• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
இரவு 8 மணிக்கு மயில்வாகனன் குயிலியை அழைத்திருந்தான்."ஹலோ" என்றவனிடம் "ம்ம்"என்று சொன்னவள் வேறு எதுவும் பேசவில்லை."என்ன பண்ற? சாப்பிட்டியா?" போன்ற பொதுவான பேச்சுகளுக்கு பிறகு மயில்வாகனன் ஆரம்பித்தான்.
"நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?" என்று கேட்க "இல்ல கல்யாணம் வேண்டாம்" என்று சற்று திடமாக பதில் சொன்னாள் ."சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாத. நாம கல்யாணம் பண்ணிக்கிறோம் அவ்வளவுதான்" என்று அவன் சொல்ல "என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா என் மூலமாக கண்டிப்பா உங்களுக்கு ஒரு வாரிசு கிடைக்காது. ப்ளீஸ் நீங்க வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க" என்று சொல்ல "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப எதுக்கு அதைப் பத்தி பேசிட்டு இருக்க?" என்று அந்த விஷயத்தை அவன் முடிக்க பார்க்க குயிலி விடுவதாயில்லை.

"இப்ப இப்படி சொல்லிட்டு நாளைக்கு வந்து என்ன போர்ஸ் பண்ணா என்னால கண்டிப்பா முடியாது .அது உங்களுக்கும் பிரச்சினை எனக்கும் பிரச்சனை. இப்ப இந்த விஷயத்துக்கு நீங்க என்கிட்ட சரின்னு சொன்னாலும் உங்க குடும்பம் இதை ஏத்துக்காது. அவங்களை நாம தப்பு சொல்ல முடியாது. எல்லாரோட ஆசையும் தங்களுக்கு ஒரு வாரிசு வேணும் அப்படிங்கிறது தானே.ஆனா என்னால அது முடியாது"என்று மறுத்தாள்.

"நாம கல்யாணம் பண்ணிக்கலாம். டிரை பண்ணலாம் அப்படி கண்டிப்பா உன்னால அது முடியாதுன்னா நாம ஒரு குழந்தையை அடாப்ட் பண்ணிக்கலாம்.எங்க வீட்ல என் மேல தான் குறை இருக்குன்னு நான் சொல்லிக்கிறேன். ஒன்னும் பிரச்சனை இல்ல .யாரும் உன்ன ஒன்னும் சொல்லமாட்டாங்க "என்று தீர்வு கூறினான். அவன் எப்படியாவது தன்னை விட்டுப் போக வேண்டும் என்று என்னென்னவோ சொல்லி பார்த்தவள் இப்பொழுது அவன் இப்படிக் கூறியவுடன் வாயடைத்துப் போனாள் .அவன் அவள் மேல் வைத்திருக்கும் காதலை நினைத்து ஆனந்த கண்ணீர் சுரந்தது.

அவள் ஒன்றும் பேசாமல் இருக்க" என்னடி ஓகேவா?" என்று அவன் கேட்க "இல்ல என்னால ஏன் நீங்க இவ்வளவு கஷ்டப் படணும் ?உங்களுக்கு என்ன விட நல்ல பொண்ணு கிடைப்பாள். நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கோங்க "என்றவளின் குரல் கரகரத்து ஒலித்தது ."என்னடி அழுதியா?" என்று அவன் கேட்க" இல்லை" என்றவுடன் போன் கட் ஆனது.

இப்பொழுது வீடியோ காலில் அழைத்திருந்தான்.அவள் முகத்தைப் பார்த்தவுடன் புரிந்து விட்டது அழுது இருக்கிறாள் என்று." இப்ப என்ன ஆச்சு?" என்றவன் மென்மையாகக் கேட்க 'ஒன்னும் இல்லை' என்பதுபோல் இடம் வலமாக தலையசைத்தாள்."செல்லாவையும் மங்கையும் இப்படியே விட்டுட்டு என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்றாள்.

சிரித்தவன் "கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு எத்தனை ரீசன்ஸ்?"என்று புன்னகை முகமாகவே கேட்க "இல்ல இல்ல உண்மையாலுமே அவங்க ரெண்டு பேருக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கணும்" என்றாள்.
"செல்லாவும் விக்ரமும் லவ் பண்றாங்க" என்று அவன் சொல்ல "என்னது?" என்றவள் அதிர்ந்தாள்.

"ஆமா ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. விக்ரமுக்கு ஒரு லவ் ஃபெயிலியர். அதனாலதான் அவன் இப்படி மாறிட்டான் .என்னுடைய சித்தப்பா பையன் தான். நல்ல கலகலப்பான பையன் .அந்த பொண்ணு விட்டுட்டு போன நால தான் இப்படி உம்மணா மூஞ்சியா மாறிட்டான் .அவனுக்கு நான் கேரண்டி. செல்லாவ கண்டிப்பா நம்பி நீ அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்" என்று சொல்ல குயிலுக்கு ஒரே ஆனந்தம்.

"எனக்கு இப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த செல்லா பாருங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல" என்று செல்லமாக கோவப்பட சிரித்தவன் "எப்ப பாரு டெரரா இருந்தால் அவளுக்கு பயமா இருக்காதா?" என்று கேலி செய்ய அவனை முறைத்தாள் .

"உங்க வீட்டுல செல்லாவ எல்லாருக்கும் பிடிக்குமா ?அப்புறம் எங்களுக்கு சொந்தக்காரங்க அப்படின்னு யாருமே இல்ல ...அதனால ஓக்கே சொல்லிடுவாங்களா?" என்று கேட்க முறைத்தவன் "ஏன்டி அப்ப நாங்கலாம் யாரு? என்ன பாத்தா உனக்கு மனுஷனா தெரியலையா?" என்க "இல்ல... இல்ல ...கல்யாணத்துக்கு குடும்பம் பற்றி எல்லாம் கேட்பாங்க ....அதுக்கு தான் கேட்டேன்" என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

"அதெல்லாம் நானும் விக்ரமும் பார்த்துக்குறோம் .நீ கவலைப்படாதே செல்லாவுக்கு மங்கைக்கும் கல்யாணம் பண்ணிட்டு அதுக்கப்புறம் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.சரியா?"என்று அவன் கேட்க மெதுவாக தலையாட்டினாள் .

"மங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கலாமா ?"என்று அவன் கேட்க "தாஸ் மங்கையோடு அம்மாகிட்டப் போய் மங்கையை பொண்ணு கேட்டு இருக்கான்" என்று சொல்ல "உண்மையாவா?" என்று ஆச்சரியமாக கேட்டவன் "நல்ல பையன் தான்... நல்ல போஸ்ட்ல இருக்கான் .இருந்தாலும் நம்ம நல்ல விசாரிச்சதுக்கு அப்புறம் நாம நம்ம பொண்ணு கொடுக்கலாம்" என்றான் .

சிரித்தவள் "ஐ லவ் யூ" என்று சொன்னாள். அவளை ஆச்சரியமாக பார்த்தவன் "என்னடி திடீர்னு இப்படி எல்லாம் சொல்ற ?"என்று கேட்க அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது. காலை கட் செய்து விட்டாள் .திரும்ப அவன் அழைக்க அழைக்க கட் செய்து கொண்டே இருந்தாள் .'இப்ப நீ கால் அட்டென்ட் பண்ணல நான் வீட்டுக்கு வருவேன் "என்று மெசேஜ் அனுப்ப காலை அட்டன்ட் செய்தால்.

"என்னடி ஆச்சு உனக்கு திடீர்னு? இப்படி எல்லாம் சொல்ற ...ஏதாச்சும் காத்து கறுப்பு அடிச்சிருச்சா?" என்றவன் கேலி செய்ய "நீங்க கோயமுத்தூருலையே விரல்விட்டு எண்ணுற பணக்காரங்கள்ள. ஒருத்தங்க .ஆனா அன்னைக்கு கிருத்திகா பத்தி என்கிட்ட பேசினப்ப எங்க வீட்டு பொண்ணு சொன்னிங்க .இப்ப மங்கைய நம்ம வீட்டு பொண்ணு சொல்றீங்க .உங்க கிட்ட வேலை செய்றவங்க அப்படின்னு ப்ரெஸ்டீஜ் எல்லாம் பார்க்காம இப்படி சொல்றது கிரேட்" என்றவள் உணர்ந்து சொல்ல "ஓ அப்ப மேடமுக்கு என்ன முன்ன இருந்தே பிடிக்கும் அப்படித்தானே?" என்றான் கண்சிமிட்டி.

கொஞ்சம் வெட்கப்பட்டவள் "எனக்கு உங்கள ஹாஸ்பிட்டல் திறப்பு விழாவுக்கு வந்தப்ப இருந்து புடிச்சிச்சு .ஒரு நல்ல ஹியூமன் பீயிங்னு நினைச்சேன். உங்க ஆட்டிடியூட் ரொம்ப பிடிச்சுச்சு. எல்லா பொண்ணுங்களையும் நீங்க உங்க வீட்டு பொண்ணு மாதிரி நினைக்கிறது தான் என்ன ரொம்ப அட்ராக்ட் பண்ணுச்சு .இதெல்லாம் நான் உங்ககிட்ட அட்மையர் பண்ண விஷயம் .நீங்க என்கிட்ட ப்ரப்போஸ் பண்ற வரைக்கும் நான் உங்கள லவ் பண்றேன்னு எனக்கே தெரியல. ப்ரொபோஸ் பண்ணதுக்கப்புறம் தான் அந்த எண்ணம் வந்துச்சு. அந்த தாட் ரொம்ப ஜாஸ்தி ஆனது நால தான் டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடலாமுன்னு ட்ரை பண்ணேண். அதுக்குள்ள உங்களுக்கு அடிபட்டிச்சு. அப்பதான் எனக்கு உண்மையாலுமே புரிஞ்சிச்சு நான் உங்கள எவ்வளவு லவ் பண்றேன்னு" என்றாள்.

"ஓ. ..ஓ ...அதனாலதான் அம்மிணி என்ன அடிச்சவங்கள அப்பா திரும்ப அடிச்சதுக்கு ஒன்னும் ரியாக்ட் பண்ணுலியா?"என்று கேட்க "ஆமா நானே அவங்களை ஏதாச்சும் பண்ணலாம்னு நினைச்சேன் .அதுக்குள்ள அப்பா முந்திட்டாங்க" என்றால் "ஓ !அப்ப என்ன அடிச்சா மட்டும் உங்களால பார்த்துட்டு இருக்க முடியாது .சட்டம் தன் கடமையை செய்யும் அப்படின்னு இருக்க மாட்டீங்க. ஆனா உன்ன அடிச்சா மட்டும் தான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா ?இது என்ன நியாயம்?" என்று கேட்க "கலெக்டர் நியாயம்" என்றால் கெத்தாக.
சிரித்தவன் "சரி சொல்லுங்க கலெக்டர் மேடம் நீங்க இந்த விவசாயிகிட்ட என்னெல்லாம் பார்த்து இம்ப்ரஸ் ஆனீங்க? "என்று கேட்க "நீங்க விவசாயிங்கிறதே பெரிய இன்ஸ்பிரேஷன் தான் .எல்லார்கிட்டேயும் காட்டுற பாசம் ரொம்ப பிடிக்கும் "என்றாள் கண்ணைப் பார்த்து. அவளின் ஏக்கத்தை புரிந்து கொண்டவன் "இனிமேல் நானே உனக்கு தாண்டி" என்றான் கண்ணடித்து.
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
பேச்சைத் திசை திருப்ப எண்ணியவள் "தாஸ் பத்தி நான் நல்லா விசாரித்து விட்டேன் .அப்பா சின்ன வயசிலேயே இறந்திட்டாங்க .அம்மாவை இவன் பத்து வயசு இருக்கப்ப யாரோ ரேப் பண்ணி கொன்னுட்டாங்க .அப்புறம் இவனா கஷ்டப்பட்டு படிச்சு இவ்வளவு பெரிய நிலைமைக்கு வந்து இருக்கான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நம்பிக் கொடுக்கலாம்" என்றால். "அப்ப மங்கைக்கு இதுல சம்மதமா?" என்று கேட்க "சம்மதம் தான்" என்றாள்.

"சரி ...சரி ...நீ இப்ப பேச்ச மாத்தாத சொல்லு" என்றவன் சொல்ல சினிங்கியவள் "அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்ப நாய்க்குட்டிங்க கூட விளையாடுனது எனக்கு ரொம்ப புடிச்சுச்சு .எங்க அப்பாவும் அப்படித்தான் விளையாடுவாரு.அப்ப எனக்கு உங்கள பாக்குறப்ப எங்க அப்பா மாதிரியே இருந்துச்சு" என்று கண்ணை மூடிக்கொண்டு சொன்னாள்.

"அதனால்தான் என்கிட்ட பைவ் மினிட்ஸ் அப்படின்னு சொல்லிட்டு உன் ரூமுக்கு போய் அழுதுட்டு வந்தியா?"என்று கேட்க "ஓ !அப்ப நான் அன்னைக்கு அழுதன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றதற்கு தலையசைத்தான்.

"எனக்கு உங்களை பிடிச்சதுக்கு மெயில் ரீசனே என் அப்பாகிட்ட அனுபவிச்ச செக்யூர்ட்னஸ் நான் உங்ககிட்ட பீல் பண்றேன். யு ஆர் டூரு(true)" என்று புன்னகை முகமாக சொன்னாள்.

"அதனாலதான் கிணத்துல விழுந்த ப்ப என்னப் பார்த்து அப்பான்னு சொன்னியா?" என்றவன் கேட்க "என்னது நான் அப்படி சொன்னேனா?" என்றாள் ."ஆமா மயக்கத்துல சொன்ன" என்றவன். "அச்சோ அப்ப அது உண்மையா நடந்துச்சா ?நான் இவ்வளவு நாள் கனவுன்னு நினைச்சிட்டு இருந்தேன்" என்றாள்.

" நீ அப்பான்னு என்ன கூப்பிட்ட உடனே ஒண்ணுமே புரியல .அப்ப என்ன மாதிரி ஃபீல் பண்ணணேன்னு எனக்கு சொல்ல தெரியல. it was a magical moment" என்றான். "அப்ப இருந்துதான் நீங்க என்ன லவ் பண்ண ஆரம்பிச்சீங்களா?" என்றவளிடம் அவன் மழுப்பலாக சிரிக்க" அடப்பாவி! அதுக்கு அடுத்த நாளே எனக்கு ப்ரபோஸ் பண்ணிட்டீங்களா ?" என்றாள்.

"நாம மீட் பண்ண அப்ப இருந்தே எனக்கு உன் மேல ஒரு நல்ல ஒப்பீனியன் இருந்துச்சு.நீ பண்ண நல்லதை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கேன் .அப்புறம் கிருத்திகா கிட்ட பேசின விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிச்சு. அப்புறம் நீ என்ன மேஜிக் பண்ணுன. தெரியல கிருபா வாஸ் கம்ப்ளிட்லி ஆல்ரைட். அவகிட்ட அப்படி என்ன சொன்ன?" என்று ஆச்சரியம் தாங்காமல் கேட்க "உங்ககிட்ட சொன்ன எல்லாத்தையும் அவகிட்ட சொன்ன. உனக்காச்சு இப்ப அம்மா அப்பா கூட இருக்காங்க .ஆனா எனக்கு அவங்க கூட இல்ல அப்படின்னு சொன்னேன் அவளுக்கு அவபண்ண மிஸ்டேக் புரிஞ்சுருச்சு" என்றாள்.

"நான் அவகிட்ட அவ்வளவு டைம் கேட்டும் உன்ன பத்தி ஒன்னுமே தெரியாது அப்படின்னு என்கிட்ட சொல்லிட்டா...ம்க்கும்... நல்லா அக்கா... நல்ல தங்கச்சி..." என்றவன் "அவளோட ட்ரெஸ்ஸிங் ஹாபிட் செஞ் ஆனதுக்கும் நீதான காரணம்?" என்றதற்கு "ம்ம..ஆமா..." என்றாள்.
"எனக்கு எப்பொழுதுமே உன்ன ரொம்ப தைரியமா பார்க்க பிடிச்சிருந்துச்சு. நீ ரொம்ப ஸ்ட்ராங் ,ஸ்டபரன். இதெல்லாம் என்ன அட்ராக்ட் பண்ணுச்சு. பட் ஸ்டார்டிங்ல இருந்தே ஒரு ஹிட்அன் புக் மாதிரிதான் இருந்த .யார்கிட்டயும் அதிகம் பேச மாட்ட .எல்லா ஆம்பளைகளையுமே உன் கண் பார்வையிலேயே ஒரு அடி தூரம் தள்ளி தான் நிறுத்துவ.என்னைப் பொறுத்தவரைக்கும் முதல்ல நீ ஒரு இன்ஸ்பையரிங் லேடி. நீ அன்னைக்கு கிருஷ்ணா ஆர்கானிக்ஸ்ல கார் சீட்டில் மயங்கி இருந்தப்ப ஒரு சின்ன குழந்தை மாதிரி தான் தெரிஞ்ச ...முகத்துல எப்பவும் இருக்க இறுக்கம் இல்லாம ...நிறைய நாள் யோசிச்சிருக்கேன் எப்படி இப்படி இருக்கேன்னு? "என்றவன் கேள்வியாய் பார்க்க "அங்கே இருக்க வாத்தை எல்லாம் பார்த்தவுடனே எனக்கு பழைய ஞாபகம் வந்துடுச்சு" என்றாள்."

" எனக்கு எப்பவுமே உன்மேல ஒரு நல்ல ஒப்பினியன் தான் இருந்திருக்கு.இவ்வளவு ஸ்ட்ராங்கான லேடி எவ்வளவு பெரிய பயந்தாங்கோலின்னு கிணற்றில் விழுந்தப்ப தான் தெரிஞ்சுச்சு" என்றவன் கேலி செய்ய "போடா"என்று சொல்லி நாக்கைக் கடித்தாள்.


இப்படியே இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தவர்களை நிலா வேடிக்கை பார்க்க சூரியன் தான் வந்து அவர்களை துயில்கொள்ள அனுப்பியது.

குயிலி வருவாள் ...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
iruvarukkul pesa ivvlaavu visayngal.. super episode da.. manga - doss jodi, vikram -chella jodi. appo arjun yaarukku jodi..??? kampeeramaaga paartha kuyilukkum ippoluthu irukkum kuyilikkum evvavu marram.. loveble episode.... next eppo epi...????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top