கட்டங்கள் – 20
அசோக் வருடக்கணக்காக வேலை தேடிக் கொண்டிருந்த வேளையில் கிடைத்த இந்த வேலை அவனுக்கு ஓர் பொன்னான வாய்ப்பாக தோன்றியது.
Advent_Tech, வெண்பா இந்த பெயரை சொன்ன உடன், அவன் கூகிளில் பிரௌஸ் செய்ததில் கிடைத்த விஷயத்தில் அசோக் மகிழ்ச்சியாக இருந்தான்.அது ஒரு Gaming Software உருவாக்கும் கம்பனி. ஆனால் அவனுக்கு வெண்பாவின் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை.
"இவர்கள் எப்படி எனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியும்...? பார்த்தால் படித்தவர்கள் போல் தான் தெரிகிறது. அத்தனை செல்வாக்கு இருந்தால் இவர்கள் ஏன் இந்த வேலைக்கு செல்லாமல் நம் வீட்டில் இருக்க வேண்டும். இந்த எண்ணங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு, முயற்சி செய்து பார்க்கலாம்”, என்று எண்ணி காலையில் கிளம்பிருந்தான் அசோக்.
ஆனால், அங்கிருந்த company magazine ல் வெண்பாவின் புகைப்படத்தை பார்த்த அசோக் அதிர்ச்சியில் உறைந்தான்.
தன் டேபிளில் இருந்த, அனைத்து magazine யையும் வேகமகா புரட்டினான். விதவிதமாக வெண்பாவின் புகைப்படங்களை அவனால் பார்க்க முடிந்தது. "இந்த கம்பெனியில் பெரிய பதவியில் இருந்திருக்க வேண்டும்", என்று எண்ணியவனாக, அனைத்து புகைப்படங்களையும் பார்த்தான்.
Formal pant shirt அணிந்து கொண்டு ஒரு மீட்டிங்கில் இருப்பது போன்ற புகைப்படம். பட்டு சேலை, பல வைரங்களோடு ஜொலித்தார் போல் cultural program இல் ஒரு புகைப்படம். Jeans, Tshirt அணிந்து கொண்டு Team Outing இல் எடுத்த புகைப்படம் என பல.
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் வெண்பாவின் புகைப்படத்தை காட்டி,” யார்?”, என்று கேட்டான் அசோக். அந்த பெண் இவனை மேலும் கீழுமாக பார்த்து, " இந்த கம்பனி CEO சதாசிவத்தோடு பொண்ணு வெண்பா. இப்ப கொஞ்சம் நாளா அவங்க இங்க வரவில்லை.”, என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். தலை அசைத்து அமைதியாக கேட்டுக் கொண்டான்.
அனைவரயும் பெயர் சொல்லி அழைக்கும் IT culture அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த பெண் கூறிய செய்தி அதை விட, அதிர்ச்சியாக இருந்தது.
அந்த அதிர்ச்சியை பின்னுக்கு தள்ளுவது போல், அவன் கண்முன், தண்ணியை கவிழ்த்துவிட்டு, காட்டன் சுடிதாரில் பரிதாபமாக அமுதவள்ளியின் முன் நின்ற வெண்பா தோன்றினாள். எத்தனை ஏச்சு பேச்சுக்கள்.. இதெல்லாம் இவர்களுக்கு தேவையா..? ராணி போல் வாழ்ந்திருப்பார்கள் போல தெரிகிறதே.. இவர்களுக்கு இத்தனை கஷ்டம் எதற்காக..? முரளியின் மேல் கொண்ட காதலா..? அப்படி என்ன பெற்றோரை உதறி தள்ளும் காதல்...!!! அசோக்கிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
இந்த பெண்கள் எத்தகையவர்கள்? அம்மா மீதும், சித்ராவின் மீதும் அவனுக்கு பாசம் உண்டு.. ஆனால் மரியாதை, முதல் முறையாக வெண்பாவின் மீது வந்தது.
தன் வசதி, சொந்த பந்தம் என் அனைத்தையும் விட்டுவிட்டு கணவனுக்காக வும், காதலனுக்காக வும் வரும் பெண்களை இந்த ஆண் சமுதாயம் எப்படி நடத்த வேண்டும்.??
"நான் எத்தனை சிறு பிள்ளை தனமாக பெண்களுக்கு ரோஜா பூ கொடுப்பது, கேலி செய்வது..", என்று இருந்திருக்கிறேன் ,என்று முதல் முறையாக வருந்தினான் அசோக். "ஆண் பிள்ளை என்று கர்வமாக வளர்த்த என்னை, பெண்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சொல்லித் தரவில்லையே....", என்று வருந்தினான் அசோக்.
ஆனால் அண்ணி, “என்னை அவர்கள் சாம்ராஜ்யத்திற்கு அனுப்பிவைத்து ஓரே நாளில் பாடம் கற்பித்து விட்டார்களே..!!!", என்று நினைத்தான். வெண்பாவின் மீது மதிப்பு அவனுக்கு பன் மடங்காக உயர்ந்தது.
"இனி என்னை வேலை இல்லையென்று ஏளனமாக யாரும் பார்க்க மாட்டார்கள்.. என்ன வெட்டி முறிக்குற..? , என்ற குத்தல் பேச்சு இருக்காது.. ", இந்த எண்ணங்கள் அசோக்கிற்கு நிம்மதியையும், நிமிர்வையும் கொடுத்தது.
முதல் நாள் ட்ரைனிங் வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தோடு பைக்கில் வீட்டை நோக்கி சென்றான் அசோக். வீட்டிற்கு செல்லும் வழியில், ஸ்வீட் வாங்கி கொண்டு தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்த படியே அவர்கள் அபார்ட்மெண்டை வந்தடைந்தான் அசோக்.
அசோக் படி ஏற, முற்படுகையில், காயத்திரி அவர்கள் வீட்டில் இருந்து கீழே இறங்க எத்தனித்தாள். அசோக்கை பார்த்த உடன், "ஐயோ.. இவன் நிச்சயம் எனக்கு வழி தராமல் வம்பிழுப்பான்", என்ற எண்ணம் தோன்ற அங்கே நின்று கொண்டு அசோக்கிற்கு வழி கொடுத்தாள் காயத்ரி.
காயத்ரி மேலே நிற்பதை பார்த்து விட்டு, "காயத்ரி, கீழ அங்கிள் உனக்காக வெய்ட் பன்றாங்க.. ", என்று குரல் கொடுத்துவிட்டு, ஒதுங்கி நின்றான் அசோக். ஆச்சரியமாக அவனை மேலும் கீழும் பார்த்தபடி படி இறங்கினாள் காயத்ரி. "இவனுக்கு என்ன ஆயிற்று..? போதி மரத்தடியில் இன்று அமர்ந்திருப்பானோ..?", என்ற நினைத்துக்கொண்டே, தன் தந்தையை நோக்கி நடந்து சென்றாள் காயத்ரி.
படி ஏறி வீட்டிற்குள் நுழைந்த அசோக், "அப்பா.. எனக்கு வேலை கிடைச்சிருச்சு..", என்று கூறி, தன் தந்தையிடம் இனிப்பை நீட்டினான். "என்னடா.. இன்டெர்வியூன்னு சொல்லவேயில்லயே...?", என்று சுந்தரம் வினவ, "எப்ப பார்த்தாலும் ஏதாவது கேள்வி கேளுங்க..? இன்டெர்வியூன்னு சொல்லுவான்... என்ன ஏதுன்னு கேட்பீங்க.. அது தான் கிடைத்த பிறகு சொல்லிக்கலாமுன்னு நினைத்திருப்பான்.. அவன் எவ்வளவு நல்ல விஷயம் சொல்லிருக்கான்.., அதை மட்டும் பாருங்க.. ", என்று அமுதவள்ளி அவனுக்கு திருஷிட்டி சுற்றினாள்.
"அம்மா... ஸ்வீட் எடுத்துக்கோங்க...", என்று தன் தாயிடம் இனிப்பை கொடுத்து விட்டு , "கங்கிராட்ஸ் அண்ணா..", என்று கூறி கை குலுக்கிய சித்ராவின் தலையில் தட்டி, "இனி நீ என்ன கேட்டாலும்..இந்த ப்ரோ வாங்கி கொடுப்பான்..", என்று ஸ்டலாக கூறினான் அசோக்.
தன் கண்களால் வீட்டை அசோக் அளக்க, "முரளி அண்ணா இன்னும் வரலை..", என்று சித்ரா கூறினாள். "அண்ணி....", என்று இழுத்த அசோக்கை சுந்தரமும் , சித்ராவும் ஆச்சர்யமாகி பார்க்க, அமுதவள்ளி கூர்மையாக பார்த்தார்.
"அண்ணி அவங்க ரூம்ல தான் இருக்காங்க..", என்று சித்ரா இன்முகத்தோடு கூற, "அண்ணி...", என்று அழைத்துக் கொண்டு அறை வாசலில் அசோக் நிற்க, "அசோக் உள்ள வா.. ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கிற..?", என்று வெண்பா சிரித்த முகமாக கூற, "தேங்க்ஸ் அண்ணி " , என்று மெதுவாக கூறினான் அசோக்.
வெண்பா அங்கும் இங்கும் ஏதோ தேட, "அண்ணி , என்ன தேடறீங்க..?", என்று கையில் இனிப்புகளை வைத்துக்கொண்டே அசோக் கூர்மையான கண்களோடு கேட்க, "அன்று மாடியில கெத்தா ஸ்டைலா அசோக்ன்னு ஒருத்தரை பார்த்தேன், அவரை காணும்", என்றும் அங்கும் இங்கும் தேடியபடியே வெண்பா கூறினாள். "அண்ணி...", என்று அசோக் மென்மையாக அழுத்தமாக அழைத்தான்.
"ஏன் ? பணம் பதவின்னா.. அவ்வளவு பயமா..?", என்று வெண்பா கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி புருவம் உயர்த்தி வினவ, "இல்லை அண்ணி... அத்தனையும் விட்டுட்டு அண்ணனுக்காக வந்திருக்கீங்க...? இங்க அவ்வளவு எளிமையான வாழ்க்கையை வாழற உங்க மேல எனக்கு ஏற்பட்ட மரியாதை...", என்று அசோக் தன்மையாக கூறினான்.
"உங்க அண்ணனுக்காக என் வாழ்க்கையில், நான் எதையும் விட்டுக்கொடுத்திருவேன்....", என்று வெண்பா கண்களில் கனிவோடு கூற, "எல்லாரும் சொல்லுவாங்க... ஆனால் நடைமுறையில் வாழறது பெரிய விஷயம்.You are really great… அண்ணா so lucky… என்று பெருமிதத்தோடு கூறினான் அசோக்.
அசோக் வருடக்கணக்காக வேலை தேடிக் கொண்டிருந்த வேளையில் கிடைத்த இந்த வேலை அவனுக்கு ஓர் பொன்னான வாய்ப்பாக தோன்றியது.
Advent_Tech, வெண்பா இந்த பெயரை சொன்ன உடன், அவன் கூகிளில் பிரௌஸ் செய்ததில் கிடைத்த விஷயத்தில் அசோக் மகிழ்ச்சியாக இருந்தான்.அது ஒரு Gaming Software உருவாக்கும் கம்பனி. ஆனால் அவனுக்கு வெண்பாவின் மேல் பெரிதாக நம்பிக்கை இல்லை.
"இவர்கள் எப்படி எனக்கு வேலை வாங்கி கொடுக்க முடியும்...? பார்த்தால் படித்தவர்கள் போல் தான் தெரிகிறது. அத்தனை செல்வாக்கு இருந்தால் இவர்கள் ஏன் இந்த வேலைக்கு செல்லாமல் நம் வீட்டில் இருக்க வேண்டும். இந்த எண்ணங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு, முயற்சி செய்து பார்க்கலாம்”, என்று எண்ணி காலையில் கிளம்பிருந்தான் அசோக்.
ஆனால், அங்கிருந்த company magazine ல் வெண்பாவின் புகைப்படத்தை பார்த்த அசோக் அதிர்ச்சியில் உறைந்தான்.
தன் டேபிளில் இருந்த, அனைத்து magazine யையும் வேகமகா புரட்டினான். விதவிதமாக வெண்பாவின் புகைப்படங்களை அவனால் பார்க்க முடிந்தது. "இந்த கம்பெனியில் பெரிய பதவியில் இருந்திருக்க வேண்டும்", என்று எண்ணியவனாக, அனைத்து புகைப்படங்களையும் பார்த்தான்.
Formal pant shirt அணிந்து கொண்டு ஒரு மீட்டிங்கில் இருப்பது போன்ற புகைப்படம். பட்டு சேலை, பல வைரங்களோடு ஜொலித்தார் போல் cultural program இல் ஒரு புகைப்படம். Jeans, Tshirt அணிந்து கொண்டு Team Outing இல் எடுத்த புகைப்படம் என பல.
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் வெண்பாவின் புகைப்படத்தை காட்டி,” யார்?”, என்று கேட்டான் அசோக். அந்த பெண் இவனை மேலும் கீழுமாக பார்த்து, " இந்த கம்பனி CEO சதாசிவத்தோடு பொண்ணு வெண்பா. இப்ப கொஞ்சம் நாளா அவங்க இங்க வரவில்லை.”, என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். தலை அசைத்து அமைதியாக கேட்டுக் கொண்டான்.
அனைவரயும் பெயர் சொல்லி அழைக்கும் IT culture அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த பெண் கூறிய செய்தி அதை விட, அதிர்ச்சியாக இருந்தது.
அந்த அதிர்ச்சியை பின்னுக்கு தள்ளுவது போல், அவன் கண்முன், தண்ணியை கவிழ்த்துவிட்டு, காட்டன் சுடிதாரில் பரிதாபமாக அமுதவள்ளியின் முன் நின்ற வெண்பா தோன்றினாள். எத்தனை ஏச்சு பேச்சுக்கள்.. இதெல்லாம் இவர்களுக்கு தேவையா..? ராணி போல் வாழ்ந்திருப்பார்கள் போல தெரிகிறதே.. இவர்களுக்கு இத்தனை கஷ்டம் எதற்காக..? முரளியின் மேல் கொண்ட காதலா..? அப்படி என்ன பெற்றோரை உதறி தள்ளும் காதல்...!!! அசோக்கிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
இந்த பெண்கள் எத்தகையவர்கள்? அம்மா மீதும், சித்ராவின் மீதும் அவனுக்கு பாசம் உண்டு.. ஆனால் மரியாதை, முதல் முறையாக வெண்பாவின் மீது வந்தது.
தன் வசதி, சொந்த பந்தம் என் அனைத்தையும் விட்டுவிட்டு கணவனுக்காக வும், காதலனுக்காக வும் வரும் பெண்களை இந்த ஆண் சமுதாயம் எப்படி நடத்த வேண்டும்.??
"நான் எத்தனை சிறு பிள்ளை தனமாக பெண்களுக்கு ரோஜா பூ கொடுப்பது, கேலி செய்வது..", என்று இருந்திருக்கிறேன் ,என்று முதல் முறையாக வருந்தினான் அசோக். "ஆண் பிள்ளை என்று கர்வமாக வளர்த்த என்னை, பெண்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சொல்லித் தரவில்லையே....", என்று வருந்தினான் அசோக்.
ஆனால் அண்ணி, “என்னை அவர்கள் சாம்ராஜ்யத்திற்கு அனுப்பிவைத்து ஓரே நாளில் பாடம் கற்பித்து விட்டார்களே..!!!", என்று நினைத்தான். வெண்பாவின் மீது மதிப்பு அவனுக்கு பன் மடங்காக உயர்ந்தது.
"இனி என்னை வேலை இல்லையென்று ஏளனமாக யாரும் பார்க்க மாட்டார்கள்.. என்ன வெட்டி முறிக்குற..? , என்ற குத்தல் பேச்சு இருக்காது.. ", இந்த எண்ணங்கள் அசோக்கிற்கு நிம்மதியையும், நிமிர்வையும் கொடுத்தது.
முதல் நாள் ட்ரைனிங் வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தோடு பைக்கில் வீட்டை நோக்கி சென்றான் அசோக். வீட்டிற்கு செல்லும் வழியில், ஸ்வீட் வாங்கி கொண்டு தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்த படியே அவர்கள் அபார்ட்மெண்டை வந்தடைந்தான் அசோக்.
அசோக் படி ஏற, முற்படுகையில், காயத்திரி அவர்கள் வீட்டில் இருந்து கீழே இறங்க எத்தனித்தாள். அசோக்கை பார்த்த உடன், "ஐயோ.. இவன் நிச்சயம் எனக்கு வழி தராமல் வம்பிழுப்பான்", என்ற எண்ணம் தோன்ற அங்கே நின்று கொண்டு அசோக்கிற்கு வழி கொடுத்தாள் காயத்ரி.
காயத்ரி மேலே நிற்பதை பார்த்து விட்டு, "காயத்ரி, கீழ அங்கிள் உனக்காக வெய்ட் பன்றாங்க.. ", என்று குரல் கொடுத்துவிட்டு, ஒதுங்கி நின்றான் அசோக். ஆச்சரியமாக அவனை மேலும் கீழும் பார்த்தபடி படி இறங்கினாள் காயத்ரி. "இவனுக்கு என்ன ஆயிற்று..? போதி மரத்தடியில் இன்று அமர்ந்திருப்பானோ..?", என்ற நினைத்துக்கொண்டே, தன் தந்தையை நோக்கி நடந்து சென்றாள் காயத்ரி.
படி ஏறி வீட்டிற்குள் நுழைந்த அசோக், "அப்பா.. எனக்கு வேலை கிடைச்சிருச்சு..", என்று கூறி, தன் தந்தையிடம் இனிப்பை நீட்டினான். "என்னடா.. இன்டெர்வியூன்னு சொல்லவேயில்லயே...?", என்று சுந்தரம் வினவ, "எப்ப பார்த்தாலும் ஏதாவது கேள்வி கேளுங்க..? இன்டெர்வியூன்னு சொல்லுவான்... என்ன ஏதுன்னு கேட்பீங்க.. அது தான் கிடைத்த பிறகு சொல்லிக்கலாமுன்னு நினைத்திருப்பான்.. அவன் எவ்வளவு நல்ல விஷயம் சொல்லிருக்கான்.., அதை மட்டும் பாருங்க.. ", என்று அமுதவள்ளி அவனுக்கு திருஷிட்டி சுற்றினாள்.
"அம்மா... ஸ்வீட் எடுத்துக்கோங்க...", என்று தன் தாயிடம் இனிப்பை கொடுத்து விட்டு , "கங்கிராட்ஸ் அண்ணா..", என்று கூறி கை குலுக்கிய சித்ராவின் தலையில் தட்டி, "இனி நீ என்ன கேட்டாலும்..இந்த ப்ரோ வாங்கி கொடுப்பான்..", என்று ஸ்டலாக கூறினான் அசோக்.
தன் கண்களால் வீட்டை அசோக் அளக்க, "முரளி அண்ணா இன்னும் வரலை..", என்று சித்ரா கூறினாள். "அண்ணி....", என்று இழுத்த அசோக்கை சுந்தரமும் , சித்ராவும் ஆச்சர்யமாகி பார்க்க, அமுதவள்ளி கூர்மையாக பார்த்தார்.
"அண்ணி அவங்க ரூம்ல தான் இருக்காங்க..", என்று சித்ரா இன்முகத்தோடு கூற, "அண்ணி...", என்று அழைத்துக் கொண்டு அறை வாசலில் அசோக் நிற்க, "அசோக் உள்ள வா.. ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கிற..?", என்று வெண்பா சிரித்த முகமாக கூற, "தேங்க்ஸ் அண்ணி " , என்று மெதுவாக கூறினான் அசோக்.
வெண்பா அங்கும் இங்கும் ஏதோ தேட, "அண்ணி , என்ன தேடறீங்க..?", என்று கையில் இனிப்புகளை வைத்துக்கொண்டே அசோக் கூர்மையான கண்களோடு கேட்க, "அன்று மாடியில கெத்தா ஸ்டைலா அசோக்ன்னு ஒருத்தரை பார்த்தேன், அவரை காணும்", என்றும் அங்கும் இங்கும் தேடியபடியே வெண்பா கூறினாள். "அண்ணி...", என்று அசோக் மென்மையாக அழுத்தமாக அழைத்தான்.
"ஏன் ? பணம் பதவின்னா.. அவ்வளவு பயமா..?", என்று வெண்பா கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி புருவம் உயர்த்தி வினவ, "இல்லை அண்ணி... அத்தனையும் விட்டுட்டு அண்ணனுக்காக வந்திருக்கீங்க...? இங்க அவ்வளவு எளிமையான வாழ்க்கையை வாழற உங்க மேல எனக்கு ஏற்பட்ட மரியாதை...", என்று அசோக் தன்மையாக கூறினான்.
"உங்க அண்ணனுக்காக என் வாழ்க்கையில், நான் எதையும் விட்டுக்கொடுத்திருவேன்....", என்று வெண்பா கண்களில் கனிவோடு கூற, "எல்லாரும் சொல்லுவாங்க... ஆனால் நடைமுறையில் வாழறது பெரிய விஷயம்.You are really great… அண்ணா so lucky… என்று பெருமிதத்தோடு கூறினான் அசோக்.
Last edited: