Mm.. aamaaPaavam Prakash.
Ennikku dhaan Rathi maara poralo
pikaaasu unaku ithu thevaya.....அடுத்த நாள் சபாபதி அவள் நினைத்தது போல் ஹாஸ்டல் சென்று அவள் தங்கியிருந்த அறையை காலி செய்ய ஏனையவற்றை செய்தார். சற்று நேரத்தில் ரதிக்கு போனும் வந்தது அவரிடமிருந்து.
“என்னமா ரதி, நீ இன்னும் ரூம் திருப்பித் தரலையாமே! வார்டன் சொல்றாங்க. ஏன் மா?”
இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லை.
“ஆமா மாமா, சீக்கிரம் காலி செய்திடுறேன்”
அவளுக்கு சாரதியிடம் பயமா இல்லை மரியாதையா என்னவென்று சொல்லமுடியவில்லை. ஆனால் அவருக்கு சில விஷயங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டாள் நல்லது என்ற குள்ளநரித்தனம் நிறையவே செய்தாள். பிராகஷை தனியாக சமாளிப்பது அவளுக்கு எளிது. ஆனால் இந்த இருவர் கூட்டணி சேர்ந்தால் தன்னால் முடியாதோ என்ற சந்தேகம்…
இதை எல்லாம் மனதில் கொண்டே அவரிடம் அடங்கி போவது. பிரகாஷாய் போய் வாழ முடியாது என்று சொல்வது வேறு, ஆனால் இன்னொரு முறை நாமே போய் இவரிடம் இதனை பற்றிய எந்த பேச்சும் வைத்துக் கொள்ள கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள் ரதிமீனா.அவர் யோசனையை கலைத்தது அவர் குரல்.
“நான் அட்வான்ஸ் எல்லாம் திரும்ப வாங்கிட்டேன் ரதி. உன் அக்கவுண்டில் போட்டிடுறேன், நீ சாமானையெல்லாம் வந்து எடுத்துக்கோ!” இடைவெளி விட்டவர்,
“இல்லை நானே கொண்டு வந்து வைக்கட்டுமா?” என்க, தலையில் அடித்து கொண்டாள்.
“மாமா உங்க கன்சல்டேஷனுக்காக எத்தனை பேர் ஹாஸ்பிட்டலில் காத்திருப்பாங்க? இதையெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீங்க ஊருக்கு கிளம்புற வழியை பாருங்க!”
நீண்ட நாட்களுக்கு பிறகு அத்தனை சமாதானமாய் அந்த பெண் அவரிடம் பேச, மனதில் சிரித்துக் கொண்டார். நீ யாருன்னு எனக்கு தெரியும் ரதி! சாரதி சொன்னதை போல் அவளின் அறையை காலி செய்து கொண்டு வந்து பிதரகாஷின் வீட்டில் வைத்துவிட்டுதான் கோவை சென்றார்.
அது ஞாயிறு என்பதால் அவனும் வீட்டில் தானிருந்தான். ரதி போனில் பல ஹாஸ்டல்களை தொடர்பு கொண்டு கேட்க , ஒன்றிலும் வாடகைக்கு அறைகள் இல்லை என்றே பதில் வந்தது போலும்!
பிரகாஷ் நடக்கும் கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி இருக்க, அவனுக்கு அவள் பேச்சின் மூலம் எல்லாமே புரிந்தது!
“ரதி என்னை திரும்ப திரும்ப சொல்ல வைக்காதே நீ தாராளமா இந்த வீட்டில் தங்கிக்கோ! என்னால் உனக்கு எந்த தொந்திரவும் வராது!இத்தனை தூரம் சொல்ற என்னை நீ கொஞ்சமாவது நம்பலாம்”
அன்றே இதை சொன்னான் தான் , ஆனால் ரதிக்கு சிறிதும் அதில் உடன்பாடு இல்லை! இப்போதும் மறுப்பாய் எதையோ சொல்ல ஆரம்பிக்க,
“ஜஸ்ட் டோண்ட் ஆர்கியூ ! இந்த விஷயத்திலாவது நான் சொல்றதை கேளு” என்றபடி இரண்டு அறைகள் இருந்த அந்த வீட்டில் அவளது சாமான்களை ஒரு அறையில் கொண்டு வைத்தான்! அந்த அறை காலியாக இருந்தது. படுப்பது கூட கட்டாந்தரை என்னும் ரீதியில்!
“உனக்கு படுக்க கட்டில் வேணும்னா வாங்கிடலாம் ரதி”அவளுக்காக அவன் யோசித்து சொல்ல,
“இல்லை பிரகாஷ் ஐயம் ஃபைன் வித் திஸ். இன்னும் கொஞ்ச நாள் தானே!” ஏதாவது இடம் கிடைத்தால் போய்விடவேண்டும் என்ற மனதில் எண்ணி சொன்னாள். அவன் முகம் போன போக்கை அவள் பார்க்கவில்லை.
அதை பார்த்திருந்தால் அவன் மனதின் வலி அவளுக்கு கொஞ்சமாவது தெரிந்திருக்கும்!