21
“என்னையும் கூப்பிட்டு போறேன்னு சொன்னீங்க, சும்மா சொன்னதா அது!”
மதி லண்டன் கிளம்புகிறாள் என்பது தெரிந்ததும் தானும் விழியன் இருக்கும் இடம் போக வேண்டும் என்று தவிப்பானது வெண்பாவுக்கு!
அன்று விழியனுடன் போனில் பேசுகையில் இப்படியாக கொஞ்சிக் கொண்டிருந்தாள் அவன் ஆசை மனைவி வெண்பா.
மதி இப்போதெல்லாம் ஆபிஸ் வரவில்லை என்றாலும் தினமும் அவளிடம் பேசும் வாய்ப்பும், வாரம் ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் இருந்து வந்தது. அவளும் இப்போது வெளிநாடு சென்றுவிட்டால் தன் நிலைமை தான் என்ன?!
அவளின் இந்த பேச்சில் நகைத்துக் கொண்டான் விழியன்.
“ஹலோ ஹலோ, இது என் மாமா பொண்ணு வெண்பா வா?”
“இல்லை, நீ தாலி கட்டி கூட வச்சியிருக்கிற உன் பொண்டாட்டி”
“அப்படியா , பேசுற பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கே!”
அவளுக்கும் சேர்த்து தான் லண்டன் செல்ல எல்லா ஏற்பாடும் நடக்கிறது.அதனை பற்றி முடிந்த வரை தாமதமாக சொல்ல எண்ணியிருந்தான். மதி ஷாப்பிங் என்று அழைத்துப் போகையில் இவளையும் சேர்த்து வாங்க சொல்லியிருந்தான்.கணவன் தன்னையும் அழைத்தான் என்றால் தேவைப்படலாம் என்று எண்ணி அதையும் செய்தாள் வெண்பா!
ரதியை அழைக்க எப்போது செல்ல வேண்டும் என்று கேட்க எத்தனித்து அவளுக்கு பல முறை போன் செய்து பார்த்தான் பிரகாஷ் , எடுத்தாளில்லை.பல நாட்கள் முயன்றும் இதே நிலை தொடர சாரதியை அழைத்தான்,
“அவ கிளம்பி மூணு நாள் ஆச்சே பா ! நீ வர சொன்னதா தானே சொன்னா!உன் வீட்டுக்கும் வராமா எங்கே போயிருப்பா?”
பதட்டம் அவன் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.
“நீங்க பதட்டபடாதீங்க .ஹாஸ்டல் திடீர்னு காலி பண்றதில் எதுவும் சிக்கலோ என்னவோ!அங்க தான் போயிருப்பா, நான் போய் பார்க்குறேன்!”
ஏமாற்றமாய் இருந்தது அவனுக்கு. அப்படி என்ன என் மேல் தவறு போல் செய்கிறாள். பேச இஷ்டமில்லையெனில் மெஸேஜில் சொல்லியிருக்கலாமே!
யோசனையில் மூழ்கியிருந்தாலும் ,கால் போன போக்கில் ஆபிஸ் வரை வந்துவிட்டான். எதேச்சையாய் அவள் இருக்கை பக்கம் கண் போக அங்கே அமர்ந்திருந்தாள் அவனின் மனைவி!
இத்தனை நேரம் இருந்த குழப்பம் போய் , இனிமை படரத்தான் செய்தது! அவளிடம் போனவன் இன்முகமாய்,
“எப்போ வந்தே ரதி?ஐ வாஸ் வரீட் . ஏன் என் போன் கால் அட்டெண்ட் செய்யலை?”
அந்த கேள்வியே காதில் விழாதது போல், நிமிர்ந்து அவனை பார்த்தவள்,
“குட் மார்னிங் பிரகாஷ்,லீவில் உள்ள பெண்டிங் வர்க்ஸ் எல்லாம் முடிக்கணும்! கொஞ்சம் ஹெல்ப் தேவை!”
ஆபிஸில் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடிக்கு அவள் தொடர நினைத்து இப்படி சொல்ல, அவனுக்கு எப்படியிருந்ததாம் !
யோசனையாய் அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்க, பேசி முடித்தாயிற்று என்பதாய் திரும்பி தன் வேலைகளை கவனிக்கலானாள்.அப்படி அங்கேயே எத்தனை நேரம் நிற்பது?விலகிக்கொண்டான் பிரகாஷ்!
ரதி வந்ததில் பிரகாஷ் எப்படி மகிழ்ந்தானோ அதே நிலை தான் வெண்பாவுக்கும். தோழியை ஆதரவாய் கை பற்றியவள்,
“சாரி ஃபார் யுவர் லாஸ் ரதி. எனக்கு தாமதமா தான் தெரிய வந்தது”
அவள் தந்தையின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்தாள்.
ஆனால் அது ரதிக்கு அவள் துக்கத்தை நியாபகப்படுத்தியது போல் ஆகிவிட்டது. ஒரு மூச்சு அழுதவள், வெண்பாவின் தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள். வெண்பாவுக்கு பாவமாய் போனது… இனி எப்படி இந்த பெண் தனியாய் தன் வாழ்க்கையை வாழ போகிறாள்? எல்லா பெண்களுக்கும் தோன்றும் உணர்வு அவளுக்கும் வந்து போனது. அதை சொல்லி அவள் தைரியத்தை குறைக்க மனமில்லாது,
“எல்லாம் சரியா போகும் ரதி. நான் இருக்கேன் உனக்கு . கவலை படாதே”
ரதி கேட்க நினைத்த வார்த்தைகள்!
‘ஆமாம் எனக்கு நீ உடன் இருக்கணும் வெண்பா, உன்னால் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது’. ரதியின் மனதில் ஓடின எண்ணங்கள்.
“என்னையும் கூப்பிட்டு போறேன்னு சொன்னீங்க, சும்மா சொன்னதா அது!”
மதி லண்டன் கிளம்புகிறாள் என்பது தெரிந்ததும் தானும் விழியன் இருக்கும் இடம் போக வேண்டும் என்று தவிப்பானது வெண்பாவுக்கு!
அன்று விழியனுடன் போனில் பேசுகையில் இப்படியாக கொஞ்சிக் கொண்டிருந்தாள் அவன் ஆசை மனைவி வெண்பா.
மதி இப்போதெல்லாம் ஆபிஸ் வரவில்லை என்றாலும் தினமும் அவளிடம் பேசும் வாய்ப்பும், வாரம் ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் இருந்து வந்தது. அவளும் இப்போது வெளிநாடு சென்றுவிட்டால் தன் நிலைமை தான் என்ன?!
அவளின் இந்த பேச்சில் நகைத்துக் கொண்டான் விழியன்.
“ஹலோ ஹலோ, இது என் மாமா பொண்ணு வெண்பா வா?”
“இல்லை, நீ தாலி கட்டி கூட வச்சியிருக்கிற உன் பொண்டாட்டி”
“அப்படியா , பேசுற பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கே!”
அவளுக்கும் சேர்த்து தான் லண்டன் செல்ல எல்லா ஏற்பாடும் நடக்கிறது.அதனை பற்றி முடிந்த வரை தாமதமாக சொல்ல எண்ணியிருந்தான். மதி ஷாப்பிங் என்று அழைத்துப் போகையில் இவளையும் சேர்த்து வாங்க சொல்லியிருந்தான்.கணவன் தன்னையும் அழைத்தான் என்றால் தேவைப்படலாம் என்று எண்ணி அதையும் செய்தாள் வெண்பா!
ரதியை அழைக்க எப்போது செல்ல வேண்டும் என்று கேட்க எத்தனித்து அவளுக்கு பல முறை போன் செய்து பார்த்தான் பிரகாஷ் , எடுத்தாளில்லை.பல நாட்கள் முயன்றும் இதே நிலை தொடர சாரதியை அழைத்தான்,
“அவ கிளம்பி மூணு நாள் ஆச்சே பா ! நீ வர சொன்னதா தானே சொன்னா!உன் வீட்டுக்கும் வராமா எங்கே போயிருப்பா?”
பதட்டம் அவன் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.
“நீங்க பதட்டபடாதீங்க .ஹாஸ்டல் திடீர்னு காலி பண்றதில் எதுவும் சிக்கலோ என்னவோ!அங்க தான் போயிருப்பா, நான் போய் பார்க்குறேன்!”
ஏமாற்றமாய் இருந்தது அவனுக்கு. அப்படி என்ன என் மேல் தவறு போல் செய்கிறாள். பேச இஷ்டமில்லையெனில் மெஸேஜில் சொல்லியிருக்கலாமே!
யோசனையில் மூழ்கியிருந்தாலும் ,கால் போன போக்கில் ஆபிஸ் வரை வந்துவிட்டான். எதேச்சையாய் அவள் இருக்கை பக்கம் கண் போக அங்கே அமர்ந்திருந்தாள் அவனின் மனைவி!
இத்தனை நேரம் இருந்த குழப்பம் போய் , இனிமை படரத்தான் செய்தது! அவளிடம் போனவன் இன்முகமாய்,
“எப்போ வந்தே ரதி?ஐ வாஸ் வரீட் . ஏன் என் போன் கால் அட்டெண்ட் செய்யலை?”
அந்த கேள்வியே காதில் விழாதது போல், நிமிர்ந்து அவனை பார்த்தவள்,
“குட் மார்னிங் பிரகாஷ்,லீவில் உள்ள பெண்டிங் வர்க்ஸ் எல்லாம் முடிக்கணும்! கொஞ்சம் ஹெல்ப் தேவை!”
ஆபிஸில் யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடிக்கு அவள் தொடர நினைத்து இப்படி சொல்ல, அவனுக்கு எப்படியிருந்ததாம் !
யோசனையாய் அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்க, பேசி முடித்தாயிற்று என்பதாய் திரும்பி தன் வேலைகளை கவனிக்கலானாள்.அப்படி அங்கேயே எத்தனை நேரம் நிற்பது?விலகிக்கொண்டான் பிரகாஷ்!
ரதி வந்ததில் பிரகாஷ் எப்படி மகிழ்ந்தானோ அதே நிலை தான் வெண்பாவுக்கும். தோழியை ஆதரவாய் கை பற்றியவள்,
“சாரி ஃபார் யுவர் லாஸ் ரதி. எனக்கு தாமதமா தான் தெரிய வந்தது”
அவள் தந்தையின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்தாள்.
ஆனால் அது ரதிக்கு அவள் துக்கத்தை நியாபகப்படுத்தியது போல் ஆகிவிட்டது. ஒரு மூச்சு அழுதவள், வெண்பாவின் தோளில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள். வெண்பாவுக்கு பாவமாய் போனது… இனி எப்படி இந்த பெண் தனியாய் தன் வாழ்க்கையை வாழ போகிறாள்? எல்லா பெண்களுக்கும் தோன்றும் உணர்வு அவளுக்கும் வந்து போனது. அதை சொல்லி அவள் தைரியத்தை குறைக்க மனமில்லாது,
“எல்லாம் சரியா போகும் ரதி. நான் இருக்கேன் உனக்கு . கவலை படாதே”
ரதி கேட்க நினைத்த வார்த்தைகள்!
‘ஆமாம் எனக்கு நீ உடன் இருக்கணும் வெண்பா, உன்னால் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது’. ரதியின் மனதில் ஓடின எண்ணங்கள்.