ஹாய் பிரண்ட்ஸ்.....
எல்லாரும் எப்படி இருக்கீங்க... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்.... வாத்தி இன்னைக்கு என்ன பண்ணபோகிறான் என்று பார்ப்போம் வாங்க... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... படிக்கிறவங்க ஒரு லைக் பண்ணலாமே ...
காதல் – 9
நான் விழும் போது தாங்கி பிடிக்கின்ற...
உன் விரலோடு உண்டானது என் காதல்...!!!
காலேஜ் வாசலில் நின்ற மதியின் கண்கள் நாலா பக்கமும் அவளையும் மீறி ஆர்வமாய் சுழன்றது. ஏன் என அவளுக்கே தெரியவில்லை. ‘அந்த போன் கால் எதுவும் உண்மை இல்லை’ எனத் தனக்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாலும், அலைப்பேசி இசைக்கையில் சட்டென ஒரு பரப்பரப்பு எழுவது எதனால் என அவளுக்குத் தெரியாதா என்ன?
இத்தனை வருடங்கள் தன்னைத் தீண்டாத காதல் உணர்வு, டீன் ஏஜில் வராத காதல் உணர்வு, ஒரு நிலைக்கு வந்த பிறகு தீண்டுவதை சற்று அதிர்வாய் உள்வாங்கி நின்றிருந்தாள். அது காதல் தானா? அவளுக்கே தெரியவில்லை... இந்த நிலையிலும் காதல் வருமா? விடை தெரியா கேள்வி அவளிடம்... அங்கு மரத்தடியில் நின்றிருந்த மாணவர்கள் அனைவரையும் பாராமல் பார்த்திருந்தாள்.
‘யாராவது தன்னையே பார்கிறார்களா? தன் செய்கையை கவனிக்கிறார்களா? இங்கே அவன் இருப்பானா? அவன் இதே கல்லூரியில் படிக்கிறானா? இல்லை வேறெங்கும் இருந்து என்னை கவனிக்கிறானா? நான் செல்லும் பஸ்சில் வருவானா? இன்று அவன் பேசுவானா? இல்லையென்றால் நேற்று யாரோ விளையாடி இருக்கிறார்களா? ஒரு நாள் வந்த கிச்சா இனி வரமாட்டானா? அது கிச்சா தானே? இல்லையென்றால்....’ அப்பப்பா வேண்டாம்..., இந்த நினைவே வேண்டாம்... அதை சட்டென உதறி தள்ளியவள் கண்களோ எங்கும் சுழலுவதை மட்டும் நிறுத்தவில்லை.
அதே நேரம், “டேய், கிளம்புடா போகலாம்?” கெளதம் அருகில் அஷோக் வந்து அமர்ந்தப் படிக் கூறினான்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுடா, அவளும் வரட்டும்”
“அவளா, அது யாருடா?”
“அதான்டா உன் தங்கச்சி”
“என்ன தங்கச்சியா? அவ எங்கடா இங்க?”
“டேய், அவ இங்க தான்டா இருக்கா, இங்க தான் படிக்கிறா” என்றவன் மதியை காட்ட,
“ஓஹோ, நம்மாளு பிரண்டா” உற்சாகமானான் அஷோக்.
“அது யாருடா, உனக்கு போய் ஆளா வந்தது?” கிண்டலாக கேட்டான் கெளதம்.
“ஏன்... ஏன்... எனக்கு என்ன குறை, நான் அழகன்டா?” என,
வாய் பொத்தி சிரித்தான் கெளதம். அவனைப் பார்த்தவன் “சரி விடு, வீட்டுக்கு கிளம்பலாம் வண்டியை எடு” என,
“அவளும் கிளம்பட்டும்டா?”
“சரி, எத்தனை நாள் தான் இப்படியே பார்ப்ப, போய் அவகிட்ட பேசு”
“இல்ல, வேண்டாம்டா, அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல, நான் அவளுக்கு தாலி கட்டியவன்னு அவ முன்னாடி போய் நின்னா என்னை ஏத்துப்பாளா? கண்டிப்பா மாட்டா?”
“அப்போ கிச்சாவா போ?”
“அதுவும் முடியாதுடா, எப்படி உடனே போய் அவள் முன்னாடி நிற்பது, அவள் மனசில நான் இருப்பேனான்னே தெரியல?”
“சரி இப்போ என்ன தான் பண்ணபோகிற?”
“அவ மனசில், யார் இருக்கான்னு தெரிஞ்ச பிறகு தான் அவளை நேரில் சந்திக்க போகிறேன்”
“அதுவரை இப்படி அவ பின்னாடியே சுத்த போறியா?”
“ஆமா”
“ஏன்டா மச்சான்... டீனேஜ் பசங்க மாதிரி என்னடா விளையாட்டு இது? அவ போற இடம் எல்லாம் போறது... அவளையே பாலோ பண்ணுறது... இதெல்லாம் நல்லாவா இருக்கு? ப்ரோபசர் மாதிரி இரேன்டா” கொஞ்சம் நக்கலாகவே கேட்டான் அஷோக்.
“ஜஸ்ட் என்ஜாய் தி மொமென்ட் டா” கெளதம் வெகு கேஷுவலாகச் சொல்ல, அவனை கொலைவெறியில் முறைத்தான் அஷோக்.
“ஏன்டா டேய்... காலேஜ் படிக்கும் போதே இதெல்லாம் செய்தால், ஏதோ திரில், கிக் இருக்குன்னு சொல்லலாம், இதென்னடா இப்போ போட்டு இப்படி எல்லாம் பண்ணுற? அடி வாங்க வச்சிராத... அவளுக்கு ஏதோ பாடிகார்ட் இருக்குன்னு வேற சொல்லுற பயமா இருக்குடா” புலம்பி தள்ளினான் அஷோக்.
அஷோக் புலம்பலை கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளாமல், தலையை கார் கண்ணாடியில் கொஞ்சமாய் சீவியவன், சட்டையை நீவி விட்டுக் கொண்டு “மச்சான், நான் எப்படி இருக்கேன் ஓகே தான?” ஷர்ட் கையை மடக்கி விட்டப்படி கேட்டான் கெளதம். அவனை கொலை வெறியில் முறைத்தான் அஷோக்.
“ஏன்டா என் உயிரை வாங்குற.., என்னவோ உன்னை பார்த்ததும் அவ ஓடி வந்து கட்டிபிடிச்சி கன்னத்துல இச்... இச் ன்னு முத்தம் கொடுக்க போற மாதிரி பில்டப் பண்ணுற, அவ, அவ வேலையை பாக்கபோறா, நீ ஒளிஞ்சிருந்து அவளை பாக்கப் போற? அதுக்கு நீ சட்டையை கிழிச்சு போட்டும் போகலாம்? சட்டையே போடாமலும் போகலாம், ஒரு வேளை அப்படி போனாலாவது வித்தியாசமா ஒரு மனுஷன் வர்றான்னு உன்னை கொஞ்சமாவது பார்க்க வாய்ப்பிருக்கு?”
அஷோக் சொல்லிமுடிக்கவும் முதுகில் பொத்தென்ன ரெண்டு அடி போட்டான் கெளதம். “ஹையோ... அம்மா எனக்கு ஆளு கிடைச்ச பொறாமையில் போட்டு அடிக்குறானே... இதை கேட்க யாருமே இல்லையா?” சன்னமாய் அலறினான் அஷோக்.
“அடேய்... சனியனே வாயை மூடுடா, ஏன்டா இப்படி கத்துற, அவ இங்க பாத்திற போறா?” அஷோக் வாயை மூடிய படியே சீறினான் கெளதம். நல்ல வேளை கார் கதவு மூடி இருந்ததால், அவர்கள் சத்தம் வெளியில் கேட்கவில்லை.
“பின்ன இப்படி கதவை மூடி வச்சு அடிச்சா, கத்தாம என்ன செய்வாங்க?” அவன் கையை வாயில் இருந்து விலக்கியபடியே நெளிந்தான் அஷோக்.
“ஒரு ஃபிரண்ட்... ஏதாவது கேட்டால் ஹெல்ப் பண்ணாம நக்கல் பேச்சு பேசுறியா நீ, பஸ் வருதான்னு பாரு போ?” அவனை பிடிச்சு கதவோடு தள்ள,
“எனக்கு ஒரு டவுட்?”
“என்ன, கேளு?”
“ஆமா, பஸ் வந்தா மட்டும் அவளை தள்ளிட்டு போய் நீ டூயட் ஆடிருவியா என்ன?”
“எங்கே சரியா கேட்கல, இன்னொரு வாட்டி சொல்லு பாப்போம்?” கெளதம் அவன் அருகில் காதை கொண்டு வர, அதே நேரம் பஸ் சத்தம் கேட்கவே, தற்சமயம் அவனை விட்டவன், “பஸ் பின்னாடியே மெதுவா வா, எனக்கு ஒரு சின்ன வேலை பஸ்ல இருக்கு, அதை முடிச்சுட்டு இறங்கவும் அப்படியே பிக் அப் பண்ணு?” எனக் கூறி இறங்க,
“உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா?” மெதுவாக புலம்ப,
“என்ன சொன்ன? சரியா கேட்கல, என் பக்கத்துல வந்து சொல்லு” கெளதம் திரும்பி கேட்க,
“இல்லைடா மச்சான், வண்டியை இப்படியே ஒட்டவா? இல்லை டோர் திறக்கவான்னு கேட்டேன்டா?” என்றவன் விட்டால் போதுமென அவனை தாண்டி சென்றான்.
பஸ் வரவே ஏறிக் கொண்டாள் மதி. பள்ளி, கல்லூரி முடியும் நேரம் என்பதால், மாணவர்களின் கூட்டம் அலைமோதியது. அனைவரது முகங்களும் களைப்புடன் இருக்க, மதி கண்கள் அடிக்கடி போனையே பார்த்துக் கொண்டது.
அதே நேரம் போன் அழைக்கவும், ஒரு வேளை, நேற்று பேசியவன் தான் அழைக்கிறானோ என ஆர்வமாக பார்த்தாள். இந்தர் தான் அழைத்திருந்தான்.
“சொல்லுடா இந்தர்”
“மதி பாத்து, பத்திரமா போ”
“சரிடா, நீ சீக்கிரமே வேலையை முடிச்சுட்டு வா?”
“எவ்ளோ சீக்கிரம் வரமுடியுமோ வருகிறேன்” எனக் கூறி அழைப்பை நிறுத்தினான்.
‘அவள் எங்கே...?” எண்ணியவனதுப் பார்வை ஒவ்வொரு ஆளாக சுற்றி வந்தது. அவன் தன் பார்வையில் விழவே அவன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். மங்கி இருந்த வீட்டில் எல்.ஈ.டி. பல்ப் எரிந்தது போல் பிரகாசமானது.
கண்டக்டர் இருக்கும் பக்கம் பார்க்க அவர் மும்முரமாய் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். ‘தான் இங்கிருப்பதை எப்படி அவளுக்கு தெரிவிப்பது?’ எண்ணியவன் அவளையே பார்த்திருந்தான்.
‘இப்பொழுது நேராக சென்று அவள் முன் போய் நின்றால் கூட, அவள் அவனை கண்டுக் கொள்வதில்லை தான், ஆனால் அவன் கண் அவளை ஜொள்ளுவதை கண்டாலே போதும், வாத்தி என்ற மரியாதை இல்லாமல் போகும்’ என்னப் பண்ணுவது யோசிக்க, அவள் கண்களோ யாரையோ தேடுவதைப் போல் அங்கும்... இங்கும் சுழன்றுக் கொண்டும், போனை பார்ப்பதுமாக இருந்தது.
“தம்பி எப்படி இருக்கீங்க?” அருகில் ஒருவர் அவன் தோள் தட்டி விசாரிக்கவே, சட்டென பார்வையை அவர் பக்கம் திருப்பினான் கெளதம்.
கண்டக்டர் தான் அவனிடம் விசாரித்தார். “நல்லா இருக்கேன் தாத்தா” அவரிடம் கூறியவன், அவனுக்கும், மதிக்குமாக இரு டிக்கெட் எடுத்துக் கொண்டான்.
அவர் அவனுக்கு நன்கு பரிச்சயமானவர். மெதுவாக அவரிடம் எதுவோ கூற, சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டார். , உடனே பாக்கெட்டில் இருந்து பென் எடுத்தவன் எதையோ டிக்கெட் பின்னே எழுதினான்.
“டிக்கெட் எடுக்காதவங்க டிக்கெட் எடுங்கம்மா?” அவர் குரல் கொடுத்துக் கொண்டே மெதுவாக நகர, அவர் பின்னே அவனும் நகர்ந்தான்.
எல்லாரும் எப்படி இருக்கீங்க... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்.... வாத்தி இன்னைக்கு என்ன பண்ணபோகிறான் என்று பார்ப்போம் வாங்க... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... படிக்கிறவங்க ஒரு லைக் பண்ணலாமே ...
காதல் – 9
நான் விழும் போது தாங்கி பிடிக்கின்ற...
உன் விரலோடு உண்டானது என் காதல்...!!!
காலேஜ் வாசலில் நின்ற மதியின் கண்கள் நாலா பக்கமும் அவளையும் மீறி ஆர்வமாய் சுழன்றது. ஏன் என அவளுக்கே தெரியவில்லை. ‘அந்த போன் கால் எதுவும் உண்மை இல்லை’ எனத் தனக்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாலும், அலைப்பேசி இசைக்கையில் சட்டென ஒரு பரப்பரப்பு எழுவது எதனால் என அவளுக்குத் தெரியாதா என்ன?
இத்தனை வருடங்கள் தன்னைத் தீண்டாத காதல் உணர்வு, டீன் ஏஜில் வராத காதல் உணர்வு, ஒரு நிலைக்கு வந்த பிறகு தீண்டுவதை சற்று அதிர்வாய் உள்வாங்கி நின்றிருந்தாள். அது காதல் தானா? அவளுக்கே தெரியவில்லை... இந்த நிலையிலும் காதல் வருமா? விடை தெரியா கேள்வி அவளிடம்... அங்கு மரத்தடியில் நின்றிருந்த மாணவர்கள் அனைவரையும் பாராமல் பார்த்திருந்தாள்.
‘யாராவது தன்னையே பார்கிறார்களா? தன் செய்கையை கவனிக்கிறார்களா? இங்கே அவன் இருப்பானா? அவன் இதே கல்லூரியில் படிக்கிறானா? இல்லை வேறெங்கும் இருந்து என்னை கவனிக்கிறானா? நான் செல்லும் பஸ்சில் வருவானா? இன்று அவன் பேசுவானா? இல்லையென்றால் நேற்று யாரோ விளையாடி இருக்கிறார்களா? ஒரு நாள் வந்த கிச்சா இனி வரமாட்டானா? அது கிச்சா தானே? இல்லையென்றால்....’ அப்பப்பா வேண்டாம்..., இந்த நினைவே வேண்டாம்... அதை சட்டென உதறி தள்ளியவள் கண்களோ எங்கும் சுழலுவதை மட்டும் நிறுத்தவில்லை.
அதே நேரம், “டேய், கிளம்புடா போகலாம்?” கெளதம் அருகில் அஷோக் வந்து அமர்ந்தப் படிக் கூறினான்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுடா, அவளும் வரட்டும்”
“அவளா, அது யாருடா?”
“அதான்டா உன் தங்கச்சி”
“என்ன தங்கச்சியா? அவ எங்கடா இங்க?”
“டேய், அவ இங்க தான்டா இருக்கா, இங்க தான் படிக்கிறா” என்றவன் மதியை காட்ட,
“ஓஹோ, நம்மாளு பிரண்டா” உற்சாகமானான் அஷோக்.
“அது யாருடா, உனக்கு போய் ஆளா வந்தது?” கிண்டலாக கேட்டான் கெளதம்.
“ஏன்... ஏன்... எனக்கு என்ன குறை, நான் அழகன்டா?” என,
வாய் பொத்தி சிரித்தான் கெளதம். அவனைப் பார்த்தவன் “சரி விடு, வீட்டுக்கு கிளம்பலாம் வண்டியை எடு” என,
“அவளும் கிளம்பட்டும்டா?”
“சரி, எத்தனை நாள் தான் இப்படியே பார்ப்ப, போய் அவகிட்ட பேசு”
“இல்ல, வேண்டாம்டா, அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல, நான் அவளுக்கு தாலி கட்டியவன்னு அவ முன்னாடி போய் நின்னா என்னை ஏத்துப்பாளா? கண்டிப்பா மாட்டா?”
“அப்போ கிச்சாவா போ?”
“அதுவும் முடியாதுடா, எப்படி உடனே போய் அவள் முன்னாடி நிற்பது, அவள் மனசில நான் இருப்பேனான்னே தெரியல?”
“சரி இப்போ என்ன தான் பண்ணபோகிற?”
“அவ மனசில், யார் இருக்கான்னு தெரிஞ்ச பிறகு தான் அவளை நேரில் சந்திக்க போகிறேன்”
“அதுவரை இப்படி அவ பின்னாடியே சுத்த போறியா?”
“ஆமா”
“ஏன்டா மச்சான்... டீனேஜ் பசங்க மாதிரி என்னடா விளையாட்டு இது? அவ போற இடம் எல்லாம் போறது... அவளையே பாலோ பண்ணுறது... இதெல்லாம் நல்லாவா இருக்கு? ப்ரோபசர் மாதிரி இரேன்டா” கொஞ்சம் நக்கலாகவே கேட்டான் அஷோக்.
“ஜஸ்ட் என்ஜாய் தி மொமென்ட் டா” கெளதம் வெகு கேஷுவலாகச் சொல்ல, அவனை கொலைவெறியில் முறைத்தான் அஷோக்.
“ஏன்டா டேய்... காலேஜ் படிக்கும் போதே இதெல்லாம் செய்தால், ஏதோ திரில், கிக் இருக்குன்னு சொல்லலாம், இதென்னடா இப்போ போட்டு இப்படி எல்லாம் பண்ணுற? அடி வாங்க வச்சிராத... அவளுக்கு ஏதோ பாடிகார்ட் இருக்குன்னு வேற சொல்லுற பயமா இருக்குடா” புலம்பி தள்ளினான் அஷோக்.
அஷோக் புலம்பலை கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளாமல், தலையை கார் கண்ணாடியில் கொஞ்சமாய் சீவியவன், சட்டையை நீவி விட்டுக் கொண்டு “மச்சான், நான் எப்படி இருக்கேன் ஓகே தான?” ஷர்ட் கையை மடக்கி விட்டப்படி கேட்டான் கெளதம். அவனை கொலை வெறியில் முறைத்தான் அஷோக்.
“ஏன்டா என் உயிரை வாங்குற.., என்னவோ உன்னை பார்த்ததும் அவ ஓடி வந்து கட்டிபிடிச்சி கன்னத்துல இச்... இச் ன்னு முத்தம் கொடுக்க போற மாதிரி பில்டப் பண்ணுற, அவ, அவ வேலையை பாக்கபோறா, நீ ஒளிஞ்சிருந்து அவளை பாக்கப் போற? அதுக்கு நீ சட்டையை கிழிச்சு போட்டும் போகலாம்? சட்டையே போடாமலும் போகலாம், ஒரு வேளை அப்படி போனாலாவது வித்தியாசமா ஒரு மனுஷன் வர்றான்னு உன்னை கொஞ்சமாவது பார்க்க வாய்ப்பிருக்கு?”
அஷோக் சொல்லிமுடிக்கவும் முதுகில் பொத்தென்ன ரெண்டு அடி போட்டான் கெளதம். “ஹையோ... அம்மா எனக்கு ஆளு கிடைச்ச பொறாமையில் போட்டு அடிக்குறானே... இதை கேட்க யாருமே இல்லையா?” சன்னமாய் அலறினான் அஷோக்.
“அடேய்... சனியனே வாயை மூடுடா, ஏன்டா இப்படி கத்துற, அவ இங்க பாத்திற போறா?” அஷோக் வாயை மூடிய படியே சீறினான் கெளதம். நல்ல வேளை கார் கதவு மூடி இருந்ததால், அவர்கள் சத்தம் வெளியில் கேட்கவில்லை.
“பின்ன இப்படி கதவை மூடி வச்சு அடிச்சா, கத்தாம என்ன செய்வாங்க?” அவன் கையை வாயில் இருந்து விலக்கியபடியே நெளிந்தான் அஷோக்.
“ஒரு ஃபிரண்ட்... ஏதாவது கேட்டால் ஹெல்ப் பண்ணாம நக்கல் பேச்சு பேசுறியா நீ, பஸ் வருதான்னு பாரு போ?” அவனை பிடிச்சு கதவோடு தள்ள,
“எனக்கு ஒரு டவுட்?”
“என்ன, கேளு?”
“ஆமா, பஸ் வந்தா மட்டும் அவளை தள்ளிட்டு போய் நீ டூயட் ஆடிருவியா என்ன?”
“எங்கே சரியா கேட்கல, இன்னொரு வாட்டி சொல்லு பாப்போம்?” கெளதம் அவன் அருகில் காதை கொண்டு வர, அதே நேரம் பஸ் சத்தம் கேட்கவே, தற்சமயம் அவனை விட்டவன், “பஸ் பின்னாடியே மெதுவா வா, எனக்கு ஒரு சின்ன வேலை பஸ்ல இருக்கு, அதை முடிச்சுட்டு இறங்கவும் அப்படியே பிக் அப் பண்ணு?” எனக் கூறி இறங்க,
“உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா?” மெதுவாக புலம்ப,
“என்ன சொன்ன? சரியா கேட்கல, என் பக்கத்துல வந்து சொல்லு” கெளதம் திரும்பி கேட்க,
“இல்லைடா மச்சான், வண்டியை இப்படியே ஒட்டவா? இல்லை டோர் திறக்கவான்னு கேட்டேன்டா?” என்றவன் விட்டால் போதுமென அவனை தாண்டி சென்றான்.
பஸ் வரவே ஏறிக் கொண்டாள் மதி. பள்ளி, கல்லூரி முடியும் நேரம் என்பதால், மாணவர்களின் கூட்டம் அலைமோதியது. அனைவரது முகங்களும் களைப்புடன் இருக்க, மதி கண்கள் அடிக்கடி போனையே பார்த்துக் கொண்டது.
அதே நேரம் போன் அழைக்கவும், ஒரு வேளை, நேற்று பேசியவன் தான் அழைக்கிறானோ என ஆர்வமாக பார்த்தாள். இந்தர் தான் அழைத்திருந்தான்.
“சொல்லுடா இந்தர்”
“மதி பாத்து, பத்திரமா போ”
“சரிடா, நீ சீக்கிரமே வேலையை முடிச்சுட்டு வா?”
“எவ்ளோ சீக்கிரம் வரமுடியுமோ வருகிறேன்” எனக் கூறி அழைப்பை நிறுத்தினான்.
‘அவள் எங்கே...?” எண்ணியவனதுப் பார்வை ஒவ்வொரு ஆளாக சுற்றி வந்தது. அவன் தன் பார்வையில் விழவே அவன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். மங்கி இருந்த வீட்டில் எல்.ஈ.டி. பல்ப் எரிந்தது போல் பிரகாசமானது.
கண்டக்டர் இருக்கும் பக்கம் பார்க்க அவர் மும்முரமாய் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். ‘தான் இங்கிருப்பதை எப்படி அவளுக்கு தெரிவிப்பது?’ எண்ணியவன் அவளையே பார்த்திருந்தான்.
‘இப்பொழுது நேராக சென்று அவள் முன் போய் நின்றால் கூட, அவள் அவனை கண்டுக் கொள்வதில்லை தான், ஆனால் அவன் கண் அவளை ஜொள்ளுவதை கண்டாலே போதும், வாத்தி என்ற மரியாதை இல்லாமல் போகும்’ என்னப் பண்ணுவது யோசிக்க, அவள் கண்களோ யாரையோ தேடுவதைப் போல் அங்கும்... இங்கும் சுழன்றுக் கொண்டும், போனை பார்ப்பதுமாக இருந்தது.
“தம்பி எப்படி இருக்கீங்க?” அருகில் ஒருவர் அவன் தோள் தட்டி விசாரிக்கவே, சட்டென பார்வையை அவர் பக்கம் திருப்பினான் கெளதம்.
கண்டக்டர் தான் அவனிடம் விசாரித்தார். “நல்லா இருக்கேன் தாத்தா” அவரிடம் கூறியவன், அவனுக்கும், மதிக்குமாக இரு டிக்கெட் எடுத்துக் கொண்டான்.
அவர் அவனுக்கு நன்கு பரிச்சயமானவர். மெதுவாக அவரிடம் எதுவோ கூற, சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டார். , உடனே பாக்கெட்டில் இருந்து பென் எடுத்தவன் எதையோ டிக்கெட் பின்னே எழுதினான்.
“டிக்கெட் எடுக்காதவங்க டிக்கெட் எடுங்கம்மா?” அவர் குரல் கொடுத்துக் கொண்டே மெதுவாக நகர, அவர் பின்னே அவனும் நகர்ந்தான்.
Last edited: