• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kattangal -23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Superb sis.Madhu kitta neriya change vanthu iruke.. project win panna piragu nithya enna panna pora..madhu enna seiya poraan aval project enna waiting eagerly sis
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
நித்யா மதுசூதனன் சண்டை சின்ன பிள்ளைங்க சண்டை மாதிரி இருந்தது மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ???
 




Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
"இவளுக்கு தேவையானதை நான் செய்ய வேண்டுமா..?" , என்ற நினைப்போடு, எதுவும் பேசாமல் மதுசூதனன் காரை செலுத்தினான். தன் புன்னகையை மறைத்த படியே, மதுசூதனன் பக்கமாக திரும்பி அமர்ந்து, "நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லட்டுமா..?", என்று நித்யா வினவ, "வேண்டாமுன்னு சொன்னா அமைதியா இருப்பியா..?", என்று மதுசூதனன் கடுப்பாக கேட்டான்.

"இல்லை..", என்று நித்யா மறுப்பாக தலை அசைத்தாள். "அப்புறம் என்ன கேள்வி.. எல்லாம் உன் இஷ்டப்படி தான் நடக்கப் போகுது.. சொல்லு...", என்று சிடுசிடுத்தான் மதுசூதனன்.

"ரொம்பா கோபப்படாதீங்க பி.பி. வந்திரும்.. ", என்று இன்முகமாக நித்யா கூற, "இதை தான் சொல்லணுமுன்னு சொன்னியா..?", என்று மதுசூதனன் காரை ஓட்டியபடியே கேட்டான்.

"இல்லை.. இந்த கிரிக்கெட்ல எனக்கு 1 ரன் , 2 ரன், 4 எல்லாம் பிடிக்காது.. நேராக 6 தான் பிடிக்கும்..", என்று புருவம் உயர்த்தி கண் விரித்து நித்யா கூற, "பார்த்து ஜாக்கிரதையா விளையாடனும்.. கேட்ச் குடுத்துட்டு மைதானத்தை வெளிய போற மாதிரி ஆகிரும்...", என்று மதுசூதனன் நக்கலாக கூறினான்.

சிரித்துக் கொண்டாள் நித்யா.

"அப்பா சொன்னா நான் செய்வேன்னு, என்ன நம்பிக்கை..?", என்று ஸ்டெயரிங்கை திருப்பிய படியே மதுசூதனன் வினவ, "அம்மா அப்பா சொன்னாங்கன்னு கல்யாணமே பண்ணிருக்கீங்க..? இதை பண்ண மாட்டிங்களா..? நீங்க ரொம்ப நல்லவர்ன்னு எனக்கு தெரியுமே..", என்று கண்சிமிட்டி நித்யா கூற, தனக்குள் தோன்றிய புன்னகையை மறைத்து தன் முகத்தை சிடுசிடுப்பாக வைத்துக்கொண்டு காரை ஓட்டினான் மதுசூதனன்.

" இப்படி சிரிச்சிகிட்டே இரு… உன் டீல் படு தோல்வியில் முடியப்போகுது..", என்று மதுசூதனின் அறிவு எச்சரிக்க , மதுசூதனனின் மனமோ..., “"என்னை வைத்தே அவள் வேலையை முடித்துக் கொண்டாள்..”, என்று எண்ணி நித்யாவின் சாமர்த்தியசாலித்தனத்தை பார்த்து வியந்து கொண்டிருந்தது.

நாட்கள் வேகமாக செல்ல, நித்யா தன் ப்ரொஜெக்ட்டில் வெற்றி நடை போட்டு சென்று கொண்டிருந்தாள்.

கனவிலும், நேரிலும் தக்காளி பச்சை மிளாகாய் என பல காய்கறிகள் அவளிடம் சண்டையிட்டாலும், வெண்பா போராடி வெற்றி பெற்று சமையல் வேலையை தவிர, மற்ற வேலைகளை கற்றுக் கொண்டாள்.

அசோக்கிற்கு வேலை சற்று பழகிருந்தது.

முகிலனின் நாட்கள் அவன் நினைத்தபடி இனிதாக நகர்ந்தது.

மதுசூதனன் மற்ற வேலையில் கவனம் செலுத்த கிளைண்ட் டெமோவிற்கு முதல் நாளும் வந்து சேர்ந்தது.

"நித்யா நீ மட்டும் ஸ்டே பண்ணு.. நான் ஒரு தடவை உங்க project review பண்ணிடறேன்...", என்று மதுசூதனன் தீவிரமாக கூற, நித்யா சம்மதமாக தலை அசைத்தாள்.

மதுசூதனன் நித்யா இருவர் முகத்திலும் ஒரு பதட்டம் இருந்தது.

முகிலன் அவர்களை நோக்கி வர, "முகிலன்.. எல்லா வேலையும் முடிஞ்சிருச்சா..?" , என்று நாற்காலியில் சாய்ந்தபடி மதுசூதனன் வினவ, "ஆம்..", என்று தலை அசைத்தான் முகிலன்.

கிளைண்ட்ஸ் மீட்டிங் ஏற்பாடு செய்த அறையில், இவர்கள் அனைத்தையும் டெமோ பார்க்க, அனைத்து application அதன் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தது.

நித்யா அவள் project யை click செய்ய அது Launch Error என்று வந்தது.



"ட்ரைனிங் ரூம்ல சரியாக வந்ததே..", என்று நித்யா முணுமுணுக்க, " இங்கு verify பண்ணலியா..?" , என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் மதுசூதனன்.

"காலைலயே பார்த்துட்டோம்... இங்கையும் ஒர்க் ஆச்சு...", என்று நித்யா கம்மலான குரலில் கூற, "ஒ...", என்று முகிலன் வருத்தமாக கூறினான்.

"என்னாச்சு முகில்..?", என்று நித்யா தயக்கமாக வினவ, "மத்தியானம் சிஸ்டம் upgrade பண்ணாங்க.. அதுல எதாவது நடத்திருக்கும்.. அதுக்கு அப்புறம் மற்ற எல்லா ப்ரொஜெக்ட்டும் check பண்ணிட்டோம்.. உங்க ப்ரொஜெக்ட்டை மிஸ் பண்ணிட்டாங்க போல..", என்று யோசனையில் ஆழ்ந்தவனாக கூறினான் முகிலன்.

"மற்ற எல்லாம் சரியா இருக்குதா?", என்று மதுசூதனன் வினவ,

" Everything is working fine ", என்று முகிலன் கூறினான்.

" Admin Team கிட்ட மட்டும் தான் access இருக்கும்.. நான் அவங்க கிட்ட பேசி ரெடி பண்றேன்.. நீங்க கிளம்புங்க அண்ணி..", என்று முகிலன் கூற, நித்யா மறுப்பாக தலை அசைத்து .., "நான் வேலையை முடித்துவிட்டு கிளம்பறேன்..", என்று கூறி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

முகிலன் Admin team உடன் பேசுவதற்காக, வெளியே செல்ல, சோகம் சூழ்ந்த நித்யாவின் முகத்தை பார்த்தான் மதுசூதனன்.

"டிவோர்ஸ் கிடைக்காதுன்னு அவ்வளவு வருத்தமா இருக்குதா..?", என்று மதுசூதனன் தாழ்ந்த குரலில் வினவ, "ம்..ச்.. ", என்று மறுப்பாக தலை அசைத்தாள். பின் அவளை நோக்கி கேள்வியாக மதுசூதனன் கண்ணுயர்த்தி வினவ, "என் டீம் எல்லாரும் சின்ன பசங்க.., இது first project.. Demo இல்லைனா ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க.. ", என்று மிக வருத்தத்தோடு கூறினாள் நித்யா.

"அதுக்கு தான் இந்த மாதிரி அழுகுணி ஆட்டம் ஆட கூடாது...", என்று மதுசூதனன் தீவிரமாக கூற, அவனை அப்பாவியாக பார்த்தாள் நித்யா.

"என்ன அப்படி பார்க்கிற..? என்னை மாதிரி அப்பாவியை ஏமாத்தினா இப்படி தான் ஆகும் ", என்று முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு கண்களில் புன்னகையோடு கூறினான் மதுசூதனன்.

"பக்கத்துல ஒருத்தர் ப்ராஜெக்ட் முடிய கூடாதுன்னு நினைச்சிகிட்டே இருந்தா என் ப்ராஜெக்ட் எப்படி உருப்படும்..?" , என்று அவனிடம் சண்டைக்கு போனாள் நித்யா.

"கூல் பேபி.. கூல் பேபி... எல்லாம் சரி ஆகிரும்.. நம்ம Admin Team தானே.. நானே பேசி சரி பண்ண சொல்லிறேன்.. நீ சண்டைக்கு வராத...", என்று அவளிடம் மெதுவாக கூறினான்.

தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தலை அசைத்தாள் நித்யா.

"சிரித்த முகமாக இருந்தால் தான், வேலை நடக்கும்...", என்று மதுசூதனன் இவளை பார்த்த படி கூற, "எல்லாம் என் நேரம் ", என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள் நித்யா.

"உண்மையில் உங்களை நம்பலாமா..?", என்று தன் தலை உயர்த்தி, மதுசூதனனை பார்த்து சந்தேகமாக நித்யா கேட்க,. "ஒரு மாசமா நல்லவன்னு சொல்லிட்டு.. இப்படி திடீருன்னு கேட்டா என்ன அர்த்தம்..?", என்று நாற்காலியில் சாய்ந்து கால் மேல் கால் போட்ட படி வினவினான் மதுசூதனன்.

"இவன் கொஞ்ச நாளாக சரி இல்லை..", என்ற எண்ணத்தோடு நித்யா அவனை பார்க்க, "என்ன நித்தி அப்படி பாக்கற..?", என்று மதுசூதனன் கேட்க, தலை அசைத்து நித்யா மௌனம் காத்தாள்.

"நாளைக்கி உன் ப்ராஜெக்ட் successfully முடியும்.. எந்த டென்ஷனும் வேண்டாம்.. ஒரு மிடில் கிளாஸ் நித்யா தோல்வியை பற்றி I am least bothered.., ஆனால் Mrs. Nithya Mathusoothanan எங்கையும் தோல்வியை சந்திக்க கூடாது. எனக்கு அது பிடிக்காது..", என்று மதுசூதனன் அழுத்தமாக கூறினான்.

"இது இப்பொழுதிலிருந்து?", என்ற எண்ணம் நித்யாவிற்கு தோன்றினாலும், "வேலை பார்த்தது நான்.. இவன் இவ்வளவு அழகா டயலாக் பேசுறான்", என்று நித்யா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"வாழ்க்கையும் சேர்த்து தான் சொல்றேன்...", என்று கம்பீரமான புன்னகையோடு மதுசூதனன் கூற, நித்யாவின் ஆச்சர்ய பார்வை அதிர்ச்சி பார்வையாக மாறியது.

சிறிது நேரத்தில், அனைத்து பிரச்சனைகளையும் சரி ஆனது. நித்யாவின் புரோஜெக்ட் மதுசூதனனை வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல, முகிலன், மதுசூதனன் ஆச்சரியத்தோடு அவர்கள் கண்களை விரித்தனர்.

மதுசூதனின் மனம் நித்யாவின் செயலால் ஆனந்தம் அடைய, அவன் அறிவோ " நாளை நீ என்ன செய்ய போகிறாய்..?", என்று வினவியது.

நித்யா என்ன ப்ராஜெக்ட் செய்திருப்பாள்...? மதுசூதனன் டீல் பேசியபடி நடந்து கொள்வானா..?

கட்டங்கள் நீளும்....
அருமை
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அகிலா கண்ணன் டியர்
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Nice epi.. Nithi deal la win panna un virupapadi avana vachi sei...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top