விக்ரம் செல்லாவைத் திட்டியதில் இருந்து செல்லா பெரிதாக விக்ரம் இருக்கும் இடத்திற்கு வருவதில்லை.விக்ரமைப் பார்க்க நேர்ந்தாலும் ஒரு முறைப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவாள்.
அன்று மங்கைக்கு சுகன்யாவின் பள்ளியில் இருந்து அவளுக்கு உடம்பு சரி இல்லை என்று அழைப்பு வர அவள் மதியமே கிளம்பிவிட்டாள்.தானும் உடன் வருவதாக சொன்ன செல்லாவிடம் வேண்டாம் என்று மறுத்தவள் “இன்னைக்கு ஸ்டாக் எல்லாம் அனுப்பனும்...சோ நீ இருந்தால் தான் கரெக்ட்டா இருக்கும்.நான் பார்த்துக்குற” என்றவள் பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.
அன்று அந்த ஊரின் முக்கிய புள்ளி ஒருவர் இறந்து விட அங்கு வர வேண்டிய பேருந்துகள் எதுவும் வரவில்லை.ஒரு மணி நேரம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் ஒரு பேருந்தும் வராமல் போகவே என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றாள்.
அதற்குள் பள்ளியில் இருந்து இருமுறை அழைத்து விட்டனர்.கால் டாக்ஸி புக் பண்ணலாம் என்று நினைத்து போனை எடுக்க அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது நெட் பேக் முடிந்து போய் 2 நாட்கள் ஆனது என்று.நெட் போடாமல் விட்ட தன் மடத்தனத்தை நினைத்து நொந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அந்த வழியாக வந்த தாஸ் இவள் தனியாக கையை பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன் அவள் அருகில் வந்து “வாட் ஹாப்பண்ட்?” என்று கேட்க “நத்திங்” என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.அவள் உதாசீனத்தை பொருட்படுத்தாமல் “எனித்திங் அர்ஜெனட்?” என்று கேட்டான்.
அவள் மூளையோ அவனிடம் ஹெல்ப் கேளு என்று அறிவுரை வழங்க மனமோ வேண்டாம் என்றது.திரும்பி சுகன்யாவின் பள்ளியில் இருந்து அழைப்பு வர வேறு வழி இல்லாமல் அவனிடம் நடந்ததை சொல்லிவிட்டாள்.
“கம்..ஐ வில் ட்ராப் யூ” என்றவன் அவளிடம் முகவரி கேட்டு சுகன்யாவின் பள்ளிக்கு அவளை கூட்டிச் சென்றான்.அவளை இறக்கி விட்டவுடன் கிளம்பாமல் அவளுடன் உள்ளே போக “தேங்க்ஸ்..ஐ கேன் மனேஜ் “ என்று சொல்ல அதை காதில் வாங்காதவன் போல் முன்னே நடந்தான்.
சுகன்யா சோர்ந்து போய் அங்கிருந்த மேஜை ஒன்றில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.பக்கத்தில் சென்று மங்கை எழுப்ப கண்ணை திறக்க முடியாமல் திறந்தவள் “அக்கா” என்று அவளைக் கட்டிக் கொண்டாள்.”ஒன்னும் இல்லை டா..ஹாஸ்பிட்டல் போயிறலாம்” என்றவள் அவளை எழுப்ப அவளால் எழ முடியவில்லை.
அவளை எழுப்ப உதவிக்கு வந்த தாஸிடம் ஒரு கண்டனப் பார்வை செலுத்தியவள் அருகில் இருந்த ஆசிரியரின் உதவியுடன் அவளை எழுப்பினாள்.அவள் கோபப் பார்வையை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதவன் முன்னால் சென்று காரின் கதவை திறந்து விட்டான்.
அவன் மேலும் மேலும் அவளின் உதாசீனத்தை பொருட்படுத்தாமல் உதவி செய்தது அவளின் மனதைக் குத்த அவளால் இப்பொழுது அவனின் உதவியை ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை.சுகன்யவினால் பஸ்சில் ஏற முடியாததால் வேறு வழி இல்லாமல் அவன் காரில் ஏறினாள்.
மங்கை பின்னால் அமர்ந்து சுகன்யாவின் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டாள்.சுகன்யா வலியால் அனத்திக் கொண்டே வந்தாள்.அவளின் தலையை அமுத்திக் கொண்டே “ஒன்னும் இல்லை டா..இப்ப ஹாஸ்பிட்டல் போயிறலாம்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
காரை ஓட்டிக் கொண்டே இதை எல்லாம் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் தாஸ்.அவனுக்கு இவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் சுகன்யாவின் மேல் மங்கை கொண்ட அக்கறை புரிந்தது.
கார் நின்றதும் தான் நிமிர்ந்து வெளியே பார்த்தாள் மங்கை.”என்.எம் ஹாஸ்பிட்டல்” முன்பு கார் நின்றிருந்தது.கோவையின் மிகப் பெரிய மருத்துவமனை! இங்கே ஆகும் செலவை நினைத்துப் பார்த்தவள் “இங்க வேண்டாம் ஜி.எச் போகலாம்” என்று சொல்ல அவன் அதைக் கேட்காமல் கீழே இறங்கினான்.
ஒரு வேளை தான் சொல்வது அவனுக்குப் புரியவில்லையோ என்று நினைத்தவள் “லேட்ஸ் கோ டூ ஜி.எச்” என்று சொல்ல அதை காதில் வாங்காதவன் போல் உள்ளே சென்றான்.
அவன் வெளியே வரும் பொழுது சக்கர நாற்காலியோடு ஒருவர் அவனுடன் வந்தார்.இப்பொழுதும் வேறு வழி இல்லாததால் மங்கை சுகன்யாவை கஷ்டப்பட்டு அந்த நாற்காலியில் உட்கார வைத்தாள்.
உள்ளே சென்று டாக்டரைப் பார்க்க அவர் சுகன்யாவைப் பரிசோதித்து விட்டு நிறைய டெஸ்டுகளை செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.நர்ஸ் வந்து பத்தாயிரம் கட்டச் சொல்லி சொல்ல மங்கைக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாத நிலை.
மாதக் கடைசி என்பதால் அவள் கையில் இருந்தது ஐந்நூறு ரூபாய் மட்டுமே.அவள் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே தாஸ் பணத்தை எடுத்து அந்த நர்ஸிடம் கொடுத்தான்.அவள் வேண்டாம் என்று மறுத்ததை காதில் வாங்காதவன் மங்கையின் தோளில் சாய்ந்திருந்த சுகன்யாவிடம் “டோன்ட் வரி..யூ வில் பீ ஆல்ரய்ட் சூன்” என்றான்.நர்ஸ் சுகன்யாவை டெஸ்ட் செய்ய அழைத்துக் கொண்டு போக மங்கை தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்.
டேஸ்டுகளின் முடிவில் சுகன்யாவிற்கு டெங்கு என்பது தெரிய அவளை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.மங்கை தன் தாயிடம் சொல்ல அவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டார்.
தாஸ் தான் எல்லா செலவுகளையும் செய்தான்.மங்கை “சாரி..உங்ககிட்ட ரூடா நடந்துகிட்டதுக்கு...அண்ட் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இவ்வளவு ஹெல்ப் பண்ணதுக்கு...” என்றவள் தயங்கித் தயங்கி “இப்ப என்கிட்ட காசு இல்லை.நெக்ஸ்ட் மந்த் சாலரி வந்ததும் காச திருப்பிக் கொடுத்துற” என்று தலையை குனிந்து கொண்டு சொன்னாள்.
மங்கை சொல்லி முடித்ததும் தான் அவளுக்கு நினைவு வந்தது அவனுக்கு தமிழ் ஒழுங்காக தெரியாது என்பது.தன் தலையின் பின்னால் தட்டிக் கொண்டவள் “சாரி...வாட் ஐ மேன்ட் வாஸ்...” என்று சொல்ல வர சிரித்தவன் “ஐ டோன்ட் நோ டூ ஸ்பிக் தமிழ்...பட் ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் இட்” என்று கண்ணை சிமிட்டி சொன்னவன்
“டோன்ட் தின்க் அபௌட் தி மணி....ஜஸ்ட் டேக் கேர் ஓப் யுவர் சிஸ்டர்” என்றவன் அவள் அன்னையிடம் விடை பெற “ரொம்ப நன்றி தம்பி” என்று கை எடுத்து கும்பிட்டவரின் கையை இறக்கியவன் “டோன்ட் டூ திஸ் மா. யூ ஆர் லைக் மை மதர்…டேக் கேர்” என்றவன் மங்கையிடம் கண்களால் விடை பெற்றுச் சென்றான்.சுகன்யா தூங்கிக் கொண்டிருந்ததால் அவளிடம் விடை பெறவில்லை.
அவன் சென்றதும் அவன் கூறியதை தமிழில் தன் அன்னைக்கு சொன்ன மங்கை அவன் செய்த உதவிகள் அனைத்தையும் தன் அன்னையிடம் சொன்னாள்.
செல்லா மங்கையை அழைத்து “சுகன்யாக்கு என்ன ஆச்சு?இப்ப எப்படி இருக்கா?” என்று கேட்க “டெங்கு டி..இப்ப என்.எம் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்..இப்ப கொஞ்சம் பரவாயில்லை” என்றாள்.