Epi 3
இரவு ஒரு மணிப்போல திடுக்கிட்டு எழுந்தமர்த்தவள் உடல் முழுதும் வியர்வையில் குளித்திருக்க முகத்தை தன் இரு கைக்கொண்டு அழுந்த துடைத்துக்கொண்டாள் கயல்.கட்டில் அருகே இருந்த நீரை பருகி தன்னை நிதானப் படுத்திக்கொண்டாள்.
அவள் சற்று முன் திடுக்கிட்டு எழுந்ததற்கான காரணமாய் இருந்த கனவு அவள் நினைவுக்கு வந்தது…
அடர் காட்டு பகுதி ஒன்றில் அவள் மட்டும் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு தனித்து விடப்பட்டிருந்தாள்.அவ்விடத்தின் அமைதியும் அங்கே கேட்கும் பூச்சிக்களின் ரீங்காரங்களும் அவளை பயங்கொள்ள செய்ய அவளை யாரோ பின்னின்று அவள் தோளில் கை வைக்கவும் கனவு கலைந்து எழுந்தமர்ந்திருந்தாள். படத்திலும் சண்டை காட்சிகளையே பார்க்க பயப்படும் மனம் கொண்டவளுக்கு கனவில் கண்ட நிகழ்வு உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இரண்டு மாதங்களில் கயல் செல்லும் டென்னிஸ் பயிற்சியின் போது அவளை யாரோ உற்று பார்ப்பதை உணர்த்திருந்தாள்.. முதல் நாள் அவள் கண்ணுக்கு தரிசனம் தனத்தவனையும் அதனை தொடர்ந்து வந்த நாட்களில் காணவில்லை…
அவள் தான் காணவில்லையே தவிர அவன் கண்கள் அவளை மட்டும் தான் பார்த்ததை அவள் அறியவுமில்லை.
முதல் நாளிற்கு பிறகு தந்தை இன்றி தான் மட்டுமே தன் இருசக்கர வண்டியில் வருவதை வளமையாக்கி கொண்டிருந்தாள்…..
அவளை யாரோ உற்று நோக்குவதை உணரும் போது அப்பார்வை தப்பானதாக இருக்கும் எனும் எண்ணமும் அவள் மனதில் எழாமல் இல்லை. அதோடு அது பற்றி அவளுக்கு அங்கு கூறவும் இது வரையில் யாருடனும் நெருங்கிய பழக்கம் ஏற்படவில்லை..தந்தையிடம் கூறி ஏதும் நிகழ்ந்தால், மீண்டு அவ்விடம் செல்ல தன்னால் இயலாது என்பதால் அவரிடம் இருந்து மறைத்திருந்தாள்.
தன் அறையில் உறங்க பயந்தவள் தந்தையின் அறையை எட்டிப்பார்க்க, அரசு நல்ல உறக்கத்தில் இருந்தார்.. மெதுவாக அவரருகே சென்றவள் அவருக்கு சத்தம் எழுப்பாது அப்படியே உறங்கிப்போனாள்.
காலை எழுந்தவர் தன் பக்கத்தில் உறங்கும் கயலை கண்டு இங்கு எதற்கு வந்து உறங்கி இருக்கிறாள் என்பதாய் யோசனையோடு பார்த்தவர் தலையணை கட்டிக்கொண்டு துயில் கொள்ளும் தன் கண்ணம்மாவின் தலைக்கோதி விட்டு எழுந்து தன் காலை கடமைகளை நிறைவேற்றச்சென்றார்…
இவள் எழும் போது அவர் முன்னறையில் தேநீர் பருகிக்கொண்டு இருக்க " குட் மோனிங் ஹனி "என்றவள் அவரருகே அமர்ந்து அவர் தோளில் மீண்டும் தலை சாய்ந்து உறக்கத்தை தொடர "கண்ணம்மா ஆபிஸ் போகல?" எனவும் போகனும் ஹனி. இன்னக்கி வெளில போலாமா? " எனக்கேட்டாள் கயல்.
"எனக்கு இன்னக்கி லெவனுக்கு ஒருத்தரை மீட் பண்ண போகணும் டா. உனக்கு அங்க வர முடியும்னா ரெண்டு பேருமா ஒன்னா லஞ்ச் எடுத்துட்டு வெளில எங்கயாச்சும் போவமா? உனக்கு வரமுடியும்னா ஆபிஸ் போய்ட்டு கோள் ஒன்னு பண்ணு, நா அங்கேயே வெய்ட் பண்றேன் டா" என அரசு கூற,
"ஓகே ஹனி ஆபிசில போய் பார்த்துட்டு சொல்றேன் "என்றவள் அவர் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு செல்ல 'கண்ணம்மா…' என இவர் கத்த "சாரி ஹனி பிரஷ் பண்ணிட்டு ஒன்னு குடுத்தா ஓகேயாகிரும் " என கூறிக்கொண்டே இவள் குளியலறையில் நுழைந்தாள்…
பிறந்தது முதல் இவகிட்ட மாற்ற முடியாத பழக்கம்னா இது ஒண்ணுதான் என தினமும் காலையில் எழுந்து தன் தந்தை கன்னத்தில் இடும் முத்தம் பற்றி நினைத்த வண்ணம் ஆபிஸ் செல்ல ஆயத்தமானார்….
"ஹலோ அத்தம்மா. ஆபிஸ் வந்துடீங்கலா? நா அந்த ஒபிசரை மீட் பன்னிட்டு அங்கேயே இருப்பேன் ரெண்டு பேரும் மீட் பண்ணலாம்" என கூறி ருத்ரா போனை வைக்க மீனாட்சி பேசும் வரை காத்திருந்த கயல்" மேம் இன்னக்கி மீட்டிங் தனியாவா போறீங்க? " எனவும்
"இல்லடா என் பெரியமனுஷன் ஒருத்தன் இருக்கானே அவனே அந்த அபிசரை மீட் பண்றதா சொல்லிருக்கான் "என்றார்.
ஓஹ் வட போச்சே!" என இவள் மனம் மீனாட்சியின் பெரியமனுஷனை வெளுக்க…
"மேம் நீங்க போயிருந்தா தன்மையா பேசலாமே.. உங்க பையன் கோவப்பட்டு அவர் பேசுறதுக்கு முன்னமே எதாவது சொல்லி ப்ரோப்ம் வந்துட்டா? "
இவளுக்கு மீனாட்சியை அனுப்பி விட எதாவது வழியிருக்கா என பேசிப்பார்க்க
மீனாட்சியோ "கயல், என் பையன் பேசுறதை நீ கேட்டதில்லைல அதுனாலதான் இப்படி பேசுற… அவன் என்னை வரவேணாம்னு சொன்னதே நான் கோவத்துல எதாவது பேசுவேணாம். அதான் அவன் போறதா சொன்னான்..
"ஓஹ்!.ஓகே மேம் " என்றவளிடம்,
"கயல் நானும் அப்படியே லுஞ்சுக்கு வெளில அவன் கூட ஜோயின் பண்ணிக்குவேன் நீயும் வாயேன் அவனை இன்ட்ரோ பண்றேன்"என கேற்க.
" மேம் நானும் இன்னக்கி ஹாப் டே லீவ் கேட்கலாம்னு இருந்தேன்.கொஞ்சம் வெளில போகணும்.
'ஓஹ் அப்படியா.. சரி அப்போ நீ போ வேறொரு நாள் மீட் பண்லாம் ' என்றவர் அவர்களின் அன்றைய வேலையில் மூழ்கி விட்டனர்.
காலை நேரம் பதினொரு மணி பிரபல ஹோட்டல் ஒன்றில் தேநீர் ஒன்றினை அருந்தியவாறு RVC யின் தலைமையாளரை சந்திக்க காத்திருந்தார் தேனரசன்…
வாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தவர் கண்களுக்கு இவர் மேசையை நோக்கி வந்த இளைஞனை கண்டு எழுந்தவர் மரியாதை நிமித்தமாக கை குலுக்கி தன்னை அறிமுகப்டுத்திக்கொண்டார்..
"ஹலோ அம் ருத்ர வர்மன் "என இவனும் பெயர் சொல்லி அறிமுகமாகியவன் அமரவும் இவரும் அமர்த்துக்கொண்டார். வெய்ட்டரை அழைத்தவர், "என்ன சாப்பிடறீங்க ருத்ரா? எனவும் அவனுக்கான பானத்தை ஆர்டர் செய்து விட்டு அவர்கள் வந்ததுக்கான காரணத்தை அலசினர்.
உங்க கம்பனி பண்ணி கொடுத்த எல்லா விதமான காண்ட்ராக்டும் வெரி பேர்பெக்டா இருக்கு. நான் இங்க வந்து டூ மந்த்ஸ் தான் ஆகுது.சோ நானே கலெக்ட் பண்ணின தகவல் கொண்டு தான் இந்த முறை இதை தடை பண்ணேன்.
இவ்வளவுக்கும் உங்க கம்பெனி மற்ற கம்பனிகளை விட பெரியளவிலான அமௌன்ட் வித்தியாசத்துல இல்ல. நினச்சா உங்களை அடுத்து இருக்க கம்பனிக்கும் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் உங்க கம்பனியுடைய எல்லா விதமான பணிகளிலும் இருக்க நேர்த்தியும்,தரமும் தான், அதை விட உங்க கம்பனி ஹெட் மேல இருக்க நம்பிக்கையும் தான் இவ்வளவு நாளும் உங்களுக்கு கான்ட்ராக்ட்களை தர முன்வந்திருக்கு… ஆனா இந்த முறை உங்க கம்பனியோட தரவுகளின் படி காண்ட்ராக்ட் அமௌன்ட் ரொம்ப குறைவா இருக்கு உங்களை அடுத்து பண்ணியிருக்க கம்பனியோட கம்பேர் பண்ணும் போது…
அது சாத்தியமே இல்ல அதோட அந்த அமௌண்ட்ல அந்த பில்டிங்க கட்டினாலும் அதன் உறுதி தன்மையை உறுதியா எத்தனை வருஷத்துக்குன்னு கூற முடியாது…
இந்த காண்ட்ராக்ட் அமௌன்ட் பைனலைஸ் பண்ணினத்துக்கு அப்றம் உங்க ஹெட் ஓட பார்வைக்கு வராம போயிருக்கணும், இல்லன்னா உங்க மேம் பைனலைஸ் பண்ணி நம்மகிட்ட வரத்துக்கு இடையில யாரும் மாற்றி இருக்கணும். அதான் நான் டைரக்ட்டா உங்க ஹெட்டுக்கே இந்த லெட்டர் வாரது போல அனுப்பினேன்..
நீங்க தான் இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லணும்" என அரசு அவர் கூற வேண்டியவற்றை கூறிவிட்டு அமைதி காக்க…
அனைத்தையும் அமைதியாக கேட்டிருந்தவன்….'சிரித்துக்கொண்டே நான் இந்த கம்பனியோட ஹெட் இல்லன்னு எப்டி சரியா சொல்றிங்க? ' எனவும்
" உங்க கம்பனி ஒரு பெண் சிங்கத்தோட வலிமையினால உருவாக்கப்பட்டதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்… அந்த இளம் பெண் சிங்சத்தோட மகனாகவும் உங்களை என்னால நினைக்க முடியலை.. மே பி யூ ர் இன் நியர் டு தர்ட்டி ரைட் ?" என அவனை இவர் நோக்க, "யெஸ் அம் டுவெண்ட்டிஎயிட்" என்றான்…
"தட்ஸ் தே ரீசன், ஆல்சோ உங்களை பார்க்கும் போது ஒரு மிலிட்டரி லுக் தான் தோணுது" என அரசு கூறினார்.
"ஹ்ம்ம்.நான் அவங்க அண்ணன் பையன் பட் அவங்களுக்கு எல்லாமே நாந்தான்.ஷி இஸ் மை ரோல் மாடல் என்றவன் பட் கம்பெனியோட பார்ட்னரும் கூட… "
"சமீப காலமா நீங்க கம்பனி பக்கம் போகல போல. நீங்க இருந்திருந்தா இந்த மிஸ்ட்கே வணர்த்திருக்காதுன்னு தோணுது எனக்கு "அரசு கூற
"யா இதுக்கப்றம் இப்படி நடக்கா துன்னு ஐ கேன் ப்ரோமிஸ், "என்றவன்
" இவ்வளவு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி இருக்கீங்க, யாரு இதுக்கான காரணம்னும் தெரிஞ்சு இருக்குமே" என ருத்ரா அரசுவிடம் கேற்க.
"அது உங்க கம்பனில ஒருத்தரா இருக்க முடியாது ரெண்டோ மூணு பேர் சேர்ந்து தான் பண்ணி இருக்கணும் என்றார்.. இது எனக்கு வந்த காண்ட்ராக்ட் பைல். உங்க கம்பனில இருக்குமே நம்ம கம்பனிக்கி அனுப்பினது, ரெண்டையும் வெச்சு பாருங்க உங்களுக்கு எதுன்னாலும் ஒரு முடிவுக்கு வரலாம் " என்றார்…
"கண்டிப்பா " என அதனை பெற்றுக்கொண்டவன் அவரிடம்" சாரி உங்களை தப்பா மீண் பண்ணித்தான் வந்தேன், பட்…. " என எதுவோ கூறமுன் அரசு அவனை முந்திக்கொண்டு "நான் கனடால சம்பாரிச்சு முடிச்சிட்டேன்.இங்க தொழில் பண்றது மனசுக்கு சும்மா இருக்கோமேன்னு நினைக்காம இருக்கவும் ரிலாக்ஸா இருக்கத்துக்கும் … " சோ பணம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை என்பது போல பேச… அவரிடம் கை குலுக்கியவன்," வில் மீட் சம் அதர் டைம்.ஹாப்பி டு மீட் யூ " என நன்றியை கூறிக்கொண்டவன் விடைபெற்று சென்றான்.
இரவு ஒரு மணிப்போல திடுக்கிட்டு எழுந்தமர்த்தவள் உடல் முழுதும் வியர்வையில் குளித்திருக்க முகத்தை தன் இரு கைக்கொண்டு அழுந்த துடைத்துக்கொண்டாள் கயல்.கட்டில் அருகே இருந்த நீரை பருகி தன்னை நிதானப் படுத்திக்கொண்டாள்.
அவள் சற்று முன் திடுக்கிட்டு எழுந்ததற்கான காரணமாய் இருந்த கனவு அவள் நினைவுக்கு வந்தது…
அடர் காட்டு பகுதி ஒன்றில் அவள் மட்டும் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு தனித்து விடப்பட்டிருந்தாள்.அவ்விடத்தின் அமைதியும் அங்கே கேட்கும் பூச்சிக்களின் ரீங்காரங்களும் அவளை பயங்கொள்ள செய்ய அவளை யாரோ பின்னின்று அவள் தோளில் கை வைக்கவும் கனவு கலைந்து எழுந்தமர்ந்திருந்தாள். படத்திலும் சண்டை காட்சிகளையே பார்க்க பயப்படும் மனம் கொண்டவளுக்கு கனவில் கண்ட நிகழ்வு உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இரண்டு மாதங்களில் கயல் செல்லும் டென்னிஸ் பயிற்சியின் போது அவளை யாரோ உற்று பார்ப்பதை உணர்த்திருந்தாள்.. முதல் நாள் அவள் கண்ணுக்கு தரிசனம் தனத்தவனையும் அதனை தொடர்ந்து வந்த நாட்களில் காணவில்லை…
அவள் தான் காணவில்லையே தவிர அவன் கண்கள் அவளை மட்டும் தான் பார்த்ததை அவள் அறியவுமில்லை.
முதல் நாளிற்கு பிறகு தந்தை இன்றி தான் மட்டுமே தன் இருசக்கர வண்டியில் வருவதை வளமையாக்கி கொண்டிருந்தாள்…..
அவளை யாரோ உற்று நோக்குவதை உணரும் போது அப்பார்வை தப்பானதாக இருக்கும் எனும் எண்ணமும் அவள் மனதில் எழாமல் இல்லை. அதோடு அது பற்றி அவளுக்கு அங்கு கூறவும் இது வரையில் யாருடனும் நெருங்கிய பழக்கம் ஏற்படவில்லை..தந்தையிடம் கூறி ஏதும் நிகழ்ந்தால், மீண்டு அவ்விடம் செல்ல தன்னால் இயலாது என்பதால் அவரிடம் இருந்து மறைத்திருந்தாள்.
தன் அறையில் உறங்க பயந்தவள் தந்தையின் அறையை எட்டிப்பார்க்க, அரசு நல்ல உறக்கத்தில் இருந்தார்.. மெதுவாக அவரருகே சென்றவள் அவருக்கு சத்தம் எழுப்பாது அப்படியே உறங்கிப்போனாள்.
காலை எழுந்தவர் தன் பக்கத்தில் உறங்கும் கயலை கண்டு இங்கு எதற்கு வந்து உறங்கி இருக்கிறாள் என்பதாய் யோசனையோடு பார்த்தவர் தலையணை கட்டிக்கொண்டு துயில் கொள்ளும் தன் கண்ணம்மாவின் தலைக்கோதி விட்டு எழுந்து தன் காலை கடமைகளை நிறைவேற்றச்சென்றார்…
இவள் எழும் போது அவர் முன்னறையில் தேநீர் பருகிக்கொண்டு இருக்க " குட் மோனிங் ஹனி "என்றவள் அவரருகே அமர்ந்து அவர் தோளில் மீண்டும் தலை சாய்ந்து உறக்கத்தை தொடர "கண்ணம்மா ஆபிஸ் போகல?" எனவும் போகனும் ஹனி. இன்னக்கி வெளில போலாமா? " எனக்கேட்டாள் கயல்.
"எனக்கு இன்னக்கி லெவனுக்கு ஒருத்தரை மீட் பண்ண போகணும் டா. உனக்கு அங்க வர முடியும்னா ரெண்டு பேருமா ஒன்னா லஞ்ச் எடுத்துட்டு வெளில எங்கயாச்சும் போவமா? உனக்கு வரமுடியும்னா ஆபிஸ் போய்ட்டு கோள் ஒன்னு பண்ணு, நா அங்கேயே வெய்ட் பண்றேன் டா" என அரசு கூற,
"ஓகே ஹனி ஆபிசில போய் பார்த்துட்டு சொல்றேன் "என்றவள் அவர் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு செல்ல 'கண்ணம்மா…' என இவர் கத்த "சாரி ஹனி பிரஷ் பண்ணிட்டு ஒன்னு குடுத்தா ஓகேயாகிரும் " என கூறிக்கொண்டே இவள் குளியலறையில் நுழைந்தாள்…
பிறந்தது முதல் இவகிட்ட மாற்ற முடியாத பழக்கம்னா இது ஒண்ணுதான் என தினமும் காலையில் எழுந்து தன் தந்தை கன்னத்தில் இடும் முத்தம் பற்றி நினைத்த வண்ணம் ஆபிஸ் செல்ல ஆயத்தமானார்….
"ஹலோ அத்தம்மா. ஆபிஸ் வந்துடீங்கலா? நா அந்த ஒபிசரை மீட் பன்னிட்டு அங்கேயே இருப்பேன் ரெண்டு பேரும் மீட் பண்ணலாம்" என கூறி ருத்ரா போனை வைக்க மீனாட்சி பேசும் வரை காத்திருந்த கயல்" மேம் இன்னக்கி மீட்டிங் தனியாவா போறீங்க? " எனவும்
"இல்லடா என் பெரியமனுஷன் ஒருத்தன் இருக்கானே அவனே அந்த அபிசரை மீட் பண்றதா சொல்லிருக்கான் "என்றார்.
ஓஹ் வட போச்சே!" என இவள் மனம் மீனாட்சியின் பெரியமனுஷனை வெளுக்க…
"மேம் நீங்க போயிருந்தா தன்மையா பேசலாமே.. உங்க பையன் கோவப்பட்டு அவர் பேசுறதுக்கு முன்னமே எதாவது சொல்லி ப்ரோப்ம் வந்துட்டா? "
இவளுக்கு மீனாட்சியை அனுப்பி விட எதாவது வழியிருக்கா என பேசிப்பார்க்க
மீனாட்சியோ "கயல், என் பையன் பேசுறதை நீ கேட்டதில்லைல அதுனாலதான் இப்படி பேசுற… அவன் என்னை வரவேணாம்னு சொன்னதே நான் கோவத்துல எதாவது பேசுவேணாம். அதான் அவன் போறதா சொன்னான்..
"ஓஹ்!.ஓகே மேம் " என்றவளிடம்,
"கயல் நானும் அப்படியே லுஞ்சுக்கு வெளில அவன் கூட ஜோயின் பண்ணிக்குவேன் நீயும் வாயேன் அவனை இன்ட்ரோ பண்றேன்"என கேற்க.
" மேம் நானும் இன்னக்கி ஹாப் டே லீவ் கேட்கலாம்னு இருந்தேன்.கொஞ்சம் வெளில போகணும்.
'ஓஹ் அப்படியா.. சரி அப்போ நீ போ வேறொரு நாள் மீட் பண்லாம் ' என்றவர் அவர்களின் அன்றைய வேலையில் மூழ்கி விட்டனர்.
காலை நேரம் பதினொரு மணி பிரபல ஹோட்டல் ஒன்றில் தேநீர் ஒன்றினை அருந்தியவாறு RVC யின் தலைமையாளரை சந்திக்க காத்திருந்தார் தேனரசன்…
வாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தவர் கண்களுக்கு இவர் மேசையை நோக்கி வந்த இளைஞனை கண்டு எழுந்தவர் மரியாதை நிமித்தமாக கை குலுக்கி தன்னை அறிமுகப்டுத்திக்கொண்டார்..
"ஹலோ அம் ருத்ர வர்மன் "என இவனும் பெயர் சொல்லி அறிமுகமாகியவன் அமரவும் இவரும் அமர்த்துக்கொண்டார். வெய்ட்டரை அழைத்தவர், "என்ன சாப்பிடறீங்க ருத்ரா? எனவும் அவனுக்கான பானத்தை ஆர்டர் செய்து விட்டு அவர்கள் வந்ததுக்கான காரணத்தை அலசினர்.
உங்க கம்பனி பண்ணி கொடுத்த எல்லா விதமான காண்ட்ராக்டும் வெரி பேர்பெக்டா இருக்கு. நான் இங்க வந்து டூ மந்த்ஸ் தான் ஆகுது.சோ நானே கலெக்ட் பண்ணின தகவல் கொண்டு தான் இந்த முறை இதை தடை பண்ணேன்.
இவ்வளவுக்கும் உங்க கம்பெனி மற்ற கம்பனிகளை விட பெரியளவிலான அமௌன்ட் வித்தியாசத்துல இல்ல. நினச்சா உங்களை அடுத்து இருக்க கம்பனிக்கும் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் உங்க கம்பனியுடைய எல்லா விதமான பணிகளிலும் இருக்க நேர்த்தியும்,தரமும் தான், அதை விட உங்க கம்பனி ஹெட் மேல இருக்க நம்பிக்கையும் தான் இவ்வளவு நாளும் உங்களுக்கு கான்ட்ராக்ட்களை தர முன்வந்திருக்கு… ஆனா இந்த முறை உங்க கம்பனியோட தரவுகளின் படி காண்ட்ராக்ட் அமௌன்ட் ரொம்ப குறைவா இருக்கு உங்களை அடுத்து பண்ணியிருக்க கம்பனியோட கம்பேர் பண்ணும் போது…
அது சாத்தியமே இல்ல அதோட அந்த அமௌண்ட்ல அந்த பில்டிங்க கட்டினாலும் அதன் உறுதி தன்மையை உறுதியா எத்தனை வருஷத்துக்குன்னு கூற முடியாது…
இந்த காண்ட்ராக்ட் அமௌன்ட் பைனலைஸ் பண்ணினத்துக்கு அப்றம் உங்க ஹெட் ஓட பார்வைக்கு வராம போயிருக்கணும், இல்லன்னா உங்க மேம் பைனலைஸ் பண்ணி நம்மகிட்ட வரத்துக்கு இடையில யாரும் மாற்றி இருக்கணும். அதான் நான் டைரக்ட்டா உங்க ஹெட்டுக்கே இந்த லெட்டர் வாரது போல அனுப்பினேன்..
நீங்க தான் இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லணும்" என அரசு அவர் கூற வேண்டியவற்றை கூறிவிட்டு அமைதி காக்க…
அனைத்தையும் அமைதியாக கேட்டிருந்தவன்….'சிரித்துக்கொண்டே நான் இந்த கம்பனியோட ஹெட் இல்லன்னு எப்டி சரியா சொல்றிங்க? ' எனவும்
" உங்க கம்பனி ஒரு பெண் சிங்கத்தோட வலிமையினால உருவாக்கப்பட்டதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்… அந்த இளம் பெண் சிங்சத்தோட மகனாகவும் உங்களை என்னால நினைக்க முடியலை.. மே பி யூ ர் இன் நியர் டு தர்ட்டி ரைட் ?" என அவனை இவர் நோக்க, "யெஸ் அம் டுவெண்ட்டிஎயிட்" என்றான்…
"தட்ஸ் தே ரீசன், ஆல்சோ உங்களை பார்க்கும் போது ஒரு மிலிட்டரி லுக் தான் தோணுது" என அரசு கூறினார்.
"ஹ்ம்ம்.நான் அவங்க அண்ணன் பையன் பட் அவங்களுக்கு எல்லாமே நாந்தான்.ஷி இஸ் மை ரோல் மாடல் என்றவன் பட் கம்பெனியோட பார்ட்னரும் கூட… "
"சமீப காலமா நீங்க கம்பனி பக்கம் போகல போல. நீங்க இருந்திருந்தா இந்த மிஸ்ட்கே வணர்த்திருக்காதுன்னு தோணுது எனக்கு "அரசு கூற
"யா இதுக்கப்றம் இப்படி நடக்கா துன்னு ஐ கேன் ப்ரோமிஸ், "என்றவன்
" இவ்வளவு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி இருக்கீங்க, யாரு இதுக்கான காரணம்னும் தெரிஞ்சு இருக்குமே" என ருத்ரா அரசுவிடம் கேற்க.
"அது உங்க கம்பனில ஒருத்தரா இருக்க முடியாது ரெண்டோ மூணு பேர் சேர்ந்து தான் பண்ணி இருக்கணும் என்றார்.. இது எனக்கு வந்த காண்ட்ராக்ட் பைல். உங்க கம்பனில இருக்குமே நம்ம கம்பனிக்கி அனுப்பினது, ரெண்டையும் வெச்சு பாருங்க உங்களுக்கு எதுன்னாலும் ஒரு முடிவுக்கு வரலாம் " என்றார்…
"கண்டிப்பா " என அதனை பெற்றுக்கொண்டவன் அவரிடம்" சாரி உங்களை தப்பா மீண் பண்ணித்தான் வந்தேன், பட்…. " என எதுவோ கூறமுன் அரசு அவனை முந்திக்கொண்டு "நான் கனடால சம்பாரிச்சு முடிச்சிட்டேன்.இங்க தொழில் பண்றது மனசுக்கு சும்மா இருக்கோமேன்னு நினைக்காம இருக்கவும் ரிலாக்ஸா இருக்கத்துக்கும் … " சோ பணம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை என்பது போல பேச… அவரிடம் கை குலுக்கியவன்," வில் மீட் சம் அதர் டைம்.ஹாப்பி டு மீட் யூ " என நன்றியை கூறிக்கொண்டவன் விடைபெற்று சென்றான்.
Last edited: