தன் புல்லட்டில் ஏறி அமர்ந்த மயில்வாகனன் குயிலுக்கு அழைத்தான்.''ஹலோ குயிலி ஃப்ரீயா இருக்கீங்களா?" என்று கேட்க
'இப்பதான் ஆபீஸ் வந்தேன் சொல்லுங்க, என்ன விஷயம்?' என்று கேட்க ,
'உங்களை கொஞ்சம் மீட் பண்ணனும்'
' ஓ, அப்படியா இப்ப எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு.. மதியம் டுவல் போல வரீங்களா ?'என்றாள்.
'ஆபீஸ்ல வேண்டாம் நான் உங்களை கொஞ்சம் பெர்சனலா மீட் பண்ணனும்' என்க 'ஓகே, அப்ப நீங்க சிக்ஸ் மேல வீட்டுக்கு வாங்க' என்றாள்.
'இல்லை இல்லை..வீட்டுக்கு எல்லாம் வேண்டாம். நாம வேற எங்கயாச்சும் கொஞ்சம் தனியா மீட் பண்ணலாமா?' என்று கேட்க, 'சரி நீங்களே ப்ளேஸ் டிசைட் பண்ணி எனக்கு ஒரு மெசேஜ் பண்ணி விடுங்க',என்றவள் தன் வேலைகளைப் பார்க்கச் சென்றாள்.
இப்பொழுதே அவளிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்தவனுக்கு, மாலை வரை காத்திருத்தல் மிகவும் சிரமமாக இருந்தது. வேலையிலும் அவன் கவனம் செல்லவில்லை. அதனால் தன் புல்லட்டில் ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டான்.
"ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!
தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்!
எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!
எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே!"
அவனின் மனநிலைக்கு ஏற்ப இருந்த இப்பாடலை மனதில் ஹம் செய்து கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான். மனதில் தண்ணீரில் இருந்து அவளை காப்பாற்றிய பொழுது,' அப்பா' என்ற அவளது அழைப்பு வந்து வந்து போனது.
இறுக்கமான கம்பீரமான குயிலி, இப்பொழுது அவன் கண்களுக்கு சிறு குழந்தையாக தான் தெரிந்தாள். குயிலியை பார்த்தவுடன் அவனுக்கு அவள் மேல் கண்டிப்பாக ஈர்ப்பு ஏற்படவில்லை. அவளுடன் பழகிய பொழுதும் கூட அவள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் மட்டுமே இருந்தது.
ஆனால் இந்த 'அப்பா' என்ற ஒரே ஒரு அழைப்பு அவனை அவளுள் மூழ்கச் செய்தது. இப்படியாக அவன் குயிலியின் நினைவுகளுடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, அர்ஜுன் அவனை அழைத்தான்.
போனை எடுத்தவுடன், 'டேய் மச்சான்! எங்கடா இருக்க?' என்று கேட்க 'சும்மா அப்படியே புல்லட்டில் சுத்திட்டு இருக்கேன்' என்றான். 'ஏன்? தோட்டத்துக்கு போலயா?' என்ற கேள்விக்கு,'இல்லடா போற மூட் இல்ல' என்று சொல்ல,
'ஓ அப்படியா.. எங்க இருக்க சொல்லு நானும் வரேன்' என்றான். தான் இருக்கும் இடத்தை சொன்னவுடன் 15 நிமிடங்களில் அர்ஜுனும் அங்கு வந்து சேர்ந்தான்.
சற்று நேரம் வேப்பமர நிழலில் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அர்ஜுன் தான் ஆரம்பித்தான்.
' என்ன மச்சான் ஒரே சந்தோஷத்தில் இருக்க போல' என்று கேட்க மழுப்பலாக சிரித்த மயில்வாகனன் 'அப்படி எல்லாம் இல்ல டா' என்றான்.
'டேய்.. டேய்.. மொச புடிக்கிற முயல மூஞ்சிய பாத்தா தெரியாது?' என்று அவன் முதுகில் இரண்டு அடி போட்டவன்,' சொல்லு என்ன விஷயம?' என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
அசடு வழிந்தவன் 'அது வந்து மச்சான்' என்று இழுக்க.. 'எது வந்து??'என்று அர்ஜுன் இடைமறிக்க கோபம் அடைந்தவன், 'டேய் மூடிட்டு நான் சொல்றதை கேளு டா', என்றான். 'சரிசரி சொல்லு சொல்லித் தொலை' என்று சொல்ல, 'நான் குயிலிய லவ் பண்றேன்' என்று சொல்லி விட்டான்.
'என்னது?அந்த சிடுமூஞ்சிய நீ லவ் பண்றியா? இது எப்ப இருந்துடா?' என்று கேட்க,
அவனை முறைத்தவன், 'யாருடா சிடுமூஞ்சி? அவ ஒரு குழந்தை டா..' என்றான்.
' யாரு, யாரு? அவங்க குழந்தை.. இதை நான் நம்பனும்?' என்று அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்து வைத்தான் அர்ஜுன்.
'தப்பு பண்ற எல்லாத்தையும் வெரட்டி வெரட்டி அடிக்கறாங்க, அவங்க உனக்கு குழந்தையா?' என்றான்.
சிரித்த மயில்வாகனன், 'அவள் வெளிய அப்படி இறுக்கமா இருந்தா கூட அவளோட உள் மனசுக்குள்ள அவ ஒரு குழந்தைதான்.. அது எனக்கு நல்லா தெரியும்',என்றான்.
'நான் கூட உன்ன விளையாட்டுக்கு தாண்டா ஓட்டுன.. ஆனால் நீ உண்மையாவே லவ் பண்ணுவேனு நினைக்கவே இல்லை' என்று சொல்ல அசடு வழிந்தவன், அது எல்லாம் அப்படித்தான் என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.
' சரி,சரி கலெக்டர் மேடம் கிட்ட சொல்லிட்டியா?' என்று அர்ஜுன் கேட்க 'இல்ல மச்சான் நான் லவ் பண்ணுறது நேத்து நைட்டு தாண்டா எனக்கு தெரிஞ்சுச்சு. ஈவினிங் நான் அவங்க கிட்ட சொல்லனும்'
'என்னது நேத்து தான் லவ் பண்றது தெரிஞ்சுச்சா? அடப்பாவி, அப்ப இன்னும் நீ அவங்ககிட்டயே சொல்லலையா?' என்று தலையில் அடித்தவன் 'நல்லா வருவ டா நீ ...ஆமா இன்னும் எதுக்கு அவங்கள வாங்க போங்கன்னு கூப்பிடுற?' என்று கேட்க அசடு வழிந்து அவன் 'எப்பயும் போல வந்திருச்சு டா' என்றான்.
'அப்புறம் மச்சான், எப்படி ப்ரபோஸ் பண்றதுன்னு எல்லாம் யோசிச்சுட்டியா?' என்று கேட்க 'அதுதாண்டா நானும் ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருக்கேன்' என்று சொல்ல
'டேய்! நீ ஒரு டாக்டர் டா பிஹெச்டி முடிச்சிருக்கேனு வெளியே போய் சொல்லிடாத..ஒரு பிரபாஸ் கூட பண்ண தெரியல, நீ எல்லாம்..' என்று ஒரு கேவலமான பார்வை பார்க்க, 'டேய் பிஹெச்டி முடிச்சா இது எல்லாம் தெரியணும்னு ஏதாச்சும் இருக்கா' என்று மயில்வாகனன் கேட்க, 'சரி வா நான் உனக்கு சொல்லி தரேன்' என்று அர்ஜுன் நண்பனை சமாதானப்படுத்தினான்.
இரண்டு மணி நேரம் எப்படி ப்ரபோஸ் செய்வது என்பதைப் பற்றி பேசியும் கூட இருவராலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. 'டேய் நீ விடுடா, எனக்கு எப்படி தோணுதோ அது மாதிரி நான் அவகிட்ட பேசிக்கிறேன்', என்ற மயில்வாகனன் அவனையும் அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சாப்பிட சென்றான். கோகிலா இருவருக்கும் பரிமாற சாப்பிட்டவர்கள் மயில்வாகனனின் அறைக்குச் சென்றனர்.
மயில்வாகனன் வார்டரோபில் இருந்த அனைத்து துணிகளையும் எடுத்து கட்டிலின் மேல் போட்டு எதைப் போடலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தான். மயில்வாகனன் எப்பொழுதும் உடை விஷயத்தில் சற்று அதிக கவனம் எடுத்து தான் உடுத்துவான். அவன் ஏற்கனவே போட்டிருந்த உடை நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவன் மனசுக்கு திருப்தி இல்லாமல் போகவே வார்டரோபை பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தான்.
எப்பொழுதும் ஜீன்ஸ் டி-ஷர்ட்டில் வலம் வருபவன், இன்று ஃபோர்மல் டிரஸ் போட முடிவு செய்தான். குயிலுக்கு ஃபோர்மல் ட்ரெஸ் தான் பிடிக்கும் என்று ஏதோ உள்ளுணர்வு சொல்ல அதன்படி நடந்தான். எலுமிச்சை நிற மஞ்சள் சட்டையும் நீல நிற பேண்ட்டும் அணிந்தவன் பார்ப்பதற்கு அத்தனை அழகாக கம்பீரமாக இருந்தான். தலையை பத்து முறை கலைத்து வாரியபின்,
அர்ஜுனிடம் திரும்பி 'போகலாமா?' என்று கேட்டான். 'ஏன்டா ஒரு டிரஸ் பண்றதுக்கு ரெண்டு மணி நேரமா எடுத்துப்ப?' என்று முறைத்தவனை கண்டுகொள்ளாமல் 'வாடா வாடா, டைம் ஆச்சு' என்று கிளம்பி சென்றான்.