
…………??? இளா காண்டாக
“யாருடா அவ சொல்லு…? மச்சான் நான் இருக்கேன்.. ஒரு அழகான பையன் ரோட்டில் போக முடியல…… “
இளா முறைத்தபடி, ஃபோனை கையில் எடுத்தான். ஆனால் கிருஷ் இன்னும் நிப்பாட்ட வில்லை…
“சொல்லுடா மச்சான்.. கூட்டமா போய் அவளை கையை பிடிச்சு இழுத்திடலாம்…..”அவன் சொல்லி கொண்டே போக…
“கூட்டமாகவா…..? யாரடா கூட்டிட்டு போறது…?” கேட்டது நம்ம இளா தான்.
“என் பொண்டாட்டி ய தான்… அவ ஒருத்தி வந்தாளே கூட்டமாதான் இருக்கும்.. வேணுமின்னா தாய் கிழவியவும் சேர்த்துக்கலாம் தான்………கையில கல்லு இல்லாமலே வீடுகட்டி ,வாசல் வச்சி ,கிரகப்ரவசமே பண்ணிடும். காலையிலே எப்படி சாம்பிள் கொடுத்துச்சு , பார்த்தீல..?..… ஒரு வேளை உன்னை கையை பிடிச்சு இழுத்தவ சூசைட் பண்ணிகிட்டா அப்புறம் போலீஸ் கேஸ் ஆயிடும்னு பார்த்தேன்.”