கருவடாம்
தேவையான பொருட்கள்:
வெள்ளை காராமணி - 1 கப்
முழு உளுந்து – 2 கப்
வெள்ளைப்பூசணிக்காய் துண்டுகள் - 1/2 கப்
மிளகாய் வற்றல் – 15
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
பெருங்காயம் – ½ ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை:
காரமணியையும், உளுந்தையும் தனித்தனியாக 7-8 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் காராமணியை, பூசணிக்காய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை அதிக தண்ணீர் விடாமல் வடைமாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
உளுந்தையும் தனியாக அதிக தண்ணீர் விடாமல் அரைத்து இரண்டு மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பேப்பரில் இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி தேவையான இடைவெளி விட்டு வைக்கவும். இவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை. வெறுமனே துணுக்குகளாக கிள்ளி வைக்கவும். இவற்றை நல்ல வெயிலில் 2 - 3 நாட்கள் நன்றாக உலரவைக்கவேண்டும்.
இரண்டாவது நாளில் மேற்புறம் நன்கு காய்ந்த பிறகு வடகத்தைத் திருப்பிப் போட்டு உலரவைக்க வேண்டும். இரண்டு பக்கமும் நன்கு உலர்ந்தபிறகு காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைத்தால் ஒரு வருடம் வரைப் பயன்படுத்தலாம்.
இதை காய்கறிக் கூட்டு, சாம்பார், போன்றவற்றில் பொரித்துப் போடலாம். இந்த வடகத்தைப் பயன்படுத்தி துவையலும் அரைக்கலாம்.
பூசணிக்காய் நீர்க்காய் என்பதால், அரைக்கும்போது நீர் விடுவதில் கவனமாக இருக்கவேண்டும்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை காராமணி - 1 கப்
முழு உளுந்து – 2 கப்
வெள்ளைப்பூசணிக்காய் துண்டுகள் - 1/2 கப்
மிளகாய் வற்றல் – 15
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
பெருங்காயம் – ½ ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
செய்முறை:
காரமணியையும், உளுந்தையும் தனித்தனியாக 7-8 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் காராமணியை, பூசணிக்காய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை அதிக தண்ணீர் விடாமல் வடைமாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
உளுந்தையும் தனியாக அதிக தண்ணீர் விடாமல் அரைத்து இரண்டு மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பேப்பரில் இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளி தேவையான இடைவெளி விட்டு வைக்கவும். இவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை. வெறுமனே துணுக்குகளாக கிள்ளி வைக்கவும். இவற்றை நல்ல வெயிலில் 2 - 3 நாட்கள் நன்றாக உலரவைக்கவேண்டும்.
இரண்டாவது நாளில் மேற்புறம் நன்கு காய்ந்த பிறகு வடகத்தைத் திருப்பிப் போட்டு உலரவைக்க வேண்டும். இரண்டு பக்கமும் நன்கு உலர்ந்தபிறகு காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைத்தால் ஒரு வருடம் வரைப் பயன்படுத்தலாம்.
இதை காய்கறிக் கூட்டு, சாம்பார், போன்றவற்றில் பொரித்துப் போடலாம். இந்த வடகத்தைப் பயன்படுத்தி துவையலும் அரைக்கலாம்.
பூசணிக்காய் நீர்க்காய் என்பதால், அரைக்கும்போது நீர் விடுவதில் கவனமாக இருக்கவேண்டும்.