Madhumitha
மண்டலாதிபதி
வல்லமை தாராயோ 31 – மதுமிதா
நூலகத்தில் சுரேகாவும் நூலகர் முத்துலட்சுமியும் மட்டுமே இருந்தனர்.
நூலகம் திறக்கப்பட்டும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே தொலைபேசியில் நூலகரின் அழைப்பு வந்ததும் சுரேகா நூலகத்துக்கு வந்திருந்தாள். நாளிதழ்களும் புத்தகங்களும் பிரிக்கப்படாமல் மேஜையில் கிடக்க இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“அக்கா எம் எல் ஏ க்கு போன் பண்ணுங்க. லைப்ரரி இடம் பத்தி ஏதும் தகவல் வந்ததான்னு கேளுங்க”
“என்னம்மா பேசறீங்க. அவர் எம் எல் ஏ. எந்த இடத்தில் இருந்து யாருடைய நலனுக்காக யாரு கிட்ட பேசிட்டு இருக்கிறாரோ. நாம நினைச்ச நேரத்துல நாம அவருக்கு போன் பண்ண முடியாது.’
“அக்கா. எனக்காக போன் பண்ணுங்க. மார்ச் மாசம் மகளிர் தினத்துக்கு கட்டடப் பணி அஸ்திவாரம் போட்டு ஆரம்பிக்கலாம்னு அன்னிக்கு சொன்னாரே. அது என்னாச்சுன்னு நாம கேக்க வேணாமா”
“நம்ம மனுவையும், அவர் எழுதினதையும் கலெக்டர் ஆபீசில் அன்னிக்கே அவர் கொடுத்தாச்சு. இனி அங்கிருந்து எதுனா நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சாதானே அவருக்கு அடுத்து என்ன நடந்ததுன்னு விபரம் தெரியும். அவர் நமக்கு இவ்வளவு செய்யறதே பெருசு. அதுக்குள்ளே நாம அவரை தொந்தரவு செய்யக்கூடாதும்மா.”
“இல்லக்கா. இன்னிக்கு நாம கேட்ட இடத்தை சர்வே பண்ண வர்றாங்க. அவங்க இடத்தைப் பார்க்க வர்றப்போ நம்மளயும் வரச் சொல்லி இருக்கிறாங்க. அவங்க வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னால உங்களுக்கு போன் பண்ணுவேன். நான் போன் பண்ணுன உடனே நீங்க அங்க வந்துடுங்க. எம் எல் ஏ க்கு போன் பண்ணினா அவரும் வந்துட்டாருன்னா நல்ல விதமா முடியும்லக்கா”
“இல்லம்மா. அவர்ட்ட இப்போ பேச முடியாது. இவங்க பார்த்துட்டு போகட்டும். அவரா பேசும்போது இந்தத் தகவலைச் சொல்லலாம். ஆனா, இன்னிக்கு பாக்க வர்றது கூட எனக்கு சும்மாதான் வர்றாங்கன்னே தோணுது”
“ஏன்க்கா அப்படி சொல்லறீங்க. எல்லாமா சேர்ந்து ஒண்ணா கூடி வர்றப்போ இப்படி சொல்லறீங்களேக்கா”
“இத்தனை வருஷமா நடந்தது அப்படி நினைக்க வைக்குதும்மா. நாம இப்போ இருக்கிற கலெக்டரையும், முனிஷிபல் கமிஷனரையும் இதுவரைக்கும் நூலக இட விஷயமா பார்க்கல. எம் எல் ஏ ஆளும்கட்சிக்கு எதிரான கட்சியில இருக்கிறவரு. இதை நடக்க இந்த கட்சி அனுமதிக்குமா. அதை யோசிங்க”
“அக்கா ஒண்ணும் சொல்லாதீங்க. இவங்களுக்குதான் மனு குடுத்திருக்கிறோமேக்கா”
“மனு எழுத்து மூலமா போயிருக்கு. நேரில் பார்த்தால் தானே முழு விபரமும் சொல்ல முடியும். கலெக்டர், கமிஷனர் ரெண்டு பேரையும் துளி நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். நூலக இட விஷயம் பற்றிப் பேசும் சந்தர்ப்பம் அமையல. போன வாரம் பழைய பேருந்து நிலையம் பக்கத்துல பேரணியாக நடந்து ஒவ்வொரு ஏரியாவாக துப்புறவு செஞ்சோமே, அன்னிக்கு இந்த கமிஷினர் அம்மாதான் நிகழ்வைத் துவக்கி வைச்சாங்க. வணக்கம் சொல்லும்போது, எழுத்தாளர்னு அறிமுகம் செஞ்சவுடனே மரியாதையாகப் பேசிட்டு தள்ளி இருக்கணும் நான், நீங்க பெசியவங்கன்னு பேசினாங்க, நூலக விஷயத்தை அப்போ கூட அவங்க கிட்ட பேச முடியல.”
“இதெல்லாம் ஒரு விஷயமாக்கா. இடம் இன்னிக்கு பார்த்துட்டு முடிவு சொல்லிடுவாங்க. இன்னிக்கு முடிவு தெரிஞ்சுட்டா அவருடைய சட்ட மன்ற உறுப்பினர் நிதி பணத்துல கட்டட வேலை ஆரம்பிச்சுட்டா நல்லதுக்கா”
“இந்த இடம் இதுதான்னு அவங்களுக்கு தெரியாதாம்மா. சும்மா வந்து பாத்துட்டு நீர்ப்பிடிப்பு இடம் அதனால தர முடியாதுன்னு எழுதிக் குடுக்கப் போறாங்க அவ்வளவு தான்.”
“ஏங்க்கா நெகடிவாவே பேசறீங்க. நல்லது நடக்கும்னு நினைக்காம”
“நாலு சமுதாயத்துக்காறங்க கட்டின நாலு கல்யாண மண்டபங்கள் அங்க இருக்கு. கழிப்பிட கட்டிடம் கட்டி இருக்கிறாங்க. இது எல்லாமே அரசிடம் 99 வருஷ லீஸ் எடுத்துதான் பண்ணி இருக்கிறாங்க. இது எல்லாமே இருக்கும் இடம் நீர்ப்பிடிப்பு இருக்கிற இடம்தான். ஆனா கட்டடம் கட்ட இடம் ஒதுக்கி கல்யாண மண்டபங்கள் கட்டி எத்தனையோ வருஷங்கள் ஆச்சு. ஆனா லைப்ரரிக்கு இப்படிதான் பதில் வரும்.”
நூலகரின் முகம் வாடியது.
“சரிம்மா. நல்லது நடந்தா நல்லது தானே. இந்த இடத்தை லைப்ரரிக்கு குடுக்குறோம்னு எழுதி எழுத்து மூலமா குடுத்துட்டாங்கன்னா நமக்கு நல்லதுதான். நீங்க புதுசா வந்திருக்கிறீங்க. உங்களுக்கு நம்பிக்கை இல்லாம பேசக்கூடாது. இருபத்தியாறு வருஷமா இப்படி நடக்கிறதுனால சொல்லறேன். நீங்க வந்த கொஞ்ச நாள்ல இப்படி நடக்குறத பாக்கறீங்க தானே. சரிசரி நீங்க வருத்தப் படாதீங்க.”
இன்னும் வாயைத் திறக்காமல் சோகமாக சுரேகாவைப் பார்த்தாள்.
“பாருங்கம்மா. எத்தனையோ பிரச்சினைகள், உயிர் போகிற பிரச்சினைகள், போராட்டங்களை அரசு கண்டுக்காம இருக்கு, முதல் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை. கட்சி ஸ்திரமா இருக்க அரசாங்கத்துல போராடிக்கிட்டு இருக்கிறாங்க. மக்களின் உயிர் ஆதாரப் பிரச்சினைகளையே கண்டுக்காம கடந்து போறாங்க. இதில் நம்ம லைப்ரரி விஷயத்தில் என்ன வருமானம் இருக்குதுன்னு அவங்களுக்கு அக்கறை இருக்கும். நம்மால சில லட்சங்களையாச்சும் புரட்டி அவங்களுக்கு கொடுத்து வேலை செய்யற நிலையில் இருக்கிறோமா. சரி சரி நான் மீதி வேலைகளை முடிக்கிறேன். நீங்க சர்வே பண்ண அந்த அம்மா வந்ததும் போன் பண்ணுங்க. நான் மாரியம்மன் கோயிலுக்கு வந்துடறேன்” என்று சுரேகா கூறியதும்,
“சரிக்கா” என்று காலையில் வரும்போதிருந்த உற்சாகம் குறைந்து சோர்வுடன் பதில் அளித்தாள். கிளம்பிய சுரேகாவை நிறுத்தி,
“அக்கா. சொல்ல மறந்துட்டேன். ரெண்டு விஷயம் சொல்லணும். விருதுநகர் லைப்ரரியில் இருந்து மாவட்ட அளவுல கட்டுரைப் போட்டி நடத்தினாங்கள்ல. நம்ம லைப்ரரியில இருந்து எழுதின ரெண்டு குழந்தைங்களுக்கு பரிசு கிடைச்சிருக்குக்கா. அதை தனியா ஒரு நாள் எல்லார் முன்னாடியும் சொல்லி பரிசா கொடுக்கலாம்.”
“ரொம்ப நல்ல விஷயம். அடுத்த வாரம் இதை செஞ்சுடலாம்.”
“நீங்க இத்தனை புஸ்தகம் வாசிக்கிறீங்க. வாசிச்ச புஸ்தகங்களைப் பத்தி வாசகர் வட்டத்துல பேசறீங்க. ஏன்க்கா எழுத மாட்டேங்கறீங்க”
“இந்த லைப்ரரி ஆரம்பிச்சதிலிருந்து இப்ப வரைக்கும் இங்க இருக்கிற, அப்புறம் நான் தனியா வாங்கி வாசிச்சது மட்டும் ஆறாயிரம் புஸ்தகங்களுக்கு மேல இருக்கும். ஒவ்வொண்ணும் எனக்கு பிடிச்சு வாசிச்ச புஸ்தகங்கள். எல்லாத்தையும் எழுத முடியல. நேரம் இருக்கிறப்போ எழுதப் பார்க்கிறேன். சரி இன்னொரு விஷயம் ன்னு சொன்னீங்களே. அது என்ன சொல்லுங்க”
“அப்புறம் வந்து… இன்னொன்னு நம்ம சரளா பொண்ணு யாரையோ லவ் பண்ணிட்டு வீட்டை விட்டு போச்சுல்ல. அவளைத் தேடிட்டுப் போயி கண்டுபுடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்கள்ல, அந்தப் பொண்ணு மருந்து குடிச்சிடுச்சுக்கா”
சுரேகா பதிலேதும் பேசவில்லை. லைப்ரரியை விட்டு வெளியே வந்தாள். வெயில் நேரடியாக மேலே படுவது கூட அவளுக்கு எந்த பாதிப்பையும் தந்ததாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
இப்படியான மரணங்கள் அவளை வெகுவாக பாதிக்கின்றன. சமூகம் நிர்ப்பந்தம் தருவது. இதை எப்படி எதிர்கொள்ளணும் என்பதை இளய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கும் எந்த வழியும் இல்லை. ஒன்று அவர்களே இப்படி முடிவுக்கு வருகிறார்கள். அல்லது பெற்றோரோ சமுதாயமோ அதைச் செய்துவிடுகின்றனர். இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு இல்லையோ… கற்காலத்தில்தான் இருக்கிறோமா?
யாரையும் தப்ப விடுவதில்லை மரணம். மரணத்தை மனிதனாகத் தேடிப் போக வேண்டிய தேவையும் இல்லை. தானாகவே வர வேண்டிய நேரத்தில் யார் தடுத்தாலும் நில்லாது வந்து எதிர் நிற்கும் உடன் அழைத்துச் செல்ல. நமக்கான ஒரே தீர்வு புன்னகையோடு அதை எதிர் கொள்வது மட்டுமே.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
திருக்குர்ஆன் 63:10
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
திருக்குர்ஆன் 3:185
எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதி இருந்தார்.
எங்கள் ஊரில் நான் சிறுவனாயிருந்த போது மரத்தினடியில் மாடு கட்டுபவர்கள் முளைக்குச்சி அடித்து அதில்தான் மாடுகளை கட்ட வேண்டும்.மரத்தின் வேரில் கட்டினால் அபராதம். ஆடுமேய்ப்பவர்கள் துரட்டிக்கம்பால் மரக்கொப்புகளை வளைத்து சவட்டி ஆடுகளை திங்க விடலாம். மரக்கொப்புக்களை துண்டாக வெட்டி விட்டால் அபராதம்.
நீர் நிலைகளைச் சேதப்படுத்தினால் ஊரைவிட்டே விளக்கி வைக்கப்படுவார்கள். கண்மாய்கரைகளில் புதர்களில் தேன் எடுக்க, முள்புதர்களை சேதப்படுத்தினால் அபராதம். படிப்பறிவில்லாத வேளாண் தொழில் செய்த சம்சாரிகள் இப்படியெல்லாம் நீர் நிலைகளை பாதுகாத்தார்கள். 1947ல் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்த போது 39632 கண்மாய்களையும் சேர்த்துதான் கொடுத்தான். இவற்றில் பாதிக்கு மேல்இப்போது இல்லை. இருப்பவைகள் தூர்வாராமல் பராமரிப்பின்றி மேடேறி புதர்மண்டி கிடக்கின்றன. பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ள நாம் வெட்கப்பட வேண்டாமா?
என்று எழுதி இருந்தார் சோ தர்மன்.
எத்தனை அர்த்தம் பொதிந்தவை. இவற்றையெல்லாம் யார் மாற்றினார்கள். இந்த எழுபது வருடங்களில் இயற்கையில் இருந்து வெகுதூரம் நாம் விலகி வந்திருக்கிறோம் என்பதைத்தான் நாம் யாருமே உணர்ந்து கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது ஏறக்குறைய 18,000 ஏரிகள் தான் இருக்கின்றன. 1947ல் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்த போது 39632 கண்மாய்களைக் காப்பாற்ற எப்படித் தவறினோம்.
முன்பு வெள்ளப் பெருக்கெடுத்தோடும் காலங்களில், மூடி இருக்கும் மடையைத் திறப்பது மிகவும் கடினமான விஷயம். வெள்ளமாகப் பாய்ந்துவரும் நீருக்கு மத்தியில், பல அடி ஆழமான நீருக்குள் மூச்சை அடக்கி மூழ்கி மடையைக் கண்டுபிடித்து திறந்துவிட்டபின் அந்த மடைவழியாய் வெளியேறும் நீரின் அதிவேகமான பாய்ச்சலில் சிக்காமல் மீண்டு மேலெழுந்து வருவது உயிரைப் பணயம் வைக்கும் செயல். அந்தப் பணி செய்பவர்களை அந்தக் காலத்தில் மடையைத் திறப்பவர்கள் என்பதால் ’மடை’ யர்கள் என்பார்கள். இப்போதோ உயிரைப் பணயம் வைக்கும் மடையர்களாக விவசாயிகளும் மீனவர்களும் உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான எந்த அக்கறையும் இன்றி, விவசாயம் செய்ய வேண்டாம் என்னும் நிலைக்குத் தள்ளும் பணியினை அரசாங்கமே செய்கிறது.
எலிக்கறி தின்பதையும் தற்கொலையையும் வாழ்வாகச் செய்தது யார்?
நூலகத்தில் சுரேகாவும் நூலகர் முத்துலட்சுமியும் மட்டுமே இருந்தனர்.
நூலகம் திறக்கப்பட்டும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே தொலைபேசியில் நூலகரின் அழைப்பு வந்ததும் சுரேகா நூலகத்துக்கு வந்திருந்தாள். நாளிதழ்களும் புத்தகங்களும் பிரிக்கப்படாமல் மேஜையில் கிடக்க இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“அக்கா எம் எல் ஏ க்கு போன் பண்ணுங்க. லைப்ரரி இடம் பத்தி ஏதும் தகவல் வந்ததான்னு கேளுங்க”
“என்னம்மா பேசறீங்க. அவர் எம் எல் ஏ. எந்த இடத்தில் இருந்து யாருடைய நலனுக்காக யாரு கிட்ட பேசிட்டு இருக்கிறாரோ. நாம நினைச்ச நேரத்துல நாம அவருக்கு போன் பண்ண முடியாது.’
“அக்கா. எனக்காக போன் பண்ணுங்க. மார்ச் மாசம் மகளிர் தினத்துக்கு கட்டடப் பணி அஸ்திவாரம் போட்டு ஆரம்பிக்கலாம்னு அன்னிக்கு சொன்னாரே. அது என்னாச்சுன்னு நாம கேக்க வேணாமா”
“நம்ம மனுவையும், அவர் எழுதினதையும் கலெக்டர் ஆபீசில் அன்னிக்கே அவர் கொடுத்தாச்சு. இனி அங்கிருந்து எதுனா நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சாதானே அவருக்கு அடுத்து என்ன நடந்ததுன்னு விபரம் தெரியும். அவர் நமக்கு இவ்வளவு செய்யறதே பெருசு. அதுக்குள்ளே நாம அவரை தொந்தரவு செய்யக்கூடாதும்மா.”
“இல்லக்கா. இன்னிக்கு நாம கேட்ட இடத்தை சர்வே பண்ண வர்றாங்க. அவங்க இடத்தைப் பார்க்க வர்றப்போ நம்மளயும் வரச் சொல்லி இருக்கிறாங்க. அவங்க வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னால உங்களுக்கு போன் பண்ணுவேன். நான் போன் பண்ணுன உடனே நீங்க அங்க வந்துடுங்க. எம் எல் ஏ க்கு போன் பண்ணினா அவரும் வந்துட்டாருன்னா நல்ல விதமா முடியும்லக்கா”
“இல்லம்மா. அவர்ட்ட இப்போ பேச முடியாது. இவங்க பார்த்துட்டு போகட்டும். அவரா பேசும்போது இந்தத் தகவலைச் சொல்லலாம். ஆனா, இன்னிக்கு பாக்க வர்றது கூட எனக்கு சும்மாதான் வர்றாங்கன்னே தோணுது”
“ஏன்க்கா அப்படி சொல்லறீங்க. எல்லாமா சேர்ந்து ஒண்ணா கூடி வர்றப்போ இப்படி சொல்லறீங்களேக்கா”
“இத்தனை வருஷமா நடந்தது அப்படி நினைக்க வைக்குதும்மா. நாம இப்போ இருக்கிற கலெக்டரையும், முனிஷிபல் கமிஷனரையும் இதுவரைக்கும் நூலக இட விஷயமா பார்க்கல. எம் எல் ஏ ஆளும்கட்சிக்கு எதிரான கட்சியில இருக்கிறவரு. இதை நடக்க இந்த கட்சி அனுமதிக்குமா. அதை யோசிங்க”
“அக்கா ஒண்ணும் சொல்லாதீங்க. இவங்களுக்குதான் மனு குடுத்திருக்கிறோமேக்கா”
“மனு எழுத்து மூலமா போயிருக்கு. நேரில் பார்த்தால் தானே முழு விபரமும் சொல்ல முடியும். கலெக்டர், கமிஷனர் ரெண்டு பேரையும் துளி நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். நூலக இட விஷயம் பற்றிப் பேசும் சந்தர்ப்பம் அமையல. போன வாரம் பழைய பேருந்து நிலையம் பக்கத்துல பேரணியாக நடந்து ஒவ்வொரு ஏரியாவாக துப்புறவு செஞ்சோமே, அன்னிக்கு இந்த கமிஷினர் அம்மாதான் நிகழ்வைத் துவக்கி வைச்சாங்க. வணக்கம் சொல்லும்போது, எழுத்தாளர்னு அறிமுகம் செஞ்சவுடனே மரியாதையாகப் பேசிட்டு தள்ளி இருக்கணும் நான், நீங்க பெசியவங்கன்னு பேசினாங்க, நூலக விஷயத்தை அப்போ கூட அவங்க கிட்ட பேச முடியல.”
“இதெல்லாம் ஒரு விஷயமாக்கா. இடம் இன்னிக்கு பார்த்துட்டு முடிவு சொல்லிடுவாங்க. இன்னிக்கு முடிவு தெரிஞ்சுட்டா அவருடைய சட்ட மன்ற உறுப்பினர் நிதி பணத்துல கட்டட வேலை ஆரம்பிச்சுட்டா நல்லதுக்கா”
“இந்த இடம் இதுதான்னு அவங்களுக்கு தெரியாதாம்மா. சும்மா வந்து பாத்துட்டு நீர்ப்பிடிப்பு இடம் அதனால தர முடியாதுன்னு எழுதிக் குடுக்கப் போறாங்க அவ்வளவு தான்.”
“ஏங்க்கா நெகடிவாவே பேசறீங்க. நல்லது நடக்கும்னு நினைக்காம”
“நாலு சமுதாயத்துக்காறங்க கட்டின நாலு கல்யாண மண்டபங்கள் அங்க இருக்கு. கழிப்பிட கட்டிடம் கட்டி இருக்கிறாங்க. இது எல்லாமே அரசிடம் 99 வருஷ லீஸ் எடுத்துதான் பண்ணி இருக்கிறாங்க. இது எல்லாமே இருக்கும் இடம் நீர்ப்பிடிப்பு இருக்கிற இடம்தான். ஆனா கட்டடம் கட்ட இடம் ஒதுக்கி கல்யாண மண்டபங்கள் கட்டி எத்தனையோ வருஷங்கள் ஆச்சு. ஆனா லைப்ரரிக்கு இப்படிதான் பதில் வரும்.”
நூலகரின் முகம் வாடியது.
“சரிம்மா. நல்லது நடந்தா நல்லது தானே. இந்த இடத்தை லைப்ரரிக்கு குடுக்குறோம்னு எழுதி எழுத்து மூலமா குடுத்துட்டாங்கன்னா நமக்கு நல்லதுதான். நீங்க புதுசா வந்திருக்கிறீங்க. உங்களுக்கு நம்பிக்கை இல்லாம பேசக்கூடாது. இருபத்தியாறு வருஷமா இப்படி நடக்கிறதுனால சொல்லறேன். நீங்க வந்த கொஞ்ச நாள்ல இப்படி நடக்குறத பாக்கறீங்க தானே. சரிசரி நீங்க வருத்தப் படாதீங்க.”
இன்னும் வாயைத் திறக்காமல் சோகமாக சுரேகாவைப் பார்த்தாள்.
“பாருங்கம்மா. எத்தனையோ பிரச்சினைகள், உயிர் போகிற பிரச்சினைகள், போராட்டங்களை அரசு கண்டுக்காம இருக்கு, முதல் அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை. கட்சி ஸ்திரமா இருக்க அரசாங்கத்துல போராடிக்கிட்டு இருக்கிறாங்க. மக்களின் உயிர் ஆதாரப் பிரச்சினைகளையே கண்டுக்காம கடந்து போறாங்க. இதில் நம்ம லைப்ரரி விஷயத்தில் என்ன வருமானம் இருக்குதுன்னு அவங்களுக்கு அக்கறை இருக்கும். நம்மால சில லட்சங்களையாச்சும் புரட்டி அவங்களுக்கு கொடுத்து வேலை செய்யற நிலையில் இருக்கிறோமா. சரி சரி நான் மீதி வேலைகளை முடிக்கிறேன். நீங்க சர்வே பண்ண அந்த அம்மா வந்ததும் போன் பண்ணுங்க. நான் மாரியம்மன் கோயிலுக்கு வந்துடறேன்” என்று சுரேகா கூறியதும்,
“சரிக்கா” என்று காலையில் வரும்போதிருந்த உற்சாகம் குறைந்து சோர்வுடன் பதில் அளித்தாள். கிளம்பிய சுரேகாவை நிறுத்தி,
“அக்கா. சொல்ல மறந்துட்டேன். ரெண்டு விஷயம் சொல்லணும். விருதுநகர் லைப்ரரியில் இருந்து மாவட்ட அளவுல கட்டுரைப் போட்டி நடத்தினாங்கள்ல. நம்ம லைப்ரரியில இருந்து எழுதின ரெண்டு குழந்தைங்களுக்கு பரிசு கிடைச்சிருக்குக்கா. அதை தனியா ஒரு நாள் எல்லார் முன்னாடியும் சொல்லி பரிசா கொடுக்கலாம்.”
“ரொம்ப நல்ல விஷயம். அடுத்த வாரம் இதை செஞ்சுடலாம்.”
“நீங்க இத்தனை புஸ்தகம் வாசிக்கிறீங்க. வாசிச்ச புஸ்தகங்களைப் பத்தி வாசகர் வட்டத்துல பேசறீங்க. ஏன்க்கா எழுத மாட்டேங்கறீங்க”
“இந்த லைப்ரரி ஆரம்பிச்சதிலிருந்து இப்ப வரைக்கும் இங்க இருக்கிற, அப்புறம் நான் தனியா வாங்கி வாசிச்சது மட்டும் ஆறாயிரம் புஸ்தகங்களுக்கு மேல இருக்கும். ஒவ்வொண்ணும் எனக்கு பிடிச்சு வாசிச்ச புஸ்தகங்கள். எல்லாத்தையும் எழுத முடியல. நேரம் இருக்கிறப்போ எழுதப் பார்க்கிறேன். சரி இன்னொரு விஷயம் ன்னு சொன்னீங்களே. அது என்ன சொல்லுங்க”
“அப்புறம் வந்து… இன்னொன்னு நம்ம சரளா பொண்ணு யாரையோ லவ் பண்ணிட்டு வீட்டை விட்டு போச்சுல்ல. அவளைத் தேடிட்டுப் போயி கண்டுபுடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்கள்ல, அந்தப் பொண்ணு மருந்து குடிச்சிடுச்சுக்கா”
சுரேகா பதிலேதும் பேசவில்லை. லைப்ரரியை விட்டு வெளியே வந்தாள். வெயில் நேரடியாக மேலே படுவது கூட அவளுக்கு எந்த பாதிப்பையும் தந்ததாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
இப்படியான மரணங்கள் அவளை வெகுவாக பாதிக்கின்றன. சமூகம் நிர்ப்பந்தம் தருவது. இதை எப்படி எதிர்கொள்ளணும் என்பதை இளய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கும் எந்த வழியும் இல்லை. ஒன்று அவர்களே இப்படி முடிவுக்கு வருகிறார்கள். அல்லது பெற்றோரோ சமுதாயமோ அதைச் செய்துவிடுகின்றனர். இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு இல்லையோ… கற்காலத்தில்தான் இருக்கிறோமா?
யாரையும் தப்ப விடுவதில்லை மரணம். மரணத்தை மனிதனாகத் தேடிப் போக வேண்டிய தேவையும் இல்லை. தானாகவே வர வேண்டிய நேரத்தில் யார் தடுத்தாலும் நில்லாது வந்து எதிர் நிற்கும் உடன் அழைத்துச் செல்ல. நமக்கான ஒரே தீர்வு புன்னகையோடு அதை எதிர் கொள்வது மட்டுமே.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
திருக்குர்ஆன் 63:10
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
திருக்குர்ஆன் 3:185
எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதி இருந்தார்.
எங்கள் ஊரில் நான் சிறுவனாயிருந்த போது மரத்தினடியில் மாடு கட்டுபவர்கள் முளைக்குச்சி அடித்து அதில்தான் மாடுகளை கட்ட வேண்டும்.மரத்தின் வேரில் கட்டினால் அபராதம். ஆடுமேய்ப்பவர்கள் துரட்டிக்கம்பால் மரக்கொப்புகளை வளைத்து சவட்டி ஆடுகளை திங்க விடலாம். மரக்கொப்புக்களை துண்டாக வெட்டி விட்டால் அபராதம்.
நீர் நிலைகளைச் சேதப்படுத்தினால் ஊரைவிட்டே விளக்கி வைக்கப்படுவார்கள். கண்மாய்கரைகளில் புதர்களில் தேன் எடுக்க, முள்புதர்களை சேதப்படுத்தினால் அபராதம். படிப்பறிவில்லாத வேளாண் தொழில் செய்த சம்சாரிகள் இப்படியெல்லாம் நீர் நிலைகளை பாதுகாத்தார்கள். 1947ல் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்த போது 39632 கண்மாய்களையும் சேர்த்துதான் கொடுத்தான். இவற்றில் பாதிக்கு மேல்இப்போது இல்லை. இருப்பவைகள் தூர்வாராமல் பராமரிப்பின்றி மேடேறி புதர்மண்டி கிடக்கின்றன. பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ள நாம் வெட்கப்பட வேண்டாமா?
என்று எழுதி இருந்தார் சோ தர்மன்.
எத்தனை அர்த்தம் பொதிந்தவை. இவற்றையெல்லாம் யார் மாற்றினார்கள். இந்த எழுபது வருடங்களில் இயற்கையில் இருந்து வெகுதூரம் நாம் விலகி வந்திருக்கிறோம் என்பதைத்தான் நாம் யாருமே உணர்ந்து கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது ஏறக்குறைய 18,000 ஏரிகள் தான் இருக்கின்றன. 1947ல் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்த போது 39632 கண்மாய்களைக் காப்பாற்ற எப்படித் தவறினோம்.
முன்பு வெள்ளப் பெருக்கெடுத்தோடும் காலங்களில், மூடி இருக்கும் மடையைத் திறப்பது மிகவும் கடினமான விஷயம். வெள்ளமாகப் பாய்ந்துவரும் நீருக்கு மத்தியில், பல அடி ஆழமான நீருக்குள் மூச்சை அடக்கி மூழ்கி மடையைக் கண்டுபிடித்து திறந்துவிட்டபின் அந்த மடைவழியாய் வெளியேறும் நீரின் அதிவேகமான பாய்ச்சலில் சிக்காமல் மீண்டு மேலெழுந்து வருவது உயிரைப் பணயம் வைக்கும் செயல். அந்தப் பணி செய்பவர்களை அந்தக் காலத்தில் மடையைத் திறப்பவர்கள் என்பதால் ’மடை’ யர்கள் என்பார்கள். இப்போதோ உயிரைப் பணயம் வைக்கும் மடையர்களாக விவசாயிகளும் மீனவர்களும் உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான எந்த அக்கறையும் இன்றி, விவசாயம் செய்ய வேண்டாம் என்னும் நிலைக்குத் தள்ளும் பணியினை அரசாங்கமே செய்கிறது.
எலிக்கறி தின்பதையும் தற்கொலையையும் வாழ்வாகச் செய்தது யார்?