கட்டங்கள் – 13
காலை நேரம்.
சூரிய பகவான் அவர் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தார். வெயிலின் தாக்கம் மதுசூதனன் அறையின் பால்கனியிலும் இருந்தது.
"நான் ஆபீஸ் போயிட்டு எல்லா formalities முடிச்சிட்டு உங்க ஆபீஸ் வந்திறேன்..." , என்று கூறி மதுசூதனனின் முகம் பார்த்தாள் நித்யா.
மதுசூதனன் கண்ணாடி முன் நின்று தன் முடியை கோதி கொண்டிருந்தான்.
"ஆபீஸ் எங்க இருக்குனு தெரியுமா..?" என்று தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த படியே மதுசூதனன் வினவ, "நீங்க அட்ரஸ் கொடுத்தா தெரிஞ்சிக்குறேன்..", என்று தன் மூடிய உதடுகளை பெரிதாக்கி கூறினாள் நித்யா.
"பார்க்க ஒல்லியா இருந்தாலும்.., உடம்பு முழுக்க கொழுப்பு... உன் கொழுப்பை ஓட்ஸ் போட்டே குறைக்கிறேன்..", என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு, "வாட்ஸப்ல மெசேஜ் பண்றேன்...", என்று கூறி படியே நித்யாவை பார்த்தான் மதுசூதனன்.
தலையில் கேட்ச் கிளிப், முடி ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தது. சின்ன பொட்டு , திருமணமான அடையாளமாக மேல் நெற்றியில் குங்குமம். சின்னதாக தோடு, அவன் கட்டிய தாலி பளபளவென்று மின்னியது. மெலிதாக செயின் உற்று பார்த்தால் தான் அந்த செயினை பார்க்க முடியும். கருப்பு லெக்கின்ஸ் , பிங்க் டாப்ஸ் அதில் கருப்பு பூக்கள். எந்தவித ஒப்பனையும் இன்றி நித்யாவின் முகம் புத்தம்புது பூவாய் இருந்தது.
"ஆபிஸ் கிளம்பிட்டியா..?" , என்று சந்தேகமாக மதுசூதனன் கேட்க, "ம்ம்..", என்று தலை அசைத்தாள் நித்யா.
தன் கைகளை திருப்பி மணி பார்த்தான் மதுசூதனன். "அம்மா, அப்பா காத்துகிட்டு இருப்பாங்க... காலையில நான் அம்மா, அப்பாவோட சேர்ந்து சாப்பிடுவேன்... போகலாம்... " , என்று கூறி படியிறங்கி டைன்னிங் டேபிளை நோக்கி நடந்தான் மதுசூதனன்.
"உப்பு இல்லாத ஓட்ஸ்.. அதுக்கு இவ்வளவு பில்ட் அப்..." , என்று நினைத்தபடி அவனை பின் தொடர்ந்தாள் நித்யா.
டைன்னிங் டேபிளில் அனைவரும் அமர, நித்யாவின் மூளை படு வேகமாக வேலை செய்தது. "நீ என்ன யோசித்தாலும் இன்று தப்பிக்க முடியாது..." , என்று மனதிற்குள் எண்ணியபடியே , அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்த மதுசூதனின் உதட்டோரம் வளைந்தது. அவன் புன்னகை கண்களில் தெரிந்தது. பெரியவர்கள் மதுசூதனனை கவனிக்கவில்லை. மாடியிலிருந்து , இவற்றை கவனித்து கொண்டிருந்தான் முகிலன்.
பெரியவர்களின் கவனம் வீட்டிற்கு புதியவளான நித்யாவின் மீது இருக்க, "என்ன நித்யா யோசிக்கிற..?", என்று வினவினார் கோவிந்தன்.
"நித்யா.. வாழ்க்கையில கிடைக்கிற சான்ஸ் தவற விடவே கூடாது..", என்று நினைத்த நித்யாவின் மூளை படு வேகமாக சிந்தித்து.
"அது... இன்னக்கி விரதம் மாமா.." , என்று கூறினாள் நித்யா. "என்ன விரதம் நித்யா?" , என்று புஷ்பா வினவ, "பதட்டத்துல நாள் கிழமை கூட ஞாபகம் வர மாட்டேங்குதே..." , என்று எண்ணியவளாக, "அது.. அது... ", என்று நித்யா தடுமாற, மதுசூதனன் தன் சிரிப்பை மறைக்க தன் கவனத்தை முழுமையாக கார்ன் பிலகேசில் செலுத்தி சாப்பிட்டு கொண்டிருந்தான்.
"பயப்படாத நித்யா... தைரியமா சொல்லு... ", என்று கோவிந்தன் கூற, "பயமா...? இவளுக்கா...?", என்று தன் இரு கண்களை விரித்து அவளை பார்த்தான் மதுசூதனன்.
"அது வந்து. விரதம்னா முழு நாள் எல்லாம் இல்லை... இன்னக்கி இவங்க ஆபீஸ் வர சொன்னங்க... புது இடம் இல்லையா..? அது தான் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு அப்புறம் சாப்பிடலாமுன்னு" , என்று நித்யா இழுக்க, " நல்ல விஷயம் தானே.... இதை சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம்...?", என்று சிரித்த முகமாக கூறினார் புஷ்பா.
அவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பார்த்து, "நீங்க தினமும் ஓட்ஸ் தான் சாப்பிடுவீங்களா..?" , என்று கரிசனத்ததோடு வினவினாள் நித்யா.
"உடம்புல நிறைய வியாதி.. பக்குவமா நிறைய பண்ணலாம்.. ஆனால் பேச்சியம்மா ஓட்ஸ் மட்டும் தான் பண்ணுவா.. " , என்று புஷ்பா சோகமாக கூற, "நாளைல இருந்து நான் பண்ணட்டுமா அத்தை...?", என்று நித்யா ஆர்வமாக வினவினாள்.
"உனக்கு சமைக்க தெரியுமா?", என்று கோவிந்தன் ஆச்சர்யமாக வினவினார்.
"சமைப்பேன் மாமா.. நாளைல இருந்து என் சமையல்.. எல்லாரும் சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ", என்று இன்முகத்தோடு கூறினாள் நித்யா.
"இது என்ன டிராக் மாறுது...?", என்று மதுசூதனன் சிந்திக்க, நித்யா எதிர் பக்கத்தில் நின்று கொண்டு மதுசூதனனை பார்த்து கண்ணடித்தாள்.
"எவ்வளவு நேரம் நின்னுக்கிட்டே பேசிக்கிட்டு இருப்ப...? உட்காரு...", என்று கோவிந்தன் கூற, "இல்லை மாமா நேரம் ஆகுது நான் கிளம்பறேன்...", என்று நித்யா கிளம்ப எத்தனித்தாள்.
"எங்க தனியா போற...? சேர்ந்து கிளம்புங்க..", என்று புஷ்பா கூற, "நான் என்ன இவளுக்கு டிரைவர் வேலையா பாக்கறேன்.. எப்படி மறுப்பது", என்று மதுசூதனன் சிந்திக்க.., "ஐயோ... அத்தை அதெல்லாம் வேண்டாம்... நான் பார்த்துகிறேன்...", என்று நித்யா பதறினாள்.
அந்த பதட்டம் அவனை சிந்திக்க வைத்தது. "இவள் ஏன் இப்படி பதட்டப்படறா... எங்கயோ இடிக்குதே....", என்று மதுசூதனன் யோசிக்க, "எந்த கோவிலுக்கு போகணும்...?", என்று கோவிந்தன் வினவினார்.
"வெளிய கிளம்பினா இவ்வளவு கேள்வியா...? எந்த கோவிலை சொல்லுவேன்.. ஏதாவது சொல்லு டி...", என்று தனக்கு தானே நித்யா புலம்பிக்கொள்ள, "எந்த கோவில் நித்யா..?" , என்று தன் கடைசி ஸ்பூன் கார்ன் பிளக்ஸ் சாப்பிட்டபடி வினவினான் மதுசூதனன்.
"என்ன அண்ணியை நிக்க வச்சி, எல்லாரும் கேள்வி கேக்கற மாதிரி இருக்கு..?", என்று வினவியபடியே படியிறங்கி வந்தான் முகிலன்.
" அப்படியெல்லாம் இல்லை... ", என்று மதுசூதனன் பதிலளிக்க, "ஆபீஸ் கிளம்பியாச்சா..? ", என்று வினவினார் கோவிந்தன். முகிலன் பதில் ஏதும் கூறாமல் தன் தலையை அசைக்க, "இவன் எப்பொழுது மாறுவானோ..?", என்று நினைத்துக் கொண்டான் மதுசூதனன்.
புஷ்பா எதுவும் பேசாமல் மெளனமாக உணவருந்த, "ப்ரோ.. நான் வடபழனி ஆபீஸ் போயிட்டு, அங்கிருந்து கம்பனிக்கு வந்திறேன்..", என்று மதுசூதனனிடம் கூறிவிட்டு , "byee...." , என்று பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பினான் முகிலன்.
"இந்த "bye..." நித்யா இருப்பதால் ", என்று நித்யாவை தவிர அனைவருக்கும் தெரிந்தது.
"எந்த கோவில்?" , என்று மீண்டும் மதுசூதனன் வினவ, "வடபழனி முருகன் கோவில் " , என்று அனைவரிடம் கூறிவிட்டு, "முகிலன் கூறிய வடபழனி வேலை செய்துவிட்டது" என்று நினைத்தாள் நித்யா.
"உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் கிளம்பறேன்..", என்று நித்யா அவசரமாக கிளம்ப, "இரு.. நானும் வரேன்.. நாம சேர்ந்தே போயிடலாம்...", என்று கூறினான் மதுசூதனன்.
தன் கண்களை விரித்து அவனை பாவமாக பார்த்தாள் நித்யா.
சற்று நேரத்தில் இருவரும் காரில் ஏறிக்கொள்ள, மதுசூதனன் காரை கிளப்பினான்.
காலை நேரம்.
சூரிய பகவான் அவர் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தார். வெயிலின் தாக்கம் மதுசூதனன் அறையின் பால்கனியிலும் இருந்தது.
"நான் ஆபீஸ் போயிட்டு எல்லா formalities முடிச்சிட்டு உங்க ஆபீஸ் வந்திறேன்..." , என்று கூறி மதுசூதனனின் முகம் பார்த்தாள் நித்யா.
மதுசூதனன் கண்ணாடி முன் நின்று தன் முடியை கோதி கொண்டிருந்தான்.
"ஆபீஸ் எங்க இருக்குனு தெரியுமா..?" என்று தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த படியே மதுசூதனன் வினவ, "நீங்க அட்ரஸ் கொடுத்தா தெரிஞ்சிக்குறேன்..", என்று தன் மூடிய உதடுகளை பெரிதாக்கி கூறினாள் நித்யா.
"பார்க்க ஒல்லியா இருந்தாலும்.., உடம்பு முழுக்க கொழுப்பு... உன் கொழுப்பை ஓட்ஸ் போட்டே குறைக்கிறேன்..", என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு, "வாட்ஸப்ல மெசேஜ் பண்றேன்...", என்று கூறி படியே நித்யாவை பார்த்தான் மதுசூதனன்.
தலையில் கேட்ச் கிளிப், முடி ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தது. சின்ன பொட்டு , திருமணமான அடையாளமாக மேல் நெற்றியில் குங்குமம். சின்னதாக தோடு, அவன் கட்டிய தாலி பளபளவென்று மின்னியது. மெலிதாக செயின் உற்று பார்த்தால் தான் அந்த செயினை பார்க்க முடியும். கருப்பு லெக்கின்ஸ் , பிங்க் டாப்ஸ் அதில் கருப்பு பூக்கள். எந்தவித ஒப்பனையும் இன்றி நித்யாவின் முகம் புத்தம்புது பூவாய் இருந்தது.
"ஆபிஸ் கிளம்பிட்டியா..?" , என்று சந்தேகமாக மதுசூதனன் கேட்க, "ம்ம்..", என்று தலை அசைத்தாள் நித்யா.
தன் கைகளை திருப்பி மணி பார்த்தான் மதுசூதனன். "அம்மா, அப்பா காத்துகிட்டு இருப்பாங்க... காலையில நான் அம்மா, அப்பாவோட சேர்ந்து சாப்பிடுவேன்... போகலாம்... " , என்று கூறி படியிறங்கி டைன்னிங் டேபிளை நோக்கி நடந்தான் மதுசூதனன்.
"உப்பு இல்லாத ஓட்ஸ்.. அதுக்கு இவ்வளவு பில்ட் அப்..." , என்று நினைத்தபடி அவனை பின் தொடர்ந்தாள் நித்யா.
டைன்னிங் டேபிளில் அனைவரும் அமர, நித்யாவின் மூளை படு வேகமாக வேலை செய்தது. "நீ என்ன யோசித்தாலும் இன்று தப்பிக்க முடியாது..." , என்று மனதிற்குள் எண்ணியபடியே , அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்த மதுசூதனின் உதட்டோரம் வளைந்தது. அவன் புன்னகை கண்களில் தெரிந்தது. பெரியவர்கள் மதுசூதனனை கவனிக்கவில்லை. மாடியிலிருந்து , இவற்றை கவனித்து கொண்டிருந்தான் முகிலன்.
பெரியவர்களின் கவனம் வீட்டிற்கு புதியவளான நித்யாவின் மீது இருக்க, "என்ன நித்யா யோசிக்கிற..?", என்று வினவினார் கோவிந்தன்.
"நித்யா.. வாழ்க்கையில கிடைக்கிற சான்ஸ் தவற விடவே கூடாது..", என்று நினைத்த நித்யாவின் மூளை படு வேகமாக சிந்தித்து.
"அது... இன்னக்கி விரதம் மாமா.." , என்று கூறினாள் நித்யா. "என்ன விரதம் நித்யா?" , என்று புஷ்பா வினவ, "பதட்டத்துல நாள் கிழமை கூட ஞாபகம் வர மாட்டேங்குதே..." , என்று எண்ணியவளாக, "அது.. அது... ", என்று நித்யா தடுமாற, மதுசூதனன் தன் சிரிப்பை மறைக்க தன் கவனத்தை முழுமையாக கார்ன் பிலகேசில் செலுத்தி சாப்பிட்டு கொண்டிருந்தான்.
"பயப்படாத நித்யா... தைரியமா சொல்லு... ", என்று கோவிந்தன் கூற, "பயமா...? இவளுக்கா...?", என்று தன் இரு கண்களை விரித்து அவளை பார்த்தான் மதுசூதனன்.
"அது வந்து. விரதம்னா முழு நாள் எல்லாம் இல்லை... இன்னக்கி இவங்க ஆபீஸ் வர சொன்னங்க... புது இடம் இல்லையா..? அது தான் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு அப்புறம் சாப்பிடலாமுன்னு" , என்று நித்யா இழுக்க, " நல்ல விஷயம் தானே.... இதை சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம்...?", என்று சிரித்த முகமாக கூறினார் புஷ்பா.
அவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பார்த்து, "நீங்க தினமும் ஓட்ஸ் தான் சாப்பிடுவீங்களா..?" , என்று கரிசனத்ததோடு வினவினாள் நித்யா.
"உடம்புல நிறைய வியாதி.. பக்குவமா நிறைய பண்ணலாம்.. ஆனால் பேச்சியம்மா ஓட்ஸ் மட்டும் தான் பண்ணுவா.. " , என்று புஷ்பா சோகமாக கூற, "நாளைல இருந்து நான் பண்ணட்டுமா அத்தை...?", என்று நித்யா ஆர்வமாக வினவினாள்.
"உனக்கு சமைக்க தெரியுமா?", என்று கோவிந்தன் ஆச்சர்யமாக வினவினார்.
"சமைப்பேன் மாமா.. நாளைல இருந்து என் சமையல்.. எல்லாரும் சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க... ", என்று இன்முகத்தோடு கூறினாள் நித்யா.
"இது என்ன டிராக் மாறுது...?", என்று மதுசூதனன் சிந்திக்க, நித்யா எதிர் பக்கத்தில் நின்று கொண்டு மதுசூதனனை பார்த்து கண்ணடித்தாள்.
"எவ்வளவு நேரம் நின்னுக்கிட்டே பேசிக்கிட்டு இருப்ப...? உட்காரு...", என்று கோவிந்தன் கூற, "இல்லை மாமா நேரம் ஆகுது நான் கிளம்பறேன்...", என்று நித்யா கிளம்ப எத்தனித்தாள்.
"எங்க தனியா போற...? சேர்ந்து கிளம்புங்க..", என்று புஷ்பா கூற, "நான் என்ன இவளுக்கு டிரைவர் வேலையா பாக்கறேன்.. எப்படி மறுப்பது", என்று மதுசூதனன் சிந்திக்க.., "ஐயோ... அத்தை அதெல்லாம் வேண்டாம்... நான் பார்த்துகிறேன்...", என்று நித்யா பதறினாள்.
அந்த பதட்டம் அவனை சிந்திக்க வைத்தது. "இவள் ஏன் இப்படி பதட்டப்படறா... எங்கயோ இடிக்குதே....", என்று மதுசூதனன் யோசிக்க, "எந்த கோவிலுக்கு போகணும்...?", என்று கோவிந்தன் வினவினார்.
"வெளிய கிளம்பினா இவ்வளவு கேள்வியா...? எந்த கோவிலை சொல்லுவேன்.. ஏதாவது சொல்லு டி...", என்று தனக்கு தானே நித்யா புலம்பிக்கொள்ள, "எந்த கோவில் நித்யா..?" , என்று தன் கடைசி ஸ்பூன் கார்ன் பிளக்ஸ் சாப்பிட்டபடி வினவினான் மதுசூதனன்.
"என்ன அண்ணியை நிக்க வச்சி, எல்லாரும் கேள்வி கேக்கற மாதிரி இருக்கு..?", என்று வினவியபடியே படியிறங்கி வந்தான் முகிலன்.
" அப்படியெல்லாம் இல்லை... ", என்று மதுசூதனன் பதிலளிக்க, "ஆபீஸ் கிளம்பியாச்சா..? ", என்று வினவினார் கோவிந்தன். முகிலன் பதில் ஏதும் கூறாமல் தன் தலையை அசைக்க, "இவன் எப்பொழுது மாறுவானோ..?", என்று நினைத்துக் கொண்டான் மதுசூதனன்.
புஷ்பா எதுவும் பேசாமல் மெளனமாக உணவருந்த, "ப்ரோ.. நான் வடபழனி ஆபீஸ் போயிட்டு, அங்கிருந்து கம்பனிக்கு வந்திறேன்..", என்று மதுசூதனனிடம் கூறிவிட்டு , "byee...." , என்று பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பினான் முகிலன்.
"இந்த "bye..." நித்யா இருப்பதால் ", என்று நித்யாவை தவிர அனைவருக்கும் தெரிந்தது.
"எந்த கோவில்?" , என்று மீண்டும் மதுசூதனன் வினவ, "வடபழனி முருகன் கோவில் " , என்று அனைவரிடம் கூறிவிட்டு, "முகிலன் கூறிய வடபழனி வேலை செய்துவிட்டது" என்று நினைத்தாள் நித்யா.
"உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் கிளம்பறேன்..", என்று நித்யா அவசரமாக கிளம்ப, "இரு.. நானும் வரேன்.. நாம சேர்ந்தே போயிடலாம்...", என்று கூறினான் மதுசூதனன்.
தன் கண்களை விரித்து அவனை பாவமாக பார்த்தாள் நித்யா.
சற்று நேரத்தில் இருவரும் காரில் ஏறிக்கொள்ள, மதுசூதனன் காரை கிளப்பினான்.