ஹாய் பிரண்ட்ஸ்.....
மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன கொஞ்சம் லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு தான் வாத்தியோட லாஸ்ட் விளையாட்டு... அதுக்கு பிறகு மதி விளையாட்டு. வாங்க பார்க்கலாம். இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... படிக்கிறவங்க ஒரு லைக் பண்ணலாமே...
காதல் – 12
உன் சின்ன சின்ன ஆசைகள் எல்லாம்...
நான் மட்டும் நிறைவேற்றவேண்டும்...
என்று பேராசைக் கொள்கிறேன்...
காலையிலேயே புத்தம் புது மலராக குளித்து முடித்து வெளியில் வந்த மதியை ஆதூரமாகப் பார்த்தான் இந்தர். அவள் முகத்தில் தனி பொலிவு தெரிய, அவன் முகம் மகிழ்ச்சியை தத்தெடுத்துக் கொண்டது.
காரணம் கிச்சா. அவன் பேசியதை, அவள் கவனித்தாளோ இல்லையோ ஆனால் அவன் பேசியதை நேற்றில் இருந்தே செல்லில் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டாள். எப்படியும் கூடிய சீக்கிரம் அவனை நேரில் காண்போம் என்று பொலிவு முகத்தில் இப்பொழுதே தோன்ற ஆரம்பித்தது.
அறையை விட்டு வெளியில் வரவும், அவள் கையில் நாகு காபியை திணிக்க, மெல்லிய சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள் மதி. அவள் முகத்தை கண்ட நாகு “ம்கும்” என கழுத்தை நொடித்து சென்றார்.
“ஏய் கிழவி? என்னாச்சு உனக்கு, காலம் காத்தாலே, கழுத்து ஒரு திணிசா போகுது” சிரிப்புடனே வினவினாள்.
அவளின் சிரித்த முகத்தை அப்படியே பார்த்திருந்தார். கொஞ்ச நாட்களாகவே ஒரு மாதிரியாக இருந்தவள் முகம் இன்று அதிக பொலிவைக் காட்ட, ஒரு தினுசாக பார்த்தார்.
“நான் ஊருக்கு போகணும்” முகத்தை எங்கேயோ வைத்தபடிக் கூறினார் நாகு.
“ஏன், இங்கு உனக்கு என்ன குறை?” கடுப்புடன் கேட்டாள் மதி.
“எனக்கு என் பையனைப் பார்க்கணும்?” கண்கள் சிறிது கலங்கியபடிக் கூறினார்.
“ஏன், என்னை பார்த்தா உன் பையனை பார்த்தமாதிரின்னு எப்பவும் சொல்லுவ? நீ பார்க்க முடியாதபடிக்கு இப்போ என்ன ஆச்சு இந்த முகத்துக்கு” அவரைப் பார்த்தபடியே வினவினாள்.
இவர்களின் உரையாடலை முகத்தில் தோன்றிய சிரிப்புடன் பார்த்திருந்தான் இந்தர். வீட்டில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் சுவாரஸ்யமாக பார்த்திருந்தான்.
“அடுத்த வாரம், உன் அப்பனுக்கும், உன் அம்மாவுக்கும் இறந்த நாள், கோவிலுக்கு போக ஏற்பாடு பண்ணணும்” இப்பொழுது அவளை நேராகப் பார்த்துக் கூறினார் நாகு.
‘இதை எப்படி மறந்துப் போனேன்? கிச்சா எல்லாத்தையும் மறக்கடித்து விட்டானா?’ அவளையே அவளால் மன்னிக்க முடியவில்லை.
இந்தர், ஆபிஸ் வேலையில் மறந்துவிட்டான். அதிலும் அவன் ஒரு மாதத்தில் வெளியூர் பயணம் வேறு இருக்கிறது. இப்படி எல்லாம் அவனை சுற்ற அவனின் மாமாவின் விசேஷ நாளை சுத்தமாக மறந்துப் போனான்.
அதே நேரம் திருவாரூரில் இருந்து சத்தியநாதன் அழைத்தார்.
“மதிம்மா”
“சொல்லுங்கப்பா”
“அண்ணனுக்கு திதி குடுக்கணும், பூசாரிக்கு சொல்லணும், எங்க பண்ணலாம், மதுரையிலா? திருவாரூரிலா?” மதியின் ஆலோசனையை கேட்டார் அவளின் அப்பா.
சிறு வயதில் இருந்தே அப்பா, என அழைத்துப் பழகியதில், அதுவே இப்பொழுதும் தொடர்கிறது.
திருமணமே வேண்டாம் என்று இருந்தவரை, திருமணம் செய்ய கட்டாயப்படுத்த, அதே நேரம், இந்தர் பெற்றோர் இறக்க, அவனை வளர்க்கும் பொறுப்பை எடுத்து, திருமணத்தை செய்யாமலே வாழ்ந்துவருகிறார். சொல்லபோனால் அவனுக்காக மட்டுமே வாழ்ந்தவர்.
அதன் பிறகு மதியின் தாய்க்கு மதுரையில் இருந்து வேலை மாற்றல் கிடைக்க, வெளியூர் சென்றனர். ஒரு முறை குடும்பத்தோடு ஏற்காடு சுற்றுலா சென்றனர்.
அப்பொழுது மதிக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். மதியின் பெற்றோர் இந்தரை தன்னுடன் அழைக்க, சத்தியநாதன் ஒரு வேலையை முடித்துக் கொண்டு இடையில் வந்து சேர்வதாக கூறியிருந்தார். நாகு தோட்டத்தை விட்டு என்னால் வரமுடியாது என்று கூறிவிட்டார்.
நான்கு நாட்கள் நன்றாக ஏற்காட்டை சுற்றி வந்தவர்கள், திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். இருவரும் தனி தனி காரில் வந்தனர். வரும் பொழுது மதி சத்தியநாதன் காரிலும், இந்தர் அன்னலெட்சுமி காரிலும் பயணம் செய்தனர்.
திடீரென அவர்களுக்கு பின்னே வந்த லாரி தறிகெட்டு வர, சத்தியநாதன், காரை வாகாக திருப்பி ஓரமாக நிறுத்தி, தன் அண்ணனுக்கு கார் ஹாரனை அழுத்தி எச்சரிக்கை செய்தார்.
அதை கவனித்த மதியின் பெற்றோர், காரை ஓரமாக திருப்ப, வேகமாக வந்த வண்டி அவர்களை உரசி சென்றது. அதில் கார் ஒரு பாறையில் மோதி நின்றது.
உடனே அவர்களை மருத்துவமனையில் சேர்க்க, மதியின் அப்பா அந்த இடத்திலேயே மரணத்தை தழுவினார். மதியின் தாய்க்கு தலையில் அடிபட்ட நிலையில் ஒரு வாரம் கோமா நிலையில் இருந்தவர், அடுத்த வாரத்தில் நினைவு திரும்பாமலே அப்படியே சென்றுவிட்டார்.
அதன் பிறகு மதிக்கு எல்லாமே, அவளின் அப்பா சத்தியநாதனும், இந்தரும் தான்.
அதனால் தான் மதிக்கு தாலி கட்டிய அன்று கெளதம் அவளை அறியாமல் போனான். ஒரு வேளை மதியின் பெற்றோர் இருந்திருந்தால் கண்டுப்பிடித்திருப்பானோ என்னவோ?
இப்பொழுது அவர்களின் இறந்தநாள் வருவதால், எல்லாரும் திருவாவூர் செல்ல முடிவெடுத்தனர். எப்பொழுதும் மதுரையில் பூஜை நடக்கும்.
எப்பொழுது அங்கு சென்றாலும், மதி முகம் ஒரு வாரம் வரை எதையோ இழந்ததைப் போல் இருக்கும், அதனால் ‘இந்த வருடம் திருவாவூரில் வைத்துக் கொள்ளலாம்’ என இந்தர் கூறினான்.
சாப்பாட்டு அறையில் காலை உணவை அருந்திக் கொண்டிருந்தான் கெளதம். என்றும் இல்லாத திருநாளாக முகம் பிளீச் போட்டதை போல் பளப்பளக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த அஷோக் அவன் முகத்தை பார்ப்பதும், மீண்டுமாக தன் உணவில் கவனம் செலுத்துவதுமாக, தன் உணவை உண்ணாமலே அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒருகட்டத்தில் அவனை நிமிர்ந்து பார்த்த அஷோக், சாப்பிடாமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, கௌதம் அவனை ஏறிட்டுப் பார்த்தான். கௌதமிடம் பிடிபட்ட உணர்வில் திருதிருவென முழித்தான் அஷோக்.
“இப்போ எதுக்குடா என்னவோ காதலன், காதலியை திருட்டு தனமா சைட் அடிக்கிற மாதிரியே பார்த்துட்டு இருக்க, உன் முன்னாடி தானே இருக்கேன், நேரடியாவே சைட் அடி? என்ன கேட்கணுமோ கேட்டு தொலை” கூறியவன் தட்டில் இருந்த புட்டில் கவனமானான்.
“மச்சான்... அதான்... நம்ம இந்தர் மாமா பொண்ணு..” என ஆரம்பிக்க,
“ம்ம்ம்... என்ன சொன்ன?” கெளதம் கோபத்துடன் உறுத்து விழிக்க,
“அதில்லை மச்சான்... அதான் உன் பொண்டாட்டியை எப்போ இங்க அழைச்சிட்டு வர போற?”
அஷோக் ‘பொண்டாட்டி’ என்று கூறியதில் முகத்தில் கொஞ்சம் புன்னகையை படரவிட்டவன் “ஏன் அவளை இங்க அழைச்சிட்டு வரதுல உனக்கு என்ன லாபம்?”
“அதில்ல மச்சான்...” அவன் இழுக்க, அவனை முறைத்த கெளதம்,
“என் வீட்டிலையே யாரும், இன்னும் அதை பத்தி பேசல, உனக்கு மட்டும் என்ன?” கையை நாடியில் வைத்து யோசிக்க,
“எனக்கும் அது தான்டா புரியல, மீசை எப்பவும் நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற நேரம் எல்லாம், உன்னை கல்யாணம் பண்ண சொல்லி ஆங்கிரி பேர்ட்டா மாறி உன்னை கோபப்படுத்தும், ஆனா இப்போ எல்லாம் தெரிஞ்ச பிறகும், உனக்கு அந்த பொண்ணை கட்டி வச்சு உன்னை கூல் பண்ணலாம் தானே?” மீசை வருகிறதா என கண்களை எங்கும் சுழற்றியபடி வினவினான் அஷோக்.
“கூல் பண்ணுற வேலையெல்லாம், அவர் அப்பவே பண்ணிட்டார், ஆனா, நீ எதுக்கு என்னை இப்போ கூல் பண்ணுற, அதை சொல்லு மச்சான்”
“அதில்லை மச்சான், வந்து இன்னைக்கு நைட் சுபி ஊர் கோவில் கொடையாம், என்னை கூப்டிருக்கா, போகணும், அது தான் உன்னை துணைக்கு கூப்டலாம்னு இருக்கேன்?”
“என்னால் எல்லாம் வரமுடியாதுடா?” எனக்கு வேற முக்கியமான வேலை இருக்கு.
இன்று இரவு மதியின் பதிலை அறிய இருக்கிறான். காலையில் எழுந்ததும் இரண்டு மூன்று முறை அழைத்து விட்டான் அவள் பதில் கூறவே இல்லை. பெரும்பாலும் அவள் பகல் நேரங்களில் அவன் அழைப்பை ஏற்கமாட்டாள். அதனால் இரவில் அவள் பதிலை காண காத்திருக்க வேண்டுமே?
‘உன் லவ்க்கு மட்டும் என்னை அலைய வச்ச, எனக்கு வரமாட்டேங்கறயா? உன்னை எப்படி வர வைக்கிறேன் பார்’ மனதில் சூளுரைத்தவன் “உன் ஆளும் வருகிறாளாம்?” ஒரு பிட்டைப் போட்டான் அஷோக்.
வாய்க்கு போன புட்டு கை தானாக கீழிறங்க “என்ன அவளும் வருகிறாளா?” ஆவலாக கேட்டான் கெளதம்.
‘காதலில் பொய் சொல்லுவதெல்லாம் சகஜம்’ எண்ணியவன் “ஆமா வருகிறாளாம், சுபி இன்வைட் பண்ணிருக்கா?” என்று உரைக்க, அப்பொழுதிலிருந்தே கிளம்ப ஆயத்தம் ஆனான் கெளதம்.
சுபி, மதியை வீட்டுக்கே வந்து அழைத்து சென்றாள். கெளதம் என்றும் இல்லாத திருநாளாக இன்று வெள்ளை நிற வேஷ்டி, சிகப்பு கலர் சர்ட், கழுத்தில் ஒரு மைனர் செயின், கண்ணுக்கு ஒரு கலர் கண்ணாடி என ஆளே அட்டகாசமாக மாறியிருந்தான். இப்பொழுது அவனை பார்க்கும் பொழுது சட்டென்று கெளதம் தான் என அடையாளம் காண்பதரிது.
மாலையில் கோவில் வளாகத்தில் நுழைய, அத்தனை கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்திலும் அவளைக் கண்டுக் கொண்டான் கெளதம்.
மயில் வண்ண பட்டு புடவையில், அதற்கேற்ற நகைகளோடு, தலையில் மல்லிப்பூ சூடி அவள் ஜொலிக்க, அவள் அருகே செல்லச் சொல்லி அவன் கால்கள் பரப்பரத்தது.
தூரத்தில், சுபியை கண்ட அஷோக் கால்கள் அவளை நோக்கி பயணிக்க, அவனை தடுத்து நிறுத்தினான் கெளதம்.
மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன கொஞ்சம் லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு தான் வாத்தியோட லாஸ்ட் விளையாட்டு... அதுக்கு பிறகு மதி விளையாட்டு. வாங்க பார்க்கலாம். இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... படிக்கிறவங்க ஒரு லைக் பண்ணலாமே...
காதல் – 12
உன் சின்ன சின்ன ஆசைகள் எல்லாம்...
நான் மட்டும் நிறைவேற்றவேண்டும்...
என்று பேராசைக் கொள்கிறேன்...
காலையிலேயே புத்தம் புது மலராக குளித்து முடித்து வெளியில் வந்த மதியை ஆதூரமாகப் பார்த்தான் இந்தர். அவள் முகத்தில் தனி பொலிவு தெரிய, அவன் முகம் மகிழ்ச்சியை தத்தெடுத்துக் கொண்டது.
காரணம் கிச்சா. அவன் பேசியதை, அவள் கவனித்தாளோ இல்லையோ ஆனால் அவன் பேசியதை நேற்றில் இருந்தே செல்லில் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டாள். எப்படியும் கூடிய சீக்கிரம் அவனை நேரில் காண்போம் என்று பொலிவு முகத்தில் இப்பொழுதே தோன்ற ஆரம்பித்தது.
அறையை விட்டு வெளியில் வரவும், அவள் கையில் நாகு காபியை திணிக்க, மெல்லிய சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள் மதி. அவள் முகத்தை கண்ட நாகு “ம்கும்” என கழுத்தை நொடித்து சென்றார்.
“ஏய் கிழவி? என்னாச்சு உனக்கு, காலம் காத்தாலே, கழுத்து ஒரு திணிசா போகுது” சிரிப்புடனே வினவினாள்.
அவளின் சிரித்த முகத்தை அப்படியே பார்த்திருந்தார். கொஞ்ச நாட்களாகவே ஒரு மாதிரியாக இருந்தவள் முகம் இன்று அதிக பொலிவைக் காட்ட, ஒரு தினுசாக பார்த்தார்.
“நான் ஊருக்கு போகணும்” முகத்தை எங்கேயோ வைத்தபடிக் கூறினார் நாகு.
“ஏன், இங்கு உனக்கு என்ன குறை?” கடுப்புடன் கேட்டாள் மதி.
“எனக்கு என் பையனைப் பார்க்கணும்?” கண்கள் சிறிது கலங்கியபடிக் கூறினார்.
“ஏன், என்னை பார்த்தா உன் பையனை பார்த்தமாதிரின்னு எப்பவும் சொல்லுவ? நீ பார்க்க முடியாதபடிக்கு இப்போ என்ன ஆச்சு இந்த முகத்துக்கு” அவரைப் பார்த்தபடியே வினவினாள்.
இவர்களின் உரையாடலை முகத்தில் தோன்றிய சிரிப்புடன் பார்த்திருந்தான் இந்தர். வீட்டில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் சுவாரஸ்யமாக பார்த்திருந்தான்.
“அடுத்த வாரம், உன் அப்பனுக்கும், உன் அம்மாவுக்கும் இறந்த நாள், கோவிலுக்கு போக ஏற்பாடு பண்ணணும்” இப்பொழுது அவளை நேராகப் பார்த்துக் கூறினார் நாகு.
‘இதை எப்படி மறந்துப் போனேன்? கிச்சா எல்லாத்தையும் மறக்கடித்து விட்டானா?’ அவளையே அவளால் மன்னிக்க முடியவில்லை.
இந்தர், ஆபிஸ் வேலையில் மறந்துவிட்டான். அதிலும் அவன் ஒரு மாதத்தில் வெளியூர் பயணம் வேறு இருக்கிறது. இப்படி எல்லாம் அவனை சுற்ற அவனின் மாமாவின் விசேஷ நாளை சுத்தமாக மறந்துப் போனான்.
அதே நேரம் திருவாரூரில் இருந்து சத்தியநாதன் அழைத்தார்.
“மதிம்மா”
“சொல்லுங்கப்பா”
“அண்ணனுக்கு திதி குடுக்கணும், பூசாரிக்கு சொல்லணும், எங்க பண்ணலாம், மதுரையிலா? திருவாரூரிலா?” மதியின் ஆலோசனையை கேட்டார் அவளின் அப்பா.
சிறு வயதில் இருந்தே அப்பா, என அழைத்துப் பழகியதில், அதுவே இப்பொழுதும் தொடர்கிறது.
திருமணமே வேண்டாம் என்று இருந்தவரை, திருமணம் செய்ய கட்டாயப்படுத்த, அதே நேரம், இந்தர் பெற்றோர் இறக்க, அவனை வளர்க்கும் பொறுப்பை எடுத்து, திருமணத்தை செய்யாமலே வாழ்ந்துவருகிறார். சொல்லபோனால் அவனுக்காக மட்டுமே வாழ்ந்தவர்.
அதன் பிறகு மதியின் தாய்க்கு மதுரையில் இருந்து வேலை மாற்றல் கிடைக்க, வெளியூர் சென்றனர். ஒரு முறை குடும்பத்தோடு ஏற்காடு சுற்றுலா சென்றனர்.
அப்பொழுது மதிக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். மதியின் பெற்றோர் இந்தரை தன்னுடன் அழைக்க, சத்தியநாதன் ஒரு வேலையை முடித்துக் கொண்டு இடையில் வந்து சேர்வதாக கூறியிருந்தார். நாகு தோட்டத்தை விட்டு என்னால் வரமுடியாது என்று கூறிவிட்டார்.
நான்கு நாட்கள் நன்றாக ஏற்காட்டை சுற்றி வந்தவர்கள், திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். இருவரும் தனி தனி காரில் வந்தனர். வரும் பொழுது மதி சத்தியநாதன் காரிலும், இந்தர் அன்னலெட்சுமி காரிலும் பயணம் செய்தனர்.
திடீரென அவர்களுக்கு பின்னே வந்த லாரி தறிகெட்டு வர, சத்தியநாதன், காரை வாகாக திருப்பி ஓரமாக நிறுத்தி, தன் அண்ணனுக்கு கார் ஹாரனை அழுத்தி எச்சரிக்கை செய்தார்.
அதை கவனித்த மதியின் பெற்றோர், காரை ஓரமாக திருப்ப, வேகமாக வந்த வண்டி அவர்களை உரசி சென்றது. அதில் கார் ஒரு பாறையில் மோதி நின்றது.
உடனே அவர்களை மருத்துவமனையில் சேர்க்க, மதியின் அப்பா அந்த இடத்திலேயே மரணத்தை தழுவினார். மதியின் தாய்க்கு தலையில் அடிபட்ட நிலையில் ஒரு வாரம் கோமா நிலையில் இருந்தவர், அடுத்த வாரத்தில் நினைவு திரும்பாமலே அப்படியே சென்றுவிட்டார்.
அதன் பிறகு மதிக்கு எல்லாமே, அவளின் அப்பா சத்தியநாதனும், இந்தரும் தான்.
அதனால் தான் மதிக்கு தாலி கட்டிய அன்று கெளதம் அவளை அறியாமல் போனான். ஒரு வேளை மதியின் பெற்றோர் இருந்திருந்தால் கண்டுப்பிடித்திருப்பானோ என்னவோ?
இப்பொழுது அவர்களின் இறந்தநாள் வருவதால், எல்லாரும் திருவாவூர் செல்ல முடிவெடுத்தனர். எப்பொழுதும் மதுரையில் பூஜை நடக்கும்.
எப்பொழுது அங்கு சென்றாலும், மதி முகம் ஒரு வாரம் வரை எதையோ இழந்ததைப் போல் இருக்கும், அதனால் ‘இந்த வருடம் திருவாவூரில் வைத்துக் கொள்ளலாம்’ என இந்தர் கூறினான்.
சாப்பாட்டு அறையில் காலை உணவை அருந்திக் கொண்டிருந்தான் கெளதம். என்றும் இல்லாத திருநாளாக முகம் பிளீச் போட்டதை போல் பளப்பளக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த அஷோக் அவன் முகத்தை பார்ப்பதும், மீண்டுமாக தன் உணவில் கவனம் செலுத்துவதுமாக, தன் உணவை உண்ணாமலே அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒருகட்டத்தில் அவனை நிமிர்ந்து பார்த்த அஷோக், சாப்பிடாமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, கௌதம் அவனை ஏறிட்டுப் பார்த்தான். கௌதமிடம் பிடிபட்ட உணர்வில் திருதிருவென முழித்தான் அஷோக்.
“இப்போ எதுக்குடா என்னவோ காதலன், காதலியை திருட்டு தனமா சைட் அடிக்கிற மாதிரியே பார்த்துட்டு இருக்க, உன் முன்னாடி தானே இருக்கேன், நேரடியாவே சைட் அடி? என்ன கேட்கணுமோ கேட்டு தொலை” கூறியவன் தட்டில் இருந்த புட்டில் கவனமானான்.
“மச்சான்... அதான்... நம்ம இந்தர் மாமா பொண்ணு..” என ஆரம்பிக்க,
“ம்ம்ம்... என்ன சொன்ன?” கெளதம் கோபத்துடன் உறுத்து விழிக்க,
“அதில்லை மச்சான்... அதான் உன் பொண்டாட்டியை எப்போ இங்க அழைச்சிட்டு வர போற?”
அஷோக் ‘பொண்டாட்டி’ என்று கூறியதில் முகத்தில் கொஞ்சம் புன்னகையை படரவிட்டவன் “ஏன் அவளை இங்க அழைச்சிட்டு வரதுல உனக்கு என்ன லாபம்?”
“அதில்ல மச்சான்...” அவன் இழுக்க, அவனை முறைத்த கெளதம்,
“என் வீட்டிலையே யாரும், இன்னும் அதை பத்தி பேசல, உனக்கு மட்டும் என்ன?” கையை நாடியில் வைத்து யோசிக்க,
“எனக்கும் அது தான்டா புரியல, மீசை எப்பவும் நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற நேரம் எல்லாம், உன்னை கல்யாணம் பண்ண சொல்லி ஆங்கிரி பேர்ட்டா மாறி உன்னை கோபப்படுத்தும், ஆனா இப்போ எல்லாம் தெரிஞ்ச பிறகும், உனக்கு அந்த பொண்ணை கட்டி வச்சு உன்னை கூல் பண்ணலாம் தானே?” மீசை வருகிறதா என கண்களை எங்கும் சுழற்றியபடி வினவினான் அஷோக்.
“கூல் பண்ணுற வேலையெல்லாம், அவர் அப்பவே பண்ணிட்டார், ஆனா, நீ எதுக்கு என்னை இப்போ கூல் பண்ணுற, அதை சொல்லு மச்சான்”
“அதில்லை மச்சான், வந்து இன்னைக்கு நைட் சுபி ஊர் கோவில் கொடையாம், என்னை கூப்டிருக்கா, போகணும், அது தான் உன்னை துணைக்கு கூப்டலாம்னு இருக்கேன்?”
“என்னால் எல்லாம் வரமுடியாதுடா?” எனக்கு வேற முக்கியமான வேலை இருக்கு.
இன்று இரவு மதியின் பதிலை அறிய இருக்கிறான். காலையில் எழுந்ததும் இரண்டு மூன்று முறை அழைத்து விட்டான் அவள் பதில் கூறவே இல்லை. பெரும்பாலும் அவள் பகல் நேரங்களில் அவன் அழைப்பை ஏற்கமாட்டாள். அதனால் இரவில் அவள் பதிலை காண காத்திருக்க வேண்டுமே?
‘உன் லவ்க்கு மட்டும் என்னை அலைய வச்ச, எனக்கு வரமாட்டேங்கறயா? உன்னை எப்படி வர வைக்கிறேன் பார்’ மனதில் சூளுரைத்தவன் “உன் ஆளும் வருகிறாளாம்?” ஒரு பிட்டைப் போட்டான் அஷோக்.
வாய்க்கு போன புட்டு கை தானாக கீழிறங்க “என்ன அவளும் வருகிறாளா?” ஆவலாக கேட்டான் கெளதம்.
‘காதலில் பொய் சொல்லுவதெல்லாம் சகஜம்’ எண்ணியவன் “ஆமா வருகிறாளாம், சுபி இன்வைட் பண்ணிருக்கா?” என்று உரைக்க, அப்பொழுதிலிருந்தே கிளம்ப ஆயத்தம் ஆனான் கெளதம்.
சுபி, மதியை வீட்டுக்கே வந்து அழைத்து சென்றாள். கெளதம் என்றும் இல்லாத திருநாளாக இன்று வெள்ளை நிற வேஷ்டி, சிகப்பு கலர் சர்ட், கழுத்தில் ஒரு மைனர் செயின், கண்ணுக்கு ஒரு கலர் கண்ணாடி என ஆளே அட்டகாசமாக மாறியிருந்தான். இப்பொழுது அவனை பார்க்கும் பொழுது சட்டென்று கெளதம் தான் என அடையாளம் காண்பதரிது.
மாலையில் கோவில் வளாகத்தில் நுழைய, அத்தனை கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்திலும் அவளைக் கண்டுக் கொண்டான் கெளதம்.
மயில் வண்ண பட்டு புடவையில், அதற்கேற்ற நகைகளோடு, தலையில் மல்லிப்பூ சூடி அவள் ஜொலிக்க, அவள் அருகே செல்லச் சொல்லி அவன் கால்கள் பரப்பரத்தது.
தூரத்தில், சுபியை கண்ட அஷோக் கால்கள் அவளை நோக்கி பயணிக்க, அவனை தடுத்து நிறுத்தினான் கெளதம்.