• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Love guru -25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
சென்னை வந்ததும் வீராவை எழுப்பி விட்டு அந்த இளைஞன் சென்று விட இவளோ எழுந்து தன் உடைமையை எடுத்து கொண்டு ஆட்டோ ஏறி வீட்டுக்கு வந்தாள்.
"அம்மாடி வந்துட்டியா வா வா என்று தண்ணீர் தந்தார் மாமியார் இவளும் தண்ணீர் பருகிவிட்டு அமர்ந்தாள். குழந்தை யை கொஞ்சிக்கொண்டு இருந்த மாமனாரிடம் "மாமா அப்படியே உங்க பேத்தி உங்க புள்ள மாதிரி இருக்கால..😀ஆமா மா பாரு அவனுக்கும் கழுத்து கிட்ட மச்சம் இருக்கும் குழந்தை க்கும் அதே மச்சம்...

அ...ஆமா மாமா...சரி சரி நான் போய் ஓய்வு எடுக்குறன்.
🐇🐇🐇🐇🐇🐇🐇🐇
தயாளன் சத்யாவை நிச்சயம் பன்னி சென்னை வந்து அவளுடைய பெற்றோரை சந்தித்து பேசினான்.
"ஆண்டி உங்க பொன்னு என்னை விரும்புறா நானும் விரும்புறன் சந்தர்ப்பம் சூழ்நிலை அவளை உங்களுக்கு தெரியாம நிச்சயம் பன்னிட்டேன் என்னை மன்னிச்சிறுங்க..

ஹாஹா.. ஹாஹா மன்னிப்பு வேணாம் பா...என் பொன்னு சந்தோஷமா இருந்தா போதும் அவளை கொடைக்கானல் அனுப்பி வச்சதே நாங்க தான். நாங்க அந்த காலத்துல லவ் மேரஜ் அப்படி இருக்கிறப்ப அவ காதலை நான் ஏன் தடுக்க போறேன்..ஆனால் சத்யா அண்ணனுக்கு பிடிக்கவில்லை முறைத்தபடி இருக்க சத்யா அவனருகே சென்று "அண்ணே சாரி டா....கோவம் வேணாம்" உடனே அவனும் சிரித்து விட்டான் "ஆமா என்னை ஏண்டி கூட்டு போல...லூசு நானே சேர்த்து வச்சிருப்பேன்ல என்றவுடன் தங்கச்சி சிரிக்க "தங்கச்சி மா... நான் வாழ்க்கை ல பன்ன ஒரே தப்பு வீரா போட்டோவ மார்ப்பிங் பன்னது ஆனால் அந்த குற்றவுணர்வில் இன்னும் இருக்கேன்.ஆனால் இனி வாழ்க்கை ல எந்த தப்பும் பன்ன மாட்டேன் ."

ம்ம்ம் அதெல்லாம் மறந்துடு அண்ணே...வீராவே அத மறந்துட்டா நீ ஏன் இன்னும் ஞாபகம் வச்சிருக்க கெட்டது மறக்கனும் அண்ணே.
🌼🌼🌼🌼🌼🌼
நாட்கள் உருண்டோடின

:
:
:
வீரா தனது தகப்பன் வீட்டுக்கு வந்தாள் தன்னுடைய அண்ணிக்கு பூமுடிக்க. நவின் தாய் வீட்டு சார்பில் தன்னுடைய அக்காவுக்கு பூ முடிக்க ஆசைக்கொண்டான். வீராவுக்கு செய்தது போல ஐந்து வகை சாதம் கை நிறைய கண்ணாடி வளையல் என அணைத்தும் செய்து சக்தியை வாழ்த்தினர்.நவின் இந்த விசேஷத்துக்கு நர்மதாவை அழைத்தான் எனவே அவளும் வந்திருத்தாள் வளையல் வாங்கிக்கொண்டு. விசேஷம் முடிந்தவுடன் நவினிடம் நெருங்கினாள் நர்மதா...

உங்க கிட்ட ஒன்று சொல்லனும் நவின்.

என்ன நர்மதா..???

இல்லை அது வந்து ...என்று சட்டுனு அவன் உதட்டில் முத்தம் பதித்தாள் இருவரது கண்களும் எதிர்நோக்கின..பின்பு சுதாரித்து "என்ன நர்மதா இதெல்லாம்...

சாரி நவின்.. நான் உங்களை விரும்புறன் இதை முத்தம் கொடுத்து வெளிப்படுத்தினேன். வார்த்தை கொஞ்சம் முட்டுது அதான் ..
இவர்களை கண்ட வீரா கொந்தளித்தாள். நர்மதா சென்றவுடன் நவினிடம் வந்து "ஏண்டா இப்படி பன்ற...இப்படி பப்ளிகா முத்தம் தர அளவு காதல் முத்திப்போச்சோ...

இல்லை வீரா அது அவ அப்படி பன்னுவா னு எனக்கு தெரியல ,சின்ன பொன்னு விடு.

ம்ம்ம் ஏன்...நீ திருப்பி தரவேண்டியதானே...மூஞ்சியை பாரு . என்று அவள் கோபப்பட அவனோ என்ன செய்வது தெரியாமல் அவளை கட்டி அணைத்தான் "ரிலாக்ஸ் வீரா ப்ளீஸ்..😁என்றவுடன் கோபம் போனது. நிமிர்ந்து அவன் முகம் கண்டு "போடா கட்டி புடிச்சு கோபம் நிருத்திட்ட"

ஹாஹா என்ன பன்றது உன்னா சமாளிக்க இது தான் உதவி பன்னுது . நீ தான் சொன்னியே என்னை கட்டி பிடிச்சா செக்யூரா ஃபீல் பன்ற னு.

ம்ம்ம்.... சரி நவின் அப்போ நான் வேலை கவனிக்கிறன்.என்று அவள் செல்ல.... மனதுக்குள் "ஓய் வீரா எனக்கு உன்னை மட்டும் தான்டி பிடிக்கும் . நீ என் மேல பொஸஸிவ் ஆகுறனு எனக்கு புரியுது😀

கிச்சனில் வேலை செய்திருந்த சக்தியை பார்த்து முருகேஷ் "அடியேய் பொண்டாட்டி உன்னை எந்த வேலையும் செய்ய கூடாது சொல்லியிருக்கன் ல வேலைக்காரி வந்து பன்னிக்குவா நீ போ ரெஸ்ட் எடு ஏற்கனவே பங்கஷன் நடந்த டையர்டு உனக்கு.

இதை பார்த்து கொண்டிருந்த வீராவுக்கு கண்ணீர் வந்தது "ஆயிரம் உறவுகள் இருந்தாலும் கணவர் போல் வருமா என்று"இவள் கண்ணீர் சிந்துவதை பார்த்த நவின் வெடுக்கென்று அவளை தன் பக்கம் இழுத்தான் ..கண்ணீரை துடைத்துவிட்டு அவளுக்கு மீண்டும் ஒரு ஹக் கொடுத்தான் இந்த முறை அவனிடமிருந்து விலக மனமில்லாமல் அவன் தோளிலே சாய இதை கதிர்வேலன் பார்த்து விட்டார்.

என்ன ஆகுமோ😀😀😀

தொடரும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top