Sri Sathya
நாட்டாமை
கருப்பு ரோஜாக்கள் (part_4)
அடுத்த ஒருமணி நேரத்தில் பணம் கட்டினான் மகேஷ்...
'யாரா இருக்கும் இந்த பொண்ணு... பார்த்தா கல்யாணமாகாத பொண்ணு போல தெரியுது... பாவம் யார் இவளை காணோம்னு தவிக்குறாங்களோ தெரியலையே??? '
மனசின் நினைவுகளை அவன் செல்போன் ரிங்டோன் கலைத்தது!
அவன் அம்மாதான்...
"அம்மா சொல்லுங்கம்மா எப்படியிருக்கிங்க... "
" நான் இருக்கறது இருக்கட்டும்... ரெண்டு நாள்ல வந்துடுவேன்னு சொல்லிட்டு போன மூணு நாளாச்சி இன்னும் வரல... ஒரு போன் கூட பண்ணல ...
உனக்கு வேலைனு வந்துட்டா அம்மானு ஒருத்தி இருக்கறது கூட கண்ணுக்கு தெரியாதே... "
பாசத்தின் ஆதங்கத்தை அழுத்தமில்லாமல் வெளிப்படுத்தினா
ள் கமலம்!
" ஐய்யோ அம்மா அப்படியெல்லாம் இல்லைமா... மிஸ் யூ மா... இன்னும் ரெண்டு நாள்ல வேலை முடிஞ்சிடும் வந்துடுறேன்மா... நீ பத்திரமா இரு மா... "
" நீ உன் இஷ்டத்துக்கு மாசத்துல பத்து நாள் வெளியூர் போயிடுற என்னை விட்டுட்டு நான் இவ்லளோ பெரிய வீட்ல தனியா இருக்கேன்... இனிமேல் அந்த கவலை இருக்காதுனு நினைக்கிறேன்... "
" என்னமா சொல்ற??? "
" ஆமாம்டா இனிமேல் என் மருமக இருப்பால எனக்கு துணையா... "
" அம்மா நீ என்ன சொல்றனு சத்யமா புரியலமா "
" நம்ம கணேசன் மாமா வந்திருக்கார்டா
... உனக்கும் மலருக்கும் கல்யாணம் பண்றதை பத்தி பேச... நீ என்ன சொல்ற மகேஷ்! "
" அம்மா உன் விருப்பம்மா... "
" என் செல்லம்டா நீ! சரி மகேஷ் சீக்கிரம் வந்துடு "
" ம்ம்ம்... சரிமா bye... "
மொபைலை அணைத்து சட்டை பாக்கெட்டில் வைத்தான் மகேஷ்!
" சார்... உங்க ஒய்ப்க்கு இன்னைக்கு பத்து மணிக்கு ஆபரேசன் சார்.. நீங்க பில் கட்டின ரசீதை பார்மஸில அப்டேட் பண்ண கொடுத்திடுங்க...
ஆபரேஷன் எக்யூப்மெண்ட் எல்லாம் அவங்க ஆபரேசன் தியேட்டருக்கு அனுப்பிடுவாங்க "
" ம்ம்ம் சரி சிஸ்டர்... "
சொல்லி நடந்தவனை நர்ஸ்ன் குரல் திருப்பியது!
" மிஸ்டர் மகேஷ்... "
" என்ன சிஸ்டர்? "
" உங்க மனைவிக்கு செய்யப்போற ஆபரேசன் ரொம்ப கிரிட்டிக்கல் சார்.
நம்ம ஹாஸ்பிட்டல் கேன்டீன் பக்கத்துல இருக்க விநாயகர் ரொம்ப சக்தி வாய்ந்தவர் அவர்கிட்ட வேண்டிக்குங்க சார்... "
கடவுள் நம்பிக்கையே இல்லாத மகேசின் கால்கள் விநாயகர் கோயிலை நோக்கி தன்னிச்சையாக நடைபோட்டது!
*********************************************
***********
கிட்டத்தட்ட ஐந்துமணி நேர காத்திருப்புக்குப்பின் ஆபரேசன் தியேட்டரில் இருந்து வெளிப்பட்டார் டாக்டர்!
தீவிரமாய் எதையோ தன் சக மருத்துவரிடம் பேசிக் கொண்டு வந்தவர் மகேசின் குரல் கேட்டு நின்றார்!
"சார்... அவங்க எப்படியிருக்காங்க??? "
" ஆபரேசன் நல்லபடியா முடிஞ்சது மிஸ்டர்???... "பெயர் தெரியாமல் பாதியில் நிறுத்தியவரின் வரிகள் மகேசின் சொற்கள் முடித்து வைத்தது!
" மகேஷ் சார்.. "
" ம்ம்ம் மகேஷ்... ஆபரேசன் நல்லபடியா முடிஞ்சது... உங்க மனைவியோட உயிருக்கு எந்த ஆபத்துமில்லை இனி...
அவங்க கண் விழிக்க ஒருநாள் ஆகும்... நீங்க அவங்களை பார்க்கணும்னா போய்ப் பாருங்க... " சொல்லி சென்ற டாக்டரின் பூட்ஸ் சத்தம் காரிடாரை கடக்கும் வரை சன்னமாய் ஒலிந்து ஒய்ந்தது!
மகேஷ் அவசர சிகிச்சை பிரிவில் போய் மகாவை பார்க்க எண்ணினான்!
'அன்னைக்கு இருட்டுல இடிச்சோம் முகத்தை கூட சரியா பார்க்கல... முகத்தை பார்க்கதவளுக்காக ஐந்து இலட்சம் அதிகம்தானோ???
அடச்சே... ஐந்து இலட்சம் போனா என்ன??? இப்போ மனசு முழுக்க ஒரு நிம்மதி இருக்கே இதை அந்த ஐந்து இலட்சம் கொடுத்திருக்குமா??? காலத்துக்கும் குற்ற உணர்ச்சியில செத்துருப்பேன் ' தனக்குள் பேசிக்கொண்டே ICUவுக்குள் நுழைய போனவனை செக்யூரிட்டி தடுத்தான்!
"சார் கால்ல இதைப் போட்டுக்கிட்டு உள்ளே போங்க... " செக்யூரிட்டி கொடுத்த பாலித்தினை காலணிபோல் அணிந்து கொண்டு உள்ளே சென்றான்!
ICU அதற்கே உரிய குணங்களோடு இறுக்கமாய் இருந்தது... நான்கு கட்டில் கடலில் இரண்டு காலியாயிருந்தது!
முதல் கட்டிலில் ஒர் வயதான ஆண் படுத்திருக்க அவரை சுற்றி ஒடிக்கொண்டிருக்கும் உபகரணங்கள் அவர் உயிரோடு இருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தது!
அடுத்த கட்டிலில் இருப்பது மகாதான் என தெரிந்தும் நேம் போர்டு பார்த்தான் மகேஷ்!
'Mrs maha mahesh '
தனக்குள் ஒருமுறை லேசான புன்னகை வந்துப்போவதை மகேசால் தடுக்க முடியவில்லை!
மகா தலையை சுற்றி கட்டு போடப்பட்டிருக்க இடையில் பிறைநிலவாய் அவள் முகம் பளிச்சிட்டது!
' எவ்ளோ அழகாயிருக்கா... இவளை காப்பாத்த ஐந்து இலட்சம் இல்லை ஐம்பது லட்சம் கூட கொடுக்கலாம்... 'மனசு லேசானது மகேசிற்கு!
"சார் இங்க ரொம்ப நேரம் இருக்கக் கூடாது கிளம்புங்க... கிளம்புங்க " நர்ஸ் ஒருத்தி விரட்டினாள்!
மகேஷ் வெளியே வந்ததும் அவன் மனதை பல கேள்விகள் குடையத் தொடங்கியது!
" யார் இவள்???
இவள் கண்விழித்ததும் நான் இவள் கணவன் என்று மருத்துவமனையில் சொன்னதை கேட்டாள் என்னை பற்றி என்ன நினைப்பாள்??? " மனதில் பல கேள்விகள் குடைய அவள் கண் விழிப்பதற்குள் நாம் இங்க இருந்து கிளம்பிவிடுவது நல்லதென்று முடிவு செய்து கிளம்பி சென்னை சென்றடைந்தான்!
*******************************/****************
********
மகேஷ் சென்னை வந்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டது!
அடிக்கடி மகாவின் நினைவு அவனுக்கு வந்துப் போக தவறவில்லை!
அன்று காலை செய்தித்தாளை பிரித்துப் படித்துக் கொண்டே வந்தவன் அந்த பக்கத்தை கண்டதும் அதிர்ந்தான்!
தன் செல்போன் எடுத்து எதோ நம்பரை டயல் செய்து...
"ஹலோ டிராவல் ஏஜென்சி... எனக்கு அடுத்த ப்ளைட்ல கோயம்பத்துர்க்க
ு டிக்கெட் வேணும் இருக்கானு பார்த்து சொல்லுங்க ப்ளீஸ் very urgent " மொபைல் இணைப்பை துண்டித்தவன் தலையில் கை வைத்து அமர்ந்தான்!
அடுத்த ஒருமணி நேரத்தில் பணம் கட்டினான் மகேஷ்...
'யாரா இருக்கும் இந்த பொண்ணு... பார்த்தா கல்யாணமாகாத பொண்ணு போல தெரியுது... பாவம் யார் இவளை காணோம்னு தவிக்குறாங்களோ தெரியலையே??? '
மனசின் நினைவுகளை அவன் செல்போன் ரிங்டோன் கலைத்தது!
அவன் அம்மாதான்...
"அம்மா சொல்லுங்கம்மா எப்படியிருக்கிங்க... "
" நான் இருக்கறது இருக்கட்டும்... ரெண்டு நாள்ல வந்துடுவேன்னு சொல்லிட்டு போன மூணு நாளாச்சி இன்னும் வரல... ஒரு போன் கூட பண்ணல ...
உனக்கு வேலைனு வந்துட்டா அம்மானு ஒருத்தி இருக்கறது கூட கண்ணுக்கு தெரியாதே... "
பாசத்தின் ஆதங்கத்தை அழுத்தமில்லாமல் வெளிப்படுத்தினா
ள் கமலம்!
" ஐய்யோ அம்மா அப்படியெல்லாம் இல்லைமா... மிஸ் யூ மா... இன்னும் ரெண்டு நாள்ல வேலை முடிஞ்சிடும் வந்துடுறேன்மா... நீ பத்திரமா இரு மா... "
" நீ உன் இஷ்டத்துக்கு மாசத்துல பத்து நாள் வெளியூர் போயிடுற என்னை விட்டுட்டு நான் இவ்லளோ பெரிய வீட்ல தனியா இருக்கேன்... இனிமேல் அந்த கவலை இருக்காதுனு நினைக்கிறேன்... "
" என்னமா சொல்ற??? "
" ஆமாம்டா இனிமேல் என் மருமக இருப்பால எனக்கு துணையா... "
" அம்மா நீ என்ன சொல்றனு சத்யமா புரியலமா "
" நம்ம கணேசன் மாமா வந்திருக்கார்டா
... உனக்கும் மலருக்கும் கல்யாணம் பண்றதை பத்தி பேச... நீ என்ன சொல்ற மகேஷ்! "
" அம்மா உன் விருப்பம்மா... "
" என் செல்லம்டா நீ! சரி மகேஷ் சீக்கிரம் வந்துடு "
" ம்ம்ம்... சரிமா bye... "
மொபைலை அணைத்து சட்டை பாக்கெட்டில் வைத்தான் மகேஷ்!
" சார்... உங்க ஒய்ப்க்கு இன்னைக்கு பத்து மணிக்கு ஆபரேசன் சார்.. நீங்க பில் கட்டின ரசீதை பார்மஸில அப்டேட் பண்ண கொடுத்திடுங்க...
ஆபரேஷன் எக்யூப்மெண்ட் எல்லாம் அவங்க ஆபரேசன் தியேட்டருக்கு அனுப்பிடுவாங்க "
" ம்ம்ம் சரி சிஸ்டர்... "
சொல்லி நடந்தவனை நர்ஸ்ன் குரல் திருப்பியது!
" மிஸ்டர் மகேஷ்... "
" என்ன சிஸ்டர்? "
" உங்க மனைவிக்கு செய்யப்போற ஆபரேசன் ரொம்ப கிரிட்டிக்கல் சார்.
நம்ம ஹாஸ்பிட்டல் கேன்டீன் பக்கத்துல இருக்க விநாயகர் ரொம்ப சக்தி வாய்ந்தவர் அவர்கிட்ட வேண்டிக்குங்க சார்... "
கடவுள் நம்பிக்கையே இல்லாத மகேசின் கால்கள் விநாயகர் கோயிலை நோக்கி தன்னிச்சையாக நடைபோட்டது!
*********************************************
***********
கிட்டத்தட்ட ஐந்துமணி நேர காத்திருப்புக்குப்பின் ஆபரேசன் தியேட்டரில் இருந்து வெளிப்பட்டார் டாக்டர்!
தீவிரமாய் எதையோ தன் சக மருத்துவரிடம் பேசிக் கொண்டு வந்தவர் மகேசின் குரல் கேட்டு நின்றார்!
"சார்... அவங்க எப்படியிருக்காங்க??? "
" ஆபரேசன் நல்லபடியா முடிஞ்சது மிஸ்டர்???... "பெயர் தெரியாமல் பாதியில் நிறுத்தியவரின் வரிகள் மகேசின் சொற்கள் முடித்து வைத்தது!
" மகேஷ் சார்.. "
" ம்ம்ம் மகேஷ்... ஆபரேசன் நல்லபடியா முடிஞ்சது... உங்க மனைவியோட உயிருக்கு எந்த ஆபத்துமில்லை இனி...
அவங்க கண் விழிக்க ஒருநாள் ஆகும்... நீங்க அவங்களை பார்க்கணும்னா போய்ப் பாருங்க... " சொல்லி சென்ற டாக்டரின் பூட்ஸ் சத்தம் காரிடாரை கடக்கும் வரை சன்னமாய் ஒலிந்து ஒய்ந்தது!
மகேஷ் அவசர சிகிச்சை பிரிவில் போய் மகாவை பார்க்க எண்ணினான்!
'அன்னைக்கு இருட்டுல இடிச்சோம் முகத்தை கூட சரியா பார்க்கல... முகத்தை பார்க்கதவளுக்காக ஐந்து இலட்சம் அதிகம்தானோ???
அடச்சே... ஐந்து இலட்சம் போனா என்ன??? இப்போ மனசு முழுக்க ஒரு நிம்மதி இருக்கே இதை அந்த ஐந்து இலட்சம் கொடுத்திருக்குமா??? காலத்துக்கும் குற்ற உணர்ச்சியில செத்துருப்பேன் ' தனக்குள் பேசிக்கொண்டே ICUவுக்குள் நுழைய போனவனை செக்யூரிட்டி தடுத்தான்!
"சார் கால்ல இதைப் போட்டுக்கிட்டு உள்ளே போங்க... " செக்யூரிட்டி கொடுத்த பாலித்தினை காலணிபோல் அணிந்து கொண்டு உள்ளே சென்றான்!
ICU அதற்கே உரிய குணங்களோடு இறுக்கமாய் இருந்தது... நான்கு கட்டில் கடலில் இரண்டு காலியாயிருந்தது!
முதல் கட்டிலில் ஒர் வயதான ஆண் படுத்திருக்க அவரை சுற்றி ஒடிக்கொண்டிருக்கும் உபகரணங்கள் அவர் உயிரோடு இருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தது!
அடுத்த கட்டிலில் இருப்பது மகாதான் என தெரிந்தும் நேம் போர்டு பார்த்தான் மகேஷ்!
'Mrs maha mahesh '
தனக்குள் ஒருமுறை லேசான புன்னகை வந்துப்போவதை மகேசால் தடுக்க முடியவில்லை!
மகா தலையை சுற்றி கட்டு போடப்பட்டிருக்க இடையில் பிறைநிலவாய் அவள் முகம் பளிச்சிட்டது!
' எவ்ளோ அழகாயிருக்கா... இவளை காப்பாத்த ஐந்து இலட்சம் இல்லை ஐம்பது லட்சம் கூட கொடுக்கலாம்... 'மனசு லேசானது மகேசிற்கு!
"சார் இங்க ரொம்ப நேரம் இருக்கக் கூடாது கிளம்புங்க... கிளம்புங்க " நர்ஸ் ஒருத்தி விரட்டினாள்!
மகேஷ் வெளியே வந்ததும் அவன் மனதை பல கேள்விகள் குடையத் தொடங்கியது!
" யார் இவள்???
இவள் கண்விழித்ததும் நான் இவள் கணவன் என்று மருத்துவமனையில் சொன்னதை கேட்டாள் என்னை பற்றி என்ன நினைப்பாள்??? " மனதில் பல கேள்விகள் குடைய அவள் கண் விழிப்பதற்குள் நாம் இங்க இருந்து கிளம்பிவிடுவது நல்லதென்று முடிவு செய்து கிளம்பி சென்னை சென்றடைந்தான்!
*******************************/****************
********
மகேஷ் சென்னை வந்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டது!
அடிக்கடி மகாவின் நினைவு அவனுக்கு வந்துப் போக தவறவில்லை!
அன்று காலை செய்தித்தாளை பிரித்துப் படித்துக் கொண்டே வந்தவன் அந்த பக்கத்தை கண்டதும் அதிர்ந்தான்!
தன் செல்போன் எடுத்து எதோ நம்பரை டயல் செய்து...
"ஹலோ டிராவல் ஏஜென்சி... எனக்கு அடுத்த ப்ளைட்ல கோயம்பத்துர்க்க
ு டிக்கெட் வேணும் இருக்கானு பார்த்து சொல்லுங்க ப்ளீஸ் very urgent " மொபைல் இணைப்பை துண்டித்தவன் தலையில் கை வைத்து அமர்ந்தான்!