• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Karuppu rojakkal (part-10)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
கருப்பு ரோஜாக்கள் (part_10)
"ஹலோ நரேஷ் நான் மலர் பேசறேன்... "
" என்ன மலர் எங்கடி இருக்க???
பத்து நாளா எங்கடி போனா... "
மலரின் விசும்பல் சத்தமே நரேஷ்க்கு பதிலாய் கிடைக்க பதறிப்போனான் நரேஷ்!
" ஏ மலர் என்னாச்சிடி எதுக்குடி அழறே??? "
" நரேஷ் நம்ம லவ் மேட்டர் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சிப்போச்சி...
அவர் அவசர அவசரமா எனக்கும் எங்க அத்தை பையனுக்கும் நிச்சயம் பண்ண முடிவு பண்ணிட்டார்...
நாளை மறுநாள் நிச்சயதார்த்தம்டா...
அப்பா என்னை வீட்லயே அடைச்சி வச்சிட்டார்...
இப்போ நிச்சயதார்த்த புடவை எடுக்க வெளியே போய்ருக்கார்... போகும்போது கூட என்னை உள்ளே வெச்சி பூட்டிட்டு போயிருக்கார்டா...
ஜன்னல் வழியா எதிர் வீட்டு பொண்ணுகிட்ட மொபைல் வாங்கித்தான் இப்போ உன்கூட பேசிக்கிட்டிருக்கேன்...
நரேஷ் இந்த நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்... "
சொல்லிவிட்டு அழுதாள் மலர்!
" ஹே மலர் அழாதேடி ப்ளீஸ்...
நான் வேணா வந்து உங்கப்பாகிட்ட பேசவா மலர்??? "
" இல்ல நரேஷ் அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை இனி...
நீ என்னை எங்கயாச்சும் கூட்டிட்டு போயிடுடா...
இல்லைனா மாலை வாங்கிட்டு வந்து என் பொணத்துக்கு போட்டுட்டு கடைசியா என் முகத்தை பார்த்துத்து போடா! "
பதிலுக்கு காத்திருக்காமல் இணைப்பை துண்டித்தாள் மலர்!
நரேஷ் செய்வதறியாது கவலையில் ஆழ்ந்தான்!
***************************************************, **************************
மகேசின் மனதில் இடி விழுந்ததைப் போல் உணர்ந்தான்!
'என் மகா விபச்சாரியா????
என் மகாவென்று எப்பொழுதிலிருந்
து ஆனாள்???
என் தோளில் சாய்ந்தாளே அந்த நொடிகள் முதலா???
இதுதான் காதலா??? இல்லை அவளை இடித்ததினால் வந்த பரிதாபமா??? ' மகேசின் மனம் மகாவை துரத்தியடிக்க காரணம் தேடி தேடி தோற்றது!
பல சிந்தனைகள் வந்து அவனை இம்சித்தது!
ஒருநொடியில் சிலர் வாழ்க்கையே மாறிவிடும் என்று சொல்வது எத்தனை உண்மை...
சில தினங்களுக்கு முன் மகாவைத் தேடி யாரேனும் வரமாட்டார்களா என்று நினைத்த மகேசின் எண்ணத்தை காதல் கொன்று அவரைத் தேடி யாரும் வந்துவிடக் கூடாதென நினைக்க வைத்தது ஏதோ ஓர் நொடிப்பொழுது...
தனக்கானவள் என்று காதலுடன் இருந்தவனின் மனதை பலமாய் அசைத்தது சற்றுமுன் நகர்ந்த சில நொடிப்பொழுதுகள்!
மகேஷ் திரும்ப அறையை அடையும் பொழுது இருட்டியிருந்தது!
மகேஷ் கதவை தட்ட அது தானாய் விலகி வழிவிட்டது!
உள்ளே சென்ற மகேஷ்...
"மகா.... "
பதிலில்லை...
அந்த சின்ன அறையில் அவள் இல்லையென்பதை உறுதி செய்துக் கொள்ள மகேசிற்கு நீண்ட நேரம் ஆகவில்லை!
பாத்ரூம் ஷவரில் நீர் விழும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது!
'ஓ குளிக்கிறாள் போல... இவகிட்ட டாக்டர் சொன்னதைப் பத்தி கேட்கலாமா???
இவளுக்கு விசயம் தெரிந்தால் எப்படி தாங்கிக் கொள்வாள்???
நான்தான் புருசன்னு நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு நான் காதலன்தான் என்று சொல்லும்போதே ஏமாற்றத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே.... இப்போ.... இப்போ.... அவ... விபச்சாரினு தெரிஞ்சா..... " மகேஷ் ஏதோ ஓர் தீர்மானத்திற்கு வந்தவன்போல் எழுந்து குளியலறை கதவின் முன்நின்று...
" மகா...... "
".........."
பதிலேதுமில்லை... மீண்டும் மீண்டும் மகா... மகாவென்று அழைத்தும் பதிலேதும் இல்லாததால் மகேஷ் கலவரமானான்!
குளியலறைக் கதவை தட்ட அது தானாய் திறந்ததுக் கொண்டது...
உள்ளே எட்டிப் பார்த்த மகேஷ் அதிர்ந்தான்!
அங்கே முப்பது வயது இளைஞன் ஒருவன் தன் மூச்சை முப்பது நிமிடங்களுக்கு முன் நிறுத்தியிருந்தான்!
(தொடரும்)
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
interesting epi sago
அங்கே முப்பது வயது இளைஞன் ஒருவன் தன் மூச்சை முப்பது நிமிடங்களுக்கு முன் நிறுத்தியிருந்தான்!
yaa sago maha than kolai seithutala.........:unsure::unsure::unsure::unsure:suspensela mudichiteengao_Oo_Oo_Oo_O
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top