• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 28

பூங்காவில் ராதாவைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியெங்கிலும் யோசனையோடு வந்தான் சுரேஷ்.. அவனின் நினைவுகள் அனைத்தும் அவனின் திருமணநாள் அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தது..

தன் நண்பர்களில் ஒருவன் வந்து நடந்ததை சொன்ன பொழுது சுரேஷிற்கு ராதாவின் மீது கோபம் இருந்தாலும் கூட, தன் மணக்க போகும் ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மனதில் நஞ்சை விதைத்துவிட்டு வந்தால் என்று அறிந்தும் அவளைத் தவிர்க்காமல் தன்னுடைய தாரமாக ஏற்றுக்கொண்டு கைபிடித்தான்..

அன்று இரவு அவளிடம் அது பற்றி விசாரித்த பொழுது ராதாவோ, ‘ஆமா நான்தான் அவளோட மனதில் சந்தேகத்தை உருவாக்கினேன்..’ என்று சொன்னதும், ‘இனிமேல் இப்படி செய்யாதே.. நீ அப்படி செய்வது மட்டும் எனக்கு தெரிஞ்சது அப்புறம் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது..’ என்று ராதாவை மிரட்டி வைத்தான்..

சுரேஷ் நிஜமாகவே நல்ல ஒரு மனிதன். அவள் செய்த காரியத்திற்கு மாணிக்கத்தை சந்தித்து உண்மைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டுதான் அந்த ஊரைவிட்டு வந்தான்..

அவன் திருச்சி வந்ததில் இருந்து ராதாவை அவன் எங்கே அழைத்துச் சென்றாலும் ராதாவின் விழிகளில் இருந்த தேடலை உணர்ந்து, ‘இன்னும் எந்த பெண்ணின் மனதை கெடுக்கப் போகிறாய் ராதா..?’ என்ற கேள்வியுடன் அவளோடு வாழ ஆரம்பித்தான்..

அவள் எங்கே சென்றாலும் அவளின் ஒவ்வொரு பார்வைக்கும், அவளின் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் அறிந்து வைத்திருப்பவன் மனம் இன்று அவள் பூங்காவில் நின்ற விதமும், அவளின் பார்வையில் தெரிந்த கொரூரத்தை கணக்கிட்டவனின் கோபம் எல்லை கடந்தது..

‘எதுவாக இருந்தாலும் அவள் வீட்டிற்கு வரட்டும் விசாரித்துக் கொள்ளலாம்..’ என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு வந்ததும், தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன், ‘இவள் ஏன் பூங்காவில் அப்படி அதிர்ச்சியாகி நின்றாள்..? அவளோட நண்பன் வசந்த்தை அவள் ஏன் அவ்வளவு கொரூரமாக பார்த்தாள்..?’ என்றவன் யோசித்துக்கொண்டே உடையை மாற்ற கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஹாலுக்கு சென்றான்..

அங்கிருந்த சோபாவின் அமர்ந்திருந்த ராதாவின் முகம் முழுவதும் ஏதோவொரு யோசனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்தவன், ‘இன்னும் என்ன செய்ய இப்படி திட்டம் தீட்டிட்டு இருக்கிறாள்..?’ என்ற எண்ணத்தோடு அவளின் அருகில் அமர்ந்தான் சுரேஷ்..

பிறகு, “ராதா என்ன யோசனை..?” என்று கேட்டதும், திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள் ராதா.. அவளின் திடுக்கிடலை சரியாக கவனித்துவிட்ட சுரேஷ், “என்ன என்னோட குரல் கேட்டு திடுக்கிடுகிறாய்..?” என்று கேட்டதும், “சுரேஷ்..” என்று இழுத்தவளை கன்னத்தில், ‘பளார்...’ என்று ஒரு அறைவிட்டான்..

அவனிடம் அடி வாங்கிய ராதா கையை இடது கன்னத்தில் தாங்கியபடி நிமிர்ந்து சுரேஷைப் பார்த்தாள்.. அங்கே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தவன், “ஏண்டி உனக்கு முதல் நாளே சொன்னேன் இல்ல.. நல்ல ஒரு நட்பையும், ஒரு நல்ல காதலையும் கெடுக்காதே.. நட்பு தொப்புள்கொடி உறவுகளை விடவும் புனிதமானது என்று அன்றே உனக்கு நான் சொன்னேன் இல்ல..” என்று கேட்டான்..

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை முறைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள் ராதா.. அவளின் முகத்தை பார்த்த சுரேஷ், “உன்னை எந்த அளவுக்கு நான் காதலித்தேன்.. ஆனால் உன்னோட சுயரூபம் திருமணம் நடப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தாண்டி என்னைக்கு தெரிந்தது.. இல்ல கல்யாணத்தையே நிறுத்தி இருப்பேன்..” என்று சொன்னவனை அமைதியாகப் பார்த்தாள்..

அவளின் பார்வையைப் பார்த்தவன், “ஒரு நிமிஷத்தில் ஒரு பெண்ணோட மனசில் எவ்வளவு பெரிய நஞ்சை விதைத்துவிட்டு வந்தாய்.. உனக்கு எல்லாம் கல்யாணம் ரொம்ப முக்கியமா..?” என்று கேட்ட சுரேஷ் குரலில் கொத்திப்பு கொஞ்சமும் அடங்கவில்லை..

அவனின் குரலில் இருந்த கொதிப்பை பார்த்தவள், “நானும் உண்மையாகத்தானே காதலித்தேன்..?” என்று கோபத்தோடு கேட்டதும், “உண்மையாக காதல்..” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து இகழ்ச்சியாகச் சிரிப்பை உதிர்த்தவன், “உனக்கு அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா..?” என்று கேட்டான்..

பிறகு அவளின் பார்வையைப் பார்த்துவிட்டு, “உனக்கு சொல்லி புரியவைப்பது கஷ்டம் ராதா..” என்று சொன்னவன், “உனக்கு உண்மையான மனவலி எப்படி இருக்கும் என்று தெரியல.. நீ அனுபவிக்கும் பொழுதுதான் அதோட வலி உனக்கு தெரியும்டி..” என்று சொன்னவன் அவளை விட்டு விலகிச்சென்றான்..

அவளை அடித்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்த சுரேஷ், ‘ஆண்டவா இவளுக்கு நல்ல புத்தியைக்கொடு..’ என்று வேண்டியவன், கொஞ்சநேரத்தில் தான் அவளை அடித்திருக்க கூடாது என்று நினைத்து அவளுக்காக மனம் வருந்தவும் செய்தான்.. பிறகு, ‘அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்..’ என்று நினைத்தான்..

இப்பொழுதும் அவளை அடித்துவிட்டாலும் அவளைப் பத்திரமாக பார்த்துக்கொள்ள நினைக்கும் சுரேஷ் காதல் கூட உயர்ந்த ஒன்றுதான்.. அதை உணராத ராதாவோ தன்னுடைய அடுத்த திட்டத்திற்கான நேரத்தை சரியாக கணக்கிட ஆரம்பித்தாள்..

கமழினி காலாண்டுத் தேர்விலும், அரையாண்டு தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்தாள்.. இப்பொழுது அவள் பப்ளிக் எக்ஸாமிற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.. நாட்கள் வேகமெடுத்து செல்ல ஆரம்பித்தது..

அன்றைய பூங்காவின் சந்திப்புக்குப் பிறகு துகிலனை கமழினி சந்திக்கவே இல்லை.. அதற்கான சந்தர்ப்பம் அமையாமலே போக படிப்பில் முழு கவனம் செலுத்தியவளின் மனதில் மனம் நிறைந்தவனாக இடம் பிடித்தான் அவளின் காதலன் துகிலன்..

துகிலனின் மனதில், ‘காதல் மணம் வீசிய அவனின் இதய தாமரையாக இருப்பவள் வாழ்விலும் ஒளி வீசவேண்டும்..’ என்று அவளை விட்டு ஒதுக்கி இருந்தவனின் மனதில் காதல் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தினான் துகிலன்..

வசந்தின் மனதிலும் பூவிழியின் நினைவுகள் அலையாக வந்து சென்றாலும் அவளை மறக்க முடியாமல் அவளோடு பேசாமல் மௌனம் சாதித்தான்.. பூவிழி கல்லூரி மூன்றாவது வருடத்தின் அடியெடுத்து வைக்கும் பொழுது ராதாவின் திருமணத்தில் அவளோடு ஏற்பட்ட மனகசப்பில் கிளம்பி வந்தவன் கிட்டதட்ட ஒன்பது மாதமாக அவளைப் பார்க்காமல் இருக்கிறான்..

அவளைப் பார்க்காமல் இருந்தாலும் மனதால் அவளின் நினைவுகளோடு பயணிக்க ஆரம்பித்தான் வசந்த்.. கடைசியாக கிடைத்த விடுமுறை நாளில் ஊருக்கு சென்று அப்பா, அம்மா இருவரையும் பார்த்துவிட்டு வந்தான் வசந்த்..

வசந்த் ஊருக்கு சென்று திரும்பிய மறுவாரம் ஏதோவொரு வேலையாக ஸ்ரீரங்கம் வரையில் வந்திருந்த ஆறுமுகத்தையும், துளசியையும் வந்திருந்தனர்.. ஸ்ரீரங்கத்தில் ஒரு தோழியின் வீட்டிற்கு வந்தவள் அன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல அங்கே வந்திருந்த வசந்த் பெற்றோரை எதர்ச்சியாகப் பார்த்தவள் ஒரு திட்டத்துடன் துளசியை நோக்கி சென்றாள்..

“ஹாய் ஆண்ட்டி..” என்று சொல்ல தனக்கு பழக்கப்பட்ட பெண்ணின் குரல் என்று திரும்பிபார்த்தவரை நோக்கிச் சென்றாள் ராதா.. அவளைப் பார்த்தும் அடையாளம் கண்டுக்கொண்ட துளசி, “வாம்மா ராதா... எப்படிம்மா இருக்கிறாய்..??” என்று பாசத்துடன் விசாரித்தார்..

அவரின் பாசத்தில் மனம் நெகிழ்ந்தவள், “நான் நல்ல இருக்கிறேன் ஆண்ட்டி.. நீங்க அங்கிள் எல்லாம் எப்படி இருக்கீங்க..?” என்று பாசத்துடன் விசாரித்தவளைப் புன்னகையோடு பார்த்தவர், “நீ இன்னும் அப்படியே இருக்கிறாய் செல்லம்..” என்று வெள்ளேந்தியாக கூறிய துளசி, “எல்லோரும் நல்ல இருக்கிறோம்மா..” என்று கூறிய துளசி அங்கிருந்த ஒரு தூணின் அருகில் அமர்ந்தார்..

அவரின் அருகில் அமர்ந்த ராதாவைப் பார்த்தவர், “உன்னோட கணவர் எப்படிம்மா இருக்கிறார்..?” என்று கேட்டதும், “அவர் ரொம்பவே நல்ல இருக்கிறாரம்மா..” என்று சொன்னவள் நேரடியாக விஷயத்திருக்கு வந்தாள்..

“ஆண்ட்டி வசந்த் எப்படி இருக்கிறான்.. அவனுக்கும், கமழினிக்கும் கல்யாணம் செய்ய போவதாக கேள்விபட்டேன் உண்மையா ஆண்ட்டி..?” என்று சிந்தாமல் சிதறாமல் தான் வந்த காரியத்தை ஒரே வாக்கியத்தில் முடித்தாள் ராதா.. அவள் சொன்னத்தைக் கேட்டு அதிர்ந்தார் துளசி..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவரின் அதிர்வைப் பார்த்து மனதிற்குள் சிரித்த ராதா, ‘வசந்த் என்னோட ஆட்டம் ஆரம்பம்..’ என்று நினைக்க அவளை நிமிர்ந்துப் பார்த்தார் துளசி.. அவரின் பார்வை ராதாவின் மீது இருக்க, ‘இவள் ஏதோ காரியத்திற்காக காய் நகர்த்துவது போல இருக்கிறதே..’ என்ற சந்தேகம் அவரின் மனதில் ஆழமாக வேரூன்றியது..

அந்த சந்தேகத்துடன் அவளைப் பார்த்தவர், “இல்லடா அப்படி ஒரு எண்ணம் வசந்திற்கு வரவே வராது.. அவளை சின்ன வயதில் இருந்தே வசந்த் பார்ப்பதால் அவனுக்குள் அப்படி ஒரு எண்ணம் வர வாய்ப்பே இல்ல..” என்று சொல்ல அவர் சொன்னதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள்..

அவளின் சிரிப்பில் இருந்தே, ‘அவள் காய்தான் நகர்த்துகிறாள்..’ என்று உணர்ந்தவர், ‘ஏட்டு சுரக்காய் என்னைக்கும் கறிக்கு உதவாது பொண்ணு.. நீ என்னிடமே உன்னோட வேலையைக் காட்டுக்கிறாயா..? பத்துமாதம் சுமந்து பெற்ற என்னோட மகனின் மனம் எனக்கு தெரியாதா..?’ என்று மனதிற்குள் கணக்குப் போட்டவராக ராதா சிரிப்பதை அப்பாவி முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்..

அவரின் அப்பாவி முகத்தைப் பார்த்த ராதா, “ஆண்ட்டி இப்போ இருக்கும் பசங்க எல்லாம் அம்மா, அப்பாவிடம் சொல்லிட்டு காதலிப்பது இல்ல..” என்று சொன்னவள் அவரின் முகத்தைப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்..

“இப்பொழுது எல்லாம் கொஞ்சநாள் நண்பர்களாக பழகுபவர்கள் கொஞ்சநாளில் காதலர்களாக மாறிவிடுகிறார்கள்.. இதில் வசந்த் – கமழினி மட்டும் விதிவிலக்கா என்ன..?” என்று கேட்டவளுக்கு தெரியாது வசந்த் – கமழினி இருவரும் அந்த கொள்கைக்கு உண்டான உன்னதமான விதிவிலக்கு என்று..!

அவள் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட துளசி சாதாரணமான ஆள் என்று ராதா நினைத்தாள்.. ஆனால் அவளுக்கு தெரியாத இன்னொரு உண்மை என்ன தெரியுமா..? ‘கிராமத்தில் உள்ள பெண்மணிகள் ஒருவரின் பார்வையை வைத்தே அவர்களின் குறிக்கோளை கண்டுபிடிக்கும் அளவுக்கு புத்திசாலிகள் என்பதை அறியாமல் போனாள் ராதா..!

அவளின் போக்கில் செல்ல நினைத்தவர், “அப்படியாம்மா எனக்கு எங்கே இது எல்லாம் தெரியும்.. நீதான் படித்த பொண்ணு.. நாங்க எல்லாம் இன்னும் கிராமத்தில் இருப்பவர்கள் தானே எங்களுக்கு எங்கே இங்கே இருக்கும் பழக்கவழக்கம் எல்லாம் தெரியபோகிறது..?” என்று சடஞ்சபடியே பதில் கொடுத்தார் துளசி..

அவரின் பதிலில் இருந்தே மகிழ்ந்து போன ராதா, “அப்புறம் என்ன ஆண்ட்டி வசந்திற்கு கமழினியைப் பெண்கேட்டு போக வேண்டியது தானே..” என்று தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக நினைத்தாள் ராதா..

அவரும், “சரிம்மா ராதா.. நானும் உங்க மாமாவிடம் ஒரு வார்த்தை பேசிட்டு கமழினியைப் பெண் கேட்கிறேன்..” என்று சொன்னவரை புன்னகையோடு பார்த்த ராதா, “சரிங்க ஆண்ட்டி நான் கிளம்பிக்கிறேன்..” என்று சொன்னவளுக்கு விடைகொடுத்து அனுப்பிய துளசி கோவிலை விட்டு வெளியே வந்ததும் கணவரிடம் எல்லாவற்றையும் கூறினார்..

துளசி சொன்னதை எல்லாம் முழுவதும் கேட்ட ஆறுமுகம், “வசந்த நல்ல பையன் துளசி.. அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் வர வாய்ப்பே இல்ல.. ஆனாலும் அவங்க மனதில் என்ன இருக்கு என்று இவளுக்கு முதலில் ஒரு படத்தை சொல்லிக் கொடுக்கணும்மா..” என்று சொன்னவர் சிறிதுநேரம் யோசித்தார்..

“சரி துளசி அவளின் போக்கில் போயிதான் நம்ம மகன் நல்லவன் என்றும், அவனோட நட்பு உண்மையானது என்றும் அந்த பொண்ணுக்கு நாம் உணர்த்த வேண்டும்.. அதனால் நான் சொல்வது போல செய்..” என்று கூறியவர்,

“கமழினி அம்மாவுக்கு போன் பண்ணி நாங்க கமழினியை பெண் கேட்டு வருகிறோம் என்று சொல்லு.. அவங்களின் பதில் என்ன என்று பார்த்துவிட்டு நாம் மற்றதை யோசனை செய்யலாம்..” என்று சொல்ல கணவர் சொன்னது போலவே செய்த துளசிக்கு கமழினியின் அம்மா வேணி பேசியதும், “அவங்களுக்கும் இந்த எண்ணம் இருக்கிறதாம்..” என்று சொல்ல, ‘அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும்...’ என்று யோசிக்க ஆரம்பித்தனர் ஆறுமுகமும், துளசியும்..!

பூவிழி மனம் வருந்தியபடியே தனித்து இருக்க பழகிக்கொண்டாள்.. அவளின் தனிமையைக் கண்ட மாணிக்கம் மனம் வருந்தினாலும், ‘இது எல்லாமே அவளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்..’ என்று மகளை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள நினைத்தார்..

இந்த மாதிரி நேரத்தில் தான் கமழினியின் அப்பா அழகர் கன்னியாகுமரி சென்றிருந்தார்.. அங்கே மாணிக்கத்தின் வீட்டிற்குச் சென்றவர் எப்பொழுதும் போல பேசிக்கொண்டிருக்க அப்படியே பேச்சு மகளின் திருமணத்தின் பக்கம் மாணிக்கம் திருப்ப அழகரோ தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை அண்ணனிடம் சொல்ல நினைத்து தன்னுடைய எண்ணத்தை அவரிடம் பகிர்ந்தார்..

“அண்ணா நம்ம பூவிழிக்கு எப்பொழுது திருமணம்..?” என்று அழகர் மாணிக்கத்திடம் பெரிய மகளின் திருமணத்தைப் பற்றி விசாரிக்க, “அவளுக்கு இப்பொழுது தானே அவளுக்கு இருபது ஆகிறது அழகர் மெதுவாக வரன் பார்க்கலாம்..” என்று பொறுமையாகக் கூறினார் மாணிக்கம்..

அழகர் கேட்டதும் தான் சின்ன மகளின் நினைவு மாணிக்கத்திற்கு வந்தது.. உடனே தம்பியை நிமிர்ந்து பார்த்தவர், “கமழி எப்படி இருக்கிறாள் அழகர்..? நல்ல படிக்கிறாளா..?” என்று கேட்டதும் தன்னுடைய சிந்தனையில் வெளியே வந்த அழகர் முகம் மலர்ந்தது..

“நல்ல படிக்கிறாள் அண்ணா.. டாக்டர் சீட் வாங்கிவிடுவாள் போலத்தான் தெரிகிறது..” என்று மக்களைப்பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தவர், “வசந்த் உடனே இருக்கிறாள்.. வசந்த் சொன்னதும் சரியென்று கேட்கிறாள்.. அவளின் படிப்பைக் கூட வசந்தைப் பார்த்து முடிவு செய்கிறாள்..” என்று மகளைப் பற்றி சொல்லிக்கொண்டே வந்தவர் அண்ணனின் பார்வையைக் கவனித்தார்..

“என்ன அண்ணா ஆச்சு..?” என்று கேட்டதும் சிரித்த மாணிக்கம், “நான் உன்னோட அண்ணன் அழகர்.. என்னிடம் சொல்ல உனக்கு என்ன தயக்கம்..?” என்று கேட்டதும், “வசந்த் என்னோட மாப்பிள்ளையாக வந்தால் நல்ல இருக்குமே என்று நினைக்கிறேன் அண்ணா..” என்று பட்டென்று போட்டு உடைத்தார் அழகர்..

அவர் சொன்னத்தைக் கேட்ட மாணிக்கத்திற்கு அதிர்ச்சியாக இருக்க, “என்னடா சொல்கிறாய்..?” என்று கேட்டதும் தான் சொல்ல நினைத்ததை மீண்டும் ஒருமுறை தெளிவாகக் கூறினார் அழகர்.. அவர் சொன்னதைக் கேட்டு மாணிக்கத்திற்கு பி.பி. அதிகமாகி மயக்கம் வர ஆரம்பிக்கும் வேளையில் வாசலில் நின்றிருந்த மகளைக் கவனித்தார்..

பூவிழியோ கண்கள் இரண்டிலும் கண்ணீர் ததும்ப அது கீழே வழிந்து விடாதபடிக்கு அதுக்கு அணைபோட்ட வண்ணம் நின்றிருந்தாள்.. அவளின் முகத்தில் இருந்த அதிரவே, ‘அழகர் சொன்னது அனைத்தையும் மகள் கேட்டுவிட்டாள்..’ என்று நினைத்தவர் மனதில் பாரம் ஏறிவிட்டது.. அதை இறக்கும் வழி தெரியாமல் திணறினார் மாணிக்கம்..

அண்ணனின் தவிப்பை அறியாத அழகர், “அது மட்டும் இல்ல அண்ணா.. அவங்க மனதிலும் கமழி அவர்களின் மருமகளாக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது போல.. அதுதான் போனவாரம் போன் பண்ணி வேணியிடம் பேசிட்டு இருந்தாங்க..” என்று கூறியவருக்கு தெரியாது அண்ணணின் மனம் பாரத்தால் கனக்கிறது என்று..!

வாசலில் நின்றவண்ணம் கேட்ட பூவிழியின் மனம் துடியாக துடித்தது.. தான் விரும்பும் ஒருவரை தன்னுடைய தங்கை கரம்பிடிக்க போகிறாள் என்று நினைக்கையில் எல்லாம் கை மீறி போய்விட்டதாக நினைத்தாள் பூவிழி.. அவளின் முகத்தைப் பார்த்த மாணிக்கம், “வாம்மா பூவிழி..” என்று மகளை அழைக்க அழகர் திரும்பும் முன்னே கண்கள் இரண்டையும் துடைத்துக் கொண்டவள்,

புன்னகை முகத்துடன், “வாங்க சித்தப்பா.. சித்தி எப்படி இருக்காங்க.. என்னோட அண்ணனும், செல்ல தங்கையும் எப்படி இருக்காங்க..?” என்று கேட்ட தன்னுடைய அண்ணனின் மகளைப் பார்த்த அழகர், “எல்லோரும் நல்ல இருக்காங்கடா.. நீ எப்படிடா இருக்கிற..?” என்று கேட்டதும் அவளுக்கு வாயில் வார்த்தையே வராமல் துக்கம் தொண்டையை அடைத்தது..

“நல்ல இருக்கிறேன் சித்தப்பா..” என்று கூறியவள் வேகமாக தன்னடைய அறைக்குள் செல்ல அழகர் இரவு அங்கேயே தங்குவது என்று முடிவாகிவிட்டது.. அன்று இரவு உணவை முடித்து மனிக்கத்திற்கும், அழகருக்கும் பரிமாறியவள் அன்றைய இரவு முழுக்க அழுதுகொண்டே இருந்தாள்..

தன்னுடைய சந்தேகத்தில் விளைந்த விளைவின் வீரியத்தைக் கண்டு கண்ணீர் விட ஆரம்பித்தாள் பூவிழி.. தன்னுடைய மகள் அழுவதை பார்க்கமுடியாத பாசக்கார தந்தை தன்னுடைய அறைக்கு உறங்க சென்றார்.. அன்று மகளின் கண்ணீரைப் பார்த்துவிட்டு உறங்க சென்றவர் ஒரே அடியாக உறங்கிப் போனார்...

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்..
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கூமுட்டை அழகர்
ஒரு ஹெட் மாஸ்டர் இவ்வளவு
மக்கு பிளாஸ்திரியா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்கியோ போற மாரியாத்தா
மாணிக்கம் உயிருக்கு
எமனாயிட்டுதே, ஆத்தா?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த கெட்ட எண்ணம் பிடித்த
ராதாவால் அநியாயமாக
மாணிக்கத்தின் உயிர் போய்
விட்டதே, சந்தியா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மனசு-ன்னு ஒன்று இல்லவே
இல்லாத இந்த ராதா மூதேவிக்கு
துளசியம்மா இவளிடம் பாசமா
பேசியவுடன் மனம் நெகிழுதா,
சந்தியா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த அப்டேட்டில் கொஞ்சம்
கன்டியூனிட்டி இல்லையே?
குறையுதே, சந்தியா டியர்?
தன்னோட மகனைப் பற்றி
நன்கு தெரிந்த வசந்தின் தாய்
துளசியம்மாள், இந்த ராதா
பீடையின் பேச்சை, சீ போ-ன்னு
விட்டுத் தொலைக்காமல்
கணவரிடம் ஏன் கூற வேண்டும்?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top