10.கதை ஒன்று ஆரம்பம்
இரவு வீடு திரும்பியவன், கிட்சன் மேடையில் அமர்ந்துக் கொண்டு,தன் அன்னை சுட்டுத் தந்த தோசையை உண்டபடி எதையோ பேசிக்கொண்டிருக்க, வீட்டினுள் ஒன்றாய் வந்தனர் வெண்பாவும் மதியும்!
“வா மதி” என்று அவனும், “வாங்க மா மதி, வெண்பா, சாப்பிடுங்க” என்று ரேணுகாவும் அப்பெண்களை வரவேற்றனர்.
“உன் அம்மா அவசரமா வந்து உன் பேகை கொடுத்திட்டு போனாங்க மதி. வெண்பா ரூமில் இருக்கு பாரு” என்றாள் ரேணுகா!
அவளுக்கு மதியை மிகவும் பிடித்து விட்டது!
பெரியவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்கிறாள்.வெண்பாவும் இப்படித்தான் இருந்தாள். இப்போது ஏனோ ஒரு மாற்றம்!
பெண்கள் இருவரும் அங்கிருந்து அகலவும், தனது அன்னையிடம் “வெளிநாடு போற வேலை இருக்கு! என் பாஸ்போர்டை உங்க ரூம் லாக்கரில் இருந்து எடுத்து கொடுங்க மா!” என்றான் போகிற போக்கில்!
“என்ன விழியா, கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு,இப்ப போய் இப்படி சொல்றே!”
“போனால் ஆறு மாசத்தில் வந்துடுவேன் மா” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை!
ரேணுகா யோசனையில் ஆழ்ந்து விட்டாள்.
ரேணுகா இதை பற்றி சபாபதியிடம் சொல்ல, சபாபதி வெண்பாவிடம் சொல்லிய ஆறு மாத ‘கிரேஸ் பீரியடை’ ஈவு இறக்கமின்றி தள்ளுபடி செய்தார்.
இந்த கூத்துக்கள் எதையும் அறியாத வெண்பா அடுத்த நாள் பணி முடித்து மதியுடன் வீடு திரும்ப , ரேணுகா கேசரி கிண்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன அத்தை இன்னிக்கு ஸ்பெஷல்?” அடுப்பாங்கறைக்கு நேரே வந்துவிட்டாள் மதி.
“எல்லாம் நல்ல விஷயம் தான் , இன்னும் ஒரு போன் வந்ததும் உங்க ரெண்டு பேருக்கும் அது என்னன்னு சொல்றேன்!”
மதியை நன்கு கவனித்தார் ரேணுகா!அந்த பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது.வெண்பாவை விழியனுக்கு நிச்சயம் செய்தாச்சு என்றதும் , அவனிடம் அதிகமாய் பழகுவதை குறைத்துக் கொண்டாளே.
இப்படியும் பொண்ணுங்க இருக்காங்க . ரெண்டு வருஷம் முன்னாடி விழியனை பாடா படுத்தினாளே ஒரு மகராசி, அவளும் பொண்ணு தான்! இப்ப எவன் உசிர வாங்குறாளோ!
‘உங்க மகன் உசிருக்காக தான் அவ வெயிட்டிங்’
விழியன், இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.
“இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ மதி” வெண்பாவுக்கும் உணவை வைத்தவள், போன் அடிக்கவும் ஓடினாள்.
“அண்ணே சொல்லுங்க . ஆங்…இருங்க எழுதிக்கிறேன்! ம்ம், இந்த மூணு தேதியா? சரி.இதோ அவனும் வந்துட்டான்.பேசிட்டு போன் பண்றேன்!”
“என்ன மா விஷயம்” என்றபடியே உள்ளே வந்தான் அவரின் மைந்தன்!
“உங்க கல்யாணத்துக்கு நாள் பார்த்தாச்சுன்னு அண்ணே போன் செய்தார்! இந்த மூணு தேதியில் உங்க ரெண்டு பேருக்கு எது ஒத்துவரும்னு சொல்லுங்க.அடுத்த வாரம் நேரில் வருவாராம்!”
இருவர் முகத்திலும் சந்தோஷமில்லை!
“மா , இப்ப என்ன அவசரம்?நான் தான் சொன்னேனே எனக்கு வேலை இருக்குன்னு!” அவள் பக்கம் கூட அவன் பார்வை செல்லவில்லை.
அவளை அவன் உதாசினப்படுத்த ஆரம்பித்து பல நாட்கள் ஆகி விட்டது. அது இருவருக்கு மட்டுமன்றி அவர்களை சுற்றி இருந்த மற்ற இருவருக்கும் கூட நன்றாக தெரிந்தது!
“என்ன டா பேசுறே நீ? ஏற்கனவே தமிழ் மாமியார் வாயை திறந்துட்டா! இன்னும் ஊரில் இருக்குறவங்க எல்லாரும் கேள்வி கேட்குற வரை எங்களால் காலம் கடத்த முடியாது”
தான் சொல்வதே சரி என்பாள். இதற்கு மேல் பேசமுடியாது!
“மா, கொஞ்சம் தலைவலியா இருக்கு. எனக்கு நைட் சாப்பாடு வேண்டாம்!” அவனறைக்கு சென்றுவிட்டான்.
கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டாங்களான்னு எத்தனை பெயர் காத்துகிட்டு இருக்காங்க! நாமளா எல்லாம் பார்த்து செய்து வைக்க நினைச்சா, மூஞ்சிய தூக்குறானே! இவளும் தான்!
இதுகளை வச்சிகிட்டு!
இதே எண்ணப்போக்கில் அவள் பணிகளை முடித்தவள்,வெண்பாவின் அறைக்கு சென்று,கட்டிலில் அவள் பக்கம் அமர்ந்தார்.
“வெண்பா , இந்த மூணு தேதியில் ஒரு தேதியை செலக்ட் பண்ணு மா, அண்ணே கேட்பார்”
காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு முழித்தவள்,
“அத்தை,அப்பா கிட்ட ஆறு மாசம் டைம் கேட்டிருந்தேன்” என்றாள் தயக்கமாய்!
“இல்லம்மா, இப்போ விட்டா நேரம் நல்லா இல்லையாம். அவனுக்கும் ஏதோ வெளிநாட்டுக்கு போற வேலை இருக்காம். அதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்!”
“அவர் திரும்ப வந்ததுக்கு அப்புறம் வைக்கலாமே அத்தை!”
நிறுத்துவது தான் சிரமம்!எப்படியாவது இதை ஒத்தியாவது போடலாம் என்பது அவள் எண்ணமாயிருந்தது!
இவள் பேசியதை கேட்க,பக்கத்தில் இருந்த மதிக்கு கோவமாக வந்தது. ஓங்கி தட்டலாம் என்ற எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். இப்படி ஒருத்தி எங்கையாவது இருப்பாளா?
ரேணுகாவுக்கும் அதே நிலை தான்.
“அப்படி பண்ண முடியாது வெண்பா, இதுவே கால தாமதம். நீயே வேணும்ன அண்ணன் கிட்ட பேசி பாரு” எழுந்து சென்றுவிட்டாள்.
அவள் பின்னோடு போன மதி,
“கவலை படாதீங்க அதை.அந்த பொண்ணை சரி கட்ட வேண்டியது என் வேலை” என்ற பிறகு தான் நிம்மதியானது ரேணுகாவுக்கு!
வெண்பாவிடம் வந்ததும்,
“ஏன் டீ பெரியவங்க மனசை நோகடிக்கிற? இப்ப என்னத்துக்கு வேணாங்கிற?”
“என்னவோ இதெல்லாம் பிடிக்கலை மதி.என்னை கல்யாணம் பண்ணா அவனுக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்!”
“அது என்ன டீ என்னவோ ஏதோன்னு? நீ காரணத்தை சொல்லு. சரியா தவறான்னு நான் சொல்றேன்!” மதி அவளை இன்று விடுவதாக இல்லை.
வெண்பா ஆரம்பித்தாள். தன் அக்காள் திருமண சமையத்தில் அவள் விழியன் வீட்டுக்கு வந்ததும், யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து விழியன் அவளை முத்தமிட்டதும், அதற்காக அவனை அடித்ததும், அதன் பின் அவனை ஒதுக்கியது எல்லாம் சொன்னாள்.
“அப்புறம்?” மதியின் குரல் கர்ஜனையானது!
“ஏன் டீ கோவப் படுறே?”
“புரியாத வயசில் செஞ்ச தப்பை இன்னும் பிடிச்சிட்டு இருப்பியா நீ”
“என்ன மதி இப்படி சாதாரணமா சொல்லிட்ட?”
“எதுவும் பேசாதே! சில விஷயங்கள் நடக்காம இருந்தா நல்லது. நடந்துட்டா அதை விட்டு ஒழிச்சிட்டு போயிட்டே இருக்கணும். அந்த சுழலில் சிக்கி சின்னா பின்னமாகக் கூடாது!”
தன் இடத்தில் போய் படுத்தவள் , சற்றி நேரத்தில் உறங்கியும் விட்டாள்.
‘இவள் என்ன சொல்கிறாள்?’
குழப்பமாய் இருந்தது வெண்பாவுக்கு.
அவன் செய்தது ஒன்னுமே இல்லை என்பது போலல்லவா பேசுகிறாள்.
அன்று அவனின் செயலுக்கு பின் அவனை அறைந்தவள் தன் பாட்டி பக்கம் போய் அமர்ந்துக் கொண்டாள். கை காலெல்லாம் நடுங்கி போய்விட்டது. யாரிடம் இதை போய் சொல்வது என்ற குழப்பம் வேறு.
‘பிசிகல் அப்பியூஸ்’ எத்தனை கொடுமையானது!
வெண்பாவின் குணாதிசயங்களே மாறிவிட்டது! எந்த பையன்களிடமும் பேசக் கூட யோசிப்பாள். ஆண்களில் நல்லவர்களே கிடையாது என்று எண்ணம் கொண்டவளாக மாறிப் போனாள்.இவள் நடந்து கொண்டதைப் பார்த்து தலைக்கணம் பிடித்தவள் என்ற பெயர் கிடைத்தது தான் மிச்சம்!
விழியன் தன் அன்பை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்று செய்த சிறு பிழை ஒரு பெண்ணை எந்த அளவிற்கு பாதித்து இருக்கிறது என்பதை அவன் அறியாமல் அதையே திரும்ப திரும்பச் செய்தது அவனை வெறுக்க ஒரு காரணியாகிப் போனது!
இரவு வீடு திரும்பியவன், கிட்சன் மேடையில் அமர்ந்துக் கொண்டு,தன் அன்னை சுட்டுத் தந்த தோசையை உண்டபடி எதையோ பேசிக்கொண்டிருக்க, வீட்டினுள் ஒன்றாய் வந்தனர் வெண்பாவும் மதியும்!
“வா மதி” என்று அவனும், “வாங்க மா மதி, வெண்பா, சாப்பிடுங்க” என்று ரேணுகாவும் அப்பெண்களை வரவேற்றனர்.
“உன் அம்மா அவசரமா வந்து உன் பேகை கொடுத்திட்டு போனாங்க மதி. வெண்பா ரூமில் இருக்கு பாரு” என்றாள் ரேணுகா!
அவளுக்கு மதியை மிகவும் பிடித்து விட்டது!
பெரியவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்கிறாள்.வெண்பாவும் இப்படித்தான் இருந்தாள். இப்போது ஏனோ ஒரு மாற்றம்!
பெண்கள் இருவரும் அங்கிருந்து அகலவும், தனது அன்னையிடம் “வெளிநாடு போற வேலை இருக்கு! என் பாஸ்போர்டை உங்க ரூம் லாக்கரில் இருந்து எடுத்து கொடுங்க மா!” என்றான் போகிற போக்கில்!
“என்ன விழியா, கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு,இப்ப போய் இப்படி சொல்றே!”
“போனால் ஆறு மாசத்தில் வந்துடுவேன் மா” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை!
ரேணுகா யோசனையில் ஆழ்ந்து விட்டாள்.
ரேணுகா இதை பற்றி சபாபதியிடம் சொல்ல, சபாபதி வெண்பாவிடம் சொல்லிய ஆறு மாத ‘கிரேஸ் பீரியடை’ ஈவு இறக்கமின்றி தள்ளுபடி செய்தார்.
இந்த கூத்துக்கள் எதையும் அறியாத வெண்பா அடுத்த நாள் பணி முடித்து மதியுடன் வீடு திரும்ப , ரேணுகா கேசரி கிண்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன அத்தை இன்னிக்கு ஸ்பெஷல்?” அடுப்பாங்கறைக்கு நேரே வந்துவிட்டாள் மதி.
“எல்லாம் நல்ல விஷயம் தான் , இன்னும் ஒரு போன் வந்ததும் உங்க ரெண்டு பேருக்கும் அது என்னன்னு சொல்றேன்!”
மதியை நன்கு கவனித்தார் ரேணுகா!அந்த பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது.வெண்பாவை விழியனுக்கு நிச்சயம் செய்தாச்சு என்றதும் , அவனிடம் அதிகமாய் பழகுவதை குறைத்துக் கொண்டாளே.
இப்படியும் பொண்ணுங்க இருக்காங்க . ரெண்டு வருஷம் முன்னாடி விழியனை பாடா படுத்தினாளே ஒரு மகராசி, அவளும் பொண்ணு தான்! இப்ப எவன் உசிர வாங்குறாளோ!
‘உங்க மகன் உசிருக்காக தான் அவ வெயிட்டிங்’
விழியன், இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.
“இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ மதி” வெண்பாவுக்கும் உணவை வைத்தவள், போன் அடிக்கவும் ஓடினாள்.
“அண்ணே சொல்லுங்க . ஆங்…இருங்க எழுதிக்கிறேன்! ம்ம், இந்த மூணு தேதியா? சரி.இதோ அவனும் வந்துட்டான்.பேசிட்டு போன் பண்றேன்!”
“என்ன மா விஷயம்” என்றபடியே உள்ளே வந்தான் அவரின் மைந்தன்!
“உங்க கல்யாணத்துக்கு நாள் பார்த்தாச்சுன்னு அண்ணே போன் செய்தார்! இந்த மூணு தேதியில் உங்க ரெண்டு பேருக்கு எது ஒத்துவரும்னு சொல்லுங்க.அடுத்த வாரம் நேரில் வருவாராம்!”
இருவர் முகத்திலும் சந்தோஷமில்லை!
“மா , இப்ப என்ன அவசரம்?நான் தான் சொன்னேனே எனக்கு வேலை இருக்குன்னு!” அவள் பக்கம் கூட அவன் பார்வை செல்லவில்லை.
அவளை அவன் உதாசினப்படுத்த ஆரம்பித்து பல நாட்கள் ஆகி விட்டது. அது இருவருக்கு மட்டுமன்றி அவர்களை சுற்றி இருந்த மற்ற இருவருக்கும் கூட நன்றாக தெரிந்தது!
“என்ன டா பேசுறே நீ? ஏற்கனவே தமிழ் மாமியார் வாயை திறந்துட்டா! இன்னும் ஊரில் இருக்குறவங்க எல்லாரும் கேள்வி கேட்குற வரை எங்களால் காலம் கடத்த முடியாது”
தான் சொல்வதே சரி என்பாள். இதற்கு மேல் பேசமுடியாது!
“மா, கொஞ்சம் தலைவலியா இருக்கு. எனக்கு நைட் சாப்பாடு வேண்டாம்!” அவனறைக்கு சென்றுவிட்டான்.
கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டாங்களான்னு எத்தனை பெயர் காத்துகிட்டு இருக்காங்க! நாமளா எல்லாம் பார்த்து செய்து வைக்க நினைச்சா, மூஞ்சிய தூக்குறானே! இவளும் தான்!
இதுகளை வச்சிகிட்டு!
இதே எண்ணப்போக்கில் அவள் பணிகளை முடித்தவள்,வெண்பாவின் அறைக்கு சென்று,கட்டிலில் அவள் பக்கம் அமர்ந்தார்.
“வெண்பா , இந்த மூணு தேதியில் ஒரு தேதியை செலக்ட் பண்ணு மா, அண்ணே கேட்பார்”
காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு முழித்தவள்,
“அத்தை,அப்பா கிட்ட ஆறு மாசம் டைம் கேட்டிருந்தேன்” என்றாள் தயக்கமாய்!
“இல்லம்மா, இப்போ விட்டா நேரம் நல்லா இல்லையாம். அவனுக்கும் ஏதோ வெளிநாட்டுக்கு போற வேலை இருக்காம். அதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்!”
“அவர் திரும்ப வந்ததுக்கு அப்புறம் வைக்கலாமே அத்தை!”
நிறுத்துவது தான் சிரமம்!எப்படியாவது இதை ஒத்தியாவது போடலாம் என்பது அவள் எண்ணமாயிருந்தது!
இவள் பேசியதை கேட்க,பக்கத்தில் இருந்த மதிக்கு கோவமாக வந்தது. ஓங்கி தட்டலாம் என்ற எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். இப்படி ஒருத்தி எங்கையாவது இருப்பாளா?
ரேணுகாவுக்கும் அதே நிலை தான்.
“அப்படி பண்ண முடியாது வெண்பா, இதுவே கால தாமதம். நீயே வேணும்ன அண்ணன் கிட்ட பேசி பாரு” எழுந்து சென்றுவிட்டாள்.
அவள் பின்னோடு போன மதி,
“கவலை படாதீங்க அதை.அந்த பொண்ணை சரி கட்ட வேண்டியது என் வேலை” என்ற பிறகு தான் நிம்மதியானது ரேணுகாவுக்கு!
வெண்பாவிடம் வந்ததும்,
“ஏன் டீ பெரியவங்க மனசை நோகடிக்கிற? இப்ப என்னத்துக்கு வேணாங்கிற?”
“என்னவோ இதெல்லாம் பிடிக்கலை மதி.என்னை கல்யாணம் பண்ணா அவனுக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்!”
“அது என்ன டீ என்னவோ ஏதோன்னு? நீ காரணத்தை சொல்லு. சரியா தவறான்னு நான் சொல்றேன்!” மதி அவளை இன்று விடுவதாக இல்லை.
வெண்பா ஆரம்பித்தாள். தன் அக்காள் திருமண சமையத்தில் அவள் விழியன் வீட்டுக்கு வந்ததும், யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து விழியன் அவளை முத்தமிட்டதும், அதற்காக அவனை அடித்ததும், அதன் பின் அவனை ஒதுக்கியது எல்லாம் சொன்னாள்.
“அப்புறம்?” மதியின் குரல் கர்ஜனையானது!
“ஏன் டீ கோவப் படுறே?”
“புரியாத வயசில் செஞ்ச தப்பை இன்னும் பிடிச்சிட்டு இருப்பியா நீ”
“என்ன மதி இப்படி சாதாரணமா சொல்லிட்ட?”
“எதுவும் பேசாதே! சில விஷயங்கள் நடக்காம இருந்தா நல்லது. நடந்துட்டா அதை விட்டு ஒழிச்சிட்டு போயிட்டே இருக்கணும். அந்த சுழலில் சிக்கி சின்னா பின்னமாகக் கூடாது!”
தன் இடத்தில் போய் படுத்தவள் , சற்றி நேரத்தில் உறங்கியும் விட்டாள்.
‘இவள் என்ன சொல்கிறாள்?’
குழப்பமாய் இருந்தது வெண்பாவுக்கு.
அவன் செய்தது ஒன்னுமே இல்லை என்பது போலல்லவா பேசுகிறாள்.
அன்று அவனின் செயலுக்கு பின் அவனை அறைந்தவள் தன் பாட்டி பக்கம் போய் அமர்ந்துக் கொண்டாள். கை காலெல்லாம் நடுங்கி போய்விட்டது. யாரிடம் இதை போய் சொல்வது என்ற குழப்பம் வேறு.
‘பிசிகல் அப்பியூஸ்’ எத்தனை கொடுமையானது!
வெண்பாவின் குணாதிசயங்களே மாறிவிட்டது! எந்த பையன்களிடமும் பேசக் கூட யோசிப்பாள். ஆண்களில் நல்லவர்களே கிடையாது என்று எண்ணம் கொண்டவளாக மாறிப் போனாள்.இவள் நடந்து கொண்டதைப் பார்த்து தலைக்கணம் பிடித்தவள் என்ற பெயர் கிடைத்தது தான் மிச்சம்!
விழியன் தன் அன்பை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்று செய்த சிறு பிழை ஒரு பெண்ணை எந்த அளவிற்கு பாதித்து இருக்கிறது என்பதை அவன் அறியாமல் அதையே திரும்ப திரும்பச் செய்தது அவனை வெறுக்க ஒரு காரணியாகிப் போனது!