Sri Sathya
நாட்டாமை
கருப்பு ரோஜாக்கள்... (part_8)
மகா மயக்கமடைந்ததும் பதறிவிட்டான் மகேஷ்!
"மகா..... மகா.... "
கன்னத்தில் தட்டி எவ்வளவு சத்தமாக கூப்பிட்டும் கண் விழிக்கவில்லை மகா!
டீப்பாயின் மேலிருந்த கோப்பையிலிருந்த நீரை அவள் முகத்தில் தெளித்தான் மகேஷ்!
மூன்று நான்கு முறை அப்படி தெளிக்கப்பட்ட பின் கண் விழித்தாள் மகா!
கண் விழித்தவளின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வடிவதை கண்டு தவித்தான் மகேஷ்!
"மகா... ப்ளீஸ் அழாதே மகா! "
" நான் யார்??? நீங்க யார்??? "
" மகா நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல... உனக்கு யாரும் இல்லை மகா... சென்னைல இருக்க ஒரு சாப்ட்வேர் கம்பெனியோட இண்டர்வியூவுக்காக அந்த கம்பெனியோட ஹெட் ஆபிஸ்க்கு உன்னை கூப்பிட்டிருந்தாங்க! அது இங்க கோயம்புத்தூர்லதான் இருக்கு... உன்னை தனியா அனுப்ப மனதில்லாம நானும் கூட வந்தேன்... வந்த இடத்துலதான் உனக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சி! "
சரளமாய் பொய்யை வாரி இறைத்தான் மகேஷ்!
" நீ.... நீங்க யாரு??? "
" மகா... நான்.... நான் உன்னோட லவ்வர் மகேஷ்... நாம கல்யாணம் பண்ணிக்கப்போறோம் மகா... ஹாஸ்பிட்டல்ல உன் நெருங்கிய சொந்தக்காரங்க கையெழுத்து போட்டாதான் உனக்கு ஆபரேசன் பண்ணுவோம்னு சொல்லிட்டாங்க...
அந்த நேரத்துல எனக்கு என்ன பண்றதுனு தெரியல மகா அதான் உன் ஹஸ்பண்ட்னு சொன்னேன்!
"
"நான் அநாதையா மகேஷ்! "
" ஐய்யோ! மகா நான் இருக்கவரை அந்த வார்த்தையை சொல்லாதே ப்ளீஸ்! "
இந்த முறை மகேஷ் பொய் சொல்லவில்லை!
மகாவின் மீது அவன் காதல் வயப்பட்டதன் விளைவு அடுக்கடுக்காய் பொய் சொல்ல தூண்டியது அவனை!
ஒருத்தன் ஒரு பொண்ணு மேல இந்த அளவிற்கு லவ் வச்சிருப்பானா???
பழகற வரை பழகிட்டு கை கழுவி விட்டுட்டுப் போற இந்தக் காலத்துல இப்படியொரு ஆணா???
எதற்காக எவ்வளவு சிரமத்தை அனுபவித்திருக்கிறான்!
உண்மையில் இவனை அடைய தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! மகாவின் மனதில் மகேஷ் உயர்ந்து நின்றான்!
"என்னங்க... "
" சொல்லு மகா... "
" என்னை உங்களுக்கு அவ்வளோ பிடிக்குமா??? "
" இதென்ன கேள்வி மகா! நீ என் தேவதை! "
உண்மையில் மகா தேவதைப் போல்தான் இருந்தாள்!
" நாம எப்போ சென்னைக்கு போகலாம் மகேஷ்? "
" டாக்டர் சொன்னாரே அந்த கேம்ப் அட்டண்ட் பண்ணிட்டு நாம கிளம்பிடலாம் மகா! "
" ஐ லவ் யூ மகேஷ்! "
அவன் மடியில் படுத்துக் கொண்டாள் மகா!
அழகு தேவதை ஒருத்தி தன் மடியில் படுத்திருப்பதை நினைத்து மகேஷ் பெருமை கொண்டான்!
'தான் செய்வது சரியா???
நாளையே இவளைத் தேடி யாரேனும் வந்தால் என்ன செய்வேன்???"
இதுவரை யாரும் இவளைத் தேடி வரவில்லையே என கவலை கொண்ட மகேசின் மனம் முதல் முறையாக யாரும் வந்துவிடக் கூடாதென நினைத்து கலங்கியது!
ஒரு வாரம் கடந்த நிலையில் மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தனர் மகேசும், மகாவும்!
மகேசின் செல்போன் சிணுங்கவே அதை எடுத்து பார்த்தான் மகேஷ்!
கமலம்மாதான் அழைத்திருந்தாள்!
காலண்டரை பார்த்தான் மகேஷ்...
அது 11 ந் தேதியை காட்ட மகேசின் மனம் கலவரமானது!
"சொல்லுங்கம்மா... "
" என்னடா அப்படிப்பட்ட வேலை உனக்கு...
நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் உனக்கு அதாவது நியாபகம் இருக்கா இல்லையா? "
கமலம்மா பொரிந்து தள்ளினாள்!
" அம்மா இங்க முக்கியமான வேலையிருக்கு நிச்சய தேதியை மாத்துங்கனு எத்தனை முறை சொல்றேன்...
ஏம்மா இப்படி பண்றீங்க??? "
" பத்திரிக்கை அடிச்சி ஊரெல்லாம் கூட்டியாச்சி நீ சொன்னா மாத்திடணுமா???
நாளைக்கு நீ இங்க இல்லைனா என்னை உயிரோடவே பார்க்க முடியாது சொல்லிட்டேன்! "
" அம்மா.... ஏம்மா இப்படி பேசற??? "
மகேஷ் சொன்னதை கமலம்மா காதுக்கு எட்டுவதற்குள் இணைப்பை துண்டித்திருந்தாள் கமலம்!
*********************************************
**************************************
மகேசும், மகாவும் மருத்துவமனையை அடையும் பொழுது சரியாய் மணி பத்தை நெருங்கியிருந்தது!
"வாங்க மகேஷ்... மகா எப்படியிருக்கிங
்க? "
டாக்டர் க்ரிஷ் நலம் விசாரித்தார்!
" நல்லாயிருக்கேன் டாக்டர்... "
" ஓகே பைன்... மகேஷ் மகாவை பற்றி டாக்டர்ஸ்கிட்ட எல்லாம் பேசிட்டேன்... வாங்க போய் பார்க்கலாம்! "
அங்கே பல்வேறு துறைகள் சம்மந்தப்பட்ட டாக்டர்கள் குழுமியிருந்தனர்!
" ஹலோ டாக்டர் இவர்தான் மகேஷ்... இவங்க அவர் மிசஸ் மகா... நான் இவங்களைப்பத்தி சொல்லிருக்கேன்ல...
மகேஸ் இவர் டாக்டர் கோபால் நம்ம ஹாஸ்பிட்டல்ல தான் வொர்க் பண்ணிட்டு இருந்தார் இப்போ USA ல இருக்கார்... "
இருவரையும் பரஸ்பரம் அறிமுகப் படுத்தினார் டாக்டர் க்ரிஷ்!
மகாவை பார்த்த டாக்டர் கோபாலின் முகம் வெளிறியது!
மகாவை பரிசோதித்த டாக்டர் கோபால் சில சோதனைகளை எழுதி மகேசிடம் கொடுத்தார்!
இதை லேப்ல கொடுத்து டெஸ்ட் எல்லாம் எடுத்ததும் நீங்க வந்து காட்டுங்க மகேஷ் "
" ஓகே டாக்டர் "
அடுத்த இரண்டு மணி நேர காத்திருக்குப்பின் டெஸ்ட் ரிசல்ட் வர...
அதை பார்த்த டாக்டர் கோபால்...
" மகேஷ்... ஹோட்டல் மெரிடியன் தெரியுமா? "
" தெரியும் டாக்டர்... "
" நீங்க இன்னைக்கு ஈவினிங் அங்க இருக்க ரூம் நம்பர் 120 ல நான் இருப்பேன் வந்து பாருங்க... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! "
மகேஷ் கலவரமானான்!
" டாக்டர் எனிதிங் சீரியஸ்... "
" நத்திங்... நீங்க வாங்க பேசலாம் "
மகேசும் மகாவும் கிளம்பிவிட டாக்டர் க்ரிஷ் அவரிடம் கேட்டார்...
" என்ன சார்... எனிதிங் சீரியஸ்... "
" க்ரிஷ் இந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியலையா???? "
" இவ பேரு மகா... மகேசோட ஹஸ்பண்ட்... "
" இல்ல க்ரிஷ்... நாம ஆக்ஸிடன்ட் கேசு வந்தா மத்த ஹாஸ்பிட்டல் போல FIR கேட்காம அந்த உயிரை காப்பாத்தினா போதும்னு நினைச்சி போலிஸ்க்கு கூட இன்பார்ம் பண்ணாம ட்ரீட்மெண்ட் பண்றோம்... நல்லதுனு நினைச்சு நாம பண்றோம் பட் சிலர் மிஸ்யூஸ் பண்ணிக்குறாங்க! "
டாக்டர் க்ரிஷ் புரியாமல் கோபால் முகத்தை பார்க்க அவர் தொடர்ந்தார்...
" இந்த பொண்ணோட பேரு ரூபா... One of the famous prostitute... இவளுக்கு நம்ம ஹாஸ்பிட்டலேயே மூணு நாளு முறை அபார்ஷன் பண்ணிருக்கோம்! "
க்ரிஷ் அதிர்ந்த அந்த நொடிப்பொழுதில் மகா மகேசின் தோளில் சாய்ந்தபடி காரில் சென்றுக் கொண்டிருந்தாள்!
(தொடரும்)
மகா மயக்கமடைந்ததும் பதறிவிட்டான் மகேஷ்!
"மகா..... மகா.... "
கன்னத்தில் தட்டி எவ்வளவு சத்தமாக கூப்பிட்டும் கண் விழிக்கவில்லை மகா!
டீப்பாயின் மேலிருந்த கோப்பையிலிருந்த நீரை அவள் முகத்தில் தெளித்தான் மகேஷ்!
மூன்று நான்கு முறை அப்படி தெளிக்கப்பட்ட பின் கண் விழித்தாள் மகா!
கண் விழித்தவளின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வடிவதை கண்டு தவித்தான் மகேஷ்!
"மகா... ப்ளீஸ் அழாதே மகா! "
" நான் யார்??? நீங்க யார்??? "
" மகா நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல... உனக்கு யாரும் இல்லை மகா... சென்னைல இருக்க ஒரு சாப்ட்வேர் கம்பெனியோட இண்டர்வியூவுக்காக அந்த கம்பெனியோட ஹெட் ஆபிஸ்க்கு உன்னை கூப்பிட்டிருந்தாங்க! அது இங்க கோயம்புத்தூர்லதான் இருக்கு... உன்னை தனியா அனுப்ப மனதில்லாம நானும் கூட வந்தேன்... வந்த இடத்துலதான் உனக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சி! "
சரளமாய் பொய்யை வாரி இறைத்தான் மகேஷ்!
" நீ.... நீங்க யாரு??? "
" மகா... நான்.... நான் உன்னோட லவ்வர் மகேஷ்... நாம கல்யாணம் பண்ணிக்கப்போறோம் மகா... ஹாஸ்பிட்டல்ல உன் நெருங்கிய சொந்தக்காரங்க கையெழுத்து போட்டாதான் உனக்கு ஆபரேசன் பண்ணுவோம்னு சொல்லிட்டாங்க...
அந்த நேரத்துல எனக்கு என்ன பண்றதுனு தெரியல மகா அதான் உன் ஹஸ்பண்ட்னு சொன்னேன்!
"
"நான் அநாதையா மகேஷ்! "
" ஐய்யோ! மகா நான் இருக்கவரை அந்த வார்த்தையை சொல்லாதே ப்ளீஸ்! "
இந்த முறை மகேஷ் பொய் சொல்லவில்லை!
மகாவின் மீது அவன் காதல் வயப்பட்டதன் விளைவு அடுக்கடுக்காய் பொய் சொல்ல தூண்டியது அவனை!
ஒருத்தன் ஒரு பொண்ணு மேல இந்த அளவிற்கு லவ் வச்சிருப்பானா???
பழகற வரை பழகிட்டு கை கழுவி விட்டுட்டுப் போற இந்தக் காலத்துல இப்படியொரு ஆணா???
எதற்காக எவ்வளவு சிரமத்தை அனுபவித்திருக்கிறான்!
உண்மையில் இவனை அடைய தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! மகாவின் மனதில் மகேஷ் உயர்ந்து நின்றான்!
"என்னங்க... "
" சொல்லு மகா... "
" என்னை உங்களுக்கு அவ்வளோ பிடிக்குமா??? "
" இதென்ன கேள்வி மகா! நீ என் தேவதை! "
உண்மையில் மகா தேவதைப் போல்தான் இருந்தாள்!
" நாம எப்போ சென்னைக்கு போகலாம் மகேஷ்? "
" டாக்டர் சொன்னாரே அந்த கேம்ப் அட்டண்ட் பண்ணிட்டு நாம கிளம்பிடலாம் மகா! "
" ஐ லவ் யூ மகேஷ்! "
அவன் மடியில் படுத்துக் கொண்டாள் மகா!
அழகு தேவதை ஒருத்தி தன் மடியில் படுத்திருப்பதை நினைத்து மகேஷ் பெருமை கொண்டான்!
'தான் செய்வது சரியா???
நாளையே இவளைத் தேடி யாரேனும் வந்தால் என்ன செய்வேன்???"
இதுவரை யாரும் இவளைத் தேடி வரவில்லையே என கவலை கொண்ட மகேசின் மனம் முதல் முறையாக யாரும் வந்துவிடக் கூடாதென நினைத்து கலங்கியது!
ஒரு வாரம் கடந்த நிலையில் மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தனர் மகேசும், மகாவும்!
மகேசின் செல்போன் சிணுங்கவே அதை எடுத்து பார்த்தான் மகேஷ்!
கமலம்மாதான் அழைத்திருந்தாள்!
காலண்டரை பார்த்தான் மகேஷ்...
அது 11 ந் தேதியை காட்ட மகேசின் மனம் கலவரமானது!
"சொல்லுங்கம்மா... "
" என்னடா அப்படிப்பட்ட வேலை உனக்கு...
நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் உனக்கு அதாவது நியாபகம் இருக்கா இல்லையா? "
கமலம்மா பொரிந்து தள்ளினாள்!
" அம்மா இங்க முக்கியமான வேலையிருக்கு நிச்சய தேதியை மாத்துங்கனு எத்தனை முறை சொல்றேன்...
ஏம்மா இப்படி பண்றீங்க??? "
" பத்திரிக்கை அடிச்சி ஊரெல்லாம் கூட்டியாச்சி நீ சொன்னா மாத்திடணுமா???
நாளைக்கு நீ இங்க இல்லைனா என்னை உயிரோடவே பார்க்க முடியாது சொல்லிட்டேன்! "
" அம்மா.... ஏம்மா இப்படி பேசற??? "
மகேஷ் சொன்னதை கமலம்மா காதுக்கு எட்டுவதற்குள் இணைப்பை துண்டித்திருந்தாள் கமலம்!
*********************************************
**************************************
மகேசும், மகாவும் மருத்துவமனையை அடையும் பொழுது சரியாய் மணி பத்தை நெருங்கியிருந்தது!
"வாங்க மகேஷ்... மகா எப்படியிருக்கிங
்க? "
டாக்டர் க்ரிஷ் நலம் விசாரித்தார்!
" நல்லாயிருக்கேன் டாக்டர்... "
" ஓகே பைன்... மகேஷ் மகாவை பற்றி டாக்டர்ஸ்கிட்ட எல்லாம் பேசிட்டேன்... வாங்க போய் பார்க்கலாம்! "
அங்கே பல்வேறு துறைகள் சம்மந்தப்பட்ட டாக்டர்கள் குழுமியிருந்தனர்!
" ஹலோ டாக்டர் இவர்தான் மகேஷ்... இவங்க அவர் மிசஸ் மகா... நான் இவங்களைப்பத்தி சொல்லிருக்கேன்ல...
மகேஸ் இவர் டாக்டர் கோபால் நம்ம ஹாஸ்பிட்டல்ல தான் வொர்க் பண்ணிட்டு இருந்தார் இப்போ USA ல இருக்கார்... "
இருவரையும் பரஸ்பரம் அறிமுகப் படுத்தினார் டாக்டர் க்ரிஷ்!
மகாவை பார்த்த டாக்டர் கோபாலின் முகம் வெளிறியது!
மகாவை பரிசோதித்த டாக்டர் கோபால் சில சோதனைகளை எழுதி மகேசிடம் கொடுத்தார்!
இதை லேப்ல கொடுத்து டெஸ்ட் எல்லாம் எடுத்ததும் நீங்க வந்து காட்டுங்க மகேஷ் "
" ஓகே டாக்டர் "
அடுத்த இரண்டு மணி நேர காத்திருக்குப்பின் டெஸ்ட் ரிசல்ட் வர...
அதை பார்த்த டாக்டர் கோபால்...
" மகேஷ்... ஹோட்டல் மெரிடியன் தெரியுமா? "
" தெரியும் டாக்டர்... "
" நீங்க இன்னைக்கு ஈவினிங் அங்க இருக்க ரூம் நம்பர் 120 ல நான் இருப்பேன் வந்து பாருங்க... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! "
மகேஷ் கலவரமானான்!
" டாக்டர் எனிதிங் சீரியஸ்... "
" நத்திங்... நீங்க வாங்க பேசலாம் "
மகேசும் மகாவும் கிளம்பிவிட டாக்டர் க்ரிஷ் அவரிடம் கேட்டார்...
" என்ன சார்... எனிதிங் சீரியஸ்... "
" க்ரிஷ் இந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியலையா???? "
" இவ பேரு மகா... மகேசோட ஹஸ்பண்ட்... "
" இல்ல க்ரிஷ்... நாம ஆக்ஸிடன்ட் கேசு வந்தா மத்த ஹாஸ்பிட்டல் போல FIR கேட்காம அந்த உயிரை காப்பாத்தினா போதும்னு நினைச்சி போலிஸ்க்கு கூட இன்பார்ம் பண்ணாம ட்ரீட்மெண்ட் பண்றோம்... நல்லதுனு நினைச்சு நாம பண்றோம் பட் சிலர் மிஸ்யூஸ் பண்ணிக்குறாங்க! "
டாக்டர் க்ரிஷ் புரியாமல் கோபால் முகத்தை பார்க்க அவர் தொடர்ந்தார்...
" இந்த பொண்ணோட பேரு ரூபா... One of the famous prostitute... இவளுக்கு நம்ம ஹாஸ்பிட்டலேயே மூணு நாளு முறை அபார்ஷன் பண்ணிருக்கோம்! "
க்ரிஷ் அதிர்ந்த அந்த நொடிப்பொழுதில் மகா மகேசின் தோளில் சாய்ந்தபடி காரில் சென்றுக் கொண்டிருந்தாள்!
(தொடரும்)