23
விழியனா?
அது வெண்பாவின் கணவன் தானே?
இவளுக்கு என்ன பைத்தியமா?
“அவர் வெண்பா வீட்டுக்காரர் தானே?”
அதிர்ச்சியாய் பிரகாஷ் கேட்க , பதிலில்லை அவளிடம்,
“ஏற்கனவே கல்யாணம் ஆனவரையா இன்னமும் காதலிக்கிறேன்னு சொல்றே, ரதி?!”
‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தவளின் செவிட்டில் நாலு அப்பு அப்பலாம் என்றிருந்தது அவனுக்கு! என்ன பெண் இவள்? வாழ்க்கை நெறி என்று ஒன்று இல்லையா?
“இதை சொல்ல உனக்கு வெட்கமாயில்லையா ?ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைண்ட் ரதி! சந்தோஷமா இருக்கிற அவங்க குடும்பத்தில் குழப்பம் செய்யாதே!”
அவனை சீண்டி விட்டது போல் இருந்தது அவனின் பேச்சுக்கள்.பதிலுக்கு முறைத்தவள்,
“என்னை சொல்ல உனக்கு என்ன அதிகாரம் இருக்கு பிரகாஷ்?
இந்த கயிற்றை என் கழுத்தில் கட்டிட்டா என்னை அடக்கணும்னு உனக்கு தோணுதா? அந்த உரிமை எல்லாம் உனக்கு கிடையாது!”
என்ன சொல்வான் ?அவள் மேல் வைத்திருந்த அத்தனை காதலையும் ஒன்றும் இல்லாததை போல் சொல்கிறாளே!
தன் டென்ஷன் நிலைகளை அளவுக்குள் கொண்டு வர, அவளுக்கு எதிர்புறம் திரும்பி தலைக்கோதி நின்றவன், இவள் விஷயத்தில் இனியும் என்ன தான் செய்வது என்றும் யோசித்தான். இப்போது இருக்கும் மனநிலையில் ஒரு உருப்படியான வழியும் மூளைக்கு எட்டிய தூரம் வரையில் புலப்படவில்லை.
இதற்கு மேலும் அவளிடம் வாக்குவாதம் செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை. அது அவனின் குணமும் இல்லை.
“ரதி கிளம்பு போகலாம்”
தான் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம் என்று நினைத்து வந்ததற்கும் இப்போது இங்கு நடந்து கொண்டிருப்பவைகளுக்கும் சற்றும் சமந்தம் இல்லை. அவள் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்துக் கொண்டிருந்தாள்.இருவரின் வாழ்க்கையில் இனி நன்மைகளுக்கு இடம் இராதா என்ற ஐயம் கூட தோன்றியது பிரகாஷுக்கு! இருக்கும் பிரச்சனை பத்தாது என்பது போல் ,
“இல்லை பிரகாஷ் , நீ மட்டும் கிளம்பு .நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கணும்னு நினைக்கிறேன்!” ஆள் இல்லாத இந்த இடத்தில் தனியே இருக்க போகிறாளாம்… கட்டுப்படுத்தி வைத்த கோபம் எல்லாம் அவனின் மன தடுப்பை தாண்டி விட்டது! இவள் திமிரை அடக்க தனியே விட்டுவிட்டு போனால் தான் என்ன என்ற எண்ணம் கூட வந்து போனது!ரதியை நெருங்கி முரட்டுத்தனமாய் அவள் தோள்களை பற்றியவன் ,
“வார்டன் கிட்ட சொல்லி உன்னை வெளியே கூப்பிட்டு வந்தது நான், மரியாதையா இப்ப கிளம்பு ரதி”
சொல்லியவன் வண்டியை நோக்கி சென்று வேக வேகமாய் அதை ரிவர்ஸ் எடுக்க, அவனின் கோபத்தை உணர்ந்தவள் தாமதிக்காது ஏறிக் கொண்டாள்!
திரும்பும் வழியில் இருவருக்குள்ளும் எந்த பேச்சும் இல்லை. இன்று பிரகாஷிடம் அனைத்தையும் சொல்லிவிட்டது சரி என்று பட்டது ரதிக்கு! இனி என் விஷயத்தில் தலையிட மாட்டான் என தப்பாக கணக்கு போட்டாள், எப்போதும் போல்!
காரில் ஓடிக் கொண்டிருந்த ரேடியோவை நிறுத்தி விட்டான். அதில் வரும் பாடல்களை கேட்டு அவள் செய்துவிடக்கூடும் இன்னொரு டிராமாவை அவன் பார்க்க இஷ்டப்படவில்லை.ஹாஸ்டல் வாசலில் அவளை இறக்கி விட்டவன், ஒன்றும் சொல்லாது விருட்டென்று போய் விட்டான்.
பழைய ரதி ,மனிதர்களின் உணர்வுகளை கொஞ்சமாவது மதிப்பவள். இப்போது அப்படி இல்லை!என்று தன் மனம் கவர்ந்தவனின் மனதை புரிந்துக் கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாளோ, அன்றே மற்ற அனைவரும் இரண்டாம் பட்சம் தான். அதில் பிரகாஷை ‘கன்சிடர்’ கூட செய்வதில்லை என்பது தான் உண்மை.
பழைய ரதியாய் இருந்திருந்தால், அவளுக்கு தாலி கட்டியவனின் உதாசினத்தை அவமானமாய் கருதியிருப்பாள், ஆனால் இப்போது அவளை எந்த செய்கையும் பாதிக்கவில்லை! தவறு செய்கிறோமோ என்ற சந்தேகம் எல்லாம் அவளுக்கு இல்லை. தான் செய்வது தவறு என்பதை தெரிந்தே செய்து கொண்டிருக்கிறாள்… மேலும் பலவற்றை செய்யும் துணிச்சலையும் வளர்த்தாயிற்று!
மதிவதனியுடன் அரட்டை கச்சேரி ஆரம்பமானது,
“நீ கூட இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லாம மறைச்சிட்டியே டீ!”
வெண்பா செல்லமாய் கோபித்துக் கொண்டாள் தன் தோழியிடம்!
“சஸ்பென்ஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன் தங்கம்! பிகாஸ், ஐயம் யுவர் பெஸ்ட் பிரண்ட் யா!” வெண்பாவிடம் மொத்து வாங்கியவள்,
“ரெண்டு பேரும் ஒண்ணா லண்டன் போறோம், என்ஜாய் பண்றோம்” என முடிக்க…
அதன்படி அடுத்தகட்ட பணிகள் வேகவேகமாய் நடந்தது! ஆபிஸில் லீவுக்கான மனுவை அனுப்புகையில் தான் ரதிக்கு வெண்பாவின் டிரிப் விஷயம் தெரிய வந்தது!
ஆரம்பத்திலேயே விழியனின் விஷயத்தில் ஏதாவது செய்யலாம் என்றிருந்த ரதியை அவள் தந்தையும் பிரகாஷும் வந்து திசை திருப்பி, கெடுத்துவிட்டிருந்தனர். இப்போது விஷயம் கைமீறி போனது போல் இருந்தது…ஆனால் 'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ என்பதாக சரியான ஒரு சந்தர்பத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள் ரதி!
இன்று வெண்பா தன் பிரயாணத்தை பற்றி சொல்கையில் ரதிக்கு ஏக வருத்தம், அதே யோசனையில்,
“நான் இப்படி கேட்க கூடாது, ஆனாலும் நீ இப்ப போய் தான் ஆகணுமா வெண்பா? ஏற்கனவே கல்யாணத்துக்காக எடுத்திருந்த லீவே லாஸ் ஆஃப் பே தானே!”
அவள் கேள்வியில் வெண்பாவே திடுக்கிட்டு பார்க்க,
“…உன்னை விட்டிட்டு இந்த ஆபிஸில் தனியா இருக்கிறது எனக்கும் போர் வெண்பா…அதான்…”
ரதிக்கு வெண்பாவிடம் பேசும் போது மட்டும் இருக்கும் மொத்த திறமையும் வெளிவந்துவிடும்.வெண்பாவுக்கோ ரதியிடம் பேசுகையில் யோசிக்க வேண்டிய மூளை வேலையே செய்யாது!இப்போதும் அவள் பேச்சில் அப்படியே உருகிவிட்டாள் வெண்பா.
“சீக்கிரம் வந்திடுவேன் ரதி. எனக்கும் உன்னை தனியா விட கஷ்டமா தான் இருக்கு!”
“நான் ரதியை பத்திரமா பார்த்துக்குறேன் வெண்பா! நீங்க லண்டன் போய் நல்லா என்ஜாய் பண்ணுங்க” இவர்கள் பேச்சில் இடைபுகுந்து சொன்னான் பிரகாஷ்! கணவனாய் ரதியை நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்ல ஆசை தான் . ஆனால் அதை இங்கே இப்போது சொல்லத் தோன்றவில்லை . எல்லாரிடமும் தானே போய் சொல்ல வேண்டுமா! அன்று கடற்கறையில் நடந்த விஷயங்களுக்கு பிறகு ரதியிடம் இன்று வரை முகம் கொடுத்து கூட பேசவில்லை அவன்!இன்று தான் அவள் இருக்கும் இடம் வந்திருக்கிறான்.ரதியை நேரே பார்ப்பதை தவிர்த்து, வெண்பாவை மட்டுமே பார்த்து பேசினான்!
பிரகாஷ் இப்படி சொன்னது சற்று வித்தியாசமாக பட்டது வெண்பாவுக்கு. ஆனாலும் ஆமோதிப்பதை போல் சிரித்து விட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டாள்!
மதிவதனியுடன் பழையபடி நிறைய நேரம் கிடைத்தது வெண்பாவுக்கு.விசா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தோழிகள் இருவரும் பயணத்துக்கான திட்டங்களை தீட்ட ஆரம்பித்தனர்.
“ஆபிஸ் எப்படி போகுது வெண்பா?அந்த மேல்மாடி காலி எப்படி இருக்கா? இப்பவாவது மாடியில் எதையாவது காய வச்சாளா இல்லையா”
அவள் சொன்ன உவமைக்கு சிரித்தாலும்,
“யாரு அந்த லக்ஷ்மி தானே!ஏன் டீ அவளையே சீண்டுறே! அவ பாட்டுக்கு அவ வேலையை பார்க்குறா! உனக்கென்ன?”
“அவ அப்படி பார்த்திருந்தா , நான் ஏன் டீ இன்னும் அவளை நியாபகம் வச்சி கேட்க போறேன், சரி அவளை விடு, ரதிதேவி எப்படி இருக்காங்க”
“ரதிதேவி இல்லை, ரதி மீனா”
“ஏதோ ஒண்ணு! இப்பவும் உன்னை ஆக்டோபஸ் மாதிரி கெட்டியா பிடிச்சிட்டு இருக்காளா?விழியனுக்கு இது தெரிஞ்சா கோவிச்சுக்க போறார் டீ!”
“சும்மா இரு மதி.உனக்கு அவளை கண்டாளே ஆகாது அதுக்காக இப்படி சொல்லாதே! பாவம் அவ, இப்ப தான் அவங்க அப்பா வேற தவறிட்டார்”
மதிவதனி அமைதியாய் இருக்க,
“ஆனா நம்ம பிரகாஷ் இருக்காரே , இப்ப ரொம்ப க்ளோஸா பழகுறார் ரதி கிட்ட. பார்த்தாலே தெரியுது டீ. ஆபிஸில் வேற எல்லாரும் பேசிக்கிறாங்க.ஸ்ம்திங் நடக்குது டீ ரெண்டு பேருக்கு நடுவில். இவ எதையும் பத்தி என் கிட்ட வாயை திறக்க மாட்றா.”
விழியனா?
அது வெண்பாவின் கணவன் தானே?
இவளுக்கு என்ன பைத்தியமா?
“அவர் வெண்பா வீட்டுக்காரர் தானே?”
அதிர்ச்சியாய் பிரகாஷ் கேட்க , பதிலில்லை அவளிடம்,
“ஏற்கனவே கல்யாணம் ஆனவரையா இன்னமும் காதலிக்கிறேன்னு சொல்றே, ரதி?!”
‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தவளின் செவிட்டில் நாலு அப்பு அப்பலாம் என்றிருந்தது அவனுக்கு! என்ன பெண் இவள்? வாழ்க்கை நெறி என்று ஒன்று இல்லையா?
“இதை சொல்ல உனக்கு வெட்கமாயில்லையா ?ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைண்ட் ரதி! சந்தோஷமா இருக்கிற அவங்க குடும்பத்தில் குழப்பம் செய்யாதே!”
அவனை சீண்டி விட்டது போல் இருந்தது அவனின் பேச்சுக்கள்.பதிலுக்கு முறைத்தவள்,
“என்னை சொல்ல உனக்கு என்ன அதிகாரம் இருக்கு பிரகாஷ்?
இந்த கயிற்றை என் கழுத்தில் கட்டிட்டா என்னை அடக்கணும்னு உனக்கு தோணுதா? அந்த உரிமை எல்லாம் உனக்கு கிடையாது!”
என்ன சொல்வான் ?அவள் மேல் வைத்திருந்த அத்தனை காதலையும் ஒன்றும் இல்லாததை போல் சொல்கிறாளே!
தன் டென்ஷன் நிலைகளை அளவுக்குள் கொண்டு வர, அவளுக்கு எதிர்புறம் திரும்பி தலைக்கோதி நின்றவன், இவள் விஷயத்தில் இனியும் என்ன தான் செய்வது என்றும் யோசித்தான். இப்போது இருக்கும் மனநிலையில் ஒரு உருப்படியான வழியும் மூளைக்கு எட்டிய தூரம் வரையில் புலப்படவில்லை.
இதற்கு மேலும் அவளிடம் வாக்குவாதம் செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை. அது அவனின் குணமும் இல்லை.
“ரதி கிளம்பு போகலாம்”
தான் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம் என்று நினைத்து வந்ததற்கும் இப்போது இங்கு நடந்து கொண்டிருப்பவைகளுக்கும் சற்றும் சமந்தம் இல்லை. அவள் அவன் மனதை சுக்கு நூறாக உடைத்துக் கொண்டிருந்தாள்.இருவரின் வாழ்க்கையில் இனி நன்மைகளுக்கு இடம் இராதா என்ற ஐயம் கூட தோன்றியது பிரகாஷுக்கு! இருக்கும் பிரச்சனை பத்தாது என்பது போல் ,
“இல்லை பிரகாஷ் , நீ மட்டும் கிளம்பு .நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கணும்னு நினைக்கிறேன்!” ஆள் இல்லாத இந்த இடத்தில் தனியே இருக்க போகிறாளாம்… கட்டுப்படுத்தி வைத்த கோபம் எல்லாம் அவனின் மன தடுப்பை தாண்டி விட்டது! இவள் திமிரை அடக்க தனியே விட்டுவிட்டு போனால் தான் என்ன என்ற எண்ணம் கூட வந்து போனது!ரதியை நெருங்கி முரட்டுத்தனமாய் அவள் தோள்களை பற்றியவன் ,
“வார்டன் கிட்ட சொல்லி உன்னை வெளியே கூப்பிட்டு வந்தது நான், மரியாதையா இப்ப கிளம்பு ரதி”
சொல்லியவன் வண்டியை நோக்கி சென்று வேக வேகமாய் அதை ரிவர்ஸ் எடுக்க, அவனின் கோபத்தை உணர்ந்தவள் தாமதிக்காது ஏறிக் கொண்டாள்!
திரும்பும் வழியில் இருவருக்குள்ளும் எந்த பேச்சும் இல்லை. இன்று பிரகாஷிடம் அனைத்தையும் சொல்லிவிட்டது சரி என்று பட்டது ரதிக்கு! இனி என் விஷயத்தில் தலையிட மாட்டான் என தப்பாக கணக்கு போட்டாள், எப்போதும் போல்!
காரில் ஓடிக் கொண்டிருந்த ரேடியோவை நிறுத்தி விட்டான். அதில் வரும் பாடல்களை கேட்டு அவள் செய்துவிடக்கூடும் இன்னொரு டிராமாவை அவன் பார்க்க இஷ்டப்படவில்லை.ஹாஸ்டல் வாசலில் அவளை இறக்கி விட்டவன், ஒன்றும் சொல்லாது விருட்டென்று போய் விட்டான்.
பழைய ரதி ,மனிதர்களின் உணர்வுகளை கொஞ்சமாவது மதிப்பவள். இப்போது அப்படி இல்லை!என்று தன் மனம் கவர்ந்தவனின் மனதை புரிந்துக் கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாளோ, அன்றே மற்ற அனைவரும் இரண்டாம் பட்சம் தான். அதில் பிரகாஷை ‘கன்சிடர்’ கூட செய்வதில்லை என்பது தான் உண்மை.
பழைய ரதியாய் இருந்திருந்தால், அவளுக்கு தாலி கட்டியவனின் உதாசினத்தை அவமானமாய் கருதியிருப்பாள், ஆனால் இப்போது அவளை எந்த செய்கையும் பாதிக்கவில்லை! தவறு செய்கிறோமோ என்ற சந்தேகம் எல்லாம் அவளுக்கு இல்லை. தான் செய்வது தவறு என்பதை தெரிந்தே செய்து கொண்டிருக்கிறாள்… மேலும் பலவற்றை செய்யும் துணிச்சலையும் வளர்த்தாயிற்று!
மதிவதனியுடன் அரட்டை கச்சேரி ஆரம்பமானது,
“நீ கூட இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லாம மறைச்சிட்டியே டீ!”
வெண்பா செல்லமாய் கோபித்துக் கொண்டாள் தன் தோழியிடம்!
“சஸ்பென்ஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன் தங்கம்! பிகாஸ், ஐயம் யுவர் பெஸ்ட் பிரண்ட் யா!” வெண்பாவிடம் மொத்து வாங்கியவள்,
“ரெண்டு பேரும் ஒண்ணா லண்டன் போறோம், என்ஜாய் பண்றோம்” என முடிக்க…
அதன்படி அடுத்தகட்ட பணிகள் வேகவேகமாய் நடந்தது! ஆபிஸில் லீவுக்கான மனுவை அனுப்புகையில் தான் ரதிக்கு வெண்பாவின் டிரிப் விஷயம் தெரிய வந்தது!
ஆரம்பத்திலேயே விழியனின் விஷயத்தில் ஏதாவது செய்யலாம் என்றிருந்த ரதியை அவள் தந்தையும் பிரகாஷும் வந்து திசை திருப்பி, கெடுத்துவிட்டிருந்தனர். இப்போது விஷயம் கைமீறி போனது போல் இருந்தது…ஆனால் 'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ என்பதாக சரியான ஒரு சந்தர்பத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள் ரதி!
இன்று வெண்பா தன் பிரயாணத்தை பற்றி சொல்கையில் ரதிக்கு ஏக வருத்தம், அதே யோசனையில்,
“நான் இப்படி கேட்க கூடாது, ஆனாலும் நீ இப்ப போய் தான் ஆகணுமா வெண்பா? ஏற்கனவே கல்யாணத்துக்காக எடுத்திருந்த லீவே லாஸ் ஆஃப் பே தானே!”
அவள் கேள்வியில் வெண்பாவே திடுக்கிட்டு பார்க்க,
“…உன்னை விட்டிட்டு இந்த ஆபிஸில் தனியா இருக்கிறது எனக்கும் போர் வெண்பா…அதான்…”
ரதிக்கு வெண்பாவிடம் பேசும் போது மட்டும் இருக்கும் மொத்த திறமையும் வெளிவந்துவிடும்.வெண்பாவுக்கோ ரதியிடம் பேசுகையில் யோசிக்க வேண்டிய மூளை வேலையே செய்யாது!இப்போதும் அவள் பேச்சில் அப்படியே உருகிவிட்டாள் வெண்பா.
“சீக்கிரம் வந்திடுவேன் ரதி. எனக்கும் உன்னை தனியா விட கஷ்டமா தான் இருக்கு!”
“நான் ரதியை பத்திரமா பார்த்துக்குறேன் வெண்பா! நீங்க லண்டன் போய் நல்லா என்ஜாய் பண்ணுங்க” இவர்கள் பேச்சில் இடைபுகுந்து சொன்னான் பிரகாஷ்! கணவனாய் ரதியை நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்ல ஆசை தான் . ஆனால் அதை இங்கே இப்போது சொல்லத் தோன்றவில்லை . எல்லாரிடமும் தானே போய் சொல்ல வேண்டுமா! அன்று கடற்கறையில் நடந்த விஷயங்களுக்கு பிறகு ரதியிடம் இன்று வரை முகம் கொடுத்து கூட பேசவில்லை அவன்!இன்று தான் அவள் இருக்கும் இடம் வந்திருக்கிறான்.ரதியை நேரே பார்ப்பதை தவிர்த்து, வெண்பாவை மட்டுமே பார்த்து பேசினான்!
பிரகாஷ் இப்படி சொன்னது சற்று வித்தியாசமாக பட்டது வெண்பாவுக்கு. ஆனாலும் ஆமோதிப்பதை போல் சிரித்து விட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டாள்!
மதிவதனியுடன் பழையபடி நிறைய நேரம் கிடைத்தது வெண்பாவுக்கு.விசா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தோழிகள் இருவரும் பயணத்துக்கான திட்டங்களை தீட்ட ஆரம்பித்தனர்.
“ஆபிஸ் எப்படி போகுது வெண்பா?அந்த மேல்மாடி காலி எப்படி இருக்கா? இப்பவாவது மாடியில் எதையாவது காய வச்சாளா இல்லையா”
அவள் சொன்ன உவமைக்கு சிரித்தாலும்,
“யாரு அந்த லக்ஷ்மி தானே!ஏன் டீ அவளையே சீண்டுறே! அவ பாட்டுக்கு அவ வேலையை பார்க்குறா! உனக்கென்ன?”
“அவ அப்படி பார்த்திருந்தா , நான் ஏன் டீ இன்னும் அவளை நியாபகம் வச்சி கேட்க போறேன், சரி அவளை விடு, ரதிதேவி எப்படி இருக்காங்க”
“ரதிதேவி இல்லை, ரதி மீனா”
“ஏதோ ஒண்ணு! இப்பவும் உன்னை ஆக்டோபஸ் மாதிரி கெட்டியா பிடிச்சிட்டு இருக்காளா?விழியனுக்கு இது தெரிஞ்சா கோவிச்சுக்க போறார் டீ!”
“சும்மா இரு மதி.உனக்கு அவளை கண்டாளே ஆகாது அதுக்காக இப்படி சொல்லாதே! பாவம் அவ, இப்ப தான் அவங்க அப்பா வேற தவறிட்டார்”
மதிவதனி அமைதியாய் இருக்க,
“ஆனா நம்ம பிரகாஷ் இருக்காரே , இப்ப ரொம்ப க்ளோஸா பழகுறார் ரதி கிட்ட. பார்த்தாலே தெரியுது டீ. ஆபிஸில் வேற எல்லாரும் பேசிக்கிறாங்க.ஸ்ம்திங் நடக்குது டீ ரெண்டு பேருக்கு நடுவில். இவ எதையும் பத்தி என் கிட்ட வாயை திறக்க மாட்றா.”