அத்தியாயம் – 2
எப்பொழுது போலவே வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது அந்த திருச்சி மாநகரம்.. அது ஆசிரியர்கள் குடியிருக்கும் கவர்ன்மெண்ட் குவாட்டர்ஸ்.. அங்கு தங்கி இருப்பவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் தான்..
திருச்சி மாநகரின் பரபரப்பு எல்லாவற்றையும் தன்னுடைய வீட்டின் மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் துகிலன்.. அவனின் மனமோ அந்த விடியலைப் பார்த்து கொண்டிருந்தது..
அவனின் விழிகள் இரண்டும் அந்த விடியலில் இருக்க மனமோ, ‘இந்த அம்மா கொஞ்சம் கூட என்னோட பேச்சைக் கேட்கவே இல்லை.. நான் இப்பொழுது கேட்டேனா எனக்கு திருமணம் பண்ணி வைங்க என்று..?’ என்று மாடியில் இருந்த கைப்பிடி சுவற்றின் மீது சாய்ந்து நின்றான்..
காலைபொழுது எங்கிருந்த மெல்ல கூவிய குயிலின் ஓசையில் மனதை மெல்ல வருட கண்மூடி அமைதியாக நின்றான்.. அவனுக்கு எப்பொழுதும் காலைபொழுது விடியலை ரசிப்பான்.. இன்றும் அது போல மாடிக்கு வந்தவனின் உள்ளத்தில் தெளிவு இல்லை..
காலையில் எழுந்ததும் குளித்து முடித்து துணியைத் துவைத்து எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்த பூவிழியின் கண்களில் விழுந்தான் துகிலன். அவனைப் பார்த்த பூவிழி, ‘இவன் என்ன இப்படி கண்ணை மூடி நின்று கனவு காண்கிறான்.. அது நல்லது இல்லையே..?!” என்று தன மனதிற்குள் பேசியபடியே அவனைப் பார்த்தாள்..
துகிலனோ அவள் வந்ததையும், அவனைப் பார்த்து நிற்பதையும் உணராமல் அப்படியே கண்மூடி நின்றிருந்தான்.. பூவிழி அவனின் முகத்தை ஆழ்ந்து கவனிக்க அவன் யோசனையில் நின்றிருப்பது அவளுக்கு புரிந்தது.. அவளின் மனமோ, ‘இவனுக்கு என்ன அப்படி ஒரு யோசனை..?’ என்ற நினைவுடன் அவளின் அருகில் சென்றாள்..
அவனின் அருகில் சென்றபிறகும் கூட அவன் கண்மூடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த பூவிழி, ‘இது சரிப்பட்டு வராது..’ என்று மனதிற்குள் சொன்னவள் அவனின் அருகில் சென்று, “துகில்..” என்று அழைக்கவும் விழி திறந்து பூவிழியைப் பார்த்தான்..
அவனின் பார்வையில் ஒரு ஆராய்ச்சி இருப்பதை உணர்ந்தவள், “டேய் என்னடா காலையிலேயே கண்ணை மூடி கனவு கண்டுட்டு இருக்கற..?” என்று கேட்டதும், “எல்லாம் என்னோட தலைவிதி..” என்று எரிச்சலுடன் கூறினான் துகிலன்..
அவனின் குரலில் இருந்த எரிச்சலைக் கண்ட பூவிழியோ, ‘இவனுக்கு என்னதான் ஆச்சு..?’ என்று யோசித்துக்கொண்டே, “டேய் துகில் உனக்கு என்னடா பிரச்சனை..?” என்று நேரடியாக கேட்டதும், “அம்மா எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க.. எனக்கு சுத்தமாக பிடிக்கல..” என்றவன் சலிப்புடன் கூறினான்..
அவன் சொன்னதைக் கேட்ட பூவிழி ஆச்சரியத்தில் கண்கள் இரண்டும் தெறித்து விடும் அளவுக்கு அவனைப் பார்த்தாள்.. துகிலன் மனதில் நினைப்பதையோ தன்னுடைய பிரச்சனை பற்றி யாரிடமும் சொல்லமாட்டான்.. அவனுக்கு இருக்கும் பிரச்சனையை அவனே சமாளிப்பான்.. ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக நடந்தது..
அவனைப் பற்றிய யோசனையில் ஆழந்த பூவிழி கொஞ்சநேரம் சென்றபிறகு, “யாருடா அந்த பொண்ணு..?” என்றவள் சந்தோசத்துடன் கேட்டாள்..
அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்த துகில் கமழினியின் போட்டோவை எடுத்து அவளின் கையில் கொடுக்க அதை அவசரமாக வாங்கிப்பார்த்தவளுக்கு பார்த்தும் கமழினியைப் பிடித்து போனது.. அவளின் அமைதியான முகம் பூவிழியை வெகுவாக கவர்ந்தது..
கமழினியின் முகம் பார்த்த பூவிழி, “துகில் ரொம்ப அமைதியாக இருப்பாள் போலவே..?! ஆனால் ரொம்ப அழகாக இருக்கா..” என்றவள் சொல்ல அலட்சியமாக அவளைப் பார்த்தான் துகிலன்..
அவனின் பார்வையே அவனின் மனதைப் படம் பிடித்து காட்ட, “டேய் துகில் எல்லாவற்றையும் ஒரு அலட்சிய பார்வை பார்க்காதே.. அது உனக்குத்தான் ஆபத்து..” என்று கூறியவளை முறைத்தான் துகிலன்..
அவனின் முறைப்பைக் கண்டுகொள்ளாத பூவிழி, “என்ன முடிவு எடுத்திருக்கிற..?” என்று அவனைப் பார்த்து நேரடியாக தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே கேட்டதும், “ம்ம் எங்க அம்மா சொல்லும் அவளையே திருமணம் செய்யலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன்..” என்று அவனும் தன்னுடைய மனதில் இருப்பதைக் கூறினான்..
அவன் சொன்னதைக் கேட்ட பூவிழி அவனையே பார்க்க அவனின் பார்வையோ எந்தவிதமான ஆர்வமும் இன்றி ஏதோ ஒரு கடமைக்காக சம்மதம் சொன்னது போல இருக்க, ‘இவன் என்ன கடமைக்கு கல்யாணம் பண்ணுகிறானா..?’ என்ற யோசனையுடன் நின்றாள்..
அவளின் மனதில், ‘என்ன எண்ணம் ஓடுகிறது..’ என்று அவளின் மனதை முழுவதும் அறிந்த துகிலன், “கடமைக்காக மட்டும்தான் பூவிழி.. மற்ற எந்த எண்ணமும் எனக்கு இல்ல..” என்றவன் வெடுக்கென்று சொல்ல பூவிழிக்கு தூக்கிவாரிப் போட அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்..
அவன் சொன்னதில் கடமை என்ற வார்த்தை அவளை ரொம்பவே பாதிக்க, “டேய் கடமை என்று சொல்லி ஒரு பெண்ணின் மனத்தைக் கலைக்க நினைக்காதே.. உனக்கு இவள் தான் சரியான ஜோடி அதை முதலில் புரிந்துக்கொள்ள முயற்சி செய்..” என்று கூறியவள் அவனை ஆழ்ந்துப் பார்த்தாள்..
அவனோ, “பூவிழி எப்படி என்னால் மஞ்சரியை மறந்துவிட்டு இவளை நினைக்க முடியும் என்று கொஞ்சமாவது பிராக்டிகலாக யோசி..” என்றவன் சொல்லும் பொழுதே, ‘அவளை பிரிந்து போக இவனால் முடியலையாம்.. திருமணம் வேண்டாம் என்பதற்கு எந்தவொரு ஆணும் இப்படி ஒரு காரணத்தை சொல்லியிருக்கவே மாட்டான்..’ என்று நினைத்தவளுக்கு சிரிப்பு வந்தது..
அவள் சிரிப்பதைப் பார்த்து அவன் கேள்வியாக புருவம் உயர்த்த, “நீ சொன்னதைக் கேட்டு சிரிக்காமல் என்ன பண்ண சொல்கிறாய்..? மஞ்சரியைப் பற்றி நீ கவலைபடாமல் திருமணத்திற்கு ஓகே மட்டும் சொல்லு அவளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தது நான் கரெக்ட் பண்ணிக்கிறேன்..” என்றவள் சிரித்துக்கொண்டே...!
அவள் சொன்னதைக் கேட்டு துகிலனுக்கு கூட சிரிப்பு வந்தது.. துகிலன் சொன்ன மஞ்சரி பக்கத்துவீட்டு நான்கு வயது குட்டிப்பாப்பா.. கொஞ்சநேரம் சிரித்து முடித்தவன், “பூவிழி எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம்..” என்று அவன் சொல்ல அவனின் பார்வையில் ஒரு அலட்சியம் குடிக்கொண்டது..
அவன் சொன்னதைக் கேட்ட பூவிழி, “இங்கே பாரு துகில்.. நீதான் அம்மா இஷ்டத்திற்கு விட்டுவிட்டாய் இல்ல.. அப்புறம் என்ன வேண்டாம்.. இந்த பெண்ணைப் பிடிக்கலையா..?” என்று கேட்டதும், “அது எப்படி பூவிழி உன்னிடம் சொல்ல..? எனக்கு திருமணம் பற்றி எந்த கற்பனையுமே இல்ல..” என்றவன் சலித்தபடியே கூறினான்..
“திருமணம் பற்றிய எந்த கனவும் இல்லையென்றால் கனவை வளர்த்திக்க..” என்று அவள் ஈசியாகக் கூறினாள்.. அவள் அப்படி சொன்னதும், “நான் இப்பொழுத்தான் தொழில் ஆரம்பித்திருக்கிறேன் பூவிழி.. அதில் முன்னேறனும்..” என்றவன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான்..
பிறகு அவனின் முகம் பார்த்த பூவிழி, “உன்னோட மனதில் தொழில் பற்றிய எண்ணம் இருந்தாலும் உன்னை நம்பி இங்கே வரபோவது ஒரு பொண்ணு.. அதை முதலில் நினைவில் வை.. கடமைக்காக எதையும் செய்யாதே.. அது அவளைத்தான் ரொம்ப பாதிக்கும்..” என்று சொல்ல அவள் சொன்னதை எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு அலட்சியமாக நின்றான்..
அவனைப் பார்த்து முறைத்தவள், “டேய் நீயெல்லாம் என்னைக்கு திருந்த போகிறாயோ..? எனக்கு தெரியல..” என்று கூறியவள், “நீ இவ்வளவு அலட்சியமாக இருக்கற.. பாரு மகனே இதோ இவள் பின்னாடி நீ பைத்தியமாக திரிய போகிறாய் பாரு..” என்று அவள் கமழினியின் போட்டோவைக் காட்டி பூவிழி கூறினாள்..
அவள் அப்படி சொன்னதும், “அதை நடக்கும் பொழுது பார்க்கலாம்.. இப்பொழுது எனக்கு இந்த திருமணம் வேண்டாம்..” என்றவன் அழுத்தமாகச் சொல்ல அவனை ஆழ்ந்துப் பார்த்த பூவிழிக்கு ஒரு விஷயம் மட்டும் சுத்தமாகவே புரியவில்லை..
இதுதான் துகிலன் எதைபற்றியும் அப்பொழுதே கவலைப்படவே மாட்டான்.. அது நடக்கும் பொழுது அதற்கு ஏற்றார்போல நடந்துக் கொள்வான்.. அவனுக்கு தொழில் மட்டும் முக்கியம்.. அதில் அலட்சியமாக இருக்க மாட்டான்..
‘இவனுக்கு திருமணம் ஏன் பிடிக்கல.. இவனோட மனதில் யாராச்சும் இருக்காங்களோ..?’ என்று தனது மனதில் கேள்வி எழுந்த மறுநொடியே, “டேய் உன்னோட மனசில் வேற பொண்ணு யாராவது இருக்காங்களா..?” என்று சந்தேகப் பார்வைப் பார்த்தாள்..
அவளின் பார்வையை உணர்ந்த துகிலன், “ம்ம் என்னோட மனதில் ஒரு இருபது பொண்ணுங்க இருக்காங்க பூவிழி..” என்று வெகு சீரியஸாக சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு கோபம் வந்ததும், “நீயெல்லாம் உருப்படவே மாட்ட..” என்றவள் தலையில் அடித்துக்கொள்ள சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு அகன்றான் துகிலன்..
எப்பொழுது போலவே வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது அந்த திருச்சி மாநகரம்.. அது ஆசிரியர்கள் குடியிருக்கும் கவர்ன்மெண்ட் குவாட்டர்ஸ்.. அங்கு தங்கி இருப்பவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் தான்..
திருச்சி மாநகரின் பரபரப்பு எல்லாவற்றையும் தன்னுடைய வீட்டின் மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் துகிலன்.. அவனின் மனமோ அந்த விடியலைப் பார்த்து கொண்டிருந்தது..
அவனின் விழிகள் இரண்டும் அந்த விடியலில் இருக்க மனமோ, ‘இந்த அம்மா கொஞ்சம் கூட என்னோட பேச்சைக் கேட்கவே இல்லை.. நான் இப்பொழுது கேட்டேனா எனக்கு திருமணம் பண்ணி வைங்க என்று..?’ என்று மாடியில் இருந்த கைப்பிடி சுவற்றின் மீது சாய்ந்து நின்றான்..
காலைபொழுது எங்கிருந்த மெல்ல கூவிய குயிலின் ஓசையில் மனதை மெல்ல வருட கண்மூடி அமைதியாக நின்றான்.. அவனுக்கு எப்பொழுதும் காலைபொழுது விடியலை ரசிப்பான்.. இன்றும் அது போல மாடிக்கு வந்தவனின் உள்ளத்தில் தெளிவு இல்லை..
காலையில் எழுந்ததும் குளித்து முடித்து துணியைத் துவைத்து எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்த பூவிழியின் கண்களில் விழுந்தான் துகிலன். அவனைப் பார்த்த பூவிழி, ‘இவன் என்ன இப்படி கண்ணை மூடி நின்று கனவு காண்கிறான்.. அது நல்லது இல்லையே..?!” என்று தன மனதிற்குள் பேசியபடியே அவனைப் பார்த்தாள்..
துகிலனோ அவள் வந்ததையும், அவனைப் பார்த்து நிற்பதையும் உணராமல் அப்படியே கண்மூடி நின்றிருந்தான்.. பூவிழி அவனின் முகத்தை ஆழ்ந்து கவனிக்க அவன் யோசனையில் நின்றிருப்பது அவளுக்கு புரிந்தது.. அவளின் மனமோ, ‘இவனுக்கு என்ன அப்படி ஒரு யோசனை..?’ என்ற நினைவுடன் அவளின் அருகில் சென்றாள்..
அவனின் அருகில் சென்றபிறகும் கூட அவன் கண்மூடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த பூவிழி, ‘இது சரிப்பட்டு வராது..’ என்று மனதிற்குள் சொன்னவள் அவனின் அருகில் சென்று, “துகில்..” என்று அழைக்கவும் விழி திறந்து பூவிழியைப் பார்த்தான்..
அவனின் பார்வையில் ஒரு ஆராய்ச்சி இருப்பதை உணர்ந்தவள், “டேய் என்னடா காலையிலேயே கண்ணை மூடி கனவு கண்டுட்டு இருக்கற..?” என்று கேட்டதும், “எல்லாம் என்னோட தலைவிதி..” என்று எரிச்சலுடன் கூறினான் துகிலன்..
அவனின் குரலில் இருந்த எரிச்சலைக் கண்ட பூவிழியோ, ‘இவனுக்கு என்னதான் ஆச்சு..?’ என்று யோசித்துக்கொண்டே, “டேய் துகில் உனக்கு என்னடா பிரச்சனை..?” என்று நேரடியாக கேட்டதும், “அம்மா எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க.. எனக்கு சுத்தமாக பிடிக்கல..” என்றவன் சலிப்புடன் கூறினான்..
அவன் சொன்னதைக் கேட்ட பூவிழி ஆச்சரியத்தில் கண்கள் இரண்டும் தெறித்து விடும் அளவுக்கு அவனைப் பார்த்தாள்.. துகிலன் மனதில் நினைப்பதையோ தன்னுடைய பிரச்சனை பற்றி யாரிடமும் சொல்லமாட்டான்.. அவனுக்கு இருக்கும் பிரச்சனையை அவனே சமாளிப்பான்.. ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக நடந்தது..
அவனைப் பற்றிய யோசனையில் ஆழந்த பூவிழி கொஞ்சநேரம் சென்றபிறகு, “யாருடா அந்த பொண்ணு..?” என்றவள் சந்தோசத்துடன் கேட்டாள்..
அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்த துகில் கமழினியின் போட்டோவை எடுத்து அவளின் கையில் கொடுக்க அதை அவசரமாக வாங்கிப்பார்த்தவளுக்கு பார்த்தும் கமழினியைப் பிடித்து போனது.. அவளின் அமைதியான முகம் பூவிழியை வெகுவாக கவர்ந்தது..
கமழினியின் முகம் பார்த்த பூவிழி, “துகில் ரொம்ப அமைதியாக இருப்பாள் போலவே..?! ஆனால் ரொம்ப அழகாக இருக்கா..” என்றவள் சொல்ல அலட்சியமாக அவளைப் பார்த்தான் துகிலன்..
அவனின் பார்வையே அவனின் மனதைப் படம் பிடித்து காட்ட, “டேய் துகில் எல்லாவற்றையும் ஒரு அலட்சிய பார்வை பார்க்காதே.. அது உனக்குத்தான் ஆபத்து..” என்று கூறியவளை முறைத்தான் துகிலன்..
அவனின் முறைப்பைக் கண்டுகொள்ளாத பூவிழி, “என்ன முடிவு எடுத்திருக்கிற..?” என்று அவனைப் பார்த்து நேரடியாக தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே கேட்டதும், “ம்ம் எங்க அம்மா சொல்லும் அவளையே திருமணம் செய்யலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன்..” என்று அவனும் தன்னுடைய மனதில் இருப்பதைக் கூறினான்..
அவன் சொன்னதைக் கேட்ட பூவிழி அவனையே பார்க்க அவனின் பார்வையோ எந்தவிதமான ஆர்வமும் இன்றி ஏதோ ஒரு கடமைக்காக சம்மதம் சொன்னது போல இருக்க, ‘இவன் என்ன கடமைக்கு கல்யாணம் பண்ணுகிறானா..?’ என்ற யோசனையுடன் நின்றாள்..
அவளின் மனதில், ‘என்ன எண்ணம் ஓடுகிறது..’ என்று அவளின் மனதை முழுவதும் அறிந்த துகிலன், “கடமைக்காக மட்டும்தான் பூவிழி.. மற்ற எந்த எண்ணமும் எனக்கு இல்ல..” என்றவன் வெடுக்கென்று சொல்ல பூவிழிக்கு தூக்கிவாரிப் போட அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்..
அவன் சொன்னதில் கடமை என்ற வார்த்தை அவளை ரொம்பவே பாதிக்க, “டேய் கடமை என்று சொல்லி ஒரு பெண்ணின் மனத்தைக் கலைக்க நினைக்காதே.. உனக்கு இவள் தான் சரியான ஜோடி அதை முதலில் புரிந்துக்கொள்ள முயற்சி செய்..” என்று கூறியவள் அவனை ஆழ்ந்துப் பார்த்தாள்..
அவனோ, “பூவிழி எப்படி என்னால் மஞ்சரியை மறந்துவிட்டு இவளை நினைக்க முடியும் என்று கொஞ்சமாவது பிராக்டிகலாக யோசி..” என்றவன் சொல்லும் பொழுதே, ‘அவளை பிரிந்து போக இவனால் முடியலையாம்.. திருமணம் வேண்டாம் என்பதற்கு எந்தவொரு ஆணும் இப்படி ஒரு காரணத்தை சொல்லியிருக்கவே மாட்டான்..’ என்று நினைத்தவளுக்கு சிரிப்பு வந்தது..
அவள் சிரிப்பதைப் பார்த்து அவன் கேள்வியாக புருவம் உயர்த்த, “நீ சொன்னதைக் கேட்டு சிரிக்காமல் என்ன பண்ண சொல்கிறாய்..? மஞ்சரியைப் பற்றி நீ கவலைபடாமல் திருமணத்திற்கு ஓகே மட்டும் சொல்லு அவளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தது நான் கரெக்ட் பண்ணிக்கிறேன்..” என்றவள் சிரித்துக்கொண்டே...!
அவள் சொன்னதைக் கேட்டு துகிலனுக்கு கூட சிரிப்பு வந்தது.. துகிலன் சொன்ன மஞ்சரி பக்கத்துவீட்டு நான்கு வயது குட்டிப்பாப்பா.. கொஞ்சநேரம் சிரித்து முடித்தவன், “பூவிழி எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம்..” என்று அவன் சொல்ல அவனின் பார்வையில் ஒரு அலட்சியம் குடிக்கொண்டது..
அவன் சொன்னதைக் கேட்ட பூவிழி, “இங்கே பாரு துகில்.. நீதான் அம்மா இஷ்டத்திற்கு விட்டுவிட்டாய் இல்ல.. அப்புறம் என்ன வேண்டாம்.. இந்த பெண்ணைப் பிடிக்கலையா..?” என்று கேட்டதும், “அது எப்படி பூவிழி உன்னிடம் சொல்ல..? எனக்கு திருமணம் பற்றி எந்த கற்பனையுமே இல்ல..” என்றவன் சலித்தபடியே கூறினான்..
“திருமணம் பற்றிய எந்த கனவும் இல்லையென்றால் கனவை வளர்த்திக்க..” என்று அவள் ஈசியாகக் கூறினாள்.. அவள் அப்படி சொன்னதும், “நான் இப்பொழுத்தான் தொழில் ஆரம்பித்திருக்கிறேன் பூவிழி.. அதில் முன்னேறனும்..” என்றவன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான்..
பிறகு அவனின் முகம் பார்த்த பூவிழி, “உன்னோட மனதில் தொழில் பற்றிய எண்ணம் இருந்தாலும் உன்னை நம்பி இங்கே வரபோவது ஒரு பொண்ணு.. அதை முதலில் நினைவில் வை.. கடமைக்காக எதையும் செய்யாதே.. அது அவளைத்தான் ரொம்ப பாதிக்கும்..” என்று சொல்ல அவள் சொன்னதை எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு அலட்சியமாக நின்றான்..
அவனைப் பார்த்து முறைத்தவள், “டேய் நீயெல்லாம் என்னைக்கு திருந்த போகிறாயோ..? எனக்கு தெரியல..” என்று கூறியவள், “நீ இவ்வளவு அலட்சியமாக இருக்கற.. பாரு மகனே இதோ இவள் பின்னாடி நீ பைத்தியமாக திரிய போகிறாய் பாரு..” என்று அவள் கமழினியின் போட்டோவைக் காட்டி பூவிழி கூறினாள்..
அவள் அப்படி சொன்னதும், “அதை நடக்கும் பொழுது பார்க்கலாம்.. இப்பொழுது எனக்கு இந்த திருமணம் வேண்டாம்..” என்றவன் அழுத்தமாகச் சொல்ல அவனை ஆழ்ந்துப் பார்த்த பூவிழிக்கு ஒரு விஷயம் மட்டும் சுத்தமாகவே புரியவில்லை..
இதுதான் துகிலன் எதைபற்றியும் அப்பொழுதே கவலைப்படவே மாட்டான்.. அது நடக்கும் பொழுது அதற்கு ஏற்றார்போல நடந்துக் கொள்வான்.. அவனுக்கு தொழில் மட்டும் முக்கியம்.. அதில் அலட்சியமாக இருக்க மாட்டான்..
‘இவனுக்கு திருமணம் ஏன் பிடிக்கல.. இவனோட மனதில் யாராச்சும் இருக்காங்களோ..?’ என்று தனது மனதில் கேள்வி எழுந்த மறுநொடியே, “டேய் உன்னோட மனசில் வேற பொண்ணு யாராவது இருக்காங்களா..?” என்று சந்தேகப் பார்வைப் பார்த்தாள்..
அவளின் பார்வையை உணர்ந்த துகிலன், “ம்ம் என்னோட மனதில் ஒரு இருபது பொண்ணுங்க இருக்காங்க பூவிழி..” என்று வெகு சீரியஸாக சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு கோபம் வந்ததும், “நீயெல்லாம் உருப்படவே மாட்ட..” என்றவள் தலையில் அடித்துக்கொள்ள சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு அகன்றான் துகிலன்..