Srija Venkatesh
SM Exclusive
காயம் காக்கும் கசாயங்கள் - உடல் வலுவிற்கு முழு உளுந்து தோசை
உளுந்து என்பது நம் தமிழகத்தைப் பொறுத்தவரை மிக அதிகமாகவே உணவில் சேர்க்கப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் கூட உளுந்தில் செய்த பலகாரங்களைப் பற்றி குறிப்புக்கள் உள்ளன. உளுந்தில் புரதச் சத்தும் அதோடு கால்சிய சத்தும் மிக அதிகமாக உள்ளது. ஆகையால் வளரும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது தோல் நீக்கிய பருப்புக்கள் கடைகளில் கிடைக்கின்றன். இட்லி தோசைக்கு நாம் அதனைப் பயன் படுத்துகிறோம். ஆனால் முழு உளுந்தில் எத்தனை இரும்புச் சத்து இருக்கிறது தெரியுமா? வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கும், மெனோபாஸ் என்ற நிலையில் இருக்கும் பெண்மணிகளுக்கும் முழு உளுந்து சத்தான மருந்து, அதே நேரம் உணவும் கூட. சுவையான இந்த தோசையை இட்லிப் பொடி அல்லது சட்னி சேர்த்து உண்ணலாம். மொறுமொறு என்று சுட்டுக்கொடுத்தால் குழந்தைகளும் கூட விருப்பமாக உண்பார்கள். இதனை இரவில் உண்பதை விட காலை டிஃபனுக்கு எடுத்துக்கொண்டால் நல்லது. செரிமானம் செய்ய எளிதாகும். தோசை தயாரிக்கும் முறையும் எளியது தான். மாவை அரைத்து வைத்துக்கொண்டால் இரு நாட்கள் சுடலாம்.
முழு உளுந்து தோசை
தேவையான பொருட்கள்
தோலோடு கூடிய முழு உளுந்து - 100 கிராம்
புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) - 1/2 கிலோ
இஞ்சி - 50 கிராம்
மிளகு - 10 (எண்ணிக்கை)
தனியா (கொத்தமல்லி விதை) - ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3 பற்கள்
அரிசி+உளுந்தை நன்கு கழுவி இரண்டையும் ஒன்றாகவே ஊற வைக்கலாம். சுமார் 2 மணி நேரம் ஊறிய பின்னர் கிரைண்டரில் விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இப்போது மிக்சி ஜாரை நன்கு கழுவி அதில் கொத்தமல்லி விதை/தனியா, கருவேப்பிலை, தோலுரித்து நறுக்கிய இஞ்சி, மிளகாய் வற்றல், பூண்டு பற்கள் இவற்றைப் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். மிளகை ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த மாவில், மிக்சியில் அரைத்த கருபேப்பிலை, பூண்டு இஞ்சி விழுதைப் போட்டு நன்றாகக் கலக்கவும். பொடித்த மிளகையும் உப்பையும் போட்டு மாவை நன்றாக கலக்கவும். காலையில் அரைத்தால் இரவில் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடுங்கள். மாலையில் அரைத்தால் மறு நாள் காலை அப்படியே உபயோக்கிக்கலாம்.
மறு நாள் மாவு சற்றே புளித்திருக்கும். அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துக் கலக்கி சூடான கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கலாம். மெலிதாக ஊற்றினால் மிகவும் மொறுமொறுவென இருக்கும் இந்த தோசை . அப்படி செய்யப் பிடிக்காதவர்கள் ஊத்தப்பம் போல ஊற்றி எடுக்கலாம். அதன் மேலேயே துருவிய காரட், பீட் ரூட் நறுக்கிய வெங்காயம், ஆகியவற்றைத் தூவிக்கொடுக்க அனைவரும் விரும்பி உண்பார்கள்.
உடல் வலு கொடுக்கும் இந்த தோசை. கிடைத்தவர்கள் மாவு அரைக்கும் போது இரு துண்டு இளம் பிரண்டைகளைச் சேர்க்கலாம். மணமும் சுவையும் கூடும். உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது தான் முழு உளுந்து தோசை. செய்து பார்த்து விட்டு கருத்தைப் பகிருங்கள்.
உளுந்து என்பது நம் தமிழகத்தைப் பொறுத்தவரை மிக அதிகமாகவே உணவில் சேர்க்கப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் கூட உளுந்தில் செய்த பலகாரங்களைப் பற்றி குறிப்புக்கள் உள்ளன. உளுந்தில் புரதச் சத்தும் அதோடு கால்சிய சத்தும் மிக அதிகமாக உள்ளது. ஆகையால் வளரும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது தோல் நீக்கிய பருப்புக்கள் கடைகளில் கிடைக்கின்றன். இட்லி தோசைக்கு நாம் அதனைப் பயன் படுத்துகிறோம். ஆனால் முழு உளுந்தில் எத்தனை இரும்புச் சத்து இருக்கிறது தெரியுமா? வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கும், மெனோபாஸ் என்ற நிலையில் இருக்கும் பெண்மணிகளுக்கும் முழு உளுந்து சத்தான மருந்து, அதே நேரம் உணவும் கூட. சுவையான இந்த தோசையை இட்லிப் பொடி அல்லது சட்னி சேர்த்து உண்ணலாம். மொறுமொறு என்று சுட்டுக்கொடுத்தால் குழந்தைகளும் கூட விருப்பமாக உண்பார்கள். இதனை இரவில் உண்பதை விட காலை டிஃபனுக்கு எடுத்துக்கொண்டால் நல்லது. செரிமானம் செய்ய எளிதாகும். தோசை தயாரிக்கும் முறையும் எளியது தான். மாவை அரைத்து வைத்துக்கொண்டால் இரு நாட்கள் சுடலாம்.
முழு உளுந்து தோசை
தேவையான பொருட்கள்
தோலோடு கூடிய முழு உளுந்து - 100 கிராம்
புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) - 1/2 கிலோ
இஞ்சி - 50 கிராம்
மிளகு - 10 (எண்ணிக்கை)
தனியா (கொத்தமல்லி விதை) - ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3 பற்கள்
அரிசி+உளுந்தை நன்கு கழுவி இரண்டையும் ஒன்றாகவே ஊற வைக்கலாம். சுமார் 2 மணி நேரம் ஊறிய பின்னர் கிரைண்டரில் விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இப்போது மிக்சி ஜாரை நன்கு கழுவி அதில் கொத்தமல்லி விதை/தனியா, கருவேப்பிலை, தோலுரித்து நறுக்கிய இஞ்சி, மிளகாய் வற்றல், பூண்டு பற்கள் இவற்றைப் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். மிளகை ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த மாவில், மிக்சியில் அரைத்த கருபேப்பிலை, பூண்டு இஞ்சி விழுதைப் போட்டு நன்றாகக் கலக்கவும். பொடித்த மிளகையும் உப்பையும் போட்டு மாவை நன்றாக கலக்கவும். காலையில் அரைத்தால் இரவில் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விடுங்கள். மாலையில் அரைத்தால் மறு நாள் காலை அப்படியே உபயோக்கிக்கலாம்.
மறு நாள் மாவு சற்றே புளித்திருக்கும். அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துக் கலக்கி சூடான கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கலாம். மெலிதாக ஊற்றினால் மிகவும் மொறுமொறுவென இருக்கும் இந்த தோசை . அப்படி செய்யப் பிடிக்காதவர்கள் ஊத்தப்பம் போல ஊற்றி எடுக்கலாம். அதன் மேலேயே துருவிய காரட், பீட் ரூட் நறுக்கிய வெங்காயம், ஆகியவற்றைத் தூவிக்கொடுக்க அனைவரும் விரும்பி உண்பார்கள்.
உடல் வலு கொடுக்கும் இந்த தோசை. கிடைத்தவர்கள் மாவு அரைக்கும் போது இரு துண்டு இளம் பிரண்டைகளைச் சேர்க்கலாம். மணமும் சுவையும் கூடும். உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது தான் முழு உளுந்து தோசை. செய்து பார்த்து விட்டு கருத்தைப் பகிருங்கள்.