MithraPrasath
SM Exclusive
மரணத்தின் மர்மம்
அத்தியாயம் 6
கெளதம் நான் தான் கொலைக்கு காரணம் என்று கூறியவுடன் சௌந்தர்யாவிற்கு ஒன்றும் புரிய வில்லை. ஆனால் அவனது முகம் இறுகி போய் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்ததும் அவளுக்கு அவர் தானாக இப்படி சொல்லுறார.. இல்லை போலீஸ் அடிச்சு இப்படி சொல்ல வச்சுருக்காங்களா என்று சந்தேகம் எழுந்தது.
நீதிபதி ஏதோ பேச வரும் போது நடராஜர் இடைமறித்து, “சார்... என்னோட கட்சி காரற போலீஸ் அடிச்சு இப்படி சொல்ல வச்சுருக்காங்கன்னு நான் சந்தேக படுறேன். நீங்க அவசர பட்டு முடிவு சொல்லிடாதீங்க..” என்று பதற்றத்தோடு பேச,
அரசு வக்கீல் விடாமல், “அது எப்படி சார் இப்போ தான அவன் வாயால அவனே ஒத்துக்கிட்டான்.”
“சார்... நான் கௌதம விசாரிக்கணும்..” என்று நடராஜர் கூறவும்,
அரசு வக்கீல் இடைமறித்து, “என்ன சார்.. கேஸ் முடியுற ஸ்டேஜ்ல மறுபடியும் விசாரிக்கணும்ன்னு சொல்லுறீங்க... அவன் தான் சொல்ல வேண்டியது சொல்லிட்டான்ல...” என்று சொல்ல,
“நீங்க விசாரிங்க நடராஜர்...” என்று நீதிபதி அனுமதி கொடுக்கவும் அரசு வக்கீல் பேசாமல் சென்று அமர்ந்து விட்டார்.
“ஏன் நீங்க ஆரம்பத்துல நான் கொலை பண்ணலன்னு சொல்லிட்டு, இப்போ நான் தான் காரணம்ன்னு சொல்லுறீங்க..?”
கெளதம் பேசவில்லை, அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. கோபமாக வந்தது நடராஜருக்கு, இருந்தும் மறுபடியும் கேட்டார்.
“சொல்லுங்க கெளதம்... ஏன் இப்படி சொல்லுறீங்க... யாரும் உங்கள அடிச்சு சொல்ல வச்சாங்களா..?”
“என்ன யாரும் சொல்ல வைக்கல.. நானா தான்...” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கண்களில் நீர் வழிய பேச முடியாமல் தொண்டை அடைக்க, எச்சிலை விழுங்கி விட்டு,
“முருகன் என்கிட்டே நான் உயிரோட இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனான்... நான் அவன தடுத்து நிருத்திருக்கணும் எப்டியாது. பண்ணாம விட்டுட்டேன் அதுனால தான் அவன் இறந்து போய்ட்டான். எல்லாத்துக்கும் நான் தான் காரணம், அவன் சொன்ன மாதிரி நான் அவனுக்கு நல்ல நண்பனா இல்லாமா போயிட்டேன்... நான் தான் காரணம்.. நான் தான் காரணம்...” என்று விம்மி அழுக ஆரம்பித்தான்.
கோர்ட்டில் இருந்த எல்லாரும் எரிச்சலடைந்தனர். கோபமாக வந்தது, விட்டால் அடித்து விடுவார் நடராஜர், இப்படி ஒரு லூசுக்கு நான் வாதாட வந்துருக்கேன் பாரு அய்யோ.. என்று மனதில் தன்னையே நொந்து கொண்டார். சௌந்தர்யாவுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. அவனது மனம் எப்படி பாடு படுகிறதோ என்று எண்ணி வருந்தினாள்.
நீதிபதி கோபமாக, “என்னப்பா நினைச்சுட்டு இருக்க.. நீ கொலை பண்ணுனியான்னு கேட்டா... நீ என்னன்னா விளையாண்டுட்டு இருக்க..”
“ஆமாம் சார்... இவன் நல்ல ட்ராமா பண்ணுறான் சார்.. இவன் இப்டி எமோசனல் ட்ராமா பண்ணா தான் வெளில விடுவாங்கன்னு நினைச்சுட்டு பண்ணுறான் சார்... எனக்கு என்னம்மோ சந்தேகமா இருக்கு சார்...?!”
“நீங்க ஏதாது விசாரிக்கனும்னா விசாரிங்க” என்று நீதிபதி அரசு வக்கீலிடம் சொல்ல, அவர் கெளதமிடம் விசாரிக்கிறார்.
“ஏன்ப்பா நீ இத கேஸ் ஸ்டார்ட் பண்ணும் போதே சொல்லிருந்தா சரி... நீ இப்போ சொல்லுற, ஏன்..?”
“நான் இத்தனை நாளா முருகன் இறக்கலன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இன்னைக்கு சிவசங்கர் அய்யா சொன்னதுக்கு அப்பறம் தான் முருகன் உண்மையிலே இறந்துட்டான்னு எனக்கு தெரிஞ்சது... ” பேசும் போதே அழுகை வந்தது கெளதமிற்கு.
நடராஜர் கெளதமை மறுபடியும் விசாரிக்கிறார்.
“நீ அன்னைக்கு சைமன், அதாது உன்னோட ப்ரெண்ட பாத்தியா..?”
“இல்ல சார்... நான் பாக்கலை..”
“ஆனா அவன் உன்ன கூப்பிட்டதா சொன்னானானே... அப்போ நீ ஒழிஞ்சு ஒழிஞ்சு போனதாவும் சொன்னான்... உனக்கு தெரியுமா நீ பாத்தியா, கேட்டியா...?
“சார் எனக்கு எதுவும் கேக்கல.. நான் ஒன்னும் ஒழிஞ்சு கிட்டும் போகல..”
“ஓகே... அப்போ அவன் பொய் சொல்லுறான்னு சொல்லுற...?!”
“இல்ல சார்... எனக்கு அது தெரியாது.”
நீதிபதி பக்கம் திரும்பி, “சார்... நான் சாட்சி குமாரவேல விசாரிக்கணும்...”
“ம்ம்ம்...” குமாரவேல் வருகிறார்.
“நீங்க அந்த வீட்டுல எத்தன வருசமா இருக்கீங்க...?”
“நான் அந்த வீட்டுல ஐஞ்சு வருசமா இருக்கேன்.”
“ஓகே... நீங்க அன்னைக்கு கெளதம் வீட்டுல இருந்து என்ன சத்தம் கேட்டீங்க..?”
“அது சார்... ‘ஏன் இப்டி பண்ண சொல்லு சொல்லு’ அப்டின்னு கேட்டுச்சு...”
“சரி... அது யாரு சொன்னா..? உனக்கு தெரியுமா..?”
“அது முருகன் தான் சார்...”
“எப்படி நீங்க அது முருகன் தான்னு சொல்லுறீங்க..? ஒரு வேலை அது கௌதமா இருந்துருக்கலாம்ல...?”
“சார் அது முருகன் பேசின மாதிரி தான் இருந்துச்சு...”
“அதெப்படி நீங்க உறுதியா சொல்லுறீங்க... நீங்க முருகன் கூட இதுக்கு முன்னாடி பேசிருக்கீங்களா...?”
“இல்ல சார்... நான் கெளதம் கூட தான் பேசிருக்கேன் ஒரு சில முறை.. அத வச்சு தான் அது முருகன் தான்னு சொன்னேன்.”
“ம்ம்..? நீங்க வெளில வரும் போது முருகன பாத்தீங்களா..?”
“இல்ல சார்... அது முருகன் மாதிரி தான் இருந்துச்சு...”
“அப்போ நீங்க அவர சரியா கவனிக்கல..?! இல்லையா, அப்பறம் எப்படி பேசிட்டு இருந்தது முருகன் தான்னு இவ்ளோ உறுதியா சொல்லுறீங்க..?”
“சார்... அது வந்து...”
“கேட்டீங்களா சார்... முருகன் தான் போனானான்னு உறுதியா தெரியல, இருந்தும் அவன தான் பார்த்தேன், அவன் தான் பேசினான்னு சொல்லுறாரு..”
அரசு வக்கீல் எழுந்து, “சார்... அதான் கௌதமே முருகன் தான் வந்தான்னு சொன்னாணுல... அப்பறம் என்ன இது கேள்வி...”
“அது இல்ல நான் சொன்னது. கௌதம அர்ரெஸ்ட் பண்ணதே சாட்சிகளை வச்சு தான.. அவருக்கு உறுதியா தெரியாமலே அவரு எப்டி ஒருத்தர் மேல போய் சாட்சி சொல்லலாம்...? அத தான் நான் சொல்லுறேன்..”
பதில் பேச முடியாமல் அரசு வக்கீல் குமாரவேலை பார்த்தார். பின் சென்று அமர்ந்து விட்டார்.
“ஓகே... அவுங்க சண்ட போட்ட மாதிரி இருந்துச்சுன்னு சொன்னீங்க... எப்டி அடிக்கிற மாதிரியா சத்தம் கேட்டுச்சு..?”
“இல்ல சார்... ஏதோ வாக்குவாதம் பண்ணுற மாதிரி இருந்துச்சு...”
“கெளதம் அப்போ பேசினது கேட்டுச்சா..?”
“இல்ல சார்.. முருகன் பேசுறது மட்டும் தான் கேட்டுச்சு.”
“அப்பறம் எப்டி அது வாக்கு வாதமா இருக்கும்...?”
“அது வந்து சார்...” குமாரவேல் இழுத்து பேச தடுமாறவும் அரசு வக்கீல் எழுந்து,
“சார்... மிஸ்டர் நடராஜர் சாட்சிய குழப்ப பாக்குறார்..”
“அவர் கரெக்டா தான் கேக்குறார். நீங்க கேளுங்க நடராஜர்..” என்று நீதிபதி கூறவும் அடுத்து பேச முடியாமல் அரசு வக்கீல் அமர்ந்து விட்டார்.
“சொல்லுங்க அது எப்டி வாக்குவாதமா இருக்கும்..?”
“இல்ல சார்... அன்னைக்கு அவுங்க சண்ட போட்டாங்களா இல்ல சத்தமா பேசிட்டு இருந்தாங்கலான்னு எனக்கு தெரியல..”
நடராஜருக்கு உதட்டில் ஏளன புன்னகை.
“ம்ம்ம்.... ஓகே. அப்பறம் நீங்க முருகன கெளதம் தொரத்திட்டு போனதா சொன்னீங்க.. அப்போ அவுங்க எந்த மாதிரி நடந்து கிட்டாங்கன்னு சொல்லுங்க.”
“முருகன் என்னை விட்டுடு விட்டுடுன்னு சொல்லிட்டு ஓடினான், அவன நில்லு நில்லுன்னு சொல்லிட்டு தொரத்திட்டு ஓடினான் கெளதம்.”
“ஓஹோ... அப்போ அவுங்க ஒருத்தர ஒருத்தர் தள்ளி விட்டுட்டு கோபமா... அப்டி போகல..?”
“இல்ல சார்... முருகன் வீட்ட விட்டு வெளில வரும் போது அழுதுட்டே ஓடினான். அவன கெளதம் கைய பிடிச்சு நிறுத்தினான், அவன் கண்ணை துடைச்சு கிட்டே அவன் கைய தள்ளி விட்டுட்டு ஓடினான் வேகமா... பின்னாடியே கெளதமும் ஓடினான்.”
“அப்போ அவுங்க சண்ட போடல... கெளதம் முருகன சமாதான படுத்தினான், அப்டித்தான..?”
“அப்டியும் இருக்கலாம்...”
“அப்டிதான் நடந்துருக்கு சார்... கெளதம் முருகன தொரத்தல... சமாதான படுத்த பின்னாடி போயிருக்கான்...”
நீதிபதி குறித்து வைத்து கொள்கிறார்.
“அப்பறம் நீங்க அன்னைக்கு சைமன அங்க பாத்தீங்களா..?”
“நான் அங்க வேற யாரையும் பாக்களை...”
“ஓகே... நீங்க போகலாம்.” என்று குமாரவேலிடம் கூறிவிட்டு, நீதிபதியிடம், “சார்... நான் சாட்சி சைமன விசாரிக்கணும்...”
“ஓகே..” சைமன் வந்து கூண்டில் ஏறி நின்றான்.