• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode kattangal-42 (Final Episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
ஆனால், "நீ சொல்வதை நான் கேட்பேனா..?", என்று அசோக்கிடம் இருந்து தப்பி ஓடினான் அந்த சின்ன சிறு பாலகன்.

குழந்தையின் சேட்டையை சமாளிக்க முடியாமல், அவனைத் திட்டிக்கொண்டே வெண்பா அவன் பின்னே செல்ல, முரளியும் அவளோடு ஓடினான்.

அப்பொழுது நித்யாவின் கை பிடித்து, அமைதியாக நடந்து வந்தான் நித்யா மதுசூதனின் மூன்று வயது மகன். நித்யாவின் வயிறு மேடிட்டு, அவள் அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்று அனைவருக்கும் கூறியது.

நித்யாவின் மகனை ஆச்சரியமாகப் பார்த்தாள் வெண்பா.

" தன் மகனை விட, சின்னவனான நித்யாவின் மகன் எப்படிச் சொல்வதை எல்லாம் கேட்கிறான்..? இதை நித்யாவிடம் கேட்க வேண்டும் ", என்று நினைத்தாள் வெண்பா.

திருமணம் முடிந்து மதிய வேளை உணவை முடித்துவிட்டு அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து பேச, முகிலன், காயத்ரி அருகே நித்யா அமர்ந்தாள்.

நித்யாவிற்கு மாதுளை ஜூஸ் கொடுத்து, " குடி..", என்று கூறி கண் அசைத்தான் மதுசூதனன்.

"வேண்டாம்..", என்று நித்யா தலை அசைக்க," காலையில் இருந்து சுற்றிக்கொண்டே இருக்க.., உனக்கு நல்லதுன்னு எடுத்துட்டு வந்தேன் ம்மா.. குடி பேபி", என்று மதுசூதனன் அழுத்திக் கூற நித்யா மதுசூதனன் சொல்லுக்கு கட்டுப்பட்டு குடிக்க ஆரம்பித்தாள்.



"அப்பா.. எனக்கு..", என்று மதுசூதனின் மீது தாவினான் நித்யாவின் மகன்.

அவனை செல்லமாக மதுசூதனன் அணைத்துக் கொண்டான். அப்பொழுது அவர்கள் அருகே வெண்பாவும் முரளியும் சோர்வாக அவர்கள் மகனைத் தூக்கி கொண்டும், துரத்திக் கொண்டும் சுற்ற, "வெண்பா.. வாங்க உட்காருங்கள்...", என்றழைத்தாள் நித்யா.

"நான் எங்கு உட்கார..? இவன் என்னை ஒரு நிமிடம் உட்கார விட மாட்டான்..", என்று தன் மகனைக் காட்டியபடி வெண்பா கூற , நித்யா அழகாகப் புன்னகைத்தாள்.

"நீங்கத் திட்டுவது போல் கூட தெரியவில்லையே.. எப்படி இந்தக் குட்டி பையன் நீங்கச் சொல்வதெல்லாம் கேட்கிறான்..?", என்று வெண்பா அதிசயமாகக் கேட்க, தன் கைப்பையில் இருந்து டைரியை எடுத்து ஒரு சிறிய கட்டத்தைக் காட்டினாள் நித்யா.

View attachment 4039

அந்தக் கட்டத்தை வெண்பா ஆச்சர்யமாகப் பார்க்க, நித்யா பேச ஆரம்பித்தாள்.

" மாதத்திற்கு ஒரு முறை இதைப் போல் கட்டம் வரைவேன்.. குட்டி பையன் நான் சொல்வதை கேட்க வில்லை என்றால் கட்டத்தின் நிறத்தை "Bad boy....", என்று கூறி சிகப்பு நிறமாக மாற்றிவிடுவேன்.. ஒரு மாதம் முழுவதும், அந்தக் கட்டம் நிறம் மாறாவிட்டால் நாங்க குட்டி பையனுக்கு எதாவது பரிசு வாங்கிக் கொடுப்போம். ", என்று நித்யா நிதானமாகக் கூற, அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் வெண்பா.

"குழந்தைகளை திட்டுவதாலும், கோபப்படுவதாலும்.. ஒரு உபயோகம் இல்லை..", என்று நித்யா பொறுமையாக கூறினாள்.

"அக்கா.. பக்கத்தில் இருக்கும் பெரிய கட்டம் யாருக்கு..?", என்று காயத்ரி ஆர்வமாக வினவ, "அது எனக்கு...", என்று கூறி மதுசூதனன் பெருங்குரலில் சிரிக்க நித்யா வெட்கப்பட்டு புன்னகைத்தாள்.

"அக்கா தண்டனை கொடுப்பதிலிருந்து பரிசு கொடுக்கும் அளவிற்கு நல்லவளாக மாறிட்ட...", என்று காயத்ரி நக்கல் பேச, "அண்ணி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்.. ", என்று முகிலன் நித்யாவிற்கு ஆதரவு தெரிவிக்க மதுசூதனன் சிரித்தான்..

"நேரம் ஆகிடுச்சு..... பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு கிளம்ப வேண்டும்.. இன்னும் நிறைய வேலை இருக்கு.. ", என்று கூறிக்கொண்டே பத்மா வர, அவரைத் தொடர்ந்து ரங்கநாதன் , கோவிந்தன், புஷ்பா என அனைவரும் திருமணம் முடிந்த சந்தோஷத்தோடும் வேலை செய்த களைப்போடும் வந்தனர்.

புதுப் பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்குக் கிளம்பினர். மற்றவர்கள் அவர்கள் வேலையைப் பார்க்க சென்றனர்.

நாம் இவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல், "நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை முடிவு செய்வது வேறு யாரும் இல்லை. நன்மையோ.. தீமையோ அது நம்மால் தான்.. இந்தக் கட்டத்தில் எப்படி வாழ்கிறோமோ..? என்ன செய்கிறோமோ..? அதுவே நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கிறது.. புத்திசாலித்தனத்தோடும், தைரியமாகவும், பொறுமையோடும், பக்குவமாகவும், அனுசரித்தும் பெண்கள் நடந்து கொண்டால் ஒரு பெண்ணின் வருகை அந்த குடும்பத்திற்கு நல்வரவே!! ", என்று அழகாக வாழ்ந்து காட்டிய இந்த இளம் பெண்களை வாழ்த்தி விடைபெறுவோம்.

நாமும் நம் வாழ்க்கையின் கட்டங்களை அழகாக நகர்த்துவோம்..!!!

அது நம் கையில் தானே இருக்கிறது...!!

இப்படிக்கு,
அகிலா கண்ணன்.
Lovely story dear ❤
Madhu Soodhanan and Nithya ❤😍
Murali and Venba ❤😍
Lovely pair 😍❤
Mukil and Gayu um cute pair dha 🥰❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top