கட்டங்கள் – 36
வெண்பாவின் கண்ணீர் அவர் பாதங்களை தொட, அவருள் ஏற்பட்ட பாசப் பெருக்கினை வெண்பாவின் தாயால் வார்த்தைகளால் கூற முடியாது. கண்ணீர் மல்க வெண்பாவை தோள் தொட்டு தூக்கி, தன் மேல் சாய்ந்து கொண்டார்.
குழந்தை எத்தகைய தவறு செய்தாலும், ஒரு தாயால் குழந்தையை வெறுக்க முடியுமா..?
வெண்பா நிறுத்தாமல் அழ, அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் வெண்பாவின் தாயும் கண்ணீரில் கரைந்தார்.
கோவில் தூண் மேல் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு முரளி கண்களில் நீர் வழிய, முகத்தில் புன்னகை யோடு இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் சமாதானம் ஆக, சில நிமிடங்கள் கொடுத்து அவர்கள் அருகே சென்ற முரளி, "வெண்பா...", என்று மென்மையாக அழைத்தான்.
அந்த அழைப்பில் கண்ணீரை துடைத்துக் கொண்டு, சிரித்த முகமாக வெண்பா முரளியை பார்த்தாள்.
முரளி ஏதோ பேச தொடங்க, "என் வெண்பா அழ மாட்டா.. இதை தானே சொல்ல போற.. உன் வெண்பா அழவில்லை..", என்று முரளியை பார்த்து குறும்பாக வெண்பா சிரித்த முகமாக கூற, தலை அசைத்து சிரித்தான் முரளி.
" கண்களில் துள்ளல் சிரிப்போடு வெண்பா பழைய வெண்பாவாக மாறிவிட்டாள்", என்ற எண்ணம் முரளிக்கு தோன்றியது.
"வெண்பா.., பாசத்தால் உன்னிடம் பேசிவிட்டாலும்.., என்னால் நீ செய்த தவறை மன்னிக்க முடியாது.. மறக்க முயற்சிக்கிறேன்..", என்று வெண்பாவின் தாய் ஆழமாக கூற, வெண்பா மெலிதாக புன்னகைத்தாள்.
வெண்பா அமைதியாக தன் தாயை பார்க்க, "உங்க அப்பாவை பற்றி உனக்கு தெரியும்...", என்று அவர் தூண் அருகே அமர்ந்தபடி கூற, தன் தாய் அருகே சிரித்த முகமாக அமர்ந்தாள் வெண்பா.
தன் தாய் தன்னிடம் பேசிய சந்தோஷத்தில் வெண்பாவிற்கு மற்ற விஷயங்கள் எல்லாம் பெரிதாக தோன்றவில்லை.
"நீங்க பேசிட்டு இருங்க.. நான் பிரகாரத்தை சுற்றிவிட்டு வருகிறேன்...", என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து முரளி ஒதுங்க, "நீங்களும் உட்காருங்க மாப்பிள்ளை.. உங்க மனைவி கிட்ட தனியா பேசுவதற்கு என்கிட்டே பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை..", என்று வெண்பாவின் தாய் கூற, வெண்பாவின் முகத்தை பார்த்தான் முரளி.
வெண்பா சம்மதமாக கண் அசைக்க, அவள் அருகே அமர்ந்தான் முரளி. அனைத்தையும் கவனித்து கொண்டிருந்தார் வெண்பாவின் தாய்.
வெண்பாவின் தாய் வெண்பாவிடம் பல விஷயங்களை பேச நினைத்தாலும், அவர் மன வருத்தம் அவரை அமைதி காக்க செய்தது.
சிறிது நேரம் பேசிவிட்டு முரளி, வெண்பா வீட்டிற்கு கிளம்பினர்.
வெண்பா முகத்தில் சந்தோஷமிருந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் வெண்பா.
"வெண்பா.. என்ன ஆச்சு ? ஏன் அமைதியாக இருக்க....?", என்று முரளி வெண்பாவின் முகம் பார்த்து கேட்க, "ஏன் இப்படி பண்ண முரளி..?", என்று அழுத்தமாக கேட்டாள் வெண்பா.
"என்ன பண்ணேன்...?", என்று முரளி சாலையைப் பார்த்தபடி கேட்க, "முரளி நீ என் கிட்ட பொய் கூட சொல்லுவியா..?", என்று வெண்பா மெதுவாக கேட்டாள்.
முரளி எதுவும் அறியாதவன் போல் அமைதியாக நடக்க, "கடவுளா பார்த்து நமக்கு கொடுத்த சந்தர்ப்பமுன்னு சொன்னியே... அந்த கடவுள் யார்?", என்று வெண்பா புருவம் உயர்த்தி முரளியை பார்த்து கேட்க, முரளி மீண்டும் பதில் சொல்லாமல் அமைதியாக நடந்தான்.
"என் வெண்பா அழமாட்டான்னு சொல்ல தெரிந்த உனக்கு.., உன் மனைவி புத்திசாலின்னு தெரியாம போச்சே..!!!", என்று வெண்பா நக்கலாக கூற, முரளி புன்னகைத்தான்.
"உன் புன்னகை மறுபடியும் உன் முகத்தோடு ஒட்டிக் கொண்ட மாதிரி தெரியுதே..", என்று வெண்பா கண் சிமிட்டி கேலியாக கூற, "நீ சந்தோஷமா இருக்கிறதால..", என்று கூறிக் கொண்டே முரளி முன்னே நடக்க, அவனை கை பிடித்து நிறுத்தினாள் வெண்பா.
வெண்பாவின் முகத்தை முரளி கேள்வியாக பார்க்க, "என்ன பண்ண..?", என்று வெண்பா கறாராக கேட்டாள் வெண்பா.
அவள் முகத்தை பார்த்த முரளி, "தெரிந்து என்ன பண்ண போற...?", என்று வெண்பாவிடம் அமைதியாக கேட்க, வெண்பா மெளனமாக நடந்தாள்.
"வெண்பா..", என்று முரளி குழைவாக அழைக்க, "ம்..", என்று அவன் முகம் பார்க்காமல் கூறினாள் வெண்பா.
"வெண்பா... பாப்பா என்ன சொல்லுது...!", என்று முரளி பேச்சை மாற்ற, "அப்பா.. வர வர உன் கிட்ட பொய் சொல்றாங்கன்னு சொல்லுது...", என்று வெண்பா நடந்தபடியே இடக்காக கூற, முரளி சத்தமாக சிரித்தான்.
"சிரித்தது போதும்.. நான் எதுவும் கேட்கலை.. நீயே சொல்லனுமுனு நினைத்தா சொல்லு...", என்று வெண்பா கோபமாக கூறிவிட்டு வேகமாக நடந்தாள்.
அவள் பின்னால் வந்த முரளி, வெண்பாவை பார்த்து,
"ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்"
என்று மெதுவாக பாட, "ஐயோ... மனைவியைப் பார்த்து யாரவது இப்படி பாடுவாங்களா...?", என்று வெண்பா தலையில் கை வைத்து வெட்கத்தோடு கேட்க, "காதல் மனைவியை பார்த்து பாடலாம்.." , என்று முரளி மென்மையாக கூறினான்.
வெண்பா வெட்க சிரிப்போடு, "அமைதியா வாங்க...", என்று முரளியின் கை பிடித்து மெதுவாக நடந்து சென்றாள்.
"அது...", என்று முரளி பெருமையாக சிரித்தான்.
அவர்களை கடந்து ஒரு கார் வேகமாக சென்றது.
அது மதுசூதனின் கார் போல் தெரிகிறது.
நாம் அவர்களோடு பயணித்து அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று பார்ப்போம்.
காரை மதுசூதனன் சாலையில் கவனமாக ஓட்டிக் கொண்டிருக்க,
அவனருகில் நித்யா அமர்ந்திருந்தாள்.
பின் சீட்டில், முகிலன் அமர்ந்திருக்க , "தம்பி.., லண்டன் ரீச் ஆன உடன் கால் பண்ணுங்க..", என்று நித்யா அக்கறையாக கூற, "முகிலன்.., இதை உங்க அண்ணி உன் கிட்ட பல தடவை சொல்லிட்டா..." , என்று மதுசூதனன் சலிப்பாக கூறினான்.
வெண்பாவின் கண்ணீர் அவர் பாதங்களை தொட, அவருள் ஏற்பட்ட பாசப் பெருக்கினை வெண்பாவின் தாயால் வார்த்தைகளால் கூற முடியாது. கண்ணீர் மல்க வெண்பாவை தோள் தொட்டு தூக்கி, தன் மேல் சாய்ந்து கொண்டார்.
குழந்தை எத்தகைய தவறு செய்தாலும், ஒரு தாயால் குழந்தையை வெறுக்க முடியுமா..?
வெண்பா நிறுத்தாமல் அழ, அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் வெண்பாவின் தாயும் கண்ணீரில் கரைந்தார்.
கோவில் தூண் மேல் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு முரளி கண்களில் நீர் வழிய, முகத்தில் புன்னகை யோடு இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் சமாதானம் ஆக, சில நிமிடங்கள் கொடுத்து அவர்கள் அருகே சென்ற முரளி, "வெண்பா...", என்று மென்மையாக அழைத்தான்.
அந்த அழைப்பில் கண்ணீரை துடைத்துக் கொண்டு, சிரித்த முகமாக வெண்பா முரளியை பார்த்தாள்.
முரளி ஏதோ பேச தொடங்க, "என் வெண்பா அழ மாட்டா.. இதை தானே சொல்ல போற.. உன் வெண்பா அழவில்லை..", என்று முரளியை பார்த்து குறும்பாக வெண்பா சிரித்த முகமாக கூற, தலை அசைத்து சிரித்தான் முரளி.
" கண்களில் துள்ளல் சிரிப்போடு வெண்பா பழைய வெண்பாவாக மாறிவிட்டாள்", என்ற எண்ணம் முரளிக்கு தோன்றியது.
"வெண்பா.., பாசத்தால் உன்னிடம் பேசிவிட்டாலும்.., என்னால் நீ செய்த தவறை மன்னிக்க முடியாது.. மறக்க முயற்சிக்கிறேன்..", என்று வெண்பாவின் தாய் ஆழமாக கூற, வெண்பா மெலிதாக புன்னகைத்தாள்.
வெண்பா அமைதியாக தன் தாயை பார்க்க, "உங்க அப்பாவை பற்றி உனக்கு தெரியும்...", என்று அவர் தூண் அருகே அமர்ந்தபடி கூற, தன் தாய் அருகே சிரித்த முகமாக அமர்ந்தாள் வெண்பா.
தன் தாய் தன்னிடம் பேசிய சந்தோஷத்தில் வெண்பாவிற்கு மற்ற விஷயங்கள் எல்லாம் பெரிதாக தோன்றவில்லை.
"நீங்க பேசிட்டு இருங்க.. நான் பிரகாரத்தை சுற்றிவிட்டு வருகிறேன்...", என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து முரளி ஒதுங்க, "நீங்களும் உட்காருங்க மாப்பிள்ளை.. உங்க மனைவி கிட்ட தனியா பேசுவதற்கு என்கிட்டே பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை..", என்று வெண்பாவின் தாய் கூற, வெண்பாவின் முகத்தை பார்த்தான் முரளி.
வெண்பா சம்மதமாக கண் அசைக்க, அவள் அருகே அமர்ந்தான் முரளி. அனைத்தையும் கவனித்து கொண்டிருந்தார் வெண்பாவின் தாய்.
வெண்பாவின் தாய் வெண்பாவிடம் பல விஷயங்களை பேச நினைத்தாலும், அவர் மன வருத்தம் அவரை அமைதி காக்க செய்தது.
சிறிது நேரம் பேசிவிட்டு முரளி, வெண்பா வீட்டிற்கு கிளம்பினர்.
வெண்பா முகத்தில் சந்தோஷமிருந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் வெண்பா.
"வெண்பா.. என்ன ஆச்சு ? ஏன் அமைதியாக இருக்க....?", என்று முரளி வெண்பாவின் முகம் பார்த்து கேட்க, "ஏன் இப்படி பண்ண முரளி..?", என்று அழுத்தமாக கேட்டாள் வெண்பா.
"என்ன பண்ணேன்...?", என்று முரளி சாலையைப் பார்த்தபடி கேட்க, "முரளி நீ என் கிட்ட பொய் கூட சொல்லுவியா..?", என்று வெண்பா மெதுவாக கேட்டாள்.
முரளி எதுவும் அறியாதவன் போல் அமைதியாக நடக்க, "கடவுளா பார்த்து நமக்கு கொடுத்த சந்தர்ப்பமுன்னு சொன்னியே... அந்த கடவுள் யார்?", என்று வெண்பா புருவம் உயர்த்தி முரளியை பார்த்து கேட்க, முரளி மீண்டும் பதில் சொல்லாமல் அமைதியாக நடந்தான்.
"என் வெண்பா அழமாட்டான்னு சொல்ல தெரிந்த உனக்கு.., உன் மனைவி புத்திசாலின்னு தெரியாம போச்சே..!!!", என்று வெண்பா நக்கலாக கூற, முரளி புன்னகைத்தான்.
"உன் புன்னகை மறுபடியும் உன் முகத்தோடு ஒட்டிக் கொண்ட மாதிரி தெரியுதே..", என்று வெண்பா கண் சிமிட்டி கேலியாக கூற, "நீ சந்தோஷமா இருக்கிறதால..", என்று கூறிக் கொண்டே முரளி முன்னே நடக்க, அவனை கை பிடித்து நிறுத்தினாள் வெண்பா.
வெண்பாவின் முகத்தை முரளி கேள்வியாக பார்க்க, "என்ன பண்ண..?", என்று வெண்பா கறாராக கேட்டாள் வெண்பா.
அவள் முகத்தை பார்த்த முரளி, "தெரிந்து என்ன பண்ண போற...?", என்று வெண்பாவிடம் அமைதியாக கேட்க, வெண்பா மெளனமாக நடந்தாள்.
"வெண்பா..", என்று முரளி குழைவாக அழைக்க, "ம்..", என்று அவன் முகம் பார்க்காமல் கூறினாள் வெண்பா.
"வெண்பா... பாப்பா என்ன சொல்லுது...!", என்று முரளி பேச்சை மாற்ற, "அப்பா.. வர வர உன் கிட்ட பொய் சொல்றாங்கன்னு சொல்லுது...", என்று வெண்பா நடந்தபடியே இடக்காக கூற, முரளி சத்தமாக சிரித்தான்.
"சிரித்தது போதும்.. நான் எதுவும் கேட்கலை.. நீயே சொல்லனுமுனு நினைத்தா சொல்லு...", என்று வெண்பா கோபமாக கூறிவிட்டு வேகமாக நடந்தாள்.
அவள் பின்னால் வந்த முரளி, வெண்பாவை பார்த்து,
"ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்"
என்று மெதுவாக பாட, "ஐயோ... மனைவியைப் பார்த்து யாரவது இப்படி பாடுவாங்களா...?", என்று வெண்பா தலையில் கை வைத்து வெட்கத்தோடு கேட்க, "காதல் மனைவியை பார்த்து பாடலாம்.." , என்று முரளி மென்மையாக கூறினான்.
வெண்பா வெட்க சிரிப்போடு, "அமைதியா வாங்க...", என்று முரளியின் கை பிடித்து மெதுவாக நடந்து சென்றாள்.
"அது...", என்று முரளி பெருமையாக சிரித்தான்.
அவர்களை கடந்து ஒரு கார் வேகமாக சென்றது.
அது மதுசூதனின் கார் போல் தெரிகிறது.
நாம் அவர்களோடு பயணித்து அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று பார்ப்போம்.
காரை மதுசூதனன் சாலையில் கவனமாக ஓட்டிக் கொண்டிருக்க,
அவனருகில் நித்யா அமர்ந்திருந்தாள்.
பின் சீட்டில், முகிலன் அமர்ந்திருக்க , "தம்பி.., லண்டன் ரீச் ஆன உடன் கால் பண்ணுங்க..", என்று நித்யா அக்கறையாக கூற, "முகிலன்.., இதை உங்க அண்ணி உன் கிட்ட பல தடவை சொல்லிட்டா..." , என்று மதுசூதனன் சலிப்பாக கூறினான்.
Last edited: