MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 13
யாருமே எதிர் பார்க்கவில்லை முருகனை கடத்த சொன்னது கந்துவட்டி பாலு என்று. முருகன் வேகமாக சென்று அவனிடம், “நீ உண்மைய தான் சொல்லுறியா..?” என்று சந்தேகத்தை கேட்கவும் செய்தான்.
“ஆமாம்.”
இன்ஸ்பெக்டர், “உண்மையை தானா..?! இல்ல அடிக்கு பயந்து பொய் சொல்லுறியா..?”
“இல்ல சார்... அவர் தான். எனக்கு வேற எதுவுமே தெரியாது. அவர் தான் இந்த முருகன கொண்டு வந்து கொடுத்து அடிச்சு வைக்க சொன்னாரு..”
இன்ஸ்பெக்டர், “என்னைக்கு சொன்னாரு..?”
“அன்னைக்கு அந்த கொலை நடந்ததே, அன்னைக்கு தான் நைட்டு கூட்டிட்டு வந்து அவுங்க ஆளுக விட்டாங்க.. அடைச்சு வைக்க சொன்னாங்க..”
“நீ வேற ஊருல இருக்கேள..? அவருக்கு தான் வேலை செய்றியா..?!”
“ஆமாம் சார் நான் அவருக்கு வேலை செய்யல.. அவரு எப்போவாது பணம் வசூலிக்க தான் என்ன கூப்பிடுவாரு.. இந்த முறை தான் இப்படி பண்ண சொன்னாரு... நிறையா பணம் கொடுக்குறாருன்னு ஒத்துக்கிட்டேன்.”
“சரி உனக்கு அன்னைக்கு நடந்த கொலைய பத்தி ஏதாவது தெரியுமா..?”
“இல்ல சார் தெரியாது. சார் என் பொண்டாட்டியயும் குழந்தைகளையும் விட்டுருங்க. அவுங்கள அடிக்காதீங்க, அவுங்களுக்கு எதுவும் தெரியாது.”
“ஏய்..! இங்க வாம்மா..” என்று இன்ஸ்பெக்டர் அழைக்க, அவனது மனைவி அங்கு வருகிறாள். அவளுக்கு எந்த காயமும் இல்லை.
அவனுக்கு பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. அப்போது தான் தோன்றியது அவனது மனைவிக்கு எந்த காயமும் இல்ல, அவள் பின் எதற்கு அழுதாள் என்று.
அவனது முகத்தை பார்த்து சிரித்து கொண்டே இன்ஸ்பெக்டர் அவனது சந்தேகத்திற்கு விடை அளித்தார்.
“உன் கிட்ட இருந்து உண்மையா வரவழைக்க, நாங்க தான் உன் மனைவிய அடிக்கிற மாதிரி சவுண்ட் விடுவோம், நீ அழுகுற மாதிரி நடின்னு சொன்னோம். அவ பண்ணா, நீயும் ஒத்துகிட்ட..”
அவனுக்கு நடந்தது அப்போது தான் புரிந்தது, அவசர பட்டு உண்மையை சொல்லி விட்டோமே என்று எண்ணினான். அதே போல் முருகனும் சைமனும் இன்ஸ்பெக்டரை தவறாக நினைத்து விட்டோமே என்று எண்ணி வருந்தினர்.
தேவன் இன்ஸ்பெக்டரிடம் சென்று, “சார் உடனே அந்த பாலுவ அர்ரெஸ்ட் பண்ணுங்க... அவனுக்கு அந்த கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு.. அதான் முருகன் கடத்த சொல்லிருக்கான்...”
இன்ஸ்பெக்டர், “ஆமாம். கண்டிப்பா அந்த ஆளுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இருக்கும். அவன் தான் கொலைய இவன் பாத்துருப்பானோன்னு முருகன கடத்திருக்கான்..”
“ஆமாம் சார். அந்த ஆள விசாரிச்சா உண்மை வெளில வந்துரும்.”
“கான்ஸ்டபில் கிளம்புங்க.. அந்த கந்துவட்டி பாலுவ அர்ரெஸ்ட் பண்ணுவோம்..” என்று எழுந்து கூறி கொண்டே வெளியே செல்கிறார்.
“ஒரு வழியாக கொலைகாரன் யாருன்னு தெரிஞ்சது. இனி நம்ம கெளதம் வெளில வந்துருவான். இப்போ தான் நிம்மதியா இருக்கு..” என்று சைமன் கூறவும்,
முருகன், “இன்னும் எதுவும் முடியல.. அவன இங்க கொண்டு வரட்டும்.. அவன் யார கொன்னான், எதுக்கு கொன்னான்ன்னு தெரிஞ்சுக்கனும்.. அப்போ தான் எல்லாம் முடியும்.” என்று முருகன் கூறுகிறான்.
“அதான் அந்த ஆள பிடிக்க போலீஸ் போயிருக்காங்கள.. இனி நாம கவலை பட வேண்டியது இல்ல... நான் இந்த சந்தோஷமான விசயத்த சௌந்தர்யா, சந்தோஷ் எல்லார் கிட்டயும் போய் சொல்லிட்டு வர்றேன்.” என்று கூறிக்கொண்டே சந்தோஷத்துடன் கிளம்பினான் சைமன்.
தேவன், “நீயும் கிளம்பு முருகா.. நான் மற்ற பார்மாலிட்டி எல்லாம் பாத்துக்கறேன்..”
“இல்ல நான் போகல.. எனக்கு எல்லாம் முழுசா தெரிஞ்சுக்காம போனா எனக்கு நிம்மதியே இருக்காது... போக மனசு இல்ல... நான் இருந்து அந்த ஆள விசாரிக்கிறத பாத்துட்டு அவன் எதுக்கு பண்ணான்னு சொல்லுறான்னு கேட்டுட்டு போகுறேன்..”
அவனை அனுப்பவோ சமாளித்து பேசவோ முடியாது என்பது தேவனுக்கு புரிந்தது. “சரி” என்று கூறி அவனை தடுக்காமல் இருக்க விட்டான். போலீஸ் சென்று அதிக நேரம் ஆகியும் வரவில்லை.
முருகன் தான் பதட்டமாக இருந்தான். அவனுக்கு கற்பனை பலமாக இருந்தது. பாலு தப்பித்து விட்டானா..? இல்லை அவனை பிடிக்க செல்லும் போது வேற ஏதாது பிரச்சனை வந்ததா..? என்று கற்பனை செய்து பயந்து கொண்டிருந்தான்.
தேவனை பார்த்து, “என்ன இன்னும் போலீஸ் வரல..? என்ன நடந்துருக்கும்..?” என்று முருகன் கூறுகிறான்.
தேவன் முருகனை பார்த்து, “என்ன நீ இவ்ளோ பதட்டமா இருக்க..? அதான் எல்லாம் நல்லதா நடக்குதுல, கண்டிப்பா இனியும் நல்லதா தான் நடக்கும்.. நீ தேவை இல்லாம எதையும் யோசிக்காத..” என்று கூறி அவனது இந்த செயலை நினைத்து சிரித்தான்.
மனதில் ‘ப்ரெண்ட்ஸ் மேல எவ்ளோ பாசம் வச்சுருக்கான் இப்டி ஒரு ப்ரெண்ட் கிடைக்க நாங்க எல்லாரும் கொடுத்து வச்சுருக்கணும். ப்ரெண்ட்ஸ்காக எப்டி உருகுறான்..’ என்று எண்ணி பெருமை கொண்டான்.
அவன் கூறுவது உண்மை என்று புரிந்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் முருகன் இல்லை. அவனுக்கு எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்பிக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. பதட்டத்தில் அங்கும் இங்கும் நடந்தான். வாசலுக்கு அடிக்கொருமுறை சென்று பார்க்கவும் செய்தான்.
வெகு நேரம் கழித்து போலீஸ் வாகனம் வரும் சத்தம் கேட்டு வேகமாக சென்று பார்த்தான். இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபில் அனைவரும் வண்டியில் இருந்து இறங்கி வருகின்றனர். அவர்கள் பாலுவை அர்ரெஸ்ட் பண்ணி கூட்டி கொண்டு வர வில்லை.
முருகனின் பயம் உண்மை ஆனது. இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து கோபமாக கையில் இருந்த தொப்பியை மேஜையில் தூக்கி எறிந்தார். தேவனுக்கும் இப்போது என்ன நடந்தது என்ற ஆவல் அதிகரித்தது.
முருகன், “என்ன சார்.. அந்த ஆள அர்ரெஸ்ட் பண்ணலையா..?”
இன்ஸ்பெக்டர், “ஒன்னும் நடக்கல, அந்த ஆளு சென்னைக்கு போயிருக்கானாம்..”
“சார் அவன் தப்பிச்சுட்டானா..?”
“தெரியல, அவன் நமக்கு உண்மை தெரிஞ்சுருச்சுன்னு தப்பிச்சு போயிட்டானா..? இல்ல உண்மையாவே எதுவும் வேலையா போயிருகானான்னு தெரியல..?” என்று குழப்பத்தில் சொல்லுகிறார்.
முருகன், “அவன் கண்டிப்பா தப்பிச்சு தான் போயிருக்கான்... இப்போ நாம எப்டி அவன பிடிக்குறது..?” என்றான்.
இன்ஸ்பெக்டர், “நான் கமிஷனர் கிட்ட இன்பார்ம் பண்ணிருக்கேன்... அவரு சென்னைல வச்சு அர்ரெஸ்ட் பண்ண அங்க இருக்க போலீஸ்க்கு சொல்லிருக்காரு.. எப்டியும் அவன இன்னைக்குள அர்ரெஸ்ட் பண்ணிருவாங்க. நாளைக்கு அவன கோர்ட்ல ஒப்படைக்கணும். ஒப்படைப்பேன்..” என்று தீர்க்கமாக சொல்லினார்.
தேவன், “அது சரி சார்.. ஆனா அந்த இறந்து போனது யாரு..? அது எப்டி நாம கண்டு பிடிக்குறது..?”
முருகன், “ஆமாம் சார். போன முறையே ஜட்ஜ் அது எல்லாம் கேட்டாரு..?”
இன்ஸ்பெக்டர், “அவனோட ஆளுகள விசாரிச்சா எந்த உண்மையும் சொல்ல மாட்டுறாங்க.. இத வேற மாதிரி டீல் பண்ணனும்..”
இன்ஸ்பெக்டர் சொல்வது அவர்களுக்கும் சரி என்று பட்டது. “ஆனா எப்டி விசாரிக்க போறீங்க சார்..?!” என்று சந்தேகத்தோடு முருகன் கேட்டான்.
“அவனோட இடத்த நல்ல சோதன போடலாம்.. அப்பறம் ஏதாவது க்ழு கிடைக்குதான்னு பார்ப்போம்... அவனுகள அர்ரெஸ்ட் பண்ண கேட்டுருக்கேன்.. ஆர்டர் வரவும் போய் அர்ரெஸ்ட் பண்ண வேண்டியது தான்..”
“ம்ம்...” என்று சமாதானத்துக்கு சொல்லினான். ஆனால் சோதனை செய்து எதுவும் கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வது..? எப்படி கண்டு பிடிப்பது..? என்று சிந்தித்து கொண்டிருந்தான்.
தேவன், “இந்த கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா..?”
“அத கரெக்ட்டா சொல்ல முடியல சார்... அந்த ஆள விசாரிச்சா தான் நமக்கு எல்லாம் தெரிய வரும். இருந்தாலும் அந்த ஆளு தான் அப்டின்னு நினைக்கிறேன்...” என்று இன்ஸ்பெக்டர் தனது எண்ணத்தை சொல்லினார்.
யாருமே எதிர் பார்க்கவில்லை முருகனை கடத்த சொன்னது கந்துவட்டி பாலு என்று. முருகன் வேகமாக சென்று அவனிடம், “நீ உண்மைய தான் சொல்லுறியா..?” என்று சந்தேகத்தை கேட்கவும் செய்தான்.
“ஆமாம்.”
இன்ஸ்பெக்டர், “உண்மையை தானா..?! இல்ல அடிக்கு பயந்து பொய் சொல்லுறியா..?”
“இல்ல சார்... அவர் தான். எனக்கு வேற எதுவுமே தெரியாது. அவர் தான் இந்த முருகன கொண்டு வந்து கொடுத்து அடிச்சு வைக்க சொன்னாரு..”
இன்ஸ்பெக்டர், “என்னைக்கு சொன்னாரு..?”
“அன்னைக்கு அந்த கொலை நடந்ததே, அன்னைக்கு தான் நைட்டு கூட்டிட்டு வந்து அவுங்க ஆளுக விட்டாங்க.. அடைச்சு வைக்க சொன்னாங்க..”
“நீ வேற ஊருல இருக்கேள..? அவருக்கு தான் வேலை செய்றியா..?!”
“ஆமாம் சார் நான் அவருக்கு வேலை செய்யல.. அவரு எப்போவாது பணம் வசூலிக்க தான் என்ன கூப்பிடுவாரு.. இந்த முறை தான் இப்படி பண்ண சொன்னாரு... நிறையா பணம் கொடுக்குறாருன்னு ஒத்துக்கிட்டேன்.”
“சரி உனக்கு அன்னைக்கு நடந்த கொலைய பத்தி ஏதாவது தெரியுமா..?”
“இல்ல சார் தெரியாது. சார் என் பொண்டாட்டியயும் குழந்தைகளையும் விட்டுருங்க. அவுங்கள அடிக்காதீங்க, அவுங்களுக்கு எதுவும் தெரியாது.”
“ஏய்..! இங்க வாம்மா..” என்று இன்ஸ்பெக்டர் அழைக்க, அவனது மனைவி அங்கு வருகிறாள். அவளுக்கு எந்த காயமும் இல்லை.
அவனுக்கு பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. அப்போது தான் தோன்றியது அவனது மனைவிக்கு எந்த காயமும் இல்ல, அவள் பின் எதற்கு அழுதாள் என்று.
அவனது முகத்தை பார்த்து சிரித்து கொண்டே இன்ஸ்பெக்டர் அவனது சந்தேகத்திற்கு விடை அளித்தார்.
“உன் கிட்ட இருந்து உண்மையா வரவழைக்க, நாங்க தான் உன் மனைவிய அடிக்கிற மாதிரி சவுண்ட் விடுவோம், நீ அழுகுற மாதிரி நடின்னு சொன்னோம். அவ பண்ணா, நீயும் ஒத்துகிட்ட..”
அவனுக்கு நடந்தது அப்போது தான் புரிந்தது, அவசர பட்டு உண்மையை சொல்லி விட்டோமே என்று எண்ணினான். அதே போல் முருகனும் சைமனும் இன்ஸ்பெக்டரை தவறாக நினைத்து விட்டோமே என்று எண்ணி வருந்தினர்.
தேவன் இன்ஸ்பெக்டரிடம் சென்று, “சார் உடனே அந்த பாலுவ அர்ரெஸ்ட் பண்ணுங்க... அவனுக்கு அந்த கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு.. அதான் முருகன் கடத்த சொல்லிருக்கான்...”
இன்ஸ்பெக்டர், “ஆமாம். கண்டிப்பா அந்த ஆளுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இருக்கும். அவன் தான் கொலைய இவன் பாத்துருப்பானோன்னு முருகன கடத்திருக்கான்..”
“ஆமாம் சார். அந்த ஆள விசாரிச்சா உண்மை வெளில வந்துரும்.”
“கான்ஸ்டபில் கிளம்புங்க.. அந்த கந்துவட்டி பாலுவ அர்ரெஸ்ட் பண்ணுவோம்..” என்று எழுந்து கூறி கொண்டே வெளியே செல்கிறார்.
“ஒரு வழியாக கொலைகாரன் யாருன்னு தெரிஞ்சது. இனி நம்ம கெளதம் வெளில வந்துருவான். இப்போ தான் நிம்மதியா இருக்கு..” என்று சைமன் கூறவும்,
முருகன், “இன்னும் எதுவும் முடியல.. அவன இங்க கொண்டு வரட்டும்.. அவன் யார கொன்னான், எதுக்கு கொன்னான்ன்னு தெரிஞ்சுக்கனும்.. அப்போ தான் எல்லாம் முடியும்.” என்று முருகன் கூறுகிறான்.
“அதான் அந்த ஆள பிடிக்க போலீஸ் போயிருக்காங்கள.. இனி நாம கவலை பட வேண்டியது இல்ல... நான் இந்த சந்தோஷமான விசயத்த சௌந்தர்யா, சந்தோஷ் எல்லார் கிட்டயும் போய் சொல்லிட்டு வர்றேன்.” என்று கூறிக்கொண்டே சந்தோஷத்துடன் கிளம்பினான் சைமன்.
தேவன், “நீயும் கிளம்பு முருகா.. நான் மற்ற பார்மாலிட்டி எல்லாம் பாத்துக்கறேன்..”
“இல்ல நான் போகல.. எனக்கு எல்லாம் முழுசா தெரிஞ்சுக்காம போனா எனக்கு நிம்மதியே இருக்காது... போக மனசு இல்ல... நான் இருந்து அந்த ஆள விசாரிக்கிறத பாத்துட்டு அவன் எதுக்கு பண்ணான்னு சொல்லுறான்னு கேட்டுட்டு போகுறேன்..”
அவனை அனுப்பவோ சமாளித்து பேசவோ முடியாது என்பது தேவனுக்கு புரிந்தது. “சரி” என்று கூறி அவனை தடுக்காமல் இருக்க விட்டான். போலீஸ் சென்று அதிக நேரம் ஆகியும் வரவில்லை.
முருகன் தான் பதட்டமாக இருந்தான். அவனுக்கு கற்பனை பலமாக இருந்தது. பாலு தப்பித்து விட்டானா..? இல்லை அவனை பிடிக்க செல்லும் போது வேற ஏதாது பிரச்சனை வந்ததா..? என்று கற்பனை செய்து பயந்து கொண்டிருந்தான்.
தேவனை பார்த்து, “என்ன இன்னும் போலீஸ் வரல..? என்ன நடந்துருக்கும்..?” என்று முருகன் கூறுகிறான்.
தேவன் முருகனை பார்த்து, “என்ன நீ இவ்ளோ பதட்டமா இருக்க..? அதான் எல்லாம் நல்லதா நடக்குதுல, கண்டிப்பா இனியும் நல்லதா தான் நடக்கும்.. நீ தேவை இல்லாம எதையும் யோசிக்காத..” என்று கூறி அவனது இந்த செயலை நினைத்து சிரித்தான்.
மனதில் ‘ப்ரெண்ட்ஸ் மேல எவ்ளோ பாசம் வச்சுருக்கான் இப்டி ஒரு ப்ரெண்ட் கிடைக்க நாங்க எல்லாரும் கொடுத்து வச்சுருக்கணும். ப்ரெண்ட்ஸ்காக எப்டி உருகுறான்..’ என்று எண்ணி பெருமை கொண்டான்.
அவன் கூறுவது உண்மை என்று புரிந்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் முருகன் இல்லை. அவனுக்கு எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்பிக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. பதட்டத்தில் அங்கும் இங்கும் நடந்தான். வாசலுக்கு அடிக்கொருமுறை சென்று பார்க்கவும் செய்தான்.
வெகு நேரம் கழித்து போலீஸ் வாகனம் வரும் சத்தம் கேட்டு வேகமாக சென்று பார்த்தான். இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபில் அனைவரும் வண்டியில் இருந்து இறங்கி வருகின்றனர். அவர்கள் பாலுவை அர்ரெஸ்ட் பண்ணி கூட்டி கொண்டு வர வில்லை.
முருகனின் பயம் உண்மை ஆனது. இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து கோபமாக கையில் இருந்த தொப்பியை மேஜையில் தூக்கி எறிந்தார். தேவனுக்கும் இப்போது என்ன நடந்தது என்ற ஆவல் அதிகரித்தது.
முருகன், “என்ன சார்.. அந்த ஆள அர்ரெஸ்ட் பண்ணலையா..?”
இன்ஸ்பெக்டர், “ஒன்னும் நடக்கல, அந்த ஆளு சென்னைக்கு போயிருக்கானாம்..”
“சார் அவன் தப்பிச்சுட்டானா..?”
“தெரியல, அவன் நமக்கு உண்மை தெரிஞ்சுருச்சுன்னு தப்பிச்சு போயிட்டானா..? இல்ல உண்மையாவே எதுவும் வேலையா போயிருகானான்னு தெரியல..?” என்று குழப்பத்தில் சொல்லுகிறார்.
முருகன், “அவன் கண்டிப்பா தப்பிச்சு தான் போயிருக்கான்... இப்போ நாம எப்டி அவன பிடிக்குறது..?” என்றான்.
இன்ஸ்பெக்டர், “நான் கமிஷனர் கிட்ட இன்பார்ம் பண்ணிருக்கேன்... அவரு சென்னைல வச்சு அர்ரெஸ்ட் பண்ண அங்க இருக்க போலீஸ்க்கு சொல்லிருக்காரு.. எப்டியும் அவன இன்னைக்குள அர்ரெஸ்ட் பண்ணிருவாங்க. நாளைக்கு அவன கோர்ட்ல ஒப்படைக்கணும். ஒப்படைப்பேன்..” என்று தீர்க்கமாக சொல்லினார்.
தேவன், “அது சரி சார்.. ஆனா அந்த இறந்து போனது யாரு..? அது எப்டி நாம கண்டு பிடிக்குறது..?”
முருகன், “ஆமாம் சார். போன முறையே ஜட்ஜ் அது எல்லாம் கேட்டாரு..?”
இன்ஸ்பெக்டர், “அவனோட ஆளுகள விசாரிச்சா எந்த உண்மையும் சொல்ல மாட்டுறாங்க.. இத வேற மாதிரி டீல் பண்ணனும்..”
இன்ஸ்பெக்டர் சொல்வது அவர்களுக்கும் சரி என்று பட்டது. “ஆனா எப்டி விசாரிக்க போறீங்க சார்..?!” என்று சந்தேகத்தோடு முருகன் கேட்டான்.
“அவனோட இடத்த நல்ல சோதன போடலாம்.. அப்பறம் ஏதாவது க்ழு கிடைக்குதான்னு பார்ப்போம்... அவனுகள அர்ரெஸ்ட் பண்ண கேட்டுருக்கேன்.. ஆர்டர் வரவும் போய் அர்ரெஸ்ட் பண்ண வேண்டியது தான்..”
“ம்ம்...” என்று சமாதானத்துக்கு சொல்லினான். ஆனால் சோதனை செய்து எதுவும் கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வது..? எப்படி கண்டு பிடிப்பது..? என்று சிந்தித்து கொண்டிருந்தான்.
தேவன், “இந்த கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா..?”
“அத கரெக்ட்டா சொல்ல முடியல சார்... அந்த ஆள விசாரிச்சா தான் நமக்கு எல்லாம் தெரிய வரும். இருந்தாலும் அந்த ஆளு தான் அப்டின்னு நினைக்கிறேன்...” என்று இன்ஸ்பெக்டர் தனது எண்ணத்தை சொல்லினார்.