அத்தியாயம் – 28
பூங்காவில் ராதாவைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியெங்கிலும் யோசனையோடு வந்தான் சுரேஷ்.. அவனின் நினைவுகள் அனைத்தும் அவனின் திருமணநாள் அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தது..
தன் நண்பர்களில் ஒருவன் வந்து நடந்ததை சொன்ன பொழுது சுரேஷிற்கு ராதாவின் மீது கோபம் இருந்தாலும் கூட, தன் மணக்க போகும் ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மனதில் நஞ்சை விதைத்துவிட்டு வந்தால் என்று அறிந்தும் அவளைத் தவிர்க்காமல் தன்னுடைய தாரமாக ஏற்றுக்கொண்டு கைபிடித்தான்..
அன்று இரவு அவளிடம் அது பற்றி விசாரித்த பொழுது ராதாவோ, ‘ஆமா நான்தான் அவளோட மனதில் சந்தேகத்தை உருவாக்கினேன்..’ என்று சொன்னதும், ‘இனிமேல் இப்படி செய்யாதே.. நீ அப்படி செய்வது மட்டும் எனக்கு தெரிஞ்சது அப்புறம் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது..’ என்று ராதாவை மிரட்டி வைத்தான்..
சுரேஷ் நிஜமாகவே நல்ல ஒரு மனிதன். அவள் செய்த காரியத்திற்கு மாணிக்கத்தை சந்தித்து உண்மைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டுதான் அந்த ஊரைவிட்டு வந்தான்..
அவன் திருச்சி வந்ததில் இருந்து ராதாவை அவன் எங்கே அழைத்துச் சென்றாலும் ராதாவின் விழிகளில் இருந்த தேடலை உணர்ந்து, ‘இன்னும் எந்த பெண்ணின் மனதை கெடுக்கப் போகிறாய் ராதா..?’ என்ற கேள்வியுடன் அவளோடு வாழ ஆரம்பித்தான்..
அவள் எங்கே சென்றாலும் அவளின் ஒவ்வொரு பார்வைக்கும், அவளின் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் அறிந்து வைத்திருப்பவன் மனம் இன்று அவள் பூங்காவில் நின்ற விதமும், அவளின் பார்வையில் தெரிந்த கொரூரத்தை கணக்கிட்டவனின் கோபம் எல்லை கடந்தது..
‘எதுவாக இருந்தாலும் அவள் வீட்டிற்கு வரட்டும் விசாரித்துக் கொள்ளலாம்..’ என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு வந்ததும், தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன், ‘இவள் ஏன் பூங்காவில் அப்படி அதிர்ச்சியாகி நின்றாள்..? அவளோட நண்பன் வசந்த்தை அவள் ஏன் அவ்வளவு கொரூரமாக பார்த்தாள்..?’ என்றவன் யோசித்துக்கொண்டே உடையை மாற்ற கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஹாலுக்கு சென்றான்..
அங்கிருந்த சோபாவின் அமர்ந்திருந்த ராதாவின் முகம் முழுவதும் ஏதோவொரு யோசனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்தவன், ‘இன்னும் என்ன செய்ய இப்படி திட்டம் தீட்டிட்டு இருக்கிறாள்..?’ என்ற எண்ணத்தோடு அவளின் அருகில் அமர்ந்தான் சுரேஷ்..
பிறகு, “ராதா என்ன யோசனை..?” என்று கேட்டதும், திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள் ராதா.. அவளின் திடுக்கிடலை சரியாக கவனித்துவிட்ட சுரேஷ், “என்ன என்னோட குரல் கேட்டு திடுக்கிடுகிறாய்..?” என்று கேட்டதும், “சுரேஷ்..” என்று இழுத்தவளை கன்னத்தில், ‘பளார்...’ என்று ஒரு அறைவிட்டான்..
அவனிடம் அடி வாங்கிய ராதா கையை இடது கன்னத்தில் தாங்கியபடி நிமிர்ந்து சுரேஷைப் பார்த்தாள்.. அங்கே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தவன், “ஏண்டி உனக்கு முதல் நாளே சொன்னேன் இல்ல.. நல்ல ஒரு நட்பையும், ஒரு நல்ல காதலையும் கெடுக்காதே.. நட்பு தொப்புள்கொடி உறவுகளை விடவும் புனிதமானது என்று அன்றே உனக்கு நான் சொன்னேன் இல்ல..” என்று கேட்டான்..
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை முறைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள் ராதா.. அவளின் முகத்தை பார்த்த சுரேஷ், “உன்னை எந்த அளவுக்கு நான் காதலித்தேன்.. ஆனால் உன்னோட சுயரூபம் திருமணம் நடப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தாண்டி என்னைக்கு தெரிந்தது.. இல்ல கல்யாணத்தையே நிறுத்தி இருப்பேன்..” என்று சொன்னவனை அமைதியாகப் பார்த்தாள்..
அவளின் பார்வையைப் பார்த்தவன், “ஒரு நிமிஷத்தில் ஒரு பெண்ணோட மனசில் எவ்வளவு பெரிய நஞ்சை விதைத்துவிட்டு வந்தாய்.. உனக்கு எல்லாம் கல்யாணம் ரொம்ப முக்கியமா..?” என்று கேட்ட சுரேஷ் குரலில் கொத்திப்பு கொஞ்சமும் அடங்கவில்லை..
அவனின் குரலில் இருந்த கொதிப்பை பார்த்தவள், “நானும் உண்மையாகத்தானே காதலித்தேன்..?” என்று கோபத்தோடு கேட்டதும், “உண்மையாக காதல்..” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து இகழ்ச்சியாகச் சிரிப்பை உதிர்த்தவன், “உனக்கு அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா..?” என்று கேட்டான்..
பிறகு அவளின் பார்வையைப் பார்த்துவிட்டு, “உனக்கு சொல்லி புரியவைப்பது கஷ்டம் ராதா..” என்று சொன்னவன், “உனக்கு உண்மையான மனவலி எப்படி இருக்கும் என்று தெரியல.. நீ அனுபவிக்கும் பொழுதுதான் அதோட வலி உனக்கு தெரியும்டி..” என்று சொன்னவன் அவளை விட்டு விலகிச்சென்றான்..
அவளை அடித்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்த சுரேஷ், ‘ஆண்டவா இவளுக்கு நல்ல புத்தியைக்கொடு..’ என்று வேண்டியவன், கொஞ்சநேரத்தில் தான் அவளை அடித்திருக்க கூடாது என்று நினைத்து அவளுக்காக மனம் வருந்தவும் செய்தான்.. பிறகு, ‘அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்..’ என்று நினைத்தான்..
இப்பொழுதும் அவளை அடித்துவிட்டாலும் அவளைப் பத்திரமாக பார்த்துக்கொள்ள நினைக்கும் சுரேஷ் காதல் கூட உயர்ந்த ஒன்றுதான்.. அதை உணராத ராதாவோ தன்னுடைய அடுத்த திட்டத்திற்கான நேரத்தை சரியாக கணக்கிட ஆரம்பித்தாள்..
கமழினி காலாண்டுத் தேர்விலும், அரையாண்டு தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்தாள்.. இப்பொழுது அவள் பப்ளிக் எக்ஸாமிற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.. நாட்கள் வேகமெடுத்து செல்ல ஆரம்பித்தது..
அன்றைய பூங்காவின் சந்திப்புக்குப் பிறகு துகிலனை கமழினி சந்திக்கவே இல்லை.. அதற்கான சந்தர்ப்பம் அமையாமலே போக படிப்பில் முழு கவனம் செலுத்தியவளின் மனதில் மனம் நிறைந்தவனாக இடம் பிடித்தான் அவளின் காதலன் துகிலன்..
துகிலனின் மனதில், ‘காதல் மணம் வீசிய அவனின் இதய தாமரையாக இருப்பவள் வாழ்விலும் ஒளி வீசவேண்டும்..’ என்று அவளை விட்டு ஒதுக்கி இருந்தவனின் மனதில் காதல் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தினான் துகிலன்..
வசந்தின் மனதிலும் பூவிழியின் நினைவுகள் அலையாக வந்து சென்றாலும் அவளை மறக்க முடியாமல் அவளோடு பேசாமல் மௌனம் சாதித்தான்.. பூவிழி கல்லூரி மூன்றாவது வருடத்தின் அடியெடுத்து வைக்கும் பொழுது ராதாவின் திருமணத்தில் அவளோடு ஏற்பட்ட மனகசப்பில் கிளம்பி வந்தவன் கிட்டதட்ட ஒன்பது மாதமாக அவளைப் பார்க்காமல் இருக்கிறான்..
அவளைப் பார்க்காமல் இருந்தாலும் மனதால் அவளின் நினைவுகளோடு பயணிக்க ஆரம்பித்தான் வசந்த்.. கடைசியாக கிடைத்த விடுமுறை நாளில் ஊருக்கு சென்று அப்பா, அம்மா இருவரையும் பார்த்துவிட்டு வந்தான் வசந்த்..
வசந்த் ஊருக்கு சென்று திரும்பிய மறுவாரம் ஏதோவொரு வேலையாக ஸ்ரீரங்கம் வரையில் வந்திருந்த ஆறுமுகத்தையும், துளசியையும் வந்திருந்தனர்.. ஸ்ரீரங்கத்தில் ஒரு தோழியின் வீட்டிற்கு வந்தவள் அன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல அங்கே வந்திருந்த வசந்த் பெற்றோரை எதர்ச்சியாகப் பார்த்தவள் ஒரு திட்டத்துடன் துளசியை நோக்கி சென்றாள்..
“ஹாய் ஆண்ட்டி..” என்று சொல்ல தனக்கு பழக்கப்பட்ட பெண்ணின் குரல் என்று திரும்பிபார்த்தவரை நோக்கிச் சென்றாள் ராதா.. அவளைப் பார்த்தும் அடையாளம் கண்டுக்கொண்ட துளசி, “வாம்மா ராதா... எப்படிம்மா இருக்கிறாய்..??” என்று பாசத்துடன் விசாரித்தார்..
அவரின் பாசத்தில் மனம் நெகிழ்ந்தவள், “நான் நல்ல இருக்கிறேன் ஆண்ட்டி.. நீங்க அங்கிள் எல்லாம் எப்படி இருக்கீங்க..?” என்று பாசத்துடன் விசாரித்தவளைப் புன்னகையோடு பார்த்தவர், “நீ இன்னும் அப்படியே இருக்கிறாய் செல்லம்..” என்று வெள்ளேந்தியாக கூறிய துளசி, “எல்லோரும் நல்ல இருக்கிறோம்மா..” என்று கூறிய துளசி அங்கிருந்த ஒரு தூணின் அருகில் அமர்ந்தார்..
அவரின் அருகில் அமர்ந்த ராதாவைப் பார்த்தவர், “உன்னோட கணவர் எப்படிம்மா இருக்கிறார்..?” என்று கேட்டதும், “அவர் ரொம்பவே நல்ல இருக்கிறாரம்மா..” என்று சொன்னவள் நேரடியாக விஷயத்திருக்கு வந்தாள்..
“ஆண்ட்டி வசந்த் எப்படி இருக்கிறான்.. அவனுக்கும், கமழினிக்கும் கல்யாணம் செய்ய போவதாக கேள்விபட்டேன் உண்மையா ஆண்ட்டி..?” என்று சிந்தாமல் சிதறாமல் தான் வந்த காரியத்தை ஒரே வாக்கியத்தில் முடித்தாள் ராதா.. அவள் சொன்னத்தைக் கேட்டு அதிர்ந்தார் துளசி..
பூங்காவில் ராதாவைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியெங்கிலும் யோசனையோடு வந்தான் சுரேஷ்.. அவனின் நினைவுகள் அனைத்தும் அவனின் திருமணநாள் அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தது..
தன் நண்பர்களில் ஒருவன் வந்து நடந்ததை சொன்ன பொழுது சுரேஷிற்கு ராதாவின் மீது கோபம் இருந்தாலும் கூட, தன் மணக்க போகும் ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மனதில் நஞ்சை விதைத்துவிட்டு வந்தால் என்று அறிந்தும் அவளைத் தவிர்க்காமல் தன்னுடைய தாரமாக ஏற்றுக்கொண்டு கைபிடித்தான்..
அன்று இரவு அவளிடம் அது பற்றி விசாரித்த பொழுது ராதாவோ, ‘ஆமா நான்தான் அவளோட மனதில் சந்தேகத்தை உருவாக்கினேன்..’ என்று சொன்னதும், ‘இனிமேல் இப்படி செய்யாதே.. நீ அப்படி செய்வது மட்டும் எனக்கு தெரிஞ்சது அப்புறம் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது..’ என்று ராதாவை மிரட்டி வைத்தான்..
சுரேஷ் நிஜமாகவே நல்ல ஒரு மனிதன். அவள் செய்த காரியத்திற்கு மாணிக்கத்தை சந்தித்து உண்மைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டுதான் அந்த ஊரைவிட்டு வந்தான்..
அவன் திருச்சி வந்ததில் இருந்து ராதாவை அவன் எங்கே அழைத்துச் சென்றாலும் ராதாவின் விழிகளில் இருந்த தேடலை உணர்ந்து, ‘இன்னும் எந்த பெண்ணின் மனதை கெடுக்கப் போகிறாய் ராதா..?’ என்ற கேள்வியுடன் அவளோடு வாழ ஆரம்பித்தான்..
அவள் எங்கே சென்றாலும் அவளின் ஒவ்வொரு பார்வைக்கும், அவளின் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் அறிந்து வைத்திருப்பவன் மனம் இன்று அவள் பூங்காவில் நின்ற விதமும், அவளின் பார்வையில் தெரிந்த கொரூரத்தை கணக்கிட்டவனின் கோபம் எல்லை கடந்தது..
‘எதுவாக இருந்தாலும் அவள் வீட்டிற்கு வரட்டும் விசாரித்துக் கொள்ளலாம்..’ என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு வந்ததும், தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன், ‘இவள் ஏன் பூங்காவில் அப்படி அதிர்ச்சியாகி நின்றாள்..? அவளோட நண்பன் வசந்த்தை அவள் ஏன் அவ்வளவு கொரூரமாக பார்த்தாள்..?’ என்றவன் யோசித்துக்கொண்டே உடையை மாற்ற கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஹாலுக்கு சென்றான்..
அங்கிருந்த சோபாவின் அமர்ந்திருந்த ராதாவின் முகம் முழுவதும் ஏதோவொரு யோசனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்தவன், ‘இன்னும் என்ன செய்ய இப்படி திட்டம் தீட்டிட்டு இருக்கிறாள்..?’ என்ற எண்ணத்தோடு அவளின் அருகில் அமர்ந்தான் சுரேஷ்..
பிறகு, “ராதா என்ன யோசனை..?” என்று கேட்டதும், திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள் ராதா.. அவளின் திடுக்கிடலை சரியாக கவனித்துவிட்ட சுரேஷ், “என்ன என்னோட குரல் கேட்டு திடுக்கிடுகிறாய்..?” என்று கேட்டதும், “சுரேஷ்..” என்று இழுத்தவளை கன்னத்தில், ‘பளார்...’ என்று ஒரு அறைவிட்டான்..
அவனிடம் அடி வாங்கிய ராதா கையை இடது கன்னத்தில் தாங்கியபடி நிமிர்ந்து சுரேஷைப் பார்த்தாள்.. அங்கே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தவன், “ஏண்டி உனக்கு முதல் நாளே சொன்னேன் இல்ல.. நல்ல ஒரு நட்பையும், ஒரு நல்ல காதலையும் கெடுக்காதே.. நட்பு தொப்புள்கொடி உறவுகளை விடவும் புனிதமானது என்று அன்றே உனக்கு நான் சொன்னேன் இல்ல..” என்று கேட்டான்..
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை முறைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள் ராதா.. அவளின் முகத்தை பார்த்த சுரேஷ், “உன்னை எந்த அளவுக்கு நான் காதலித்தேன்.. ஆனால் உன்னோட சுயரூபம் திருமணம் நடப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தாண்டி என்னைக்கு தெரிந்தது.. இல்ல கல்யாணத்தையே நிறுத்தி இருப்பேன்..” என்று சொன்னவனை அமைதியாகப் பார்த்தாள்..
அவளின் பார்வையைப் பார்த்தவன், “ஒரு நிமிஷத்தில் ஒரு பெண்ணோட மனசில் எவ்வளவு பெரிய நஞ்சை விதைத்துவிட்டு வந்தாய்.. உனக்கு எல்லாம் கல்யாணம் ரொம்ப முக்கியமா..?” என்று கேட்ட சுரேஷ் குரலில் கொத்திப்பு கொஞ்சமும் அடங்கவில்லை..
அவனின் குரலில் இருந்த கொதிப்பை பார்த்தவள், “நானும் உண்மையாகத்தானே காதலித்தேன்..?” என்று கோபத்தோடு கேட்டதும், “உண்மையாக காதல்..” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து இகழ்ச்சியாகச் சிரிப்பை உதிர்த்தவன், “உனக்கு அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா..?” என்று கேட்டான்..
பிறகு அவளின் பார்வையைப் பார்த்துவிட்டு, “உனக்கு சொல்லி புரியவைப்பது கஷ்டம் ராதா..” என்று சொன்னவன், “உனக்கு உண்மையான மனவலி எப்படி இருக்கும் என்று தெரியல.. நீ அனுபவிக்கும் பொழுதுதான் அதோட வலி உனக்கு தெரியும்டி..” என்று சொன்னவன் அவளை விட்டு விலகிச்சென்றான்..
அவளை அடித்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்த சுரேஷ், ‘ஆண்டவா இவளுக்கு நல்ல புத்தியைக்கொடு..’ என்று வேண்டியவன், கொஞ்சநேரத்தில் தான் அவளை அடித்திருக்க கூடாது என்று நினைத்து அவளுக்காக மனம் வருந்தவும் செய்தான்.. பிறகு, ‘அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்..’ என்று நினைத்தான்..
இப்பொழுதும் அவளை அடித்துவிட்டாலும் அவளைப் பத்திரமாக பார்த்துக்கொள்ள நினைக்கும் சுரேஷ் காதல் கூட உயர்ந்த ஒன்றுதான்.. அதை உணராத ராதாவோ தன்னுடைய அடுத்த திட்டத்திற்கான நேரத்தை சரியாக கணக்கிட ஆரம்பித்தாள்..
கமழினி காலாண்டுத் தேர்விலும், அரையாண்டு தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்தாள்.. இப்பொழுது அவள் பப்ளிக் எக்ஸாமிற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.. நாட்கள் வேகமெடுத்து செல்ல ஆரம்பித்தது..
அன்றைய பூங்காவின் சந்திப்புக்குப் பிறகு துகிலனை கமழினி சந்திக்கவே இல்லை.. அதற்கான சந்தர்ப்பம் அமையாமலே போக படிப்பில் முழு கவனம் செலுத்தியவளின் மனதில் மனம் நிறைந்தவனாக இடம் பிடித்தான் அவளின் காதலன் துகிலன்..
துகிலனின் மனதில், ‘காதல் மணம் வீசிய அவனின் இதய தாமரையாக இருப்பவள் வாழ்விலும் ஒளி வீசவேண்டும்..’ என்று அவளை விட்டு ஒதுக்கி இருந்தவனின் மனதில் காதல் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தினான் துகிலன்..
வசந்தின் மனதிலும் பூவிழியின் நினைவுகள் அலையாக வந்து சென்றாலும் அவளை மறக்க முடியாமல் அவளோடு பேசாமல் மௌனம் சாதித்தான்.. பூவிழி கல்லூரி மூன்றாவது வருடத்தின் அடியெடுத்து வைக்கும் பொழுது ராதாவின் திருமணத்தில் அவளோடு ஏற்பட்ட மனகசப்பில் கிளம்பி வந்தவன் கிட்டதட்ட ஒன்பது மாதமாக அவளைப் பார்க்காமல் இருக்கிறான்..
அவளைப் பார்க்காமல் இருந்தாலும் மனதால் அவளின் நினைவுகளோடு பயணிக்க ஆரம்பித்தான் வசந்த்.. கடைசியாக கிடைத்த விடுமுறை நாளில் ஊருக்கு சென்று அப்பா, அம்மா இருவரையும் பார்த்துவிட்டு வந்தான் வசந்த்..
வசந்த் ஊருக்கு சென்று திரும்பிய மறுவாரம் ஏதோவொரு வேலையாக ஸ்ரீரங்கம் வரையில் வந்திருந்த ஆறுமுகத்தையும், துளசியையும் வந்திருந்தனர்.. ஸ்ரீரங்கத்தில் ஒரு தோழியின் வீட்டிற்கு வந்தவள் அன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல அங்கே வந்திருந்த வசந்த் பெற்றோரை எதர்ச்சியாகப் பார்த்தவள் ஒரு திட்டத்துடன் துளசியை நோக்கி சென்றாள்..
“ஹாய் ஆண்ட்டி..” என்று சொல்ல தனக்கு பழக்கப்பட்ட பெண்ணின் குரல் என்று திரும்பிபார்த்தவரை நோக்கிச் சென்றாள் ராதா.. அவளைப் பார்த்தும் அடையாளம் கண்டுக்கொண்ட துளசி, “வாம்மா ராதா... எப்படிம்மா இருக்கிறாய்..??” என்று பாசத்துடன் விசாரித்தார்..
அவரின் பாசத்தில் மனம் நெகிழ்ந்தவள், “நான் நல்ல இருக்கிறேன் ஆண்ட்டி.. நீங்க அங்கிள் எல்லாம் எப்படி இருக்கீங்க..?” என்று பாசத்துடன் விசாரித்தவளைப் புன்னகையோடு பார்த்தவர், “நீ இன்னும் அப்படியே இருக்கிறாய் செல்லம்..” என்று வெள்ளேந்தியாக கூறிய துளசி, “எல்லோரும் நல்ல இருக்கிறோம்மா..” என்று கூறிய துளசி அங்கிருந்த ஒரு தூணின் அருகில் அமர்ந்தார்..
அவரின் அருகில் அமர்ந்த ராதாவைப் பார்த்தவர், “உன்னோட கணவர் எப்படிம்மா இருக்கிறார்..?” என்று கேட்டதும், “அவர் ரொம்பவே நல்ல இருக்கிறாரம்மா..” என்று சொன்னவள் நேரடியாக விஷயத்திருக்கு வந்தாள்..
“ஆண்ட்டி வசந்த் எப்படி இருக்கிறான்.. அவனுக்கும், கமழினிக்கும் கல்யாணம் செய்ய போவதாக கேள்விபட்டேன் உண்மையா ஆண்ட்டி..?” என்று சிந்தாமல் சிதறாமல் தான் வந்த காரியத்தை ஒரே வாக்கியத்தில் முடித்தாள் ராதா.. அவள் சொன்னத்தைக் கேட்டு அதிர்ந்தார் துளசி..
Last edited: