அத்தியாயம் – 21
கல்லூரி இல்லையென்றதும் கடற்கரைக்கு வந்த கமழினியின் மனம் ஆள் ஆரவாரம் இல்லாத இடத்தை நோக்கி செல்ல தூண்டியதும் கடலை வேடிக்கைப் பார்த்தபடியே மெல்ல மணலில் நடந்தாள் கமழினி..
அவளின் மனம் ஆழ்ந்த யோசனையில் இருந்தது.. கால்கள் தன்போக்குள் செல்ல மணலில் கால் புதைய நடந்தவளின் காதுகளில் விழுந்தது கடலலையின் ஆர்ப்பரிக்கும் சத்தம்.. அந்த சத்தம் எல்லாம் அவளின் கவனத்தை கொஞ்சம் கூட கலைக்கவே இல்லை..
‘நான் முதல் நாள் பார்த்த துகிலனுக்கும், இப்போ நேற்றில் இருந்து நான் பார்க்கும் துகிலனுக்கும் ஆயிரம் வித்தியாசம்..? இவனின் நிஜமுகம் இதுதானா..?’ என்ற கேள்வி அவளின் மனதில் எழுந்தது.. அவனின் மனம் மனதில் தோன்றிய மறுநொடியே பூவிழியின் நினைவும் வந்தது..
அவளின் நினைவு வந்த மறுநொடி, ‘அக்கா ஏன் நேற்று சரியாவே பதில் சொல்லல..? அவளோட பதில் எதுவுமே நம்பும்படி இல்லையே..?!’ என்ற யோசனையில் நடந்தவள் ஆள்ஆரவாரம் இல்லாத இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்.. அப்படியே மணலில் அமர்ந்தவளின் சிந்தனை மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றது..
அவளின் மனம் என்னதான் சிந்தனை செய்தாலும் அவளின் விபத்து எங்கே எப்படி நேர்ந்தது என்ற கேள்விக்கு மட்டும் அவளுக்கு விடையே தெரியாமல் மீண்டும் மீண்டும் யோசித்தாள்..
துகிலனின் இந்த மனமாற்றம், பூவிழி துகிலனின் நட்பு, வசந்த் மற்றும் துகிலனின் சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் தனித்தனியாக நிற்க அதை யோசிக்க ஆரம்பித்தவளின் தலையே வெடிப்பது போல இருக்க தன்னுடைய தலையை இரண்டு கைகளில் தங்கியபடியே அமர்ந்தாள்..
மணலில் அமர்ந்த கமழினி பிறகு ஏதோ எண்ணம் தோன்ற தன்னுடைய பேக்கை திறந்து அதில் இருந்த போட்டோ ஆல்பத்தை கையில் எடுத்தாள்.. அவளின் விழிகள் இரண்டும் தன்னுடைய கையில் இருந்த போட்டோ ஆல்பத்தில் இருந்தது..
அவளின் மனம் முழுவதும் பலவகையான குழப்பங்கள்... அந்த ஆல்பம் அவளின் சிந்தனையைத் தூண்டியது... ‘யாரும் இல்லாத இடத்திற்கு செல்ல வேண்டும்..’ என்று நடந்தவளின் கவனம் முழுக்க ஆல்பத்தில் இருந்ததால், ‘கடற்கரையில் யார் யார் இருக்காங்க..? என்ன நடக்கிறது..?’ என்ற சிந்தனை இன்றி நடந்தவள் யாரும் இல்லாத ஒரு இடத்தில் வந்து அமர்ந்தாள்..
அவளின் கைகள் தானாகவே ஆல்பத்தைப் புரட்ட அதில் இருந்த சில புகைப்படங்கள் அவளின் மனதில் குழப்பத்தை உண்டாக்கியது.. சிலது அவளின் எண்ணத்தை தூண்டியது.. சிலது அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது..
அந்த போட்டோகளைப் பார்க்க பார்க்க அவளின் விழிகள் இரண்டும் விரிந்தது.. எந்த அளவிற்கு அவளுக்கு ஆச்சர்யமாக இருந்ததோ அதே அளவு அவளின் மனதில் ஆயிரம் கேள்விகள் படையெடுத்தது..
அவளின் கைகள் தானாக எழுந்து அந்த போட்டோகளை வருடியது.. அவளின் கண்களில் குழப்பத்தை மீறிய ஒரு சிந்தனை.. அந்த சிந்தனைக்கு காரணம் எல்லாம் அந்த ஒரு போட்டோ மட்டுமே.. அந்த போட்டோவில் துகிலனும், வசந்த்தும் கடற்கரையில் சிரித்த வண்ணம் அருகருகே அமர்ந்திருந்ததுதான்..
அதை பார்த்த கமழினி அடுத்த போட்டோவைப் பார்க்க அதில் புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்த துகிலனின் தோளில் சாய்ந்திருந்த கமழினியின் முகத்தை அழகாக போட்டோ எடுத்திருந்தனர்..
அதையெல்லாம் பார்த்த கமழினி, “துகிலனுக்கு ஏற்கனவே என்னை தெரியுமா..?” என்று தனக்குதானே கேட்டுக் கொண்டாள்..
அந்த கேள்விக்கு பதிலாக அவளின் புன்னகை முகமே அவளின் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த அவளின் மனம் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பிக்க அவளின் ஆழ்மனம் மெல்ல மெல்ல தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு அவளை இழுக்க அவளோ அந்த கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் அதனிடமிருந்து தப்பிக்க போராடினாள்..
நாம் காண்பது எல்லாம் கண்ணின் வழியாக பதிவு செய்யபட்டு அது நினைவுகளாக மூளையில் சேமிக்கிறது.. அந்த நினைவுகளை சேமிக்கும் அடுக்குகளுக்கும் மனதிற்குள் சில ஒற்றுமைகள் உண்டு.. அதாவது மனம் எதை எல்லாம் வேண்டாம் என்று ஒதிக்கி வைக்கிறதோ அந்த நினைவுகளை எல்லாம் ஒதுக்கு வைத்துவிடும்..
இந்த ஒற்றுமைதான் சில இடங்களில் நாம் பார்க்கும் காட்சிகள், ‘இதை நான் எங்கோ பார்த்த நினைவு..’ என்று யோசிப்போம் இதற்கு எல்லாம் நமது நினைவு அலைகள் தான் காரணம்.. தான் சேமிக்கும் நினைவுகளை தேவை இல்லையென்று ஒதுக்கினால் அது அந்த நினைவுகளை ஒதுக்கு வைத்துவிடும்..
மீண்டும் நாம் ஆழ்ந்து சிந்திக்கும் வேலையில் மனதிற்கும், மூளைக்கும் பெரிய போராட்டம் நடக்கும்.. அந்த போராட்டத்தில் தான் இப்பொழுது சிக்கி இருக்கிறாள் கமழினி.. அவள் சிந்தனை செய்ய செய்ய அவளின் நினைவுகள் மீண்டும் உயிர்பெற்று மனதின் அடியாழத்தில் இருந்து எழுகிறது..
அவளின் நினைவுகளுக்கு மூளை உயிர் கொடுக்க நினைக்கும் பொழுது அவளின் மனம் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது.. அதுதான் அவளுக்குள் பெரிய பிரளயமே நடந்துக் கொண்டிருந்தது.. சிந்தனையை மீண்டும் திசை திருப்ப கவனத்தை ஆல்பத்தில் செலுத்தினாள் கமழினி..
அவளின் மனம் அடுத்த போட்டோவைப் பார்க்க அதில் துகிலன் வசந்தின் தோளில் கைபோட்ட வண்ணம் அமர்ந்திருக்க இருவரின் முகத்திலும் புன்னகை அழகாக அரும்பியிருக்க அதை போட்டோ எடுத்து வைத்திருந்தனர்..
‘இவங்க இருவரும் நண்பர்கள் போல இருக்காங்க..? ஆனால் ஏன் என்னிடம் நடிக்கிறாங்க..? அதுவும் ஒரு பக்கம் உயிர் நண்பன் வசந்த்.. இன்னொரு பக்கம் கட்டிய கணவன் துகிலன்..’ என்று அவளின் மனம் எங்கெங்கோ சென்றது.. ஆனால் அதற்கு விடை மட்டும் கிடைக்கவே இல்லை..
இப்படி வரிசையாக ஆல்பத்தில் உள்ள போட்டோவைப் பார்த்துக் கொண்டே வந்த கமழினி ஆல்பத்தை மூடி வைக்கும் பொழுது அவளின் புருவங்கள் இரண்டும் சிந்தனையில் சுருங்கி இருந்தது.. அவள் நிமிர்ந்து கடலைப் பார்த்தாள்..
காலை வெயிலில் அலையலையாய் ஆர்ப்பரித்த கடலின் அலைகளைப் பார்த்தவளின் மனதில் கேள்விகள் அணிவகுத்து நின்றது.. ‘வசந்த் ஏன் என்னிடம் உண்மையை மறைத்தான்.. இந்த திருமணம் ஏன் நடந்தது..?’ என்று சிந்தனை திருமணத்தின் பக்கம் திரும்பியது..
அப்பொழுது அவளின் மனம் அந்த ஆல்பத்தில் பார்த்த தன்னுடைய போட்டோவை சுட்டிக்காட்ட, ‘நான் துகிலனை காதலித்தேனா..? அதைதான் பெண்பார்க்க வந்த அன்று சொன்னானா..?’ என்று தனக்குள் கேள்விகளைத் தொடுத்தாள்..
‘நீ விரும்பாமல் தான் அவனை திருச்சியில் இருந்து கன்னியாகுமரி அழைத்து வந்தாயா..?’ என்று அவளின் மனமே அவளை கேள்வி கேட்டது.. ஆனால் அந்த கேள்விக்கு அவளிடம் பதிலில்லை..
அதைப் பார்த்த அவளின் மனம், ‘நீ நிஜமாகவே அவனை உயிருக்கு உயிராக விரும்பினாய்..’ என்று சொல்லவும் அவளின் கைகள் மீண்டும் அந்த ஆல்பத்தைத் திறந்து அந்த போட்டோவைப் பார்த்தாள்.. அந்த போட்டோவைப் பார்த்தவளின் விழிகள் அதை ஆழ்ந்து ரசித்தது...
எப்பொழுதும் போலவே முழு கம்பீரத்துடன் மணலில் அமர்ந்திருந்த துகிலனின் முகம் முழுவதும் சந்தோஷமாக அமர்ந்திருந்த துகிலனின் தோளில் கொடி போல சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த தன்னை அவளின் கைகள் ஆசையோடு வருடியது..
‘இது எல்லாம் உண்மை என்றால் இவங்க எல்லாம் ஏன் என்னிடம் மறைக்கணும்..? துகில் என்னை விரும்பி இருக்கிறான் என்றால் அவன் என்னிடம் உண்மைச் சொல்ல வேண்டியதுதானே..?’ என்றவள் யோசிக்க அவளின் சிந்தனைக்குள் வந்தான் வசந்த்..!
‘சரி அப்படியே இருந்தாலும் வசந்த் என்னிடம் உண்மையச் சொல்ல வேண்டியதுதானே..? இவன் எதற்கு என்னிடம் உண்மையை மறக்கிறான்..?’ என்று யோசிக்க தன்னுடைய உடல்நிலை பற்றிய சிந்தனையே அவளுக்கு வரவில்லை..
அவளைப் பொறுத்தவரையில் அவள் கண்விழித்து பார்க்கும் பொழுது அவளின் சிந்தனையில் இருந்தது எல்லாமே வசந்த் மட்டுமே.. அவளுக்கு அடிப்பட்டு விட்டது என்று மட்டும் சொன்னார்களே தவிர, அது எங்கே எப்படி நடந்தது இது எதுவும் அவளுக்கு தெரியாது.. அவள் கேட்கவும் இல்லை.. அவர்கள் சொல்லவும் இல்லை..
கல்லூரி இல்லையென்றதும் கடற்கரைக்கு வந்த கமழினியின் மனம் ஆள் ஆரவாரம் இல்லாத இடத்தை நோக்கி செல்ல தூண்டியதும் கடலை வேடிக்கைப் பார்த்தபடியே மெல்ல மணலில் நடந்தாள் கமழினி..
அவளின் மனம் ஆழ்ந்த யோசனையில் இருந்தது.. கால்கள் தன்போக்குள் செல்ல மணலில் கால் புதைய நடந்தவளின் காதுகளில் விழுந்தது கடலலையின் ஆர்ப்பரிக்கும் சத்தம்.. அந்த சத்தம் எல்லாம் அவளின் கவனத்தை கொஞ்சம் கூட கலைக்கவே இல்லை..
‘நான் முதல் நாள் பார்த்த துகிலனுக்கும், இப்போ நேற்றில் இருந்து நான் பார்க்கும் துகிலனுக்கும் ஆயிரம் வித்தியாசம்..? இவனின் நிஜமுகம் இதுதானா..?’ என்ற கேள்வி அவளின் மனதில் எழுந்தது.. அவனின் மனம் மனதில் தோன்றிய மறுநொடியே பூவிழியின் நினைவும் வந்தது..
அவளின் நினைவு வந்த மறுநொடி, ‘அக்கா ஏன் நேற்று சரியாவே பதில் சொல்லல..? அவளோட பதில் எதுவுமே நம்பும்படி இல்லையே..?!’ என்ற யோசனையில் நடந்தவள் ஆள்ஆரவாரம் இல்லாத இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்.. அப்படியே மணலில் அமர்ந்தவளின் சிந்தனை மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றது..
அவளின் மனம் என்னதான் சிந்தனை செய்தாலும் அவளின் விபத்து எங்கே எப்படி நேர்ந்தது என்ற கேள்விக்கு மட்டும் அவளுக்கு விடையே தெரியாமல் மீண்டும் மீண்டும் யோசித்தாள்..
துகிலனின் இந்த மனமாற்றம், பூவிழி துகிலனின் நட்பு, வசந்த் மற்றும் துகிலனின் சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் தனித்தனியாக நிற்க அதை யோசிக்க ஆரம்பித்தவளின் தலையே வெடிப்பது போல இருக்க தன்னுடைய தலையை இரண்டு கைகளில் தங்கியபடியே அமர்ந்தாள்..
மணலில் அமர்ந்த கமழினி பிறகு ஏதோ எண்ணம் தோன்ற தன்னுடைய பேக்கை திறந்து அதில் இருந்த போட்டோ ஆல்பத்தை கையில் எடுத்தாள்.. அவளின் விழிகள் இரண்டும் தன்னுடைய கையில் இருந்த போட்டோ ஆல்பத்தில் இருந்தது..
அவளின் மனம் முழுவதும் பலவகையான குழப்பங்கள்... அந்த ஆல்பம் அவளின் சிந்தனையைத் தூண்டியது... ‘யாரும் இல்லாத இடத்திற்கு செல்ல வேண்டும்..’ என்று நடந்தவளின் கவனம் முழுக்க ஆல்பத்தில் இருந்ததால், ‘கடற்கரையில் யார் யார் இருக்காங்க..? என்ன நடக்கிறது..?’ என்ற சிந்தனை இன்றி நடந்தவள் யாரும் இல்லாத ஒரு இடத்தில் வந்து அமர்ந்தாள்..
அவளின் கைகள் தானாகவே ஆல்பத்தைப் புரட்ட அதில் இருந்த சில புகைப்படங்கள் அவளின் மனதில் குழப்பத்தை உண்டாக்கியது.. சிலது அவளின் எண்ணத்தை தூண்டியது.. சிலது அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது..
அந்த போட்டோகளைப் பார்க்க பார்க்க அவளின் விழிகள் இரண்டும் விரிந்தது.. எந்த அளவிற்கு அவளுக்கு ஆச்சர்யமாக இருந்ததோ அதே அளவு அவளின் மனதில் ஆயிரம் கேள்விகள் படையெடுத்தது..
அவளின் கைகள் தானாக எழுந்து அந்த போட்டோகளை வருடியது.. அவளின் கண்களில் குழப்பத்தை மீறிய ஒரு சிந்தனை.. அந்த சிந்தனைக்கு காரணம் எல்லாம் அந்த ஒரு போட்டோ மட்டுமே.. அந்த போட்டோவில் துகிலனும், வசந்த்தும் கடற்கரையில் சிரித்த வண்ணம் அருகருகே அமர்ந்திருந்ததுதான்..
அதை பார்த்த கமழினி அடுத்த போட்டோவைப் பார்க்க அதில் புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்த துகிலனின் தோளில் சாய்ந்திருந்த கமழினியின் முகத்தை அழகாக போட்டோ எடுத்திருந்தனர்..
அதையெல்லாம் பார்த்த கமழினி, “துகிலனுக்கு ஏற்கனவே என்னை தெரியுமா..?” என்று தனக்குதானே கேட்டுக் கொண்டாள்..
அந்த கேள்விக்கு பதிலாக அவளின் புன்னகை முகமே அவளின் மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த அவளின் மனம் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பிக்க அவளின் ஆழ்மனம் மெல்ல மெல்ல தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு அவளை இழுக்க அவளோ அந்த கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் அதனிடமிருந்து தப்பிக்க போராடினாள்..
நாம் காண்பது எல்லாம் கண்ணின் வழியாக பதிவு செய்யபட்டு அது நினைவுகளாக மூளையில் சேமிக்கிறது.. அந்த நினைவுகளை சேமிக்கும் அடுக்குகளுக்கும் மனதிற்குள் சில ஒற்றுமைகள் உண்டு.. அதாவது மனம் எதை எல்லாம் வேண்டாம் என்று ஒதிக்கி வைக்கிறதோ அந்த நினைவுகளை எல்லாம் ஒதுக்கு வைத்துவிடும்..
இந்த ஒற்றுமைதான் சில இடங்களில் நாம் பார்க்கும் காட்சிகள், ‘இதை நான் எங்கோ பார்த்த நினைவு..’ என்று யோசிப்போம் இதற்கு எல்லாம் நமது நினைவு அலைகள் தான் காரணம்.. தான் சேமிக்கும் நினைவுகளை தேவை இல்லையென்று ஒதுக்கினால் அது அந்த நினைவுகளை ஒதுக்கு வைத்துவிடும்..
மீண்டும் நாம் ஆழ்ந்து சிந்திக்கும் வேலையில் மனதிற்கும், மூளைக்கும் பெரிய போராட்டம் நடக்கும்.. அந்த போராட்டத்தில் தான் இப்பொழுது சிக்கி இருக்கிறாள் கமழினி.. அவள் சிந்தனை செய்ய செய்ய அவளின் நினைவுகள் மீண்டும் உயிர்பெற்று மனதின் அடியாழத்தில் இருந்து எழுகிறது..
அவளின் நினைவுகளுக்கு மூளை உயிர் கொடுக்க நினைக்கும் பொழுது அவளின் மனம் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது.. அதுதான் அவளுக்குள் பெரிய பிரளயமே நடந்துக் கொண்டிருந்தது.. சிந்தனையை மீண்டும் திசை திருப்ப கவனத்தை ஆல்பத்தில் செலுத்தினாள் கமழினி..
அவளின் மனம் அடுத்த போட்டோவைப் பார்க்க அதில் துகிலன் வசந்தின் தோளில் கைபோட்ட வண்ணம் அமர்ந்திருக்க இருவரின் முகத்திலும் புன்னகை அழகாக அரும்பியிருக்க அதை போட்டோ எடுத்து வைத்திருந்தனர்..
‘இவங்க இருவரும் நண்பர்கள் போல இருக்காங்க..? ஆனால் ஏன் என்னிடம் நடிக்கிறாங்க..? அதுவும் ஒரு பக்கம் உயிர் நண்பன் வசந்த்.. இன்னொரு பக்கம் கட்டிய கணவன் துகிலன்..’ என்று அவளின் மனம் எங்கெங்கோ சென்றது.. ஆனால் அதற்கு விடை மட்டும் கிடைக்கவே இல்லை..
இப்படி வரிசையாக ஆல்பத்தில் உள்ள போட்டோவைப் பார்த்துக் கொண்டே வந்த கமழினி ஆல்பத்தை மூடி வைக்கும் பொழுது அவளின் புருவங்கள் இரண்டும் சிந்தனையில் சுருங்கி இருந்தது.. அவள் நிமிர்ந்து கடலைப் பார்த்தாள்..
காலை வெயிலில் அலையலையாய் ஆர்ப்பரித்த கடலின் அலைகளைப் பார்த்தவளின் மனதில் கேள்விகள் அணிவகுத்து நின்றது.. ‘வசந்த் ஏன் என்னிடம் உண்மையை மறைத்தான்.. இந்த திருமணம் ஏன் நடந்தது..?’ என்று சிந்தனை திருமணத்தின் பக்கம் திரும்பியது..
அப்பொழுது அவளின் மனம் அந்த ஆல்பத்தில் பார்த்த தன்னுடைய போட்டோவை சுட்டிக்காட்ட, ‘நான் துகிலனை காதலித்தேனா..? அதைதான் பெண்பார்க்க வந்த அன்று சொன்னானா..?’ என்று தனக்குள் கேள்விகளைத் தொடுத்தாள்..
‘நீ விரும்பாமல் தான் அவனை திருச்சியில் இருந்து கன்னியாகுமரி அழைத்து வந்தாயா..?’ என்று அவளின் மனமே அவளை கேள்வி கேட்டது.. ஆனால் அந்த கேள்விக்கு அவளிடம் பதிலில்லை..
அதைப் பார்த்த அவளின் மனம், ‘நீ நிஜமாகவே அவனை உயிருக்கு உயிராக விரும்பினாய்..’ என்று சொல்லவும் அவளின் கைகள் மீண்டும் அந்த ஆல்பத்தைத் திறந்து அந்த போட்டோவைப் பார்த்தாள்.. அந்த போட்டோவைப் பார்த்தவளின் விழிகள் அதை ஆழ்ந்து ரசித்தது...
எப்பொழுதும் போலவே முழு கம்பீரத்துடன் மணலில் அமர்ந்திருந்த துகிலனின் முகம் முழுவதும் சந்தோஷமாக அமர்ந்திருந்த துகிலனின் தோளில் கொடி போல சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த தன்னை அவளின் கைகள் ஆசையோடு வருடியது..
‘இது எல்லாம் உண்மை என்றால் இவங்க எல்லாம் ஏன் என்னிடம் மறைக்கணும்..? துகில் என்னை விரும்பி இருக்கிறான் என்றால் அவன் என்னிடம் உண்மைச் சொல்ல வேண்டியதுதானே..?’ என்றவள் யோசிக்க அவளின் சிந்தனைக்குள் வந்தான் வசந்த்..!
‘சரி அப்படியே இருந்தாலும் வசந்த் என்னிடம் உண்மையச் சொல்ல வேண்டியதுதானே..? இவன் எதற்கு என்னிடம் உண்மையை மறக்கிறான்..?’ என்று யோசிக்க தன்னுடைய உடல்நிலை பற்றிய சிந்தனையே அவளுக்கு வரவில்லை..
அவளைப் பொறுத்தவரையில் அவள் கண்விழித்து பார்க்கும் பொழுது அவளின் சிந்தனையில் இருந்தது எல்லாமே வசந்த் மட்டுமே.. அவளுக்கு அடிப்பட்டு விட்டது என்று மட்டும் சொன்னார்களே தவிர, அது எங்கே எப்படி நடந்தது இது எதுவும் அவளுக்கு தெரியாது.. அவள் கேட்கவும் இல்லை.. அவர்கள் சொல்லவும் இல்லை..