Madhumitha
மண்டலாதிபதி
வல்லமை தாராயோ 28 – மதுமிதா
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
பாடலை ஆரம்பித்து முடிக்கும் முன்பே மொபைல் ஒலித்தது. சைலண்ட் மோடில் போட மறந்துவிட்டோமே என்று நினைத்தபடி போனை எடுத்தாள் சுரேகா.
அம்மா கஸ்தூரி பேசறேன்
கஸ்தூரி சொல்லும்மா எப்படி இருக்கிறே
அம்மா இந்த ஞாயித்துக்கிழமை சாயந்தரம் நாலரை மணிக்கு ரூபாம்மா பள்ளிக்கூடத்துல மீட்டிங் இருக்கு. நீங்க அவசியம் வரணும்.
என்ன மீட்டிங் கஸ்தூரி
இனிமேல் தான் தெரியும்மா
என்னது.
ஆமாம்மா வாங்களேன். இன்னிக்கு லைப்ரரிக்கு வரும்போது சொல்ல நினைச்சேன். நான் வரும்போது நீங்க லைப்ரரியில் இல்ல. அதான் இப்ப கூப்பிட்டேன்.
அன்னிக்கு காலையில் சுதந்திர சிந்தனை மீட்டிங் இருக்குதேம்மா. மீட்டிங் முடிய எப்படியும் மதியம் இரண்டு மணி ஆகிடும். அப்புறம் ஆறு மணிக்கு இங்கே ஒரு மீட்டிங் இருக்குது.
இது சாயந்தரம் நாலரை மணிக்கு தானேம்மா. ஆரம்ப விழாவில் நீங்க ஆரம்பிச்சு வெச்சுட்டு போயிடலாம். ப்ளீஸ் வாங்கம்மா. என்ன லைப்ரரிக்கு நாம சொன்ன இடம் இன்னும் அமையலியாம்மா…
இன்னும் அதுக்கு நேரம் வரலை போலிருக்கு. எப்போ நடக்குதோ நடக்கட்டும். மூணு வருட வாடகைப்பணம் வந்ததே. இனி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.
இதென்ன புதுவித மீட்டிங்காக இருக்குது. எதற்குன்னே தெரியாமல் ஆரம்பிச்சு வைக்கணுமா. சரி இந்தத் தகவலைச் சொன்னது கஸ்தூரி அதனால் போய் வரலாம் என்று முடிவு செய்தாள்.
கஸ்தூரியைப் பற்றிய விபரங்களை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
கஸ்தூரியின் வீடு மடத்துப்பட்டியில் ஊருணிக்கு எதிரில் இருக்கும். குழந்தை முகம். சுருள் முடி. கன்னங்கள் புன்னகைக்கும்போது அழகாக மலரும். சுரேகா மடத்துப்பட்டியில் இருக்கும்போது நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வது, நூலகத்து உறுப்பினர்கள் சேர்க்கை, என்று ஆரம்பித்து பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஆர்வத்துடன் கலந்து கொள்வாள்.
திருமணமாகி இரு குழந்தைகளுடன் துபாயில் இருந்தாள். அங்கே இருந்து இங்கே தென்றல்நகருக்கு வந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.
இங்கு வந்த உடனேயே தென்றல்நகரில் முதன்முறையாக *** “அன்னதான-சுற்று” (Food Drive) என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறாள்.
ஆரம்ப கட்டத்தில் தனியாளாக, 15 நாட்களுக்கு ஒருமுறை என பேருந்து நிலையம், சாலையோரம் வசிக்கும் வீடற்றவர்கள், வயதான வரியவர்கள், சாலையோர சிறுவணிகர்கள், பிச்சைகாரர்கள், நரிகுறவர்கள் என கஸ்தூரியின் சேவை தொடங்கியது.
முதலில் கடையில் வாங்கி அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தது சரியாக அமையாததால், தன் வீட்டிலேயே தானே சமைத்து சிறு பொட்டலங்களாக்கி ஊர்முழுக்க சுற்றி தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தாள் கஸ்தூரி.
குடும்பத்தினர், நண்பர்கள் என ஆதரவு பெருகி, அவர்களும் தங்களாலான உணவுகளை செய்து கொடுத்தனுப்ப ஆரம்பித்தனர். சில நேரங்களில் இரண்டு,மூன்று என சிறிய அளவில் பொட்டலங்கள் கிடைத்தாலும் உடனடியாக தானே தனியே டூவீலரில் சென்று உணவளித்து வருவாள். தன்னிடம் 50 பொட்டலங்களுக்கு மேல் வரும்போது கள-உதவிக்கு தன் சகோதரியையோ, குடும்பத்தாரையோ அழைத்துக்கொண்டு பரிமாறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
தென்றல்நகர் மற்றும் புறநகர் என அனைத்து இடங்களுக்கும் சென்று வறியோர் தேவைகளை அறிந்துகொள்வதில் முனைப்புடன் இப்போதுவரை இயங்குகிறாள்.
அதானால் கஸ்தூரி சொன்னபடி ஞாயிறு மீட்டிங்குக்குப் போக வேண்டும் என்று முடிவு செய்தாள் சுரேகா.
(* ”அன்னதான-சுற்று” (Food Drive)-விளக்கம்J
சாதாரணமாக அன்னதானமென்பது ஒருவரையோ,பலரையோ நம்மிடத்திற்கு அழைத்து வறியோர்க்கும்,இயலாதோர்க்கும் உணவு பரிமாறி அவர்களுக்கு பசியாற்றுதல். ஆனால் அன்னதான சுற்று(Food Drive)-ல் வறியோரை அவர்களிடத்துக்கு தேடிச் சென்று உணவளித்து பசியாற்றுதல். இம்முறையில் பல நன்மைகள் உண்டு. உண்மையில் வறியோரை நேரில் அடையாளம் கண்டு, அவர்களை அலைகழிக்காமல் உதவுவது.
போனை வைத்ததும் பாதியில் விட்ட பாடலைத் தொடர்ந்தாள் சுரேகா.
வேயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்…
உளமே புகுந்த அதனால் வரி வந்ததும் அதற்கு மேல் அவளால் பாட முடியவில்லை.
திருஞான சம்பந்தர் அத்தனை சிறிய வயதில் எப்படி இந்தப் பாடலைப் பாடினார். உள்ளத்தில் புகுவது அப்படியொன்றும் சாதாரண விஷயமல்ல.
ஒரு காதலன் காதலியின் உள்ளத்திலோ ஒரு காதலி காதலனின் உள்ளத்திலோ புகுவது சட்டென நிகழ்வது. இறையை நாயக நாயகி பாவனையில் பார்க்கும்போது இன்னும் ஆழமான நம்பிக்கை எழும் அற்புத பரிமாற்றம் இத்தகைய பாடலின் வழி நிகழ்வது அபூர்வமான விஷயமல்லவா.
இதை ஓதுவார் கோபி கிருஷ்ணா அவர்கள் தேவார வகுப்பில் பாடலுக்கு நடுவே கதையாக எடுத்துச் சொல்லும்போது உள்ளம் உருகும்.
அசோக் வந்ததும் நினைவையும் பாடலையும் அப்படியே முடித்துக் கொண்டாள்.
“என்ன எழுத்து முடிஞ்சு இப்போ பாட்டுமா?”
“எப்பவும் தானே பாடறேன். பாடும்போது வலியே தெரியலைங்க.”
“உனக்கு என்ன வலி. எழுதும் போதும் லைப்ரரிக்கு அலையும் போதும் வலி எதுவும் இல்ல. வீட்டு வேலை செய்யறப்போ மட்டும் வலி வருமா”
“இங்க பாருங்க. வேலை செய்யறதைப் பத்தி மட்டும் பேசவேணாம். எவ்வளவு செய்தாலும் உங்களுக்கு திருப்தி இருக்காது”
“நீ வேலையை முடிச்சுட்டு ரெஸ்ட் எடுன்னு தானே சொல்லறேன். அது மட்டும் உனக்குப் புரியறதில்ல”
எதுவும் பேசாதே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். என்ன பேசினாலும் எடுபடாது. புரியாது. பிரச்சினை தான் பெரிதாகும் என்று அமைதியாக, “சரிங்க. ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வாசல் தெளிக்க வந்துவிட்டாள்.
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
பாடலை ஆரம்பித்து முடிக்கும் முன்பே மொபைல் ஒலித்தது. சைலண்ட் மோடில் போட மறந்துவிட்டோமே என்று நினைத்தபடி போனை எடுத்தாள் சுரேகா.
அம்மா கஸ்தூரி பேசறேன்
கஸ்தூரி சொல்லும்மா எப்படி இருக்கிறே
அம்மா இந்த ஞாயித்துக்கிழமை சாயந்தரம் நாலரை மணிக்கு ரூபாம்மா பள்ளிக்கூடத்துல மீட்டிங் இருக்கு. நீங்க அவசியம் வரணும்.
என்ன மீட்டிங் கஸ்தூரி
இனிமேல் தான் தெரியும்மா
என்னது.
ஆமாம்மா வாங்களேன். இன்னிக்கு லைப்ரரிக்கு வரும்போது சொல்ல நினைச்சேன். நான் வரும்போது நீங்க லைப்ரரியில் இல்ல. அதான் இப்ப கூப்பிட்டேன்.
அன்னிக்கு காலையில் சுதந்திர சிந்தனை மீட்டிங் இருக்குதேம்மா. மீட்டிங் முடிய எப்படியும் மதியம் இரண்டு மணி ஆகிடும். அப்புறம் ஆறு மணிக்கு இங்கே ஒரு மீட்டிங் இருக்குது.
இது சாயந்தரம் நாலரை மணிக்கு தானேம்மா. ஆரம்ப விழாவில் நீங்க ஆரம்பிச்சு வெச்சுட்டு போயிடலாம். ப்ளீஸ் வாங்கம்மா. என்ன லைப்ரரிக்கு நாம சொன்ன இடம் இன்னும் அமையலியாம்மா…
இன்னும் அதுக்கு நேரம் வரலை போலிருக்கு. எப்போ நடக்குதோ நடக்கட்டும். மூணு வருட வாடகைப்பணம் வந்ததே. இனி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.
இதென்ன புதுவித மீட்டிங்காக இருக்குது. எதற்குன்னே தெரியாமல் ஆரம்பிச்சு வைக்கணுமா. சரி இந்தத் தகவலைச் சொன்னது கஸ்தூரி அதனால் போய் வரலாம் என்று முடிவு செய்தாள்.
கஸ்தூரியைப் பற்றிய விபரங்களை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
கஸ்தூரியின் வீடு மடத்துப்பட்டியில் ஊருணிக்கு எதிரில் இருக்கும். குழந்தை முகம். சுருள் முடி. கன்னங்கள் புன்னகைக்கும்போது அழகாக மலரும். சுரேகா மடத்துப்பட்டியில் இருக்கும்போது நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வது, நூலகத்து உறுப்பினர்கள் சேர்க்கை, என்று ஆரம்பித்து பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஆர்வத்துடன் கலந்து கொள்வாள்.
திருமணமாகி இரு குழந்தைகளுடன் துபாயில் இருந்தாள். அங்கே இருந்து இங்கே தென்றல்நகருக்கு வந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.
இங்கு வந்த உடனேயே தென்றல்நகரில் முதன்முறையாக *** “அன்னதான-சுற்று” (Food Drive) என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறாள்.
ஆரம்ப கட்டத்தில் தனியாளாக, 15 நாட்களுக்கு ஒருமுறை என பேருந்து நிலையம், சாலையோரம் வசிக்கும் வீடற்றவர்கள், வயதான வரியவர்கள், சாலையோர சிறுவணிகர்கள், பிச்சைகாரர்கள், நரிகுறவர்கள் என கஸ்தூரியின் சேவை தொடங்கியது.
முதலில் கடையில் வாங்கி அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தது சரியாக அமையாததால், தன் வீட்டிலேயே தானே சமைத்து சிறு பொட்டலங்களாக்கி ஊர்முழுக்க சுற்றி தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தாள் கஸ்தூரி.
குடும்பத்தினர், நண்பர்கள் என ஆதரவு பெருகி, அவர்களும் தங்களாலான உணவுகளை செய்து கொடுத்தனுப்ப ஆரம்பித்தனர். சில நேரங்களில் இரண்டு,மூன்று என சிறிய அளவில் பொட்டலங்கள் கிடைத்தாலும் உடனடியாக தானே தனியே டூவீலரில் சென்று உணவளித்து வருவாள். தன்னிடம் 50 பொட்டலங்களுக்கு மேல் வரும்போது கள-உதவிக்கு தன் சகோதரியையோ, குடும்பத்தாரையோ அழைத்துக்கொண்டு பரிமாறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
தென்றல்நகர் மற்றும் புறநகர் என அனைத்து இடங்களுக்கும் சென்று வறியோர் தேவைகளை அறிந்துகொள்வதில் முனைப்புடன் இப்போதுவரை இயங்குகிறாள்.
அதானால் கஸ்தூரி சொன்னபடி ஞாயிறு மீட்டிங்குக்குப் போக வேண்டும் என்று முடிவு செய்தாள் சுரேகா.
(* ”அன்னதான-சுற்று” (Food Drive)-விளக்கம்J
சாதாரணமாக அன்னதானமென்பது ஒருவரையோ,பலரையோ நம்மிடத்திற்கு அழைத்து வறியோர்க்கும்,இயலாதோர்க்கும் உணவு பரிமாறி அவர்களுக்கு பசியாற்றுதல். ஆனால் அன்னதான சுற்று(Food Drive)-ல் வறியோரை அவர்களிடத்துக்கு தேடிச் சென்று உணவளித்து பசியாற்றுதல். இம்முறையில் பல நன்மைகள் உண்டு. உண்மையில் வறியோரை நேரில் அடையாளம் கண்டு, அவர்களை அலைகழிக்காமல் உதவுவது.
போனை வைத்ததும் பாதியில் விட்ட பாடலைத் தொடர்ந்தாள் சுரேகா.
வேயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்…
உளமே புகுந்த அதனால் வரி வந்ததும் அதற்கு மேல் அவளால் பாட முடியவில்லை.
திருஞான சம்பந்தர் அத்தனை சிறிய வயதில் எப்படி இந்தப் பாடலைப் பாடினார். உள்ளத்தில் புகுவது அப்படியொன்றும் சாதாரண விஷயமல்ல.
ஒரு காதலன் காதலியின் உள்ளத்திலோ ஒரு காதலி காதலனின் உள்ளத்திலோ புகுவது சட்டென நிகழ்வது. இறையை நாயக நாயகி பாவனையில் பார்க்கும்போது இன்னும் ஆழமான நம்பிக்கை எழும் அற்புத பரிமாற்றம் இத்தகைய பாடலின் வழி நிகழ்வது அபூர்வமான விஷயமல்லவா.
இதை ஓதுவார் கோபி கிருஷ்ணா அவர்கள் தேவார வகுப்பில் பாடலுக்கு நடுவே கதையாக எடுத்துச் சொல்லும்போது உள்ளம் உருகும்.
அசோக் வந்ததும் நினைவையும் பாடலையும் அப்படியே முடித்துக் கொண்டாள்.
“என்ன எழுத்து முடிஞ்சு இப்போ பாட்டுமா?”
“எப்பவும் தானே பாடறேன். பாடும்போது வலியே தெரியலைங்க.”
“உனக்கு என்ன வலி. எழுதும் போதும் லைப்ரரிக்கு அலையும் போதும் வலி எதுவும் இல்ல. வீட்டு வேலை செய்யறப்போ மட்டும் வலி வருமா”
“இங்க பாருங்க. வேலை செய்யறதைப் பத்தி மட்டும் பேசவேணாம். எவ்வளவு செய்தாலும் உங்களுக்கு திருப்தி இருக்காது”
“நீ வேலையை முடிச்சுட்டு ரெஸ்ட் எடுன்னு தானே சொல்லறேன். அது மட்டும் உனக்குப் புரியறதில்ல”
எதுவும் பேசாதே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். என்ன பேசினாலும் எடுபடாது. புரியாது. பிரச்சினை தான் பெரிதாகும் என்று அமைதியாக, “சரிங்க. ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வாசல் தெளிக்க வந்துவிட்டாள்.
Last edited: