வணக்கம் மக்களே,
ஜூன் 14 தான் தேடல் போட்டிக்கான கடைசி தினம்.. அதுக்குள்ள கதையை முடிக்கணும். அவசரமா எபிஸ் போடுறேன். படிச்சு பார்த்திட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க...
29
“ரதி உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்! இப்படி ஒரு பாவச் செயலை செய்ய எப்படி மா உனக்கு தோணுது! அந்த விழியன் பையன் பாவம், அவனை விட்டிடு! ஒரு குருவி கூட்டை கலைக்கிறதே பாவ காரியம்னு சொல்ற மதத்தில் பிறந்திட்டு இப்படி அடுத்தவங்க குடும்பத்தை கலைக்கிறது மகா பாவம் ரதி!”
கண்களில் கண்ணீருடன் அவள் தலையை வருடிக்கொடுத்தார் சங்கர நாராயணன்.
“பிரகாஷ் நல்லவன். அவன் கூட வாழ்க்கையை வாழ பாரு. சாரதி உனக்கு ஒரு அப்பாவா எப்பவும் துணை இருப்பான். உன்னை சுற்றி இத்தனை நல்லவங்களை விட்டுச் சென்றும், இப்படி எதிர்வாத எண்ணம் எப்படி உன் மனசில்?”
குழுங்கி குழுங்கி அழுதார். “அப்பா அப்பா அழாதீங்க பா” என்றபடி தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தாள் அன்று…! இன்றும் அதை நினைத்து பார்க்க அதே அழுகை வந்தது. கனவில் சங்கர நாராயணன் சொன்னது இப்போதும் காதில் எதிரொலித்தது…
தன்னை ஆசையாய் பெற்று வளர்த்த அவரை அவர் இறந்த பின்பும் இப்படி சோதிக்க தான் வேண்டுமா?விழியன் சொன்னது சரி தானே! அவளை சுற்றி அனைவரையும் அழ வைத்துக் கொண்டிருக்கிறாளே!
ரதி அறையில் அடைந்து கொண்டு அந்த கனவையும் , சற்று முன் நடந்தவைகளை யோசித்துக் கொண்டிருந்தாள். அதிகம் இதை பற்றி யோசிக்க தலை வலிப்பதை போல் இருந்தது, அப்படியே தரையில் படுத்தவள் உறங்கி போனாள்.அறைக்குள் சென்றவள் அதன் பின் எந்த சத்தமுமின்றி இருக்கவும், பிரகாஷ் சந்தேகமாய் கதவை தட்டி பார்ர்தான். எந்த பதிலும் இல்லாது என்னவோ ஏதோ என்று அறைக்குள் வந்தான்.
அவள் இங்கு வந்த நாள் முதல் அவன் வந்திடாத அறை அது. மின்விசிறி கூட ஓடாமல், அத்தனை புழுக்கத்தில் தரையில் படுத்திருந்தாள். ஊரில் எல்லார் நிம்மதியும் கெடுத்திட்டு என்ன செய்றா? அவனுக்கு எரிச்சலின் அளவு இன்னமும் குறையவில்லை! ‘ரதி’ என்றழைத்தான், அவளிடம் அசைவே இல்லை. அவளை நெருங்கி பார்க்க, கன்னத்தில் கண்ணீர் தடங்கள்.
‘அழுதிருக்கிறாளா?இவளா?’
தூங்கிவிட்டிருந்தாள். தூங்கும் அவளை பார்த்துக் கொண்டு சற்று நேரம் அங்கு நின்றான்.இன்று விழியன் பேசிய பேச்சுக்கள் அவளையும் பாதித்ததா? அவள் மேல் இருந்த எரிச்சலின் அளவு அப்படியே இல்லை இப்போது. பாவம் தான். சிறுபிள்ளை போல் செய்த தவறின் வீரியம் புரியாது நடந்து கொண்டிருக்கிறாள். இனியாவது மாறுவாளா? அவளின் மாற்றம் மற்றுமே நன்மை பயக்கும்!
ரேணுகாவுக்கு அத்தனை வருத்தம். தன் ஒற்றை மகனின் வாழ்க்கை
இப்படி அல்லோல் பட்டுக் கொண்டிருப்பதை ஏந்த தாயால் தான் தாங்கிக் கொள்ள முடியும்? இந்த உலகத்தில் அவளுக்கென்று இருக்கும் ஒரே ஒருவன் அவன் தானே! மனதில் ஆயிரம் பாரம் ஏறியிருந்தாலும் அழுது கரையாமல் அழுத்தமாகவே இருந்தாள்.
“ நாம போய் வெண்பாவை கூப்பிட்டு வரலாம் விழியன். யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்து தான் போகணும். அவ சொன்னா கேட்க மாட்டேங்கிறா, நீயாவது அம்மா சொல்றதை கேளு பா”
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்னை இந்த அளவுக்கு கூட அவளால் நம்ப முடியவில்லையா? ஒரு வார்த்தை கேட்க கூட அவள் முனையவில்லை.அவன் போன் செய்தாலும் எடுப்பதில்லை. இப்போதும் நானே இறங்கி போகத்தான் வேண்டுமா?
எப்போதும் போல் ரேணுகா சொன்னதை சாதித்தாள்.அன்றும் பேசி பேசி அவள் தான் மகனை கிளப்பியது! விழியன் ரேணுகாவுடன் திருச்சிக்கு பயணப்பட்டு கொண்டிருந்தான். அலுவலகத்தில் பல வேலைகள். அவர்கள் எந்த காரியத்துக்காக வெளிநாடு அனுப்பினார்களோ அதனை சரியாய் முடிக்காமல் லீவ் கேட்க முடியாது. அதன்படி இந்த பிரச்சனைகளின் ஊடே தன் பணியையும் முடித்தவன் அடுத்த ஒரு வாரத்திற்கு லீவும் போட்டு விட்டு இப்போது தன் காரில் பயணப் பட்டுக் கொண்டிருந்தான்.
தன் கண்வனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் வெண்பா. ‘எதுக்கு அவனையே நினைக்கிறேன்?!’
அதை சிரமபட்டு திசை திருப்பினாலும் பயனில்லை. ம்ம்ச்… ‘அவனும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறானோ?’
‘எப்படி இன்னமும் ஏமாற்றலாம்னு திட்டம் போடுவானோ என்னவோ?’
‘எதுக்கு டா எங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் கெடுத்தே? அவளுக்கு என்ன குறை? அவளையே திருமணம் செய்திருக்கலாம் தானே?’
‘அதை அவன் கிட்ட பேசினா தானெ புரியும் உனக்கு?’ மனசாட்சி எடுத்து தந்தது!எல்லார் வாயையும் அடைத்தது போல் அதனையும் அடக்கியவள்,
‘என்னை கல்யாணம் செஞ்சிட்டு அவளை ஏமாத்துறே! இப்ப நமக்குள்ள பிரச்சனைன்னு பழைய உறவை புதுப்பிக்கிறியா?’
கொஞ்சம் கூடியிருந்தாலும் முத்திபோயிருக்கும் வெண்பாவுக்கு!எத்தனை குழப்ப முடியுமோ அத்தனை சிக்கலாக்கி கொண்டிருந்தாள் அந்த பிரச்சனையை!
அவன் மாமன் வீடு வந்ததும் அவசரமாய் வண்டியை நிறுத்திவிட்டு மனைவியை காண சென்றான். எல்லாரும் அவனுக்கு வழிவிட்டு அவன் செயலை பார்த்தபடி நின்றனர். அவள் அறையில் சென்று பார்க்க அங்கில்லை.பின்கட்டில் சென்று அவன் பார்க்க பொற்பாவைக்கு முடி பின்னிவிட்டுக் கொண்டிருந்தாள்.இவனை கண்டுவிட்ட தமிழ்,
“வா விழியன்” என்க, திரும்பி அவனை பார்த்த வெண்பாவின் கண்ணில் தெரிந்தது என்னவென்பது இவனுக்கு புரியவில்லை.
தமிழ் பொற்பாவையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றதும் இவனுக்கு எதிர் பக்கம் திரும்பிக் கொண்டாள் வெண்பா, அவனை உதாசினப்படுத்துவது போல்.
“வெண்பா”
பதிலில்லை.
“ஏன் டீ,எவளோ எதையோ சொன்னா நம்பிடுவியா!அவ்வளவுதான் நீ என் மேல் வச்சியிருக்கும் நம்பிக்கையா?
அதற்கும் மெளனமே பதில்.
“முதலில் என்னை பாரு.திரும்பு டி”
அவள் தோளை பற்றி தன்புறம் திருப்ப, அவன் கையை தட்டிவிட்டாள். அவனை முறைத்தபடி,
“அவ சொன்னதை மட்டும் நம்ப நான் என்ன லூசா? நீயும் தானே பொய் சொன்னே! நான் உங்க ரெண்டு பேர் போட்டோவையும் பார்த்து தான் முழுசா நம்பினேன்!”
கண்கள் கலங்க ஆரம்பித்தது.எதிர்மறை எண்ணம் உடலை பலகீனம் ஆக்கும் வல்லமையுடையது. மூளை சொல்வதை உடம்பு உணர்த்தும்.மூளை என்னும் எஜமானியை மனம் என்னும் வேலைக்காரன் அடிக்கடி மீறும்.வெண்பாவுக்கு இதெல்லாமே நடந்து கொண்டிருந்தது.விழியனை வேண்டாம் என்று இத்தனை நாளும் ஒதுக்கி வைத்தவளுக்கு இப்போது அவனை நேரில் காணவும் அதே போல் நினைக்க முடியவில்லை.ஆனால் அவனை மன்னிக்கவும் முடியவில்லை.
மனநிலை ஒரு நிலையாய் இல்லை வெண்பாவுக்கு. ‘மூட் ஸ்விங்’பலன்கள் தான் அவை.அவள் மிகவும் விரும்பும் அவளின் அன்னை வீடு கூட இப்போது அன்னியமாக பட்டது.உள்ளத்தில் உள்ள குழப்பமும் உடலில் திடீரென்று தோன்றிய எதேதோ மாற்றங்கள் எல்லாமும் சேர்ந்து அவளை படுத்தியெடுத்து.
“அதை பத்தி நீ என்கிட்ட கேட்க வேண்டாமா வெண்பா?”
“எதுக்கு கேட்கணும் விழியன் ? அதான் என் கண்ணால் பார்த்தேனே!”
அவன் எதுவோ சொல்ல வர ,
“உன் கிட்ட பேச இஷ்டமில்லைன்னு தானே உன் போனை எடுக்காம விட்டேன்.இப்ப எதுக்கு இப்படி நேரில் வந்து என்னை டார்சர் பண்றே?சே…”
திரும்பி வேகமாய் வீட்டினுள் செல்ல அந்த பின்கட்டு வாசல் படியில் காலை வைக்க, நிலை தடுமாறி கீழே விழப் போனாள். தலை சுற்றியதோ! முடியிருந்த தன் கண்களை திறந்து,எங்கே இருக்கிறேன் என்று அவள் பார்க்க, அவன் அவளை தன் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தான்…
ஜூன் 14 தான் தேடல் போட்டிக்கான கடைசி தினம்.. அதுக்குள்ள கதையை முடிக்கணும். அவசரமா எபிஸ் போடுறேன். படிச்சு பார்த்திட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க...
29
“ரதி உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்! இப்படி ஒரு பாவச் செயலை செய்ய எப்படி மா உனக்கு தோணுது! அந்த விழியன் பையன் பாவம், அவனை விட்டிடு! ஒரு குருவி கூட்டை கலைக்கிறதே பாவ காரியம்னு சொல்ற மதத்தில் பிறந்திட்டு இப்படி அடுத்தவங்க குடும்பத்தை கலைக்கிறது மகா பாவம் ரதி!”
கண்களில் கண்ணீருடன் அவள் தலையை வருடிக்கொடுத்தார் சங்கர நாராயணன்.
“பிரகாஷ் நல்லவன். அவன் கூட வாழ்க்கையை வாழ பாரு. சாரதி உனக்கு ஒரு அப்பாவா எப்பவும் துணை இருப்பான். உன்னை சுற்றி இத்தனை நல்லவங்களை விட்டுச் சென்றும், இப்படி எதிர்வாத எண்ணம் எப்படி உன் மனசில்?”
குழுங்கி குழுங்கி அழுதார். “அப்பா அப்பா அழாதீங்க பா” என்றபடி தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தாள் அன்று…! இன்றும் அதை நினைத்து பார்க்க அதே அழுகை வந்தது. கனவில் சங்கர நாராயணன் சொன்னது இப்போதும் காதில் எதிரொலித்தது…
தன்னை ஆசையாய் பெற்று வளர்த்த அவரை அவர் இறந்த பின்பும் இப்படி சோதிக்க தான் வேண்டுமா?விழியன் சொன்னது சரி தானே! அவளை சுற்றி அனைவரையும் அழ வைத்துக் கொண்டிருக்கிறாளே!
ரதி அறையில் அடைந்து கொண்டு அந்த கனவையும் , சற்று முன் நடந்தவைகளை யோசித்துக் கொண்டிருந்தாள். அதிகம் இதை பற்றி யோசிக்க தலை வலிப்பதை போல் இருந்தது, அப்படியே தரையில் படுத்தவள் உறங்கி போனாள்.அறைக்குள் சென்றவள் அதன் பின் எந்த சத்தமுமின்றி இருக்கவும், பிரகாஷ் சந்தேகமாய் கதவை தட்டி பார்ர்தான். எந்த பதிலும் இல்லாது என்னவோ ஏதோ என்று அறைக்குள் வந்தான்.
அவள் இங்கு வந்த நாள் முதல் அவன் வந்திடாத அறை அது. மின்விசிறி கூட ஓடாமல், அத்தனை புழுக்கத்தில் தரையில் படுத்திருந்தாள். ஊரில் எல்லார் நிம்மதியும் கெடுத்திட்டு என்ன செய்றா? அவனுக்கு எரிச்சலின் அளவு இன்னமும் குறையவில்லை! ‘ரதி’ என்றழைத்தான், அவளிடம் அசைவே இல்லை. அவளை நெருங்கி பார்க்க, கன்னத்தில் கண்ணீர் தடங்கள்.
‘அழுதிருக்கிறாளா?இவளா?’
தூங்கிவிட்டிருந்தாள். தூங்கும் அவளை பார்த்துக் கொண்டு சற்று நேரம் அங்கு நின்றான்.இன்று விழியன் பேசிய பேச்சுக்கள் அவளையும் பாதித்ததா? அவள் மேல் இருந்த எரிச்சலின் அளவு அப்படியே இல்லை இப்போது. பாவம் தான். சிறுபிள்ளை போல் செய்த தவறின் வீரியம் புரியாது நடந்து கொண்டிருக்கிறாள். இனியாவது மாறுவாளா? அவளின் மாற்றம் மற்றுமே நன்மை பயக்கும்!
ரேணுகாவுக்கு அத்தனை வருத்தம். தன் ஒற்றை மகனின் வாழ்க்கை
இப்படி அல்லோல் பட்டுக் கொண்டிருப்பதை ஏந்த தாயால் தான் தாங்கிக் கொள்ள முடியும்? இந்த உலகத்தில் அவளுக்கென்று இருக்கும் ஒரே ஒருவன் அவன் தானே! மனதில் ஆயிரம் பாரம் ஏறியிருந்தாலும் அழுது கரையாமல் அழுத்தமாகவே இருந்தாள்.
“ நாம போய் வெண்பாவை கூப்பிட்டு வரலாம் விழியன். யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்து தான் போகணும். அவ சொன்னா கேட்க மாட்டேங்கிறா, நீயாவது அம்மா சொல்றதை கேளு பா”
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்னை இந்த அளவுக்கு கூட அவளால் நம்ப முடியவில்லையா? ஒரு வார்த்தை கேட்க கூட அவள் முனையவில்லை.அவன் போன் செய்தாலும் எடுப்பதில்லை. இப்போதும் நானே இறங்கி போகத்தான் வேண்டுமா?
எப்போதும் போல் ரேணுகா சொன்னதை சாதித்தாள்.அன்றும் பேசி பேசி அவள் தான் மகனை கிளப்பியது! விழியன் ரேணுகாவுடன் திருச்சிக்கு பயணப்பட்டு கொண்டிருந்தான். அலுவலகத்தில் பல வேலைகள். அவர்கள் எந்த காரியத்துக்காக வெளிநாடு அனுப்பினார்களோ அதனை சரியாய் முடிக்காமல் லீவ் கேட்க முடியாது. அதன்படி இந்த பிரச்சனைகளின் ஊடே தன் பணியையும் முடித்தவன் அடுத்த ஒரு வாரத்திற்கு லீவும் போட்டு விட்டு இப்போது தன் காரில் பயணப் பட்டுக் கொண்டிருந்தான்.
தன் கண்வனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் வெண்பா. ‘எதுக்கு அவனையே நினைக்கிறேன்?!’
அதை சிரமபட்டு திசை திருப்பினாலும் பயனில்லை. ம்ம்ச்… ‘அவனும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறானோ?’
‘எப்படி இன்னமும் ஏமாற்றலாம்னு திட்டம் போடுவானோ என்னவோ?’
‘எதுக்கு டா எங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் கெடுத்தே? அவளுக்கு என்ன குறை? அவளையே திருமணம் செய்திருக்கலாம் தானே?’
‘அதை அவன் கிட்ட பேசினா தானெ புரியும் உனக்கு?’ மனசாட்சி எடுத்து தந்தது!எல்லார் வாயையும் அடைத்தது போல் அதனையும் அடக்கியவள்,
‘என்னை கல்யாணம் செஞ்சிட்டு அவளை ஏமாத்துறே! இப்ப நமக்குள்ள பிரச்சனைன்னு பழைய உறவை புதுப்பிக்கிறியா?’
கொஞ்சம் கூடியிருந்தாலும் முத்திபோயிருக்கும் வெண்பாவுக்கு!எத்தனை குழப்ப முடியுமோ அத்தனை சிக்கலாக்கி கொண்டிருந்தாள் அந்த பிரச்சனையை!
அவன் மாமன் வீடு வந்ததும் அவசரமாய் வண்டியை நிறுத்திவிட்டு மனைவியை காண சென்றான். எல்லாரும் அவனுக்கு வழிவிட்டு அவன் செயலை பார்த்தபடி நின்றனர். அவள் அறையில் சென்று பார்க்க அங்கில்லை.பின்கட்டில் சென்று அவன் பார்க்க பொற்பாவைக்கு முடி பின்னிவிட்டுக் கொண்டிருந்தாள்.இவனை கண்டுவிட்ட தமிழ்,
“வா விழியன்” என்க, திரும்பி அவனை பார்த்த வெண்பாவின் கண்ணில் தெரிந்தது என்னவென்பது இவனுக்கு புரியவில்லை.
தமிழ் பொற்பாவையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றதும் இவனுக்கு எதிர் பக்கம் திரும்பிக் கொண்டாள் வெண்பா, அவனை உதாசினப்படுத்துவது போல்.
“வெண்பா”
பதிலில்லை.
“ஏன் டீ,எவளோ எதையோ சொன்னா நம்பிடுவியா!அவ்வளவுதான் நீ என் மேல் வச்சியிருக்கும் நம்பிக்கையா?
அதற்கும் மெளனமே பதில்.
“முதலில் என்னை பாரு.திரும்பு டி”
அவள் தோளை பற்றி தன்புறம் திருப்ப, அவன் கையை தட்டிவிட்டாள். அவனை முறைத்தபடி,
“அவ சொன்னதை மட்டும் நம்ப நான் என்ன லூசா? நீயும் தானே பொய் சொன்னே! நான் உங்க ரெண்டு பேர் போட்டோவையும் பார்த்து தான் முழுசா நம்பினேன்!”
கண்கள் கலங்க ஆரம்பித்தது.எதிர்மறை எண்ணம் உடலை பலகீனம் ஆக்கும் வல்லமையுடையது. மூளை சொல்வதை உடம்பு உணர்த்தும்.மூளை என்னும் எஜமானியை மனம் என்னும் வேலைக்காரன் அடிக்கடி மீறும்.வெண்பாவுக்கு இதெல்லாமே நடந்து கொண்டிருந்தது.விழியனை வேண்டாம் என்று இத்தனை நாளும் ஒதுக்கி வைத்தவளுக்கு இப்போது அவனை நேரில் காணவும் அதே போல் நினைக்க முடியவில்லை.ஆனால் அவனை மன்னிக்கவும் முடியவில்லை.
மனநிலை ஒரு நிலையாய் இல்லை வெண்பாவுக்கு. ‘மூட் ஸ்விங்’பலன்கள் தான் அவை.அவள் மிகவும் விரும்பும் அவளின் அன்னை வீடு கூட இப்போது அன்னியமாக பட்டது.உள்ளத்தில் உள்ள குழப்பமும் உடலில் திடீரென்று தோன்றிய எதேதோ மாற்றங்கள் எல்லாமும் சேர்ந்து அவளை படுத்தியெடுத்து.
“அதை பத்தி நீ என்கிட்ட கேட்க வேண்டாமா வெண்பா?”
“எதுக்கு கேட்கணும் விழியன் ? அதான் என் கண்ணால் பார்த்தேனே!”
அவன் எதுவோ சொல்ல வர ,
“உன் கிட்ட பேச இஷ்டமில்லைன்னு தானே உன் போனை எடுக்காம விட்டேன்.இப்ப எதுக்கு இப்படி நேரில் வந்து என்னை டார்சர் பண்றே?சே…”
திரும்பி வேகமாய் வீட்டினுள் செல்ல அந்த பின்கட்டு வாசல் படியில் காலை வைக்க, நிலை தடுமாறி கீழே விழப் போனாள். தலை சுற்றியதோ! முடியிருந்த தன் கண்களை திறந்து,எங்கே இருக்கிறேன் என்று அவள் பார்க்க, அவன் அவளை தன் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தான்…
Last edited: