அத்தியாயம் – 9
கிழக்கில் வானம் செவ்வானமாக மாறிவிட குயில்களின் இன்னிசைக் கேட்டு கண்விழித்த கமழினி மணியைப் பார்த்துவிட்டு வேகமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்க வெளியே ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருக்க அவருக்கு காபியைக் கொண்டு வந்து கொடுத்தார் வேணி...!
வேணியிடம் இருந்து காபியை வாங்கிய அழகர், “கண்ணனும், கமழினியும் எங்கே..? என்று கேட்கவும் கண்ணன் ஹாலை நோக்கி வரவும் சரியாக இருக்க அவனைப் பார்த்த அழகர், “என்னடா எங்கே காலையிலேயே கிளம்பிட்ட..?” என்று கேட்டதும் சிரித்த கண்ணன்,
“அப்பா நாளை என்னோட படித்த தோழி ஒருத்திக்கு திருமணம்.. அதுக்கு போக டிரெயின் டிக்கெட் புக் பண்ண போகிறேன் அப்பா..” என்றவன் சொல்லவும், “எந்த ஊரில் திருமணம்..?” என்று சாதாரணமாகவே கேட்டார் அழகர்..
அவரிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்த்த கண்ணன், “கன்னியாகுமரிப்பா.. அங்கே போய் பெரியப்பாவையும், பூவிழியையும் பார்த்துவிட்டு வரலாம் என்று இருக்கேன் அப்பா..” என்று சொல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்த அழகர், “நீ மட்டுமா போகிறாய்..?” என்று சந்தேகமாகக் கேட்டார்..
அவரின் பார்வையின் தீவிரத்தை உணர்ந்த கண்ணன், ‘கமழியை விடமாட்டார் போல தெரியுதே..?’ என்று யோசித்தவன், தந்தை தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, “நானும், வசந்த் இருவரும் தான் போகிறோம் அப்பா..” என்று அவன் சொல்வதைக் கேட்டபடியே கீழிறங்கி வந்தாள் கமழினி..
‘இவன் என்ன இப்படி சொல்கிறான்..?’ என்று யோசித்தபடியே டைனிங் ஹாலில் அமர்ந்த கமழினி, “அம்மா எனக்கு இட்லி கொண்டு வாங்க..” என்று சொன்னவளை யோசனையோடு பார்த்தார் அழகர்..
பிறகு கண்ணனின் பக்கம் திரும்பி, “டேய் அவளுக்கு இன்றோடு எக்ஸாம் எல்லாம் முடியுது.. அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு என்பதால் அவளை வெளியே எங்கேயும் கூட்டிட்டுப் போக முடியாது.. அதனால் அவளையும் கல்யாணத்துக்கு கூட்டிட்டுப் போ கண்ணா..” என்று சொல்லவும் தங்கையை திரும்பிப் பார்த்த கண்ணன் மீண்டும் தந்தையின் பக்கம் திரும்பினான்...
“அப்பா இவள் வேண்டாப்பா.. இவளை கூட்டிட்டு போறது என்றால் நீங்களும் கூட வரணும்...” என்று அவன் தயக்கமாகச் கூறியதும் மகனைப் பார்த்த அழகர், “டேய் அவள் உன்னோட தங்கை.. உன்னோட வர போவது நம்ம வசந்த்.. சோ எனக்கு யாரை பற்றியும் கவலையில்ல.. என்னோட பிள்ளைகளைப் பற்றி எனக்கு தெரியும்..” என்றவர் அழுத்தமாகச் சொல்வதைக் கேட்டபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்திருந்தாள் கமழினி..
‘எப்படியோ அப்பாவை ஓகே சொல்ல வச்சுட்டான்...’ என்ற நிம்மதியுடன் கைகழுவ எழுந்து சென்ற கமழினியைப் பார்த்த வேணி, “டேய் கண்ணா அவளைப் பாருடா எவ்வளவு வருத்தமாக எழுந்து போகிறாள் என்று.. நீயும், வசந்த்தும் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வீங்க என்று எனக்கு நல்லாவே தெரியும்.. அவளையும் கூட்டிட்டுப் போ கண்ணா..” என்று சொல்ல அவர் சொன்னதை எல்லாம் கேட்ட கண்ணன் மனதிற்குள் புன்னகைத்தான்..
பிறகு அம்மாவின் பக்கம் திரும்பியவன், “ம்ம் சரிம்மா நீங்க இவ்வளவு சொன்னபிறகு எனக்கு அதை செய்யாமல் இருந்தால் நல்லாவே இருக்காது.. நான் அவளுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணி விடுகிறேன்..” என்று கூறியவன் கமழினி வருவதைப் பார்த்துவிட்டு வீட்டின் வெளியே சென்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்..
அதற்குள் வந்த மகளைப் பார்த்த வேணி, “கமழி நல்ல எக்ஸாம் எழுது..” என்று சொல்ல அவள் வழக்கம் போலவே சரிம்மா என்று சொல்லிவிட்டு பேக்கை எடுக்க, “டேய் கண்ணா கொஞ்சம் நில்லு..” என்று கூறியவர் வேகமாக எழுந்து வாசலுக்கு சென்றார்..
தீடிரென்று எழுந்து சென்ற கணவனைப் பார்த்த வேணி அவரின் பின்னோடு சென்ற அம்மாவைப் பார்த்த கமழினி, ‘இவங்க எதுக்கு அப்பா பின்னாடி போறாங்க..?’ என்ற யோசனையுடன் அம்மாவின் பின்னோடு சென்றாள் கமழினி..
அவரின் குரல் கேட்ட கண்ணன், ‘இன்னும் இவருக்கு என்ன கேட்கபோகிறார்..?’ என்று யோசித்தவன் அப்படியே நிற்க, “கமழி..” என்று மகளை அழைத்தார்.. அவரின் குரல் கேட்ட கமழினி, “இதோ வந்துவிட்டேன்..” என்று வாசலுக்கு விரைந்தாள் கமழினி..
அவள் வந்ததும், “கண்ணா இவளைக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுட்டு அப்புறம் நீ போய் மூவருக்கும் டிரெயின் டிக்கெட் புக் பண்ணு..” என்று கூறியவர், “போம்மா அண்ணா கூட ஸ்கூலுக்கு போ.. எக்ஸாம் நல்ல எழுதணும்..” என்று சொல்ல அவர் சரியென்று தலையாட்டிவிட்டு பைக்கில் ஏறினாள்..
அவள் ஏறியதும், “ம்ம் கிளம்பு கண்ணா..” என்று அழகர் சொல்ல பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கண்ணன் வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பிய கண்ணனை நினைத்து சிரித்தாள் கமழினி..
மகனும், மகளும் செல்வதைப் பார்த்துக்கொண்டு வாசலில் நின்றவர் பின்னோடு வந்த வேணி, “இந்த கண்ணன் எப்படி எல்லாம் யோசிக்கிறான்..” என்று சொல்ல மனைவியைப் பார்த்து புன்னகைத்த அழகர்,
“உன்னோட மகனும், மகளும் ஒரே மாதிரிதான் வேணி.. இருவரும் தான் கன்னியாகுமரி போறதா பிளான் பண்ணி இருக்காங்க.. ஆனால் வெளிப்படையாக கேட்ட நம்மவிட மாட்டோமேன்று கண்ணன் நடிச்சுட்டு போராண்டி..” என்று சொல்ல கணவனைப் பார்த்து சிரித்தார் வேணி.. மனைவியைப் பார்த்து சிரித்தபடியே வீட்டின் உள்ளே சென்றார்..
காலையில் எழுந்ததும் கல்லூரி கிளம்பிய துகிலன் தனது அறையில் இருந்து வெளியே வரவும், சாரதா பள்ளிக்கூடத்திற்கு கிளம்பவும் சரியாக இருந்தது.. அவர் துகிலனைப் பார்த்தும், “என்னடா காலேஜ் கிளம்பிட்டியா..?!” என்று கேட்டபடியே சமைத்த உணவுகளை டைனிங் டேபிள் எடுத்து வைத்தார்..
“ம்ம் ஆமாம்மா..” என்று கூறியவன் டைனிங் டேபிளில் அமர்ந்ததும், “அம்மா என்னோட சீனியர் அண்ணாவுக்கு கன்னியாகுமரியில் கல்யாணம்.. அதற்கு என்னை கண்டிப்பாக வர சொல்லி சொல்லி இருக்கிறார்..” என்றவன் சொல்லவும் அவனை நிமிர்ந்துப் பார்த்தார் சாரதா..
பிறகு டைனிங் டேபிளில் அமர்ந்து, “உனக்கு ஓகே வா நீ கிளம்பு துகில்.. இது என்ன அஞ்சாவது படிக்கும் பசங்க போல பர்மிஷன் கேட்டுட்டு இருக்க..?” என்று செல்லமாக அதட்டியவர், “எப்போ கிளம்பற..?” என்று கேட்டதும், “தேங்க்ஸ்ம்மா..” என்று சொன்னவன் சாப்பிடாமல் எழுந்து கொண்டான்..
“டேய் சாப்பிடு.. உன்னோட ஆட்டபாட்டம் எல்லாம் சாப்பாட்டு அப்புறம்..” என்று கூறியவர் அவனின் கைகளைப் பிடித்து அமர வைக்க அவருடன் இணைத்து சாப்பிட்டான் துகில்.. சராதாவை அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் கூடத்தில் விட்டவன் கன்னியாகுமரி செல்ல டிக்கேட் ரிஜிஸ்டர் செய்தான்.. இரண்டு நாளும் பறந்து சென்றது...
அதற்கே உண்டான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது திருச்சி ரயில்நிலையம்.. எப்பொழுது போல மக்கம் வெள்ளம் அலைமோத காலைநேரத்தில் வெகுபரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையத்தின் உள்ளே பெரிய அட்வைஸ் மாநாடே நடந்து கொண்டிருந்தது.. [என்னடா இவள் இப்படி சொல்கிறாளே என்று என்னை பார்க்காமல் அங்கே பாருங்க..]
கமழினியும் அவளை சுற்றிலும் அழகர், வேணி, கண்ணன், வசந்த் நால்வரும் நின்றிருக்க கமழினிக்குதான் பாராட்டு மழையைப் பொழிந்தனர் அவளின் பெற்றோர்கள் இருவரும்...!
“கமழினி நீ அண்ணா கூட போற சோ வாயே திறக்க கூடாது..” என்று வேணி சொல்லவும், “ம்ம் சரிம்மா..” என்று தலையை ஆட்டியதும், “கமழி வசந்த் கூட பேசிட்டு அளபோற பண்ணிட்டு போக கூடாது.. நீ இருக்கும் இடமே யாருக்கும் தெரியாது அளவுக்கு அவ்வளவு அமைதியாக இருக்கணும்..” என்று அழகர் கூறியதும் அதற்கும் சரியென்று தலையசைத்தாள்..
இதை எல்லாம் பார்த்த வசந்த், “டேய் அவள் ரொம்ப பாவடா.. அவள் எப்படி இருக்கணும் என்று அவள்தான் முடிவு பண்ணனும் உங்க அப்பா இல்ல அவருக்கு கொஞ்சம் சொல்லு..” என்று சொல்லவும் அவனை முறைத்தான் கண்ணன்..
அவனின் முறைப்பைப் பார்த்த வசந்த், “மாமா விடுங்க நான் எதுக்கு அவள் கூட இருக்கிறேன்..? அவ மட்டும் வாய் பேசட்டும் இதோ இந்த பிளாஸ்திரி போட்டு வாயை மூடி விடுகிறேன்..” என்று கையில் இருந்த பிளாஸ்திரியைக் காட்டினான்..
வசந்த் கையில் பிளாஸ்திரியைப் பார்த்த வேணி, “டேய் இது வேண்டாம் வசந்த்.. அவள் ரொம்ப பாவம்..” என்று சொல்லவும், “இல்ல வசந்த் இவளோட வாய் அடங்காது நீ இதை வைத்திருப்பது கூட நல்லதுதான்..” என்று கூறினார் அழகர்..
இருவரையும் குழப்பிய வசந்தைப் பார்த்த கண்ணன், ‘இவன் மட்டும் எப்படித்தான் இது எல்லாம் பிளான் பண்றானோ எனக்கு தெரியல.. சரியான திருட்டு கழுதையாக இருக்கிறது..’ என்று மனதிற்குள் வசந்த்தை திட்டினான் கண்ணன்..
அவனின் பார்வையை வைத்தே அவனின் மனதைப்படித்த வசந்த், “இது எல்லாம் தெரிஞ்சு வச்சுக்க அப்போதான் உனக்கு வரபோற பொண்டாட்டி கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியும்..” என்று அவன் இரகசியமாகச் சொல்ல, ‘இவன் சொல்வதும் உண்மைதான்..’ என்று நினைத்தான் கண்ணன்..
அதைப் பார்த்த கமழினி, “துரோகி..” என்று அண்ணனைப் பார்த்துக் கொண்டே வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு, ‘நண்பா சூப்பர் ப்ளான்..’ என்று அவனைப் பார்த்து குறும்பாகக் கண்சிமிட்டினாள்.. அவளின் கண்சிமிட்டியதும், “மாமா நான் இருக்கேன் நீங்க கவலையே படாதீங்க..” என்று சொல்ல சரியென்று தலையாட்டினார்..
அதன்பிறகு மகளைப் பார்க்க பக்கத்தில் இருந்த கமழினியை காணவில்லை.. அவளை காணவில்லை என்றதும், “டேய் இவள் எங்கே காணோம்..” என்று மகனைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டார் அழகர்..
கிழக்கில் வானம் செவ்வானமாக மாறிவிட குயில்களின் இன்னிசைக் கேட்டு கண்விழித்த கமழினி மணியைப் பார்த்துவிட்டு வேகமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்க வெளியே ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருக்க அவருக்கு காபியைக் கொண்டு வந்து கொடுத்தார் வேணி...!
வேணியிடம் இருந்து காபியை வாங்கிய அழகர், “கண்ணனும், கமழினியும் எங்கே..? என்று கேட்கவும் கண்ணன் ஹாலை நோக்கி வரவும் சரியாக இருக்க அவனைப் பார்த்த அழகர், “என்னடா எங்கே காலையிலேயே கிளம்பிட்ட..?” என்று கேட்டதும் சிரித்த கண்ணன்,
“அப்பா நாளை என்னோட படித்த தோழி ஒருத்திக்கு திருமணம்.. அதுக்கு போக டிரெயின் டிக்கெட் புக் பண்ண போகிறேன் அப்பா..” என்றவன் சொல்லவும், “எந்த ஊரில் திருமணம்..?” என்று சாதாரணமாகவே கேட்டார் அழகர்..
அவரிடம் இருந்து இந்த கேள்வியை எதிர்பார்த்த கண்ணன், “கன்னியாகுமரிப்பா.. அங்கே போய் பெரியப்பாவையும், பூவிழியையும் பார்த்துவிட்டு வரலாம் என்று இருக்கேன் அப்பா..” என்று சொல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்த அழகர், “நீ மட்டுமா போகிறாய்..?” என்று சந்தேகமாகக் கேட்டார்..
அவரின் பார்வையின் தீவிரத்தை உணர்ந்த கண்ணன், ‘கமழியை விடமாட்டார் போல தெரியுதே..?’ என்று யோசித்தவன், தந்தை தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, “நானும், வசந்த் இருவரும் தான் போகிறோம் அப்பா..” என்று அவன் சொல்வதைக் கேட்டபடியே கீழிறங்கி வந்தாள் கமழினி..
‘இவன் என்ன இப்படி சொல்கிறான்..?’ என்று யோசித்தபடியே டைனிங் ஹாலில் அமர்ந்த கமழினி, “அம்மா எனக்கு இட்லி கொண்டு வாங்க..” என்று சொன்னவளை யோசனையோடு பார்த்தார் அழகர்..
பிறகு கண்ணனின் பக்கம் திரும்பி, “டேய் அவளுக்கு இன்றோடு எக்ஸாம் எல்லாம் முடியுது.. அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு என்பதால் அவளை வெளியே எங்கேயும் கூட்டிட்டுப் போக முடியாது.. அதனால் அவளையும் கல்யாணத்துக்கு கூட்டிட்டுப் போ கண்ணா..” என்று சொல்லவும் தங்கையை திரும்பிப் பார்த்த கண்ணன் மீண்டும் தந்தையின் பக்கம் திரும்பினான்...
“அப்பா இவள் வேண்டாப்பா.. இவளை கூட்டிட்டு போறது என்றால் நீங்களும் கூட வரணும்...” என்று அவன் தயக்கமாகச் கூறியதும் மகனைப் பார்த்த அழகர், “டேய் அவள் உன்னோட தங்கை.. உன்னோட வர போவது நம்ம வசந்த்.. சோ எனக்கு யாரை பற்றியும் கவலையில்ல.. என்னோட பிள்ளைகளைப் பற்றி எனக்கு தெரியும்..” என்றவர் அழுத்தமாகச் சொல்வதைக் கேட்டபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்திருந்தாள் கமழினி..
‘எப்படியோ அப்பாவை ஓகே சொல்ல வச்சுட்டான்...’ என்ற நிம்மதியுடன் கைகழுவ எழுந்து சென்ற கமழினியைப் பார்த்த வேணி, “டேய் கண்ணா அவளைப் பாருடா எவ்வளவு வருத்தமாக எழுந்து போகிறாள் என்று.. நீயும், வசந்த்தும் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வீங்க என்று எனக்கு நல்லாவே தெரியும்.. அவளையும் கூட்டிட்டுப் போ கண்ணா..” என்று சொல்ல அவர் சொன்னதை எல்லாம் கேட்ட கண்ணன் மனதிற்குள் புன்னகைத்தான்..
பிறகு அம்மாவின் பக்கம் திரும்பியவன், “ம்ம் சரிம்மா நீங்க இவ்வளவு சொன்னபிறகு எனக்கு அதை செய்யாமல் இருந்தால் நல்லாவே இருக்காது.. நான் அவளுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணி விடுகிறேன்..” என்று கூறியவன் கமழினி வருவதைப் பார்த்துவிட்டு வீட்டின் வெளியே சென்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்..
அதற்குள் வந்த மகளைப் பார்த்த வேணி, “கமழி நல்ல எக்ஸாம் எழுது..” என்று சொல்ல அவள் வழக்கம் போலவே சரிம்மா என்று சொல்லிவிட்டு பேக்கை எடுக்க, “டேய் கண்ணா கொஞ்சம் நில்லு..” என்று கூறியவர் வேகமாக எழுந்து வாசலுக்கு சென்றார்..
தீடிரென்று எழுந்து சென்ற கணவனைப் பார்த்த வேணி அவரின் பின்னோடு சென்ற அம்மாவைப் பார்த்த கமழினி, ‘இவங்க எதுக்கு அப்பா பின்னாடி போறாங்க..?’ என்ற யோசனையுடன் அம்மாவின் பின்னோடு சென்றாள் கமழினி..
அவரின் குரல் கேட்ட கண்ணன், ‘இன்னும் இவருக்கு என்ன கேட்கபோகிறார்..?’ என்று யோசித்தவன் அப்படியே நிற்க, “கமழி..” என்று மகளை அழைத்தார்.. அவரின் குரல் கேட்ட கமழினி, “இதோ வந்துவிட்டேன்..” என்று வாசலுக்கு விரைந்தாள் கமழினி..
அவள் வந்ததும், “கண்ணா இவளைக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுட்டு அப்புறம் நீ போய் மூவருக்கும் டிரெயின் டிக்கெட் புக் பண்ணு..” என்று கூறியவர், “போம்மா அண்ணா கூட ஸ்கூலுக்கு போ.. எக்ஸாம் நல்ல எழுதணும்..” என்று சொல்ல அவர் சரியென்று தலையாட்டிவிட்டு பைக்கில் ஏறினாள்..
அவள் ஏறியதும், “ம்ம் கிளம்பு கண்ணா..” என்று அழகர் சொல்ல பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கண்ணன் வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பிய கண்ணனை நினைத்து சிரித்தாள் கமழினி..
மகனும், மகளும் செல்வதைப் பார்த்துக்கொண்டு வாசலில் நின்றவர் பின்னோடு வந்த வேணி, “இந்த கண்ணன் எப்படி எல்லாம் யோசிக்கிறான்..” என்று சொல்ல மனைவியைப் பார்த்து புன்னகைத்த அழகர்,
“உன்னோட மகனும், மகளும் ஒரே மாதிரிதான் வேணி.. இருவரும் தான் கன்னியாகுமரி போறதா பிளான் பண்ணி இருக்காங்க.. ஆனால் வெளிப்படையாக கேட்ட நம்மவிட மாட்டோமேன்று கண்ணன் நடிச்சுட்டு போராண்டி..” என்று சொல்ல கணவனைப் பார்த்து சிரித்தார் வேணி.. மனைவியைப் பார்த்து சிரித்தபடியே வீட்டின் உள்ளே சென்றார்..
காலையில் எழுந்ததும் கல்லூரி கிளம்பிய துகிலன் தனது அறையில் இருந்து வெளியே வரவும், சாரதா பள்ளிக்கூடத்திற்கு கிளம்பவும் சரியாக இருந்தது.. அவர் துகிலனைப் பார்த்தும், “என்னடா காலேஜ் கிளம்பிட்டியா..?!” என்று கேட்டபடியே சமைத்த உணவுகளை டைனிங் டேபிள் எடுத்து வைத்தார்..
“ம்ம் ஆமாம்மா..” என்று கூறியவன் டைனிங் டேபிளில் அமர்ந்ததும், “அம்மா என்னோட சீனியர் அண்ணாவுக்கு கன்னியாகுமரியில் கல்யாணம்.. அதற்கு என்னை கண்டிப்பாக வர சொல்லி சொல்லி இருக்கிறார்..” என்றவன் சொல்லவும் அவனை நிமிர்ந்துப் பார்த்தார் சாரதா..
பிறகு டைனிங் டேபிளில் அமர்ந்து, “உனக்கு ஓகே வா நீ கிளம்பு துகில்.. இது என்ன அஞ்சாவது படிக்கும் பசங்க போல பர்மிஷன் கேட்டுட்டு இருக்க..?” என்று செல்லமாக அதட்டியவர், “எப்போ கிளம்பற..?” என்று கேட்டதும், “தேங்க்ஸ்ம்மா..” என்று சொன்னவன் சாப்பிடாமல் எழுந்து கொண்டான்..
“டேய் சாப்பிடு.. உன்னோட ஆட்டபாட்டம் எல்லாம் சாப்பாட்டு அப்புறம்..” என்று கூறியவர் அவனின் கைகளைப் பிடித்து அமர வைக்க அவருடன் இணைத்து சாப்பிட்டான் துகில்.. சராதாவை அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் கூடத்தில் விட்டவன் கன்னியாகுமரி செல்ல டிக்கேட் ரிஜிஸ்டர் செய்தான்.. இரண்டு நாளும் பறந்து சென்றது...
அதற்கே உண்டான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது திருச்சி ரயில்நிலையம்.. எப்பொழுது போல மக்கம் வெள்ளம் அலைமோத காலைநேரத்தில் வெகுபரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையத்தின் உள்ளே பெரிய அட்வைஸ் மாநாடே நடந்து கொண்டிருந்தது.. [என்னடா இவள் இப்படி சொல்கிறாளே என்று என்னை பார்க்காமல் அங்கே பாருங்க..]
கமழினியும் அவளை சுற்றிலும் அழகர், வேணி, கண்ணன், வசந்த் நால்வரும் நின்றிருக்க கமழினிக்குதான் பாராட்டு மழையைப் பொழிந்தனர் அவளின் பெற்றோர்கள் இருவரும்...!
“கமழினி நீ அண்ணா கூட போற சோ வாயே திறக்க கூடாது..” என்று வேணி சொல்லவும், “ம்ம் சரிம்மா..” என்று தலையை ஆட்டியதும், “கமழி வசந்த் கூட பேசிட்டு அளபோற பண்ணிட்டு போக கூடாது.. நீ இருக்கும் இடமே யாருக்கும் தெரியாது அளவுக்கு அவ்வளவு அமைதியாக இருக்கணும்..” என்று அழகர் கூறியதும் அதற்கும் சரியென்று தலையசைத்தாள்..
இதை எல்லாம் பார்த்த வசந்த், “டேய் அவள் ரொம்ப பாவடா.. அவள் எப்படி இருக்கணும் என்று அவள்தான் முடிவு பண்ணனும் உங்க அப்பா இல்ல அவருக்கு கொஞ்சம் சொல்லு..” என்று சொல்லவும் அவனை முறைத்தான் கண்ணன்..
அவனின் முறைப்பைப் பார்த்த வசந்த், “மாமா விடுங்க நான் எதுக்கு அவள் கூட இருக்கிறேன்..? அவ மட்டும் வாய் பேசட்டும் இதோ இந்த பிளாஸ்திரி போட்டு வாயை மூடி விடுகிறேன்..” என்று கையில் இருந்த பிளாஸ்திரியைக் காட்டினான்..
வசந்த் கையில் பிளாஸ்திரியைப் பார்த்த வேணி, “டேய் இது வேண்டாம் வசந்த்.. அவள் ரொம்ப பாவம்..” என்று சொல்லவும், “இல்ல வசந்த் இவளோட வாய் அடங்காது நீ இதை வைத்திருப்பது கூட நல்லதுதான்..” என்று கூறினார் அழகர்..
இருவரையும் குழப்பிய வசந்தைப் பார்த்த கண்ணன், ‘இவன் மட்டும் எப்படித்தான் இது எல்லாம் பிளான் பண்றானோ எனக்கு தெரியல.. சரியான திருட்டு கழுதையாக இருக்கிறது..’ என்று மனதிற்குள் வசந்த்தை திட்டினான் கண்ணன்..
அவனின் பார்வையை வைத்தே அவனின் மனதைப்படித்த வசந்த், “இது எல்லாம் தெரிஞ்சு வச்சுக்க அப்போதான் உனக்கு வரபோற பொண்டாட்டி கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியும்..” என்று அவன் இரகசியமாகச் சொல்ல, ‘இவன் சொல்வதும் உண்மைதான்..’ என்று நினைத்தான் கண்ணன்..
அதைப் பார்த்த கமழினி, “துரோகி..” என்று அண்ணனைப் பார்த்துக் கொண்டே வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு, ‘நண்பா சூப்பர் ப்ளான்..’ என்று அவனைப் பார்த்து குறும்பாகக் கண்சிமிட்டினாள்.. அவளின் கண்சிமிட்டியதும், “மாமா நான் இருக்கேன் நீங்க கவலையே படாதீங்க..” என்று சொல்ல சரியென்று தலையாட்டினார்..
அதன்பிறகு மகளைப் பார்க்க பக்கத்தில் இருந்த கமழினியை காணவில்லை.. அவளை காணவில்லை என்றதும், “டேய் இவள் எங்கே காணோம்..” என்று மகனைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டார் அழகர்..