சுஜீத்தின் நெஞ்சில் முகம் புதைத்திருந்த கிருபா சொல்ல ஆரம்பித்தாள் "எப்பவும் வர ட்ரைவர் லீவ். அதனால கம்பெனியில் இருந்து வேற ஒரு டிரைவர் வந்தான் .ஃபர்ஸ்ட் ரெண்டு நாள் ஒழுக்கமா தான் இருந்தான்.
அன்னைக்கு காலேஜில் டான்ஸ் ப்ராக்டிஸ் .கிளம்பும்போதே செம டயர்ட்...செம தண்ணித் தாகம்.எனக்குக் கரும்பு ஜூஸ் குடிக்கணும் போல இருந்துச்சு. அதனால அவன் கிட்ட காசு கொடுத்து வாங்கிட்டு வரச் சொன்னேன்.
கரும்பு ஜூஸ் கடை கிட்டக் காரை நிறுத்த முடியல. கொஞ்ச தூரத்துக்கு முன்னாடி காரை நிறுத்திட்டு அவன் போய் வாங்கிட்டு வந்தான் .அதுல என்னமோ கலந்து கொடுத்துடான்.அப்புறம்" என்றவளாள் அதற்கு மேல் சொல்ல முடியவில்லை .
அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்து விட்டது. சிறிது நேரம் அவள் முதுகைத் தடவி விட்டவன்" ஏன் என்கிட்ட இதை முன்னாடியே சொல்லலை? இது தெரிஞ்சா நான் உன்ன வேண்டாம்னு சொல்லிருவேன்னு நினைச்சியா?"என்று கேட்க
" ஐயோ அப்படி எல்லாம் இல்லை. நான் எப்படி இருந்தாலும் நீ என்ன ஏத்துப்பேனு எனக்கு தெரியும். இருந்தாலும் நான் உனக்கு வேண்டாம் .நீ ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணனும் அப்படின்னு சொல்லி தான் நான் உன்ன அவாய்ட் பண்ணினேன்;அப்படியெல்லாம் பேசினேன்"என்று சொன்னாள். "உனக்கு என்ன ஆனாலும் என்ன நடந்திருந்தாலும் நீ தான் இந்த ஜென்மத்தில் என் வைப்" என்றான்.
அர்ஜீனிடம் இருந்து போன் வர "வந்துட்டோம் அண்ணா" என்றவன் போனை வைத்துவிட்டு அவளை அழைத்துச் சென்றான்....
குயிலி வருவாள் ....