பேச்சைத் திசை திருப்ப எண்ணியவள் "தாஸ் பத்தி நான் நல்லா விசாரித்து விட்டேன் .அப்பா சின்ன வயசிலேயே இறந்திட்டாங்க .அம்மாவை இவன் பத்து வயசு இருக்கப்ப யாரோ ரேப் பண்ணி கொன்னுட்டாங்க .அப்புறம் இவனா கஷ்டப்பட்டு படிச்சு இவ்வளவு பெரிய நிலைமைக்கு வந்து இருக்கான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நம்பிக் கொடுக்கலாம்" என்றால். "அப்ப மங்கைக்கு இதுல சம்மதமா?" என்று கேட்க "சம்மதம் தான்" என்றாள்.
"சரி ...சரி ...நீ இப்ப பேச்ச மாத்தாத சொல்லு" என்றவன் சொல்ல சினிங்கியவள் "அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்ப நாய்க்குட்டிங்க கூட விளையாடுனது எனக்கு ரொம்ப புடிச்சுச்சு .எங்க அப்பாவும் அப்படித்தான் விளையாடுவாரு.அப்ப எனக்கு உங்கள பாக்குறப்ப எங்க அப்பா மாதிரியே இருந்துச்சு" என்று கண்ணை மூடிக்கொண்டு சொன்னாள்.
"அதனால்தான் என்கிட்ட பைவ் மினிட்ஸ் அப்படின்னு சொல்லிட்டு உன் ரூமுக்கு போய் அழுதுட்டு வந்தியா?"என்று கேட்க "ஓ !அப்ப நான் அன்னைக்கு அழுதன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றதற்கு தலையசைத்தான்.
"எனக்கு உங்களை பிடிச்சதுக்கு மெயில் ரீசனே என் அப்பாகிட்ட அனுபவிச்ச செக்யூர்ட்னஸ் நான் உங்ககிட்ட பீல் பண்றேன். யு ஆர் டூரு(true)" என்று புன்னகை முகமாக சொன்னாள்.
"அதனாலதான் கிணத்துல விழுந்த ப்ப என்னப் பார்த்து அப்பான்னு சொன்னியா?" என்றவன் கேட்க "என்னது நான் அப்படி சொன்னேனா?" என்றாள் ."ஆமா மயக்கத்துல சொன்ன" என்றவன். "அச்சோ அப்ப அது உண்மையா நடந்துச்சா ?நான் இவ்வளவு நாள் கனவுன்னு நினைச்சிட்டு இருந்தேன்" என்றாள்.
" நீ அப்பான்னு என்ன கூப்பிட்ட உடனே ஒண்ணுமே புரியல .அப்ப என்ன மாதிரி ஃபீல் பண்ணணேன்னு எனக்கு சொல்ல தெரியல. it was a magical moment" என்றான். "அப்ப இருந்துதான் நீங்க என்ன லவ் பண்ண ஆரம்பிச்சீங்களா?" என்றவளிடம் அவன் மழுப்பலாக சிரிக்க" அடப்பாவி! அதுக்கு அடுத்த நாளே எனக்கு ப்ரபோஸ் பண்ணிட்டீங்களா ?" என்றாள்.
"நாம மீட் பண்ண அப்ப இருந்தே எனக்கு உன் மேல ஒரு நல்ல ஒப்பீனியன் இருந்துச்சு.நீ பண்ண நல்லதை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கேன் .அப்புறம் கிருத்திகா கிட்ட பேசின விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிச்சு. அப்புறம் நீ என்ன மேஜிக் பண்ணுன. தெரியல கிருபா வாஸ் கம்ப்ளிட்லி ஆல்ரைட். அவகிட்ட அப்படி என்ன சொன்ன?" என்று ஆச்சரியம் தாங்காமல் கேட்க "உங்ககிட்ட சொன்ன எல்லாத்தையும் அவகிட்ட சொன்ன. உனக்காச்சு இப்ப அம்மா அப்பா கூட இருக்காங்க .ஆனா எனக்கு அவங்க கூட இல்ல அப்படின்னு சொன்னேன் அவளுக்கு அவபண்ண மிஸ்டேக் புரிஞ்சுருச்சு" என்றாள்.
"நான் அவகிட்ட அவ்வளவு டைம் கேட்டும் உன்ன பத்தி ஒன்னுமே தெரியாது அப்படின்னு என்கிட்ட சொல்லிட்டா...ம்க்கும்... நல்லா அக்கா... நல்ல தங்கச்சி..." என்றவன் "அவளோட ட்ரெஸ்ஸிங் ஹாபிட் செஞ் ஆனதுக்கும் நீதான காரணம்?" என்றதற்கு "ம்ம..ஆமா..." என்றாள்.
"எனக்கு எப்பொழுதுமே உன்ன ரொம்ப தைரியமா பார்க்க பிடிச்சிருந்துச்சு. நீ ரொம்ப ஸ்ட்ராங் ,ஸ்டபரன். இதெல்லாம் என்ன அட்ராக்ட் பண்ணுச்சு. பட் ஸ்டார்டிங்ல இருந்தே ஒரு ஹிட்அன் புக் மாதிரிதான் இருந்த .யார்கிட்டயும் அதிகம் பேச மாட்ட .எல்லா ஆம்பளைகளையுமே உன் கண் பார்வையிலேயே ஒரு அடி தூரம் தள்ளி தான் நிறுத்துவ.என்னைப் பொறுத்தவரைக்கும் முதல்ல நீ ஒரு இன்ஸ்பையரிங் லேடி. நீ அன்னைக்கு கிருஷ்ணா ஆர்கானிக்ஸ்ல கார் சீட்டில் மயங்கி இருந்தப்ப ஒரு சின்ன குழந்தை மாதிரி தான் தெரிஞ்ச ...முகத்துல எப்பவும் இருக்க இறுக்கம் இல்லாம ...நிறைய நாள் யோசிச்சிருக்கேன் எப்படி இப்படி இருக்கேன்னு? "என்றவன் கேள்வியாய் பார்க்க "அங்கே இருக்க வாத்தை எல்லாம் பார்த்தவுடனே எனக்கு பழைய ஞாபகம் வந்துடுச்சு" என்றாள்."
" எனக்கு எப்பவுமே உன்மேல ஒரு நல்ல ஒப்பினியன் தான் இருந்திருக்கு.இவ்வளவு ஸ்ட்ராங்கான லேடி எவ்வளவு பெரிய பயந்தாங்கோலின்னு கிணற்றில் விழுந்தப்ப தான் தெரிஞ்சுச்சு" என்றவன் கேலி செய்ய "போடா"என்று சொல்லி நாக்கைக் கடித்தாள்.
இப்படியே இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தவர்களை நிலா வேடிக்கை பார்க்க சூரியன் தான் வந்து அவர்களை துயில்கொள்ள அனுப்பியது.
குயிலி வருவாள் ...