நான் மீண்டும் வந்துவிட்டேன் தோழிகளே... ஸாரிப்பா ஒருவாரமாக ud கொடுக்க முடியாமல் போச்சு.. நான் உங்க எல்லோரையும் ரொம்பவே மிஸ் பண்ணினேன்.. லேப்டாப் சரி பண்ணிடேன் தோழிகளே.. அது சரியானதும் என்னை தேடிட்டு இருந்தவங்க எல்லோருக்கும் இன்னைக்கு ud உடன் உங்களைக் காண வந்துவிட்டேன்...
அத்தியாயம் – 25
அன்று ரயில் பயணம் ஒருவருக்கு ஒருவர் விடைகொடுத்து அனுப்பிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.. அந்த பிரிவுக்கு பிறகு எல்லோரும் தங்களின் படிப்பில் கவனம் செலுத்தினர்...
வசந்த், கிருஷ்ணா இருவரும் ஒரே கல்லூரி என்பதால் அவர்கள் இருவரும் சந்திக்க அதிகம் வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.. கண்ணன் படிப்பது இன்ஜினியரிங் என்பதால் அவனும் தன்னுடைய படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினான்..
துகிலன் கேட்கவே வேண்டாம் அவனும் படிப்பை தன்னுடைய முழு மூச்சாக எடுத்து படிக்க ஆரம்பித்தான்... கமழினியும் தன்னுடைய படிப்பை தவிர மற்ற எதையும் நினைக்காமல் இருந்தாள்.. நாட்கள் தெளிந்த நீரோடை போலவே சென்றது..
ஆனால் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாற்றங்கள். முதலில் துகிலனிடம் பல மாற்றங்கள். அதில் முதல் மாற்றம் கமழினியின் மனதை கலைக்க நினைக்காத துகிலன் அன்னையை அழைத்துச் சென்று விடுவதோடு சரி மாலை அவரை அழைத்துச் செல்ல வருவதே இல்ல.. அதையெல்லாம் கொஞ்ச நாளாகவே கவனித்த சாரதா அதுபற்றி மகனிடம் கேட்க நினைத்தார்..
மறுநாள் காலையில் எப்பொழுதும் போல எழுந்த துகிலன் குளித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி கீழே வரும் வரையில் சாரதா வெகு அமைதியாக இருந்தார்.. அவரின் முகம் பார்த்து கேள்வியாக இடது புருவம் உயர்த்தினான் துகிலன்..
பிறகு அவன், “அம்மா என்னம்மா ரொம்ப அமைதியாக இருக்கீங்க..?” என்று கேட்டதும் மகனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர், “டேய் துகில் இப்போ எல்லாம் நீ ஏன் ஸ்கூல் பக்கமே வருவது இல்ல..?” என்று குரலில் ஒரு அழுத்தத்துடன் கேட்டார்.. ஆனால் அவரின் முகத்தில் எந்தவிதமான சலனமும் இன்றி சாதாரணமாகவே இருந்தது...
‘இவன் கன்னியாகுமரி போயிட்டு வந்ததில் இருந்தே ஒரு மார்க்கமாகவே இருக்கிறானே..? என்னவாக இருக்கும்..?’ என்று மனதினுள் யோசித்தார் சாரதா.. அவரின் யோசனையில் அவன் நகைக்கடைக்கு சென்று வந்த நாளும் நினைவு வந்தது..
‘எதுவாக இருந்தாலும் அவனே முடிவெடுக்கட்டும்..’ என்று நினைத்தவர் மகனின் முகத்தைப் பார்க்க அவனோ, “அம்மா எனக்கு கொஞ்சம் வேலைகள் இருக்கும்மா.. மாலைநேரம் வருவதற்கு நேரம் இல்லம்மா.. இந்த இயர் பைனல் அதனால் படிக்கவே நேரம் சரியாக இருக்கு..” என்று சொல்ல அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தார்..
அவரின் பார்வைக்கு எதிர்பார்வை பார்த்த துகிலன், “அம்மா நான் எது செய்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும் என்று புரிஞ்சிக்கங்க அம்மா..” என்றவன் சொல்ல, “எதுவாக இருந்தாலும் நல்லதாகவே நடக்கும் துகில்.. கவலைப்படாமல் நீ உன்னோட படிப்பை பாருடா..” என்று மலர்ந்த முகத்துடன் கூறினார்..
அவரின் மலர்ந்த முகமே அவர் தன்னை புரிந்து கொண்டதை உணர்ந்தவன், “தேங்க்ஸ் அம்மா..” என்று சொல்லிவிட்டு சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பிச் சென்றான்.. வீட்டில் இருந்து கிளம்பிச் செல்லும் மகனையே பார்த்தவர், ‘நீ என்னோட மகன்டா நீ யாரோட வாழ்க்கையையும் வீண் பண்ண மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்குடா..’ என்று நினைத்தவர் பள்ளிக்கூடம் கிளம்பிச் சென்றார்..
அன்றிலிருந்து மகனை எதிர்பார்க்காமல் பஸில் வீட்டிற்கு வர ஆரம்பித்தார் சாரதா.. துகிலன் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க, ‘அவனின் மனதில் கமழினியைப் பார்க்க வேண்டும்..’ என்ற எண்ணம் எழுந்தாலும் அவளைப் பார்க்காமல் இருக்க பழகிக்கொண்டான்..
இரண்டாவது மாற்றம் கமழினி. அவளுக்கு இந்த பன்னிரண்டாம் வகுப்பு என்பது துகிலனும், வசந்த்தும் சொன்னதும் போலவே அவளின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்பதால் மிகுந்த கவனத்துடன் படிக்க ஆரம்பித்தாள்.. ‘அதற்காக ரொம்ப கஷ்டப்பட்டு படித்தாளா..??’ என்று கேட்டாள் கண்டிப்பாக இல்லையென்றே சொல்வாள்..
காரணம் வசந்த் அறிவியலில் இருக்கும் சிலபல ஈஸியான வழிமுறைகளை கடைப்பிடித்து படிக்க ஆரம்பித்ததால் அவளுக்கு படிப்பு பெரிய கஷ்டமாகவே தெரியவில்லை என்று சொல்லலாம்.. எப்பொழுதும் போல இல்லாமல் ரொம்ப கவனமாக அதே அளவு அலட்டிக்கொள்ளாமல் படித்தாள்..
கருத்தோடு படிக்கும் மகளைப் பார்த்த அழகர், வசந்த் மற்றும் கண்ணனை அழைத்து விசாரித்தார்.. அன்று மாலை கமழினியை அழைத்துச் செல்ல வந்த வசந்த், கண்ணன் இருவரையும் தனியே அழைத்துச் சென்றவர், “என்ன வசந்த் நடக்குது..?? கமழினி இப்போ எல்லாம் டவுட் கேட்பதே இல்ல.. ஆனால் இப்பொழுது விளையாட்டுத்தனம் இருந்தாலும் மார்க்கில் முழு கவனம் செலுத்துகிறாள்...!” என்று சந்தேகமாகவே கேட்டார்..
கண்ணனோ, ‘அவளுக்கு அட்வைஸ் கொடுத்த ஆள் அப்படி..’ என்று நினைக்க அவனின் என்ன ஓட்டத்தைக் கவனித்த வசந்திற்கு கூட சிரிப்பு வந்தது.. அவனோ அழகரிடம், “மாமா அவள் நன்றாக படிப்பது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா..?” என்று சிரிப்புடன் கேட்டான்..
“இல்லப்பா மகள் ரொம்ப கஷ்டப்பட்டு படிப்பது போல தெரிந்தது.. சரிப்பா போகும் பொழுது அவளை பூங்காவுக்கு அழச்சிட்டு போங்க..” என்று சொல்ல சரியென்று தலையசைத்த இருவரும் தங்களுக்கு சிரித்த வண்ணம் வந்தனர்.. அன்றிலிருந்து மக்களைப்பற்றி அழகர் அதிகம் கவலைப்படாமல் இருந்தார்..
அடுத்த மாற்றம் கண்ணனிடம், ‘படிப்பு முடித்து பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல ஒரு வேலையில் இருக்க வேண்டும்..’ என்று நினைத்தவன் தன்னுடைய திறமைகளை வளர்ந்துக் கொள்ள ஆரம்பித்தான்..
வசந்த் கன்னியாகுமரியில் இருந்து வந்ததில் இருந்தே அவனுக்கு பூவிழியின் நினைவு அடிக்கடி எழுந்தது.. அதற்கு காரணம் அவள் வேறு யார் என்ன சொன்னாலும் அதை நம்பிக்கொண்டு அவள் வருந்துவது பத்தாது என்று தங்களையும் சேர்ந்தது வருத்துவாளே என்ற எண்ணம் தான் அவனின் மனதில் இருந்தது..
வசந்த் நினைத்தால் அவளிடம் தன்னுடைய காதலை உணர்த்த அவனுக்கு ஒரு நொடி போதும் ஆனால் அதில் அதிகமாக புரிதல் இருக்காது.. காதல் என்பது ஒருவரின் மனத்தை மற்றவர் படிக்கும் அளவுக்கு ஆழமான புரிதல் இருந்தால் மட்டுமே அது கடைசி வரைக்கும் நிலைக்கும் என்று அவளை விட்டு விலகி’ நிற்கிறான் வசந்த்.. தன் மனதில் இருக்கும் பூவிழி நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய படிப்பை கவனித்தான் வசந்த்..
நாட்கள் வேகமாகச் சென்றது.. ரயில் பயணம் முடிந்தது பிரிந்தவர்கள் எல்லோரும் அடுத்து சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது என்பதைவிட அவர்களாக அந்த வாய்ப்பை உருவாக்கவில்லை என்று சொல்வது சரியாக இருக்கும்..
அன்று மாலை ஏனோ துகிலனுக்கு கமழினியின் நினைவாகவே இருக்க கல்லூரியில் இருந்து கிளம்பியவன் நேராக வந்தது பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டான்.. அங்கு வந்ததும் தான் என்ன காரியம் செய்திருக்கிறோம் என்று அவனுக்கு புரிந்தது..
‘திடீரென அம்மா வெளியே வந்தால் தான் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு..’ என்று நினைத்தவன் உடனே தன்னுடைய செல்லை எடுத்து அன்னைக்கு அழைத்தான்..
மறுப்பக்கம் அழைப்பை ஏற்ற சாரதா, “சொல்லு துகில்..” என்று சொல்ல, “அம்மா நான் இந்தபக்கம் ஒரு வேலையாக வந்தேன்.. நீங்க இணைக்கு பஸில் போகவேண்டாம்.. நான் உங்களை அழைச்சிட்டுப் போறேன்..” என்று சொல்லவும், “ம்ம் சரிப்பா..” என்று சொன்னவர் அழைப்பைத் துண்டித்தார்..
அப்பொழுது கமழினியை அழைத்துச் செல்ல வந்த வசந்த் துகிலனைக் கண்டதும், “என்னடா இவன் இங்கே நிற்கிறான்..?” என்று கேட்டதும் அப்பொழுதுதான் துகிலனைப் பார்த்த கண்ணன், “அவங்க அம்மா இங்கேதான் டீச்சராக வேலை பார்க்கிறாங்க வசந்த்..” என்று சொல்லிவிட்டு பைக்கில் இருந்து இறங்கினான்..
கண்ணன் சொன்னதும், ‘ஓ இப்படித்தான் துகில் கமழினியை பார்த்தானா..?’ என்று நினைத்தவனுக்கு அப்பொழுது விஷயம் புரிந்தது.. இத்தனைநாள், ‘துகில் ஏன் எங்களைத் தவறாக நினைக்க வேண்டும்..?’ என்ற கேள்வி அவனின் மனதின் ஓரத்தில் இருந்துக்கொண்டே இருந்தது.. அதற்காக விடை இன்றுதான் வசந்திற்கு புரிய அவனின் மனதில் நிம்மதி பரவியது..
வசந்த் தன்னுடைய பைக்கை நிறுத்துவிட்டு, “துகில் எப்படிடா இருக்கிற..?’ என்று கேட்ட வசந்தின் குரலில் நிமிர்ந்துப் பார்த்த துகில், “டேய் வசந்த் எப்படிடா இருக்கிற..?” என்று புன்னகை மாறாத முகத்துடன் கேட்ட துகிலனைப் பார்த்து வசந்த் முகத்தில் புன்னகை அழகாக மலர்ந்தது..
அத்தியாயம் – 25
அன்று ரயில் பயணம் ஒருவருக்கு ஒருவர் விடைகொடுத்து அனுப்பிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.. அந்த பிரிவுக்கு பிறகு எல்லோரும் தங்களின் படிப்பில் கவனம் செலுத்தினர்...
வசந்த், கிருஷ்ணா இருவரும் ஒரே கல்லூரி என்பதால் அவர்கள் இருவரும் சந்திக்க அதிகம் வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.. கண்ணன் படிப்பது இன்ஜினியரிங் என்பதால் அவனும் தன்னுடைய படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினான்..
துகிலன் கேட்கவே வேண்டாம் அவனும் படிப்பை தன்னுடைய முழு மூச்சாக எடுத்து படிக்க ஆரம்பித்தான்... கமழினியும் தன்னுடைய படிப்பை தவிர மற்ற எதையும் நினைக்காமல் இருந்தாள்.. நாட்கள் தெளிந்த நீரோடை போலவே சென்றது..
ஆனால் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாற்றங்கள். முதலில் துகிலனிடம் பல மாற்றங்கள். அதில் முதல் மாற்றம் கமழினியின் மனதை கலைக்க நினைக்காத துகிலன் அன்னையை அழைத்துச் சென்று விடுவதோடு சரி மாலை அவரை அழைத்துச் செல்ல வருவதே இல்ல.. அதையெல்லாம் கொஞ்ச நாளாகவே கவனித்த சாரதா அதுபற்றி மகனிடம் கேட்க நினைத்தார்..
மறுநாள் காலையில் எப்பொழுதும் போல எழுந்த துகிலன் குளித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பி கீழே வரும் வரையில் சாரதா வெகு அமைதியாக இருந்தார்.. அவரின் முகம் பார்த்து கேள்வியாக இடது புருவம் உயர்த்தினான் துகிலன்..
பிறகு அவன், “அம்மா என்னம்மா ரொம்ப அமைதியாக இருக்கீங்க..?” என்று கேட்டதும் மகனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர், “டேய் துகில் இப்போ எல்லாம் நீ ஏன் ஸ்கூல் பக்கமே வருவது இல்ல..?” என்று குரலில் ஒரு அழுத்தத்துடன் கேட்டார்.. ஆனால் அவரின் முகத்தில் எந்தவிதமான சலனமும் இன்றி சாதாரணமாகவே இருந்தது...
‘இவன் கன்னியாகுமரி போயிட்டு வந்ததில் இருந்தே ஒரு மார்க்கமாகவே இருக்கிறானே..? என்னவாக இருக்கும்..?’ என்று மனதினுள் யோசித்தார் சாரதா.. அவரின் யோசனையில் அவன் நகைக்கடைக்கு சென்று வந்த நாளும் நினைவு வந்தது..
‘எதுவாக இருந்தாலும் அவனே முடிவெடுக்கட்டும்..’ என்று நினைத்தவர் மகனின் முகத்தைப் பார்க்க அவனோ, “அம்மா எனக்கு கொஞ்சம் வேலைகள் இருக்கும்மா.. மாலைநேரம் வருவதற்கு நேரம் இல்லம்மா.. இந்த இயர் பைனல் அதனால் படிக்கவே நேரம் சரியாக இருக்கு..” என்று சொல்ல அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தார்..
அவரின் பார்வைக்கு எதிர்பார்வை பார்த்த துகிலன், “அம்மா நான் எது செய்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும் என்று புரிஞ்சிக்கங்க அம்மா..” என்றவன் சொல்ல, “எதுவாக இருந்தாலும் நல்லதாகவே நடக்கும் துகில்.. கவலைப்படாமல் நீ உன்னோட படிப்பை பாருடா..” என்று மலர்ந்த முகத்துடன் கூறினார்..
அவரின் மலர்ந்த முகமே அவர் தன்னை புரிந்து கொண்டதை உணர்ந்தவன், “தேங்க்ஸ் அம்மா..” என்று சொல்லிவிட்டு சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பிச் சென்றான்.. வீட்டில் இருந்து கிளம்பிச் செல்லும் மகனையே பார்த்தவர், ‘நீ என்னோட மகன்டா நீ யாரோட வாழ்க்கையையும் வீண் பண்ண மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்குடா..’ என்று நினைத்தவர் பள்ளிக்கூடம் கிளம்பிச் சென்றார்..
அன்றிலிருந்து மகனை எதிர்பார்க்காமல் பஸில் வீட்டிற்கு வர ஆரம்பித்தார் சாரதா.. துகிலன் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க, ‘அவனின் மனதில் கமழினியைப் பார்க்க வேண்டும்..’ என்ற எண்ணம் எழுந்தாலும் அவளைப் பார்க்காமல் இருக்க பழகிக்கொண்டான்..
இரண்டாவது மாற்றம் கமழினி. அவளுக்கு இந்த பன்னிரண்டாம் வகுப்பு என்பது துகிலனும், வசந்த்தும் சொன்னதும் போலவே அவளின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்பதால் மிகுந்த கவனத்துடன் படிக்க ஆரம்பித்தாள்.. ‘அதற்காக ரொம்ப கஷ்டப்பட்டு படித்தாளா..??’ என்று கேட்டாள் கண்டிப்பாக இல்லையென்றே சொல்வாள்..
காரணம் வசந்த் அறிவியலில் இருக்கும் சிலபல ஈஸியான வழிமுறைகளை கடைப்பிடித்து படிக்க ஆரம்பித்ததால் அவளுக்கு படிப்பு பெரிய கஷ்டமாகவே தெரியவில்லை என்று சொல்லலாம்.. எப்பொழுதும் போல இல்லாமல் ரொம்ப கவனமாக அதே அளவு அலட்டிக்கொள்ளாமல் படித்தாள்..
கருத்தோடு படிக்கும் மகளைப் பார்த்த அழகர், வசந்த் மற்றும் கண்ணனை அழைத்து விசாரித்தார்.. அன்று மாலை கமழினியை அழைத்துச் செல்ல வந்த வசந்த், கண்ணன் இருவரையும் தனியே அழைத்துச் சென்றவர், “என்ன வசந்த் நடக்குது..?? கமழினி இப்போ எல்லாம் டவுட் கேட்பதே இல்ல.. ஆனால் இப்பொழுது விளையாட்டுத்தனம் இருந்தாலும் மார்க்கில் முழு கவனம் செலுத்துகிறாள்...!” என்று சந்தேகமாகவே கேட்டார்..
கண்ணனோ, ‘அவளுக்கு அட்வைஸ் கொடுத்த ஆள் அப்படி..’ என்று நினைக்க அவனின் என்ன ஓட்டத்தைக் கவனித்த வசந்திற்கு கூட சிரிப்பு வந்தது.. அவனோ அழகரிடம், “மாமா அவள் நன்றாக படிப்பது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறதா..?” என்று சிரிப்புடன் கேட்டான்..
“இல்லப்பா மகள் ரொம்ப கஷ்டப்பட்டு படிப்பது போல தெரிந்தது.. சரிப்பா போகும் பொழுது அவளை பூங்காவுக்கு அழச்சிட்டு போங்க..” என்று சொல்ல சரியென்று தலையசைத்த இருவரும் தங்களுக்கு சிரித்த வண்ணம் வந்தனர்.. அன்றிலிருந்து மக்களைப்பற்றி அழகர் அதிகம் கவலைப்படாமல் இருந்தார்..
அடுத்த மாற்றம் கண்ணனிடம், ‘படிப்பு முடித்து பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல ஒரு வேலையில் இருக்க வேண்டும்..’ என்று நினைத்தவன் தன்னுடைய திறமைகளை வளர்ந்துக் கொள்ள ஆரம்பித்தான்..
வசந்த் கன்னியாகுமரியில் இருந்து வந்ததில் இருந்தே அவனுக்கு பூவிழியின் நினைவு அடிக்கடி எழுந்தது.. அதற்கு காரணம் அவள் வேறு யார் என்ன சொன்னாலும் அதை நம்பிக்கொண்டு அவள் வருந்துவது பத்தாது என்று தங்களையும் சேர்ந்தது வருத்துவாளே என்ற எண்ணம் தான் அவனின் மனதில் இருந்தது..
வசந்த் நினைத்தால் அவளிடம் தன்னுடைய காதலை உணர்த்த அவனுக்கு ஒரு நொடி போதும் ஆனால் அதில் அதிகமாக புரிதல் இருக்காது.. காதல் என்பது ஒருவரின் மனத்தை மற்றவர் படிக்கும் அளவுக்கு ஆழமான புரிதல் இருந்தால் மட்டுமே அது கடைசி வரைக்கும் நிலைக்கும் என்று அவளை விட்டு விலகி’ நிற்கிறான் வசந்த்.. தன் மனதில் இருக்கும் பூவிழி நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய படிப்பை கவனித்தான் வசந்த்..
நாட்கள் வேகமாகச் சென்றது.. ரயில் பயணம் முடிந்தது பிரிந்தவர்கள் எல்லோரும் அடுத்து சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது என்பதைவிட அவர்களாக அந்த வாய்ப்பை உருவாக்கவில்லை என்று சொல்வது சரியாக இருக்கும்..
அன்று மாலை ஏனோ துகிலனுக்கு கமழினியின் நினைவாகவே இருக்க கல்லூரியில் இருந்து கிளம்பியவன் நேராக வந்தது பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டான்.. அங்கு வந்ததும் தான் என்ன காரியம் செய்திருக்கிறோம் என்று அவனுக்கு புரிந்தது..
‘திடீரென அம்மா வெளியே வந்தால் தான் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு..’ என்று நினைத்தவன் உடனே தன்னுடைய செல்லை எடுத்து அன்னைக்கு அழைத்தான்..
மறுப்பக்கம் அழைப்பை ஏற்ற சாரதா, “சொல்லு துகில்..” என்று சொல்ல, “அம்மா நான் இந்தபக்கம் ஒரு வேலையாக வந்தேன்.. நீங்க இணைக்கு பஸில் போகவேண்டாம்.. நான் உங்களை அழைச்சிட்டுப் போறேன்..” என்று சொல்லவும், “ம்ம் சரிப்பா..” என்று சொன்னவர் அழைப்பைத் துண்டித்தார்..
அப்பொழுது கமழினியை அழைத்துச் செல்ல வந்த வசந்த் துகிலனைக் கண்டதும், “என்னடா இவன் இங்கே நிற்கிறான்..?” என்று கேட்டதும் அப்பொழுதுதான் துகிலனைப் பார்த்த கண்ணன், “அவங்க அம்மா இங்கேதான் டீச்சராக வேலை பார்க்கிறாங்க வசந்த்..” என்று சொல்லிவிட்டு பைக்கில் இருந்து இறங்கினான்..
கண்ணன் சொன்னதும், ‘ஓ இப்படித்தான் துகில் கமழினியை பார்த்தானா..?’ என்று நினைத்தவனுக்கு அப்பொழுது விஷயம் புரிந்தது.. இத்தனைநாள், ‘துகில் ஏன் எங்களைத் தவறாக நினைக்க வேண்டும்..?’ என்ற கேள்வி அவனின் மனதின் ஓரத்தில் இருந்துக்கொண்டே இருந்தது.. அதற்காக விடை இன்றுதான் வசந்திற்கு புரிய அவனின் மனதில் நிம்மதி பரவியது..
வசந்த் தன்னுடைய பைக்கை நிறுத்துவிட்டு, “துகில் எப்படிடா இருக்கிற..?’ என்று கேட்ட வசந்தின் குரலில் நிமிர்ந்துப் பார்த்த துகில், “டேய் வசந்த் எப்படிடா இருக்கிற..?” என்று புன்னகை மாறாத முகத்துடன் கேட்ட துகிலனைப் பார்த்து வசந்த் முகத்தில் புன்னகை அழகாக மலர்ந்தது..