Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
தாய விளையாட்டு
ஷிவானி சொன்னதை கேட்டு ராகினி உட்பட மற்ற மூவரும் கூட கொஞ்சம் கதிகலங்கினர். இவள் ஏதாவது விவாகரம் கேட்டு வைத்தாள் என்ன செய்வது? ஐஸ்ஸும் ராகினியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ஐஸ் முன்வந்து, "என்ன கேட்க போறீங்க?" என்று ஷிவானியை சந்தேகித்து கேட்க,
"முதல்ல நம்ம விளையாடுவோமே... ஜெய்ச்சா சொல்றேன்" என்றதும் எல்லோரும் ஆழ்ந்த பார்வையோடு யோசித்துவிட்டு விளையாட்டை ஆரம்பிக்க,
ராகினி முதலில் தாயக்கட்டை ஆட்டத்தை தொடங்கி வைத்தாள்.
ஆரம்பமே அவளுக்கு அதிர்ஷ்டம் ஆடிக்க தாயத்தை போட்டு அவள் வரிசையாக காய்களை வெளிக் கொணர, அத்தகைய அதிர்ஷ்டம் ஷிவானிக்கு இல்லையே!
ஒரே ஒரு தாயம் கூட விழமாட்டேன் என அந்த தாயக்கட்டை அவளுக்கு போக்கு காட்டி கொண்டிருக்க,
'ஷிவானி... உனக்கு டைமே சரியில்ல... நானும் ரவுடிதான்னு இதுல சவால் வேற... தேவையா உனக்கு இதெல்லாம்' என்று மனதிற்குள் அவளை அவளே கலாய்த்து கொண்டாள்.
"இப்படி விளையாடினா நம்ம நாளைக்கு கூட இந்த ஆட்டத்தை முடிக்க முடியாது போலவே" என்று ஐஸ் கிண்டலாய் சொல்ல,
"வெளியே வந்தா வெட்டிடுவோமோன்னு அக்காவு பயப்படிறாங்க போல" என்று எள்ளிநகைத்தாள் ராகினி.
இவர்களின் எள்ளலான பேச்சுக்களை தான் ஏன் கேட்டு கொண்டிருக்க வேண்டும் என அவள் ஈகோ தலைத்தூக்க அவள் எழுந்து போய்விடலாமா என்று யோசிக்க, அப்போது பார்த்து தாயம் விழுந்து தொலைத்தது.
அதற்கு பிறகாவது அதிர்ஷ்டம் அவளுக்கு கை கொடுக்குமா என்று பார்த்தால் அதுதான் இல்லை.
அதற்குள் ராகினி எல்லா மலைகளையும் தன் வசமாக்கி கொண்டிருக்க, ஷிவானியின் காய்கள் நாலெட்டு நகர்ந்து வருவதே பெரும் பாடாயிருந்தது.
அப்படியே அவள் சிரமப்பட்டு முன்னேறினாலும் ராகினி அதை மேலே போகவிடாமல் வெட்டிவிட்டுதான் மறுவேலை பார்ப்பாள்.
இதுவே சுழற்சியாய் நடந்து கொண்டிருக்க ஷிவானியின் காய்கள் எல்லாம் வெட்டப்பட்டு உள்ளே போய்விட, ராகினி காய்கள் எல்லாம் பழத்தை நோக்கி முன்னேறிவிட்டன.
ஐஸ் அலுத்து போய், "இதுக்கு மேல விளையாடனுமா... அதான் பார்த்தாலே ரிஸல்ட் தெரிஞ்சி போச்சே" என்க,
ராகினி முன்வந்து,"அப்போ பேக்கிங் பண்ணிட வேண்டியதுதான்" என்றாள்.
தன் கரத்திலேயே ப்ளைட்டை ஓட்டி விசலடிக்க,
ஷிவானி எழுந்து போய்விடலாம் என்று எண்ணும் போது, "உட்காருவே" என்று மிரட்டலாய் ஒலித்தது வள்ளியம்மையின் கனிர் குரல்.
"ஆட்டம் முடியறதுக்கு முன்னாடி எழுந்துக்கிறது என்ன பழக்கம் இல்ல?" என்று மேலும் ஷிவானியை அதட்டினார் வள்ளியம்மை.
"ஆட்டம் முடிஞ்சி போச்சு அம்மாட்சி... அக்காவோட காயெல்லாம் உள்ளே இருக்கு... என் காயெல்லாம் பழத்தை நெருங்கிடுச்சு... இதுக்கப்புறம் எல்லாம் வெளியே வந்து சேன்ஸே இல்ல... எதுக்கு தேவையில்லாம நேரத்தை வீணடிச்சிக்கிட்டு" என்று ராகினி சொல்லிக் கொண்டிருக்கும் போது வள்ளியம்மை கொம்பை ஊன்றி கொண்டு ஷிவானி அருகில் அமர்ந்து,
"காயெல்லாம் பழத்துக்கு போனாதாம்ல ஆட்டம் ஜெய்ச்சதா கணக்கு... யாரெல ஏமாத்த பார்க்குதே" என்றவர் தாயக்கட்டையை ஷிவானியிடம் கொடுத்தார்.
"ஆட்டம் முடியற வரைக்கும் அங்கிட்டு இங்கிட்டு அசைய கூடாது... சொல்லிப்புட்டேன்" என்று சொல்ல ஷிவானி விருப்பமேயில்லாமல் ஆட்டத்தை தொடர ஆரம்பித்தாள்.
ராகினிக்கு வெறுப்பாய் இருந்தது. இதற்கிடையில் வள்ளியம்மையிடம் இருந்து ஷிவானிக்கு நிறைய கொட்டு இடியெல்லாம் விழுந்தது.
"இப்படியால தாயக்கட்டையை உருட்டுவாங்க... தரைக்கும் வலிக்காம உனக்கும் வலிக்காம... நல்லா உருட்டி போடுல... நீ நினைச்ச தொகையை தாயத்தை உருட்டி கேளுவ" என்க,
"அப்படி கேட்டா விழுந்திருமா?" என்று சந்தேகமாய் வினவினாள் ஷிவானி.
"கேட்டாத்தான் விழும்... நீ கேளு"
"அக்காவுக்கு ராசியே இல்ல அம்மாட்சி... அவங்க நினைச்சது ஒண்ணு விழமாட்டேங்குது" என்று ஐஸ் சொல்ல வள்ளியம்மைக்கு கோபம்
"மூடுவே வாயே... சிவானி ராசி சாதகத்தை பத்தி உனக்கு என்னல தெரியும்... அவ பிறக்கும் போதே ராசிக்காரி... எல்லோரும் தலை வழியாதான் பிறப்பாங்க... அவ கால் வழியா பிறந்த குழந்தை... எந்த ஒரு விஷயத்தை நினைச்சாலும் அதை அவளுக்கும் தானவே நடக்கும்... நீ விளையாடு தாயி" என்க,
ராகினி நமட்டு சிரிப்போடு, "அம்மாட்சி சொன்னா கரெக்ட்டாதான் இருக்கும்... நீங்க போடுங்க க்கா" என்றாள்.
அதற்கு பிறகாய் அவர்கள் ஆட்டத்தை தொடர மெல்ல மெல்ல அவர்கள் அறியாமல் ஆட்டம் தலைக்குப்புற மாறியது.
ஐஸ் ராகினியின் காதோரம், "அம்மாட்சி வந்து உட்கார்ந்ததில இருந்து அக்காவுக்கு ஒரே தொகை தொகையா விழுது... இப்படியே போனா அவ்வளவுதான்... உன்னை நம்பினதுக்கு எங்க எல்லோரையும் அந்த மலேசியாகாரகளுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்திருவ போல" என்று அவள் காதை கடிக்க,
"சும்மா இரு ஐஸ்... அதெல்லாம் நடக்காது... நம்ம காயெல்லாம் ஆல்ரெடி உள்ளே போயிடுச்சு... இன்னும் இரண்டுதான் பாக்கி" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வள்ளியம்மை ஷிவானியை பார்த்து,
"அந்த காயை வெட்டுல... அவ முட்டி மோதி வெளியே வர்றத்துக்குள்ள நம்ம காயெல்லாம் உள்ளர பழத்தில சேர்த்துப்பிடலாம்"
"அம்மாட்சி... இதெல்லாம் ரொம்ப டூ மச்... அந்த காய் கிட்டதட்ட உள்ளே போயிடுச்சு" என்று பதறினாள் ராகினி.
"அதனால்தாம்ல வெட்ட சொல்றேன்... பழக்காய்தான் ரொம்ப ருசியா இருக்கும்... நீ வெட்டு ஷிவானி"
"பாவம் அம்மாட்சி... இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்து" என்று ஷிவானி சொல்ல,
"சரியான கோட்டிக்கார பிள்ளையா இருக்கு... இப்படியிருந்தா உன்னை எல்லோரும் ஏறிமிதிச்சிட்டு போயிடுவாக... ஆட்டம்னா விட்டு கொடுக்காம விளையாடனும்" என்று வள்ளியம்மை உரைக்க,
கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு போர்களத்தில் போதித்த கீதாஉபதேசம் போலதான் இருந்தது அந்த காட்சி.
இறுதியாய் ஆட்டம் முடியும் தருவாயில் பழத்தை அடைய ஷிவானியின் ஒரு காய் தாயத்தின் வீட்டில் நிற்க ராகினியின் காய் இரண்டாம் வீட்டில் நின்றது.
"தாயத்துக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் அம்மாட்சி" என்று ஷிவானி நம்பிக்கையை விட,
"நீ நம்ம கருங்குளத்து அய்யனாரை நினைச்சி தாயக்கட்டையை உருட்டுல... தாயம் கண்டிப்பா விழும்"
"யாரு அம்மாட்சி அது?"
"நம்ம வாழ வைக்கிற குலசாமி... நீ அவரை மனசில நினைச்சி எது நினைக்கிறியோ அது அப்படியே நடக்கும்"
"ஸீர்யஸாவா?"
"ஆமா... நீ உருட்டல!" என்றவர் அவளுக்கு அழுத்தம் கொடுக்க,
"ஒகே" என்று தாயக்கட்டை எடுத்து கண்ணை மூடியவள் மீண்டும் சந்தேகமாய் கண்திறந்து,
"என்ன பேர் சொன்னிங்க அம்மாட்சி?" என்று கேட்க, "கருங்குளத்து அய்யனார்" என்றார்.
ராகினி அவர் தங்கைகள் எல்லோரும் சிரித்து கொண்டிருக்க, ஷிவானி அவர்களுக்கு ஒரு வேடிக்கை பொருளாகதான் தெரிந்தாள்.
ஷிவானி அவற்றை குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் வள்ளியம்மை சொன்ன வார்த்தையை பின்பற்றி தாயத்தை உருட்ட அதிர்ஷ்டவசமாகவோ அல்லது அவள் வேண்டிய கருங்குளத்து ஐயனாரின் அருளாலோ...
எப்படியோ தாயம் விழுந்துவிட்டது.
இதனை பார்த்த ராகினியும் ஐஸ்ஸும் அதிர்ச்சியில் தங்களின் விழிகளை அகலவிரித்திட,
ஷிவானி சந்தோஷமாய் பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆரவாரித்தாள்.
"யூ ஆர் கிரேட் அம்மாட்சி... இட்ஸ் ஹேப்பன்ட் லைக் அ மிரக்கில்" என்று சொல்லி அவருக்கு பாராட்டுரையை வாசிக்க,
வள்ளியம்மை ஷிவானியின் தலையை வருடி கொடுத்துவிட்டு மெல்ல எழுந்து சென்றுவிட்டார்.
பின்னர் ஷிவானி தன் பார்வையை ராகினியின் புறம் திருப்ப,
அவர்களின் முகமெல்லாம் தோல்வியை தழுவிய வருத்தத்தில் வாட்டமுற்றிருந்தது.
"ஏன் இவ்வளவு சோகம்... இட்ஸ் ஜஸ்ட் அ கேம்... விடுங்க" என்றவள் ஆறுதலுரைக்க அதை அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை.
எல்லோரும் ஒன்றாய் எழுந்து சென்றுவிட ஷிவானியை இப்போது வருத்தம் சூழ்ந்து கொண்டது. அவர்கள் பின்னோடு எழுந்து சென்றவள் கொள்ளை புறவாசில் அவர்கள் நிற்பதை பார்த்து,
"என்ன எல்லாரும் டீல மறந்திட்டீங்களா?" என்க,
ஐஸ் கோபமாய் ராகினியை முறைத்தாள்.
"என்ன ஏன்டி முறைக்கிற? அவங்க விளையாடினது போங்காட்டம்"
"அதெப்படி போங்காட்டம்... நான் நேர்மையாதான் விளையாடினேன்" என்று ஷிவானி கோபம் கொள்ள,
"நம்ம தனி தனியா விளையாடிறதாதானே பேச்சு... நீங்க எதுக்கு அம்மாட்சியை கூட சேர்த்துக்கிட்டீங்க"
"நான் எங்க சேர்த்துக்கிட்டேன்... அவங்களதான் வந்தாங்க... ஆனா அப்ப கூட அவங்க விளையாடலயே... நான்தானே விளையாடினேன்" என்று விளக்கினாள் ஷிவானி.
"அவங்க சொல்லி கொடுத்துதானே நீங்க விளையாடினீங்க"
"எனக்கு தெரியாத விஷயத்தை அம்மாட்சி சொன்னாங்க... மத்தபடி தாய்பாஸ் உருட்டினதெல்லாம் நான்தானே... அன் நீங்கெல்லாம் ஒரு குரூப்பா இருந்த போது... எனக்கு அம்மாட்சி ஸப்போர்ட் பன்னதுல என்ன தப்பு?" என்றவள் கேட்க, ராகினி அதற்கு எப்படி பதிலுரைப்பதென்று தெரியாமல் யோசனையாய் நின்றாள்.
ஷிவானியே மேலும், "எனக்கு உங்க எல்லோர்கிட்டயும் ஒரே ஒரு டிமென்ட்தான்... நீங்க எல்லோரும் என்கிட்ட சகஜமா பழகனும்... அவ்வளவுதான்" என்க, அவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் ஆச்சர்யமாய் பார்த்து கொண்டனர்.
ஷிவானி சொன்னதை கேட்டு ராகினி உட்பட மற்ற மூவரும் கூட கொஞ்சம் கதிகலங்கினர். இவள் ஏதாவது விவாகரம் கேட்டு வைத்தாள் என்ன செய்வது? ஐஸ்ஸும் ராகினியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ஐஸ் முன்வந்து, "என்ன கேட்க போறீங்க?" என்று ஷிவானியை சந்தேகித்து கேட்க,
"முதல்ல நம்ம விளையாடுவோமே... ஜெய்ச்சா சொல்றேன்" என்றதும் எல்லோரும் ஆழ்ந்த பார்வையோடு யோசித்துவிட்டு விளையாட்டை ஆரம்பிக்க,
ராகினி முதலில் தாயக்கட்டை ஆட்டத்தை தொடங்கி வைத்தாள்.
ஆரம்பமே அவளுக்கு அதிர்ஷ்டம் ஆடிக்க தாயத்தை போட்டு அவள் வரிசையாக காய்களை வெளிக் கொணர, அத்தகைய அதிர்ஷ்டம் ஷிவானிக்கு இல்லையே!
ஒரே ஒரு தாயம் கூட விழமாட்டேன் என அந்த தாயக்கட்டை அவளுக்கு போக்கு காட்டி கொண்டிருக்க,
'ஷிவானி... உனக்கு டைமே சரியில்ல... நானும் ரவுடிதான்னு இதுல சவால் வேற... தேவையா உனக்கு இதெல்லாம்' என்று மனதிற்குள் அவளை அவளே கலாய்த்து கொண்டாள்.
"இப்படி விளையாடினா நம்ம நாளைக்கு கூட இந்த ஆட்டத்தை முடிக்க முடியாது போலவே" என்று ஐஸ் கிண்டலாய் சொல்ல,
"வெளியே வந்தா வெட்டிடுவோமோன்னு அக்காவு பயப்படிறாங்க போல" என்று எள்ளிநகைத்தாள் ராகினி.
இவர்களின் எள்ளலான பேச்சுக்களை தான் ஏன் கேட்டு கொண்டிருக்க வேண்டும் என அவள் ஈகோ தலைத்தூக்க அவள் எழுந்து போய்விடலாமா என்று யோசிக்க, அப்போது பார்த்து தாயம் விழுந்து தொலைத்தது.
அதற்கு பிறகாவது அதிர்ஷ்டம் அவளுக்கு கை கொடுக்குமா என்று பார்த்தால் அதுதான் இல்லை.
அதற்குள் ராகினி எல்லா மலைகளையும் தன் வசமாக்கி கொண்டிருக்க, ஷிவானியின் காய்கள் நாலெட்டு நகர்ந்து வருவதே பெரும் பாடாயிருந்தது.
அப்படியே அவள் சிரமப்பட்டு முன்னேறினாலும் ராகினி அதை மேலே போகவிடாமல் வெட்டிவிட்டுதான் மறுவேலை பார்ப்பாள்.
இதுவே சுழற்சியாய் நடந்து கொண்டிருக்க ஷிவானியின் காய்கள் எல்லாம் வெட்டப்பட்டு உள்ளே போய்விட, ராகினி காய்கள் எல்லாம் பழத்தை நோக்கி முன்னேறிவிட்டன.
ஐஸ் அலுத்து போய், "இதுக்கு மேல விளையாடனுமா... அதான் பார்த்தாலே ரிஸல்ட் தெரிஞ்சி போச்சே" என்க,
ராகினி முன்வந்து,"அப்போ பேக்கிங் பண்ணிட வேண்டியதுதான்" என்றாள்.
தன் கரத்திலேயே ப்ளைட்டை ஓட்டி விசலடிக்க,
ஷிவானி எழுந்து போய்விடலாம் என்று எண்ணும் போது, "உட்காருவே" என்று மிரட்டலாய் ஒலித்தது வள்ளியம்மையின் கனிர் குரல்.
"ஆட்டம் முடியறதுக்கு முன்னாடி எழுந்துக்கிறது என்ன பழக்கம் இல்ல?" என்று மேலும் ஷிவானியை அதட்டினார் வள்ளியம்மை.
"ஆட்டம் முடிஞ்சி போச்சு அம்மாட்சி... அக்காவோட காயெல்லாம் உள்ளே இருக்கு... என் காயெல்லாம் பழத்தை நெருங்கிடுச்சு... இதுக்கப்புறம் எல்லாம் வெளியே வந்து சேன்ஸே இல்ல... எதுக்கு தேவையில்லாம நேரத்தை வீணடிச்சிக்கிட்டு" என்று ராகினி சொல்லிக் கொண்டிருக்கும் போது வள்ளியம்மை கொம்பை ஊன்றி கொண்டு ஷிவானி அருகில் அமர்ந்து,
"காயெல்லாம் பழத்துக்கு போனாதாம்ல ஆட்டம் ஜெய்ச்சதா கணக்கு... யாரெல ஏமாத்த பார்க்குதே" என்றவர் தாயக்கட்டையை ஷிவானியிடம் கொடுத்தார்.
"ஆட்டம் முடியற வரைக்கும் அங்கிட்டு இங்கிட்டு அசைய கூடாது... சொல்லிப்புட்டேன்" என்று சொல்ல ஷிவானி விருப்பமேயில்லாமல் ஆட்டத்தை தொடர ஆரம்பித்தாள்.
ராகினிக்கு வெறுப்பாய் இருந்தது. இதற்கிடையில் வள்ளியம்மையிடம் இருந்து ஷிவானிக்கு நிறைய கொட்டு இடியெல்லாம் விழுந்தது.
"இப்படியால தாயக்கட்டையை உருட்டுவாங்க... தரைக்கும் வலிக்காம உனக்கும் வலிக்காம... நல்லா உருட்டி போடுல... நீ நினைச்ச தொகையை தாயத்தை உருட்டி கேளுவ" என்க,
"அப்படி கேட்டா விழுந்திருமா?" என்று சந்தேகமாய் வினவினாள் ஷிவானி.
"கேட்டாத்தான் விழும்... நீ கேளு"
"அக்காவுக்கு ராசியே இல்ல அம்மாட்சி... அவங்க நினைச்சது ஒண்ணு விழமாட்டேங்குது" என்று ஐஸ் சொல்ல வள்ளியம்மைக்கு கோபம்
"மூடுவே வாயே... சிவானி ராசி சாதகத்தை பத்தி உனக்கு என்னல தெரியும்... அவ பிறக்கும் போதே ராசிக்காரி... எல்லோரும் தலை வழியாதான் பிறப்பாங்க... அவ கால் வழியா பிறந்த குழந்தை... எந்த ஒரு விஷயத்தை நினைச்சாலும் அதை அவளுக்கும் தானவே நடக்கும்... நீ விளையாடு தாயி" என்க,
ராகினி நமட்டு சிரிப்போடு, "அம்மாட்சி சொன்னா கரெக்ட்டாதான் இருக்கும்... நீங்க போடுங்க க்கா" என்றாள்.
அதற்கு பிறகாய் அவர்கள் ஆட்டத்தை தொடர மெல்ல மெல்ல அவர்கள் அறியாமல் ஆட்டம் தலைக்குப்புற மாறியது.
ஐஸ் ராகினியின் காதோரம், "அம்மாட்சி வந்து உட்கார்ந்ததில இருந்து அக்காவுக்கு ஒரே தொகை தொகையா விழுது... இப்படியே போனா அவ்வளவுதான்... உன்னை நம்பினதுக்கு எங்க எல்லோரையும் அந்த மலேசியாகாரகளுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்திருவ போல" என்று அவள் காதை கடிக்க,
"சும்மா இரு ஐஸ்... அதெல்லாம் நடக்காது... நம்ம காயெல்லாம் ஆல்ரெடி உள்ளே போயிடுச்சு... இன்னும் இரண்டுதான் பாக்கி" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வள்ளியம்மை ஷிவானியை பார்த்து,
"அந்த காயை வெட்டுல... அவ முட்டி மோதி வெளியே வர்றத்துக்குள்ள நம்ம காயெல்லாம் உள்ளர பழத்தில சேர்த்துப்பிடலாம்"
"அம்மாட்சி... இதெல்லாம் ரொம்ப டூ மச்... அந்த காய் கிட்டதட்ட உள்ளே போயிடுச்சு" என்று பதறினாள் ராகினி.
"அதனால்தாம்ல வெட்ட சொல்றேன்... பழக்காய்தான் ரொம்ப ருசியா இருக்கும்... நீ வெட்டு ஷிவானி"
"பாவம் அம்மாட்சி... இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்து" என்று ஷிவானி சொல்ல,
"சரியான கோட்டிக்கார பிள்ளையா இருக்கு... இப்படியிருந்தா உன்னை எல்லோரும் ஏறிமிதிச்சிட்டு போயிடுவாக... ஆட்டம்னா விட்டு கொடுக்காம விளையாடனும்" என்று வள்ளியம்மை உரைக்க,
கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு போர்களத்தில் போதித்த கீதாஉபதேசம் போலதான் இருந்தது அந்த காட்சி.
இறுதியாய் ஆட்டம் முடியும் தருவாயில் பழத்தை அடைய ஷிவானியின் ஒரு காய் தாயத்தின் வீட்டில் நிற்க ராகினியின் காய் இரண்டாம் வீட்டில் நின்றது.
"தாயத்துக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் அம்மாட்சி" என்று ஷிவானி நம்பிக்கையை விட,
"நீ நம்ம கருங்குளத்து அய்யனாரை நினைச்சி தாயக்கட்டையை உருட்டுல... தாயம் கண்டிப்பா விழும்"
"யாரு அம்மாட்சி அது?"
"நம்ம வாழ வைக்கிற குலசாமி... நீ அவரை மனசில நினைச்சி எது நினைக்கிறியோ அது அப்படியே நடக்கும்"
"ஸீர்யஸாவா?"
"ஆமா... நீ உருட்டல!" என்றவர் அவளுக்கு அழுத்தம் கொடுக்க,
"ஒகே" என்று தாயக்கட்டை எடுத்து கண்ணை மூடியவள் மீண்டும் சந்தேகமாய் கண்திறந்து,
"என்ன பேர் சொன்னிங்க அம்மாட்சி?" என்று கேட்க, "கருங்குளத்து அய்யனார்" என்றார்.
ராகினி அவர் தங்கைகள் எல்லோரும் சிரித்து கொண்டிருக்க, ஷிவானி அவர்களுக்கு ஒரு வேடிக்கை பொருளாகதான் தெரிந்தாள்.
ஷிவானி அவற்றை குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் வள்ளியம்மை சொன்ன வார்த்தையை பின்பற்றி தாயத்தை உருட்ட அதிர்ஷ்டவசமாகவோ அல்லது அவள் வேண்டிய கருங்குளத்து ஐயனாரின் அருளாலோ...
எப்படியோ தாயம் விழுந்துவிட்டது.
இதனை பார்த்த ராகினியும் ஐஸ்ஸும் அதிர்ச்சியில் தங்களின் விழிகளை அகலவிரித்திட,
ஷிவானி சந்தோஷமாய் பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆரவாரித்தாள்.
"யூ ஆர் கிரேட் அம்மாட்சி... இட்ஸ் ஹேப்பன்ட் லைக் அ மிரக்கில்" என்று சொல்லி அவருக்கு பாராட்டுரையை வாசிக்க,
வள்ளியம்மை ஷிவானியின் தலையை வருடி கொடுத்துவிட்டு மெல்ல எழுந்து சென்றுவிட்டார்.
பின்னர் ஷிவானி தன் பார்வையை ராகினியின் புறம் திருப்ப,
அவர்களின் முகமெல்லாம் தோல்வியை தழுவிய வருத்தத்தில் வாட்டமுற்றிருந்தது.
"ஏன் இவ்வளவு சோகம்... இட்ஸ் ஜஸ்ட் அ கேம்... விடுங்க" என்றவள் ஆறுதலுரைக்க அதை அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை.
எல்லோரும் ஒன்றாய் எழுந்து சென்றுவிட ஷிவானியை இப்போது வருத்தம் சூழ்ந்து கொண்டது. அவர்கள் பின்னோடு எழுந்து சென்றவள் கொள்ளை புறவாசில் அவர்கள் நிற்பதை பார்த்து,
"என்ன எல்லாரும் டீல மறந்திட்டீங்களா?" என்க,
ஐஸ் கோபமாய் ராகினியை முறைத்தாள்.
"என்ன ஏன்டி முறைக்கிற? அவங்க விளையாடினது போங்காட்டம்"
"அதெப்படி போங்காட்டம்... நான் நேர்மையாதான் விளையாடினேன்" என்று ஷிவானி கோபம் கொள்ள,
"நம்ம தனி தனியா விளையாடிறதாதானே பேச்சு... நீங்க எதுக்கு அம்மாட்சியை கூட சேர்த்துக்கிட்டீங்க"
"நான் எங்க சேர்த்துக்கிட்டேன்... அவங்களதான் வந்தாங்க... ஆனா அப்ப கூட அவங்க விளையாடலயே... நான்தானே விளையாடினேன்" என்று விளக்கினாள் ஷிவானி.
"அவங்க சொல்லி கொடுத்துதானே நீங்க விளையாடினீங்க"
"எனக்கு தெரியாத விஷயத்தை அம்மாட்சி சொன்னாங்க... மத்தபடி தாய்பாஸ் உருட்டினதெல்லாம் நான்தானே... அன் நீங்கெல்லாம் ஒரு குரூப்பா இருந்த போது... எனக்கு அம்மாட்சி ஸப்போர்ட் பன்னதுல என்ன தப்பு?" என்றவள் கேட்க, ராகினி அதற்கு எப்படி பதிலுரைப்பதென்று தெரியாமல் யோசனையாய் நின்றாள்.
ஷிவானியே மேலும், "எனக்கு உங்க எல்லோர்கிட்டயும் ஒரே ஒரு டிமென்ட்தான்... நீங்க எல்லோரும் என்கிட்ட சகஜமா பழகனும்... அவ்வளவுதான்" என்க, அவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் ஆச்சர்யமாய் பார்த்து கொண்டனர்.