Vallimotcham
அமைச்சர்
Nice
Rupa ah ena panlam...."இதோ போகிறேன் மா...", என்று கூறிக் கொண்டு, கோவிந்தன் அவர் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
"ராட்சஸி... இந்த வீட்டில் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறாள்...", என்று மதுசூதனன் மனதில் நினைக்க, "அன்பால் அனைவரயும் தன் வசம் வைத்திருக்கிறாள்", என்று மதுசூதனனின் அறிவு கூறியது.
அவளை முறைத்தபடி மதுசூதனன், அவர்கள் அறையில் காத்திருக்க, நித்யா மெல்ல படியேறி அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.
"உன் மனசில் என்ன நினச்சிட்டு இருக்க..? எல்லாரும் நீ சொல்றதை எப்பவும் கேட்க மாட்டாங்க.. அவன் என்ன சின்ன குழந்தையா நீ கண்டிக்க..?", என்று மதுசூதனன் கேட்க, "என்னவோ கம்பால் ரெண்டு அடி போட்ட மாதிரி..சண்டைக்கு வரீங்க..? நான் அன்பா ரெண்டு கேள்வி கேட்டேன்.. இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க..?", என்று மெத்தையில் படுத்தபடி வினவினாள் நித்யா.
"தேவையில்லாம அவமானப்பட போற...", என்று மதுசூதனன் கூற, நித்யா சிந்திக்க தொடங்கினாள்.
முகிலன் அவன் அறையில், சிந்தித்து கொண்டிருந்தான்.
"நான் வேண்டாமுன்னு தான் நினைத்தேன்.. ரூபா அவள் தோழர்கள்.., என்று எதிர்பாராமல் இன்று குடிக்கும் படி ஆகிவிட்டது..”, என்று எண்ணிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் முகிலன்.
"எல்லாரும் தூங்கட்டும் என்று தாமதமாக வந்தேன்.. ஆனால்.. பாவம் அண்ணி எனக்காக காத்திருந்திருக்கிறார்கள்...", என்று முகிலன் புலம்பிக்கொண்டே மெத்தையில் சரிந்தான்.
ரூபா அவள் அறையில், முகிலனை பற்றி சிந்தித்து கொண்டிருந்தாள்.
"அண்ணிக்கு வெளிய சாப்பிட்டா கூட பிடிக்காது... இதெல்லாம் தெரிந்தால் அவ்வளவுதான் ", என்று முகிலன் மறுத்த விதம் இப்பொழுதும் ரூபாவுக்கு கோபத்தை உண்டாக்கியது.
"நேற்று வந்தவள்.. இவளுக்கு இவ்வளவு மரியாதையா..?", என்று எண்ணினாள் ரூபா.
"முகிலனுக்கு சமாதானம் கூறி குடிக்க வைப்பதற்குள்.., அப்பப்பா... எனக்கு போதும் போதுமென்றாகி விட்டது..", என்று சலிப்பாக சிந்தித்து கொண்டாள் ரூபா.
"இன்றைய சம்பவம் நிச்சயம் இவர்களுக்குள் ஒரு விரிசலை உண்டு பண்ணும்...", என்ற எண்ணம் தோன்ற சிரித்த முகமாக கண்ணுறங்கினாள் ரூபா.
தூக்கம் வரமால் நித்யா மெத்தையில் புரண்டு கொண்டிருந்தாள்.
"இத்தனை நாட்கள் இல்லமால், இன்று முகிலன் குடித்திருக்கிறான்..., என்றால் என்ன காரணமாக இருக்கும்..?", என்று எண்ணிக்கொண்டு நித்யா இரு கண்களை உருட்டியபடியே படுத்திருந்தாள்.
"ஏன் சின்ன விஷயத்தை பெரிசு படுத்தற..", என்று மதுசூதனன் கண்களை மூடியபடியே கேட்க, "ஏன்னா இருக்கிற பெரிய விஷயங்களையெல்லாம் என்னால் சமாளிக்க முடியவில்லை.. அது தான் சின்ன விஷயத்தை பெருசாக்கி சரி பண்ணலாமுன்னு பாக்கறேன்....", என்று நித்யா கடுப்பாக கூறினாள்.
மதுசூதனன் அவள் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டு, "அப்படி உனக்கு என்ன பெரிய பிரச்சனை..?", என்று நித்யாவை ரசனையோடு பார்த்தபடி கேட்டான் மதுசூதனன்.
மெல்லிய விளக்கொளியில் அழகாய் தெரிந்தாள் நித்யா.
அவள் பதிலுக்காக என்ற பெயர் கொண்டு, அவளை பார்த்தபடி மதுசூதனன் படுத்திருக்க, "பிரச்சனையை சொன்னால் சரி பண்ணிடுவீங்களா..?", என்று மெத்தையில் எழுந்தமர்ந்து கேட்டாள் நித்யா.
"நீ சொல்றதை வீட்ல எல்லாரும் கேட்கறாங்க நான் கேட்க மாட்டேனா..?", என்று மதுசூதனன் குழைவாக கூற, நித்யாவின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
"என்ன வேணும்..?", என்று மதுசூதனன் மெதுவாக கேட்க, "நேரம் வரும் பொழுது சொல்றேன்..", என்று கூறி கண்களை மூடி படுத்துக் கொண்டாள் நித்யா.
நித்யாவின் சிந்தனை முகிலனை சுற்றி தான் இருந்தது.
"நான் கோபப்படாமல், முகிலனோடு எந்த மன சுணக்கமும் ஏற்பட்டுவிடாமல், விளையாட்டாகவே.., அதே நேரம் இதை கண்டிப்புடன் சரி செய்ய வேண்டும்..", என்று சிந்தித்தபடியே கண்ணுறங்கினாள் நித்யா.
சமையலறையில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா.
என்றும் இல்லாமல், இன்று நித்யாவை தேடி வந்து, "குட் மார்னிங் அண்ணி.. ", என்று சமையலறைக்குள் நுழைந்து இன்முகத்தோடு கூறினான் முகிலன்.
"குட் மார்னிங் தம்பி...ஜாக்கிங் கிளம்பியாச்சா..?", என்று தன் வேலைகளை பார்த்தபடியே நித்யா கேட்க, " On the way அண்ணி என்று கூறிக் கொண்டு கிளம்பினான் முகிலன்.
அவன் செல்வதை பார்த்தபடி, "இவன் என்றும் அன்பிற்கு கட்டுப்படுவான்...", என்று எண்ணிக் கொண்டே தன் வேலையை தொடர்ந்தாள் நித்யா.
"அண்ணிக்கு குட் மார்னிங் எல்லாம் பலமா இருக்கு....", என்று கேட்டபடியே முகிலனோடு ஜாக்கிங்கில் மதுசூதனன் இணைந்து கொள்ள, "அண்ணி., நேத்து நைட் நடந்ததை மறந்துட்டாங்களா..? இல்லை இன்னும் கோபமா இருக்காங்களான்னு பார்த்துட்டு வந்தேன்...", என்று முகிலன் தீவிரமாக கூற, "மறந்துட்டாங்களா உங்க அண்ணி..?", என்று மதுசூதனன் நக்கலாக வினவினான்.
"மறந்துட்டாங்க.. சிரித்த முகமாக பேசினாங்க..", என்று முகிலன் ஜாக்கிங் செய்த படியே கூற, "ஆஹான்...", என்று நம்பாத குரலில் கூறினான் மதுசூதனன்.
"உனக்கு எப்பவுமே சந்தேகம் தான்..", என்று கூறியபடி ஜாக்கிங்கை தொடர்ந்தான் முகிலன்.
"உங்க அண்ணியை நான் புரிந்து வைத்திருப்பது சரியென்றால்.., நிச்சயம் மறந்திருக்க மாட்டாள்.. ஏதாவது இடக்கு மடக்கா திட்டம் வைத்திருப்பாள்...", என்று எண்ணியபடியே அமைதியாக முகிலனோடு சென்றான் மதுசூதனன்.
கட்டங்கள் நீளும்....