கட்டங்கள் – 23
அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு, அவர்களது அறைக்கு செல்ல, நித்யா தன் வேலைகளை முடித்துவிட்டு தங்கள் அறைக்கு வந்தாள்.
மதுசூதனன் அவர்கள் அறையில் சோபாவில் சாய்ந் து தன் வேலைகளை பார்த்தபடி லேப்டாப்பில் மூழ்கிருந்தான். நித்யா பால்கனி ஊஞ்சலில் அமர்ந்தபடி தோட்டத்தை ரசித்து கொண்டிருந்தாள்.
"நித்யா ஐந்து நிமிடம்.., என் வேலை முடிந்திரும்..", என்று மதுசூதனன் வேலை பார்த்தபடியே குரல் கொடுக்க, "எதுவும் அவசரம் இல்லை..", என்று வானத்தை பார்த்தபடி பதில் கூறிவிட்டு, காலை தரையில் ஊன்றி ஊஞ்சலை முன்னும் பின்னும் ஆடச் செய்தாள்.
சிறிது நேரம் கழித்து, மதுசூதனன் லைட் ஆப் செய்துவிட்டு படுக்க, நித்யா தூக்கம் வராமல் மெத்தையில் அங்கும் இங்கும் புரள, தன் ஓரக்கண்களால் மதுசூதனன் அவளை நோட்டமிட்டான்.
"பிடிக்காத புருஷன்.., புது இடமாக இருந்தாலும்.., நிம்மதியா தூங்குவாளே.. ", என்று சிந்தித்தபடி அவளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் மதுசூதனன்.
தூக்கம் வராமல் மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்தாள் நித்யா.
"தூக்கம் வரலியா பேபி..?", என்று மதுசூதனன் நக்கலாக வினவ, "என்னை நீங்க ஏன் பேபின்னு அடிக்கடி கூப்பிடறீங்க...?", என்று முகத்தை சுருக்கி கொண்டு நித்யா கேட்டாள்.
"அதனால் தான் தூக்கம் வரலியா..?", என்று தனக்குள் தோன்றிய புன்னகையை மறைத்து சுவரை பார்த்தபடி கேட்டான் மதுசூதனன்.
அவனை முறைத்து பார்த்தாள் நித்யா.
"சரி கோபப்படாத.., நான் எதுவும் கேட்கல..", என்று மதுசூதனன் சமாதான கோடியை பறக்க விட, "இது இவன் குணமே கிடையாதே...", என்று அவனை ஆழமாக பார்த்தாள் நித்யா.
"நீங்க எதுவுமே கேட்காம இருந்தாலும் நான் சொல்லுவேன்... ", என்று நித்யா அவனை பார்த்தபடியே கூறினாள்.
"அது தானே பார்த்தேன்... இவளாவது அமைதியா இருக்கிறதாவது..", என்று நினைத்தபடி அமைதியாக படுத்திருந்தான் மதுசூதனன்.
"என் தூக்கம் கெட்டதுக்கு நீங்க தான் காரணம்..", என்று அவனை முறைத்தபடி கூறினாள் நித்யா.
அதிர்ச்சி அடைந்தவனாக எழுந்து அமர்ந்தான் மதுசூதனன்.
"நீ ஆயிரம் பேர் தூக்கத்தை கெடுப்ப, நான் உன் தூக்கத்தை கெடுத்தேனா..?" , என்று அவளிடம் சண்டைக்கு சென்றான் மதுசூதனன்.
"எனக்கு யார் தூக்கத்தைக் கெடுத்தும் பழக்கம் கிடையாது..", என்று எங்கோ பார்த்தபடி நித்யா கூற, "சரி அதை விடு.., நான் என்ன செய்தேன்.. அதை சொல்லு...", என்று சுவாரசியமாக கேட்டான் மதுசூதனன்.
"தூங்கிற இடத்துக்கு இவ்வளவு அழகு தேவையா..? எனக்கு தூக்கம் வரலை.. இதை பார்த்துகிட்டே இருக்கணுமுன்னு தோணுது...", என்று குற்றம் சாட்டும் குரலில் நித்யா கூற.., "இது தான் விஷயமா..? நான் கூட வேற எதுவோ நினைத்தேன்...", என்று சலிப்பாக கூறிவிட்டு மீண்டும் படுத்தான் மதுசூதனன்.
அவள் பக்கமாக திரும்பி படுத்த மதுசூதனன், அவளை கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
நித்யா தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
"நித்யா" , என்று மெதுவாக அழைத்தான்.
பதில் ஏதும் பேசாமல், அவனை திரும்பி பார்த்தாள் நித்யா.
"அவசியம் இந்த டீல் வேணுமா..?" , என்று ஆழமாக கேட்டான் மதுசூதனன்.
நித்யா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
"இது தான் உனக்கு கடைசி சந்தர்ப்பம்.. நீ டீல் கேன்சல் பண்ணலாமுன்னு சொல்லு.. நான் உன் ப்ரொஜெக்ட்க்கு இடைஞ்சலா இருக்கமாட்டேன்... ", என்று மதுசூதனன் இன்முகமாக கூற, "கடைசி சந்தர்ப்பமா...? நாளைல இருந்து நீங்க எனக்காக எல்லாமே பண்ணுவீங்க.. நான் பண்ண வைப்பேன்.. உங்களுக்கு எப்படி Society Status முக்கியமோ..? அதே மாதிரி எனக்கு என் சுயமரியாதை முக்கியம்...", என்று கூறிவிட்டு எதிர் பக்கம் திரும்பி படுத்து கொண்டாள் நித்யா.
நித்யா தன் கண்களை மூடிக்கொண்டு வராத தூக்கத்தை வா..! வா..! என்றழைக்க, அவள் கண்முன்னே அந்த வேலைப்பாடு நிறைந்த கத்தி தோன்றியது.
கண்களை இறுக மூடிக்கொண்டு, "இது யாருடைய வேலையாக இருக்கும்..?", என்று சிந்தித்தபடியே கண் அயர்ந்துவிட்டாள் நித்யா.
"சுயமரியாதை.. இந்த சுயமரியாதை இருந்திருந்தா என்னை கல்யாணம் செய்திருக்கவே கூடாது.. இந்த வாழ்க்கையிலிருந்து நீ தப்பிக்கவே முடியாது... ", என்று எண்ணியபடி மதுசூதனன் கண்ணுறங்கினான்.
வெள்ளை சட்டை அணிந்துகொண்டு அலுவலகத்திற்கு தயாரான நிலையில், படியிறங்கினான் மதுசூதனன். அவனை பார்த்த நித்யா, "இது என்ன எப்பொழுதுமே வெள்ளை சட்டை சீருடை போல.. ", என்று எண்ணினாள் நித்யா. "அதை பற்றி நமக்கென்ன...", என்ற எண்ணம் தோன்ற தோளைக் குலுக்கி கொண்டு தன் வேலையை தொடங்கினாள்.
சாப்பிடுவதற்காக மதுசூதனன் நாற்காலியில் அமர, அவனை பார்த்தது கண் சிமிட்டி சிரித்தாள் நித்யா.
"ஏதோ சரியில்லையே..!!", என்று மதுசூதனன் சிந்திக்க, " என்னவாக இருக்கும்..?", என்று நித்யாவை கூர்மையாக பார்த்த படி சிந்தித்தான் மதுசூதனன்.
நித்யா அனைவருக்கும் சப்பாத்தி , பச்சைப்பயிறு தால்.., வெள்ளரிக்காய் ரெய்தா.., செய்த்திருந்தாள். கோவிந்தன், புஷ்பா இருவரும் தினமும் இவள் சமையலை பாராட்ட தவறியதே இல்லை..
"அண்ணி.. இந்த வீக்கெண்ட் நீங்க எனக்கு சமையல் சொல்லி கொடுக்கறீங்க..", என்று முகிலன் சப்பாத்தியை கையில் எடுத்த படி கூற, "சொல்லி குடுத்திட்டா போச்சு..", என்று நித்யா இன்முகமாக கூறினாள்.
"உனக்கு எதுக்கு டா.. இந்த தேவை இல்லாத வேலை...", என்று மதுசூதனன் வினவ, "எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் யூஸ் ஆகும்..", என்று மதுசூதனன் சிரித்த முகமாக கூறினான்.
கோவிந்தன் பெருங்குரல் எடுத்து சிரிக்க, "மாமா.. இன்னக்கி நைட் டின்னர் பேச்சியம்மா தான் பண்ணுவாங்க..", என்று நித்யா மதுசூதனனை பார்த்தபடி கூற, நித்யாவை அதிர்ந்து பார்த்தார் கோவிந்தன்.
"என்ன மாமா அப்படி பாக்கறீங்க.. இன்னக்கி ஒரு நாள் இல்லை.. இந்த கிளைன்ட் விசிட் முடியற வரைக்கும் அப்படி தான்...", என்று சோகமாக கூறினாள் நித்யா.
"கிராதகி... ஏதோ திட்டம் போட்டுட்டா..." , என்று நினைத்தான் மதுசூதனன்.
"ஏம்மா.. இப்பொழுது தான் சந்தோஷமா சிரிக்கிறேன்.. அதுக்குள்ள இப்படி குண்டை தூக்கி போடறியே...", என்று கோவிந்தன் பரிதாபமாக கூற, "ஆஃபீசிலே நிறைய வேலையா..?", என்று புஷ்பா அக்கறையாக வினவினார்.
" வேலை எல்லாம் பெருசா இல்லை.. ஆனால் ட்ரைனிங் ரூம் availability இல்லை. எங்க ப்ரொஜெக்ட்க்கு தேவையான software இருக்கிற ரூம் சாயங்காலம் 7 டு 9 தான் இருக்கு..", என்று நித்யா சோகமாக கூறினாள்.
"ஏற்கனவே நித்யாவிற்கு வீட்டில் வேலை அதிகம்.. இதுல ஆஃபீசிலே அவளுக்கு என்ன வேணும்ங்கிறதை பார்த்து பண்ண மாட்டிங்களா..?", என்று கோவிந்தன் மதுசூதனன், முகிலன் இருவரையும் பார்த்து வினவ, "ஐயோ.. அப்பா... எனக்கு இந்த விஷயமே தெரியாது... ", என்று முகிலன் தட்டில் கவனமாக நழுவிக்கொண்டான்.
நித்யா தன் வேலை முடிந்துவிட்டது போல், சப்பாத்தியை ரசித்து ருசித்து உண்டாள். "சின்ன புள்ளைங்களோட சேர்ந்தா இப்படி தான்!!! தன்னால் முடியலைன்னா அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்திர வேண்டியது..", என்று தனக்குள் புலம்பினான் மதுசூதனன்.
"என்ன அமைதியா இருக்க மது..? அவளுக்கு என்ன வசதி வேணுமோ எல்லாம் செய்து தர வேண்டியது உன் பொறுப்பு...", என்று கோவிந்தன் கூற, வேறு வழின்றி நித்யாவை முறைத்த படியே அமைதியாக தலை அசைத்தான் மதுசூதனன்.
"எதாவது பிரச்சனைனா என்கிட்டே சொல்லு..", என்று நித்யாவை பார்த்து கூறிவிட்டு தன் உணவில் கவனத்தை செலுத்தினார் கோவிந்தன்.
"ஆனால் ஒரு கண்டிஷன்..", என்று கோவிந்தன் கூற, அனைவரும் அவரை பார்த்தனர். "நித்யா, இனிமேல் பேச்சியம்மாள் சமையல்ன்னு சொல்லி என்னை பயம்புடுத்த கூடாது.. அவள் ஓட்ஸ் கொடுத்தே என்னை கொன்றுவிடுவாள் ", என்று அவர் தீவிரமாக கூற, மதுசூதனனை தவிர அனைவரும் சிரித்த படி உண்ண ஆரம்பித்தனர். "இது மிடில் கிளாஸ் mentality, செலவில்லாமால் எதையும் சிம்பிளா முடிச்சிருவோம்...", என்று மதுசூதனனின் காதில் கிசுகிசுத்தாள் நித்யா. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக உண்ண ஆரம்பித்தான் மதுசூதனன்
முகிலன் அலுவலகத்திற்கு கிளம்ப, மதுசூதனனும் நித்யாவும் ஒன்றாக கிளம்பினர்..
அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு, அவர்களது அறைக்கு செல்ல, நித்யா தன் வேலைகளை முடித்துவிட்டு தங்கள் அறைக்கு வந்தாள்.
மதுசூதனன் அவர்கள் அறையில் சோபாவில் சாய்ந் து தன் வேலைகளை பார்த்தபடி லேப்டாப்பில் மூழ்கிருந்தான். நித்யா பால்கனி ஊஞ்சலில் அமர்ந்தபடி தோட்டத்தை ரசித்து கொண்டிருந்தாள்.
"நித்யா ஐந்து நிமிடம்.., என் வேலை முடிந்திரும்..", என்று மதுசூதனன் வேலை பார்த்தபடியே குரல் கொடுக்க, "எதுவும் அவசரம் இல்லை..", என்று வானத்தை பார்த்தபடி பதில் கூறிவிட்டு, காலை தரையில் ஊன்றி ஊஞ்சலை முன்னும் பின்னும் ஆடச் செய்தாள்.
சிறிது நேரம் கழித்து, மதுசூதனன் லைட் ஆப் செய்துவிட்டு படுக்க, நித்யா தூக்கம் வராமல் மெத்தையில் அங்கும் இங்கும் புரள, தன் ஓரக்கண்களால் மதுசூதனன் அவளை நோட்டமிட்டான்.
"பிடிக்காத புருஷன்.., புது இடமாக இருந்தாலும்.., நிம்மதியா தூங்குவாளே.. ", என்று சிந்தித்தபடி அவளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் மதுசூதனன்.
தூக்கம் வராமல் மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்தாள் நித்யா.
"தூக்கம் வரலியா பேபி..?", என்று மதுசூதனன் நக்கலாக வினவ, "என்னை நீங்க ஏன் பேபின்னு அடிக்கடி கூப்பிடறீங்க...?", என்று முகத்தை சுருக்கி கொண்டு நித்யா கேட்டாள்.
"அதனால் தான் தூக்கம் வரலியா..?", என்று தனக்குள் தோன்றிய புன்னகையை மறைத்து சுவரை பார்த்தபடி கேட்டான் மதுசூதனன்.
அவனை முறைத்து பார்த்தாள் நித்யா.
"சரி கோபப்படாத.., நான் எதுவும் கேட்கல..", என்று மதுசூதனன் சமாதான கோடியை பறக்க விட, "இது இவன் குணமே கிடையாதே...", என்று அவனை ஆழமாக பார்த்தாள் நித்யா.
"நீங்க எதுவுமே கேட்காம இருந்தாலும் நான் சொல்லுவேன்... ", என்று நித்யா அவனை பார்த்தபடியே கூறினாள்.
"அது தானே பார்த்தேன்... இவளாவது அமைதியா இருக்கிறதாவது..", என்று நினைத்தபடி அமைதியாக படுத்திருந்தான் மதுசூதனன்.
"என் தூக்கம் கெட்டதுக்கு நீங்க தான் காரணம்..", என்று அவனை முறைத்தபடி கூறினாள் நித்யா.
அதிர்ச்சி அடைந்தவனாக எழுந்து அமர்ந்தான் மதுசூதனன்.
"நீ ஆயிரம் பேர் தூக்கத்தை கெடுப்ப, நான் உன் தூக்கத்தை கெடுத்தேனா..?" , என்று அவளிடம் சண்டைக்கு சென்றான் மதுசூதனன்.
"எனக்கு யார் தூக்கத்தைக் கெடுத்தும் பழக்கம் கிடையாது..", என்று எங்கோ பார்த்தபடி நித்யா கூற, "சரி அதை விடு.., நான் என்ன செய்தேன்.. அதை சொல்லு...", என்று சுவாரசியமாக கேட்டான் மதுசூதனன்.
"தூங்கிற இடத்துக்கு இவ்வளவு அழகு தேவையா..? எனக்கு தூக்கம் வரலை.. இதை பார்த்துகிட்டே இருக்கணுமுன்னு தோணுது...", என்று குற்றம் சாட்டும் குரலில் நித்யா கூற.., "இது தான் விஷயமா..? நான் கூட வேற எதுவோ நினைத்தேன்...", என்று சலிப்பாக கூறிவிட்டு மீண்டும் படுத்தான் மதுசூதனன்.
அவள் பக்கமாக திரும்பி படுத்த மதுசூதனன், அவளை கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
நித்யா தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
"நித்யா" , என்று மெதுவாக அழைத்தான்.
பதில் ஏதும் பேசாமல், அவனை திரும்பி பார்த்தாள் நித்யா.
"அவசியம் இந்த டீல் வேணுமா..?" , என்று ஆழமாக கேட்டான் மதுசூதனன்.
நித்யா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
"இது தான் உனக்கு கடைசி சந்தர்ப்பம்.. நீ டீல் கேன்சல் பண்ணலாமுன்னு சொல்லு.. நான் உன் ப்ரொஜெக்ட்க்கு இடைஞ்சலா இருக்கமாட்டேன்... ", என்று மதுசூதனன் இன்முகமாக கூற, "கடைசி சந்தர்ப்பமா...? நாளைல இருந்து நீங்க எனக்காக எல்லாமே பண்ணுவீங்க.. நான் பண்ண வைப்பேன்.. உங்களுக்கு எப்படி Society Status முக்கியமோ..? அதே மாதிரி எனக்கு என் சுயமரியாதை முக்கியம்...", என்று கூறிவிட்டு எதிர் பக்கம் திரும்பி படுத்து கொண்டாள் நித்யா.
நித்யா தன் கண்களை மூடிக்கொண்டு வராத தூக்கத்தை வா..! வா..! என்றழைக்க, அவள் கண்முன்னே அந்த வேலைப்பாடு நிறைந்த கத்தி தோன்றியது.
கண்களை இறுக மூடிக்கொண்டு, "இது யாருடைய வேலையாக இருக்கும்..?", என்று சிந்தித்தபடியே கண் அயர்ந்துவிட்டாள் நித்யா.
"சுயமரியாதை.. இந்த சுயமரியாதை இருந்திருந்தா என்னை கல்யாணம் செய்திருக்கவே கூடாது.. இந்த வாழ்க்கையிலிருந்து நீ தப்பிக்கவே முடியாது... ", என்று எண்ணியபடி மதுசூதனன் கண்ணுறங்கினான்.
வெள்ளை சட்டை அணிந்துகொண்டு அலுவலகத்திற்கு தயாரான நிலையில், படியிறங்கினான் மதுசூதனன். அவனை பார்த்த நித்யா, "இது என்ன எப்பொழுதுமே வெள்ளை சட்டை சீருடை போல.. ", என்று எண்ணினாள் நித்யா. "அதை பற்றி நமக்கென்ன...", என்ற எண்ணம் தோன்ற தோளைக் குலுக்கி கொண்டு தன் வேலையை தொடங்கினாள்.
சாப்பிடுவதற்காக மதுசூதனன் நாற்காலியில் அமர, அவனை பார்த்தது கண் சிமிட்டி சிரித்தாள் நித்யா.
"ஏதோ சரியில்லையே..!!", என்று மதுசூதனன் சிந்திக்க, " என்னவாக இருக்கும்..?", என்று நித்யாவை கூர்மையாக பார்த்த படி சிந்தித்தான் மதுசூதனன்.
நித்யா அனைவருக்கும் சப்பாத்தி , பச்சைப்பயிறு தால்.., வெள்ளரிக்காய் ரெய்தா.., செய்த்திருந்தாள். கோவிந்தன், புஷ்பா இருவரும் தினமும் இவள் சமையலை பாராட்ட தவறியதே இல்லை..
"அண்ணி.. இந்த வீக்கெண்ட் நீங்க எனக்கு சமையல் சொல்லி கொடுக்கறீங்க..", என்று முகிலன் சப்பாத்தியை கையில் எடுத்த படி கூற, "சொல்லி குடுத்திட்டா போச்சு..", என்று நித்யா இன்முகமாக கூறினாள்.
"உனக்கு எதுக்கு டா.. இந்த தேவை இல்லாத வேலை...", என்று மதுசூதனன் வினவ, "எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் யூஸ் ஆகும்..", என்று மதுசூதனன் சிரித்த முகமாக கூறினான்.
கோவிந்தன் பெருங்குரல் எடுத்து சிரிக்க, "மாமா.. இன்னக்கி நைட் டின்னர் பேச்சியம்மா தான் பண்ணுவாங்க..", என்று நித்யா மதுசூதனனை பார்த்தபடி கூற, நித்யாவை அதிர்ந்து பார்த்தார் கோவிந்தன்.
"என்ன மாமா அப்படி பாக்கறீங்க.. இன்னக்கி ஒரு நாள் இல்லை.. இந்த கிளைன்ட் விசிட் முடியற வரைக்கும் அப்படி தான்...", என்று சோகமாக கூறினாள் நித்யா.
"கிராதகி... ஏதோ திட்டம் போட்டுட்டா..." , என்று நினைத்தான் மதுசூதனன்.
"ஏம்மா.. இப்பொழுது தான் சந்தோஷமா சிரிக்கிறேன்.. அதுக்குள்ள இப்படி குண்டை தூக்கி போடறியே...", என்று கோவிந்தன் பரிதாபமாக கூற, "ஆஃபீசிலே நிறைய வேலையா..?", என்று புஷ்பா அக்கறையாக வினவினார்.
" வேலை எல்லாம் பெருசா இல்லை.. ஆனால் ட்ரைனிங் ரூம் availability இல்லை. எங்க ப்ரொஜெக்ட்க்கு தேவையான software இருக்கிற ரூம் சாயங்காலம் 7 டு 9 தான் இருக்கு..", என்று நித்யா சோகமாக கூறினாள்.
"ஏற்கனவே நித்யாவிற்கு வீட்டில் வேலை அதிகம்.. இதுல ஆஃபீசிலே அவளுக்கு என்ன வேணும்ங்கிறதை பார்த்து பண்ண மாட்டிங்களா..?", என்று கோவிந்தன் மதுசூதனன், முகிலன் இருவரையும் பார்த்து வினவ, "ஐயோ.. அப்பா... எனக்கு இந்த விஷயமே தெரியாது... ", என்று முகிலன் தட்டில் கவனமாக நழுவிக்கொண்டான்.
நித்யா தன் வேலை முடிந்துவிட்டது போல், சப்பாத்தியை ரசித்து ருசித்து உண்டாள். "சின்ன புள்ளைங்களோட சேர்ந்தா இப்படி தான்!!! தன்னால் முடியலைன்னா அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்திர வேண்டியது..", என்று தனக்குள் புலம்பினான் மதுசூதனன்.
"என்ன அமைதியா இருக்க மது..? அவளுக்கு என்ன வசதி வேணுமோ எல்லாம் செய்து தர வேண்டியது உன் பொறுப்பு...", என்று கோவிந்தன் கூற, வேறு வழின்றி நித்யாவை முறைத்த படியே அமைதியாக தலை அசைத்தான் மதுசூதனன்.
"எதாவது பிரச்சனைனா என்கிட்டே சொல்லு..", என்று நித்யாவை பார்த்து கூறிவிட்டு தன் உணவில் கவனத்தை செலுத்தினார் கோவிந்தன்.
"ஆனால் ஒரு கண்டிஷன்..", என்று கோவிந்தன் கூற, அனைவரும் அவரை பார்த்தனர். "நித்யா, இனிமேல் பேச்சியம்மாள் சமையல்ன்னு சொல்லி என்னை பயம்புடுத்த கூடாது.. அவள் ஓட்ஸ் கொடுத்தே என்னை கொன்றுவிடுவாள் ", என்று அவர் தீவிரமாக கூற, மதுசூதனனை தவிர அனைவரும் சிரித்த படி உண்ண ஆரம்பித்தனர். "இது மிடில் கிளாஸ் mentality, செலவில்லாமால் எதையும் சிம்பிளா முடிச்சிருவோம்...", என்று மதுசூதனனின் காதில் கிசுகிசுத்தாள் நித்யா. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக உண்ண ஆரம்பித்தான் மதுசூதனன்
முகிலன் அலுவலகத்திற்கு கிளம்ப, மதுசூதனனும் நித்யாவும் ஒன்றாக கிளம்பினர்..
Last edited: