• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karigaiyin kanavu -16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
ஒரு காலத்தில் சதா எந்நேரமும் குழந்தை பற்றிய சிந்தனை இருந்த தமிழுக்கு தற்போது குழந்தையின் சிந்தனை ஏதும் விழையவில்லை. அமுதனை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது அவளது மனம்.

'என் மனம் என்ன குப்பைத்தொட்டியா'என்று பலநேரம் அவளுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு அவனை பற்றி சிந்தித்து கொண்டிருப்பாள். 'இப்படியே பண்ணிட்டு இரு உனக்கு பைத்தியம் தான் பிடிக்கப்போது' என்றது அவளுடைய மனசாட்சி. சட்டென ஒரு முடிவுக்கு வந்தாள்.

"நாம ஏன் மும்பை போய் அவரை பார்த்துட்டு வரக்கூடாது " என்று சிந்திக்க ஆனால் இதற்கு தற்ப காரணம் வேண்டுமே என்று யோசித்தாள். தனியே மும்பை செல்வதா அதுவும் ஒரு பெண் என்று குடும்பத்தினர் வசைப்பாடுவார்களே ,அவர்கள் சொல்வதும் சரிதானே ஏன் தனியே போகவேண்டும் இதற்கு வழி கண்டுபிடிப்போம் என்று யோசித்தவள்,தனது தங்கை கலையரசியிடம்..
"ஏ..கலை என்னடி புதுசா கல்யாணம் ஆனவங்க எங்கேயும் ஹனிமூன் போகலையா" என்று ஆரம்பிக்க..

"அட நீ வேற க்கா அவருக்கு எப்ப பாரு ஆபிஸ் வொர்க் நான் என்ன பண்ணட்டும் சொல்லு" என்று சினுங்க உடனே இதான் சாக்கு என்று நினைத்த தமிழ் "உண்மை தான் டி பாவம் அவருக்கு வேலை அதிகம் தான்.. என்ன பண்றது அதான் இப்ப கவர்மென்ட் ஹாலிடே ல மேதினம். கூடவே சனி ஞாயிறு னு வரிசையாக வருது பாரு..அப்ப வேணும்னா மும்பை போலாமா...சும்மா ஜாலியா ஒரு டூர் மாதிரி" என்று கண்களை உருட்ட கலையரசியிற்கு சிரிப்பே வந்துவிட்டது

"அக்கா..ஏய் கேடி அக்கா..நீ மாமாவை பாக்குறதுக்கு ப்ளான் போடுற இதுக்கு என்னை பகடைகாயாக பயன்படுத்துற அதானே"..என்று பட்டென்று உண்மையை உரைத்தவுடன் அவளுக்கு முகமே மாறியது..

"ஆமாம் டி எனக்கு அவரை பார்க்கணும் டி...ப்ளீஸ் நீயும் ரவிக்குமாரும் என்கூட வாங்க டி..ஊர் சுற்றி பார்த்த மாதிரியும் இருக்கும். நான் என் புருஷனை பார்த்த மாதிரியும் இருக்கும்" என்று கூற கலையரசி சரியென்று ஒப்புக்கொண்டு மும்பை செல்ல மூவருக்கும் விமானம் டிக்கெட் போடப்பட்டது.

விமானத்தில் இதுவே முதல் பயணம் கலையரசிக்கும் நம்ப கதாநாயகி தமிழ்ச்செல்வி க்கும். ஏதோ பயத்தில் இருப்பது போலவே இருவரும் கண்களை மூடி அமர்ந்திருக்க...
ரவிக்குமார் அவர்களை "ஹாஹா என்ன இரண்டு பேரும் ஏதோ ரோலர் கோஸ்டரில் ஏறிக்கொண்டு போவது போல கண்ணை மூடிட்டு இருக்கீங்க" என்று கலாய்க்க...

"அட போங்க ரவி சார் நீங்க வேறு" என்று தமிழ் கூற கலையரசி கணவனை பார்த்து சிரிக்க அவர்களது பயணம் இனிதே சென்றது..

மும்பை இறங்கி தாராவிக்கு செல்ல டாக்ஸி பிடித்து அவன் தங்கியிருக்கும் விலாசத்தை வந்தடைய அங்கே இறங்கிய மூவரும்..
"சரி தமிழு நீங்க சொன்ன விலாசம் இது தான்.. நீங்க அமுதன் ப்ரோவை பாருங்க..நானும் கலையரசியும் ரூம் எடுத்து தங்கிக்கிறோம்..ஏன்னா.." என்றிழுக்க அதை புரிந்து கொண்டவள் "சரிங்க பரவாயில்லை இங்கேயே பக்கத்தில் ரூம் எடுத்து தங்கிடுங்க பார்த்து பத்ரம் போய் ப்ரஷ் ஆயிட்டு ஈவ்னிங் வெளியே போவோம்"என்றுரைத்தாள்.

வீட்டினுள் நுழைந்த தமிழுக்கு ஈ..காக்க கூட இல்லையே என்ற வருத்தம். வீடா இது சை பேச்சிலர் ரூம் மாதிரி இருக்கிறது என்று முனவிக்கொண்டே உள்ளே நுழைய அங்கு ஓர் அறையை ஒட்டினாப்புல ஓர் பால்கனி இருந்தது. அந்த பால்கனியில் நின்றுகொண்டு இருந்தான் அமுதன்.

"என்னங்க..." என்று குரல் கொடுக்க முற்பட்டபோது "அமுதன்..அங்கே பாருங்க "என்று அவன் கைகளை இழுத்து மேகா வானத்தில் எதையோ காட்டிக்கொண்டு இருக்க...இவளுக்கு என்னவோ போல் ஆயிற்று...

சண்டாலி யமகிராதகி என்று திட்டியவாறு "என்னங்க" என்று தனக்கே உரிய தோனியில் சற்று மாறுபட்ட உச்சரிப்பில் அவனை அழைக்க..திரும்பி பார்த்ததும் அமுதனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

"அம்முலு" என்றபடி ஓடிச்சென்று அவளை கட்டிக்கொண்டான். "என்னடி இது சர்ப்ரைஸ்.. நீ வரேனு கூட சொல்லலை" என்று கேட்க அவளோ சிரித்துவிட்டு "சொல்லியிருந்தா அது சர்ப்ரைஸ் கிடையாது" என்று கூற அவனோ கண்கொட்காமல் அவளையே நோக்கினான்.

இதை கவனித்த மேகா 'அய்யோ ரொமான்ஸா நம்ப இங்கே நிக்க வேண்டாம்' என்று ஓடிவிட்டாள். அவன் அவளது கன்னத்தை வருடியபடியே "அம்முலு...இது என்ன விளையாட்டு. சொல்லியிருந்தா நானே ஏர்போர்ட் வந்து கூட்டிட்டு வந்திருப்பேன்ல" என்றான்.

"ஹாஹா... பரவாயில்லை"...என்றுரைக்க அதற்குள் மேகாவின் பாட்டி கோவிலுக்கு சென்றிருந்தவர் உள்ளே நுழைய "யார் டா தம்பி இந்த பொண்ணு" என்று அமுதனை வினவ..

"பொண்ணு இல்லை பாட்டி பொண்டாட்டி" என்றுரைத்தான்.

"ஓ...தமிழா...வா வா ..இப்பதான் உன்னை பாக்குறேன். உக்காரு தமிழு என்ன சாப்பிடுற "என்று கேட்க அவளோ "எதுவும் வேண்டாம் பாட்டி நானும் அமுதனும் இப்போ ஹோட்டல் போய் சாப்பிட்டுக்கிறோம்" என்று பட்டென்று கூறிவிட பாட்டிக்கு ஒரு மாதிரி ஆனது.

"சரிமா அப்படியே பண்ணுங்க...ம்ம்ம் மேகா வா உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்று எதார்த்தமாக பாட்டி அவளது வேலையை கவனிக்கலானாள்.

"தமிழு மேகாவையும் கூட்டிட்டு போலாம்டி, அப்படியே பாட்டியும் வரட்டும்" என்று கெஞ்ச அதை பொருட்படுத்தாமல் "முடியாது நீயும் நானுமா தான் போறோம்" என்று கூற வாழ்க்கையில் முதன் முறை அவளது பொஸஸிவ் எட்டிப்பார்ப்பதை உணர்ந்தான் அமுதன்.

வேறு வழியில்லை அவளை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு சென்றான். கலையும் ரவியும் தனியே வேறு ஹோட்டலிலில் உண்டனர். கலை மற்றும் ரவிக்குமார் பொறுத்தவரை இது அவர்களுக்கு ஹனிமூன்.

தொடரும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தமிழ் சொல்வது நியாயம்தானே
இதிலே என்ன பொஸ்சஸிவ்வை நீ கண்டாய், அமுதன்?
 




Last edited:

Chanmaa

இணை அமைச்சர்
Joined
Dec 26, 2019
Messages
740
Reaction score
684
அருமையான பதிவு
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஒரு சராசரி மனைவிக்கே உள்ள உணர்வுகள் தான் தமிழுக்கும் உள்ளது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top