Srija Venkatesh
SM Exclusive
காயம் காக்கும் கஷாயங்கள்...
அன்பு நண்பர்களே, ஸ்ரீஜா வெங்கடேஷ் என்று உங்களால் அறியப்படும் நான் மூலிகைகள் அதன் பயன்கள், அவற்றை எந்த முறையில் நம் உணவில் பயன் படுத்தலாம்? எந்த மூலிகை எதற்கு நல்லது? எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். சித்தர்கள் அருளால் நாம் நோய்யற்ற வாழ்வு வாழ வேண்டுகிறேன். துவையல், சூப், பொடி, குழம்பு,கஷாயம் என ஐந்து வகைகளில் மூலிகைகளை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றை தயாரிக்கும் முறையோ எளிது! ஆனால் பயன்களோ அரிது! அரிது!! செரிமானக் கோளாறுகளாலேயே தான் பலவகையான நோய்கள் வருகின்றன என்பதை இப்போது கண்டறிந்து சொல்கிறார்கள் மேல் நாட்டு மருத்துவர்கள். ஆனால் இதனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே நம் சித்தர்கள் சொல்லிச் சென்று விட்டார்கள். அதனால் தான் மருந்தே உணவு! உணவே மருந்து! என அவர்கள் சொன்னார்கள். நாம் நலமாக மகிழ்ந்து வாழ சித்த புருஷர்கள் விட்டுச் சென்ற அற்புதமான கஷாயங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். படித்துப் பயன் பெறுங்கள் நண்பர்களே!.
நமது உடலை காயம் என்று சொல்வார்கள் சித்தர்கள். அதன் நலத்தைப் பேணிக்காக்க பல்வேறு மூலிகைகளையும் அவற்றைப் பயன் படுத்தும் முறைகளையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் அந்த மகான்கள். நாம் அவற்றை முறையாகப் பயன் போடுத்தினால் தேவையற்ற மாத்திரை மருந்துகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். சமீப காலங்களில் துரித உணவுப்பழக்கத்தினாலும், உணவுப்பொருட்களில் உள்ள கலப்படங்களினாலும் நமக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எல்லாவற்றிற்கும் ஆதாரமான தண்ணீரும், காற்றும் நிலமும் மாசு பட்டு விட்டன. அதனால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களே நஞ்சாகி விட்டன. அதற்காக நாம் உடனே பதட்டமடையத் தேவையில்லை.
முக்காலமும் உணர்ந்த நம் தமிழ்ச் சித்தர்கள் இப்படி ஒரு நிலை வரலாம் எனக் கணித்து உணர்ந்து இதற்கும் ஒரு மாற்று மருந்து வைத்திருக்கிறார்கள். அவை தான் கஷாயங்கள். இவற்றை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். தேவையான பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். விலையும் அதிகம் இருக்காது. கஷாயம் என்பதை சூப் போலவும் செய்து குடிக்கலாம். சில கஷாயங்கள் சூப்பாகும் ஆனால் சிலவற்றை கஷாயமாகவே பருகினால் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்கள் என அனைவருமே பல விதமான நோய்த்தொற்றுக்கு ஆளாகிறோம். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொண்டால் அவை நம்மை அணுகாது. நோய் எதிர்ப்பு சக்தியை எப்படிப் பெருக்கிக் கொள்வது? அவற்றுக்கும் கஷாயம் தான் உதவுகிறது. அதோடு தினமும் உண்வு உண்ட ஒரு மணி நேரம் பின்னர் மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
இந்தப் பகுதியில் ஒவ்வொரு கஷாயமாகப் பார்க்கலாம். இதில் குறிப்பிட்டுள்ள மூலிகைகள்/ பவுடர்கள் அனைத்துமே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். மூலிகைகள் என்பதால் நிச்சயம் பக்க விளைவுகள் கிடையாது. சில கஷாயங்களை இளம் குழந்தைகள் குடிக்கக் கூடாது. அவற்றை அந்தப் பகுதியிலேயே நான் குறிப்பிட்டு விடுவேன். ஆகையால் கவனமாகப் படியுங்கள்.
அன்பு நண்பர்களே, ஸ்ரீஜா வெங்கடேஷ் என்று உங்களால் அறியப்படும் நான் மூலிகைகள் அதன் பயன்கள், அவற்றை எந்த முறையில் நம் உணவில் பயன் படுத்தலாம்? எந்த மூலிகை எதற்கு நல்லது? எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். சித்தர்கள் அருளால் நாம் நோய்யற்ற வாழ்வு வாழ வேண்டுகிறேன். துவையல், சூப், பொடி, குழம்பு,கஷாயம் என ஐந்து வகைகளில் மூலிகைகளை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றை தயாரிக்கும் முறையோ எளிது! ஆனால் பயன்களோ அரிது! அரிது!! செரிமானக் கோளாறுகளாலேயே தான் பலவகையான நோய்கள் வருகின்றன என்பதை இப்போது கண்டறிந்து சொல்கிறார்கள் மேல் நாட்டு மருத்துவர்கள். ஆனால் இதனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே நம் சித்தர்கள் சொல்லிச் சென்று விட்டார்கள். அதனால் தான் மருந்தே உணவு! உணவே மருந்து! என அவர்கள் சொன்னார்கள். நாம் நலமாக மகிழ்ந்து வாழ சித்த புருஷர்கள் விட்டுச் சென்ற அற்புதமான கஷாயங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். படித்துப் பயன் பெறுங்கள் நண்பர்களே!.
நமது உடலை காயம் என்று சொல்வார்கள் சித்தர்கள். அதன் நலத்தைப் பேணிக்காக்க பல்வேறு மூலிகைகளையும் அவற்றைப் பயன் படுத்தும் முறைகளையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் அந்த மகான்கள். நாம் அவற்றை முறையாகப் பயன் போடுத்தினால் தேவையற்ற மாத்திரை மருந்துகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். சமீப காலங்களில் துரித உணவுப்பழக்கத்தினாலும், உணவுப்பொருட்களில் உள்ள கலப்படங்களினாலும் நமக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எல்லாவற்றிற்கும் ஆதாரமான தண்ணீரும், காற்றும் நிலமும் மாசு பட்டு விட்டன. அதனால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களே நஞ்சாகி விட்டன. அதற்காக நாம் உடனே பதட்டமடையத் தேவையில்லை.
முக்காலமும் உணர்ந்த நம் தமிழ்ச் சித்தர்கள் இப்படி ஒரு நிலை வரலாம் எனக் கணித்து உணர்ந்து இதற்கும் ஒரு மாற்று மருந்து வைத்திருக்கிறார்கள். அவை தான் கஷாயங்கள். இவற்றை எளிய முறையில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். தேவையான பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். விலையும் அதிகம் இருக்காது. கஷாயம் என்பதை சூப் போலவும் செய்து குடிக்கலாம். சில கஷாயங்கள் சூப்பாகும் ஆனால் சிலவற்றை கஷாயமாகவே பருகினால் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்லும் ஆண்கள் பெண்கள் என அனைவருமே பல விதமான நோய்த்தொற்றுக்கு ஆளாகிறோம். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொண்டால் அவை நம்மை அணுகாது. நோய் எதிர்ப்பு சக்தியை எப்படிப் பெருக்கிக் கொள்வது? அவற்றுக்கும் கஷாயம் தான் உதவுகிறது. அதோடு தினமும் உண்வு உண்ட ஒரு மணி நேரம் பின்னர் மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
இந்தப் பகுதியில் ஒவ்வொரு கஷாயமாகப் பார்க்கலாம். இதில் குறிப்பிட்டுள்ள மூலிகைகள்/ பவுடர்கள் அனைத்துமே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். மூலிகைகள் என்பதால் நிச்சயம் பக்க விளைவுகள் கிடையாது. சில கஷாயங்களை இளம் குழந்தைகள் குடிக்கக் கூடாது. அவற்றை அந்தப் பகுதியிலேயே நான் குறிப்பிட்டு விடுவேன். ஆகையால் கவனமாகப் படியுங்கள்.