வணக்கம் மக்களே, என் கதையை இத்தனை நாள் படித்து likes comments மூலம் உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி.
இது தான் ஃபைனல் எபி.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
34
என்ன சொல்கிறாள்? மனதை கூறு போட்டு அறுத்துவிட்டு , தவறாக செய்தேன் என்கிறாள்?இவள் மனுஷி தானா?
‘உனக்கு எங்கே போச்சு டி புத்தி’மனசாட்சி சமையம் பார்த்து கேள்வி கேட்டது!இத்தனை எண்ணங்கள் மனதில் ஓட,இறுக்கமாய் தன் முகத்தை வைத்திருந்தாள் வெண்பா.
மறுபடியும் ரதி “வெண்பா” என்று எதையோ சொல்ல ஆரம்பிக்க,
“நான் உனக்கு என்ன டி பாவம் செய்தேன்?இப்படி இல்லாத பொய்யை சொல்லி என் வாழ்க்கையை கெடுத்திட்டியே ரதி! உன்னை எல்லாம் பிரண்டுன்னு நினைச்சு விழியன் மட்டும் ஏமாறலை, நானும் தான் சீரழிஞ்சிட்டேன்!ஏன் இப்படி செஞ்சே ரதி?!”
எதையோ சொல்ல வாயெடுத்தவளை கையால் தடுத்து,
“இப்போ உன்னை மன்னிச்சிட்டா நான் இழந்த சந்தோஷம் எல்லாம் திரும்ப வந்திடுமா?! ச்சே உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு” சொன்னவள் விறுவிறுவென்று மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
ரதியின் மனதை கொன்றது அவள் சொன்ன வார்த்தைகள்.அவர்கள் வாழ்க்கையை கெடுத்தே தீர வேண்டும் என்றபோது தோன்றாத குற்ற உணர்வு இப்போது அதிகமாய் தோன்றியது.
“வெண்பா…வெண்பா கொஞ்சம் நில்லு” ரதி சொன்னது எதுவும் அவள் செவிக்கு எட்டியிருந்தாலும், கேட்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை.தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் வெண்பா.
ரேணுகாவும் இவளுடன் சேர்ந்து பல முறை மருமகளை அழைத்து பார்க்க, அவள் இவர்கள் இருந்த பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. ரேணுகா இதற்கு மேல் என்ன என்பதாய் செய்வதறியாது நிற்க,
“ரதி செய்தது எல்லாம் தப்பு தான்,அதுக்கு பிராயச்சித்தம் கிடையாது. ஆனா இப்ப சத்தியமா செய்த தப்பை அவ உணர்ந்திட்டா மா. நீங்க அவளை மன்னிக்கணும்”
ரதியின் கையை பற்றி ரேணுகாவிடம் மன்னிப்பு வேண்டுவதை போல் அவள் காலில் சட்டென்று விழுந்துவிட்டான் பிரகாஷ்.பெரியவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரதி செய்துவிட்ட விஷயங்கள் எவராலும் மன்னிக்க முடியாதவை என்பது தெரியும் பிரகாஷுக்கும்,கஷ்டமான காரியம் என்பதையும் அவன் அறிவான்.ஆனாலும் வெண்பாவின் தாய்மை நிலையை கண்ட பின் அவனுள் ஒரு சிறு நம்பிக்கை.வெண்பா விழியனுக்கிடையே எந்த பெரிய பிரச்சனையும் இனியும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பினான்.
“தம்பி எழுந்திரு பா…”
“எங்களை மன்னிச்சிடுங்க மா”
“அந்த பேச்சை விடு பா…நல்லா இருங்க இரண்டு பேரும்”
ஆசி வழங்குவதை போல அறிவுரையும் சொன்னாள்.
“பிரகாஷோட நல்லபடியா குடும்பம் நடத்துற வழியை பாரு டி ரதி”
அத்தனை நேரமும் இருந்த மனக்குமுறல் நொடியில் அகன்றுவிட்டதை போல் தோன்றியது ரேணுகாவுக்கு.இந்த ரதி இப்போவாவது வந்து உண்மையை சொன்னாலே என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.மனதில் ஆயிரம் எண்ணங்கள் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும்.
வாய் இவர்களுக்கு அறிவுரை சொன்னாலும், மனம் தன் மருமகளை வசை பாடிக் கொண்டிருந்தது.
‘உனக்கு நல்லா வேணும்டி, நானும் அவனும் எத்தனை தூரம் சொன்னோம் ? நம்பத் தோன்றியதா?இதுக்கு தான் குடும்பத்தில் இருக்கிறவங்க பேச்சையும் அப்பப்ப கேட்கணும்!’
கனத்த மெளனம் அவ்விடத்தில். பிரகாஷ் அதை கலைப்பதை போல்,
“அப்போ நாங்க கிளம்புறோம் மா”
“கொஞ்சம் இருங்க” என்று உள்ளே சென்றாள் ரேணுகா. திரும்பி வருகையில் ஒரு தாம்பாளம்.அதில் பழம், பூ குங்குமம் எல்லாம் எடுத்து கொண்டு வந்தாள்.
ரேணுகா குங்குமத்தை எடுத்து ரதியின் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்து விட்டாள். ‘இந்த பெண்ணிற்கு வந்த நல்ல புத்தி நிலைக்க வேண்டும்’ என்ற வேண்டுதலோடு! ஆனது ஆகிப்போனது , இனியும் பகைமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது ரேணுகாவின் எண்ணம்.அவள் வயதுக்கும் அனுபவத்துக்கும் அது சாத்தியமும் ஆனது.ஆனால் வெண்பாவிடம் அதை எதிர்பார்க்க முடியாதே! அவர்கள் இருவரும் புறப்பட்டதும்,மேலே பூட்டியிருந்த அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கோவிலுக்கு கிளம்பி போனாள் ரேணுகா.
வீடு போகிற வழி முழுவதும் ரதி எதுவும் பேசவில்லை. நடந்து முடிந்த விஷயங்களில் மிகவும் ரணப்பட்டிருக்கிறாள் என்பது புரிந்தது பிரகாஷுக்கு! வீட்டிற்கு வந்த பிறகும் அவள் அறைக்குள் தனியே முடங்கி கொண்டாள்.இருவருக்கும் இரவு உணவு தயாரித்தவன் அவள் அறை வாசலிலிருந்து பல முறை அழைத்தும் அவள் வெளி வரவில்லை.இவனே அவள் அறைக்குள் போக அங்கு அவள் கால்களை மடித்து அதில் தலை கவிழ்ந்திருந்தாள்.அந்த காட்சியே பிரகாஷின் மனதை பிசைந்தது.இப்படி ஒரு துன்பத்தில் வலிய போய் மாட்டிக் கொண்டாளே! அவள் பக்கம் முட்டி போட்டவன் அவள் தலையை ஆதரவாய் வருடி விட்டு “ரதி” என்றழைக்க,
நிமிர்ந்தவளின் கண்களில் கண்ணீர்.
“ரதி என்னம்மா?”
“எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பிரகாஷ்.அப்பாவை பார்க்கணும் போலிருக்கு” விக்கி விக்கி அழுதாள். அவனுக்கும் அவள் நிலையை பார்க்க இப்போது கஷ்டமாக இருந்தது.
அவள் பக்கம் அமர்ந்தவன் ஒரு கையால் அவளை தன் தோளில் ஆதரவாய் சாய்த்துக் கொண்டு,
“அவர் எப்பவும் உன்னை சுற்றி தான் இருக்கார்!”
மறுகையால் அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்,
“ரதி இந்த அழுகை உனக்கு செட் ஆகவே இல்லை!சின்னபுள்ளயா நீ!”
அமைதியாய் மறுபடியும் கண்ணீர் வடித்தாள்.
“வெண்பா கிட்ட மன்னிப்பு கேட்டாலும் அவள் அனுபவிச்ச வலியை என்னால் சரி செய்ய முடியாது பிரகாஷ்.ரொம்ப வருத்தப்படுறேன்.!”
‘ஆமாம் சரிதானே’
“அப்பா கிட்ட இந்த மன்னிப்பை கூட என்னால் இப்ப கேட்க முடியலை பிரகாஷ்.என்னை பத்தி ரொம்ப கவலைபட வச்சிட்டேன் அவரை”
குலுங்கி குலுங்கி அழுதவளை தேற்ற முடியவில்லை.
அவளை தோளோடு அணைத்திருந்தவன் அவள் முதுகை ஆதரவாய் தடவி விட
“அவர் கிட்ட நீ மன்னிப்பு கேட்கணும் அவ்வளவுதானே.எனக்கு அதுக்கு ஒரு வழி தெரியும்,சொல்லவா?சொன்னா கேட்பியா?”
“என்ன சொல்லு பிரகாஷ், செய்றேன்”
கலைந்திருந்த அவள் முடியை காதோரம் ஒதுக்கிவிட்டு அவள் கண்களுக்குள் பார்த்தவன்,
“அவர் எப்போதும் நினைச்சது நீ சந்தோஷமா இருக்கணும்னு தான்.உங்க அப்பா ஏற்படுத்தி தந்த நம்ம வாழ்க்கையை நல்லபடியா வாழ முயற்சி செய் ரதி.அதுவே நீ அவருக்கும் செய்ற பரிகாரம்”
இருவர் பார்வையும் சந்தித்து கொண்டது. அவன் சொன்னது உண்மை தானே!ரதியின் மனம் அவன் பேச்சால் கொஞ்சம் அமைதிபட ஆரம்பித்தது!அவன் சொன்னது அத்தனையும் நிஜம்.அவன் தரும் இந்த அன்பும் ஆதரவும் என்றென்றும் வேண்டும் . பழைய மாதிரி அவன் தோளில் லாவகமாய் சாய்ந்து கொண்டாள் ரதி.அவள் மனம் இப்போது முழுவதுமாய் பிரகாஷின் வசம்.
எவ்வளவு பெரிய தவறு நடந்தாலும் அவசரப்படாமல் கோபப்படாமல் அதை ஆராயும் பொறுமை பிரகாஷிற்கு இயற்கையாகவே அமைந்து விட்டிருந்தது. அவன் இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும், ரதியின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறியிருக்கும்!
வெண்பா மிகவும் சோர்ந்து போனாள், அவள் செய்தது எத்தனை பெரிய தவறு!விழியனை படுத்திய பாட்டை நினைத்தால் அவளுக்கே தன் மேல் ஆத்திரம் பொங்கியது.அவள் அறையில் அடைந்துக் கொண்டிருந்தவளின் மனமெல்லாம் ரணமாகி போயிருந்தது.யோசனையில் அந்த அறையின் குறுக்கே நடை பயில ஆரம்பித்தாள்.
வயிற்றின் அளவு கீழே இருப்பதை பார்க்க முடியாதபடி செய்திருந்தது. அங்கே தரையில் கிடத்தியிருந்த சாமான்களில் அவள் கால் இடறி விழப் போனாள். ஒருவாராய் சமாளித்து நிமிர்ந்தவளின் கண்ணில் பட்டது சற்று முன் அவளை தடுக்கி விட்ட பெட்டியிலிருந்த டைரி!
‘பெங்களூர் செல்லும் போது கூட அவனதை நியாபகமாய் எடுத்து வைத்திருந்ததை பார்த்தாளே.பின்னே இது?’
அதை கையில் எடுத்து புரட்டி பார்க்க, அவனின் பழைய டைரி என்று புரிந்தது!அதில் பல இடங்களில் இவளின் பெயரை கிறுக்கி வைத்திருந்தான்.தேதி எல்லாம் இவள் கல்லூரியில் படித்த காலம்.நெஞ்சு படபடக்க திறந்து கிடந்த அந்த அட்டை பெட்டியை பார்த்தாள்.அதில் இன்னமும் பல டைரிகள். யோசனையாய் அதை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, கையில் இருந்ததை புரட்ட ஆரம்பித்தாள். அந்த டைரியும் விழியனின் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை எந்த ஒளிவு மறைவுமின்றி வெண்பாவிடம் காண்பித்துக் கொண்டிருந்தது!
‘எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! என்னை அவள் படுத்தும் பாட்டில் வேலையை விட்டுவிட்டு வீட்டில் கூட இருந்துவிடலாமென்று இருந்தது!’
“உனக்கு ஒரு தடவை சொன்னா அறிவில்லை! கையை விடு ரதி!”
அவள் கையைத் தட்டிவிட்டேன்!அருவருப்பாய் இருந்தது. எத்தனை நல்ல பெண் ! அவளா இப்படியெல்லாம் செய்கிறாள் ! என் மூளை அதை கிரகித்து கொள்ள மறுத்தது!
அவளை தோழி என்பதை தவிர வேற எந்த விதமாகவும் நினைக்க என்னால் முடியவில்லை.
“நான் உன்னை அப்படி நினைக்கலைன்னு தான் இவ்வளவு நேரம் சொல்லிகிட்டு இருக்கேன் ரதி! உனக்கு அதை புரிஞ்சிக்க முடியலையா?”
“அது எப்படி நினைக்காம இருப்பே?! என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நினைக்க வைக்கிறேன்!”
“நான் சொன்னா கேட்க மாட்டியா?” மென்மையாய் அவளை கேட்க, உச்சி குளிர்ந்து போனாள்.
“நீ சொன்னா எதுனாலும் கேட்பேன் , இந்த விஷயத்தை தவிர!”
ரதியை பற்றி அவன் எழுதியிருந்த அனைத்தையும் படித்து விட்டாள். ரதியின் செயல்களை படிக்க படிக்க வெண்பாவுக்கு அவள் மேல் இன்னமும் அத்தனை ஆத்திரம்.ஆங்காங்கே இவளை பற்றியும் எழுதியிருந்தான். தன்னின் பாராமுகம் அவனை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதும் சில இடங்களில் இருந்தது. விழியன் பாவம்.எத்தனை முறை சொன்னான், தன்னை நம்பித்தான் ஆக வேண்டுமென்று.கேட்டேனா?
இது தான் ஃபைனல் எபி.. எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
34
என்ன சொல்கிறாள்? மனதை கூறு போட்டு அறுத்துவிட்டு , தவறாக செய்தேன் என்கிறாள்?இவள் மனுஷி தானா?
‘உனக்கு எங்கே போச்சு டி புத்தி’மனசாட்சி சமையம் பார்த்து கேள்வி கேட்டது!இத்தனை எண்ணங்கள் மனதில் ஓட,இறுக்கமாய் தன் முகத்தை வைத்திருந்தாள் வெண்பா.
மறுபடியும் ரதி “வெண்பா” என்று எதையோ சொல்ல ஆரம்பிக்க,
“நான் உனக்கு என்ன டி பாவம் செய்தேன்?இப்படி இல்லாத பொய்யை சொல்லி என் வாழ்க்கையை கெடுத்திட்டியே ரதி! உன்னை எல்லாம் பிரண்டுன்னு நினைச்சு விழியன் மட்டும் ஏமாறலை, நானும் தான் சீரழிஞ்சிட்டேன்!ஏன் இப்படி செஞ்சே ரதி?!”
எதையோ சொல்ல வாயெடுத்தவளை கையால் தடுத்து,
“இப்போ உன்னை மன்னிச்சிட்டா நான் இழந்த சந்தோஷம் எல்லாம் திரும்ப வந்திடுமா?! ச்சே உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு” சொன்னவள் விறுவிறுவென்று மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
ரதியின் மனதை கொன்றது அவள் சொன்ன வார்த்தைகள்.அவர்கள் வாழ்க்கையை கெடுத்தே தீர வேண்டும் என்றபோது தோன்றாத குற்ற உணர்வு இப்போது அதிகமாய் தோன்றியது.
“வெண்பா…வெண்பா கொஞ்சம் நில்லு” ரதி சொன்னது எதுவும் அவள் செவிக்கு எட்டியிருந்தாலும், கேட்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை.தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் வெண்பா.
ரேணுகாவும் இவளுடன் சேர்ந்து பல முறை மருமகளை அழைத்து பார்க்க, அவள் இவர்கள் இருந்த பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. ரேணுகா இதற்கு மேல் என்ன என்பதாய் செய்வதறியாது நிற்க,
“ரதி செய்தது எல்லாம் தப்பு தான்,அதுக்கு பிராயச்சித்தம் கிடையாது. ஆனா இப்ப சத்தியமா செய்த தப்பை அவ உணர்ந்திட்டா மா. நீங்க அவளை மன்னிக்கணும்”
ரதியின் கையை பற்றி ரேணுகாவிடம் மன்னிப்பு வேண்டுவதை போல் அவள் காலில் சட்டென்று விழுந்துவிட்டான் பிரகாஷ்.பெரியவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரதி செய்துவிட்ட விஷயங்கள் எவராலும் மன்னிக்க முடியாதவை என்பது தெரியும் பிரகாஷுக்கும்,கஷ்டமான காரியம் என்பதையும் அவன் அறிவான்.ஆனாலும் வெண்பாவின் தாய்மை நிலையை கண்ட பின் அவனுள் ஒரு சிறு நம்பிக்கை.வெண்பா விழியனுக்கிடையே எந்த பெரிய பிரச்சனையும் இனியும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பினான்.
“தம்பி எழுந்திரு பா…”
“எங்களை மன்னிச்சிடுங்க மா”
“அந்த பேச்சை விடு பா…நல்லா இருங்க இரண்டு பேரும்”
ஆசி வழங்குவதை போல அறிவுரையும் சொன்னாள்.
“பிரகாஷோட நல்லபடியா குடும்பம் நடத்துற வழியை பாரு டி ரதி”
அத்தனை நேரமும் இருந்த மனக்குமுறல் நொடியில் அகன்றுவிட்டதை போல் தோன்றியது ரேணுகாவுக்கு.இந்த ரதி இப்போவாவது வந்து உண்மையை சொன்னாலே என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.மனதில் ஆயிரம் எண்ணங்கள் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும்.
வாய் இவர்களுக்கு அறிவுரை சொன்னாலும், மனம் தன் மருமகளை வசை பாடிக் கொண்டிருந்தது.
‘உனக்கு நல்லா வேணும்டி, நானும் அவனும் எத்தனை தூரம் சொன்னோம் ? நம்பத் தோன்றியதா?இதுக்கு தான் குடும்பத்தில் இருக்கிறவங்க பேச்சையும் அப்பப்ப கேட்கணும்!’
கனத்த மெளனம் அவ்விடத்தில். பிரகாஷ் அதை கலைப்பதை போல்,
“அப்போ நாங்க கிளம்புறோம் மா”
“கொஞ்சம் இருங்க” என்று உள்ளே சென்றாள் ரேணுகா. திரும்பி வருகையில் ஒரு தாம்பாளம்.அதில் பழம், பூ குங்குமம் எல்லாம் எடுத்து கொண்டு வந்தாள்.
ரேணுகா குங்குமத்தை எடுத்து ரதியின் நெற்றியிலும், வகிட்டிலும் வைத்து விட்டாள். ‘இந்த பெண்ணிற்கு வந்த நல்ல புத்தி நிலைக்க வேண்டும்’ என்ற வேண்டுதலோடு! ஆனது ஆகிப்போனது , இனியும் பகைமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது ரேணுகாவின் எண்ணம்.அவள் வயதுக்கும் அனுபவத்துக்கும் அது சாத்தியமும் ஆனது.ஆனால் வெண்பாவிடம் அதை எதிர்பார்க்க முடியாதே! அவர்கள் இருவரும் புறப்பட்டதும்,மேலே பூட்டியிருந்த அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கோவிலுக்கு கிளம்பி போனாள் ரேணுகா.
வீடு போகிற வழி முழுவதும் ரதி எதுவும் பேசவில்லை. நடந்து முடிந்த விஷயங்களில் மிகவும் ரணப்பட்டிருக்கிறாள் என்பது புரிந்தது பிரகாஷுக்கு! வீட்டிற்கு வந்த பிறகும் அவள் அறைக்குள் தனியே முடங்கி கொண்டாள்.இருவருக்கும் இரவு உணவு தயாரித்தவன் அவள் அறை வாசலிலிருந்து பல முறை அழைத்தும் அவள் வெளி வரவில்லை.இவனே அவள் அறைக்குள் போக அங்கு அவள் கால்களை மடித்து அதில் தலை கவிழ்ந்திருந்தாள்.அந்த காட்சியே பிரகாஷின் மனதை பிசைந்தது.இப்படி ஒரு துன்பத்தில் வலிய போய் மாட்டிக் கொண்டாளே! அவள் பக்கம் முட்டி போட்டவன் அவள் தலையை ஆதரவாய் வருடி விட்டு “ரதி” என்றழைக்க,
நிமிர்ந்தவளின் கண்களில் கண்ணீர்.
“ரதி என்னம்மா?”
“எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பிரகாஷ்.அப்பாவை பார்க்கணும் போலிருக்கு” விக்கி விக்கி அழுதாள். அவனுக்கும் அவள் நிலையை பார்க்க இப்போது கஷ்டமாக இருந்தது.
அவள் பக்கம் அமர்ந்தவன் ஒரு கையால் அவளை தன் தோளில் ஆதரவாய் சாய்த்துக் கொண்டு,
“அவர் எப்பவும் உன்னை சுற்றி தான் இருக்கார்!”
மறுகையால் அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்,
“ரதி இந்த அழுகை உனக்கு செட் ஆகவே இல்லை!சின்னபுள்ளயா நீ!”
அமைதியாய் மறுபடியும் கண்ணீர் வடித்தாள்.
“வெண்பா கிட்ட மன்னிப்பு கேட்டாலும் அவள் அனுபவிச்ச வலியை என்னால் சரி செய்ய முடியாது பிரகாஷ்.ரொம்ப வருத்தப்படுறேன்.!”
‘ஆமாம் சரிதானே’
“அப்பா கிட்ட இந்த மன்னிப்பை கூட என்னால் இப்ப கேட்க முடியலை பிரகாஷ்.என்னை பத்தி ரொம்ப கவலைபட வச்சிட்டேன் அவரை”
குலுங்கி குலுங்கி அழுதவளை தேற்ற முடியவில்லை.
அவளை தோளோடு அணைத்திருந்தவன் அவள் முதுகை ஆதரவாய் தடவி விட
“அவர் கிட்ட நீ மன்னிப்பு கேட்கணும் அவ்வளவுதானே.எனக்கு அதுக்கு ஒரு வழி தெரியும்,சொல்லவா?சொன்னா கேட்பியா?”
“என்ன சொல்லு பிரகாஷ், செய்றேன்”
கலைந்திருந்த அவள் முடியை காதோரம் ஒதுக்கிவிட்டு அவள் கண்களுக்குள் பார்த்தவன்,
“அவர் எப்போதும் நினைச்சது நீ சந்தோஷமா இருக்கணும்னு தான்.உங்க அப்பா ஏற்படுத்தி தந்த நம்ம வாழ்க்கையை நல்லபடியா வாழ முயற்சி செய் ரதி.அதுவே நீ அவருக்கும் செய்ற பரிகாரம்”
இருவர் பார்வையும் சந்தித்து கொண்டது. அவன் சொன்னது உண்மை தானே!ரதியின் மனம் அவன் பேச்சால் கொஞ்சம் அமைதிபட ஆரம்பித்தது!அவன் சொன்னது அத்தனையும் நிஜம்.அவன் தரும் இந்த அன்பும் ஆதரவும் என்றென்றும் வேண்டும் . பழைய மாதிரி அவன் தோளில் லாவகமாய் சாய்ந்து கொண்டாள் ரதி.அவள் மனம் இப்போது முழுவதுமாய் பிரகாஷின் வசம்.
எவ்வளவு பெரிய தவறு நடந்தாலும் அவசரப்படாமல் கோபப்படாமல் அதை ஆராயும் பொறுமை பிரகாஷிற்கு இயற்கையாகவே அமைந்து விட்டிருந்தது. அவன் இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும், ரதியின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறியிருக்கும்!
வெண்பா மிகவும் சோர்ந்து போனாள், அவள் செய்தது எத்தனை பெரிய தவறு!விழியனை படுத்திய பாட்டை நினைத்தால் அவளுக்கே தன் மேல் ஆத்திரம் பொங்கியது.அவள் அறையில் அடைந்துக் கொண்டிருந்தவளின் மனமெல்லாம் ரணமாகி போயிருந்தது.யோசனையில் அந்த அறையின் குறுக்கே நடை பயில ஆரம்பித்தாள்.
வயிற்றின் அளவு கீழே இருப்பதை பார்க்க முடியாதபடி செய்திருந்தது. அங்கே தரையில் கிடத்தியிருந்த சாமான்களில் அவள் கால் இடறி விழப் போனாள். ஒருவாராய் சமாளித்து நிமிர்ந்தவளின் கண்ணில் பட்டது சற்று முன் அவளை தடுக்கி விட்ட பெட்டியிலிருந்த டைரி!
‘பெங்களூர் செல்லும் போது கூட அவனதை நியாபகமாய் எடுத்து வைத்திருந்ததை பார்த்தாளே.பின்னே இது?’
அதை கையில் எடுத்து புரட்டி பார்க்க, அவனின் பழைய டைரி என்று புரிந்தது!அதில் பல இடங்களில் இவளின் பெயரை கிறுக்கி வைத்திருந்தான்.தேதி எல்லாம் இவள் கல்லூரியில் படித்த காலம்.நெஞ்சு படபடக்க திறந்து கிடந்த அந்த அட்டை பெட்டியை பார்த்தாள்.அதில் இன்னமும் பல டைரிகள். யோசனையாய் அதை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, கையில் இருந்ததை புரட்ட ஆரம்பித்தாள். அந்த டைரியும் விழியனின் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை எந்த ஒளிவு மறைவுமின்றி வெண்பாவிடம் காண்பித்துக் கொண்டிருந்தது!
‘எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! என்னை அவள் படுத்தும் பாட்டில் வேலையை விட்டுவிட்டு வீட்டில் கூட இருந்துவிடலாமென்று இருந்தது!’
“உனக்கு ஒரு தடவை சொன்னா அறிவில்லை! கையை விடு ரதி!”
அவள் கையைத் தட்டிவிட்டேன்!அருவருப்பாய் இருந்தது. எத்தனை நல்ல பெண் ! அவளா இப்படியெல்லாம் செய்கிறாள் ! என் மூளை அதை கிரகித்து கொள்ள மறுத்தது!
அவளை தோழி என்பதை தவிர வேற எந்த விதமாகவும் நினைக்க என்னால் முடியவில்லை.
“நான் உன்னை அப்படி நினைக்கலைன்னு தான் இவ்வளவு நேரம் சொல்லிகிட்டு இருக்கேன் ரதி! உனக்கு அதை புரிஞ்சிக்க முடியலையா?”
“அது எப்படி நினைக்காம இருப்பே?! என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நினைக்க வைக்கிறேன்!”
“நான் சொன்னா கேட்க மாட்டியா?” மென்மையாய் அவளை கேட்க, உச்சி குளிர்ந்து போனாள்.
“நீ சொன்னா எதுனாலும் கேட்பேன் , இந்த விஷயத்தை தவிர!”
ரதியை பற்றி அவன் எழுதியிருந்த அனைத்தையும் படித்து விட்டாள். ரதியின் செயல்களை படிக்க படிக்க வெண்பாவுக்கு அவள் மேல் இன்னமும் அத்தனை ஆத்திரம்.ஆங்காங்கே இவளை பற்றியும் எழுதியிருந்தான். தன்னின் பாராமுகம் அவனை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதும் சில இடங்களில் இருந்தது. விழியன் பாவம்.எத்தனை முறை சொன்னான், தன்னை நம்பித்தான் ஆக வேண்டுமென்று.கேட்டேனா?