Madhumitha
மண்டலாதிபதி
வல்லமை தாராயோ 23 – மதுமிதா
ஒரு மழைப்பொழுதினை இரவு முழுக்க பயணத்தில் கழித்துவிட்டு காலையில் தென்றல்நகர் வந்து இறங்கிய போது, சென்னை வெள்ளப் பேரழிவு செய்தியே அவளை வரவேற்றது.
வெள்ளக்காட்சியின் முழு விபரம் வரவர அனைவரும் அதிர்ந்தனர்.
மின்சாரம், தொலைபேசி இயங்காத நிலையில் பேஸ்புக்கில் நல்லிதயங்கள் தன்னார்வலர்களை இணைத்து மீட்புப் பணியில் இறங்கினார்கள்.
அரசு முனைந்து எடுக்க வேண்டிய பேரிடர் மேலாண்மையை மக்களே இணைந்து எடுத்து சாதி மத வேறுபாடின்றி மனித நேயத்தை உலகுக்கு எடுத்துக் காட்டினார்கள்.
மகள்ஜோதியிடம் பேச முடியவில்லை. தி. நகர் பகுதியிலும் வெள்ளம் என்ற விஷயம் தெரிந்ததும், ஏன் ஊருக்கு வந்தோம் என்றிருந்தது சுரேகாவுக்கு. ரொட்டி, பால், இட்லிமாவு சப்பாத்திமாவு காய்கறிகள் அனைத்தும் பிரிட்ஜில் இருந்தாலும் கரெண்ட் இல்லாமல் எப்படி அவற்றைப் பாதுகாக்க முடியும். மேலே வாட்டர்டேங்க்கில் நீர் ஏற்ற மோட்டர் போட முடியவில்லையென்றால் கழிவறைக்கு தண்ணீருக்கு என்ன செய்வார்கள் என்று தோன்ற கோபம் அரசாங்கத்தின் மேல் முதலில் வந்த கோபம் அசோக்கின் மேல் திரும்பியது. எத்தனை முறை சொல்லியும் அன்றைக்கே வர வேண்டும் என்று சொன்னாரே. வந்தது தான் பாதுகாப்பாக இருந்தாலும் மகனும் மருமகனும் அங்கே சென்னையில் மாட்டிக்கொண்டார்களே என்று உள்ளம் துடிதுடித்தது.
உள்ளுக்குள் கொதித்தெழும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. வாய் திறந்து பேசினால் யாரையேனும் காயப்படுத்தி விடுவோம் என்று தோன்றியது. அதனால் சுரேகாவால்
மௌனமாக எதுவும் பேசாமல் மட்டுமே இருக்க முடிந்தது.
அத்தனை லட்சம் பேர் சென்னையில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருக்கையில் மகளையும் மருமகனையும் மட்டும் இன்னும் நெருக்கமாகப் பார்க்கத் தோன்றியது பெரும் சுயநலமாகத் தோன்றியது. ஆனால் அந்த எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை.
தங்கை மித்ராவின் மகன் அஸ்வின் தன் நண்பர்களுடன் இணைந்து பல மீட்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தான்.
அஸ்வின் மூலமாக மூன்றாம் நாள் ஜோதியும் மருமகன் அருணும் நலமாக இருக்கிறார்கள் என்னும் செய்து கிடைத்து ஆறுதல் அடைந்தார்கள்.
வீடு இரண்டாம் மாடியில் என்பதால் வீட்டில் சேதம் இல்லையென்றாலும், போர்டிகோவிலும் முதல் மாடிப்படிகளில் பாதி வரையிலும் தண்ணீர் வந்துவிட்டதால் கார் முற்றிலுமாக சேதம் அடைந்திருந்தது.
அமீரகத்தில் இருக்கும் நண்பர் ஆஸாத் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்று வாட்ஸப் நண்பர்கள் குழுமத்தில் கூறியிருந்தார்.
சுரேகா அவரிடம் விலாசம் கேட்டாள். அப்போதுதான் புதிதாக குடிபோயிருந்தார்கள் என்பதால், வீட்டு விலாசம் சொல்லத்தெரியாமல், அந்த இடம், அங்கிருந்து வீட்டுக்கு எப்படிப் போக வேண்டும் என்று அடையாளம் சொல்லி இருந்ததை அஸ்வின் நண்பர்கள் குழுமத்திற்கு அனுப்பி இருந்தாள்.
மாலை அஸ்வினின் நண்பன் குமாரிடமிருந்து அங்கே நீங்கள் குறிப்பிட்ட இடத்துக்குப் போய் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டோம். ஆஸாத் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. இதை குழுமத்தில் ஆஸாத்திடம் தெரிவித்ததும் மனம் நெகிழ்ந்து போனார்.
பத்து நிமிடங்களில் ஒரு வீடியோ வந்தது. அதை குழுமத்தில் பகிர்ந்தாள். அந்த காணொளியில் ஆஸாதின் மனைவி, அம்மா, மகள்கள் என அனைவரும் மெழுகுவர்த்தியின் ஒளியில் நலமாக இருக்கிறோம் என்று சிரித்தபடி சொன்ன காட்சியைக் கண்டதும் அனைவரும் ஆனந்தக் கண்ணீரில் ஆழ்ந்தனர்.
ஆஸாத் பேஸ்புக்கில் அதனைப் பதிவாகவே இட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
தென்றல் நகரில் இருந்து பல தன்னார்வல தொண்டர்கள் இணைந்து சென்னைக்கும் கடலூருக்கும் உணவுப் பொருட்களையும் உடைகளையும் அளித்தனர்.
நூலக உறுப்பினர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கான சப்பாத்திகளையும், இட்லிகளையும், தக்காளி, தயிர் சாத வகைகளையும் பெட்ஷீட் கம்பளிகளையும் கொடுத்து அனுப்பினார்கள்.
தென்றல்நகர் தன்னார்வலர்கள், தென்றல் நகர் முகநூல் உறுப்பினர்கள், சமூக நலத் தொண்டர்கள் என தனித் தனியாக இயங்கியவர்கள் ஒன்றிணைந்து தென்றல் நகருக்கான வளர்ச்சிப் பணிகளில் இணைந்து இயங்க முடிவு செய்ய ஒரு வாய்ப்பாக இந்த பேரிடர்க்கால உதவிப் பணி அமைந்தது.
ஒரு வாரத்துக்குப் பிறகே சுரேகாவால் ஜோதியிடம் பேச முடிந்தது. ஜோதிக்கும் அருணுக்கும் மாற்றி மாற்றி போன் செய்து, இரவு ஒரு மணிக்கு அருணின் மொபைல் எண் கிடைத்தது.
என்ன அத்தை இந்த நேரத்தில் நானும் ஜோதியும் நல்லா இருக்கிறோம் என்றார் அருண்
இல்லைப்பா உங்க ரெண்டு பேரிடமும் பேச முடியாமல் உறக்கம் வரல. இப்ப தான் லைன் கிடைத்தது என்றாள்
ஜோதி போனை வாங்கி அம்மா என்றதும், செய்தியில் அடுத்த வாரம் மழை இருக்குன்னு சொல்லறாங்களே நீயும் அருணும் இந்த சாக்கில் ஒரு வாரம் இங்கே வந்து இருந்துட்டு போங்களேன் என்று சொல்லும்போதே போன் கட்டாகி விட்டது.
இந்த அளவு பேசியதில் பயம் ஒன்றும் இல்லை. குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆசுவாசமடைய முடிந்தது.
புயல் எச்சரிக்கை குறித்து பேசியபோதே ரமணன் இந்த மழை பற்றிய எச்சரிக்கையை கொடுத்திருந்தார். ஆப் தி ரெகார்ட் என்று சொல்லும்போதே அதுவே நமக்குப் புரியும்போது, பத்திரமாக இருக்க வேண்டும் என்று ஊருக்குப் போக வேண்டாம் என்று நினைத்தோமே, செக்ரட்ரியேட்டுக்கு ஃபைலைக் கொண்டு சென்று விளக்கமாக அவர் சொன்ன பின்பும் மக்களைக் காக்க அரசு ஏன் ஆவன செய்யவில்லை என்னும் கேள்வி குடைந்து கொண்டே இருந்தது.
உயிர்ப்பிரச்சினையையே கணக்கில் எடுக்காத இந்த அரசு நூலகப் பிரச்சினையை எந்த அளவுக்கு எடுக்கும். எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான் என்று ஆயாசமாக இருந்தது.
இருந்தாலும் முயற்சியில் சற்றும் தளராத வேதாளம் போல, நூலக வாடகைப் பிரச்சினையை முதலமைச்சருக்கு மனுவாக எழுதலாம் என்று இணையம் வழியே முதலமைச்சருக்கு மனு அனுப்பிவிட்டு அதை வலைப்பதிவிலும் பதிந்தாள்.
முதலமைச்சருக்கு இணைய வழி மனு முறையாக அனுப்பப்பட்டது அப்படியே வலைப்பதிவில் அளிக்கப்பட்ட விதத்தில் இங்கே.
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய அம்மா, வணக்கம்.
1. தென்றல்நகர் தமிழக அரசு பொதுநூலகத்துறை, தென்றல்நகர் பெண்கள் நூலகத்துக்கு (சக்கராஜா கோட்டை ஊர்ப்புற நூலகம்) கட்டடம் கட்ட இடம் வேண்டும்.
2. மூன்று வருடங்களாக அரசு நூலகம் இயங்கிவரும் கட்டடத்துக்கு வாடகை கொடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. வாடகை கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த இரண்டையும் ஆவன செய்யுங்கள்.
மேலதிக விபரங்கள்:
நீங்கள் சென்ற முறை பதவியேற்றதும்,1992இல் தென்றல்நகரில் பெண்கள் சிறுவர் நூலகம் ஆரம்பித்துள்ளோம் என வானொலியில் உரையாற்றிய விபரம் அறிந்து பெரிதும் மகிழ்ந்தோம். அப்போது உடனடியாக உங்களுக்கு நூலகத்துக்கான இடம் கேட்டு மனு அளித்தோம். அந்த இடம் அப்போது வருவாய்த்துறையினரிடம் இருந்தது. நீங்கள் இடத்தை வருவாய்த்துறையிலிருந்து நூலகத்துறைக்கு மாற்றினால் மட்டும் போதும் என்னும் நிலமை. அப்போது அந்த இடம் முனியம்மன் பொட்டலாக இருந்தது. அந்த இடம் சிலவருடங்களுக்கு முன்பு முந்தையஅரசால் அரசியல்காரணங்களுக்காக கைமாறிவிட்டது. பின்னர் கேட்கப்பட்டஇடமும் கொடுக்கப்படவில்லை. இப்போது இயங்கிவரும் வாடகைக்கட்டடத்தில் 3 வருடங்களாக வாடகைகொடுக்கப்படாமலேயே நூலகம் இயங்கி வருகிறது. என்வலைப்பதிவில் இருபதிவுகள் பதிவு செய்துள்ளேன். இதைக்கண்டு ஆவனசெய்யும்படி வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன், சுரேகா அசோக், கன்வீனர், தென்றல்நகர் மாதர்சங்கங்களின் கூட்டமைப்பு, தென்றல்நகர். 11.06.2014
இது போதாதென்று மறுமுறையாக இரண்டாவது மனுவும் அனுப்பப்பட்டது.
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய அம்மா,வணக்கம்.
தென்றல்நகர் சக்கராஜாகோட்டை ஊர்ப்புறநூலகத்தை தென்றல்நகர் பெண்கள்கிளைநூலகமாக தரம்உயர்த்தித்தர கோரிவிண்ணப்பம்.
முந்தையகோரிக்கைஎண்:2014/784085/TX மேல்விபரம்//
1.தென்றல்நகர் தமிழகஅரசு பொதுநூலகத்துறை, தென்றல்நகர் பெண்கள்நூலகத்துக்கு (சக்கராஜா கோட்டை ஊர்ப்புற நூலகம்)கட்டடம்கட்ட இடம் வேண்டும். 2.3ஆண்டுகளாக அரசுநூலகம் இயங்கிவரும் கட்டடத்துக்கு வாடகைகொடுக்கப்படாமல் நிலுவையிலுள்ளது. வாடகை கொடுக்க நடவடிக்கைஎடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தஇரண்டையும் ஆவனசெய்யுங்கள்.
மேலதிக விபரங்கள்:
நீங்கள் சென்றமுறை பதவியேற்றதும்,1992இல் தென்றல்நகரில் பெண்கள் சிறுவர்நூலகம் ஆரம்பித்துள்ளோம் என வானொலியில் உரையாற்றிய விபரமறிந்து பெரிதும்மகிழ்ந்தோம்.அப்போது உடனடியாக உங்களுக்கு நூலகத்துக்கான இடம்கேட்டு மனு அளித்தோம். அந்தஇடம் அப்போது வருவாய்த்துறையினரிடம் இருந்தது. நீங்கள் இடத்தை வருவாய்த்துறையிலிருந்து நூலகத்துறைக்கு மாற்றினால் மட்டும்போதும் என்னும் நிலை. அந்த இடம் சிலவருடங்களுக்கு முன்பு முந்தையஅரசால் அரசியல்காரணங்களுக்காக கைமாறிவிட்டது. பின்னர் கேட்கப்பட்டஇடமும் கொடுக்கப்படவில்லை. இப்போது இயங்கிவரும் வாடகைக்கட்டடத்தில் 3 வருடங்களாக வாடகைகொடுக்கப்படாமலேயே நூலகம் இயங்கி வருகிறது. என்வலைப்பதிவில் இருபதிவுகள் பதிவுசெய்துள்ளேன். வலைப்பதிவின் லிங்க்கும் இணைத்துள்ளேன். இதைக்கண்டு ஆவனசெய்யும்படி வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன்,சுரேகா அசோக்,கன்வீனர், தென்றல்நகர் மாதர்சங்கங்களின் கூட்டமைப்பு, தென்றல்நகர்.11.06.2014//அன்புடன்,சுரேகா அசோக்.22.06.2014
இந்த இரண்டு மனுக்களை அனுப்பியபின் சில மாற்றங்கள் உடனடியாக நிகழ்ந்தன. இரண்டு வாரங்களில் இணைய வழியாக அனுப்பிய மனுவின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.
ஒரு மழைப்பொழுதினை இரவு முழுக்க பயணத்தில் கழித்துவிட்டு காலையில் தென்றல்நகர் வந்து இறங்கிய போது, சென்னை வெள்ளப் பேரழிவு செய்தியே அவளை வரவேற்றது.
வெள்ளக்காட்சியின் முழு விபரம் வரவர அனைவரும் அதிர்ந்தனர்.
மின்சாரம், தொலைபேசி இயங்காத நிலையில் பேஸ்புக்கில் நல்லிதயங்கள் தன்னார்வலர்களை இணைத்து மீட்புப் பணியில் இறங்கினார்கள்.
அரசு முனைந்து எடுக்க வேண்டிய பேரிடர் மேலாண்மையை மக்களே இணைந்து எடுத்து சாதி மத வேறுபாடின்றி மனித நேயத்தை உலகுக்கு எடுத்துக் காட்டினார்கள்.
மகள்ஜோதியிடம் பேச முடியவில்லை. தி. நகர் பகுதியிலும் வெள்ளம் என்ற விஷயம் தெரிந்ததும், ஏன் ஊருக்கு வந்தோம் என்றிருந்தது சுரேகாவுக்கு. ரொட்டி, பால், இட்லிமாவு சப்பாத்திமாவு காய்கறிகள் அனைத்தும் பிரிட்ஜில் இருந்தாலும் கரெண்ட் இல்லாமல் எப்படி அவற்றைப் பாதுகாக்க முடியும். மேலே வாட்டர்டேங்க்கில் நீர் ஏற்ற மோட்டர் போட முடியவில்லையென்றால் கழிவறைக்கு தண்ணீருக்கு என்ன செய்வார்கள் என்று தோன்ற கோபம் அரசாங்கத்தின் மேல் முதலில் வந்த கோபம் அசோக்கின் மேல் திரும்பியது. எத்தனை முறை சொல்லியும் அன்றைக்கே வர வேண்டும் என்று சொன்னாரே. வந்தது தான் பாதுகாப்பாக இருந்தாலும் மகனும் மருமகனும் அங்கே சென்னையில் மாட்டிக்கொண்டார்களே என்று உள்ளம் துடிதுடித்தது.
உள்ளுக்குள் கொதித்தெழும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. வாய் திறந்து பேசினால் யாரையேனும் காயப்படுத்தி விடுவோம் என்று தோன்றியது. அதனால் சுரேகாவால்
மௌனமாக எதுவும் பேசாமல் மட்டுமே இருக்க முடிந்தது.
அத்தனை லட்சம் பேர் சென்னையில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருக்கையில் மகளையும் மருமகனையும் மட்டும் இன்னும் நெருக்கமாகப் பார்க்கத் தோன்றியது பெரும் சுயநலமாகத் தோன்றியது. ஆனால் அந்த எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை.
தங்கை மித்ராவின் மகன் அஸ்வின் தன் நண்பர்களுடன் இணைந்து பல மீட்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தான்.
அஸ்வின் மூலமாக மூன்றாம் நாள் ஜோதியும் மருமகன் அருணும் நலமாக இருக்கிறார்கள் என்னும் செய்து கிடைத்து ஆறுதல் அடைந்தார்கள்.
வீடு இரண்டாம் மாடியில் என்பதால் வீட்டில் சேதம் இல்லையென்றாலும், போர்டிகோவிலும் முதல் மாடிப்படிகளில் பாதி வரையிலும் தண்ணீர் வந்துவிட்டதால் கார் முற்றிலுமாக சேதம் அடைந்திருந்தது.
அமீரகத்தில் இருக்கும் நண்பர் ஆஸாத் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லையென்று வாட்ஸப் நண்பர்கள் குழுமத்தில் கூறியிருந்தார்.
சுரேகா அவரிடம் விலாசம் கேட்டாள். அப்போதுதான் புதிதாக குடிபோயிருந்தார்கள் என்பதால், வீட்டு விலாசம் சொல்லத்தெரியாமல், அந்த இடம், அங்கிருந்து வீட்டுக்கு எப்படிப் போக வேண்டும் என்று அடையாளம் சொல்லி இருந்ததை அஸ்வின் நண்பர்கள் குழுமத்திற்கு அனுப்பி இருந்தாள்.
மாலை அஸ்வினின் நண்பன் குமாரிடமிருந்து அங்கே நீங்கள் குறிப்பிட்ட இடத்துக்குப் போய் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டோம். ஆஸாத் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. இதை குழுமத்தில் ஆஸாத்திடம் தெரிவித்ததும் மனம் நெகிழ்ந்து போனார்.
பத்து நிமிடங்களில் ஒரு வீடியோ வந்தது. அதை குழுமத்தில் பகிர்ந்தாள். அந்த காணொளியில் ஆஸாதின் மனைவி, அம்மா, மகள்கள் என அனைவரும் மெழுகுவர்த்தியின் ஒளியில் நலமாக இருக்கிறோம் என்று சிரித்தபடி சொன்ன காட்சியைக் கண்டதும் அனைவரும் ஆனந்தக் கண்ணீரில் ஆழ்ந்தனர்.
ஆஸாத் பேஸ்புக்கில் அதனைப் பதிவாகவே இட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
தென்றல் நகரில் இருந்து பல தன்னார்வல தொண்டர்கள் இணைந்து சென்னைக்கும் கடலூருக்கும் உணவுப் பொருட்களையும் உடைகளையும் அளித்தனர்.
நூலக உறுப்பினர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கான சப்பாத்திகளையும், இட்லிகளையும், தக்காளி, தயிர் சாத வகைகளையும் பெட்ஷீட் கம்பளிகளையும் கொடுத்து அனுப்பினார்கள்.
தென்றல்நகர் தன்னார்வலர்கள், தென்றல் நகர் முகநூல் உறுப்பினர்கள், சமூக நலத் தொண்டர்கள் என தனித் தனியாக இயங்கியவர்கள் ஒன்றிணைந்து தென்றல் நகருக்கான வளர்ச்சிப் பணிகளில் இணைந்து இயங்க முடிவு செய்ய ஒரு வாய்ப்பாக இந்த பேரிடர்க்கால உதவிப் பணி அமைந்தது.
ஒரு வாரத்துக்குப் பிறகே சுரேகாவால் ஜோதியிடம் பேச முடிந்தது. ஜோதிக்கும் அருணுக்கும் மாற்றி மாற்றி போன் செய்து, இரவு ஒரு மணிக்கு அருணின் மொபைல் எண் கிடைத்தது.
என்ன அத்தை இந்த நேரத்தில் நானும் ஜோதியும் நல்லா இருக்கிறோம் என்றார் அருண்
இல்லைப்பா உங்க ரெண்டு பேரிடமும் பேச முடியாமல் உறக்கம் வரல. இப்ப தான் லைன் கிடைத்தது என்றாள்
ஜோதி போனை வாங்கி அம்மா என்றதும், செய்தியில் அடுத்த வாரம் மழை இருக்குன்னு சொல்லறாங்களே நீயும் அருணும் இந்த சாக்கில் ஒரு வாரம் இங்கே வந்து இருந்துட்டு போங்களேன் என்று சொல்லும்போதே போன் கட்டாகி விட்டது.
இந்த அளவு பேசியதில் பயம் ஒன்றும் இல்லை. குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆசுவாசமடைய முடிந்தது.
புயல் எச்சரிக்கை குறித்து பேசியபோதே ரமணன் இந்த மழை பற்றிய எச்சரிக்கையை கொடுத்திருந்தார். ஆப் தி ரெகார்ட் என்று சொல்லும்போதே அதுவே நமக்குப் புரியும்போது, பத்திரமாக இருக்க வேண்டும் என்று ஊருக்குப் போக வேண்டாம் என்று நினைத்தோமே, செக்ரட்ரியேட்டுக்கு ஃபைலைக் கொண்டு சென்று விளக்கமாக அவர் சொன்ன பின்பும் மக்களைக் காக்க அரசு ஏன் ஆவன செய்யவில்லை என்னும் கேள்வி குடைந்து கொண்டே இருந்தது.
உயிர்ப்பிரச்சினையையே கணக்கில் எடுக்காத இந்த அரசு நூலகப் பிரச்சினையை எந்த அளவுக்கு எடுக்கும். எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான் என்று ஆயாசமாக இருந்தது.
இருந்தாலும் முயற்சியில் சற்றும் தளராத வேதாளம் போல, நூலக வாடகைப் பிரச்சினையை முதலமைச்சருக்கு மனுவாக எழுதலாம் என்று இணையம் வழியே முதலமைச்சருக்கு மனு அனுப்பிவிட்டு அதை வலைப்பதிவிலும் பதிந்தாள்.
முதலமைச்சருக்கு இணைய வழி மனு முறையாக அனுப்பப்பட்டது அப்படியே வலைப்பதிவில் அளிக்கப்பட்ட விதத்தில் இங்கே.
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய அம்மா, வணக்கம்.
1. தென்றல்நகர் தமிழக அரசு பொதுநூலகத்துறை, தென்றல்நகர் பெண்கள் நூலகத்துக்கு (சக்கராஜா கோட்டை ஊர்ப்புற நூலகம்) கட்டடம் கட்ட இடம் வேண்டும்.
2. மூன்று வருடங்களாக அரசு நூலகம் இயங்கிவரும் கட்டடத்துக்கு வாடகை கொடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. வாடகை கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த இரண்டையும் ஆவன செய்யுங்கள்.
மேலதிக விபரங்கள்:
நீங்கள் சென்ற முறை பதவியேற்றதும்,1992இல் தென்றல்நகரில் பெண்கள் சிறுவர் நூலகம் ஆரம்பித்துள்ளோம் என வானொலியில் உரையாற்றிய விபரம் அறிந்து பெரிதும் மகிழ்ந்தோம். அப்போது உடனடியாக உங்களுக்கு நூலகத்துக்கான இடம் கேட்டு மனு அளித்தோம். அந்த இடம் அப்போது வருவாய்த்துறையினரிடம் இருந்தது. நீங்கள் இடத்தை வருவாய்த்துறையிலிருந்து நூலகத்துறைக்கு மாற்றினால் மட்டும் போதும் என்னும் நிலமை. அப்போது அந்த இடம் முனியம்மன் பொட்டலாக இருந்தது. அந்த இடம் சிலவருடங்களுக்கு முன்பு முந்தையஅரசால் அரசியல்காரணங்களுக்காக கைமாறிவிட்டது. பின்னர் கேட்கப்பட்டஇடமும் கொடுக்கப்படவில்லை. இப்போது இயங்கிவரும் வாடகைக்கட்டடத்தில் 3 வருடங்களாக வாடகைகொடுக்கப்படாமலேயே நூலகம் இயங்கி வருகிறது. என்வலைப்பதிவில் இருபதிவுகள் பதிவு செய்துள்ளேன். இதைக்கண்டு ஆவனசெய்யும்படி வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன், சுரேகா அசோக், கன்வீனர், தென்றல்நகர் மாதர்சங்கங்களின் கூட்டமைப்பு, தென்றல்நகர். 11.06.2014
இது போதாதென்று மறுமுறையாக இரண்டாவது மனுவும் அனுப்பப்பட்டது.
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய அம்மா,வணக்கம்.
தென்றல்நகர் சக்கராஜாகோட்டை ஊர்ப்புறநூலகத்தை தென்றல்நகர் பெண்கள்கிளைநூலகமாக தரம்உயர்த்தித்தர கோரிவிண்ணப்பம்.
முந்தையகோரிக்கைஎண்:2014/784085/TX மேல்விபரம்//
1.தென்றல்நகர் தமிழகஅரசு பொதுநூலகத்துறை, தென்றல்நகர் பெண்கள்நூலகத்துக்கு (சக்கராஜா கோட்டை ஊர்ப்புற நூலகம்)கட்டடம்கட்ட இடம் வேண்டும். 2.3ஆண்டுகளாக அரசுநூலகம் இயங்கிவரும் கட்டடத்துக்கு வாடகைகொடுக்கப்படாமல் நிலுவையிலுள்ளது. வாடகை கொடுக்க நடவடிக்கைஎடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தஇரண்டையும் ஆவனசெய்யுங்கள்.
மேலதிக விபரங்கள்:
நீங்கள் சென்றமுறை பதவியேற்றதும்,1992இல் தென்றல்நகரில் பெண்கள் சிறுவர்நூலகம் ஆரம்பித்துள்ளோம் என வானொலியில் உரையாற்றிய விபரமறிந்து பெரிதும்மகிழ்ந்தோம்.அப்போது உடனடியாக உங்களுக்கு நூலகத்துக்கான இடம்கேட்டு மனு அளித்தோம். அந்தஇடம் அப்போது வருவாய்த்துறையினரிடம் இருந்தது. நீங்கள் இடத்தை வருவாய்த்துறையிலிருந்து நூலகத்துறைக்கு மாற்றினால் மட்டும்போதும் என்னும் நிலை. அந்த இடம் சிலவருடங்களுக்கு முன்பு முந்தையஅரசால் அரசியல்காரணங்களுக்காக கைமாறிவிட்டது. பின்னர் கேட்கப்பட்டஇடமும் கொடுக்கப்படவில்லை. இப்போது இயங்கிவரும் வாடகைக்கட்டடத்தில் 3 வருடங்களாக வாடகைகொடுக்கப்படாமலேயே நூலகம் இயங்கி வருகிறது. என்வலைப்பதிவில் இருபதிவுகள் பதிவுசெய்துள்ளேன். வலைப்பதிவின் லிங்க்கும் இணைத்துள்ளேன். இதைக்கண்டு ஆவனசெய்யும்படி வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன்,சுரேகா அசோக்,கன்வீனர், தென்றல்நகர் மாதர்சங்கங்களின் கூட்டமைப்பு, தென்றல்நகர்.11.06.2014//அன்புடன்,சுரேகா அசோக்.22.06.2014
இந்த இரண்டு மனுக்களை அனுப்பியபின் சில மாற்றங்கள் உடனடியாக நிகழ்ந்தன. இரண்டு வாரங்களில் இணைய வழியாக அனுப்பிய மனுவின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.