Next week kula premi...kani epa nxt ud??
ok come soon?Next week kula premi...
ரொம்ப சின்னதாக இருக்கு... வெல்கம் குயிலி மேடம்...Hii friends,
Kuyili ungala pakka ododi vantanga..Avanga unga ellaraiyum meet panna romba eager a wait pannranga friends..
Intha episode konjam chinnathutha..sorry..next time periya episode a kudukura...padichutu epdi irukunu sollunga friends....
Nallatho ketatho ethuva irunthalum comment pannunga...Unga comments tha ennoda energy boost...and na ethachu thappu panna kuda unga comments enna correct pannraku uthavum...
Keep supporting friends.
Cheers,
Venba.
EPISODE 1
அன்று அந்த கலெக்டர் அலுவலகம் மிகவும் பரபரப்பாக இருந்தது.தாஸ்
அனைவரிடமும் ஏதாவது வேலை ஏவிக்கொண்டிருந்தான்.அன்று தான்
கோவையின் புதிய கலெக்டர் குயிலி பதவி ஏற்க இருந்தார்.
தாஸ் முருகவேலிடம் வந்து “ பையா பொக்கே பய் பண்ணியாச்சா?” என்று
கேட்க அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அவன் பேசியது ஒன்றும்
புரியாததால் “நீங்க என்ன சொல்றிங்கனு புரியல தம்பி” என்று வெளியில்
சொன்னவர் மனதிற்குள் “இவன் வேற ஒருத்தன் எப்ப பாத்தாலும் பையா
பையான்னு வந்து இம்சை பண்ணிக்கிட்டு..தமிழ்ல அண்ணானு அழகா
கூப்பிடாம பையா கிய்யானு வந்து கடுப்பு ஏத்திக்கிட்டு...வந்தோமா
சப்பாத்திய
சாப்டோமா போனோமானு இல்லாம இதை பண்ணு அதை பண்ணுனு
புரியாத பாஷைலையே பேசுறது..” என்று மனதிற்குள் வறுத்து எடுத்துக்
கொண்டிருந்தார்.
அவர் மனதிற்குள் அவனை திட்டுவதை அறியாத தாஸ் அவரிடம் “ ஐ மீன் தி ப்லவேர்ஸ்” என்று ஆங்கிலத்தில் கூற அந்தோ பரிதாபம் அவருக்கு ஆங்கிலமும் தெரியாதே.
அவரோ அங்கு வேலை செய்யும் ஓட்டுனர்.அதனால் அவருக்கு ஆங்கிலம்
தெரிந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.அவர் மீண்டும்
அவனிடம் புரியாத பார்வை ஒன்றை செலுத்த அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
உள்ளே சென்று வேறு யாரிடமாவது சொல்லலாம் என்று நினைத்தவன் விக்ரமைப் பார்த்தான். அவனிடம் “பொக்கே பய் பண்ணுங்க முருகவேல் பையா ட ” என்று சொல்ல “என்னது முருகவேல் அண்ணாகிட்ட பொக்கே வாங்கறதா” என்று மனதிற்குள் நினைத்தவன். தாஸிடம் தலையசைத்து விட்டுச் சென்றான்.
முருகவேலிடம் சென்றவன் “அண்ணா தாஸ் சார் உங்ககிட்ட பூச்செண்டு வாங்கிட்டி வர சொன்னாரு” என்று சொல்ல “ஓ அதைத் தான் அந்தத் தம்பி இவ்வளவு நேரம் சொல்லுச்சா” என்றவர் கடைக்குச் சென்றார்.
புதிய கலெக்டர் வருவதற்கு இன்னும் 1 மணி நேரம் மட்டுமே இருக்க தாஸிற்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன.நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தான்.தாஸ் 29 வயது இளைஞன்.டில்லியில் பிறந்து வளர்ந்தவன் .இப்பொழுது துணை ஆட்சியராக கோவையில் பணிபுரிகிறான்.(அவனைப் பற்றி கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்).
நேரம் 1௦ மணி ஆனதும் குயிலி அந்த கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.அவளை வரவேற்று பூச்செண்டு கொடுத்த தாஸ் அவளுக்கு அனைத்தையும் விளக்கிக் கொண்டிருந்தான்.
குயிலி 25 வயது யுவதி!பால் நிறம்,பிறை நெற்றி,வில்லென வளைந்த புருவம், ஒல்லியான உடல். காட்டன் புடவை, மேலே ஏற்றிப் போடப்பட்ட கொண்டை,ஒரு பெரிய கண்ணாடி,ஒரு கையில் சிறிய கடிகாரம்,காதில் சிறு தோடு,ஒரு சிறிய வட்டப் பொட்டு .முகத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் இறுக்கம். .இதுவே குயிலியின் அடையாளம்.அவளைப் பார்ப்பவர்களுக்கு அவள் திமிர் பிடித்தவள் என்று தோன்றும்.ஆனால் பழகிப் பார்த்தால் தான் அவளின் உண்மைக் குணம் தெரியும்.
அப்பொழுது வெளியே ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணை உள்ளே விடாமல் காவலாளி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் அந்தப் பெண்ணை உள்ளே விடுமாறு தாஸிடம் சொல்ல அவளை உள்ளே விட்டனர்.அவள் கண்ணில் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
குயிலியிடம் அவள் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல தாஸை வெளியே போகச் சொன்ன குயிலி அவள் சொன்னதைக் கேட்டாள்.அந்தப் பெண் சொன்னதைக் கேட்கக் கேட்க குயிலி தன் கையில் இருந்த பேனாவை இறுக்கினாள்.அந்தப் பேனா இறுக்கம் தாங்காமல் உடைந்து விட்டது.அந்தப் பெண்ணுடன் வெளியே சென்றவள் தாஸை கார் எடுக்கச்சொல்லி எங்கோ விரைந்து சென்றாள்....
குயிலியின் பயணம் தொடரும்......