• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

MANAM NIRAINTHAVALE REVIEW

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
இது நான் ரசித்த மிக அருமையான நாவல். இதன் சாரம் என்றால் நட்பும் காதலும் சண்டையிட்டால் எது வெல்லும் என்பதே ஆகும்.

தங்கள் காதல் பெரிது என்று சண்டையிடும் பெண்கள் மத்தியில் தங்கள் நட்பிற்காக சண்டை போடும் சகோதரிகள் கதை இது.

தன் தோழிக்காக தன் காதல், திருமணம் எல்லாவற்றையும் இழக்க தயாராகி அவளை குணபடுத்தி வாழ வைப்பதே லட்சியமாக கொண்ட தோழன் வசந்த். எங்கும் எதிலும் தோழியை விட்டு தராமல் காத்தவன்.

கமழியை தாமரையாக காதல் கொண்டு சந்தேகத்தால் காதலை இழந்து அவளை மறக்காமல் தாமரை இல்லம் கட்டி அவளுக்காக வாழ்ந்து பின் தவறை உணர்ந்து மனம் திருந்தி அவளை குணபடுத்தி அவளால் அவமானபட்ட உன்னத காதலன் துகிலன். பூவிழியின் அருமை தோழன். வெள்ளை மனம் கொண்டவன்.

துகிலனை காதலித்து அதேசமயம் வசந்தை நட்பாக கொண்டு காதலைவிட நட்பு பெரிது என்றவள் நம் கமழினி. நட்பிற்கும் காதலுக்கும் இடையே போராட்டத்தில் அதிகம் அடிவாங்கி தன் சுய நினைவை தொலைத்து மீண்டவள்.

அவள் நட்பு காட்டினாலும் காதல் காட்டினாலும் அழகுதான் சாரி துகிலன்.
Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
தங்கையின் மீது பாசம் வைத்து வசந்த மீது காதல் கொண்டு ராதாவால் சந்தேகம் கொண்டு தந்தையை தொலைத்து தனி மரமாகி பின் துகிலன் நட்பு பெற்று காதலையும் வாழ்வையும் மீட்ட அப்பாவி பூவிழி

சிறிதுகாலம் வந்தாலும் மகளுக்காக வாழ்ந்து மகளுக்காக மறைந்த மாணிக்கம் பெரியப்பா, கண்ணாத்தாள், கமழினிக்காக உயிர்விட்ட அவள் கணவர் சிதம்பரம் சூப்பர் கேரக்டர்.

மகனை புரிந்து கொண்ட தாயாக கடைசிவரை மின்னி விட்டார் நம் சாரதாம்மா.

சற்று தடுமாறிய கேரக்டர்கள் என்றால் கமழினி பெற்றோர் மற்றும் வசந்த் அப்பாதான்

வசந்த் அம்மா துளசி அருமை. மகனையும், அவன் தோழி கமழினியை புரிந்த அருமையான தாய்.

கிருஷ்ணா கடைசிவரை அருமையாக ஜொலிக்க கீர்த்தனா கீதாஞ்சலி கடைசியில் வந்து ஸ்கோர் பன்னி விட்டார்கள்.

மனைவி செய்த தவறை கண்டித்து குழந்தையை இழந்து பின் மீட்ட சுரேஷ் அருமை.

எல்லாம் நலமாக அமைந்தும் தன் கோணல் புத்தியால் கமழினி வசந்த் துகிலன் பூவிழி நால்வரை பிரித்து மாணிக்கம் இறக்க காரணமாகி கணவனுக்கு எதிரியாகி குழந்தை இழுந்து திருந்திய நவீன மந்தரை அலைஸ் கூனி நம் ராதா மட்டும்தான் நெகட்டிவ் கேரக்டர்.

காதலா நட்பா என்று பட்டிமன்றம் வைத்து காதலிகளை தோழமைக்காக வாதாட வைத்து காதலர்களை தோழிக்காக போராட வைத்து கடைசியில் இரண்டையும் வெல்ல வைத்துவிட்டார் நம் சந்தியா.

மணம் நிறைந்தவளே அல்டிமேட் லவ் கம் பிரன்ட்ஷிப் ஸ்டோரி Write your reply...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வாவ்...:love: சூப்பர் ரிவ்யூ...:love::love: சினேகா இதை நான் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்ல.. சும்மா விளையாட்டுக்கு அடுத்த ஸ்டோரிக்கு ரிவ்யூ கொடுங்க என்று சொன்னால் நிஜமாகவே கொடுத்திட்டீங்க... நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம்ப்பா... சொல்ல வார்த்தை இல்லக்கா.. என்னவோ நாமும் எழுதுகிறோம் என்ற எண்ணத்தை தாண்டி உங்க எல்லோரின் மனதிலும் எல்லோருமே வாழ்கிறார்கள் என்று உணர்ந்துவிட்டேன்..
நன்றி அக்கா.. இந்த ஒரு வார்த்தை இதுக்கு இணையாகாது.. thank you so much...:love::love:
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
வாவ்...:love: சூப்பர் ரிவ்யூ...:love::love: சினேகா இதை நான் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்ல.. சும்மா விளையாட்டுக்கு அடுத்த ஸ்டோரிக்கு ரிவ்யூ கொடுங்க என்று சொன்னால் நிஜமாகவே கொடுத்திட்டீங்க... நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம்ப்பா... சொல்ல வார்த்தை இல்லக்கா.. என்னவோ நாமும் எழுதுகிறோம் என்ற எண்ணத்தை தாண்டி உங்க எல்லோரின் மனதிலும் எல்லோருமே வாழ்கிறார்கள் என்று உணர்ந்துவிட்டேன்..
நன்றி அக்கா.. இந்த ஒரு வார்த்தை இதுக்கு இணையாகாது.. thank you so much...:love::love:
உன் கதையில் இது கொஞ்சம் வித்தியாசமானது கமழினி வசந்த் பூவிழி சாரதம்மா துளசியம்மா துகிலன் எல்லாம் கவர்ந்தார்கள் அதன் விளைவுதான் இந்த ரெவ்யூ
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
உன் கதையில் இது கொஞ்சம் வித்தியாசமானது கமழினி வசந்த் பூவிழி சாரதம்மா துளசியம்மா துகிலன் எல்லாம் கவர்ந்தார்கள் அதன் விளைவுதான் இந்த ரெவ்யூ
:love::love::love::love:நன்றி சினேகா அக்கா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top