MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 4
கெளதம் சைமன் கூண்டில் ஏறி நின்றவுடன் அதிர்ச்சியில் உறைந்து விட்டான். சைமன் தனக்கு எதிரான சாட்சி என்பதை ஏற்று கொள்ளவே நேரம் எடுத்தது கெளதமிற்கு. தன்னுடைய நண்பனே தனக்கு எதிராக மாறியது அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மனதளவில் நொருங்கிவிட்டான். சைமன் மீது கெளதம் வைத்த நம்பிக்கையில் இத்தனை நாளாக தன்னை அவன் பார்க்க வரவில்லை என்று கூட அவன் வருந்தவில்லை. இன்று அவன் இப்டி வந்து நின்றது தாங்க முடியாத வலி தந்தது கெளதமிற்கு. சைமன் கெளதமிற்கு எதிரே வந்து நின்றும், கெளதமை பார்க்காமல் நின்றான். அரசு வக்கீல் வந்து அவனை விசாரிக்கிறார்.
“சொல்லுப்பா.. உன்னோட பேரு என்ன..? கெளதம்க்கு நீ யாரு..?”
“சார்... என்னோட பேரு சைமன். நானும் கெளதமும் ப்ரெண்ட்ஸ்.”
“ஓகே... முருகன் உங்களோட ப்ரெண்டு தானா..?”
“ஆமாம் சார். நான், சந்தோஷ், கெளதம், முருகன் எல்லாரும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ்.”
“அன்னைக்கு என்ன நடந்தது..? நீ அங்க என்ன பாத்த..?”
“அன்னைக்கு நான் பேசணும்னு கெளதம் வீட்டுக்கு வந்தேன். அப்போ கெளதம் வீடு தொறந்து கிடந்துச்சு. அதுவும் இல்லாம உள்ள லைட் எரிஞ்சது, அதுனால உள்ள போய் பாத்தேன், அங்க யாருமே இல்ல. வெளில வந்துட்டு போகலாம்ன்னு நினைச்சப்போ பின்னாடி தென்னந்தோப்புக்குள்ள கெளதம் குரல் கேட்டுச்சு. நான் போய் பார்க்கும் போது...” சிறு அமைதி
“ம்ம்ம்... சொல்லுங்க..”
“கெளதம் முருகன விரட்டிட்டு போற மாதிரி இருந்துச்சு. நானும் பின்னாடியே போனேன். என்ன விட்டுரு விட்டுருன்னு முருகன் சொல்லிட்டே ஓடினான்...”
கெளதம் முகத்தில் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை, அவன் சைமனையே பார்த்து கொண்டிருந்தான், ஆனால் சைமன் கெளதமை பார்க்கவில்லை. கண்களில் அவனை அறியாமல் கண்ணீர் வந்தது. சைமன் பேசுவதை கேட்டு அவனுக்கு கோபம் வரவில்லை, அதற்கு மாறாக தன் நண்பன் தன்னை புரிந்து கொள்ளாமல் இப்படி நடந்து கொள்வது, தன்னுடைய கைகளே தன் கழுத்தை நெறிப்பது போன்று இருந்தது.
“கேட்டீங்களா சார்...? கெளதம் முருகன விரட்டிட்டி போயிருக்கான்... முருகன் தப்பிக்க விட்டுரு விட்டுருன்னு சொல்லிட்டு போயிருக்கான்...”
நீதிபதி குறித்து வைத்து கொண்டார்.
“ம்ம்ம்.. அப்பறம் என்னாச்சு...”
“நான் கௌதம கூப்பிட்டேன்... உடனே அவன் குனிஞ்சுட்டான்.”
கெளதம் புரியாமல் விழிக்கிறான்.
“அதாது தெரிய கூடாதுன்னு ஒழிஞ்சுகிட்டான்..? அப்டி தான..?”
“எனக்கு தெரியல சார்...”
“ஓகே... நீ சொல்லு...”
“அப்பறம் முருகன் ரோட்டுக்கு போய்ட்டான்... கெளதம் கொஞ்ச தூரம் குனிஞ்சே போனான்.. அப்பறம் அவனும் ரோட்டுக்கு போய்ட்டான். அதுக்குள்ளே முருகன் ரோட கடந்து அந்த பக்கம் போய்ட்டான்... நான் போகலாம்ன்னு நினைச்சப்ப எனக்கு கால் வந்தது. பேசிட்டு நான் திரும்பி அந்த பக்கம் போகும் போது... ரோட்டுக்கு அந்த பக்கம் யாரோ ஒருத்தர், யாரையோ தூக்கி ரோட்டுல எறிஞ்சாங்க... நான் கிட்ட போய் பார்க்கும் போது கெளதம் அந்த கீழ கிடந்தவர் கிட்ட உக்காந்து இருந்தான்...”
“ம்ம்ம்... கேட்டீங்களா சார்.. இந்த கெளதம் தான் முருகன ரோட்டுல துக்கி போட்டுருக்கான்... இதுல இருந்தே தெரியும் கெளதம் தான் கொலைகாரன்னு..”
நீதிபதி கெளதம் பக்கம் திரும்பி, “நீ சொல்லுப்பா..? நீ தான் கொலை பண்ணுனியா...?”
“இல்ல சார்... நான் கொலை எதுவும் பண்ணல...” என்றான் வெறுமையுடன்.
அரசு வக்கீல் சிரித்து கொண்டே, “பாருங்க சார்.. இவன் ப்ரெண்டே இவன் தான் முருகன தூக்கி போட்டான்னு சாட்சி சொல்லுறான், அப்டி இருந்தும் இவன் ஒண்ணுமே பண்ணலன்னு சொல்லிட்டு இருக்கான்..”
“நடராஜர்... நீங்க எதுவும் விசாரிக்கனும்மா..?” என்று நீதிபதி கேட்கிறார்.
“எஸ் சார்..” சைமன் அருகில் சென்று, “தூக்கி போட்டது கெளதம் தானா...? நீ பாத்தியா..? நல்லா யோசிச்சு பாத்து சொல்லு..?”
“எனக்கு தூக்கி போட்டது யாருன்னு தெளிவா தெரியல... நான் கிட்ட போய் பாக்கும் போது கெளதம் தான் அங்க உக்காந்திருந்தான்.”
“சார் சைமன் துக்கி போட்டது யாருன்னு தெரியலன்னு சொல்லிட்டான். அப்பறம் எப்டி கெளதம் கொலை பண்ணினான்னு சொல்ல முடியும்...?”
அரசு வக்கீல் உடனே, “அங்க அவன் தான இருந்தான்... அப்போ அவன் தான கொலை பண்ணி போட்டுருப்பான்... அங்க நீ வேற யாரையாது பாத்தியா..?”
“நான் வேற யாரையும் பாக்கல சார்..” என்று சைமன் பதில் கூற,
நடராஜர் நீதிபதியை பார்த்து, “முருகன் கெளதமோட ப்ரெண்டு... அப்டி இருக்க முருகன கெளதம் கொலை பண்ண எந்த நோக்கமும், காரணமும் இல்ல சார்..”
அரசு வக்கீல் உடனே, “காரணம் இருக்கு சார்... சில மாததிற்கு முன்னரே முருகன் உங்க கூட பேசுறத நிப்பாட்டிடான்... இல்லையா...?” என்று சைமனை நோக்கி கேள்வி எழுப்ப,
“ஆமாம்... முருகன் எங்க கூட கொஞ்ச நாளா பேசாம இருந்தான்.”
“ஏன்..?”
“அதுவந்து... சந்தோஷ், காதம்பரி காதலிக்கிறது தெரிஞ்சதும், முருகன் எங்க கூட சண்ட போட்டு பிரிஞ்சுட்டான்...”
“காதம்பரி சிவசங்கர் அவரோட பொண்ணு, முருகனோட தங்கை சார்.. ம்ம்ம்... அப்பறம்...”
“அன்னைக்கு சந்தோஷ் காதம்பரி ரெண்டு பேரும் வீட்ட விட்டுட்டு ஓடி போய்ட்டாங்க.”
“ம்ம்ம்... இது தான் சார் காரணம். தன்னோட தங்கச்சிய சந்தோஷ் கூட அனுப்பி வச்சதுக்காக கேக்குறதுக்கு தான் முருகன் கெளதம் வீட்டுக்கு வந்துருக்கான். அப்போ தான் ரெண்டு பேருக்கும் இடையில சண்டை வந்துருக்கு.. அதுல கோபமான கெளதம் முருகன கொலை பண்ணிருக்கான் சார்...”
நீதிபதி குறித்து வைத்தார்.
“நீங்க போகலாம் சைமன்.”
“சார்... கெளதம் கொலை பண்ணிருக்க மாட்டான் சார்.. அவன் ரொம்ப நல்லவன் சார்...”
“நாங்க என்ன நடந்ததுன்னு தான் கேட்டோம்... என்ன நடந்திருக்கலாம்ன்னு இல்ல... நீங்க போகலாம்...”
சைமன் சோகமாக கெளதமை நிமிர்ந்தே பார்க்காமல் சென்றான். நீதிபதி அரசு வக்கீலிடம்,
“முருகனின் சித்தப்பா சிவசங்கரை கூப்பிடுங்க... விசாரிக்க..”
“சாரி சார்... அவரால வர முடியல...”
“ம்ம்ம்...” ஏதோ எழுதினார். பின் நிமிர்ந்து, “கேஸ் விசாரணை பதினைந்து நாட்களுக்கு ஒத்திவைக்கிறேன்.
அதுவரை கெளதமை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்...
அடுத்த விசாரணைக்கு சிவசங்கர் கண்டிப்பா வரணும்.”
“எஸ் சார்...”
விசாரணை முடிந்து அனைவரும் வெளியே வருகின்றனர். சௌந்தர்யா கோபத்தோடு இருந்தாள், அதை விட நண்பனே எதிரியாகி விட்டதால் அவர் மனசு எவ்ளோ வருத்தத்துல இருக்கும் என்றே அதிகம் கவலை கொண்டாள். வெளியே வந்த உடன் நடராஜரிடம் சென்று,
“என்ன சார்.. நீங்க எதுவும் அதிகமா பேச மாட்டுறீங்க..?” என்றால் சோகமும், கோபமுமாக
“என்னம்மா என்னையே குறை சொல்லுற.. அவனுக்கு எதிரா கேஸ் ஸ்ட்ரோங்கா இருக்கு...
இப்போ எப்டி வெளில கொண்டு வர்றதுன்னே தெரியல..?”
“என்ன சார்.. இப்டி சொல்லுறீங்க...”
“பார்போம்மா... நெக்ஸ்ட் ஹியரிங்ல அவுங்க சித்தப்பா வருவாருல... ”
“ம்ம்ம்...” என்றால் கோபமாக,
அப்போது கெளதமை போலீஸ் வெளியே கூட்டி கொண்டு வந்தனர். அவனை பார்த்ததும் சௌந்தர்யா வேகமாக அருகில் சென்றாள்.
“சார்... நான் அவர் கூட கொஞ்சம் பேசணும்...”
“அதெல்லாம் முடியாதும்மா...” என்று இன்ஸ்பெக்டர் அவனை இழுத்து கொண்டு செல்ல, கெளதம் ஏதோ பொம்மை போல் இழுத்த இழுப்பிற்க்கு சென்றான். நடராஜர் அருகில் சென்று
“சார்...” இன்ஸ்பெக்டர் திரும்பி பார்த்தார், “நாங்க அவர் கூட கொஞ்சம் பேசணும்.”
“என்ன சார்...?” என்று முகத்தை திருப்பி கொண்டார் இன்ஸ்பெக்டர். பின் அவராக திரும்பி, “உங்களுக்கு அஞ்சு நிமிஷம் தான்... அதுக்குள்ள பேசுங்க...”
“ஓகே.”
கெளதமை தனியாக அழைத்து சென்று நடராஜர், “உண்மையிலே நீ கொலை பன்னலைல..? தப்பா நினைக்காத... எனக்கு உண்மை தெரிஞ்சா தான் உன்னை வெளில எடுக்க முடியும். அதுக்கு தான்.”
வெறுமையான சிரிப்போடு, “உங்களுக்கு இந்த மாதிரி சந்தேகம் வந்தது தப்பே இல்ல... என்னோட ப்ரெண்டே என்ன நம்பாம எனக்கு எதிரா வந்து நிக்கிறான்... ம்ம்ம்...”பெருமூச்சு விடுகிறான், பின்
“நான் கொலை பண்ணல சார்...”
சௌந்தர்யா முகம் முழுவதும் கோபத்தோடு, கெளதம் நிலையை நினைத்து மனதில் வருந்தி கொண்டிருந்தாள். கெளதம் பேசியதை கேட்டவுடன், சைமனை திட்ட ஆரம்பித்தாள்.
“அவனெல்லாம் ஒரு ஆளா..?
சொந்த ப்ரெண்டுக்கே இப்டி துரோகம் பண்ணுறான்...
நல்லாவே இருக்க மாட்டான்...”
“அவன எதுக்கு இப்போ நீ இப்டி பேசுற..?” என்று கெளதம் சைமனை நல்லவனாக்கி பேசினான். சௌந்தர்யா கண்கள் கோபத்தை கொட்டின.
“இன்னும் நீங்க அவன நம்புறீங்க பாருங்களேன்...
ரொம்ப கஷ்டமா இருக்கு...
இவ்ளோ பெரிய துரோகத்த எப்டி அவனால உங்களுக்கு பண்ண முடிஞ்சதுன்னு தெரியல..?
ச்சி... அவன வக்காலத்து வாங்கி இனி என்கிட்ட பேசாதீங்க...
ஆனா ப்ரெண்ட் ப்ரெண்டுன்னு இருந்தீங்க, அதுக்கு நல்ல வேல பண்ணிருக்கான் அவன்...”
“நீ என்னோட ப்ரெண்டுகல பத்தி தப்பா பேசாத...
அவன் ஒன்னும் நான் கொலை பண்ணேன்னு சொல்லல...”
“என்ன ப்ரெண்டா...?
யாரு இருக்கா இப்போ...?
ஒருத்தன் செத்து உங்கள ஜெயிலுக்கு அனுப்பிட்டான்...
ஒருத்தன் அதுக்கு காரணமா இருக்கான்... அவன் உங்கள தனியா தவிக்க விட்டுட்டு அவனோட வாழ்கைய தேடி ஓடிட்டான்...
இன்னொருத்தன் என்னானா உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல வந்துட்டான்...
அப்பா... நல்ல ப்ரெண்ட்ஸ்...”
கெளதம் சைமன் கூண்டில் ஏறி நின்றவுடன் அதிர்ச்சியில் உறைந்து விட்டான். சைமன் தனக்கு எதிரான சாட்சி என்பதை ஏற்று கொள்ளவே நேரம் எடுத்தது கெளதமிற்கு. தன்னுடைய நண்பனே தனக்கு எதிராக மாறியது அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மனதளவில் நொருங்கிவிட்டான். சைமன் மீது கெளதம் வைத்த நம்பிக்கையில் இத்தனை நாளாக தன்னை அவன் பார்க்க வரவில்லை என்று கூட அவன் வருந்தவில்லை. இன்று அவன் இப்டி வந்து நின்றது தாங்க முடியாத வலி தந்தது கெளதமிற்கு. சைமன் கெளதமிற்கு எதிரே வந்து நின்றும், கெளதமை பார்க்காமல் நின்றான். அரசு வக்கீல் வந்து அவனை விசாரிக்கிறார்.
“சொல்லுப்பா.. உன்னோட பேரு என்ன..? கெளதம்க்கு நீ யாரு..?”
“சார்... என்னோட பேரு சைமன். நானும் கெளதமும் ப்ரெண்ட்ஸ்.”
“ஓகே... முருகன் உங்களோட ப்ரெண்டு தானா..?”
“ஆமாம் சார். நான், சந்தோஷ், கெளதம், முருகன் எல்லாரும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ்.”
“அன்னைக்கு என்ன நடந்தது..? நீ அங்க என்ன பாத்த..?”
“அன்னைக்கு நான் பேசணும்னு கெளதம் வீட்டுக்கு வந்தேன். அப்போ கெளதம் வீடு தொறந்து கிடந்துச்சு. அதுவும் இல்லாம உள்ள லைட் எரிஞ்சது, அதுனால உள்ள போய் பாத்தேன், அங்க யாருமே இல்ல. வெளில வந்துட்டு போகலாம்ன்னு நினைச்சப்போ பின்னாடி தென்னந்தோப்புக்குள்ள கெளதம் குரல் கேட்டுச்சு. நான் போய் பார்க்கும் போது...” சிறு அமைதி
“ம்ம்ம்... சொல்லுங்க..”
“கெளதம் முருகன விரட்டிட்டு போற மாதிரி இருந்துச்சு. நானும் பின்னாடியே போனேன். என்ன விட்டுரு விட்டுருன்னு முருகன் சொல்லிட்டே ஓடினான்...”
கெளதம் முகத்தில் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை, அவன் சைமனையே பார்த்து கொண்டிருந்தான், ஆனால் சைமன் கெளதமை பார்க்கவில்லை. கண்களில் அவனை அறியாமல் கண்ணீர் வந்தது. சைமன் பேசுவதை கேட்டு அவனுக்கு கோபம் வரவில்லை, அதற்கு மாறாக தன் நண்பன் தன்னை புரிந்து கொள்ளாமல் இப்படி நடந்து கொள்வது, தன்னுடைய கைகளே தன் கழுத்தை நெறிப்பது போன்று இருந்தது.
“கேட்டீங்களா சார்...? கெளதம் முருகன விரட்டிட்டி போயிருக்கான்... முருகன் தப்பிக்க விட்டுரு விட்டுருன்னு சொல்லிட்டு போயிருக்கான்...”
நீதிபதி குறித்து வைத்து கொண்டார்.
“ம்ம்ம்.. அப்பறம் என்னாச்சு...”
“நான் கௌதம கூப்பிட்டேன்... உடனே அவன் குனிஞ்சுட்டான்.”
கெளதம் புரியாமல் விழிக்கிறான்.
“அதாது தெரிய கூடாதுன்னு ஒழிஞ்சுகிட்டான்..? அப்டி தான..?”
“எனக்கு தெரியல சார்...”
“ஓகே... நீ சொல்லு...”
“அப்பறம் முருகன் ரோட்டுக்கு போய்ட்டான்... கெளதம் கொஞ்ச தூரம் குனிஞ்சே போனான்.. அப்பறம் அவனும் ரோட்டுக்கு போய்ட்டான். அதுக்குள்ளே முருகன் ரோட கடந்து அந்த பக்கம் போய்ட்டான்... நான் போகலாம்ன்னு நினைச்சப்ப எனக்கு கால் வந்தது. பேசிட்டு நான் திரும்பி அந்த பக்கம் போகும் போது... ரோட்டுக்கு அந்த பக்கம் யாரோ ஒருத்தர், யாரையோ தூக்கி ரோட்டுல எறிஞ்சாங்க... நான் கிட்ட போய் பார்க்கும் போது கெளதம் அந்த கீழ கிடந்தவர் கிட்ட உக்காந்து இருந்தான்...”
“ம்ம்ம்... கேட்டீங்களா சார்.. இந்த கெளதம் தான் முருகன ரோட்டுல துக்கி போட்டுருக்கான்... இதுல இருந்தே தெரியும் கெளதம் தான் கொலைகாரன்னு..”
நீதிபதி கெளதம் பக்கம் திரும்பி, “நீ சொல்லுப்பா..? நீ தான் கொலை பண்ணுனியா...?”
“இல்ல சார்... நான் கொலை எதுவும் பண்ணல...” என்றான் வெறுமையுடன்.
அரசு வக்கீல் சிரித்து கொண்டே, “பாருங்க சார்.. இவன் ப்ரெண்டே இவன் தான் முருகன தூக்கி போட்டான்னு சாட்சி சொல்லுறான், அப்டி இருந்தும் இவன் ஒண்ணுமே பண்ணலன்னு சொல்லிட்டு இருக்கான்..”
“நடராஜர்... நீங்க எதுவும் விசாரிக்கனும்மா..?” என்று நீதிபதி கேட்கிறார்.
“எஸ் சார்..” சைமன் அருகில் சென்று, “தூக்கி போட்டது கெளதம் தானா...? நீ பாத்தியா..? நல்லா யோசிச்சு பாத்து சொல்லு..?”
“எனக்கு தூக்கி போட்டது யாருன்னு தெளிவா தெரியல... நான் கிட்ட போய் பாக்கும் போது கெளதம் தான் அங்க உக்காந்திருந்தான்.”
“சார் சைமன் துக்கி போட்டது யாருன்னு தெரியலன்னு சொல்லிட்டான். அப்பறம் எப்டி கெளதம் கொலை பண்ணினான்னு சொல்ல முடியும்...?”
அரசு வக்கீல் உடனே, “அங்க அவன் தான இருந்தான்... அப்போ அவன் தான கொலை பண்ணி போட்டுருப்பான்... அங்க நீ வேற யாரையாது பாத்தியா..?”
“நான் வேற யாரையும் பாக்கல சார்..” என்று சைமன் பதில் கூற,
நடராஜர் நீதிபதியை பார்த்து, “முருகன் கெளதமோட ப்ரெண்டு... அப்டி இருக்க முருகன கெளதம் கொலை பண்ண எந்த நோக்கமும், காரணமும் இல்ல சார்..”
அரசு வக்கீல் உடனே, “காரணம் இருக்கு சார்... சில மாததிற்கு முன்னரே முருகன் உங்க கூட பேசுறத நிப்பாட்டிடான்... இல்லையா...?” என்று சைமனை நோக்கி கேள்வி எழுப்ப,
“ஆமாம்... முருகன் எங்க கூட கொஞ்ச நாளா பேசாம இருந்தான்.”
“ஏன்..?”
“அதுவந்து... சந்தோஷ், காதம்பரி காதலிக்கிறது தெரிஞ்சதும், முருகன் எங்க கூட சண்ட போட்டு பிரிஞ்சுட்டான்...”
“காதம்பரி சிவசங்கர் அவரோட பொண்ணு, முருகனோட தங்கை சார்.. ம்ம்ம்... அப்பறம்...”
“அன்னைக்கு சந்தோஷ் காதம்பரி ரெண்டு பேரும் வீட்ட விட்டுட்டு ஓடி போய்ட்டாங்க.”
“ம்ம்ம்... இது தான் சார் காரணம். தன்னோட தங்கச்சிய சந்தோஷ் கூட அனுப்பி வச்சதுக்காக கேக்குறதுக்கு தான் முருகன் கெளதம் வீட்டுக்கு வந்துருக்கான். அப்போ தான் ரெண்டு பேருக்கும் இடையில சண்டை வந்துருக்கு.. அதுல கோபமான கெளதம் முருகன கொலை பண்ணிருக்கான் சார்...”
நீதிபதி குறித்து வைத்தார்.
“நீங்க போகலாம் சைமன்.”
“சார்... கெளதம் கொலை பண்ணிருக்க மாட்டான் சார்.. அவன் ரொம்ப நல்லவன் சார்...”
“நாங்க என்ன நடந்ததுன்னு தான் கேட்டோம்... என்ன நடந்திருக்கலாம்ன்னு இல்ல... நீங்க போகலாம்...”
சைமன் சோகமாக கெளதமை நிமிர்ந்தே பார்க்காமல் சென்றான். நீதிபதி அரசு வக்கீலிடம்,
“முருகனின் சித்தப்பா சிவசங்கரை கூப்பிடுங்க... விசாரிக்க..”
“சாரி சார்... அவரால வர முடியல...”
“ம்ம்ம்...” ஏதோ எழுதினார். பின் நிமிர்ந்து, “கேஸ் விசாரணை பதினைந்து நாட்களுக்கு ஒத்திவைக்கிறேன்.
அதுவரை கெளதமை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்...
அடுத்த விசாரணைக்கு சிவசங்கர் கண்டிப்பா வரணும்.”
“எஸ் சார்...”
விசாரணை முடிந்து அனைவரும் வெளியே வருகின்றனர். சௌந்தர்யா கோபத்தோடு இருந்தாள், அதை விட நண்பனே எதிரியாகி விட்டதால் அவர் மனசு எவ்ளோ வருத்தத்துல இருக்கும் என்றே அதிகம் கவலை கொண்டாள். வெளியே வந்த உடன் நடராஜரிடம் சென்று,
“என்ன சார்.. நீங்க எதுவும் அதிகமா பேச மாட்டுறீங்க..?” என்றால் சோகமும், கோபமுமாக
“என்னம்மா என்னையே குறை சொல்லுற.. அவனுக்கு எதிரா கேஸ் ஸ்ட்ரோங்கா இருக்கு...
இப்போ எப்டி வெளில கொண்டு வர்றதுன்னே தெரியல..?”
“என்ன சார்.. இப்டி சொல்லுறீங்க...”
“பார்போம்மா... நெக்ஸ்ட் ஹியரிங்ல அவுங்க சித்தப்பா வருவாருல... ”
“ம்ம்ம்...” என்றால் கோபமாக,
அப்போது கெளதமை போலீஸ் வெளியே கூட்டி கொண்டு வந்தனர். அவனை பார்த்ததும் சௌந்தர்யா வேகமாக அருகில் சென்றாள்.
“சார்... நான் அவர் கூட கொஞ்சம் பேசணும்...”
“அதெல்லாம் முடியாதும்மா...” என்று இன்ஸ்பெக்டர் அவனை இழுத்து கொண்டு செல்ல, கெளதம் ஏதோ பொம்மை போல் இழுத்த இழுப்பிற்க்கு சென்றான். நடராஜர் அருகில் சென்று
“சார்...” இன்ஸ்பெக்டர் திரும்பி பார்த்தார், “நாங்க அவர் கூட கொஞ்சம் பேசணும்.”
“என்ன சார்...?” என்று முகத்தை திருப்பி கொண்டார் இன்ஸ்பெக்டர். பின் அவராக திரும்பி, “உங்களுக்கு அஞ்சு நிமிஷம் தான்... அதுக்குள்ள பேசுங்க...”
“ஓகே.”
கெளதமை தனியாக அழைத்து சென்று நடராஜர், “உண்மையிலே நீ கொலை பன்னலைல..? தப்பா நினைக்காத... எனக்கு உண்மை தெரிஞ்சா தான் உன்னை வெளில எடுக்க முடியும். அதுக்கு தான்.”
வெறுமையான சிரிப்போடு, “உங்களுக்கு இந்த மாதிரி சந்தேகம் வந்தது தப்பே இல்ல... என்னோட ப்ரெண்டே என்ன நம்பாம எனக்கு எதிரா வந்து நிக்கிறான்... ம்ம்ம்...”பெருமூச்சு விடுகிறான், பின்
“நான் கொலை பண்ணல சார்...”
சௌந்தர்யா முகம் முழுவதும் கோபத்தோடு, கெளதம் நிலையை நினைத்து மனதில் வருந்தி கொண்டிருந்தாள். கெளதம் பேசியதை கேட்டவுடன், சைமனை திட்ட ஆரம்பித்தாள்.
“அவனெல்லாம் ஒரு ஆளா..?
சொந்த ப்ரெண்டுக்கே இப்டி துரோகம் பண்ணுறான்...
நல்லாவே இருக்க மாட்டான்...”
“அவன எதுக்கு இப்போ நீ இப்டி பேசுற..?” என்று கெளதம் சைமனை நல்லவனாக்கி பேசினான். சௌந்தர்யா கண்கள் கோபத்தை கொட்டின.
“இன்னும் நீங்க அவன நம்புறீங்க பாருங்களேன்...
ரொம்ப கஷ்டமா இருக்கு...
இவ்ளோ பெரிய துரோகத்த எப்டி அவனால உங்களுக்கு பண்ண முடிஞ்சதுன்னு தெரியல..?
ச்சி... அவன வக்காலத்து வாங்கி இனி என்கிட்ட பேசாதீங்க...
ஆனா ப்ரெண்ட் ப்ரெண்டுன்னு இருந்தீங்க, அதுக்கு நல்ல வேல பண்ணிருக்கான் அவன்...”
“நீ என்னோட ப்ரெண்டுகல பத்தி தப்பா பேசாத...
அவன் ஒன்னும் நான் கொலை பண்ணேன்னு சொல்லல...”
“என்ன ப்ரெண்டா...?
யாரு இருக்கா இப்போ...?
ஒருத்தன் செத்து உங்கள ஜெயிலுக்கு அனுப்பிட்டான்...
ஒருத்தன் அதுக்கு காரணமா இருக்கான்... அவன் உங்கள தனியா தவிக்க விட்டுட்டு அவனோட வாழ்கைய தேடி ஓடிட்டான்...
இன்னொருத்தன் என்னானா உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல வந்துட்டான்...
அப்பா... நல்ல ப்ரெண்ட்ஸ்...”