சிறிய முகத்தில் கூர்மையான கண்களும், பெரிய நாசி, சிறிய உதடுகள், வளவளப்பான இரு கன்னங்கள், வலிமையான தோள்கள், அகன்ற மார்புகள், சராசரி எடை கொண்ட ஆஜானுபாகுவான தோற்றம் உடைய இருபத்தி ஒன்று வயது கொண்ட இளம் பெண்தான் கனிமொழி
லைட் மஞ்சள் சுடிதார் அணிந்து லூஸ் விட்டு கிளிப் போட்டு இருந்தாள்.
நான்கு இளம் பெண்களும் இட்லியை விழுங்கி விட்டு கை கழுவி எழுந்தார்கள்.
"அக்காஸ்! காலேஜ்க்கு டைம் ஆகி விட்டது. இன்றைக்கு ஒருநாள் மட்டும் டிராப் ப்ளீஸ்" என்றாள் தேன்மொழி.
"சரி... அப்பா வந்து விடட்டும். அவரிடம் சொல்லி விட்டு கிளம்பலாம்" என்று சியாமளா சொல்லி கொண்டிருக்கும் போது வீட்டுக்கு உள்ளே நுழைந்தார் நரேஷ்குமார்.
"என்னம்மா... இரண்டுபேரும் காலேஜ் போக தயாராகி விட்டிர்களா?" என்றவர் இரு மகள்களை பார்த்து கேட்டார்.
"நாங்கள் ரெடிப்பா" என்று ஒற்றை நோட்டுடன் நின்ற பரிமளா மற்றும் தேன்மொழி இருவரையும் பார்த்து "ஆல் தி பெஸ்ட்" என்றார் நரேஷ் குமார்.
"தாங்க்யூப்பா" என்று இருவரும் சொல்லிவிட்டு சிரித்தார்கள்.
"சரிப்பா... எங்களுக்கு காலேஜ் டைம் ஆச்சு. நாங்கள் போயிட்டு வருகிறோம்" என்று தேன்மொழி சொல்ல "சரிம்மா" என்றார் நரேஷ்குமார்.
"அப்பா... இவர்களை காலேஜில் டிராப் செய்துவிட்டு அப்படியே பர்ஸ்ட்டே மீட்டிங் அட்டெண்ட் செய்து விட்டு வருகிறோம்" என்றாள் கனிமொழி.
"சரிம்மா... என் காரை எடுத்து கொண்டு போங்கம்மா. நான் பைக்கில் சென்டருக்கு வந்து விடுகிறேன்" என்றார் நரேஷ்.
"இல்லப்பா... இந்த டிராபிக்கில் வண்டிதான் சரிபட்டு வரும். நாங்கள் எங்கள் ஸ்கூட்டியில் சென்று விடுகிறோம்" என்று சியாமளா சொல்ல,
"ஆமாம்பா... சியாம் சொல்வது போல் வண்டிதான் கரெக்ட்" என்றாள் கனிமொழி.
"சரிம்மா... உங்கள் இஷ்டம்" என்றார் நரேஷ்குமார்.
"அப்பா பை... அம்மா பை..." என்றபடி பரிமளா, தேன்மொழி இருவரும் கிளம்ப,
"பத்திரமாக போயிட்டு வாங்க" என்றார் மலர்விழி.
சியாமளா தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய தேன்மோழி அதி ஏறி கொள்ள. கனிமொழி ஸ்கூட்டியில் பரிமளா ஏறி கொள்ள நால்வரும் கல்லூரி நோக்கி பறந்தனர்.
மலேசியா ஏர்போர்ட வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
ஏர்போர்ட்டுக்கு வெளியே போர்டு கார் வந்து நிற்க அதில் இரு இளைஞர்கள் கார் கதவை திறந்தபடி இறங்கினார்கள்.
தங்கள் சூட்கேஸ், டிராவல் பேக் முதலான உடைமைகளை காரிலிருந்து எடுத்து கொண்டு கார் கதவை மூடினார்கள்.
"நீங்கள் உள்ளே போயி மற்ற வேலைகளை பாருங்கள். நான் காரை பார்க் செய்து விட்டு வருகிறேன்" என்றபடி காரை ஒட்டி வந்த நபர் சொல்ல,
"சரிங்க அண்ணா" என்றபடி இருவரும் உள்ளே சென்றார்கள்.
அடுத்ததாக பெரரி கார் ஒன்று வந்து நின்றது.
ஒரு வயதான நபரும், ஒரு இளைஞனும் காரிலிருந்து இறங்கி கொள்ள கார் சென்றது.
அவர்கள் இருவரும் சென்று காத்திருக்க உள்ளே சென்ற இருவருக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
சற்றே நரைத்த தலை முடி உடைய கம்பீரமான பார்வை, எடுப்பான நாசி, அகன்ற மார்பு, வலிமையான தோள்கள், மிடுக்கான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஐம்பத்து ஆறு வயதான பெரியவரின் பெயர் ராஜேஷ் குமார்.
அவர் அருகில் ஸ்டைலான ஹேர் ஸ்டைலுடன் பார்க்கும் நபர்களை ஈர்க்கும் தோற்றம் கொண்ட கோர்ட் சூட் அணிந்து நின்ற இளைஞன் அவரின் இருப்பத்து இரண்டு வயதான மூன்றாவது மகனின் பெயர் விஜய் பிரகாஷ்.
"அங்கிள்" என்றழைத்தபடி வந்து அருகில் நின்றான் கோர்ட் சூட் அணிந்து நின்றான் இருப்பத்தி எட்டு வயது இளைஞன்.
நன்கு வாரபட்ட அலைபாயும் கேசம், ஸ்டைலான ரேபான் கிளாஸ், சிரிக்க மறுக்கும் உதடுகள், கம்பீர தோற்றம், சிவப்பு நிறமும் கொண்டு இருந்தான்.
"வாப்பா" என்று பெரியவர் அழைக்க சிறிய புன்னகையை மட்டும் சிந்தியபடி பிரகாஷ் அருகில் நின்றான்.
"பிரகாஷ்! பிசினஸ் எல்லாம் நல்லா போகுதா? என் தம்பி விஜய் வரலையா?" என்று அருகிலிருந்த இளைஞனிடம் குருபிரசாத் கேட்டான்.
"எல்லாம் பைன் அண்ணா. அவன் ஒரு முக்கியமான கிளையன்ட் மீட்டிங்கில் இருக்கிறான். என் பிரதர் ஆனந்த் வரலையா?" என்று கேட்டான் விஜய் பிரகாஷ்.
"அவனும் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறான். நான் போனில் பேசி கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான்" என்றான் குருபிரசாத்.
"டாட்!" என்றபடி வந்தான் விஜய் சந்தோஷ்.
பார்மல் வெள்ளை நிற சர்ட், புளூ ஜீன்ஸ் அணிந்து காற்றில் பறந்த முடியை கோதியபடி வந்து நின்றான்.
சிரிக்கும் உதடுகள், சந்தோஷம் கூத்தாடும் கண்கள், எடுப்பான நாசி, பாரப்பவர்களை கவரும் தோற்றம் சிவப்பு நிறம் உடைய இருப்பத்தி ஐந்து வயது இளைஞன்.
"சந்தோஷ்! என்ன செக்கிங் வேலை எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டதா?" என்று கேட்டார் ராஜேஷ் குமார்.
"நல்லபடியாக முடிந்தது டாட்" என்றவன் சொல்லும்பொழுது பின்னால் வந்து நின்றான் விஷ்வ பிரசாத்.
Write your reply...