• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 9

கிழக்கில் வானம் செவ்வானமாக மாறிவிட குயில்களின் இன்னிசைக் கேட்டு கண்விழித்த கமழினி மணியைப் பார்த்துவிட்டு வேகமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்க வெளியே ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருக்க அவருக்கு காபியைக் கொண்டு வந்து கொடுத்தார் வேணி...!

வேணியிடம் இருந்து காபியை வாங்கிய அழகர், “கண்ணனும், கமழினியும் எங்கே..? என்று கேட்கவும் கண்ணன் ஹாலை நோக்கி வரவும் சரியாக இருக்க அவனைப் பார்த்த அழகர், “என்னடா எங்கே காலையிலேயே கிளம்பிட்ட..?” என்று கேட்டதும் சிரித்த கண்ணன்,

“அப்பா நாளை என்னோட படித்த தோழி ஒருத்திக்கு திருமணம்.. அதுக்கு போக டிரெயின் டிக்கெட் புக் பண்ண போகிறேன் அப்பா..” என்றவன் சொல்லவும், “எந்த ஊரில் திருமணம்..?” என்று சாதாரணமாகவே கேட்டார் அழகர்..

அவரிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்த்த கண்ணன், “கன்னியாகுமரிப்பா.. அங்கே போய் பெரியப்பாவையும், பூவிழியையும் பார்த்துவிட்டு வரலாம் என்று இருக்கேன் அப்பா..” என்று சொல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்த அழகர், “நீ மட்டுமா போகிறாய்..?” என்று சந்தேகமாகக் கேட்டார்..

அவரின் பார்வையின் தீவிரத்தை உணர்ந்த கண்ணன், ‘கமழியை விடமாட்டார் போல தெரியுதே..?’ என்று யோசித்தவன், தந்தை தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, “நானும், வசந்த் இருவரும் தான் போகிறோம் அப்பா..” என்று அவன் சொல்வதைக் கேட்டபடியே கீழிறங்கி வந்தாள் கமழினி..

‘இவன் என்ன இப்படி சொல்கிறான்..?’ என்று யோசித்தபடியே டைனிங் ஹாலில் அமர்ந்த கமழினி, “அம்மா எனக்கு இட்லி கொண்டு வாங்க..” என்று சொன்னவளை யோசனையோடு பார்த்தார் அழகர்..

பிறகு கண்ணனின் பக்கம் திரும்பி, “டேய் அவளுக்கு இன்றோடு எக்ஸாம் எல்லாம் முடியுது.. அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு என்பதால் அவளை வெளியே எங்கேயும் கூட்டிட்டுப் போக முடியாது.. அதனால் அவளையும் கல்யாணத்துக்கு கூட்டிட்டுப் போ கண்ணா..” என்று சொல்லவும் தங்கையை திரும்பிப் பார்த்த கண்ணன் மீண்டும் தந்தையின் பக்கம் திரும்பினான்...

“அப்பா இவள் வேண்டாப்பா.. இவளை கூட்டிட்டு போறது என்றால் நீங்களும் கூட வரணும்...” என்று அவன் தயக்கமாகச் கூறியதும் மகனைப் பார்த்த அழகர், “டேய் அவள் உன்னோட தங்கை.. உன்னோட வர போவது நம்ம வசந்த்.. சோ எனக்கு யாரை பற்றியும் கவலையில்ல.. என்னோட பிள்ளைகளைப் பற்றி எனக்கு தெரியும்..” என்றவர் அழுத்தமாகச் சொல்வதைக் கேட்டபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்திருந்தாள் கமழினி..

‘எப்படியோ அப்பாவை ஓகே சொல்ல வச்சுட்டான்...’ என்ற நிம்மதியுடன் கைகழுவ எழுந்து சென்ற கமழினியைப் பார்த்த வேணி, “டேய் கண்ணா அவளைப் பாருடா எவ்வளவு வருத்தமாக எழுந்து போகிறாள் என்று.. நீயும், வசந்த்தும் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வீங்க என்று எனக்கு நல்லாவே தெரியும்.. அவளையும் கூட்டிட்டுப் போ கண்ணா..” என்று சொல்ல அவர் சொன்னதை எல்லாம் கேட்ட கண்ணன் மனதிற்குள் புன்னகைத்தான்..

பிறகு அம்மாவின் பக்கம் திரும்பியவன், “ம்ம் சரிம்மா நீங்க இவ்வளவு சொன்னபிறகு எனக்கு அதை செய்யாமல் இருந்தால் நல்லாவே இருக்காது.. நான் அவளுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணி விடுகிறேன்..” என்று கூறியவன் கமழினி வருவதைப் பார்த்துவிட்டு வீட்டின் வெளியே சென்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்..

அதற்குள் வந்த மகளைப் பார்த்த வேணி, “கமழி நல்ல எக்ஸாம் எழுது..” என்று சொல்ல அவள் வழக்கம் போலவே சரிம்மா என்று சொல்லிவிட்டு பேக்கை எடுக்க, “டேய் கண்ணா கொஞ்சம் நில்லு..” என்று கூறியவர் வேகமாக எழுந்து வாசலுக்கு சென்றார்..

தீடிரென்று எழுந்து சென்ற கணவனைப் பார்த்த வேணி அவரின் பின்னோடு சென்ற அம்மாவைப் பார்த்த கமழினி, ‘இவங்க எதுக்கு அப்பா பின்னாடி போறாங்க..?’ என்ற யோசனையுடன் அம்மாவின் பின்னோடு சென்றாள் கமழினி..

அவரின் குரல் கேட்ட கண்ணன், ‘இன்னும் இவருக்கு என்ன கேட்கபோகிறார்..?’ என்று யோசித்தவன் அப்படியே நிற்க, “கமழி..” என்று மகளை அழைத்தார்.. அவரின் குரல் கேட்ட கமழினி, “இதோ வந்துவிட்டேன்..” என்று வாசலுக்கு விரைந்தாள் கமழினி..

அவள் வந்ததும், “கண்ணா இவளைக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுட்டு அப்புறம் நீ போய் மூவருக்கும் டிரெயின் டிக்கெட் புக் பண்ணு..” என்று கூறியவர், “போம்மா அண்ணா கூட ஸ்கூலுக்கு போ.. எக்ஸாம் நல்ல எழுதணும்..” என்று சொல்ல அவர் சரியென்று தலையாட்டிவிட்டு பைக்கில் ஏறினாள்..

அவள் ஏறியதும், “ம்ம் கிளம்பு கண்ணா..” என்று அழகர் சொல்ல பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கண்ணன் வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பிய கண்ணனை நினைத்து சிரித்தாள் கமழினி..

மகனும், மகளும் செல்வதைப் பார்த்துக்கொண்டு வாசலில் நின்றவர் பின்னோடு வந்த வேணி, “இந்த கண்ணன் எப்படி எல்லாம் யோசிக்கிறான்..” என்று சொல்ல மனைவியைப் பார்த்து புன்னகைத்த அழகர்,

“உன்னோட மகனும், மகளும் ஒரே மாதிரிதான் வேணி.. இருவரும் தான் கன்னியாகுமரி போறதா பிளான் பண்ணி இருக்காங்க.. ஆனால் வெளிப்படையாக கேட்ட நம்மவிட மாட்டோமேன்று கண்ணன் நடிச்சுட்டு போராண்டி..” என்று சொல்ல கணவனைப் பார்த்து சிரித்தார் வேணி.. மனைவியைப் பார்த்து சிரித்தபடியே வீட்டின் உள்ளே சென்றார்..

காலையில் எழுந்ததும் கல்லூரி கிளம்பிய துகிலன் தனது அறையில் இருந்து வெளியே வரவும், சாரதா பள்ளிக்கூடத்திற்கு கிளம்பவும் சரியாக இருந்தது.. அவர் துகிலனைப் பார்த்தும், “என்னடா காலேஜ் கிளம்பிட்டியா..?!” என்று கேட்டபடியே சமைத்த உணவுகளை டைனிங் டேபிள் எடுத்து வைத்தார்..

“ம்ம் ஆமாம்மா..” என்று கூறியவன் டைனிங் டேபிளில் அமர்ந்ததும், “அம்மா என்னோட சீனியர் அண்ணாவுக்கு கன்னியாகுமரியில் கல்யாணம்.. அதற்கு என்னை கண்டிப்பாக வர சொல்லி சொல்லி இருக்கிறார்..” என்றவன் சொல்லவும் அவனை நிமிர்ந்துப் பார்த்தார் சாரதா..

பிறகு டைனிங் டேபிளில் அமர்ந்து, “உனக்கு ஓகே வா நீ கிளம்பு துகில்.. இது என்ன அஞ்சாவது படிக்கும் பசங்க போல பர்மிஷன் கேட்டுட்டு இருக்க..?” என்று செல்லமாக அதட்டியவர், “எப்போ கிளம்பற..?” என்று கேட்டதும், “தேங்க்ஸ்ம்மா..” என்று சொன்னவன் சாப்பிடாமல் எழுந்து கொண்டான்..

“டேய் சாப்பிடு.. உன்னோட ஆட்டபாட்டம் எல்லாம் சாப்பாட்டு அப்புறம்..” என்று கூறியவர் அவனின் கைகளைப் பிடித்து அமர வைக்க அவருடன் இணைத்து சாப்பிட்டான் துகில்.. சராதாவை அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் கூடத்தில் விட்டவன் கன்னியாகுமரி செல்ல டிக்கேட் ரிஜிஸ்டர் செய்தான்.. இரண்டு நாளும் பறந்து சென்றது...

அதற்கே உண்டான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது திருச்சி ரயில்நிலையம்.. எப்பொழுது போல மக்கம் வெள்ளம் அலைமோத காலைநேரத்தில் வெகுபரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையத்தின் உள்ளே பெரிய அட்வைஸ் மாநாடே நடந்து கொண்டிருந்தது.. [என்னடா இவள் இப்படி சொல்கிறாளே என்று என்னை பார்க்காமல் அங்கே பாருங்க..]

கமழினியும் அவளை சுற்றிலும் அழகர், வேணி, கண்ணன், வசந்த் நால்வரும் நின்றிருக்க கமழினிக்குதான் பாராட்டு மழையைப் பொழிந்தனர் அவளின் பெற்றோர்கள் இருவரும்...!

“கமழினி நீ அண்ணா கூட போற சோ வாயே திறக்க கூடாது..” என்று வேணி சொல்லவும், “ம்ம் சரிம்மா..” என்று தலையை ஆட்டியதும், “கமழி வசந்த் கூட பேசிட்டு அளபோற பண்ணிட்டு போக கூடாது.. நீ இருக்கும் இடமே யாருக்கும் தெரியாது அளவுக்கு அவ்வளவு அமைதியாக இருக்கணும்..” என்று அழகர் கூறியதும் அதற்கும் சரியென்று தலையசைத்தாள்..

இதை எல்லாம் பார்த்த வசந்த், “டேய் அவள் ரொம்ப பாவடா.. அவள் எப்படி இருக்கணும் என்று அவள்தான் முடிவு பண்ணனும் உங்க அப்பா இல்ல அவருக்கு கொஞ்சம் சொல்லு..” என்று சொல்லவும் அவனை முறைத்தான் கண்ணன்..

அவனின் முறைப்பைப் பார்த்த வசந்த், “மாமா விடுங்க நான் எதுக்கு அவள் கூட இருக்கிறேன்..? அவ மட்டும் வாய் பேசட்டும் இதோ இந்த பிளாஸ்திரி போட்டு வாயை மூடி விடுகிறேன்..” என்று கையில் இருந்த பிளாஸ்திரியைக் காட்டினான்..

வசந்த் கையில் பிளாஸ்திரியைப் பார்த்த வேணி, “டேய் இது வேண்டாம் வசந்த்.. அவள் ரொம்ப பாவம்..” என்று சொல்லவும், “இல்ல வசந்த் இவளோட வாய் அடங்காது நீ இதை வைத்திருப்பது கூட நல்லதுதான்..” என்று கூறினார் அழகர்..

இருவரையும் குழப்பிய வசந்தைப் பார்த்த கண்ணன், ‘இவன் மட்டும் எப்படித்தான் இது எல்லாம் பிளான் பண்றானோ எனக்கு தெரியல.. சரியான திருட்டு கழுதையாக இருக்கிறது..’ என்று மனதிற்குள் வசந்த்தை திட்டினான் கண்ணன்..

அவனின் பார்வையை வைத்தே அவனின் மனதைப்படித்த வசந்த், “இது எல்லாம் தெரிஞ்சு வச்சுக்க அப்போதான் உனக்கு வரபோற பொண்டாட்டி கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியும்..” என்று அவன் இரகசியமாகச் சொல்ல, ‘இவன் சொல்வதும் உண்மைதான்..’ என்று நினைத்தான் கண்ணன்..

அதைப் பார்த்த கமழினி, “துரோகி..” என்று அண்ணனைப் பார்த்துக் கொண்டே வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு, ‘நண்பா சூப்பர் ப்ளான்..’ என்று அவனைப் பார்த்து குறும்பாகக் கண்சிமிட்டினாள்.. அவளின் கண்சிமிட்டியதும், “மாமா நான் இருக்கேன் நீங்க கவலையே படாதீங்க..” என்று சொல்ல சரியென்று தலையாட்டினார்..

அதன்பிறகு மகளைப் பார்க்க பக்கத்தில் இருந்த கமழினியை காணவில்லை.. அவளை காணவில்லை என்றதும், “டேய் இவள் எங்கே காணோம்..” என்று மகனைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டார் அழகர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவரின் அதிர்ச்சி வேணிக்கும் வந்துவிட ரயில் நிலையத்தை சுற்றிலும் பார்த்தவரின் முகத்தில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்த வசந்த், ‘இவள் எங்கே போனா..?’ என்று அவன் கோபத்தில் பார்வையைத் திருப்பினான்..

அவள் ஒரு பெரியவருடன் பேசுவது கண்ணில் பட, ‘அது யாரு..?’ என்ற யோசனையுடன் அவரின் அருகில் சென்றான் வசந்த்.. மற்ற மூவரும் வேறு இடங்களில் அவளை தேடவே வசந்த் மட்டும் அங்கே நடப்பதை கவனித்தான்..

ரயில் கிளம்பும் அறிவிப்பு வரும் வரையில் கிருஷ்ணாவும் துகிலனும் பேசிக்கொண்டிருக்க தீடிரென்று தன்னை நோக்கி வந்த நடுத்தர வயதைத் தாண்டியவரைப் பார்த்த துகிலன், “டேய் இவரு யாரையோ தேடுகிறார் போல தெரியுது..” என்று சொல்ல நிமிர்ந்துப் பார்த்த கிருஷ்ணா, “ம்ம் எனக்கும் அப்படித்தான் தெரியுது..” என்று கூறினான்..

அவர் தன்னருகில் வரும் வரையில் அமைதியாக நின்றிருந்தவன் துகிலன்.. அவனின் அருகில் வந்தவர், “தம்பி என்னோட மகளைப் பார்த்தாயா..?!” என்று பதட்டத்துடன் என்று கேட்டதும், “இல்ல சார் பார்க்கல..” என்று சொல்லவும் அவர் வருத்ததுடன் அங்கிருந்து செல்ல அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது..

அவன் அவரின் செய்கைகளைப் பார்க்க அவர் தீடிரென்று அங்கே சென்ற ஒரு பதினேழு வயது உடையபெண் அவர்களைக் கடந்து செல்ல, “திவ்யா..” என்று அழைத்தார்.. அவரின் அழைப்பில் நின்ற அப்பெண்ணைப் பார்த்தான் துகிலன்..

அத்தனை பெயரும் அவரை பைத்தியம் என்று சொல்லிக் கொண்டிருக்க அதை எல்லாம் கண்டு கொள்ளாத கமழினி வசந்த் அடிக்கடி சொல்வதைப் பயன்படுத்தி தன் மனதை ஒரு நிலைப்படுத்திக்கொண்டாள்..

பிறகு அவரின் பக்கம் திரும்பி, “அப்பா இங்கே என்ன பண்றீங்க..?” என்று கேட்டதும், “என்னம்மா என்னை இப்படி எல்லாம் தவிக்க விட்டுட்டியே..?!” என்று வருத்ததுடன் கேட்டதும், “ஐயோ அப்பா நான் வேலைக்கு தானே போகிறேன்.. இன்னும் இரண்டு மணிநேரம் உங்க பொண்ணு சீக்கிரம் ஓடி வந்துவிடுவேன்..” என்றாள் சிரித்து கொண்டே!

அவளின் முகத்தை மெல்ல வருடியவர், “கண்டிப்பாக நீ வந்துவிடுவா தானே..?” என்று கேட்க, “உங்க மேல சத்தியமாக நான் வந்துவிடுவேன்..” என்று சொல்லிவிட்டு அவரின் அருகில் இருந்து எழுந்தவள், “அப்பா நான் வரும் வரை சாப்பிட்டுவிட்டு சந்தோசமாக இருக்கணும்..” என்று கூறியவள் அவரை விட்டு நகரும் வரையில் அவளின் மீது கவனத்தை செல்லுத்தினர் துகிலனும், வசந்த்தும்..!

துகிலனுக்கு அவள் பேசியதும், ‘இவள் ஏதோவொரு விதத்தில் தன்னுடைய மனதை கவர்ந்து அதில் நிறைந்தும் நிற்கிறாள்..’ என்று நினைத்தவனுக்கு அவள் அந்த பெரியவரிடம் நிதானமாக நடந்த விதமும் பிடித்தது..

அவள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது அவளை நெருங்கிய வசந்த், “கமழி..” என்று அழைக்கவும் நின்று அவனைத் திரும்பிப் பார்த்த கமழினி, “வசந்த்..” என்றவனின் தோளில் சாய்ந்து அழுதாள்..

அதை தூரத்தில் இருந்து பார்த்த துகிலனுக்கு கோபமே வந்தது.. ஏனோ அவன் ஒவ்வொரு முறை சந்திக்கும் பொழுதும் வசந்தின் மீது மட்டும் துகிலனின் கண்ணோட்டம் மாறிப்போனது.. ‘எதுவும் நாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது..’ என்று யாருக்கும் புரிவதே இல்ல.. வசந்தைப் பார்த்த துகிலன் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தியபடியே கிருஷ்ணனை நோக்கிச் சென்றான்..

தீடிரென்று அழுத கமழினியைப் பார்த்த வசந்த், “கமழி..” என்று அழைக்க, “வசந்த் இவங்க எல்லாம் என்ன பாவம் செஞ்சாங்க..? இப்படி பைத்தியமாக இருக்காங்களே..?” என்று கேட்டதும், “அது அவங்க ஒருவர் மீது வைத்திருக்கும் அதிகபடியான பாசத்தால் சில தவறுகளை செய்கின்றனர்.. அந்த தவறுக்கு கிடைக்கும் தண்டனைதான் இந்த மாதிரி ஒரு நிலை..” என்றவன் விளக்கமாகச் சொல்லவும்,

அவனை விட்டு விலகிய கமழினி, இரு கண்களையும் துடைத்துக்கொண்டு, “நான் டாக்டர் ஆனால் இவளுக்கு எல்லாம் தனியாக ஒரு மருத்துவமனை கட்டி இவங்களுக்கு எல்லாம் ரீட்மென்ட் கொடுத்து நான் தொடங்கும் ஆசரமத்தில் இவர்களை வைத்து பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன்..” என்று உறுதியாக கூறினாள்..

அவளின் அந்த உறுதியைக் கண்ட வசந்த், ‘தன்னால் இதை கண்டிப்பாக சாதிக்க முடியுமா..?’ என்று யோசிக்கும் பெண்களில் இருந்து வேறுபட்டு தெரிந்தாள் கமழினி..’தன்னால் இதை சாதிக்க முடியும்..’ என்று உறுதியாக கூறியதை நினைத்து ஒரு தோழனாக பெருமைப்பட்டான்..

அப்பொழுது அழகர் தங்களை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு, “ஏய் கமழிலி அந்த பேசன்ஜர் லிஸ்ட் ல உன்னோட பெயர் எங்கே என்று பாரு..” சொல்லவும் தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொண்ட கமழினி அதை படிக்க ஆரம்பித்தாள்..

கமழினியோ ரயில்வே சீட் பற்றிய விவரத்தைப் பார்த்து, “நம்ம கம்பார்ட்மெண்டில் யார் யார் எல்லாம் இருக்காங்க..?” என்று தனக்கு தானே கேள்வி அந்த வரிசையில் இருந்த பெயர்களைப் படிக்க ஆரம்பித்தாள்..

அவள் வரிசையாக படித்துக் கொண்டே அவர அவளின் முதுகில் ஒரு அடி போட்ட வசந்த், “லூசு உன்னை எங்கெல்லாம் தேடுவது..?” என்று கேட்டதும் திடுகிட்டு அவனைப் பார்த்தாள் கமழினி..

இருந்தாலும் அவன் சொன்னதை எல்லாம் காதில் வாங்காத கமழினி, “டேய் நம்ம கம்பார்ட்மெண்டில் எல்லாம் பசங்கதான் இருக்காங்க.. ஒரு பொண்ணு கூட இல்ல..” என்றவள் வருத்ததுடன் கூறினாள்..

அதற்குள் அவளின் அருகில் வந்த மூவரும், “கமழி என்ன இது விளையாட்டு..?” என்று அதட்டவும் அப்பொழுது தான் சொல்லாமல் வந்தது அவளுக்கு புரிய, “மறுபடியும் ஆரம்பிப்பாங்களே..!” என்று தலையில் கைவைத்தபடி வசந்தைப் பார்த்தாள்..

அவளின் பார்வையைப் பார்த்த வசந்த், “மாமா நான் இவளை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன் நீங்க கவலைபடாமல் இருங்க..” என்று மட்டும் சொல்ல ரயில் எடுப்பதற்கான அறிவிப்புகள் வந்தது... அதைக்கேட்ட அழகர், “நீ ஊருக்குப் போயிட்டு வா இருக்கு உனக்கு..” என்ற மிரட்டலுடன் நிறுத்துக் கொண்டவர்,

“மூவரும் முதலில் ரயிலில் ஏறுங்க..” என்று சொல்லவும் முதல் ஆளாக தப்பித்தோம் பிழைத்தோம் என்ற நிலையில் ரயிலில் ஏறியவர், ‘யெப்பா இவங்க கிட்ட இருந்து தப்பிக்க எத்தனை பாடுபடவேண்டி இருக்கு..” என்று புலம்பியபடியே தன்னுடைய கம்பார்ட்மெண்டை தேடி சென்றாள் கமழினி.. அந்த அறிவிப்பு வந்ததும் ரயிலில் ஏறினார்கள் துகிலனும், கிருஷ்ணனும்..!

அவள் கம்பார்ட்மெண்டிற்கு சென்று தன்னுடைய சீட்டில் அமர்ந்து வசந்தையும், கண்ணனையும் தேடினாள்.. அவர்கள் வராமல் இருக்க, ஹெட்செட் எடுத்து காதில் போட்டவள் தனக்கு பிடித்த பாடலைத் தேடினாள்.. அந்தநேரம் தன்னருகில் நிழலாட கண்ட கமழினி, ‘இருவரும் வந்துட்டாங்களா..?’ என்று நினைத்தாள்..

இருவரும் தங்களுக்குள் பேசியபடியே தன்னுடைய கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைய, “டேய் தடிமாடு நீ வர இவ்வளவு நேரமா..? கொஞ்சமாவது அறிவு இருக்கா..?” கேட்டபடியே நிமிர்ந்தவள் அதிர்ந்தாள்.. அவள் சொன்னதைக்கேட்டு இருவரும் அதிர்ந்து நின்றனர்...

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வந்தது துகிலனோ!!!! முதல் வரவேற்பே பலமாக துகிலனுக்கு கிடைத்துவிட்டது போல??
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top