வெண்பாவுக்கு அசதியில் கண்ணை சொக்கியது, “அவன் வரட்டுமே, அவனை பார்த்த பிறகு தான் தூங்க வருவேன்” அழுச்சாட்டியம் செய்தாள் மதி!
“இத்தனை லேட்டா அவனை எப்படி பார்த்து பேசுவே?”
ரேணுகா உறங்க சென்றுவிட்டாள். தனியே இவர்கள் அவனிடம் போய் என்ன பேசுவதாம்?
“ப்ளீஸ் யா..”மதி ஆரம்பிக்க
“இதை சொல்லியே ஓட்டு. மொட்டை மாடிக்கு போகலாம் வா” அங்கு இழுத்துக் கொண்டு போனாள்.
மாடித்தோட்டம் அமைத்தது வெண்பாவின் வேலை. அப்படி செய்த பிறகு அவ்விடம் ஒரு பிருந்தாவனம் போல் இருந்தது! வெண்பாவுக்கு இதில் வெகு இஷ்டம்! அதனை பெருமையாய் தன் தோழியிடம் சுற்றிக் காட்ட , மதியும்
“உனக்கு இதுவும் வருமா? ரொம்ப நல்லா வச்சியிருக்கே வெண்பா” என்றாள்.
இவர்கள் பேசி கொண்டிருக்கையில் அங்கு வந்தான் விழியன். இப்போது தான் வீடு திரும்பி இருப்பான் போல. சட்டையை கூட மாற்றவில்லை!
மதி அவனை இத்தனை கிட்டத்தில் பார்க்கவும் , பட்டிக்காட்டான் மிட்டாய் கடை ரேஞ்சில் நின்றாள்.
வெண்பா மானசீகமாய் தன் தலையில் அடித்துக் கொண்டு வந்தவனை நோக்கி,
“விழியன் இது என் பிரண்ட் மதிவதனி. மதி இது விழியன்!” அறிமுகப்படுத்த, விழியன் மதியிடம் கைகுலுக்கி கொண்டான், ஹலோ என்றவாறு!
வெண்பாவுக்கு அவன் செயலில் குட்டியூண்டு எரிச்சல்!
ஏன் கையை கொடுத்தே ஆகணுமோ?
‘போயிட்டு போறான் போ’ அவள் விட்டுத் தள்ள, மதியோ அவனிடம் தன் அரட்டையை ஆரம்பித்து விட்டாள், அத்தனை ஜாலியாய்!
சற்று நேரம் அவர்கள் பக்கம் நின்றவளை இருவருமே கண்டுக் கொள்ளவில்லை. ‘ ஐய்யோ வறுக்க ஆரம்பிச்சிட்டாங்களே!’ மாடியில் நடைபயில ஆரம்பித்து விட்டாள் வெண்பா.
நீண்ட நேரமாகியும் அவர்கள் பேச்சை முடிப்பது போல் தெரியவில்லை!
‘முதல் தடவைக்கே இத்தனை பேச்சா? வாயாடி புள்ள மதி!’
“மதி தூங்க போலாமா?” தானே முடித்து வைக்கலாமென்று முனைய, மதி அதை காதில் வாங்கவே இல்லை!
“சரி நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு வாங்க, நான் கீழே போறேன்” இவள் விரைந்த பின்பே மதி ஓடி வந்து இவளுடன் ஒட்டிக் கொண்டாள், மனமில்லாமல்!
அவர்கள் அறைக்கு திரும்பியதும் மதி தூங்காமல் அவனை பற்றியே பேசினாள். வெண்பா காதில் இரத்தம் வராத குறைக்கு!
வெண்பாவின் இன்றைய செயலில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான் விழியன். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடிவெடுத்து விழிமூடி யோசித்தான் விழியன்!