நல்ல பெரிய பதிவு ஸீனா. அதற்கு முதலில் பாராட்டுக்கள்.
பார்கவி தன் மழையடிக்கும் பேச்சால் மனதை அள்ளுறா ஸீனா. அவளையும் கதைக்குள் கொண்டு வந்தாச்சு. சூப்பர்...அவளோட காதல் அதைவிட சூப்பராக இருக்கு.
மித்ரமதி... தொழிலில் புலி அப்பாவின் தோழமையைக் கண்டு பதுங்குகிறாளா? ஹஹஹ...
அந்த கண்டிப்பிலும் பாசம் தான் மறைந்திருக்கிறது.
ரிச்சர்ட் உண்மையில் மயக்குறான். எங்கள் மனதில் இடம்பிடிப்பதில் லியமுக்கு போட்டியாக வருவான் என்று நினைக்கிறேன்.
புதிய கதாபாத்திரம் நந்து ...கார்த்திக் கின் சித்தி பையன். கண்பார்வை படிக்க வந்த இடத்தில் போய் இருக்கு. எப்படி என வரும் பதிவுகளில் அறிய முடியும் என நினைக்கிறேன்.
ஆனாலும் இந்த கார்த்திக் சுத்த மோசம் ஸீனா. இது தெரியாமல் இந்த பொண்ணு காதல் பார்வை பாத்துட்டு சுத்தி சுத்தி வருது இவனை...பாவம் அந்த பொண்ணு...